search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படுகிறது.
    • கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை பக்தர்களுக்கு வசதியாக தரிசனம் செய்யும் வகையில் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியாக உள்ளது.

    திருப்பதி ஏழுமலையானை ரூ.300 டிக்கெட்டில் சென்று சுலபமாக தரிசிக்க ஏப்ரல் மாதத்துக்கான ஆன்லைன் ஓதுக்கீடாக தரிசன டிக்கெட்டுகள் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.

    https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படுகிறது.
    • ஏப்ரல் மாதத்திற்காக டிக்கெட் நாளை வெளியிடப்படுகிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை பக்தர்களுக்கு வசதியாக தரிசனம் செய்யும் வகையில் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியாக உள்ளது.

    திருப்பதி ஏழுமலையானை ரூ.300 டிக்கெட்டில் சென்று சுலபமாக தரிசிக்க ஏப்ரல் மாதத்துக்கான ஆன்லைன் ஓதுக்கீடாக தரிசன டிக்கெட்டுகள் நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வசந்த உற்சவ விழா ஏப்ரல் 3 முதல் 5-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • வசந்த உற்சவம் நடைபெறும் 3 நாட்களும் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஏப்ரல் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை வசந்த உற்சவ விழா நடைபெற உள்ளது.

    கோவிலுக்கு மேற்கு பகுதியில் உள்ள வசந்த மண்டபத்தில் தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஏழுமலையான் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்னபன திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் உள்ள பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு டிக்கெட்கள் Tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    ஆண்டுதோறும் வசந்த உற்சவ விழா தொடங்கி பவுர்ணமி அன்று நிறைவடைவது வழக்கம் அதன்படி 3-ந்தேதி காலை 7 மணிக்கு ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் 4 மாட வீதிகள் வழியாக வசந்த மண்டபத்தை சென்றடைகின்றனர். பின்னர் பூஜைகள் முடிந்து மாலை கோவிலுக்கு திரும்புகின்றனர்.

    4-ந்தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை ஏழுமலையான் 4 மாட விதிகளில் தங்க தேரில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதன்பின் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

    5-ந் தேதி ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஏழுமலையான், சீதாராமர் லஷ்மணர், ஆஞ்சநேயர், ருக்மணி, கிருஷ்ணர் ஆகிய உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் கோவிலுக்கு வந்தடைகின்றனர்.

    வசந்த உற்சவம் நடைபெறும் 3 நாட்களும் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தேன், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், சாதம் ஆகியவை மூலம் அபிஷேகம் ஆராதனை நடைபெறுகிறது. மாலை 6 முதல் 6-30 மணி வரை ஆஸ்தானம் கோலாகலமாக நடைபெறுகிறது.

    வசந்த உற்சவத்தையொட்டி வசந்த மண்டபம் பலவண்ண மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது. வசந்த உற்சவம் நடைபெறும் 3 நாட்களும் அஷ்டதள பாத பத்மாராதனை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    திருப்பதியில் நேற்று 63, 507 பேர் தரிசனம் செய்தனர்.29,205 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.72 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • கொரோனாவுக்கு பிறகு உண்டியல் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.
    • கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியாக இருந்தது.

    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை திருப்பதி தேவஸ்தானம் தயாரித்து தாக்கல் செய்துள்ளது.

    கொரோனாவுக்கு பிறகு உண்டியல் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியாக இருந்தது. தற்போது உண்டியல் வருமானம் ரூ.1,500 கோடி வரை உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் உளுந்தூர்பேட்டையில் காணிக்கையாளர்களின் காணிக்கையில் ரூ.4.70 கோடியில் வெங்கடாசலபதி கோவில் கட்ட முடிவு செய்துள்ளோம்.

    மேற்கண்ட விவரங்களை அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தெரிவித்தார்.

    • 22-ந்தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
    • 21, 22-ம் தேதிகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு நான்கு முறை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடத்தப்படுகிறது. அவை ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, யுகாதி பண்டிகை, வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் நடக்கும் முந்திய வாரத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கும்.

    22-ந்தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், நாளை (செவ்வாய்க்கிழமை) திருமலையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

    22-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் முடிந்ததும், மூலவர் சன்னதி சுத்தி, காலை 6 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி, விஷ்வக்சேனருக்கு விசேஷ சமர்ப்பணம், காலை 7 மணியில் இருந்து காலை 9 மணிக்குள் விமான பிரகார வலம், மூலவருக்கும் மற்றும் உற்சவருக்கும் புதிய பட்டு வஸ்திரம் அணிவித்தல், பஞ்சாங்க சிரவணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க வாசலில் ஆகம பண்டிதர்கள் மற்றும் பிரதான அர்ச்சகர்கள் அமர்ந்து சாஸ்திர பூர்வமாக உகாதி ஆஸ்தானத்தை நடத்துகின்றனர்.

