search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐயப்பன்"

    விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். மாலை தரித்த ஐயப்பன்மார் வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தினாலும் உணவு அருந்தக்கூடாது.
    1. ஐயப்ப பக்தர்கள் இயன்றவரை கார்த்திகைத் திங்கள் முதல் நாள் மாலை அணிந்து கொள்வது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை. அதற்குப் பின் மாலை அணி பவர்கள் கார்த்திகை 19 தேதிக்குள் ஏதாவதொரு நல்ல நாளில் மாலை அணியலாம். எப்படியும் சன்னி தானத்திற்குச் செல்லும் தினத்திற்கு முன்னதாக குறைந்தது ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் இருக்கும் படி பார்த்து அதற்குள் மாலை அணிந்து கொள்ளவேண்டும்.

    2. துளசிமணி அல்லது உருத்திராட்சமாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்பன் திருவுருவப்பதக்கம் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும். அத்துடன் துணை மாலை ஒன்றும் அணிந்து கொள்வது நல்லது.

    3. பலமுறை விரதமிருந்து சபரிமலை சென்று வந்து பக்குவமடைந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரைக் குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோவில்களிலோ குருநாதரை வணங்கி அவர் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும், அல்லது தாய், தந்தையர் மூலமாகவோ, இறைவன் திருவடிகளில் வைத்து எடுக்கப்பெற்ற மாலையினையோ அணிந்து கொள்ளலாம். மாலை அணிந்து கொண்டவுடன், குருநாதருக்குத் தங்களால் இயன்ற தட்சிணையைக் கொடுத்து அடி வணங்கி ஆசிபெற வேண்டும். ஐயப்பனாக மாலை தரித்த நிமிடத்திலிருந்து குருசாமியை முழுமனதுடன் ஏற்று அவர்தம் மொழிகளை தேவ வாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன் பணிந்து நடந்துக்கொண்டு பயணத்தை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

    4. நீலம், கருப்பு, காவி, பச்சை, மஞ்சள் இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங்களில் இயலாவிட்டாலும் பஜனைகளில் கலந்து கொள்ளும்போதும், யாத்திரையின்போது முழுவதும் கண்டிப்பாக வர்ண உடை அணிய வேண்டியது அவசியம்.

    5. மலைக்குச் செல்லக் கருதி, மாலை அணிய விரும்பும் பக்தரை, தாய், தந்தை, மனைவி, மக்கள் முதலியோர் தடுத்தல் கூடாது. எவ்வித அச்சமுமில்லாமல் தர்மசாஸ்தாவிடம் முழுப் பொறுப்பினையும் வைத்து, முகமலர்ச்சியுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

    6. மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் மிகவும் ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது பிரம்மச்சரிய விரதமாகும். மனம், வாக்கு, செயல் என்ற மூவகைகளிலும் காம இச்சையை அறவே நீக்கவேண்டும்.

    7. காலை, மாலை இருவேளைகளிலும் குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், பஜனை களில் கலந்து கொண்டு வாய்விட்டுக்கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தலும் பேரின்பம் பயக்கும்.

    8. படுக்கை, தலையணைகளை நீக்கி, தன் சிறு துண்டை மட்டும் தரையில் விரித்து படுக்கவேண்டும். பகல் நேரத்தில் தூங்குவதைத் தவிர்க்கவேண்டும்.

    9. களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப்பயணங்கள், போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.

    10. எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சவரம் செய்து கொள்வது, காலணிகள், குடை உபயோகிப்பது முதலியவற்றைக் தவிர்க்கவேண்டும்.

    11. மற்றவர்களிடம் பேசும் பொழுது, சாமி சரணம் எனத் தொடங்கி, பின் விடை பெறும்பொழுதும் சாமிசரணம் எனச் சொல்ல வேண்டும்.

    12. விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்து சைவ உணவே உண்ண வேண்டும். மாலை தரித்த ஐயப்பன்மார் வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தினாலும் உணவு அருந்தக்கூடாது.

    13. பக்தர்கள் மாலை தரித்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை ஐயப்பா என்றும், பெண்களை மாளிகைப்புறம் என்றும், சிறுவர்களை மணிகண்டன், சிறுமிகளை கொச்சி என்றும் குறிப்பிட்டு அழைக்கவேண்டும்.

    14. சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதாக பயணம் வர விரும்புகிறவர்களிடம் நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வருகிறேன். என்னோடு தைரியமாக வரலாம் என்று சொல்லக்கூடாது. பயணம் புறப்படும் பொழுது போய் வருகிறேன் என்று யாரிடமும் சொல்லிக் கொள்ளக்கூடாது. எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து அவன் திருவடிகளே சரணம் என்ற பத்தியுணர்வுடன் சரணம் விளித்துப் புறப்பட வேண்டும்.

    15. மாலையணிந்த ஐயப்பமார்கள் தங்களது கடமைக்கு இடையூறு இல்லாமல் சுறு சுறுப்புடன் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்யவேண்டும்.

    16. மாலையணிந்தது முதல் பக்தர்கள் நாள்தோறும் 108 சரணங்கள் சொல்லி காலை, மாலை வழிபட்டு, துளசி, கற்கண்டு, நாட்டு சர்க்கரை, பால் இவற்றுள் ஏதாவது ஒன்றை சிறிதளவு வைத்து நைவேத்தியம் செய்து வணங்கவேண்டும்.

    17. யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக கன்னி பூஜை நடத்த வேண்டும். எல்லா ஐயப்ப பக்தர்களும் தங்கள் வீட்டிலோ அல்லது குருசாமி மற்றும் ஐயப்பன் பக்தர்கள் வீட்டிலோ, பொது இடங்களிலோ சற்று விரிவான முறையில் கூட்டு வழிபாடு (பஜனை) நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி அருள் பெறுவது சாலச் சிறந்தது. ஐயப்பமார் ஒருவருக் காவது அன்னமிடுதல் மிக்க அருள்பாலிக்கும்.

    18. மரணம் போன்ற துக்க காரியங்கள் எதிலும் ஐயப்பமார்களும் அவர்கள் குடும்பத்தினரும் கலந்துக் கொள்ளக் கூடாது. தவிர்க்க முடியாத நெருங்கிய உறவில், மரணம் நேரிட்டு கலந்து கொள்ள வேண்டிய திருந்தால் தான் அணிந்த மாலையைக் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பிறகு தான் கலந்துகொள்ள வேண்டும். மாலையைக் கழற்ற நேர்ந்தால் மீண்டும் உடனே அணிந்து கொண்டு யாத்திரை செல்ல முற்படக்கூடாது. ஐயப்பன் திருவருளை வேண்டி மறுவருடம் சென்று வரவேண்டும்.

