search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94491"

    • விழா 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
    • 16-ந்தேதி தங்கத் தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடக்கிறது. அதையொட்டி 11-ந்தேதி காலை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம், இரவு பெரியசேஷ வாகன வீதிஉலா நடக்கிறது.

    12-ந்தேதி காலை சிறியசேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 13-ந் தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 14-ந் தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வபூபால வாகன வீதிஉலா, 15-ந் தேதி காலை பல்லக்கு உற்சவம் (மோகினி அவதாரம் வீதிஉலா), இரவு கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடக்கிறது.

    16-ந்தேதி காலை அனுமன் வாகன வீதிஉலா, மாலை வசந்தோற்சவம், மாலை தங்கத் தேரோட்டம், இரவு கஜ வாகன வீதிஉலா, 17-ந்தேதி காலை சூரியபிரபா வாகன வீதிஉலா, இரவு சந்திரபிரபா வாகன வீதிஉலா, 18-ந்தேதி காலை தேரோட்டம் (மரத்தேர்), இரவு குதிரை வாகன (அஸ்வ) வீதிஉலா, 19-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு கொடி இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் கோவிலின் நான்கு மாடவீதிகளில் வாகனச் சேவை நடக்கிறது. அதில் 15-ந்தேதி கருட சேவை அன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை வாகன வீதிஉலா நடக்கிறது.

    மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    ஆழ்வார் திருமஞ்சனம்

    இதனை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 6.30 மணி முதல் 11 மணி வரை கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் போன்றவற்றை தண்ணீரால் சுத்தப்படுத்திய பின், நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், கட்ட கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற சுகந்த வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் சர்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதியை சேர்ந்த பரதாள மணி என்ற பக்தர் கோவிலுக்கு இரண்டு திரைச்சீலைகளை நன்கொடையாக வழங்கினார்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாட்கள் நடக்க உள்ளது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா 9 நாட்கள் நடக்க உள்ளது. அதையொட்டி இன்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை யாக சாலையில் புண்ணியாவதனம், ரக்‌ஷாபந்தனம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் மற்றும் காரியக்கர்மங்கள் நடக்கிறது..

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை தங்கக் கொடிமரத்துக்கு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் தனூர் லக்னத்தில் காலை 9.45 மணியில் இருந்து காலை 10 மணிக்குள் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவின்போது தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி வாகன மண்டபத்தில் தரிசனம் தருகிறார்.

    நாளை இரவு சிறிய சேஷ வாகன சேவை, 1-ந்தேதி காலை பெரிய சேஷ வாகன சேவை, இரவு ஹம்ச வாகன சேவை, 2-ந்தேதி காலை முத்துப்பந்தல் வாகன சேவை, இரவு சிம்ம வாகன சேவை, 3-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன சேவை, இரவு ஹனுமந்த வாகன சேவை, 4-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம், மாலை வசந்த உற்சவம், இரவு யானை வாகன சேவை, 5-ந்தேதி காலை சர்வ பூபால வாகன சேவை, மாலை தங்கத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகன சேவை, இரவு கருட வாகன சேவை.

    6-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன சேவை, இரவு சந்திர பிரபை வாகன சேவை, 7-ந்தேதி மரத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகன சேவை, இரவு குதிரை வாகன சேவை, 8-ந்தேதி வாகன மண்டபத்தில் பஞ்சமி தீர்த்தம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது.

    இத்துடன் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
    திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பிரசித்திபெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் ஏற்றப்படுவதற்காக சிவ கொடி கோவிலின் நான்கு வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டது. பிறகு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, தீபாராதனை நடைபெற்றது.

    விழாவில், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமி, கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 5-ந் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதி உலா, ஜூன் 12-ந் தேதி காலை தேரோட்டம், 14-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான விக்ராந்த் ராஜா தலைமையில் நிர்வாக அதிகாரி சுந்தர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    புதுக்கோட்டை கீழ3-ம் வீதியிலுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
    புதுக்கோட்டை கீழ3-ம் வீதியிலுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில்வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.

    14 நாட்கள் விழாவில் தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம், தீபஆராதனை நடக்கின்றது. மாலை நிகழ்ச்சி யில் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் சுவாமி புறப் பாடு நடக்கின்றது.

