search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • ஒரு வினாடிக்கு 20 முதல் 30 டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.
    • 1½ மணி நேரத்தில் 15.25 லட்சம் தரிசன டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்தது.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் நீண்ட நேரம் தரிசனத்திற்காக காத்திருக்காமல் இருப்பதற்காக தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுகிறது.

    இந்த நிலையில் மே மற்றும் ஜூன் மாதங்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இன்று காலை ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    மே மாதத்திற்கான 7 லட்சத்து 75 ஆயிரம் டிக்கெட்டுகளும், ஜூன் மாதத்திற்கு 7 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 15 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.

    ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்படுவதால் விறுவிறுப்பாக தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன.

    ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் டிக்கெட் முன் பதிவு செய்ய முயன்றதால் ஆன்லைன் சேவை முடங்கியது. இதனால் பக்தர்கள் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் அவதி அடைந்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டே இருந்தனர். ஒரு வினாடிக்கு 20 முதல் 30 டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. வெளியிடப்பட்ட 1½ மணி நேரத்தில் 15.25 லட்சம் தரிசன டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்தது.

    ஆன்லைன் முன்பதிவு எந்த வித பிரச்சனையும் இல்லாமல் வேகமாக நடந்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தகர்.

    இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களின் வசதிக்காக பஸ் நிலையம், ரெயில் நிலையம், அலிபிரி, கோவிந்தராஜ சாமி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தினமும் 25 ஆயிரம் நேர ஒதுக்கிட்டு இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.

    இதேபோல் ஸ்ரீவாணி அறக்கட்டளை, சுப்ரபாதம், நிஜபாத சேவை, சகஸ்ர தீப அலங்காரம், கல்யாண உற்சவம் உள்ளிட்ட சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பதியில் நேற்று 63, 870 பேர் தரிசனம் செய்தனர்.27,480 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.88 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • போலி இணையதளங்களை நம்ப வேண்டாம்.
    • பக்தர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (மே) மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    பக்தர்கள் ரூ.300 டிக்கெட் முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து தரிசனம் செய்யலாம். போலி இணையதளங்களை நம்ப வேண்டாம்.

    பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான URL https://tirupatibalaji.ap.gov.in என்ற முகவரியை பயன்படுத்தலாம். பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியான "TTDevasthanams" மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 25-ந்தேதி ராமானுஜர் பிறந்தநாள் விழா நடக்கிறது.
    • 25-ந்தேதி ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்தநாள் விழா நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகாசி மாதத்தில் நடக்கும் விழாக்களை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வைகாசி மாதம் ஒரு புனித மாதமாகும். அனுமன், ராமானுஜர், கர்நாடக சங்கீத மேதை தியாகராஜசுவாமி, தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார், தரிகொண்டா வெங்கமாம்பா ஆகியோர் வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள் ஆவர். அவர்களை போற்றும் வகையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பாக விழாக்களை கொண்டாடி வருகிறது.

    வருகிற 25-ந்தேதி ராமானுஜர் பிறந்தநாள் விழா நடக்கிறது. இவர் ஸ்ரீபெரும்புதூரில் 1017-ம் ஆண்டு பிங்கலநாம மாதம் ஆருத்ரா நட்சத்திர நாளில் ஆதிசேஷ அவதாரமாக பிறந்தார். இவர் 1137-ம் ஆண்டு உயிரிழந்தார். தனது 120 ஆண்டுகால வாழ்வில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வைஷ்ணவத்தை மேம்படுத்தினார். அதன் மூலம் உயர்சாதியினர் மட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட சாதியினரும் வைணவ மதத்தைத் தழுவும் வாய்ப்பைப் பெற்றனர்.

    நாட்டில் உள்ள பல வைஷ்ணவ ஷேத்திரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கோவில் வழிபாட்டு நிகழ்ச்சிகள் முறையாக நடப்பதை உறுதி செய்ய ஏற்பாடு செய்தார். அவரை போற்றும் வகையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா நட்சத்திர நாளில் ராமானுஜர் பிறந்தநாளை கொண்டாடுகிறது.

    தியாகராஜசுவாமி

    வருகிற 25-ந்தேதி ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்தநாள் விழா நடக்கிறது. அத்வைத சித்தாந்தத்துடன் இந்தியாவில் சனாதன தர்மத்தைப் பரப்பிய முதல் குரு இவர் தான்.

