search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்ப்பு"

    இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    அராரியா :

    பீகாரின் அராரியா மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவரை கடந்த ஜூலை 22-ந்தேதி மர்ம நபர் ஒருவர் கற்பழித்தார். இது தொடர்பாக மறுநாளே வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

    அவர் மீதான வழக்கு அராரியாவில் உள்ள போக்சோ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் 4-ந்தேதி சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு, இரு தரப்பிலும் வாதம் மற்றும் தண்டனை என அனைத்தும் ஒரே நாளில் நடந்தது.

    இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.

    இதன் மூலம் நாட்டிலேயே மிகவும் வேகமாக (ஒரே நாளில்) தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்காக இந்த வழக்கு மாறியிருக்கிறது. ஒரே நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டாலும், தீர்ப்பின் விவரம் கடந்த 26-ந்தேதி தான் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக மத்திய பிரதேசத்தில் கற்பழிப்பு வழக்கு ஒன்றில் கடந்த 2018-ம் ஆண்டு 3 நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டதே சாதனையாக இருந்தது.
    குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எம். ஆர். காந்தி தாக்கப்பட்ட வழக்கில் வருகிற 16-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்று நார்கோவில் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எம். ஆர். காந்தி.

    எம். ஆர். காந்தி பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவராகவும் உள்ளார். இவரது வீடு நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ளது.

    எம். ஆர். காந்தி தினமும் வீட்டில் இருந்து ஆசாரிபள்ளம் சாலையில் நடை பயிற்சிக்கு செல்வது வழக்கம். கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதியும் அவர் வீட்டில் இருந்து தனியாக நடை பயிற்சிக்கு சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து தாக்கினர். அரிவாளாலும் வெட்டினர்.

    எம்.ஆர். காந்தி தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், இடலாக்குடியை சேர்ந்த செய்யது அலி நவாஸ், பிரபு என்ற அப்துல் அஜிஸ், மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது காலின் மற்றும் ஷாஜி ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நாகர்கோவில் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கடந்த 2-ந் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு கூறப்படும் என அறிவிக்கப்பட்டது. அன்று கோர்ட்டில் இந்த வழக்கின் 5 குற்றவாளிகளில் 4 பேர் மட்டுமே ஆஜர் ஆனார்கள். இதையடுத்து 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இதையடுத்து இன்று இந்த வழக்கின் குற்றவாளிகள் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.

    இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்கிடையே நாகர்கோவில் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாண்டிய ராஜ், இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 16-ந் தேதி வழங்கப்படும் என அறிவித்தார். எனவே இந்த வழக்கின் தீர்ப்பு வருகிற 16-ந் தேதி வெளியாகும் என தெரிகிறது.
    ரபேல் விவகாரம் தொடர்பாக பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RafaleCase #SupremeCourt #RahulGandhi
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
     
    இந்த பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வக்கீல் எம்.எல்.சர்மா,  வக்கீல் வினீத் தண்டா, ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன்பின், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

    இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு, இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளித்தது. அப்போது ‘ரபேல்’ விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட முடியாது. ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான். அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். 



    இந்நிலையில், ரபேல் விவகாரத்தில் பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரபேல் விவகாரம் தொடர்பான கேள்விக்கு நிர்மலா சீதாராமன் மற்றும் அருண் ஜெட்லி மட்டுமே பதிலளித்து வருகின்றனர். மோடி இதுகுறித்து மவுனமாகவே உள்ளார்.

    பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமரும், மத்திய அமைச்சர்களும் மறுப்பு தெரிவிப்பது ஏன்? சிஏஜி அறிக்கை குறித்து அரசு எங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார். #RafaleCase #SupremeCourt #RahulGandhi
    அலகாபாத் ஐகோர்ட்டு மூத்த நீதிபதி சுதிர் அகர்வால், ஒரு லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளித்து, இந்திய நீதித்துறை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். #SudhirAgarwal #SeniorJudge #HighCourt
    பிரயாக்ராஜ்:

    அலகாபாத் ஐகோர்ட்டு மூத்த நீதிபதி சுதிர் அகர்வால், ஒரு லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளித்து, இந்திய நீதித்துறை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி ஆனதில் இருந்து அவர் இத்தனை வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளார். ரிட், சிவில், குற்றவியல், வரி விவகாரம், மேல்முறையீடு என அனைத்துவிதமான வழக்குகளையும் அவர் விசாரித்துள்ளார்.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்த அமர்வில் சுதிர் அகர்வாலும் இடம்பெற்று இருந்தார். அனைத்து அரசு அதிகாரிகளும் தங்கள் பிள்ளைகளை அரசு தொடக்கப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பு அளித்து, தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார்.

