search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • இன்று காலை நேரடி இலவச தரிசனத்தில் கூட்டம் அலை மோதியது.
    • விடுமுறையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    திருப்பதியில் நேற்று 75,229 பேர் தரிசனம் செய்தனர். 35 618 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.24 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

    இன்று காலை நேரடி இலவச தரிசனத்தில் கூட்டம் அலை மோதியது. 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ஆந்திர மாநிலம் தர்மாவூரை சேர்ந்தவர் சோமசேகர். இவர் நேற்று முன்தினம் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தார்.

    திருமலையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ வகுல விராந்தி தங்கும் விடுதியில் 102-வது அறையை வாடகைக்கு எடுத்து தங்கினர். விடுதியில் தங்கி இருந்தபோது குளிக்கச் சென்ற சோமசேகரின் மனைவி தான் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் செயினை கழற்றி வைத்துவிட்டு மீண்டும் எடுத்துச் செல்ல மறந்து விட்டார்.

    நேற்று காலை சாமி தரிசனம் செய்தனர். தரிசனம் முடிந்து விடுதிக்கு வந்த சோமசேகரின் குடும்பத்தினர் அவசர அவசரமாக விடுதியை காலி செய்து விட்டு சென்றனர்.

    விடுதி அறையை சுத்தம் செய்ய வந்த தேவஸ்தான ஊழியர்கள் குளியல் அறையில் இருந்த 7 பவுன் செயினை மீட்டு தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் கழுத்தில் அணிந்து இருந்த செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்த சோமசேகரின் மனைவி இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார்.

    சோம சேகர் இது குறித்து தேவஸ்தான அதிகாரியிடம் புகார் அளித்தனர்.

    அப்போது காணாமல் போன செயின் குறித்த அடையாளங்களை சோமசேகர் தெரிவித்தார். பின்னர் விடுதியில் தவறவிட்ட நகையை தேவஸ்தான அதிகாரிகள் சோமசேகரிடம் ஒப்படைத்தனர்.

    தவறவிட்ட நகையை மீட்டு கொடுத்த தேவஸ்தான ஊழியர்களுக்கு பக்தர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    • இன்று காலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
    • ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    இலவச தரிசனத்தில் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் 31 அறைகளும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    இன்று காலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர். ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 5 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு இலவச தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 8 மணி நேரமும், நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 87,434 பேர் தரிசனம் செய்தனர். 39,957 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • உற்சவர்களுக்கு தங்கக் கவசங்கள் அணிவித்து சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.
    • இத்துடன் 3 நாள் ஜேஷ்டாபிஷேகம் நிறைவடைந்தது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடந்து வந்தது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை உற்சவர்களான ஸ்ரீேதவி, பூதேவி, மலையப்பசாமியை கோவிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்துக்குக் கொண்டு வந்தனர்.

    அங்கு அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் வேத பாராயணம் செய்ய மகாசாந்தி ஹோமம், சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம், அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பித்தனர். அதன் பிறகு உற்சவர்களுக்கு தங்கக் கவசங்கள் அணிவித்து சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.

    மாலை சஹஸ்ர தீபலங்கார சேவையின்போது உற்சவர்கள் தங்கக் கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இத்துடன் 3 நாள் ஜேஷ்டாபிஷேகம் நிறைவடைந்தது.

    • ஜூலை 15-ந்தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து.
    • சிபாரிசு கடிதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    திருமலை :

    திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று காலை பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி (டயல் யுவர் இ.ஓ) நடந்தது. நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்றுப் பேசினார்.

    அவா் பேசியதாவது:-

    திருமலையில் பக்தர்களுக்கு கோடை முன்னேற்பாடுகளை செய்வதில், தேவஸ்தானத்தின் அனைத்துத் துறைகளும் எந்தவித சிரமமும் இன்றி ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அதற்காக, அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஆனால், வி.ஐ.பி. புரோட்டோகால் தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதற்காக சிபாரிசு கடிதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், அதிக பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

    இலவச தரிசன டோக்கன்கள் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலையில் நெரிசல் அதிகமுள்ள நேரத்தில் தரிசனத்துக்காக கிட்டத்தட்ட 2 நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. இதுபோன்ற நேரத்தில் பக்தர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

    திருமலையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் மாநில உள்துறை முதன்மைச் செயலாளர் ஹரிஷ்குமார்குப்தா மேற்பார்வையில், திருமலையில் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் 2 நாட்கள் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து பக்தர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்

    டிரைவர்கள் கவனக்குறைவு மற்றும் வாகனங்களின் மோசமான நிலை காரணமாக திருப்பதி மலைப்பாதைகளில் சமீப காலமாக விபத்துகள் நடந்தன. விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் திருப்பதி தேவஸ்தானம் ஒருங்கிணைந்து நீண்ட கால திட்டங்களை தயாரித்துள்ளது.