    வருகிற 26-ந்தேதி தியாகராஜசுவாமியின் பிறந்தநாள் நடக்கிறது. இவர், 1767-ம் ஆண்டு பிறந்தார். இவரின் வழித்தோன்றல்கள் பிரகாசம் மாவட்டம் காகர்லா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இளம் வயதிலேயே தியாகராஜசுவாமியின் பக்தி, அறிவு ஆகியவற்றால் மகிழ்ந்த நாரத மகரிஷி ஸ்வரர்ணவம் என்ற இசை கட்டுரையை வழங்கினார்.

    தியாகராஜசுவாமி சுமார் 180 ஆண்டுகளுக்கு முன் திருவையாறில் இருந்து திருமலை ஷேத்திரத்துக்கு வருகை தந்தார். ஏழுமலையானை தரிசனம் செய்து கொண்டார். அவர் 1847-ம் ஆண்டு உயிரிழந்தார். தியாகராஜசுவாமியை போற்றும் வகையில் 26-ந்தேதி திருமலையில் அவரின் பிறந்தநாள் விழா நடத்தப்படுகிறது. திருப்பதியில் உள்ள எஸ்.வி. இசை கல்லூரியிலும், திருமலை உள்ள நாதநீராஞ்ஜன மண்டபத்திலும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பிரமாண்ட ஏற்பாடுகளை மேற்கொள்கிறது.

    தரிகொண்டா வெங்கமாம்பா

    தரிகொண்டா வெங்கமாம்பா 1730-ம் ஆண்டு பிறந்தார். அவர் ஏழுமலையான் மீது அசைக்க முடியாத பக்தியைக் காட்டினார். திருமலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் சேவையை தொடங்கிய முதல் பெண் பக்தர் இவர் தான். திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் வெங்கமாம்பா ஜெயந்தியை கொண்டாடி வருகிறது. அதன்படி அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி திருமலையில் வெங்கமாம்பா ஜெயந்தி விழா நடக்கிறது. அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி உற்சவமும் கொண்டாடப்படுகிறது.

    தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார்

    தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார் ஏழுமலையானை போற்றி 32 ஆயிரம் பக்தி கீர்த்தனைகளை எழுதி பாடியவர். இவர் 1408-ம் பிறந்தார். அவர் 1503-ம் ஆண்டு உயிரிழந்தார். இவர், முதல் தெலுங்கு ஆன்மிக சொற்பொழிவாளர் ஆவார்.

    அன்னமாச்சாரியார் ஜெயந்தியையொட்டி மே மாதம் 6-ந்தேதி திருமலை, திருப்பதி மற்றும் தாளப்பாக்கத்தில் இசை, கலாசாரம், இலக்கிய ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

    அதேபோல் 22-ந்தேதி பரசுராம ஜெயந்தி விழா, 23-ந்தேதி பிருகு மகரிஷி வருட திருநட்சத்திரம், சீனிவாச தீட்சிதர் வருட திருநட்சத்திரம், மே மாதம் 4-ந்தேதி மதுரகவியாழ்வார் ஜெயந்தி விழா, அனந்தாழ்வார் ஜெயந்தி விழா, மே 5-ந்தேதி கூர்ம ஜெயந்தி, மே 7-ந்தேதி பராசரபட்டர் வருட திருநட்சத்திரம், மே 14-ந்தேதி அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏற்கனவே 40 போலி இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    திருமலை :