    முதல் நாளில் வாஸ்த்து, கடஸ்தாபனம், 2-ம் நாளில் காப்புக் கட்டி கொடியேற்றப்பட்டது. பின்னர்அன்னவாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. 3-ம் நாளில் சிம்மவாகனத்தில் சாமி புறப்பாடும், 4-ம் நாளில் ஆஞ்சநேயர் வாகனத்தில் சாமிபுறப்பாடும் 5-ம் நாளில் கருட சேவையும் 6-ம் நாளில் சே‌ஷவாகனத்தில் சாமி புறப்பாடும் நடந்தது. 23.05.19 அன்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்க உள்ளது. 27.05.19 அன்று மாலையில் ஊஞ்சல் சேவையும் நடை பெறுகின்றது.

    விழா ஏற்பாடு களை திருக்கோவில் நிர்வாகிகள் ஆலய அர்ச்சகர் பாலாஜிபட்டாச்சாரியர் உட்பட பக்தர்கள் செய்கின்றனர், தினமும் நடக்கும் நிகழ்ச்சியில் சுற்று வட்டார பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ஆண்டு பிரம்மோற்சவத்தையொட்டி கட்டீல் துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அப்போது, தீப்பந்தங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி நூதன முறையில் வழிபட்டனர்.
    கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் இருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டீல் என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில், நந்தினி ஆற்றின் நடுவே அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த கோவிலின் ஆண்டு பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், கட்டீல் அருகே உள்ள அட்டூர் மற்றும் கொடத்தூர் கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி ஒருவர் மீது ஒருவர் தீப்பந்தங்களை வீசி எறிந்து நூதன முறையில் வழிபட்டு வருவது முக்கிய நிகழ்ச்சியாகும். இதில் அந்த கிராமங்களில் இருந்து வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் கலந்துகொள்வார்கள். இதில் யாருக்காவது தீக்காயம் ஏற்பட்டால், கோவில் பிரசாதத்தை பூசினால் அது சரியாகி விடும் என்பது ஐதீகம்.

    இந்த நிலையில் துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இந்த நிலையில் விழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை துர்கா பரமேஸ்வரி அம்மனின் தேரோட்டம் நடந்தது. முன்னதாக, துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில் முன்பு அட்டூர், கொடத்தூர் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப்பந்தங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

    இந்த நூதன வேண்டுதலில் தீப்பந்தங்களை வீசி எறியும் போது யாருக்கும் எந்த தீக்காயமும் ஏற்படாது. இவ்வாறு செய்வதன் மூலம் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். இதற்காக பக்தர்கள் கடுமையான விரதம் இருந்து, தீப்பந்தங்களை தூக்கி வீசும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.

    இதையடுத்து துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இந்த தேர், அந்த கிராமத்தின் முக்கிய பகுதிகள் வழியாக வந்து மாலை கோவிலை அடைந்தது. அதன்பின்னர் நேற்று இரவு கோவிலில் வாணவேடிக்கை நடந்தது. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பிரம்மோற்சவத்தையொட்டி திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    கடலூர் அடுத்த திருவந்தி புரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் பிரம் மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் தேவநாதசுவாமிக்கு சிறப்பு அபி ஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வந்தது.

    பிரம்மோற்சவத்தில் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவரான தேவநாத சுவாமிக்கும், செங்கமலத் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் தேவநாதசுவாமி தாயாருடன் சிறப்பு அலங் காரத்தில் எழுந்தருளினார்.

    இதனை தொடர்ந்து அலங் கரிக்கப்பட்ட உற்சவரான ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாதசுவாமி மேளதாளத் துடன் கோவிலில் இருந்து தேருக்கு கொண்டு செல்லப் பட்டது. கோவில் அருகில் அலங்கரித்து தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாத சுவாமி எழுந் தருளினர். அங்கு சுவாமிக்கு தீபாராதனை காண்பிக் கப்பட்டது.

