search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94542"

    சராசரியாக ஒரு நபர் உடலில் நீரேற்றத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் 3.7 லிட்டர் அல்லது 125 அவுன்ஸ் தண்ணீர் தேவைப்படுகிறது.
    குளிர்காலத்தில் கோடை காலத்தை போல் அடிக்கடி தாகம் எடுக்காததால், நம்மை அறியாமலேயே நீர் பருகும் அளவு குறைந்து போய்விடும். குளிர்காலத்தில் குளிர்ச்சி நிலவுவதால் உடலுக்கு குறைந்த அளவிலேயே திரவம் தேவைப்படும் என்று அர்த்தமல்ல.

    குளிர்காலத்தில் வியர்வை குறைவாக சுரக்கும். நம்மைச் சுற்றியுள்ள காற்றும் உலர்ந்து போய்விடும். அதனால் சிறுநீர் மூலம் திரவ இழப்பு அதிகரிப்பதால் உடல் அதிக ஈரப்பதத்தை இழக்கும். அதனை ஈடு செய்வதற்கு நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆதலால் குளிர் காலத்தில் தண்ணீர் உட்கொள்வதை குறைக்காதீர்கள். வெப்பநிலை குறைவாக இருக்கும்போதும் நீரிழப்பு ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    உடலில் நீர்ச்சத்தை பேணுவதற்கு வெறுமனே தண்ணீர் மட்டும் பருகுவதும் கூடாது. உணவு பட்டியலில் பழங்களை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். ஆரஞ்சு, தர்பூசணி, அன்னாசி மற்றும் பீச் போன்ற திரவ சத்து நிறைந்த பழங்கள், பிரோக்கோலி போன்ற காய்கறிகளை உட்கொள்ளலாம். இது தினசரி உணவில் அதிக திரவத்தை சேர்ப்பதற்கான வழிமுறையாகும். பருவ கால காய்கறிகள் மற்றும் மூலிகைகளை கொண்டு சூப் தயாரித்து பருகலாம். வீட்டில் தயாரிக்கும் சூப்பை உட்கொள்வது நீர்ச்சத்தை மேம்படுத்த உதவும்.

    குளிர் காலத்தில் மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது நீரிழப்பை ஏற்படுத்தக்கூடும். அன்றாட உடல் செயல்பாடுகளுக்கு ஏற்ப நீர் உட்கொள்ளும் அளவை தீர்மானிப்பதும் முக்கியமானது. உதாரணமாக கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்பவர்கள் மற்றவர்களை விட அதிகமாக தண்ணீர் பருக வேண்டும். உடலில் நீரிழப்பின் அளவு அதிகரிக்கும்போதுதான் தாகம் எடுக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் நாள் முழுவதும் சீரான இடைவெளியில் தண்ணீர் பருகிக்கொண்டே இருக்க வேண்டும்.

    நம் உடலுக்கு தினமும் எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்:

    சராசரியாக ஒரு நபர் உடலில் நீரேற்றத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் 3.7 லிட்டர் அல்லது 125 அவுன்ஸ் தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீர் உட்கொள்ளும் அளவு நபருக்கு நபர் மாறுபடும். அது அவரது உடல் செயல்பாடு, வசிக்கும் சூழல் உள்ளிட்ட சில காரணிகளைப் பொறுத்தது.

    தண்ணீர் தரும் பலன்கள்

    சரியான நேரத்தில் தண்ணீர் பருகுவது உடலின் செயல்திறனை அதிகரிக்க உதவும்.

    காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

    அது உள் உறுப்புகள் சீராக செயல்படுவதற்கு உதவும்.

    சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் பருகலாம்.

    அது செரிமானம் சுமுகமாக நடைபெற வழிவகை செய்யும்.

    குளிப்பதற்கு முன்பு 1 டம்ளர் தண்ணீர் பருகுவது நல்லது.

    அது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

    தூங்க செல்வதற்கு முன்பு 1 டம்ளர் தண்ணீர் பருகலாம்.