    19. எல்லா விரதங்களிலும், பிரம்மச்சாரிய விரதம் முக்கியமான தாகும். எனவே எந்தப்பெண்களைக் கண்டாலும் தாயென்றே கருத வேண்டும். மாதவிலக்கான பெண்களை காணக்கூடாது. தவறுதலாகக் காண நேர்ந்தால் உடனே நீராடி ஐயப்பனை வழிபட வேண்டும். பெண்கள் ருதுமங்கள சடங்கு விழாவிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்து கொள்ளக் கூடாது.

    20. இருமுடிக்கட்டு பூஜையை தன் வீட்டிலோ, இயன்ற தட்சிணை கொடுத்து, குருவின் கரங்களால் இருமுடியைத் தலையில் ஏற்று, வீதிக்கு வந்ததும் வாசற்படியில் விடலைத் தேங்காய் உடைத்து ஐயப்பன் சரண கோஷத்துடன் பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஒரே நோக்கத்துடன் பயணம் தொடர வேண்டும். யாரிடமும் போய் வருகிறேன் என்று சொல்லக் கூடாது.

    22. கன்னி ஐயப்பமார்கள் யாத்திரை புறப்பட்ட நேரத்திலிருந்து ஐயப்பன் சன்னிதானம் செல்லும் வரை அவர்களாக இருமுடியை தலையிலிருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றிக் கொள்ளவோ கூடாது. குருநாதர் அல்லது மற்ற பழமலை ஐயப்பன்மாரைக் கொண்டு ஏற்றவோ, இறக்கவோ வேண்டும்.

    23. 12 வயதுக்கு கீழ்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற வயதான பெண்களும் மட்டுமே சபரி யாத்திரையில் கலந்து கொள்ளலாம்.

    24. யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டு யானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்கும். எனவே பக்தர்கள் கூட்டமாக சரணம் சொல்லிக்கொண்டே செல்ல வேண்டும். இரவு நேரங்களில் காட்டிற்குள் மலஜலத்திற்காக தனியே அதிக தூரம் செல்லக்கூடாது. சரணம் விளித்தல், சங்கு ஒலித்தல், வெடி வைத்தல் பாதுகாப்புக்கு சிறந்த வழிகளாகும்.

    25. பம்பை நதியில் நீராடும்பொழுது மறைந்த நம் முன்னோர்களுக்கு ஈமக்கடன்கள் செய்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழிவகுக்க வேண்டும்.

    26. பம்பையில் சக்தி பூஜையின்போது ஐயப்பமார்கள் சமைக்கும் அடுப்பிலிருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப்பெற்ற சாம்பலை அத்துடன் கலந்து தயாரிக்கப்பெறுவதுதான் சபரிமலை பஸ்பம், இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

    27. இருமுடியில் ஐயப்பனுக்காகக் கொண்டு செல்லும் நெய்த்தேங்காயை சன்னிதானத்தில் உடைத்து, அபிஷேகம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் இந்த நெய்யையும், விபூதி பிரசாதங்களையும் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.

    28. ஐயப்பனுக்கு காணிக்கையாக சுற்றத்தார்களும், மற்றவர்களும் கொடுத்தனுப்பும் காணிக்கையை சன்னிதானத்தில் செலுத்தி, அவர்களுக்கு ஐயப்பன் திருவருள் கிடைக்க வேண்டிக் கொள்ள வேண்டும்.

    29. குருசாமிக்கு தட்சணை கொடுக்க வேண்டிய சமயங்களிலெல்லாம் ஐயப்பமார்கள் தாங்கள் விரும்பிய வசதிக்கேற்றவாறு கொடுத்து குருவின் அருளைப் பெறலாம். இதில் எந்தவித நிபந்தனையும் கிடையாது. ஐயப்பமார்கள் கொடுக்கும் காணிக்கை எவ்வளவாக இருந்தாலும் அதை மன மகிழ்வுடன் பெரும்பொருளாக ஏற்று குருவின் குருவான ஐயப்பனுக்கே செலுத்தி பேரருள் பெற்றுய்வது குருமார்களுக்குச் சாலச் சிறந்ததாகும்.

    30. ஐயப்பன்மார்கள் எல்லோரும், குறிப்பாக கன்னி ஐயப்பன் மார்கள் பெரிய பாதையில் (அழுதை வழி) சென்று வருவது மிகுந்த பயன் விளைக்கும். ஆனால் சிலர் தங்கள் தொழில், கடமை சூழ்நிலை கருதி எரிமேலியிலிருந்து சாலைக்காயம் வழியாகவும், சிலர் வண்டிப்பெரியாறு வழியாகவும் சபரிமலை செய்கிறார்கள். என்றாலும் பெரிய பாதையில் செல்லும் பொழுது மலைகளில் விளையும் பல மூலிகைகளின் சக்தி கலந்த காற்றினை பெறுவதாலும், பல மூலிகைகளை கலந்த ஆற்று நீரில் குளிப்பதால் உடல்நலம் ஏற்படுவதாலும் எழில்மிக்க இயற்கைக்காட்சிகளைக் கண்டு களிப்பதால் உள்ளம் பூரிப்பதாலும், பேரின்பமும் பெருநலமும் அடைகிறோம். நீண்டவழிப்பயணத்தில் ஐயப்பன் சரணமொழி அதிகம் சொல்வதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்து சொல்வதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்து பக்தி உணர்ச்சி வளர்கிறது.

    31. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் திருவருள் பிரசாதக் கட்டினை தலையில் ஏந்தியபடி, வாயிற்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டிற்குள் நுழைய வேண்டும். வழிபாட்டு அறையில் கற்பூர ஆர்த்தியோடு கட்டினை அவிழ்த்து பூஜை செய்து பிரசாதங்களை எல்லோருக்கும் வழங்க வேண்டும்.