    பின்னர் அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் கோவிந்தா...! கோவிந்தா...! என்ற பக்தி கோஷமிட்டபடி, வடம் பிடித்து தேரை இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோடும் வீதியில் அசைந் தாடி வந்த தேரை, ஏராளமான பக்தர்கள் கண்டு, பயபக்தி யுடன் சாமி தரிசனம் செய் தனர். இதற்கான ஏற் பாடுகளை பட்டாச் சாரியார் கள், அறநிலையத்துறை அதி காரிகள், பக்தர்கள் செய் திருந்தனர்.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    பஞ்ச பூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா அடுத்த மாதம்(ஏப்ரல்) 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    முன்னதாக சுவாமி, அம்மன், விநாயகர், சோமாஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காலை 10 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே எழுந்தருளினர். பின்னர், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து காலை 10.30 மணிக்கு மேஷ லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி வருகிற 31-ந் தேதி எட்டுத்திக்கும் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும், 2-ம் நாள் சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்திலும், 3-ம் நாள் பூத மற்றும் காமதேனு வாகனத்திலும், 4-ம் நாள் கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், 5-ம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் அடுத்த மாதம் 5-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-ந்தேதி நண்பகலில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சொக்கர் உற்சவம், மவுனோத்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது. மேலும் விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் புறப்பாடு நடக்கிறது. ஏப்ரல் 19-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. இதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்்தில் வீதி உலா வருகின்றனர். ஏப்ரல் 21-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. 
    காரைக்கால் நித்திய கல்யாணப்பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    காரைக்காலில் உள்ள பிரசித்திபெற்ற நித்திய கல்யாணப்பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று காலை நித்திய கல்யாணப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கொடிகம்பம் அருகில் எழுந்தருளினார். பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது.

    விழாவில் கைலாசநாதர் கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ், முன்னாள் தனி அதிகாரி ஆசைதம்பி, முன்னாள் தலைவர் தண்டாயுதபாணி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் நேற்று மாலை 6.30 மணிக்கு சூரிய பிரபை வீதி உலா நடைபெற்றது. பிரம்மோற்சவ விழா நாட்களில் சந்திரபிரபா, சேஷ, கருட, அனுமன், யானை உள்ளிட்ட வாகனங்களில் பெருமாளின் வீதிஉலா நடக்கிறது.

    விழாவில் வருகிற 15-ந் தேதி திருக்கல்யாணம், 17-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 19-ந் தேதி பெருமாள் பல்லக்கில் ஊர்வலமாக சென்று திரு-பட்டினத்தில் நடைபெறும் மாசிமகத்தில் கலந்து கொள்கிறார். 21-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழா கடந்த 31-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி நாள்தோறும் காலையும், மாலையும் பல்வேறு வாகனத்தில் உற்சவர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ம் நாளான இன்று வீரராகவர் கோயிலில் 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட தேரோட்டம் நடைபெற்றது.

    திருத்தேரில் காலை 7மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் தேரடியில் இருந்து புறப்பட்டு பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வருகிற 8-ந் தேதி காலை 10 மணிக்கு கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. விழாவின் கடைசி நாளான 9ம் தேதி இரவு 8மணிக்கு வெட்டிவேர் சப்பரம் வீதி உலா நடைபெற உள்ளது.

    துணை சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் உள்ளது. இக்கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். இங்கு சாரங்கபாணி பெருமாளுடன், கோமளவல்லி தாயார் அருள்பாலித்து வருகிறார். பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் தை பிரம்மோற்சவம் விமரிசையாக கொண்டாடப்படும். பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக பொங்கல் தினத்தன்று தேரோட்டம் நடக்கும்.

    இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சாரங்கபாணி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து நேற்று இரவு வெள்ளி இந்திர விமானத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது. வருகிற 16-ந்தேதி வரை பிரம்மோற்சவம் நடக்கிறது. இதில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது.

    தேரோட்டத்தை தொடர்ந்து சக்கரத்தாழ்வார், சக்கரவர்த்தி திருமகன் பொற்றாமரை குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர். 
    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீராடினர்.
    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை மாத பிரமோற்சவ விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடந்தது.

    8-வது நாளான நேற்றிரவு குதிரை வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. இன்று காலை கோவில் அருகேயுள்ள பஞ்சமி தீர்த்த தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

    இதற்காக திருமலை ஏழுமலையான் கோவிலில் இருந்து மஞ்சள், குங்குமம் மற்றும் பூஜை பொருட்கள் கொண்டு வரப்பட்டது. சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரியை கான நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    அவர்கள் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி முடிந்ததும் கோவில் தெப்பக்குளத்தில் புனித நீராடினர்.

    கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும், குற்ற சம்பவங்கள் தடுக்கவும் திருப்பதி எஸ்.பி.அன்புராஜன் தலைமையில் 3 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 15 டி.எஸ்.பி.க்கள், 55 இன்ஸ்பெக்டர்கள் என 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-ம் நாளான நேற்று மாலை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதைத் தொடர்ந்து ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 8 மணி முதல் 11 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் 4 மாட வீதி உலா வந்தார்.

    விழாவின் 8-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. தேரில் எழுந்தருளிய பத்மாவதி தாயார் 4 மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் குதிரை வாகனத்தில் சாமி ஊர்வலம் நடக்கிறது.
    ×