search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • மகாலட்சுமி தாயார் கோவிலில் நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது.
    • பட்டு வஸ்திரங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து மகாலட்சுமி தாயாருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மராட்டிய மாநிலம் கோல்காபூரில் உள்ள மகாலட்சுமி தாயார் கோவிலில் நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது. அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அவரின் மனைவி சொர்ணலதாரெட்டி ஆகியோர் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பணம் செய்வதற்காக கோல்காபூருக்கு சென்றனர்.

    கோவிலுக்கு சென்ற அறங்காவலர் குழு தலைவர், மனைவியை கோவில் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அதன்பிறகு அறங்காவலர் குழு தலைவர் தம்பதியினர் பட்டு வஸ்திரங்களை ஊர்வலமாக எடுத்து வந்து மகாலட்சுமி தாயாருக்கு சமர்ப்பித்து, மகாலட்சுமி தாயாரை தரிசனம் செய்தனர். அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர். அவர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்கினர்.

    அப்போது திருமலை-திருப்பதி தேவஸ்தான டெல்லி தகவல் மைய உள்ளூர் ஆலோசனைக் குழு தலைவர் வேமிரெட்டி பிரசாந்தி ரெட்டி தம்பதியர் உடனிருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று பைக்குகளில் திருமலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கருட சேவை நாளை இரவு நடைபெறுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

    பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட விதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று இரவு முத்து பந்தல் வாகன ஊர்வலம் நடந்தது.

    இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் மாட வீதிகளில் பவனி வந்தார்.

    இன்று அதிகாலை 4 மணி முதல் திருப்பதியில் மழை பெய்து வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மழையில் நனைந்தபடி மாட வீதியில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை கடும் அவதி அடைந்தனர்.

    சாமி வீதி உலாவின் போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலை குழுவினர் தங்களது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை செய்து அசத்தி வந்தனர்.

    இன்று மாலை ஏழுமலையான் சர்வபூபால வாகனத்திலும், நாளை சனிக்கிழமை காலை மோகினி வாகன சேவையும் நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நாளை இரவு நடைபெறுகிறது. ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கருட சேவையையொட்டி இன்று காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிய தொடங்கி உள்ளனர்.

    திருமலையில் பிரம்மோற்சவ விழாவையொட்டி 20 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே தேவஸ்தானம் அனுமதி வழங்கி உள்ளது. கூடுதலாக வரும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பதியில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மதியம் 2 மணி முதல் நாளை இரவு வரை பைக்குகள் திருமலைக்குச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 61,879 பேர் தரிசனம் செய்தனர். 24,634 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.1.82 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • திருப்பதி கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
    • ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இந்த விழாவின் 5-ம் நாளில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கருட சேவை நடைபெறும்.

    அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடி ஏழுமலையான் கருடவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதற்காக ஏழுமலையானுக்கு மாலை கொண்டு செல்லும் வைபவம் ஆண்டாள் கோவிலில் நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி காலை 9 மணிக்கு ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து ஏழுமலையானுக்கு அணிவிக்கக்கூடிய மாலையை ஆண்டாள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன் பிறகு ஆண்டாள் மாலை, பரிவட்டம், கிளி ஆகியவை பெரிய கூடையில் வைத்து யானை முன்செல்ல பட்டர்கள் மற்றும் ஸ்தானிகர்கள் ஊர்வலமாக வந்தனர்.

    இதில் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா, ராம்கோ நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து வாகனத்தில் வைத்து, மாலை உள்ளிட்டவை திருப்பதி கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல் ஆண்டுதோறும் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து, அழகர் ஆற்றில் இறங்குவது குறிப்பிடத்தக்கது.

    • இன்று காலை கல்ப விருட்ச வாகன வீதி உலா நடக்கிறது.
    • இன்று இரவு சர்வ பூபால வாகன வீதி உலா நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா பிரமாண்டமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. உற்சவர் மலையப்பசாமி, யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிங்கத்தின் மீது யோக பட்டயம் அணிந்தவராக, கால்களை மடித்து குத்திட்டு அமர்ந்தபடி யோக நிலையில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வாகன வீதி உலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் அணிவகுத்துச் சென்றன. மலையப்பசாமி வீதி உலா வந்தபோது நான்கு மாட வீதிகளின் ஒவ்வொரு திருப்பத்திலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். வாகன வீதி உலாவுக்கு முன்னால் பஜனை கோஷ்டியினர் பக்தி பாடல்களை பாடியபடி சென்றனர். கலைக் குழுவினர் கோலாட்டம் ஆடினர். மேள, தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதி உலா, இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சர்வ பூபால வாகன வீதி உலா நடக்கிறது.