    32. யாத்திரை இனிதே நிறைவேறியதும் குருநாதர் மூலம் மாலையைக் கழற்றி ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு அணிவித்து விட்டு விரதம் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
    ஸ்ரீஐயன் ஐயப்ப சுவாமியின் மகா மந்திரம் வலிமை மிக்கது.இந்த மந்திரத்தை காலையும் மாலையும் ஜபித்து வந்தால், எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகிவிடும்.
    பூதநாத ஸதானந்தா

    சர்வ பூத தயாபரா

    ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ

    சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ

    என்கிற ஐயப்ப சுவாமியின் மகா மந்திரத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். குறிப்பாக, புதன்கிழமைகளில் இந்த மந்திரத்தை காலையும் மாலையும் ஜபித்து வந்தால், எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகிவிடும். எடுத்த காரியங்கள் அனைத்தும் ஜெயம் தரும். எல்லா செயல்களிலும் துணைநின்று காத்தருளுவார் ஐயப்ப சுவாமி.

    கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான சபரிமலை நாதனை, சபரிகிரி வாசனை, ஐயன் ஐயப்ப சுவாமியை அவரின் மகா மந்திரம் ஜபித்து மனதார வழிபடுங்கள். சகல ஐஸ்வரியங்களையும் தந்து நம்மையும் நம் வம்சத்தையும் காத்தருளுவான் மணிகண்ட சுவாமி! அருளும் பொருளும் அள்ளித்தருவார் ஐயப்ப சுவாமி.
    ஐயப்ப சுவாமியின் மகா மந்திரத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். இந்த மந்திரத்தை காலையும் மாலையும் ஜபித்து வந்தால், எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகிவிடும்.
    ஐயன் ஐயப்ப சுவாமியை தர்ம சாஸ்தா என்று கொண்டாடுகிறது புராணம்.

    தர்ம சாஸ்தா காயத்ரி மந்திரம்:

    ஓம் பூதாதி பாய வித்மஹே
    மஹா தேவாய தீமஹி
    தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்

    எனும் தர்மசாஸ்தாவின் காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வந்தால், மனோபலம் பெருகும். மனதில் இதுவரை இருந்த தேவையற்ற குழப்பங்களும் கவலைகளும் பறந்தோடும் என்பது உறுதி.
    ஒருவன் பிரம்மச்சரிய வாழ்க்கை நடத்தும்போது பற்று போகிறது. கொடுக்கும்போது பற்று போகிறது. வாங்கும்போது பற்று போகிறது. பற்றற்ற வாழ்க்கையே பரமனடி சேர்கின்ற வழியாகும்.
    சாதாரண மனிதன் ஒருவன் அவன் செய்த கர்ம வினையிலிருந்து மீள வேண்டுமானால், அவன் முதலில் அலைபாயும் நிலையில் இருந்து விடுபட வேண்டும்.
    அதற்கு விரதம், அனுஷ்டானம், ஆச்சாரம், தர்ம சிந்தனை, செயல்பாடுகள் வேண்டும். இவை இருந்தால் முக்தி கிடைக்கும். அது கிடைக்க ஒரே இறைவழிபாடு ஐயப்பனே!

    ஒருவர் சபரிமலைக்கு மாலைபோடும் போது இல்லறத் துறவை மேற்கொள்கிறார். உடல், பொருள், ஆவி அனைத்தும் ஐயனுக்கே என்று அர்ப்பணிக்க வேண்டும்.
    மாலை போட்டி பிறகு எல்லா ஐயப்பமார்களும் ஒன்றே. அங்கே ஆத்மா ஒன்றே. வேறுபாடு கிடையாது. விருப்பு, வெறுப்பு கிடையாது.

    ஐயப்பனுக்காக மாலை போட்டதும், எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும். நான், எனது என்ற பற்று இங்கே அறுபடுகிறது.

    ஐயப்பனுக்கு விரதம் முக்கியம் 48 நாட்கள் விரதம் இருந்து மலைக்குப்போக முடியாதவர்கள், 14 நாட்கள் விரதம் எடுத்து பக்கத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி ஏற்று சென்று வணங்கி வரலாம்.

    ஒருவன் பிரம்மச்சரிய வாழ்க்கை நடத்தும்போது பற்று போகிறது. கொடுக்கும்போது பற்று போகிறது. வாங்கும்போது பற்று போகிறது. பற்றற்ற வாழ்க்கையே பரமனடி சேர்கின்ற வழியாகும். அனைத்து தோஷங்களுக்கும், ராகு தோஷத்திற்கும் ஐயப்பன் தரிசனம் தான் பரிகாரமாகும்.

    இந்து மதத்தில் சைவம், வைணவம் என்று பிரிந்து தனித்து வழிபாடு செய்து வருகிறார்கள்.

    மகாவிஷ்ணு மாதாவாகவும், சிவன் பிதாவாகவும் இருந்து பிறந்தவன் தான் ஐயப்பன்.

    பிறப்பில் எப்படி வேறுபாடு இல்லையோ இறப்பில் எப்படி வேறுபாடு இல்லையோ அப்படியே ஐயப்ப பக்தர்களிடம் உடையில் வேறுபாடு இல்லை. பாவத்தில், ரூபத்தில் வேறுபாடு இல்லாமல் வணங்கக்கூடிய ஒரே கடவுள் ஐயப்பன் தான்.

    கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான சபரிமலை நாதனை, அவரின் மகா மந்திரம் ஜபித்து மனதார வழிபடுங்கள். சகல ஐஸ்வரியங்களையும் தந்து நம்மையும் நம் வம்சத்தையும் காத்தருளுவான் மணிகண்ட சுவாமி!
    த்யானச் லோகம்

    ஸனிக் தாரவ விஸார குந்தல பராம்
    ஸிம்ஹா ஸனாத் யாஸினம்
    ஸபூர் ஜத் பத்ர ஸுக் லுப்த குண்டல
    மஹேஸ் விஸ் வாஸப் ருயோர் யுகம்
    நீல கௌம வஸம் நவீன் ஜலத
    ஸயாமம் ப்ரபா ஸ்த்யகா
    பாயாத் பார்ஸ்வ யுகம் ஸுசரக்தா ஸகலா
    கல்பம் ஸ்மரேத் ஆர்யுகம்
    நாம் உண்மையான பக்தியுடன் இறைவனை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும், நம்மை விருப்புகிற இறைவனும் நம்மை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறார்.
    1. மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும்
    மாளிகை புரத்து மஞ்ச மாதாவுக்கும்
    பந்தளத்தை ஆண்டு வந்த பார் போற்றும் மன்னருக்கும்
    மணிகண்ட கோபால கிருஷ்ணனுக்கும்
    ஜெயமங்களம் நித்ய சுப மங்களம்