    இவர் அளித்த 1,788 தீர்ப்புகள், சர்வதேச, தேசிய சட்ட பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன. நீதிபதி சுதிர் அகர்வால், 2020-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி ஓய்வுபெறுகிறார்.  #SudhirAgarwal #SeniorJudge #HighCourt
    திருப்பூரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    திருப்பூர்:

    திண்டுக்கல்லை சேர்ந்தவர் ரவி என்கிற ரவிச்சந்திரன் (வயது 54). இவர் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் தங்கியிருந்து சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார்.

    கடந்த 28.9.2014 அன்று மதியம் ரவி, அப்பகுதியை சேர்ந்த 3-ம் வகுப்பு  மாணவனை அழைத்து, ஆட்டோவில் ஜாலியாக சுற்றி வரலாம் என்று ஆசைகாட்டி ஆட்டோவில் அழைத்துச்சென்றார்.

    அணைக்காடு பகுதிக்கு சென்ற பின்பு ஆட்டோவை நிறுத்தி விட்டு அந்த மாணவனை அங்குள்ள ஒரு கட்டிடத்துக்குள் அழைத்துச்சென்று அவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். அந்த நேரத்தில் மாணவனை தேடி வந்த தந்தை மற்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் சேர்ந்து ரவியை பிடித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதைத்தொடர்ந்து மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ரவி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றத்துக்கு ரவிக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும், மாணவனை ஏமாற்றி அழைத்துச்சென்று தகாத முறையில் நடந்த குற்றத்துக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்தும், இந்த தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்கவும் நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.

    இதையடுத்து ரவிச்சந்திரனை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. #NGT #NationalGreenTribunal #SterlitePlant
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் போராட்டம் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனதை அடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.

    அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.

    அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.



    இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த செப்டம்பர் 10-ந் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு கடந்த 26-ந் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதற்கிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தினர், சென்னை நகரிலும் விசாரணை மேற்கொண்டனர்.

    நேற்று முன்தினம் இந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை தனித்தனியாக மூடி முத்திரையிடப்பட்ட 48 உறைகளில் வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், உறுப்பினர் நீதிபதிகள் ரகுவேந்திர ரத்தோர், எஸ்.பி.வாங்டி, கே.ராமகிருஷ்ணன், நகின் நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (புதன்கிழமை) ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

    தீர்ப்பாயத்தின் இணையதளத்தில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. இன்று வழங்கப்போகும் தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுமா அல்லது மீண்டும் திறக்கப்படுமா என்பது தீர்மானிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  #NGT #NationalGreenTribunal #SterlitePlant 
    குலசேகரம் அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டெம்போ டிரைவருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு உத்தரவிட்டது.
    நாகர்கோவில்:

    குலசேகரம் அருகே உள்ள வண்டிபிலாங்கால விளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 32). டெம்போ டிரைவர். இவர் 8.1.2016-ந் தேதி பக்கத்து ஊரை சேர்ந்த 13 வயது சிறுமியை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காக அழைத்து சென்றார். அப்போது அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். 

    இது குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து நாகர்கோவிலில் உள்ள மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜாண் ஆர்.டி. சந்தோசம் குற்றஞ்சாட்டப்பட்ட விஜயகுமாருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.
    கொலை வழக்கில் விடுதலை என்று தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் முன்னாள் கவுன்சிலர் பரிதாபமாக இறந்தார்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்மிடிகாம்பட்டி கொட்டாவூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், சென்னையில் துரித உணவகம் (பாஸ்ட்புட்) நடத்தி வந்தார். மேலும், இவர் இதே ஊரின் தே.மு.தி.க. முன்னாள் கிளை செயலாளராகவும் இருந்தார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    கடந்த 2.3.2012 அன்று அதே பகுதியில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில் முன்பு வெங்கடேசன் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வெங்கடேசனை வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி கந்திலியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பாபுசங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபுஜி, திருப்பதி, முரளி, ஜோதி, குப்புசாமி, கோவிந்தன், விஜய், அருண் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கு திருப்பத்தூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை நீதிபதி டி.இந்திராணி விசாரித்து, பாபுசங்கர் உள்பட 9 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

    இந்த நிலையில் தீர்ப்பு வந்தால், நமக்கு தண்டனை அளிக்கப்படுமோ? என பாபுசங்கர் சோகத்துடன் காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு திடீரென பாபுசங்கருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பாபுசங்கர் பரிதாபமாக இறந்தார்.