    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதள முகவரியை போல், போலி இணையதள முகவரியைத் தொடங்கி பலர் பக்தர்களிடம் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, தேவஸ்தானத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் தேவஸ்தான தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் என்ற பெயரில் திருமலையிலேயே செயல்பட்டு வந்த ஒரு போலி இணையதளத்தைக் கண்டு பிடித்து திருமலை 1-டவுன் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதற்கான தகவல் அறிக்கையை ஆந்திர மாநில சைபர் கிரைம் போலீசில் ஒப்படைத்துள்ளனர். திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதள முகவரியின் பெயரில் சில மாற்றங்களை ஏற்படுத்தி தொடங்கிய போலி இணையதளம் குறித்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். ஏற்கனவே 40 போலி இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய புகாரை தொடர்ந்து போலி இணையதள எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏழுமலையான் கோவில் ஆர்ஜித சேவைகள், தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகளை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது தவிர திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்பையும் பயன்படுத்தலாம். ஆனால், போலி இணையதளங்களை நம்ப வேண்டாம், எனப் பக்தர்களுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • மாலை 6 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை ராமானுஜர் குறித்த இசை நிகழ்ச்சி நடக்கிறது.
    • இன்று மாலை 5.30 மணிக்கு ராமானுஜரின் அவதார மகோற்சவம் தொடங்குகிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வைணவ ஆச்சாரியார் ராமானுஜரின் 1008-வது அவதார மகோற்சவம் திருப்பதியில் உள்ள அன்னமாச்சாரியார் கலையரங்கில் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டத்தின் சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 25-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கின்றன. அதையொட்டி 3 நாட்களும் மாலை 6 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை ராமானுஜர் குறித்த இலக்கிய சொற்பொழிவு மாநாடு மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    இன்று மாலை 5.30 மணிக்கு திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் ராமானுஜரின் அவதார மகோற்சவம் தொடங்குகிறது. ராமானுஜரின் மகிமைகள் என்ற தலைப்பில் திருப்பதி ஆச்சார்ய சக்கரவர்த்தி ரங்கநாதன் சொற்பொழிவாற்றுகிறார். திருப்பதியைச் சேர்ந்த ரேவதி குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
    • மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    இதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படும். இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பணத்தை செலுத்தி உறுதி செய்ய வேண்டும்.

    அதேபோல், ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை டிக்கெட்டுகள் இன்று காலை 11.30 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    ஜூலை மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளும் இன்று மாலை 3 மணிக்கு தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஜூலை மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய்வாய்பட்டவர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக மே மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்களின் ஒதுக்கீடு நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் தேவஸ்தானம் வெளியிடுகிறது.

    இதன் தொடர்ச்சியாக, மெய்நிகர் சேவைகளுக்கான மே மாத ஒதுக்கீடு, 24-ந்தேதி காலை 10 மணிக்கும், ஜூன் மாத ஒதுக்கீடு 24-ந் தேதி மாலை 3 மணிக்கும் வெளியிடப்படுகின்றன.

    மே மற்றும் ஜூன் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வருகிற 25-ந் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது.

    திருமலையில் உள்ள தேவஸ்தான அறைகளுக்கான மே மாத ஒதுக்கீடு வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கும், திருப்பதியில் உள்ள தேவஸ்தான அறைகளுக்கான மே மாத ஒதுக்கீடு 27-ந் தேதி காலை 10 மணிக்கும் இணையத்தில் வெளியிடப்பட் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    பக்தர்கள் இவற்றை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

    • இலவச தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    இதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படும். இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பணத்தை செலுத்தி உறுதி செய்ய வேண்டும்.

    அதேபோல், ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை டிக்கெட்டுகள் நாளை காலை 11.30 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    ஜூலை மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளும் நாளை மாலை 3 மணிக்கு தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஜூலை மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய்வாய்பட்டவர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக மே மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்களின் ஒதுக்கீடு நாளை மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் தேவஸ்தானம் வெளியிடுகிறது.

    இதன் தொடர்ச்சியாக, மெய்நிகர் சேவைகளுக்கான மே மாத ஒதுக்கீடு, 24-ந்தேதி காலை 10 மணிக்கும், ஜூன் மாத ஒதுக்கீடு 24-ந் தேதி மாலை 3 மணிக்கும் வெளியிடப்படுகின்றன.

    மே மற்றும் ஜூன் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வருகிற 25-ந் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது.

    திருமலையில் உள்ள தேவஸ்தான அறைகளுக்கான மே மாத ஒதுக்கீடு வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கும், திருப்பதியில் உள்ள தேவஸ்தான அறைகளுக்கான மே மாத ஒதுக்கீடு 27-ந் தேதி காலை 10 மணிக்கும் இணையத்தில் வெளியிடப்பட் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    பக்தர்கள் இவற்றை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 66, 476 பேர் தரிசனம் செய்தனர். 25,338 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இலவச தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
    • பக்தர்கள் போலி இணையதளங்களில் முன்பதிவு செய்து பணத்தை இழந்து வருகின்றனர்.

    திருப்பதி :

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

    தரிசன டிக்கெட் இல்லாமல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே பக்தர்கள் எப்படியாவது தரிசனம் செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் புரோக்கர்களை நாடி செல்கின்றனர்.

    அவர்கள் பக்தர்களிடம் 300 தரிசன டிக்கெட் கல்யாண உற்சவம் ஆர்ஜித சேவைகள் மற்றும் சுப்ரபாத சேவை வி.ஐ.பி. தரிசனம் பெற்று தருவதாக பல ஆயிரம் வாங்கிக் கொண்டு போலி தரிசன டிக்கெட்களை தருகின்றனர்.