    2. பஞ்சகிரி நிவாஸாய பூத நாதாய மங்களம்
    ஸ்ரீ ஹரிஹர புத்ராய பஞ்ச பூதாய மங்களம்
    கலியுக ப்ரத்யக்ஷ தேவாய காந்த கிரீசாய மங்களம்
    சர்வ பாப வினாசாய சபரிகிரீசாய மங்களம்

    3. சங்கராய சங்கராய சங்க ராய மங்களம்
    சங்கரீ மனோகராய ஸாஸ்வதாய மங்களம்
    குருவராய மங்களம் தாத்தாத்ரேய மங்களம்
    கஜானனாய மங்களம் ஷடானனாய மங்களம்
    ரகுவராய மங்களம் ராதாகிருஷ்ண மங்களம்
    பூர்ண புஷ்களா ஸமேத பூத நாத மங்களம்
    திவ்ய நாம ஸங்கீர்த்தனம்
    தீபப் ரதக்ஷிணம் சம்பூர்ணம்
    சுவாமியே சரணம் ஐயப்பா

    என்று பாடி கற்பூரம் ஆர்த்தி எடுக்க வேண்டும்
    சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரத காலங்களில் கருப்பு, நீலம் ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள வேஷ்டிகளையே அணிதல் வேண்டும்.
    சபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்யச் செல்லும் பக்கர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி மனது, உடல் ஆகிய இரண்டையும் தூய்மையாக்கி ஐயப்பனை நினைத்து மாலை அணிந்து விரதம் தொடங்கி விடுவார்கள். இவ்வாறு விரதம் மேற்கொள்ளுபவர்கள் விரதகாலத்தில் அதிகாலையிலும் மாலையிலும் குளிர்ந்து நீரில் குளிக்க வேண்டும். இதனால் உடலும் மனமும் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். விபூதி, சந்தனம் குங்குமம் போன்றவை தரித்து பூஜைகள் செய்து அவரவர் வசதிக்கு ஏற்ப 108 அல்லது 1008 சரணகோஷங்கள் முழங்க வேண்டும்.

    விரதகாலம் முழுமையும் ஒருவேளை அளவோடு சைவ உணவருந்தி இரவில் பழம், பால் போன்ற இலகு ஆகாரங்கள் உட்கொண்டு உபவாசம் இருக்க வேண்டும்.

    சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரத காலங்களில் கருப்பு, நீலம் ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள வேஷ்டிகளையே அணிதல் வேண்டும்.

    விரதத்தின்போது வீட்டு விலக்கான பெண்களின் அருகாமையைத் தவிர்க்க வேண்டும்.

    விரதம் இருக்கும்போது மது, சிகரெட், போன்ற போதை வஸ்துகளைப் பயன்படுத்தக்கூடாது.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் முக்கியமாகக்கடைபிடிக்க வேண்டிய விரதம் பிரம்மச்சர்ய விரதம்.

    மாலை போட்டிருக்கும்போது பகல் நேரத்தில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். இரவில் தூங்கும்போது தலையணை, மெத்தை போன்றவற்றைத் தவிர்த்து தரையில் வெறும் துண்டு அல்லது எதுவும் விரிக்காமல் படுத்து உறங்க வேண்டும் என்பது ஐதீகம்.
    ஐயப்பனுக்கு விரதம் அனுஷ்டித்து வழிபடுவதால் நமது அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்து, நமது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுகிறது. அப்படி சக்தி வாய்ந்த தெய்வமான ஸ்ரீ ஐயப்பன் ஸ்லோகம் இதோ.
    ஓம் மஹாசாஸ்த்ரே நம
    ஓம் விச்வசாஸ்த்ரே நம
    ஓம் லோகசாஸ்த்ரே நம
    ஓம் தர்மசாஸ்த்ரே நம
    ஓம் வேத சாஸ்த்ரே நம
    ஓம் காலசாஸ்த்ரே நம
    ஓம் கஜாதி பாய நம
    ஓம் கஜாரூடாய நம
    ஓம் கணாத் யக்ஷõய நம
    ஓம் வ்யாக்ரா ரூடாய நம
    ஓம் மஹாத்யுதயே நம

    ஓம் கோப்த்ரே நம
    ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம
    ஓம் கதா தங்காய நம
    ஓம் கதா க்ரண்யை நம
    ஓம் ரிக்வேத ரூபாய நம
    ஓம் நக்ஷத்ராய நம
    ஓம் சந்த்ர ரூபாய நம
    ஓம் வலாஹகாய நம
    ஓம் தூர்வாச்யாமாய நம
    ஓம் மஹா ரூபாய நம
    ஓம் க்ரூரத் ருஷ்டயே நம
    ஓம் அனாமயாய நம
    ஓம் த்ரிநேத்ராய நம
    ஓம் உத் பலாகாராய நம
    ஓம் காலஹந்த்ரே நம
    ஓம் நராதிபாய நம

    ஓம் கண்டேந்துமௌளிதநயாய நம
    ஓம் கல்ஹாரகுஸும ப்ரியாய நம
    ஓம் மதனாய நம
    ஓம் மாதவஸுதாய நம
    ஓம் மந்தார குஸுமார்சிதாய நம
    ஓம் மஹா பலாய நம
    ஓம் மஹாத் ஸாஹாய நம
    ஓம் மஹாபாப விநாசநாய நம
    ஓம் மஹா சூராய நம
    ஓம் மஹா தீராய நம
    ஓம் மஹாஸர்ப விபூஷணாய நம
    ஓம் அஸி ஹஸ்தாய நம
    ஓம் சரதராய நம

    ஓம் ஹாலாஹல தராத்மஜாய நம
    ஓம் அர்ஜுநேசாய நம
    ஓம் அக்னிநயநாய நம
    ஓம் அநங்க மதனாதுராய நம
    ஓம் துஷ்டக்ரஹாதிபாய நம
    ஓம் ஸ்ரீ தாய நம
    ஓம் சிஷ்டரக்ஷண தீக்ஷ?தாய நம
    ஓம் கஸ்தூரி திலகாய நம
    ஓம் ராஜசேகராய நம
    ஓம் ராஜ ஸத்தமாய நம
    ஓம் ராஜ ராஜார்சிதாய நம
    ஓம் விஷ்ணு புத்ராய நம
    ஓம் வநஜனாதிபாய நம
    ஓம் வர்சஸ்கராய நம
    ஓம் வரருசயே நம
    ஓம் வரதாய நம
    ஓம் வாயுவாஹனாய நம
    ஓம் வஜ்ர காயாய நம
    ஓம் கட்க பாணயே நம
    ஓம் வஜ்ரஹஸ்தாய நம
    ஓம் பலோத்ததாய நம
    ஓம் த்ரிலோகஞாய நம