    • உற்சவர்களுக்கு பிரத்யேக அலங்காரம் செய்யப்படுகின்றன.
    • வரும் நாட்களிலும் வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின்போது உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்படுகிறது. ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கும் ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பிரத்யேகமாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    அதற்காக ஒரு டன் கட் பிளவர்கள் மற்றும் பழங்கள், பூக்கள், வாசனை திரவியங்கள், ஜப்பான் ஆப்பிள், மஸ்கட் திராட்சை, தாய்லாந்தில் இருந்து மாம்பழம், அமெரிக்காவில் இருந்து செர்ரிஸ் பழங்கள் போன்றவைகள் பக்தர்கள் மூலமாக பெறப்பட்டுள்ளன.

    மேலும் உலகம் முழுவதிலும் இருந்து திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து மேற்கண்ட பழங்கள், பூக்களை கொண்டு வந்து ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பித்துள்ளனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று மதியம் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அப்போது வெளிநாட்டு பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களிலும் வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட உள்ளது.

    நேற்று மதியம் ஸ்நாபன திருமஞ்சனம் முடிந்ததும் திருமலை-திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத்துறையினர் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு பரத்யேக பொருட்களால் சிறப்பு அலங்காரம் செய்தனர்.

    கட் பிளவர்கள், பழங்கள் ஆகியவற்றை கொண்டு அரங்கை அழகாக அலங்கரித்திருந்தாலும் மலையப்பசாமிக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மாலைகள் சிறப்பாக இருந்ததாக, பக்தர்கள் தெரிவித்தனர்.

    ஸ்நாபன திருமஞ்சனத்தில் உற்சவருக்கு ஏலக்காய், வெட்டி வேர், உலர் திராட்சை, துளசி மாலைகளுடன் செய்யப்பட்ட மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. அத்துடன் பவள மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத்துறை இயக்குனர் சீனிவாஸ் தலைமையில் இந்த ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவ விழாவுக்காக தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட லிச்சீஸ், ஆஸ்திரேலிய பிங்க், கருப்பு திராட்சை மற்றும் பல்வேறு நாடுகளின் பழங்கள் உற்சவர்களுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிர பத்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.
    • இன்று மாலை முத்து பல்லக்கு வாகன சேவையில் ஏழுமலையான் வீதி உலா வருகிறார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, ஸ்ரீதேவி சமேத ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனா்.

    2-வது நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகனத்திலும், மாலை அம்ச வாகனத்திலும் சாமி வீதி உலா நடந்தது. சாமி வீதி உலாவின் போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைக் குழுவினர் தங்களது மாநிலத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி அசத்தினர்.

    புதுச்சேரியின் பம்பை ஆட்டம், கேரளாவின் செண்டை மேளம், டிரம்ஸ், மகாராஷ்டிராவின் பாரம்பரிய நடனம், ஒடிசா குழுவினரின் கோலாட்டம் ஆகியவை பக்தர்களின் கண்களை கவர்ந்தன.

    விசாகப்பட்டினத்தின் லலிதா பஜனை மண்டலி குழுவினரின் பல்வேறு தெய்வங்களின் வேடம், மேற்கு கோதாவரியின் தேவாரப்பள்ளி நடனம் போன்றவை. பக்தர்களின் மனதை கவர்ந்தது.

    3-வது நாளான இன்று காலை ஏழுமலையான் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார்.

    அப்போது மாடவீதியில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிர பத்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். இன்று மாலை முத்து பல்லக்கு வாகன சேவையில் ஏழுமலையான் வீதி உலா வருகிறார்.

    திருப்பதியில் நேற்று 64,823 பேர் தரிசனம் செய்தனர்.22,890 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.03 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • இரவு ஹம்ச வாகன வீதி உலா நடந்தது.
    • இன்று காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடக்கிறது

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று அதிகாலை மூலவருக்கு சுப்ரபாதம், தோமால சேவை, சகஸ்ர நாமார்ச்சனையும், உற்சவர்களுக்கு திருமஞ்சனமும் நடந்தது.

    அதன் பிறகு உற்சவர் மலையப்பசாமி வாகன மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 'பத்ரி நாராயணர்' அலங்காரத்தில் சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வீதி உலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. பஜனை கோஷ்டியினர் பக்தி பாடல்களை பாடியபடி சென்றனர்.

    பல்வேறு குழுவை சேர்ந்த ஆண்களும், பெண்களும் மகா விஷ்ணு, லட்சுமி உள்ளிட்ட தெய்வங்களின் வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர். பல்வேறு நாட்டிய, நடன நிகழ்ச்சிகள் நடந்தன.