    அதாவது வழக்கில் இருந்து பாபுசங்கர் உள்ளிட்ட 9 பேரும் விடுதலையாகிவிட்டார்கள் என தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே பாபுசங்கர் இறந்துவிட்டார்.

    இந்த சம்பவம் கந்திலி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும் 17-ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் இந்த தீர்ப்பு தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பலாம் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. #18MLAs #MLAsDisqualification
    சென்னை:

    கடந்த ஆண்டு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் அன்றைய கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

    இதையடுத்து கவர்னரை சந்தித்த 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் அ.தி.முக. கொறடா ராஜேந்திரன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அவர்களில் ஜக்கையன் எம்.எல்.ஏ. சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார்.

    அவரைத்தவிர கவர்னரை சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகர் தனபால் இந்த நடவடிக்கையை எடுத்தார்.

    இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள்.

    இதையடுத்து 3-வது நீதிபதி சத்தியநாராயணன் இந்த வழக்கை விசாரித்தார். விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருகிற 17-ந்தேதி தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலில் புயலை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டால், தற்போது சட்டசபைக்கு தன்னந்தனியாக வந்துபோகும் டி.டி.வி. தினகரனின் கை ஓங்கும். இந்த 18 பேர் தவிர வேறு சில எம்.எல்.ஏ.க்களும் தினகரனுக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு உள்ளது என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    தற்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 110 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். முழு மெஜாரிட்டிக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் தேவை. எனவே, தினகரனுக்கு ஆதரவு அதிகரித்தால் அ.தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும்.


    இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தினகரன் முதல்- அமைச்சர் பதவியை குறி வைக்கலாம். தன்னை முதல்-அமைச்சராக ஆக்கினால் ஆட்சியை காப்பாற்றுவேன் என்று நிபந்தனை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

    ஆட்சியை காப்பாற்ற விரும்பினால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இதற்கு பணிந்து போக நேரிடலாம். இல்லையென்றால் ஆட்சி கலையும். அதன் பிறகு தேர்தலை சந்தித்து ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும். தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. எனவே தேர்தலை சந்திக்க இன்றைய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விரும்ப மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கினால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தேர்தலை சந்திக்க வேண்டியது வரும். ஏற்கனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகள் காலியாக உள்ளன. எனவே 20 எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கு தேர்தல் வரும்.

    இதில் அ.தி.மு.க. வெற்றி பெறுமா? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் வெற்றி பெறுவார்களா? என்பதில் எதையும் நிச்சயமாக சொல்ல முடியாது. தி.மு.க.வும் களம் இறங்கும் போது மும்முனை போட்டி ஏற்படும். எனவே ஆளும் கட்சி நிலை என்ன ஆகும் என்பதை கணிக்க முடியாது. எனவே இடைத்தேர்தல் முடிவும் பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம்.

    தி.மு.க.வுக்கு தற்போது சட்டசபையில் 88 எம்.எல். ஏ.க்கள் உள்ளனர். குறுக்கு வழியில் தி.மு.க. ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    எனவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து தி.மு.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. அந்த கட்சி பொதுத் தேர்தலை சந்திப்பதையே விரும்புகிறது.

    இன்றைய சூழ்நிலையில் 18 எம்.எல்.எ.க்கள் வழக்கில் அவர்களை நீக்கியது சரி என்று தீர்ப்பு வந்தாலும், நீக்கியது தவறு என்று தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் அது தமிழக அரசியலில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

    எனவே 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி அமையும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரு எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள் ளது. புயல் கடுமையாக வீசுமா? எளிதில் கரை யேறுமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.  #18MLAs #MLAsDisqualification
    கோவையில் குடிபோதையில் போலீசாருடன் தகராறு செய்த வாலிபருக்கு கோர்ட்டு நூதன தண்டணை வழங்கியுள்ளது.