    ஓம் அதிபலாய நம
    ஓம் புஷ் கலாய நம
    ஓம் வ்ருத்த பாவநாய நம
    ஓம் பூர்ணாதவாய நம
    ஓம் புஷ்கலேசாய நம
    ஓம் பாசஹஸ்தாய நம
    ஓம் பயாபஹாய நம
    ஓம் பட்கார ரூபாய நம
    ஓம் பாபக்னாய நம
    ஓம் பாஷண்டருதி ராகனாய நம
    ஓம் பஞ்சபாண்டவஸந்த்ராத்ரே நம
    ஓம் ப்ரபஞ்சாக்ஷ ராச்ரிதாய நம
    ஓம் பஞ்சவக்த்ர ஸுதாய நம

    ஓம் பூஜ்யாய நம
    ஓம் பூதசாஸ்த்ரே நம
    ஓம் பண்டிதாய நம
    ஓம் பரமேச் வராய நம
    ஓம் பலதா பூஷ்ட ப்ரதாய காய நம
    ஓம் கவயே நம
    ஓம் கவீ நாமதிபாய நம
    ஓம் க்ருபாளவே நம
    ஓம் க்லேசநாசனாய நம
    ஓம் ஸமாய நம
    ஓம் அரூபாய நம
    ஓம் ஸேநான்யை நம
    ஓம் பக்தஸம்பத் ப்ரதாயகாய நம
    ஓம் வ்யாக்ரசர்மதராய நம
    ஓம் சூலிணே நம
    ஓம் கபாலினே நம
    ஓம் வேணுவாதநாய நம
    ஓம் கலாரவாய நம
    ஓம் கம்புகண்டாய நம
    ஓம் கிரீடாதி விபூஷிதாய நம
    ஓம் தூர்ஜடவே நம
    ஓம் விரநிலாய நம
    ஓம் வீராய நம
    ஓம் விரேந்த்ர வந்திதாய நம
    ஓம் விச்வரூபாய நம
    ஓம் வ்ருஷபதயே நம
    ஓம் விவிதார்த்த பலப்ரதாய நம
    ஓம் தீர்க்கநாஸாய நம
    ஓம் மஹாபாஹவே நம
    ஓம் சதுர்பாகவே நம
    ஓம் ஜடாதராய நம
    ஓம் ஸநகாதிமுநிச்ரேஷ்ட ஸ்துத்யா நம
    ஓம் ஹரிஹராத்மஜாய நம
    நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி
    இக்கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள குளத்துப்புழை எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    குளத்துப்புழை ஐயப்பன் கோவில் (அ) குளத்துப்புழா ஐயப்பன் கோவில், ஐயப்பனின் முக்கியமான கோவில்களுள் ஒன்று. இங்கு ஐயப்பன் குழந்தையாக காட்சி தருவதால் பால சாஸ்தா என்று அழைக்கிறார்கள். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இக்கோயிலின் வாசல் சிறு குழந்தைகள் நுழையும் அளவிற்கே உள்ளது. இக்கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள குளத்துப்புழை எனும் சிற்றூரில் அமைந்துள்ளது.

    கோவில் அமைப்பு

    குளத்துப்புழா கோவில் கேரளக் கட்டிட அமைப்பைச் சேர்ந்தது. மரத்தாலான கோவில். நடுவில் கருவறையும் சுற்றி மரத்தாலான கூரையுடன் கூடிய சதுர வடிவப் பிரகாரம். இங்கு ஐயப்பன் பாலகனாகக் கருவறையுள் காட்சி தருகிறார்.

    பிரகாரத்தின் வலப்புறத்தில் யட்சியம்மன் சன்னிதி உள்ளது. குழந்தை வரம் வேண்டி இந்த அம்மனுக்குத் தொட்டில் கட்ட, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தை வலம் வரும்போது தனியே பிரிந்து செல்லும் பாதை, திறந்தவெளிக் கோவிலாக அமைந்துள்ள நாகராஜர் கோவிலுக்கு இட்டுச் செல்லுகிறது. இவ்விரண்டு சன்னிதிகள் தவிர கோவிலைச் சுற்றி, விநாயகர், மாம்பழத்துறையம்மன், பூதத்தார் சன்னிதிகளும் அமைந்துள்ளன.

    கோவில் தோன்றிய தல புராணம்

    கொட்டாரக்கரை பகுதியை ஆண்ட ஒரு அரசரும் அவருடைய ஆட்களும் காட்டில் கல்லடையாற்றின் கரையில் ஒருமுறை தங்க நேர்ந்தது. அப்போது உணவு சமைப்பதற்காக அடுப்பு மூட்டக் கல் தேடினர். மூன்று கற்களும் ஒரே அளவில் கிடைக்கவில்லை. ஒரு கல் மட்டும் சற்றுப் பெரிதாக இருந்தது. அளவில் பெரிதாக இருந்த கல்லை அதைவிட பெரிதான ஒரு கல்லைக் கொண்டு உடைக்க முயற்சித்தனர்.

    உடைக்க நினைத்த கல் உடையாமல் உடைக்கப் பயன்படுத்திய கல் எட்டு துண்டுகளாக உடைந்தது. உடைந்த பகுதிகளில் இருந்து இரத்தம் வழிந்தது. அரசரிடம் செய்தி தெரிவிக்கப்பட்டு தேவப் பிரசன்னம் பார்க்கப்பட்டதில், சிதறிய கல் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் உருவம் என்று தெரிய வந்தது. பரிகாரமாக அவ்விடத்தில் குழந்தை வடிவான ஐயப்பனுக்குக் கோவில் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது என்பது மரபுவழிச் செய்தி.

    சிதறிய எட்டுத் துண்டுகளும் கருவறையுள் உள்ளன. பூசை சமயத்தில் இவை ஒன்றாக வைக்கப்பட்டு வழிபட்டபின் வழக்கமான நிலையில் வைக்கப்படுகின்றன.