    அதைத்தொடர்ந்து மதியம் 1 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிவரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதன் பிறகு இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது. உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    நிகழ்ச்சியில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, இணை அதிகாரிகள் சதா பார்கவி, வீரபிரம்மம், பாதுகாப்பு அதிகாரி நரசிம்மகிஷோர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடக்கிறது.

    • விழா இன்று தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • திருமலை முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி வரும் அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று மாலை அங்குரார் பணம் நடந்தது.

    இன்று மாலை தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. அதன் பிறகு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் 4 மாத வீதிகளில் உலா வருகிறார்.

    பிரம்மோற்சவ விழாவையொட்டி ஏழுமலையான் கோவில் முழுவதும் வண்ண மலர்கள், பழங்கள், மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதனால் திருமலை முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது.

    இன்று மாலை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதிக்கு வந்து ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை ஊர்வலமாக கொண்டு வந்து ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கிறார்.

    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறுகையில்:-

    பிரம்மோற்சவ விழாவை காண லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பக்தர்களின் வசதிக்காக உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    கருட சேவை அன்று கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என்பதற்காக அன்று மட்டும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு 3 ஆயிரம் டிரிப்பு பஸ்கள் இயக்கப்படும். மற்ற பிரம்மோற்சவ நாட்களில் 2 ஆயிரம் டிரிப்புகள் பஸ்கள் இயக்கப்படும். பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    பக்தர்களுக்கு தங்கு தடை இன்றி லட்டுகள் கிடைப்பதற்காக 9 லட்சம் லட்டுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் தன்னார்வலர்கள் நட்பாக பழகி சேவைகள் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் பக்தர்கள் மனது புண்படும் படியாக நடந்து கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    திருப்பதியில் நேற்று 52,682 பேர் தரிசனம் செய்தனர். 15,805 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.57 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • பிரம்மோற்சவத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும்.
    • தங்க, வைர ஆபரணங்கள் சேதம் அடைய வாய்ப்புள்ளது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி திருமலையில் உள்ள கோகுலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை, இரவில் நான்கு மாட வீதிகளில் வாகனச் சேவை நடக்கிறது. உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் தங்கம், வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    அப்போது மாடவீதிகளில் கேலரிகளில் அமர்ந்திருக்கும் பக்தர்கள் உற்சவர் மீது சில்லறை நாணயங்களை வீச வேண்டாம். சில்லறை நாணயங்களை வீசுவதால் வாகனத்தில் அமர்ந்திருக்கும் அர்ச்சகர்களுக்கும், வாகனத்தை சுமந்து செல்லும் ஊழியர்களுக்கும் சிரமம் ஏற்படும். தங்க, வைர ஆபரணங்கள் சேதம் அடைய வாய்ப்புள்ளது.

    எனவே பக்தர்கள் உற்சவர் மீது நாணயங்கள் வீசுவதைத் தவிர்க்க வேண்டும். பிரம்மோற்சவத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரம்மோற்சவ விழா நாளை தொடங்கி 5-ந்தேதி முடிவடைகிறது.
    • நாளை இரவு 7 மணிக்கு தங்க கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை செவ்வாய்க்கிழமை தொடங்கி 5-ந்தேதி முடிவடைகிறது. இதனையொட்டி கோவில் மற்றும் கோவில் வெளிப்புறங்களில் பல்வேறு ண்ண மலர்கள், அரியவகையான பழ வகைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் திருமலை முழுவதும் மின்னொளியில் ஜொலிக்கிறது.

    பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று மாலை அங்குரார்பணம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவிற்கு முன்தினம் அங்குரார் பணம் நடைபெறுவது வழக்கம். இன்று மாலை விஸ்வேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து விழா ஏற்பாடுகளை பார்வையிடுகிறார். பின்னர் வசந்த மண்டபத்தில் விஸ்வகேஸ்வரருக்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

    இதையடுத்து பல்வேறு புதிய பானைகளில் நவதானியங்கள் விதைக்கப்படுகிறது.

    திருமலைக்கு நாளை வரும் ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆஞ்சநேயர் சாமி கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை ஊர்வலமாக கொண்டு வந்து ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கிறார்.

    இதையடுத்து இரவு 7 மணிக்கு தங்க கொடி மரத்தில் கருட கொடி ஏற்றப்படுகிறது.

    பின்னர் பெரிய சேஷ வாகனத்தில் பூதேவி, ஸ்ரீதேவி சமேதராய் ஏழுமலையான் மாட வீதிகளில் உலா வருகிறார்.