    யுகாதி ஆஸ்தானத்தையொட்டி கோவிலில் 22-ந்தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

    மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (புதன்கிழமை) என 2 நாட்களும் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 நாட்களும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்களும் நிராகரிக்கப்படுகின்றன. பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எந்த பெருமாள் கோவிலுக்குச் சென்றாலும் அங்கே அருகிலேயே தாயார் சன்னதியும் இருக்கும்.
    • இந்த கோவிலை திருமணம் ஆகாதவர்கள் தரிசித்தால் திருமணத் தடை விலக்கும் தலம் இது.

    சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் நாராயணவன கல்யாண வெங்கடேச பெருமாள் ஆலயம் உள்ளது. இதனை திருப்பதிக்கு சமமான ஒரு கோவில் என்பர். திருப்பதி போல அதிக கூட்டம் இல்லாத தலம் இது. பெருமாளையும் தாயாரையும் ஒரே இடத்தில் நிம்மதியாகத் தரிசனம் செய்யலாம். பத்மாவதி, ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய தலம் இது.

    சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாத கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது. பெரும்பாலானோருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். பொதுவாக நாம் எந்த பெருமாள் கோவிலுக்குச் சென்றாலும் அங்கே அருகிலேயே தாயார் சன்னதியும் இருக்கும். ஆனால் திருப்பதியில் மட்டும் தாயார் எங்கோ தொலைவில் திருச்சானூரில் இருக்கிறாரே! ஏன் இப்படி?

    இதன் காரணம் என்னவெனில் திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளின் ஊர். திருச்சானூர் பத்மாவதி தாயாரின் ஊர். பெருமாள் தாயாரைப் பார்க்க திருச்சானூருக்கு வந்தார். அதனால் அங்கு பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது. ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த இடம் நாராயண வனம். இங்கு பெருமாளும், தாயாரும் ஒரு சேரக் காட்சியளிக்கின்றனர்.

    இங்கு பெருமாள் மணமகன் அலங்காரத்திலும், தாயார் மணமகள் அலங்காரத்திலும் அருள்பாலிக்கின்றனர். திருப்பதியிலும், திருச்சானூரிலும் தனித்தனியாக இருக்கும் இவ்விருவரும் ஒன்று சேர்ந்து எழுந்தருளியிருப்பது காணக் கிடைக்காத அற்புதக் காட்சி. நாராயணவனத்தில் உள்ள கல்யாண ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் திருப்பதியை விட பழமையான கோவிலாகும்.

    உடைவாள், கையில் திருமண காப்போடு பெருமாள் அருளும் இந்தத் திருத்தலம் உலகின் முதல் வெங்கடாஜலபதி கோவில் ஆகும். இடுப்பில் உடைவாளோடு, கையில் கல்யாண காப்போடு பெருமாள் இருக்கும் கோவில்கள் இரண்டு. ஒன்று குணசீலம் இன்னொன்று நாராயணவனம். இந்த கோவிலை திருமணம் ஆகாதவர்கள் தரிசித்தால் திருமணத் தடை விலக்கும் தலம் இது.

    திருப்பதி, திருமலை செல்பவர்கள் கீழ்த்திருப்பதியில் கோவிந்தராஜ பெருமாள் கோவில் உட்பட பார்க்கவேண்டிய கோவில்கள் சில உள்ளன. மேர் திருப்பதியில் வெங்கடாஜலபதியைப் பார்த்துவிட்டு, பாபநாசம் நீர்வீழ்ச்சி, சிலாதோரணம் பூங்கா ஆகியவற்றைப் பார்க்கலாம். திருப்பதியில் இருந்து சென்னை வரும் வழியில் நாராயணவனம், நாகலாபுரம், சுருட்டப்பள்ளி ஆகிய தலங்களைப் பார்த்து வரலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினமும் சுவாமி, தாயார்களுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
    • 3-ந்தேதி முதல் 5-ந்தேதி சேவைகள் வரை ரத்து செயயப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி உற்சவம் தொடங்குகிறது. அன்று காலை 7 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் நான்கு மாடவீதிகளில் வீதி உலா நடக்கிறது. பின்னர் வசந்த மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு அபிஷேகம், நெய்வேத்தியம் செய்யப்பட்டு கோவிலுக்கு திரும்புகின்றனர்.

