search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94409"

    • தோசை, இட்லி, சப்பாத்திக்கு ருசியாக இருக்கும்.
    • உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் மேனியின் அழகையும் பராமரிக்க உதவும்.

    தேவையான பொருட்கள் :

    கேரட் துருவல் - 1 கப்,

    கொள்ளு - 30 கிராம்,

    வெங்காயம் - 1

    பூண்டு - 4 பல்,

    காய்ந்த மிளகாய் -10,

    உளுந்தம் பருப்பு - 1 கைப்பிடி,

    கடலைப் பருப்பு - 1 கைப்பிடி,

    கடுகு, கறிவேப்பிலை,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    வெங்காயத்தை அரிந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கேரட் துருவல், பூண்டை போட்டு வதக்கவும்.

    பின்பு மிளகாய் வற்றல், கொள்ளு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைத் தனியாக வறுக்கவும்.

    அனைத்தும் சூடு ஆறியவுடன் வதக்கிய கலவையுடன் உப்பு, புளி தண்ணீர் சேர்த்து நைசாக மிக்சியில் அரைக்கவும்.

    இத்துடன் வறுத்த பருப்புகள், மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் சேர்த்து கலக்கவும்.

    சுவையான கொள்ளு கேரட் துவையல் ரெடி.

    பாஸ்தாவை வைத்து பல்வேறு வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம். இன்று பாஸ்தாவை வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாஸ்தா - அரை கப்
    கடலை மாவு - கால் கப்
    அரிசி மாவு - கால் கப்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 1
    இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
    பெருஞ்சீரகம் தூள் - மரை டீஸ்பூன்
    தனி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாஸ்தாவில் சிறிது உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேக வைத்து குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும்.

    குளிர்ந்த நீரில் போட்ட பாஸ்தாவை தண்ணீரை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பெருஞ்சீரகம் தூள், தனி மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து ( வடை மாவு பதத்தில்) கொள்ளவும்.

    உப்பு சரிபார்த்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ்  பாஸ்தா  வடை ரெடி.

    கைக்குத்தல் அரிசியில் உள்ள நார்சத்துக்கள் உணவினை எளிதாக செரிக்க செய்து மலசிக்கலை தடுக்கின்றது. மெக்னீசியம் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றது.
    தேவையான பொருட்கள்

    கைக்குத்தல் அரிசி - 4 டீஸ்பூன்
    பொரிகடலை - 2  டீஸ்பூன்
    சுக்குத்தூள் - ½  டீஸ்பூன்

    செய்முறை

    அரிசியை நன்றாக கழுவி வெயிலில் காய வைத்து நன்றாக காய்ந்ததும் வெறும் கடாயில் போட்டு பொன்னிறமாக உப்பி வரும் வரை மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.

    அதே போல் அடுத்து கடாயில் பொரிகடலையை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து கொள்ளவும்.

    இரண்டும் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் சுக்குத்தூள் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தை  அடுப்பில் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் 2 டீஸ்பூன் கஞ்சிப்பொடியை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.

    மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கஞ்சி பதம் வரும் அளவிற்கு கலக்கவும்.

    கஞ்சி தயார் ஆனவுடன் இளஞ்சூட்டுடன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

    இப்போது சத்தான பொரிகடலை அரிசி கஞ்சி ரெடி.

    கடையில் விற்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆரோக்கியமானதாக இருக்காது. இன்று வீட்டிலேயே எளிய முறையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 1/2 கிலோ.
    தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்.
    எண்ணெய் - 150 கிராம்.

    செய்முறை:

    உருளைக்கிழங்கை முதலில் நன்றாக கழுவி எடுத்து அதனை சீவி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு சிறிய கிண்ணத்தில் உப்பு மற்றும் மிளகாயைத் தூளை சேர்த்து கலக்கி வைக்கவும்.

    அடுப்பினில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீவிய உருளைக் கிழங்கைப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

    பொரித்த உருளைக் கிழங்கு சிப்ஸை பாத்திரத்தில் போட்டு அதன் மீது மிளகாய் மற்றும் உப்பு தூள் கலந்த கலவையை தூவி எல்லா சிப்ஸ்களிலும் படும்படி கலக்கி கொள்ளவும்.

    சுவையான உருளைக் கிழங்கு சிப்ஸ் தயார்.

    காற்று புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாரம்வரை பயன்படுத்தலாம்.