    போலி தரிசன டிக்கெட் மூலம் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களை தேவஸ்தான அதிகாரிகள் சோதனை செய்யும் போது அவை போலி டிக்கெட்டுகள் என்பது கண்டறிந்து பக்தர்களை திருப்பி அனுப்புகின்றனர்.

    இதுகுறித்து தேவஸ்தானங்களுக்கு பல்வேறு புகார்கள் வருகின்றன. புகார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து புரோக்கர்களை கைது செய்து வருகின்றனர்.

    இதேபோல் திருப்பதி தேவஸ்தானம் என்ற பெயரில் போலியான இணையதளங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. இதை உண்மை என நம்பும் பக்தர்கள் போலி இணையதளங்களில் தரிசனத்தை கேட்டு தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்து பணத்தை இழந்து வருகின்றனர். இது குறித்தும் தேவஸ்தானத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தது. புகாரின் பேரில் பக்தர்களை ஏமாற்றும் போலி இணையதளங்கள் மீது ஐடி துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதன் விளைவாக சுமார் 40 போலி இணையதளங்களை ஐடி துறை கண்டறிந்துள்ளது. இந்த இணையதளங்களின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஐடி துறை பொது மேலாளர் சந்தீப் திருமலை போலீசில் புகார் அளித்தார்.

    பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தை தேடும் போது அதிகாரப்பூர்வ இணையதளம் மட்டுமே ஆன்லைனில் தெரியுமாறு உறுதிசெய்ய ஐடி துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    • வேறு வழியில் திருமலை சென்றாலும் திவ்ய தரிசன டிக்கெட் பயன்படாது.
    • மெட்டு வழித்தடத்தில் வழக்கம் போல் டோக்கன்கள் வழங்கப்படும்.

    அலிபிரி பூதேவி வளாகத்தில், அலிபிரி படித்துறை வழியாக திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு மட்டுமே திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது. திவ்ய தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள், அலிபிரிமெட்லா பாதையில் உள்ள கலிகோபுரத்தில் (படி எண். 2083) தரிசன டோக்கனை ஸ்கேன் செய்ய வேண்டும். இல்லையெனில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    திவ்ய தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் அலிபிரி படிகள் வழியாக மட்டுமே திருமலைக்கு செல்ல வேண்டும். வேறு வழியில் திருமலை சென்றாலும் திவ்ய தரிசன டிக்கெட் பயன்படாது. மெட்டு வழித்தடத்தில் வழக்கம் போல் டோக்கன்கள் வழங்கப்படும்.

    வாகனம் மூலம் திருமலையை அடைய விரும்புவோருக்கு ஸ்ரீனிவாசம், ஆர்.டி.சி. பஸ் நிலையம் எதிரிலும், விஷ்ணு நிவாசம், ெரயில் நிலையம் பின்புறம், கோவிந்தராஜ சத்திரங்கள் ஆகிய பகுதிகளில் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

    • திருப்பதியில் 67,687 பேர் தரிசனம் செய்தனர்.
    • ரூ 3.95 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதியில் ஏழுமலையான தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள், நேர ஒதுக்கீடு இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் நடைபாதையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கும் இலவச நேர ஒதுக்கிட்டு டிக்கெட் வழங்க வேண்டுமென பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற தேவஸ்தான அதிகாரிகள் 2,083-வது படியில் காளி கோபுரம் அருகே அலுவலகம் அமைத்து தரிசன டிக்கெட் வழங்கி வந்தனர்.

    தினமும் அதிகாரிகள் நடந்து சென்று டிக்கெட் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. இதையடுத்து அலிப்பிரியில் நடைபாதை இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் அலுவலகம் அமைத்து இன்று காலை முதல் பக்தர்களுக்கு டிக்கெட்டுகளை வழங்கி வருகின்றனர்.