    அது பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும்.
    குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, தண்ணீரை வீணடிப்பவர்களுக்கு ரூ.250 முதல் ரூ.500வரை அபராதம் விதிக்க குஜராத் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
    வதோதரா:

    தமிழ்நாட்டைப் போலவே குஜராத் மாநிலத்திலும் வறட்சி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அங்குள்ள டகோத் நகரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. அணை நீர்மட்டம் குறைந்து விட்டது. தண்ணீர் வழங்கும் ஏரி வறண்டு விட்டது. இதனால், நகர மக்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தட்டுப்பாடு காரணமாக, தண்ணீரை வீணடிப்பவர்களுக்கு ரூ.250 முதல் ரூ.500வரை அபராதம் விதிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதற்காக 9 வார்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் சோதனை நடத்துவார்கள். தண்ணீரை வீணடிப்பவர்களிடம் அபராதம் வசூலிப்பார்கள். மேலும், இரண்டாவது, மூன்றாவது தடவையாக தண்ணீரை வீணடித்து பிடிபட்டால், வீட்டு தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
    வெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளை செய்யக்கூடியது. ஆனால் இரவு நேரத்தில் வெந்நீர் குடித்தால் உடலுக்கு நல்லதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    காலை நேரத்தில் வெந்நீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்று ஆரோக்கியம் குறித்து வல்லுநர்கள் கூறுவதை நாம் அறிவோம். நம்மில் பலரும் இதனை பின்பற்றிக் கொண்டு இருப்பார்கள். வெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளை செய்யக்கூடியது. ஆனால் இரவு நேரத்தில் வெந்நீர் குடித்தால் உடலுக்கு நல்லதா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.

    ஆம். உண்மையில் ஆரோக்கியத்திற்கும் நம் அழகிற்கும் இரவு நேரத்தில் வெந்நீர் குடிப்பது அவசியம். சிலர் தூங்கும் முன் தண்ணீர் குடித்தால், சிறுநீர் உபாதைகள் ஏற்பட்டு, தூக்கம் கெட்டுவிடும் என்றே தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுவார்கள். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இரவு படுக்கும் முன் வெந்நீர் குடித்தால் தூக்கம் சிறப்பாக இருக்கும். மேலும் வெந்நீர் அருந்துவதால் உண்டாகும் நன்மைகளை பார்ப்போம்.

    உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் போது தான் மன அழுத்தம் மற்றும் உணர்வு நிலையில் ஏற்ற இறக்கம் போன்றவை உண்டாகும். மேலும் இதனால் தூக்கம் தடைப்படும். தினசரி இரவு நேரத்தில் தூங்க போகும் முன் வெந்நீர் குடித்துவிட்டு தூங்குவதால் உணர்ச்சி நிலை சீராக இருக்கும்.

    வெந்நீர் அருந்துவதால், உடலின் உள்ளே வெப்பம் உற்பத்தியாகி, வியர்வையாக வெளியேறும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியாகி, இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

    நம் உடலுக்கு நீர் என்பது மிகவும் முக்கிய தேவையாக இருக்கிறது. ஏனென்றால், வியர்வை, சிறுநீர் போன்றவற்றால் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இதனை சமன் செய்ய தொடர்ச்சியாக நீர் அருந்துவது கட்டாயம். இரவு நேரத்தில் வெந்நீர் குடித்துவிட்டு படுப்பதால் உடலில் நீர் தேவை பூர்த்தியாகிறது.

    சாப்பிட்டு முடித்தபின் வெந்நீர் அருந்துவதால் செரிமானம் எளிதாக இருக்கும். கடினமான உணவுகள் கூட எளிதில் ஜீரணமாக்க கூடிய திறன் வெந்நீருக்கு உண்டு. இரவு நேரத்தில் செரிமானம் என்பது சற்றே தாமதமாக இருக்கும். வெந்நீர் குடுப்பதால் அந்த பிரச்சனை இருக்காது.