    திருப்பதி தேவஸ்தானம் நிர்ணயித்த வேகத்தின்படி மெதுவாக ஓட்டுமாறு கார் டிரைவர்கள் மற்றும் இதர வாகன ஓட்டிகளை கேட்டுக்கொள்கிறேன். வாகனங்களை ஓட்டும்போது செல்போனில் பேசாமல், திருப்பங்களில் வேகத்தைக் கட்டுப்படுத்தி, முந்தி செல்லாமல் ஓட்ட வேண்டும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மே மாதத்தில் 23 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.109.99 கோடி உண்டியல் வருமானமாக கிடைத்துள்ளது. 1 கோடியே 6 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. 56 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. 11 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மலையப்பசாமிக்கு முத்துக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
    • ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே முத்துக் கவசம் அலங்காரம் நடைபெறும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 6.30 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் சம்பங்கி பிரகாரத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு காலை 8 மணியளவில் அர்ச்சகர்கள் மற்றும் வேத பாராயணம் செய்பவர்கள் மகாசாந்தி ஹோமம் நடத்தினர். பின்னர் காலை 9 மணியில் இருந்து காலை 11 மணி உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    மாலை மலையப்பசாமிக்கு முத்துக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. சஹஸ்ர தீபலங்கார சேவையில் மலையப்பசாமி பங்கேற்றார். மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6.30 மணிவரை உற்சவர் மலையப்பசாமி முத்துக்கவசம் அணிந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே முத்துக் கவசம் அணிந்த மலையப்பசாமியின் அழகை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    • பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகினர்.
    • பக்தர்கள் நிரம்பி 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்றிருந்தனர்.

    வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள குடோன்களில் பக்தர்கள் நிரம்பி 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்றிருந்தனர்.

    இன்று இலவச தரிசனத்திற்கு 36 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர். இதனால் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகினர்.

    நேற்று அதிகாலை முதலே இலவச தரிசனத்தில் 85 ஆயிரத்து 366 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

    இதில் 48 ஆயிரத்து 183 பேர் முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் வருமானம் ரூ.4 கோடி கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று மாலை ஜோஷ்டாபிஷேகத்தையொட்டி ஏழுமலையானுக்கு முத்துக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் கோவிலின் நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே முத்துக் கவசம் அலங்காரம் நடைபெறும். சாமியின் அழகை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மாலை கருட சேவை (தங்க கருட வாகன வீதி உலா நடப்பது வழக்கம்).

    கோவிலில் ஜோஷ்டாபிஷேகம் நடப்பதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடக்க இருந்த பவர்ணமி கருட சேவையை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது.
    • இன்று முத்துக் கவசத்தில் உபயநாச்சியார்களுடன் மலையப்பசாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் நடக்கும் ஜோஷ்டாபிஷேகம் நேற்று தொடங்கியது. அதையொட்டி கோவிலின் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் காலை, மாலை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அதன் ஒரு பகுதியாக காலை யாகசாலையில் ருத்விக்குகள் சாந்தி ஹோமம் நடத்தினர். சத கலச பிரதிஷ்டை, ஆராதனை நடத்தினர். பின்னர் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு நவ கலச பிரதிஷ்டை, ஆவாஹனம், கங்கண பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    வேத பண்டிதர்கள் ஸ்ரீசூக்தம், பூசூக்தம், புருஷ சூக்தம், நிலா சூக்தம், நாராயண சூக்தம் பாராயணம் செய்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூேதவி, மலையப்பசாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு வஜ்ர கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. சஹஸ்ர தீபலங்கார சேவை முடிந்ததும் உற்சவர்கள் வஜ்ர கவசத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    ஜேஷ்டாபிஷேகத்தின் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) முத்துக் கவசத்திலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) தங்கக் கவசத்திலும் உபயநாச்சியார்களுடன் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    • இலவச தரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் ஆனது.
    • இன்று காலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கடந்த மாதம் முதல் பக்தர்களின் எண்ணிக்கை எதிர்பாராத அளவு 2 மடங்காக அதிகரித்தது. பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டாலும், விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் உண்டியல் வருவாய் குறைந்து காணப்படுகிறது.