    மச்சக் கன்னி புராணக் கதை

    கோவிலை ஒட்டி கல்லடையாறு ஓடுகிறது. குளத்துப்புழை ஐயப்பனின் அழகில் மயங்கிய மச்சக் கன்னி ஒருத்தி அவரைத் திருமணம் செய்ய விழைய ஐயப்பன் மறுத்து விட்டார். அதனால் அவள் அவரைப் பார்த்துக் கொண்டே அப்பகுதியில் வாழும் வரத்தையாவது தனக்குத் தர வேண்டுமென ஐயப்பனிடம் வேண்ட அவரும் தனது தலத்தில் ஓடும் ஆற்றில் மீனாக இருக்கும்படி அருளினாராம்.

    மச்சக் கன்னியும் அவள் தோழியரும் கல்லடையாற்றின் இப்பகுதியில் மீன்களாக வாழ்வதாக ஒரு நம்பிக்கை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதலுக்காக இங்குள்ள மீன்களுக்குப் பொரி போடுகின்றனர். ஆற்றின் மற்ற பகுதிகளில் இல்லாத அளவில் இங்கு மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

    சிறப்புகள்

    இக்கோவிலில் ஐயப்பன் பாலகனாக அமைந்துள்ளதால், சிறுவர்களின் கல்விக்கு உகந்த இடமான இங்கு விஜய தசமி மற்றும் சில குறிப்பிட்ட நாட்களில் இங்கு நடைபெறும் வித்யாரம்பம் சிறப்பானது. ஏப்ரல்/மே மாதத்தில் நடைபெறும் விஷு மகோத்சவம் இங்கு நடைபெறும் முக்கியமான திருவிழா ஆகும்[2]. பரவலாக அறியப்பட்ட ஐயப்பனின் கோவில்களில் குளத்துப்புழா ஐயப்பன் கோவில் ஒன்றாக உள்ளது. ஆரியங்காவு, அச்சன்கோவில், எருமேலி, பந்தளம், சபரிமலை ஆகியவை ஐயப்பனின் பிற முக்கியமான கோவில்கள்.

    சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் செங்கோட்டையிலிருந்து ஆரியங்காவு, குளத்துப்புழா சென்று ஐயப்பனை வழிபட்டபின் பந்தளம் சென்று பின் அங்கிருந்து சபரிமலைக்குச் செல்வது வழக்கம்.திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள அரியப்பபுரம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள குளத்தூர் ஐயன் கோவில் இந்தக் கோவிலில் இருந்து பிடிமண் மற்றும் நீர் எடுத்துவந்து கட்டப்பட்டது.இன்றைக்கும் இந்தக் கோவில் திருவிழாவின் போது குளத்துபுழா சென்று நீர் எடுத்து திரும்புவது வழக்கம்

    இக்கோவில் அமைந்துள்ள குளத்துப்புழா எனும் சிற்றூர், செங்கோட்டை-திருவனந்தபுரம் சாலையில்[2] செங்கோட்டையிலிருந்து சுமார் 40-50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மதுரை - கொல்லம் இருப்புப் பாதை வழியாகவும் இக்கோவிலை அடையலாம். மேலும் இவ்வூர் திருவனந்தபுரத்திலிருந்து 62 கிமீ தூரத்திலும், கொல்லத்திலிருந்து 64 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.
    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், மிகவும் பக்தி சிரத்தையுடன் விரதம் இருந்து கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், மிகவும் பக்தி சிரத்தையுடன் விரதம் இருந்து செல்வார்கள். அப்படிச் செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    பிரம்மச்சரியம்

    சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்படும் நாள் முதல் அறுபது நாட்கள் கழித்து மகரவிளக்கு பூஜை நடக்கிறது. ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு வழிபாடு நடைபெறும். இந்த 60 நாட்களும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு, உணவைக் குறைத்து, ஐயப்பன் புகழ்பாடி விரதம் இருக்க வேண்டும்.

    41 நாளிலும் விரதத்தை முடிக்கலாம். மண்டல பூஜைக்கு செல்பவர்களுக்கு 41 நாட்கள் விரதம் போதுமானது. ஆனால் கோவிலுக்குச் சென்று திரும்பிய பிறகும், ஜனவரி 14-ந் தேதி வரை பிரம்மச்சரிய விரதத்தையும், பிற கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிப்பதன் மூலம் ஐயப்பனின் அருளை முழுமையாகப் பெறலாம்.

    கற்பூர தீபம்

    ஐயப்பனை ‘கற்பூர தீபப் பிரியன்’ என்று அழைப்பார்கள். ஐயப்பனுக்கு பிடித்தமான ஆராதனைகளில், தீபாராதனை முக்கியமானது. விரதம் இருந்து வழிபடும் ஒவ்வொரு நாளிலும், பூஜையை தொடங்கும் போதில் இருந்து, முடியும் வரை இறைவனுக்கு தீபாராதனையை காட்டிக்கொண்டே இருக்க ேவண்டும். சபரிமலை யாத்திரையின்போது வழிபாதைகளிலும் கூட, மாலை நேரங்களில் எங்காவது கற்பூரம் ஏற்றி ஐயப்பனின் சரண கோஷங்களை ஒலித்து வழிபாடு செய்ய வேண்டும் என்பது விதிமுறை.

    இருமுடி

    நீலம், காவி அல்லது கருப்பு நிற துணியில் பூஜை பொருட்களை குருசாமி முன்னிலையில் நிரப்ப வேண்டும். துணியை இரண்டு பகுதியாக பிரித்து தேங்காய், பச்சரிசி, வாழைப்பழம், அவல், பொரி, சந்தனம், பத்தி, விபூதி, குங்குமம், மஞ்சள்பொடி, வெல்லம், கல்கண்டு, உண்டியல் காசு ஆகியவற்றை வைக்க வேண்டும். பின்முடியில் தனக்கு தேவையான உணவுப்பொருளை வைத்துக்கொள்ள வேண்டும். சபரிமலை பயணத்தைத் தொடங்கிய தருணத்தில் இருந்து, இருமுடி தலையிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்வது சிறப்பான பலனைத் தரும்.

    நெய் அபிஷேகம்

    சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், ஆலயத்திற்குள் நுழைந்ததும் தாங்கள் கொண்டு சென்ற நெய் தேங்காயை உடைத்து ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, அபிஷேகம் செய்ய கிளம்புவாா்கள். நெய் அபிஷேகம் செய்ய தேவஸ்தான அலுவலகத்தில் இருந்து ரசீது பெற வேண்டும். அபிஷேகம் செய்த நெய்யை அர்ச்சகர் ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீண்டும் பக்தருக்கு கொடுப்பார். இந்த நெய் ஒரு புனிதமான மருந்து என்பதால் பக்தர்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு வருவர்.