    குறிப்பு: உருளைக் கிழங்கை சீவி துணியின் மேல் பரப்பிவிடவும். அதிக நேரம் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் உருளைக்கிழங்கு கருத்து விடும். இதனால் ஈரம் உறிஞ்சப்பட்டு மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ் கிடைக்கும். மிளகாய் தூளுக்கு பதில் மிளகு தூள் பயன்படுத்தலாம்..

    குழந்தைகளுக்கு சீஸ், உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சுவையான சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை மிளகாய் - 4
    கொத்தமல்லி - 1/2 கப்
    உருளைக் கிழங்கு - 250 கிராம்
    சீஸ் - 1 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 1/4 கப்
    எண்ணெய் - தேவையான அளவு

    மாவு பிசைய :


    மைதா - 2 கப்
    எண்ணெய் - 2 ஸ்பூன்

    செய்முறை :

    உருளைக் கிழங்கை குக்கரில் 2 விசில் விட்டு வேக விடவும்.

    கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீஸை துருவிக்கொள்ளவும்.

    உருளைக் கிழங்கு வெந்ததும், தோலை உரித்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ளுங்கள். பின் அதில் ப.மிளகாய், சீஸ் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    மாவு பிசைய அகலமாக பாத்திரத்தில் மைதா மாவைக் கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்திக்கு பிசைவது போல் பிசையுங்கள். பிசைந்ததும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீண்டும் நன்கு பிசையுங்கள்.

    அடுத்ததாக உங்களுக்கு எந்த அளவிற்கு சமோசா வேண்டுமோ அந்த அளவிற்கு கொஞ்சம் மாவை எடுத்து உருண்டைகளாக பிடித்து வையுங்கள். இப்படி எல்லா மாவையும் உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது சப்பாத்தி திரட்டும் கல்லில் வைத்து சப்பாத்தி உருட்டுவது போல் திரட்டுங்கள்.

    திரட்டிய மாவை கையில் எடுத்து சமோசாவிற்கு முக்கோண வடிவில் பிடிப்பதுபோல் கையில் சுருடிக் கொள்ளுங்கள்.

    அதில் தற்போது தயாரித்து வைத்துள்ள சீஸ் உருளைக் கிழங்கு பூரணத்தை தேவையான அளவு வைத்து மேற்புறத்தை மூடுங்கள். மாவை வாய் திறக்காதவாறு நன்கு அழுத்தி மூடுங்கள்.

    இப்படி அனைத்தையும் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

    கடாயில் பொரிப்பதற்கு தோவையான எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சமோசாவை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான சீஸ் சமோசா தயார்.

    இதையும் படிக்கலாம்...சத்துக்கள் நிறைந்த சோள தோசை
    சோளத்தில் பைப்பர் சத்து மற்றும் மாவு சத்து அதிகம் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகின்றது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
    தேவையான பொருட்கள்

    வெள்ளை சோளம் - 1 கப்
    இட்லி அரிசி - 1 கப்
    உளுந்து -  அரை கப்
    வெந்தயம் - ஒரு ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    சோளம், இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் கலந்து கழுவி 6 மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஆறு மணி நேரம் ஊறிய பின்னர் மிக்ஸியில் போட்டு இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து, 8 மணி நேரம் புளிக்க விடவும்.

    மாவு நன்கு புளித்தவுடன் தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சாம்பார் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட நன்றாக இருக்கும்.

    சூப்பரான சோள தோசை ரெடி.

    பாஸ்தாவில் பல்வேறு வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று பாஸ்தாவை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வேக வைத்த பாஸ்தா - 1 கப்
    நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட் - தலா கால் கப்
    கடலை மாவு - கால் கப்
    அரிசி மாவு - கால் கப்
    தனியா தூள் - 1 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    சிவப்பு மிளகாய் சாஸ் - 2 டீஸ்பூன்
    நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பாஸ்தாவை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட், கொத்தமல்லி, கடலை மாவு, அரிசி மாவு, சீரகத்தூள், தனியா தூள், மிளகாய் தூள், சிவப்பு மிளகாய் சாஸ், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறிது சிறிதாக எடுத்து பக்கோடா போல் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான பாஸ்தா பக்கோடா ரெடி.

    காரம் அதிகம் விரும்புபவர்களுக்கு இந்த மிளகாய் சப்ஜி பிடிக்கும். மேலும் சப்பாத்தி, நாண், தோசை, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ரெசிபி.
    தேவையான பொருட்கள்

    பச்சை மிளகாய் - 10
    வெங்காயம் - 10
    புளி - நெல்லிக்காய் அளவு

    வறுத்து அரைக்க

    வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
    எள்ளு - ஒரு தேக்கரண்டி
    கடலைபருப்பு - 2 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 5

    செய்முறை

    வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துகொள்ளவும்.