    வெந்நீர் அருந்துவதால் உணவுகள் எளிதில் ஜீரணமாகிறது. உணவு எளிதில் உடைத்து சத்துக்கள் உடலுக்கு கிடைக்க செய்கிறது. இதனால் உடல் எடையும் குறைகிறது. காலையும் இரவும் வெந்நீர் குடிப்பது மிகவும் நல்லது. ஆரோக்கியமாக வாழ இதனை பின்பற்றுவோம். 
    நாள்தோறும் போதுமான தண்ணீர் குடிப்பது மிக அவசியம். ஆனால், 'டயட்டில் இருக்கிறேன்' என்று பாட்டில் பாட்டிலாக தண்ணீர் அருந்துவது உயிருக்கே ஆபத்து என்கிறது ஆய்வு.
    சாதாரணமாக நடுத்தர வயது மனிதனின் உடலில் 60 சதவீதம் நீர் உள்ளது. மனிதன் உயிர்வாழ நீர் அவசியம். வளர்சிதை மாற்றம், பளபளப்பான சருமம் மற்றும் உடலுக்குத் தேவையான ஆற்றல் போன்றவற்றுக்கும் நாள்தோறும் போதுமான தண்ணீர் குடிப்பதும் மிக அவசியம். ஆனால், 'டயட்டில் இருக்கிறேன்' என்று பாட்டில் பாட்டிலாக தண்ணீர் அருந்துவது உயிருக்கே ஆபத்து என்கிறது ஆய்வு. தண்ணீர் குடித்து எடையை குறைக்கலாம் என்று நினைத்து அதிகமாக தண்ணீர் அருந்துவது தவறு. ஒருநாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்தலாம் என்பதை அவரவரின் எடை, செய்யும் வேலையைப் பொறுத்தே தீர்மானிக்க வேண்டும்.

    80 கிலோ எடை உள்ள ஒருவர், 200 கிலோ எடை உடையவர் அருந்தும் நீரின் அளவை எடுத்துக் கொள்ளக்கூடாது. 80 கிலோ எடை இருந்தால், சுமார் ஒன்றேகால் லிட்டர் தண்ணீர் அருந்தலாம். நீங்கள் செய்யும் வேலையைப் பொறுத்து குடிக்கும் நீரின் அளவை மாற்றிக் கொள்ளவேண்டும். ஏசி அறையில், கம்ப்யூட்டர் முன்பு மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்பவராக இருந்தால் குறைந்த அளவே போதும். கடினமான வேலை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்பவராக இருந்தால் ½ லிட்டர் தண்ணீரை கூடுதலாக அருந்துவது நல்லது.

    உங்களால் சரியான அளவை பின்பற்ற முடியவில்லை என்றால், இதோ இந்த சின்ன வி‌‌ஷயங்களை கடைப்பிடித்தாலே நாளொன்றுக்கு தேவையான நீரை பருக முடியும். காலை எழுந்தவுடன் 1 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். உணவு வேளைக்கு அரைமணி நேரத்துக்கு முன் 2 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். உணவு உண்டு முடித்தப் பின் அரைமணி நேரம் கழித்து 2 டம்ளர் நீர் அருந்துங்கள். மேலும், உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு 1 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். வெளியில் செல்லும் போது உடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள்.

    நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களிலிருந்தும் அதிகப்படியான நீர் கிடைப்பதால், நேரிடையாக அருந்தும் நீரின் அளவை குறைத்துக் கொள்ளலாம். நீர் நம் உடலுக்கு நல்லது என்றாலும் அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும். அதற்கும் அதிகமாக அருந்தினால் வேறு பல பிரச்சினைகள் வந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
    வேதாரண்யத்தில் கலங்கலாக வந்த தண்ணீரை குடித்த 200 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதை சுற்றியுள்ள கரியாப்பட்டினம், சேட்டாக்குடி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை பிடித்து குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள், முதியவர்களுக்கு திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டது. இதனால் அவர்கள் கடுமையாக அவதியடைந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம், கரியாப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது:- எங்கள் பகுதிக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் சுகாதாரமான முறையில் இல்லை. இதனால் அசுத்தமாக கலங்கலாக வரும் தண்ணீரை குடித்தவர்கள் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடைய பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    புதுவண்ணாரப்பேட்டையில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகரைச் சேர்ந்தவர் லோகேஷ். பெயிண்டர். இவரது மனைவி ராதிகா. இவர் களது 3 வயது மகள் மூனேஷி. நேற்று மாலை ராதிகா வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது சிறுமி மூனேஷி சமையல் அறைக்குள் சென்று அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் உள்ள நீரை எடுக்க முயன்றாள். அப்போது தலைகுப்புற தண்ணீருக்குள் விழுந்து விட்டாள்.

    மகளை காணாததால் ராதிகா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தண்ணீர் தொட்டிக்குள் சிறுமி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சிறுமியை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.

    சென்னை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிக்கராயபுரம் கல்குவாரி நீர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போர்வெல் கிணற்று நீரை பெறவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. #Drinkingwater #Shortage
    சென்னை:

    சென்னையில் வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 757.6 மி.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு பருவமழை காலத்தில் வெறும் 343.7 மி.மீட்டர் மழை மட்டுமே கிடைத்தது. இது 54 சதவீதம் மழை குறைவு ஆகும்.

    பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் நிரம்பவில்லை.

    தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரியில் 200 மி.கனஅடியும், (மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி), சோழவரம் ஏரியில் 48 மி.கனஅடி (1081 மி.கனஅடி), புழலில் 741 மி.கனஅடியும் (3300 மி.கனஅடி), செம்பரம்பாக்கத்தில் 53 மி.கனஅடியும் (3645 மி.கனஅடி) தண்ணீர் உள்ளது.

    இந்த நான்கு ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி வெறும் ஆயிரத்து 42 மி.கனஅடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. இது மொத்த கொள்ளளவில் 9 சதவீதம் ஆகும்.

    இதில் சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு மிகவும் குறைந்த அளவே இருப்பதால் விரைவில் வறண்டு விடும் நிலையில் இருக்கிறது. இதேபோல் மற்ற ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

    ஏரிகளில் தற்போது இருக்கும் நீரை கொண்டு வருகிற மார்ச் மாதம் வரை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்ய முடியும். எனவே இந்த ஆண்டு சென்னை மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி உள்ளனர்.

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க இப்போதே அதிகாரிகள் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறார்கள். சிக்கராயபுரம் கல்குவாரி நீர், காஞ்சீபுரம்- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போர்வெல் கிணற்று நீரை பெறவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதேபோல் புதிதாக போர்வெல் அமைக்கும் இடங்களையும், மற்ற ஏரிகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்தவும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் புதிதாக 200 குடிநீர் தொட்டிகள் அமைக்கவும் திட்டமிட்டு இருக்கின்றனர். இதனை வைத்து சென்னை மக்களின் குடிநீர் தேவையை ஓரளவு சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகள் உள்ளனர்.

    இப்போதே சென்னையில் பல இடங்களில் தண்ணீர் சப்ளை குறைக்கப்பட்டு விட்டது. தென்சென்னையில் இந்த மாதம் 2-வது வாரத்தில் இருந்து சில பகுதிகளில் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை.

    இப்போது வரை சென்னை மக்களின் ஒரே நம்பிக்கையாக வீராணம் ஏரி மட்டுமே உள்ளது. வீராணம் ஏரி முழு கொள்ளளவான 1,375 மி.கனஅடியை எட்டி நிரம்பி காணப்படுகிறது. அங்கிருந்து சென்னை குடிநீர் தேவைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. #Drinkingwater #Shortage
    நிலக்கோட்டை பகுதியில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் வாடும் தருவாயில் உள்ளது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தாலுகா அணைப்பட்டி, சித்தர்கள் நத்தம், மேட்டுப்பட்டி, விளாம்பட்டி, பிள்ளையார்நத்தம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகள் வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெற்பயிர்களை 2-ம் போகமாக சாகுபடி செய்தனர்.