    2-வது நாள் காலை சின்ன சேஷ வாகனத்திலும், மாலை அம்ச வாகனத்திலும், 3-வது நாள் காலை சிம்ம வாகனத்திலும், மாலை முத்து பல்லக்கு வாகனத்திலும், 4-வது நாள் கல்ப விருட்ச வாகனத்திலும், மாலை சர்வ பூபால வாகனத்திலும், 5-வது நாள் மோகினி வாகனத்திலும், மாலை தங்க கருட வாகன ஊர்வலம் நடைபெறுகிறது.

    6-வது நாள் அனுமந்த வாகனமும், மாலை தங்கத்தேர் வாகன சேவை நடைபெறுகிறது. 7-வது நாள் காலை சூரிய பிரபை வாகனமும், மாலை சந்திர பிரபை வாகன வீதி உலா நடைபெறுகிறது. 8-வது நாள் காலை தேர் வீதி உலாவும், மாலை குதிரை வாகன ஊர்வலம் நடைபெறுகிறது.

    9-வது நாள் காலை அங்குள்ள தெப்பத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 4 மாட வீதியில் சாமி வீதி உலாவை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவைக்கான லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 69,650 பேர் தரிசனம் செய்தனர். 20,409 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.51 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • திருப்பதி பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • சர்வ பூபால வாகனம் அதிக எடை கொண்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழாவின்போது கோவிலின் நான்கு மாடவீதிகளில் வாகன சேவை நடத்தப்படவில்லை.

    தற்போது இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழாவில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் வாகன சேவை நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவில் பயன்படுத்தப்படும் சர்வபூபால வாகனத்தின் எடை, உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று சர்வ பூபால வாகனத்தை சோதனை ஓட்டமாக அதிகாரிகள் வழிகாட்டுதல்படி கோவில் ஊழியர்கள் நான்கு மாட வீதிகளில் தோளில் சுமந்து சென்றனர்.

    உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளும் வாகனங்களில் சர்வ பூபால வாகனம் அதிக எடை கொண்டது. அந்த வாகன சேவையின்போது ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்தனர்.

    நிகழ்ச்சியில் கோவில் பேஷ்கார் ஸ்ரீஹரி, பார்பதீடர் உமாமகேஷ்வர்ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 27-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது.
    • தர்ப்பைப் பாய் மற்றும் கயிறு ஆகியவை கொடியேற்றத்துக்கு பயன்படுத்தப்படும்.
    • தங்கக்கொடி மரத்தில் தர்ப்பைப் பாயை சுற்றுவார்கள்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 27-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. அதற்காக, பயன்படுத்தப்படுகின்ற தர்ப்பைப் பாய் மற்றும் கயிறு ஆகியவை திருமலை-திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறை அதிகாரி ஏ.சீனிவாசலு மற்றும் பணியாளர்களால் தேவஸ்தான வனத்துறை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலுக்கு ேநற்று முன்தினம் கொண்டு வரப்பட்டன.

    கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உள்ள சேஷ வாகனத்தின் மீது தர்ப்பைப் பாய், கயிறு ஆகியவற்றை வைத்தனர். இதையடுத்து தர்ப்பைப் பாய், கயிறு ஆகியவற்றுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.

    தர்ப்பைப் பாய் மற்றும் கயிறு ஆகியவை கொடியேற்றத்துக்கு பயன்படுத்தப்படும். தங்கக்கொடி மரத்தில் தர்ப்பைப் பாயை சுற்றுவார்கள். அதில் சிவ தர்ப்பை, விஷ்ணு தர்ப்பை என 2 வகையான தர்ப்பைகள் உள்ளன. அதில் திருமலையில் விஷ்ணு தர்ப்பை பயன்படுத்தப்படுகிறது.

    திருப்பதி மாவட்டம் ஏர்ப்பேடு மண்டலம் செல்லூர் கிராமத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான வனத்துறை ஊழியர்கள் விஷ்ணு தர்ப்பை புற்களை சேகரித்தனர். அந்தப் புற்களை திருமலைக்குக் கொண்டு வந்து ஒரு வாரம் மிதமான வெயிலில் உலர்த்தினர். தர்ப்பை உலர்ந்ததும், நன்றாகச் சுத்தம் செய்து பாய், கயிறு ஆகியவற்றை தயார் செய்தனர். 22 அடி நீளம், 7½ அடி அகலத்தில் தர்ப்பைப் பாய், 200 அடி நீளத்தில் தர்ப்பை கயிறு ஆகியவற்றை தயார் செய்துள்ளனர். அவை 2-ம் 27-ந்தேதி கொடியேற்றம் அன்று பயன்படுத்தப்படுவதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×