    வெங்காயம், மிளகாயை (விதையை நீக்கிவிட்டு) பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

    மிளகாய் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து உப்பு போட்டு புளித் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்..

    கலவை கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

    சுவையான மிளகாய் சப்ஜி தயார்.

    இதையும் படிக்கலாம்...பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட்
    Salad, Recipes, Veg Recipes, Healthy Recipes, Corn Recipes, சாலட், கார்ன் சமையல், சைவம், ஆரோக்கிய சமையல்
    தேவையான பொருட்கள் :

    பேபி கார்ன் - 4,
    ப்ரோக்கோலி - சிறியது 1
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 1,
    வெள்ளை மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொத்தமல்லி, ப்ரோக்கோலி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பேபி கார்னை சின்ன சின்ன வட்டமாக வெட்டிக்கொள்ளவும். ப்ரோக்கோலி, பேபி கார்னை கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். ஆவியிலும் வேக வைக்கலாம்.

    வேக வைத்த ப்ரோக்கோலி, பேபி கார்னை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து கலக்கவும்.

    அடுத்து மிளகுத் தூள், உப்பு தூவி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லித் தழையைத் தூவி, பரிமாறவும்.

    சூப்பரான சத்தான பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட் ரெடி.

    இந்த மழை நேரத்தில் சூடான காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வெங்காய போண்டா. இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடங்களே ஆகும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கடலை மாவு - 1 கப்
    பெரிய வெங்காயம் - 2
    பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
    சீரகம்  - 1 ஸ்பூன்
    மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
    கோதுமை மாவு - 4 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் சீரகம், மிளகாய்த்தூள், கோதுமை மாவு, உப்பு, வெங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்.

    மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பில் தீயை குறைவாக வைத்து மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும்.

    இப்போது சுவையான வெங்காய போண்டா தயார்.

    தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதைப் பார்ப்பீர்கள். பித்தம் மிகுந்து கல்லீரல் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் இருக்க வெள்ளரியை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளரிக்காய் - 2
    தக்காளி - 1 சிறியது
    வறுத்த வேர்க்கடலை - 1 மேஜைக்கரண்டி
    துருவிய தேங்காய் - 1 மேஜைக்கரண்டி
    ப.மிளகாய் - 2
    உப்பு - ருசிக்கேற்ப  

    தாளிக்க :

    எண்ணெய்,
    கடுகு,
    கறிவேப்பிலை,
    பெருங்காயம்

    செய்முறை :


    வெள்ளரிக்காயை தோல், விதையை நீக்கி சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்துவைக்கவும்.

    வெள்ளரிக்காய், வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், ப.மிளகாய், தக்காளி, உப்பு ஆகியவைகளை ஒன்றாக மிக்சியில் போட்டு அரைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து அதை அரைத்த கலவையில் கொட்டவும்.

    மனதுக்கும், வயிற்றுக்கும் நல்ல திருப்தியான உணர்வைக் கொடுக்கும் இந்தப் புது விதமான சட்னி.

    அரிசி மாவில் ப.மிளகாய், தேங்காய், கொத்தமல்லி சேர்த்து செய்யும் அக்கி ரொட்டி கர்நாடகாவில் மிகவும் பிரபலம். சுவையும் அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி மாவு - கால் கிலோ,
    தேங்காய் - ஒரு மூடி,
    கொத்தமல்லி -  ஒரு கட்டு,
    பச்சை மிளகாய் - 4,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - சிறிதளவு,
    எண்ணெய் - 50 கிராம்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை :  

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, சீரகம், உப்பு, துருவிய தேங்காய், கொத்தமல்லி, ப.மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்திக்கு மாவு பிசைவதை விட சற்று தளர்வாக பிசைந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஆரஞ்சுப் பழ அளவு மாவு எடுத்து உருட்டி சூடான தவாவில் போட்டு, தண்ணீர் (அ) எண்ணெயை கையில் தடவி, அப்படியே ரொட்டி போல் தட்டவும். சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும்.

    ஒருபுறம் சிவந்த பின் மறுபுறம் திருப்பி போட்டு எண்ணெய் விட்டு சிவக்கவிட்டு எடுக்கவும்.

    சூப்பரான அக்கி ரொட்டி ரெடி.

    இதற்கு தொட்டுக் கொள்ள புதினா/கொத்தமல்லி சட்னி சிறந்தது.

    விரும்பினால் கேரட், வெள்ளரியைத் துருவி மாவில் சேர்த்துத் தயாரிக்கலாம்.

    ×