    அப்படி சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கடந்த 20 நாட்களாக தண்ணீர் வைகை அணையிலிருந்து வராத காரணத்தால் தற்போது நெற்பயிர்கள் வாடும் தருவாயில் உள்ளது.

    எனவே தமிழக அரசு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து நிலக்கோட்டை பேரணை உதவி செயற்பொறியாளர் தளபதி கூறுகையில் அரசு தரப்பில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஓரிரு நாட்களில் விவசாய பயிர்கள் பாதுகாக்கப்படும் என்றார்.

    காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தண்ணீரின் மகத்துவம் உலகுக்கு விளக்க தேவையில்லை. ஆரோக்கியமான உடலுக்கு தண்ணீர் மிகவும் முக்கியமான ஒன்று. காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

    காலை எழுந்ததும் முதலில் ஒரு டம்ளர் தண்ணீரை குடித்துவிட்டு மற்ற வேலையை செய்யும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். இது ஏன்? என்ன காரணத்திற்காக இவ்வாறு தண்ணீர் பருகுகின்றார்கள்? இதை பற்றி அறிவியல் என்ன கூறுகிறது பார்ப்போம்:

    இரவு குறைந்தது 7 மணி நேரம் தண்ணீர் உட்கொள்ளாமல் இருக்கிறோம். இதன் விளைவாக உடலில் நீரின் அளவு குறைந்து இருக்கும். வறண்ட தொண்டை இதற்கு ஆதாரம். இப்படி இருக்க, எழுந்தது நீர் பருகினால் சில நொடிகளில் இழந்த நீரை உடல் மீட்டுக்கொள்ளும்.

    - ஈரப்பதம் இல்லாமல் காய்ந்து வறண்ட உணவு குழாயில் உணவு பண்டங்கள் இறங்குவது சிறிது சிரமம் ஆகிவிடுகிறது. சில முறை குமட்டல், அடைப்பு போன்றவை ஏற்படுவதுண்டு. இதற்கு தீர்வு, தண்ணீரை முதலில் குடிக்க வேண்டும். இது நீண்ட இடைவேளிக்குப்பிறகு உணவு எடுத்துக்கொள்ளும் போதும் பொருந்தும்.

    - காலையில் எழுந்திரிக்கும் போது உடலில் உஷ்ணம் இருப்பதை பலரும் சந்தித்திருப்பார்கள். உடலை குளிர்விக்க ஒரு டம்ளர் நீர் உதவும்.

    - பெரும்பாலான நேரங்களில் நீரின் தாகத்தை மனித மூளை பசி என்று புரிந்துக்கொள்ளும். இதனால் உடலில் சக்தி குறையாமல், உணவு தேவைப்படாத போது பசி எடுப்பதாக மாற்றாக கூறும் மூளைக்கு தீனி போட்டு போட்டு சில நாட்களில் 2 கிலோ எடையை பரிசாக பெற்றுக்கொள்கிறோம்.

    - உணவை அதிகமாக உட்கொள்ளமாட்டீர்கள், இதனால் அளவான உணவு மட்டும் சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போல் தோன்றும். தானாகவே எடை குறையும்.

    - உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும், வயிற்றை அலசி அழுக்குகளை வெளியேற்றும்.

    - உடலின் செயல்பாட்டை 24% வரை அதிகரிக்க உதவும்.

    - சிறு நீரகத்தை சுத்தப்படுத்த உதவும்.

    - முகம் மாசு மரு இன்றி பளபளக்கும்.