    இரண்டாம் நாளான 4-ந் தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி தங்க ரதத்தில் எழுந்தருளி காலை 8 மணி முதல் 10 மணி வரை மாடவீதிகளில் உலா நடக்கிறது. பின்னர், வசந்த மண்டபத்தில் அர்ச்சகர்கள் வசந்தோற்சவம் நடத்துகின்றனர்.

    கடைசி நாளான 5-ந் தேதி ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சாமி, சீதாராம லட்சுமணன், ஆஞ்சநேயர், கிருஷ்ணசுவாமி உற்சவமூர்த்திகள், ருக்மணியுடன் வசந்த உற்சவத்தில் பங்கேற்று மாலையில் கோவிலை வலம் வருவார்கள்.

    இதை முன்னிட்டு தினமும் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை சுவாமி, தாயார்களுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை ஆஸ்தானம் நடைபெறும்.

    வசந்த உற்சவத்தை முன்னிட்டு அஷ்டதள பாதபத்மாராதனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதிபாலங்கர சேவைகள் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை ரத்து செயயப்பட்டுள்ளது.

    • வருகிற 22-ந்தேதி உகாதி பண்டிகை நடக்கிறது.
    • காலை 6 மணி முதல் 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை ஆழ்வார் திருமஞ்சனம் என்னும் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி வருகிற 22-ந்தேதி உகாதி பண்டிகை நடக்கிறது. இதனை முன்னிட்டு 21-ந் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. காலை 6 மணி முதல் 11 மணி வரை அர்ச்சகர்களால் இந்த ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

    கோவிலில் உள்ள ஆனந்தநிலையம் முதல் பங்காருவாகிலி வரை கோவிலுக்குள் உள்ள அனைத்து உபகோவில்கள், கோவில் வளாகங்கள், சுவர்கள், மேற்கூரை, பூஜை சாமான்கள் என அனைத்தும் நீரால் சுத்தம் செய்யப்படுகிறது.

    அப்போது சுவாமியின் மூலவிரட்டு முழுவதும் துணியால் மூடப்பட்டிருக்கும். சுத்திகரிப்பு முடிந்ததும், நாமகோபு, ஸ்ரீ சூர்ணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டா போன்றவற்றுடன் வாசனை திரவியம் கலந்து கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது. அதன்பின், சுவாமியின் மூலவிரட்டை மறைத்திருந்த துணி அகற்றப்பட்டு, சிறப்பு பூஜைகளை அர்ச்சகர்கள் சாஸ்திர முறையில் நடத்துகின்றனர். மதியம் 12 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.
    • திருப்பதியில் 74,994 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் 77 ஆயிரத்து 522 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32 ஆயிரத்து 390 பக்தர்கள் தலை முடி காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது.

    அதில் ரூ.73.66 கோடி காணிக்கை யாக கிடைத்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 14 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் நேற்று 74,994 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25,799 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.59 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • தெப்பத்தில் மூன்று சுற்றுகள் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • வேதம், பாட்டு, இசை ஆகியவற்றுக்கு இடையே தெப்போற்சவம் நடைபெற்றது.

    திருமலையில் நேற்று மலையப்ப சாமி தெப்போற்சவம் நடைபெற்றது. இதற்காக தெப்பம் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக மாலை 6 மணிக்கு பூதேவி சமேதா மலையப்ப சாமி ஊர்வலம் தொடங்கியது. கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக சென்று புஷ்கரிணியை அடைந்தது.

    அங்கு பூதேவி சமேதா மலையப்ப சாமி புஷ்கரணியில் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் மூன்று சுற்றுகள் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வேதம், பாட்டு, இசை ஆகியவற்றுக்கு இடையே தெப்போற்சவம் நடைபெற்றது.

    • மின்னொளியில் ஜொலித்த தெப்பத்தேரில் உற்சவர்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    • பக்தர்கள் கிருஷ்ணா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று மாலை 6 மணியளவில் உற்சவர்களான ருக்மணி சமேத கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து ஸ்ரீவாரி புஷ்கரணிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட, மின்னொளியில் ஜொலித்த தெப்பத்தேரில் உற்சவர்கள் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    ஸ்ரீவாரி புஷ்கரணியின் கரைகளில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிருஷ்ணா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    • 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • கையில் கம்பை வைத்துக் கொண்டு பாதுகாப்புக்காக இருந்து வருகிறார்.