    ஆங்கில வருட பிறப்பு முதல் ஏப்ரல் மாதம் வரை உண்டியல் வருவாய் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.4 கோடியாக இருந்தது.

    கடந்த மாதம் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதால் சுமார் 35 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். இருப்பினும் மே மாத உண்டியல் வருவாய் ரூ.110 கோடி மட்டுமே வசூலானது. மற்ற மாத உண்டியல் வசூலைவிட இது குறைவாகும்.

    திருப்பதியில் நேற்று 62,407 பேர் தரிசனம் செய்தனர். 33,895 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இன்று காலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    இதனால் இலவச தரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் ஆனது. ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் பக்தர்கள் சுமார் 6 மணி நேரமும் இலவச நேர ஒதுக்கீட்டில் வந்த பக்தர்கள் 10 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    • இன்று இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் 4-ந் தேதி (ஞாயிற்றுக்கி ழமை) வரை 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது.

    முதல் நாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையானுக்கு ஹோமம், அபிஷேகம், பஞ்சாமிர்த திருமஞ்சனம் நடக்கிறது.

    பின்னர் சாமிக்கு வஜ்ரகவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடக்கிறது.

    2-வது நாள் உற்சவர் ஏழுமலையானுக்கு முத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு வீதி உலா நடக்கிறது.

    3-வது நாள் உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடத்தப்பட்டு உற்சவர் சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மாட வீதிகளில் ஏழுமலையான் எழுந்தருளுகிறார்.

    4-வது நாள் கல்யாணம் உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

    தோமாலை மற்றும் அர்ச்சனை சேவைகள் தனிப்பட்ட முறையில் செய்யப்படுகின்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று 80,284 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 34,096 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.71 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இன்று காலை நேரடி இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • 2-ந்தேதி நம்மாழ்வார் சாத்துமுறை நடக்கிறது.
    • 2-ந்தேதியில் இருந்து 4-ந்தேதி வரை ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாதம் நடக்கும் விழாக்கள் பற்றிய விவரங்களை கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    ஜூன் மாதம் 2-ந்தேதி நம்மாழ்வார் சாத்துமுறை, 2-ந்தேதியில் இருந்து 4-ந்தேதி வரை ஜேஷ்டாபிஷேகம், 4-ந்தேதி எருவகா பூர்ணிமா, 14-ந்தேதி மதத்ரய ஏகாதசி, 20-ந்தேதி பெரியாழ்வார் உற்சவம், 29-ந்தேதி ஷயன ஏகாதசி, சதுர்மாஸ்ய விரதம்.

    மேற்கண்ட விழாக்கள் நடக்கிறது.

    • ஏழுமலையான் கோவிலுக்கு 78 ஆயிரத்து 126 பக்தர்கள் வருகை தந்தனர்.
    • 37 ஆயிரத்து 597 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

    நேரடி இலவச தரிசனத்தில் 32 காத்திருப்பு அறைகளை கடந்து பக்தர்கள் வெளியில் உள்ள வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று ஏழுமலையான் கோவிலுக்கு 78 ஆயிரத்து 126 பக்தர்கள் வருகை தந்தனர்.

    இவர்களில் 37 ஆயிரத்து 597 பேர் முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ. 3.74 கோடி வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இன்று வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் நிரம்பியது.
    • பக்தர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் தரிசன நேரம் அதிகரித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதாலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

    நேரடி இலவச தரிசனத்தில் இன்று வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் நிரம்பியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

    பக்தர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் தரிசன நேரம் அதிகரித்துள்ளது.

    ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர். நேர ஒதுக்கீடு இலவச தரிசன டோக்கன் உள்ள பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் நேற்று 78,818 பேர் தரிசனம் செய்தனர். 39,076 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    ×