    இலவச தரிசன டிக்கெட் பெற்று செல்லும் பக்தர்கள் 1,240-வது படி அருகே அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் தரிசன டிக்கெட்டை ஸ்கேன் செய்து கொண்டு நேர ஒதுக்கீடு பெற்று தரிசனத்திற்கு செல்ல வேண்டுமென தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பக்தர்கள் இந்த வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப திருமலை யாத்திரையை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

    திருப்பதியில் நேற்று 67,687 பேர் தரிசனம் செய்தனர். 25,090 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.95 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • இந்த உற்சவம் 16-ந்தேதி தொடங்கி மே 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • விழாவில் 19 நாட்களுக்கு உபய சமர்ப்பணம் நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவரை தவிர வைணவ ஆச்சாரியார்களுக்கோ அல்லது ஆழ்வார்களுக்கோ தனிச் சன்னதி கிடையாது. பத்மாவதி தாயார் கோவில் கூட, கீழே திருச்சானூரில் உள்ளது. வராகசாமி, ஸ்ரீவாரி புஷ்கரணிக்கு அருகில் தான் உள்ளார். ஆனால், அதற்கு ஒரே ஒரு விதி விலக்கு வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் மட்டுமே.

    அவரை வடமாநிலங்களில் 'பாஷ்யங்கார்' என்று அழைக்கின்றனர். மேலும் 'விஷிஷ்டா தைவத்யா சித்தபரம் மீமாம்சா' என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை புத்தகத்தின் பெயரை 'ஸ்ரீபாஷ்யம்' என மாற்றியதால் பகவத் ராமானுஜரை 'பாஷ்யங்கார்' என்று வைணவர்கள் அழைத்து வந்தனர்.

    பாஷ்யங்கார் எனப்படும் ராமானுஜர் ஹோலி வைசாக மாதத்தில் ஆருத்ரா நட்சத்திரத்தில் பிறந்தார். ராமானுஜர் திருமலைக்கு வந்து காடு திருத்தி, வீதி அமைத்து திருவிழாக்களை நடத்த ஏற்பாடு செய்தார். அதில் இருந்து தான் திருமலை நகரம் தோன்றியது. இன்னும் திருமலையில் ராமானுஜர் வீதி உள்ளது.

    திருச்சி ஸ்ரீரங்கம் பெரிய கோவிலின் நடைமுறைகளை திருமலைக்கும் கொண்டு வந்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருவாய்மொழி பாட ஏற்பாடு செய்தார். இதுதவிர பல்வேறு திருப்பணிகளை செய்தார். ஆகையால் தான் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ராமானுஜரை போற்றி வருகிறது.

    அவரை போற்றி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடத்தப்படும் பாஷ்யங்கார் உற்சவம் வருகிற 16-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (மே) 5-ந்தேதி வரை நடக்கிறது. விழாவில் 19 நாட்களுக்கு உபய சமர்ப்பணம் நடக்கிறது. ராமானுஜர் பிறந்த வைசாக மாதத்தில் வரும் ஆருத்ரா நட்சத்திரத்தையொட்டி பாஷ்யகார் சாத்துமுறை வருகிற 25-ந்தேதி நடக்கிறது.

    பாஷ்யங்கார் சாத்துமுறையையொட்டி மாலை சஹஸ்ர தீபலங்கார சேவைக்கு பிறகு தங்கத் திருச்சி வாகனத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியும், மற்றொரு தங்கத் திருச்சி வாகனத்தில் உற்சவர் பாஷ்யகாரும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதன் பிறகு கோவிலின் உள் விமானப் பிரகாரத்தை வலம் வருகிறார்கள்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பாஷ்யங்கார் சன்னதியில் சாத்துமுறை உற்சவம் நடக்கிறது. அதில் ஜீயர் சுவாமிகள், வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

    • பக்தர்கள் தங்கள் ஆன்மிக யாத்திரையை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.
    • 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்திருந்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். கோடை மற்றும் வாரவிடுமுறை என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கோவிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    அதில் தேதி, நேரம் குறிப்பிட்ட (எஸ்.எஸ்.டி. டோக்கன்) இலவச தரிசன டோக்கன் பெறாமல் நேராக வைகுண்டம் கியூ காம்ப்ளக்சுக்கு வந்து கம்பார்ட்மெண்டுகளில் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 43 மணிநேரம் ஆகிறது. இதனால், வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்திருந்தனர்.

    திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் ஆன்மிக யாத்திரையை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் சாமி தரிசனத்துக்காக தங்கி உள்ள பக்தர்கள் தங்கள் முறை வரும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும், என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    நேற்று முன்தினம் 60 ஆயிரத்து 101 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் உள்ள கல்யாணக் கட்டாக்களில் 30 ஆயிரத்து 991 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பிரதான உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் உடனுக்குடன் எண்ணப்பட்டதில் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.4 கோடியே 3 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×