    மகரபூஜை அன்று நெய் அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் காத்து நிற்பார்கள். இந்த ஒரு நாள் மட்டும்தான் காலை முதல் மதியம் வரை தொடர்ந்து ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடக்கும். ஐயப்பன் கோவிலில் மிக அதிகமாக கிடைப்பது நெய்தான். பக்தர்கள் கொண்டு சென்ற நெய்யை தீவட்டி எரிப்பதற்கும், விளக்கு எரிப்பதற்கும் கொடுத்து விடுகிறார்கள். அப்பம், அரவனை பாயசம் தயாரிக்கவும் நெய்யே பயன்படுத்தப்படுகிறது.

    கணபதிக்கு நெய் தேங்காய்

    சபரிமலையில் பதினெட்டாம்படியின் கீழே ஒருபுறத்தில் எரியும் ஆழித்தீயில் நெய் தேங்காயைப் போடுவார்கள். இது ஐயப்பன் சன்னிதியின் இடதுபுறம் உள்ள கன்னிமூல கணபதிக்கு உரிய வழிபாடாகும். சபரிமலை கோவிலில் நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கற்பூர தீபம் ஏற்றுதல், பாயாசம் வைத்தல், வெள்ளை நைவேத்தியம், திரிமதுரம், பஞ்சாமிர்தம், அப்பம், எள்உருண்டை, பழம், பானகம், இளநீர், நெய்விளக்கு, புஷ்பாஞ்சலி, சந்தனம் சார்த்துதல் ஆகியவை முக்கிய வழிபாடுகளாக உள்ளன. இவற்றில் நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கற்பூர தீபம் ஆகியவை தினமும் செய்யப்படும் வழிபாடுகளாகும்.

    குருசாமி

    சபரிமலைக்கு 18 முறைக்கு மேல் சென்று வந்தவர்கள் ‘குருசாமி’ என்ற தகுதியை பெறுவர். ஒரே ஆண்டில் 18 முறை சென்றுவிட்டு, குருசாமி என கூற முடியாது. 18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு இருமுடி கட்டி, 41 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து வருபவர்களே குருசாமி ஆக முடியும். இவர்கள் தங்கள் கையால் மற்ற ஐயப்பன் மார்களுக்கு மாலை அணிவிக்கலாம். இவர்கள் சபரிமலை சீசன் அல்லாத நாட்களில் கூட ஐயப்பனுக்கு பூஜை செய்து வரவேண்டும் என்பது ஐதீகம்.
    காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது தொடங்கி, விரதம், சுவாமியின் நாமத்தை ஜபிக்கறது, மாலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது ஐயப்பசாமிகளின் வீடுகளுக்கோ கோயில்களுக்கோ சென்று பூஜையில் கலந்துகொள்வதென ஐயப்பனின் சிந்தனையே 41 நாள்களும் மிகுந்திருக்கும்.
    1. ஸ்ரீ ஹரிஹர ஸுப்ரஜா சாஸ்தா பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்தே
    உத்திஷ்ட நரசார்தூல தாதவ்யம் தவ தர்சனம்
    உத்திஷ்டோத்திஷ்ட சபரி கிரீச உத்திஷ்ட சாந்திதாயக
    உத்திஷ்ட ஹரிஹர புத்ர த்ரைலோக்யம் மங்களம் குரு

    2. குரோ ஸமஸ்த ஜகதாம் மனக்லேச ஹாரே
    பக்தோ விஹாரினே மனோஹர திவ்ய மூர்த்தே
    ஹேஸ்வாமி பக்தஜனப்ரிய தான சீல
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    3. தவஸுப்ரபாதம் அமித்ர ரக்ஷக
    பவது ப்ரஸன்ன மனன சுந்தர
    ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மைக்ய ஸ்வரூப
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    4. அகஸ்த்யாதி மஹா ரிஷிய ஸமுபாஸ்ய ஸந்த்யாம்
    காந்தகிரி குஸுமானி மனோஹரானி
    ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபன்னா
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    5. வாஸவாதி தேவகணா ஸ்வர்காத் இஹைவ ஆக தா
    தர்சிதும் பவந்தம் மகர ஸங்கிரம காலே
    உச்சை சரண கோஷை பஹுதா ஸ்துவந்தி
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    6. ச்ரத்தா பக்தி ஸமன்வித ஆதீத பூஜாத்ரவ் யானி
    த்வ்ய கந்தாதி ஆஜ்ய பூரித நாளிகே ரானி
    க்லிஷ்டமானவ வர்க்கேன நிஜவ்ரதம் கல்பயன்தவ பார்ச்வம் ஆகதம்
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    7. திவ்ய பஸ்மாலங்க்ருத லலாட காத்ர நீலவஸ்த்ரதர
    ஸம்ஸார பேஷஜ துளஸீஹார ஸமாவ்ருத மார்க்க ரக்ஷக
    சிஷ்டாணாம் ரக்ஷகஸ் சைவ சரணகோஷஸந்துஷ்ட
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    8. ஸோம சுந்தரேஸ்ய ப்ரேம்னா சக்த்யாம் சஹரிணாஸஹே
    நிக்ர ஹார்த்தம் தைத்யானாம் பாலரூபேண ஸமன்வித
    அவதார யாமாஸ பம்பாதீரே பந்தளாதிப ப்ரபூஜித
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    9. ஸந்யாஸரூப சபரி யாத்ரா ஸர்வாப குணவர்ஜித
    ஸஸ்நேஹம் ஸோத் ஸாஹஞ்ச ஸாந்த்வனானி பணந்த
    ஸமஸ்த மங்கள ஸன்மார்க்கம் ஸதா அஸ்மா ஸுப்ரதர்சிதம்
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    10. பவத்ஸகா சாத் ஈப்ஸித பலம் ஆப்னு வந்தி இஹ லோக மானவா
    தத் காரணா தேவ அர்தினா தவ பார்ஸ்வ மா க தா
    மாது பரிபாலனாதிவ பவிஷ்யேம ஸுகினோத்ருவம்
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

    11. நிர்மானுஷ்யா ரண்யே த்வயி ஸ்தி தேஸதி
    திவாம் ஸமீப யிஷ்யும் அசக் தோ பூதோபீ
    தவநாமம் உக் சரன்னேவ இஹ ஆயாதே புனர்புன
    ஸ்ரீ சபரி பீடாச் ரம ஸ்தானி னே தவ ஸுப்ரபாதம்