    வெறும் தண்ணீர் குடிக்க விருப்பம் இல்லையென்றால், எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

    நாம் வீடுகளில் ப்ளாஸ்டிக் பாத்திரங்கள், டப்பாக்கள் பயன்படுத்துகிறோம். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு இது நல்லதல்ல. இதற்கு மாற்றாக கண்ணாடிப் பொருட்களை உபயோகிப்பதால் என்ன நன்மைகள் என்று பார்ப்போம்.
    சமைத்த உணவு மட்டுமின்றி, உணவு தயாரிக்கத் தேவையான மளிகை பொருட்களையும் முறையாகவும் சுத்தமாகவும் பாதுகாத்து வைப்பது மிகவும் அவசியம். பெரும்பாலும் இன்றைய வீடுகளில் நாம் இதற்கு ப்ளாஸ்டிக் பாத்திரங்கள், டப்பாக்கள் மற்றும் குடுவைகளைத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு இது நல்லதல்ல. மாற்றாக நாம் இதற்கு கண்ணாடிப் பொருட்களை உபயோகிப்பதால் என்ன நன்மைகள் என்று பார்ப்போம்.

    கண்ணாடி ப்ளாஸ்டிக்கை விட பாதுகாப்பானது

    ப்ளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் உணவுப் பொருட்களில் கலக்கும் வாய்ப்பு ஏற்படலாம். அதிக குளிர்ச்சி மற்றும் அதிக சூடான பொருட்களை ப்ளாஸ்டிக்கில் வைக்கும்போது, அதாவது ஃப்ரிட்ஜ் மற்றும் மைக்ரோவேவ் ஓவனில் வைக்கும்போது இந்த ரசாயன கலப்பு நடக்கும். ஆனால் கண்ணாடிப் பாத்திரங்கள் தான் மாற்றம் அடைவதில்லை. மேலும், அதன் தன்மை மற்ற பேரணுக்களை தன்னுள் அனுமதிக்காத மிகவும் கெட்டியான தன்மை கொண்டதாகும்.

    கண்ணாடி சூட்டை தாங்கக்கூடியது

    உணவை சமைத்த உடனேயே கண்ணாடி பாத்திரத்தில் மாற்றி விடலாம், பாத்திரத்தை மூடியும் வைத்துக் கொள்ளலாம். மீதம் உள்ள உணவை அப்படியே பிரிட்ஜில் சேமிக்கவும் இது பாதுகாப்பானது. நீண்ட நாட்களுக்கு மளிகை பொருட்களை சேமிக்கவும், அதன் நிறம் மற்றும் மணம் மாறாமல் இருக்கவும் கண்ணாடிக் குடுவைகள் சிறந்ததாக இருக்கும். பாத்திரத்தின் ரசாயனம் எதுவும் சூடான பொருளில் கலப்பதில்லை என்பதாலும் கண்ணாடிப் பாத்திரங்கள் நல்லது.



    பல் உபயோகம் கொண்டது கண்ணாடி

    ஒரே பாத்திரத்தில் மூடி போட்டு சேமித்தும் வைக்கலாம். சமைத்த உணவுப் பொருளை சூடாக போட்டும் வைக்கலாம் அல்லது சமைக்கவும் பயன்படுத்தலாம். அதே பாத்திரத்தை பிரிட்ஜ் அல்லது ஃப்ரீசரில் மிக குளிர்ச்சியாகவும் பாதுகாக்கலாம். கண்ணாடியில் உள்ள உணவுப் பொருளை அப்பாத்திரத்தில் வைத்தே பரிமாறலாம். இப்படி பல உபயோகங்களுக்கு கண்ணாடி பயன்படுகிறது.

    சுத்தம் மற்றும் வெளிப்படை தன்மை

    மளிகை மற்றும் உணவுப் பொருட்களை கண்ணாடிப் பாத்திரங்களில் சேமிக்கும்போது அதனை சுத்தப்படுத்துவது சுலபம். வாசனையோ, அழுக்கோ, கறையோ அதில் படிவதில்லை. மேலும் அதன் உள்ளே என்ன பொருள் இருக்கிறது என்பதை நாம் சுலபமாக தெரிந்துக் கொள்ளலாம். பொருட்கள் கெடத் துவங்கும்போதே அதை கண்டுபிடித்து அப்புறப்படுத்துவதும் சுலபம்.