    காவேரிப்பட்டனம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள செட்டிமாரம்பட்டி கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊரை காலி செய்து விட்டு குடும்பம் குடும்பமாக திருப்பதிக்கு சென்று வருவது வழக்கம். இது அறிவிக்கப்படாத ஊர் கட்டுப்பாடாக இன்று வரை தொடர்ந்து வழக்கத்தில் இருந்து வருகிறது. இதையொட்டி இந்தாண்டு கிராம மக்கள் திருப்பதிக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.

    இந்த ஆன்மிக பயணத்திற்காக ஒவ்வொரு வீட்டிலும் மஞ்சள் துணி கட்டிய உண்டியல் வைத்தனர். அதில் பொதுமக்கள் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து காணிக்கை போட்டு வைத்தனர். காவல் தெய்வமான ஊர் பூசாரி இந்தநிலையில் அந்த உண்டியலை எடுத்துக் கொண்டு கிராம மக்கள் வீடுகளை பூட்டி விட்டு நேற்று 15 பஸ்களில் ஊரை காலி செய்து விட்டு குடும்பத்துடன் திருப்பதிக்கு புறப்பட்டனர்.

    முன்னதாக, அவர்கள் ஊர் தலைவர் மாரியப்பன் தலைமையில், கிராமங்களை சுற்றிலும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கிராம மக்கள் பஸ்களில் திருப்பதிக்கு சென்றனர்.

    ஊரின் வழக்கம்படி ஊர் பூசாரி காவல் தெய்வமாக எல்லையில் கையில் கம்பை வைத்துக் கொண்டு பாதுகாப்புக்காக இருந்து வருகிறார்.

    திருப்பதி கோவிலுக்கு சென்ற கிராம மக்கள் வந்தவுடன் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஊர் பூசாரிக்கு ஊர் மரியாதை செய்த பின்னர் அவரவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு செல்வார்கள். ஊரை காலி செய்து விட்டு பொதுமக்கள் குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் சென்றதால் கிராமமே வெறிச்சோடியது. இதே போல தருமபுரி மாவட்டம்,நல்லம்பள்ளி வட்டம்,இண்டூர் அருகே உள்ள சோமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சிறுகலூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் கோயில் கட்ட முடிவு செய்துள்ளனர்.கோயில் கட்டி முடித்த பின்பு ஊரில் உள்ள அனைவரும் ஆந்திர மாநிலத்தில் திருப்பதி கோயிலுக்கு செல்ல முடிவு செயௌதுள்ளனர்,

    ஆனால் ஏதோ காரணத்தால் கோயில் கடௌடும் பணி நின்றுவிட்டது. இந்நிலையில் அக்கிராமத்தை பொது மக்கள் தம் முன்னோர்களின் வேண்டு தலை நிறைவேற்றும் வகையில் 80 வருடங்களுக்கு பிறகு ஊரில் கோயில் ட்டி கும்பாபிசேம் முடித்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று அக்கிராமத்தை சேர்ந்த மக்கள் திருப்பதிக்கு செல்ல முடிவு செய்தனர். இதுகுறித்து பேசிய கிராம மக்கள், தமது முன்னோர்கள் திருப்பதியிலுள்ள பெருமாள் கோவிலை போன்று ஒரு கோவிலை தங்களது கிராமத்தில் கட்ட வேண்டும் என்றும், கோவிலை கட்டி முடித்த பிறகே திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிப்போம் என வேண்டி கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இதனால், முன்னோர்களின் வேண்டுதலை நிறைவேற்றிடும் வகையில் ஊரே ஒன்று திரண்டு சொந்த செலவில் பெருமாள் கோவிலை கட்டி முடித்து சமீபத்தில் கும்பாபிசேகமும் செய்து முடித்து விட்டோம்.அந்த சந்தோசத்திலும், முன்னோர்களின் வேண்டுதலை நிறைவேற்றிடும் வகையில் 80 வருடங்களுக்கு பிறகு தற்போது ஊரே ஒன்று திரண்டு சுமார் 300 பேர் 5 பேருந்துகளில் திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசித்து செல்வதாக தெரிவித்தனர்.

    கிராம மக்களின் இந்த செயலை அந்தபகுதியை சேர்ந்த பொது மக்கள் ஆச்சரியத்துடன் பேசிக்கொண்டனர்.

    ×