    12. நிஷ்டாயாம் ஸ்திதோபி அஸ்மத் ஸ காச ஹ்ருதி ஸனனி வேஷ்ட
    நசாஸ்த்ரு பக்தானாம் அசுபம் வித்ய தே க்வ்சித்
    தீயந்தாம் யச கீர்த்திம் வித்யாம் புத்திம் ச்ரியம்பலம்
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

    13. அப்ர மேய ப்ரபாபவ அணிமாதி ஸித்தித
    அக்ஞான நாசன ஸுவிக் ஞான தாயக
    ஆனந்த பூத அனாத நர்த
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

    14. மானவாவதாரே மனு ஜாக் ருதிம் மணிகண்டா பிரதானம் ரமணிய தேஹீனம்
    தனுர் தரம் தைர்ய கீர்த்திம் பஜாமி நித்யம் புவனைக நாதம்
    தேவா வதாரே திசாந்த ரூபம் காந்த ச்ருங்க வாஸினம் கமனீய லோசனம்
    வாஸர வார்ச்சிதம் புராண புருஷம் பஜாமி நித்யம் பூதாதி நாதம்.

    15. பாண்ட் யேச ரத்னம் புவி பாலகம் பந்தனா திபம் பரமபுருஷம்
    சுசிஸ்மிதம் சுத்த தே ஹினம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
    அத்புத காத்ரம் கிராதவ புஷம் ஆத்யந்த ரஹிதம் ஆபத் ஸகாயம்
    ஆனந்த ஸிந்தும் அரவிந்த லோசனம் பஜாமி நித்யம் த்ரிபுராரி புத்ரம்.

    16. ஏனதர் நாம பனதர் திவ்யை புஷ்பவனேன விரசிதை
    பக்தி பூர்வக் குதை ப்ரபாதச் லோகை
    தோஷாணி த்யக் தவா குணான் ஸ்வீகுருஷ்வன்
    பரீணாது பகவான் ஸ்ரீ ஹரிஹர புத்ர
    ஓம் நமோ கிரிசாய சிபி விஷ்டாய
    ஸ்ரீ ஹரிஹர புத்ராய ச ஓம் தத் ஸத்
    ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி இராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம்ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!
    ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா

    ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா

    ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா

    ஓம் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா

    ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா

    ஓம் ஆபத்தில் காப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் இன்தமிழ்ச்சுவையே சரணம் ஐயப்பா

    ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா

    ஓம் ஈடில்லாத் தெய்வமே சரணம் ஐயப்பா

    ஓம் உண்மைப்பரம் பொருளே சரணம் ஐயப்பா

    ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா

    ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் ஊழ்வினைகள் அழிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் எங்கள் குலதெய்வமே சரணம் ஐயப்பா

    ஓம் ஏழைப்பங்காளனே சரணம் ஐயப்பா

    ஓம் ஏகாந்த முர்த்தியே சரணம் ஐயப்பா

    ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா

    ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா

    ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா

    ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

    ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா

    ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் கலியுகவரதனே சரணம் ஐயப்பா

    ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா

    ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா

    ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா

    ஓம் அச்சங்கோவில் அரசே சரணம் ஐயப்பா

    ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா

    ஓம் குளத்துப்புழைப் பாலனே சரணம் ஐயப்பா

    ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா

    ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா

    ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா

    ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா

    ஓம் பம்பையிலே பிறந்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா

    ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

    ஓம் சாந்தம்நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா

    ஓம் குருமகனின் குறைதீர்த்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் குருதட்சணை அளித்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் புலிப்பாலை கொணர்ந்தவனே சரணம்ஐயப்பா

    ஓம் வன்புலியின் வாகனனே சரணம்ஐயப்பா

    ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா

    ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா

    ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா

    ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் இருமுடிப்பிரியனே சரணம் ஐயப்பா

    ஓம் எருமேலி தர்மசாஸ்தாவே சரணம்ஐயப்பா

    ஓம் நித்திய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா

    ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா

    ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா

    ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே சரணம்ஐயப்பா

    ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம்ஐயப்பா

    ஓம் சாந்திதரும் பேரழகே சரணம் ஐயப்பா

    ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா

    ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம்ஐயப்பா

    ஓம் காளைகட்டி நிலையமே சரணம்ஐயப்பா

    ஓம் அதிர்வேட்டுப்பிரியனே சரணம்ஐயப்பா

    ஓம் அழுதமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    ஓம் ஆனந்தமிகு பஜனைப்பிரியனே சரணம்ஐயப்பா

    ஓம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா

    ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம்ஐயப்பா

    ஓம் இஞ்சிப்பாறைக்கோட்டையே சரணம்ஐயப்பா

    ஓம் கரியிலந்தோடே சரணம் ஐயப்பா

    ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா

    ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா

    ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா

    ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா

    ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் திருவேணி சங்கமமே சரணம் ஐயப்பா

    ஓம் ஸ்ரீராமர் பாதமே சரணம் ஐயப்பா

    ஓம் சக்திபூஜைக் கொண்டவனே சரணம் ஐயப்பா

    ஓம் சபரிக்கு அருள் செய்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா

    ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா

    ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா

    ஓம் திருபம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா

    ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா

    ஓம் அப்பாச்சிமேடே சரணம் ஐயப்பா

    ஓம் இப்பாச்சிக்குழியே சரணம் ஐயப்பா

    ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா

    ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா

    ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா

    ஓம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா

    ஓம் கடுத்தசாமியே சரணம் ஐயப்பா

    ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா

    ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா

    ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா

    ஓம் பசுவின் நெய் அபிஷேகமே சரணம் ஐயப்பா

    ஓம் கற்பூரப்பிரியனே சரணம் ஐயப்பா

    ஓம் நாகராஜாப் பிரபுவே சரணம் ஐயப்பா

    ஓம் மாளிகைப் புறத்தம்மனே சரணம் ஐயப்பா

    ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா

    ஓம் அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா

    ஓம் அலங்காரப்பிரியனே சரணம் ஐயப்பா

    ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா

    ஓம் சற்குருநாதனே சரணம் ஐயப்பா

    ஓம் மகரஜோதியே சரணம் ஐயப்பா

    ஓம் மங்களமூர்த்தியே சரணம் ஐயப்பா

    ஓம் ஐயப்பா! நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும்.

    ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி இராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம்ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா

    ×