    கண்ணாடிக் குடுவைகள் எவ்வளவு காலமானாலும் உடையாத வரையில் உபயோகப்படுத்தலாம். உணவுப் பொருட்களின் வாசனையையும், அது பெற்றுக் கொள்வதில்லை. பல வருடங்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தவும் ஏற்றது.
    குளிர்காலத்தில் வீசும் குளிர் காற்று சருமத்திற்கு வறட்சி தன்மையையும், நீரிழப்பு பிரச்சினையையும் ஏற்படுத்திவிடும். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருந்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கும்.
    குளிர்காலத்தில் வீசும் குளிர் காற்று சருமத்திற்கு வறட்சி தன்மையையும், நீரிழப்பு பிரச்சினையையும் ஏற்படுத்திவிடும். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருந்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கும். இல்லாவிட்டால் சளி, காய்ச்சல் போன்ற நோய் பாதிப்புகள் உருவாகக்கூடும்.

    இதனை தவிர்க்க அடிக்கடி தண்ணீர் பருகிக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து சீராக தண்ணீர் பருகுவதன் மூலம் உடல் வெப்பநிலையை சீராக பராமரிக்கலாம். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் தண்ணீர் பருகுவது அவசியமானது. அது தேவையற்ற கொழுப்பையும் கட்டுப்படுத்தும்.

    சரும ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் தண்ணீர் பருகுவது அவசியமானது. தண்ணீர் அதிகம் பருகினால் சரும சுருக்கம் ஏற்படாது. சருமமும் வறண்டு போகாது. குளிர்காலத்தில் குளிர்ந்த நீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான நீரை பருகுவதே நல்லது.

    மது குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். அது உடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சி விடும். பழங்கள், காய்கறிகளில் நீர்ச்சத்து கலந்திருப்பதால் அவை உடலில் நீரிழப்பை கட்டுப்படுத்த துணைபுரியும்.

    குளிர்காலத்தில் சூடான டீ, காபி பருகுவது இதமாக இருக்கும். உடல் வெப்பநிலையை பராமரிக்க உதவும். ஆனாலும் அதில் கலந்திருக்கும் ‘காபின்’ உடலில் இருக்கும் நீர்ச்சத்தின் அளவை குறைத்து விடும். அவற்றுக்கு பதிலாக சாலட், சூப் வகைகளை பருகலாம். அவை உடலுக்கு ஆரோக்கியம் சேர்ப்பதோடு உடலில் நீரின் அளவையும், வெப்பநிலையையும் சீராக பராமரிக்க உதவும்.
    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு லாரிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி வட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்திற்குப்பட்ட பகுதிகளில் கஜா புயலால் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டது. மேட்டாம்பட்டி, விஜயபுரம் போன்ற பகுதிகள் கடும் சேதமடைந்தன. அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதியடைந்தனர்.

    சிங்கம்புணரி ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ரமேஸ்வரன் ஏற்பாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட எஸ்.புதூர் ஒன்றியத்தில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணி மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. இந்தநிலையில் அப்பகுதி மக்கள் தொடர்ந்து குடிநீர், மின்சாரம் இன்றி சிரமமடைந்தனர். மின்சாரம் இல்லாதததால் அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் போனது. எனவே அதன் முதற்கட்டமாக மின்வாரிய ஊழியர்கள் மூலமாக மின்சாரம் வினியோகம் செய்யும் பணி துரிதமாக நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்த வேலையில் விஜயபுரம் மற்றும் மேட்டாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு லாரிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. அதை பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் பிடித்து சென்றனர்.

    மேலும் எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராம மக்களுக்கும் மெழுகுவர்த்திகள் வினியோகம் செய்யப்பட்டன. பின்பு சிங்கம்புணரி நேதாஜி நகர் ஜெய்ஹிந்த் பாலா, கிழத்தெரு விஜய், சுதாகர் உள்ளிட்ட இளைஞர்கள் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    ×