    கோவை:

    கோவை கல்வீரம் பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகன் சுதர்சன் (வயது 28). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் குடிபோதையில் கோவை ஆம்னி பஸ் நிலையம் அருகே போக்குவரத்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். இதனையடுத்து ரத்தினபுரி போலீசார் சுதர்சன் மீது பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கு ஜே.எம். கோர்ட்டு-2 நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போலீசாருடன் தகராறு செய்த வாலிபர் சுதர்சனுக்கு நூதன தண்டனை வழங்கினார். எந்த இடத்தில் தகராறு செய்தாரோ அதே இடத்தில் 10 நாட்களுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதனையடுத்து சுதர்சன் ஆம்னி பஸ் நிலையம் அருகே நேற்று போலீசாருடன் இணைந்து போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். இன்று 2-வது நாளாக போக்குவரத்தை சரி செய்தார். 

    ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் மறுஆய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு அளிக்கிறது. #Nirbhaya #MedicalStudent
    புதுடெல்லி:

    டெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு, ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி ஒருவர் (நிர்பயா என்ற கற்பனை பெயர்) 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்துக்கொல்லப்பட்டார். 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஒருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினான். முக்கிய குற்றவாளி ராம்சிங், சிறையில் தற்கொலை செய்துகொண்டான்.



    மற்ற 4 பேர்களான முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு டெல்லி ஐகோர்ட்டு மரண தண்டனை விதித்தது. அதை மேல்முறையீட்டில் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. முகேஷ், பவன், வினய் ஆகியோர், மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீது கடந்த மே 4-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.



    இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, நாளை (திங்கட்கிழமை) அந்த மனுக்கள் மீது தீர்ப்பு அளிக்கிறது. #Nirbhaya #MedicalStudent #tamilnews 
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி, ராவல்பிண்டி-1 தொகுதியில் போட்டியிட லாகூர் ஐகோர்ட்டு அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது. #Abbasi #Pakistan
    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி, ராவல்பிண்டி-1 தொகுதியில் போட்டியிட லாகூர் ஐகோர்ட்டு அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது. அவர் மீது தேர்தல் தீர்ப்பாயம் பிறப்பித்த தடை ரத்து செய்யப்பட்டது.

    பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிற பாகிஸ்தானில் வரும் 25-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி என 3 கட்சிகள் இடையேயும் பலத்த போட்டி நிலவி வருகிறது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரத்தில் அனல் வீசுகிறது.

    இந்த நிலையில், ராவல்பிண்டி-1 (என்.ஏ. 57) தொகுதியில் போட்டியிட முன்னாள் பிரதமர் அப்பாசி (பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ்) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    ஆனால் அவர் நேர்மையானவர் அல்ல, மதிநுட்பம் மிகுந்தவர் அல்ல என்று கூறி வாழ்நாள் தடை விதித்து, அவர் ராவல்பிண்டி-1 தொகுதியில் போட்டியிடுவதற்கு தடை விதித்து பஞ்சாப் மாகாண தேர்தல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பாசி, லாகூர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டின் மீது நீதிபதி மஜாகிர் அலி அக்பர் நக்வி தலைமையில் 2 நீதிபதிகள் அமர்வு முன் நேற்று விசாரணை நடந்தது.

    இந்த வழக்கில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொகுதி தேர்தல் அதிகாரி தனது பதில் மனுவை நீதிபதி மஜாகிர் அலி அக்பர் நக்வியிடம் தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் விசாரணையின்போது, அப்பாசி சார்பில் ஆஜரான வக்கீல், “வேட்பு மனுவில் கேட்கப்பட்டு உள்ள எல்லா கேள்விகளுக்கும் அப்பாசி பதில் அளித்து உள்ளார். அப்படி இருந்தும், சட்டத்துக்கு முரணாக அவருக்கு எதிராக இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தனது சொத்து விவரங்கள் அனைத்தையும் அவர் தந்து உள்ளார்” என்று கூறினார்.

    மேலும், “தேர்தல் தீர்ப்பாயம் தனது வரம்பை மீறி உள்ளது, ஒன்று வேட்பு மனுவை ஏற்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும். அதற்குத்தான் தேர்தல் தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இருக்கிறது. வாழ்நாள் தடை விதிக்க அதிகாரம் இல்லை” என்றும் அவர் வாதிட்டார். முடிவில் பஞ்சாப் தேர்தல் தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து, அப்பாசி ராவல்பிண்டி-1 தொகுதியில் இருந்து போட்டியிட அனுமதி அளித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

    இதே போன்று இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் ஜீலம் (என்.ஏ. 67) தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருந்த பவாத் சவுத்ரிக்கும் பஞ்சாப் தேர்தல் தீர்ப்பாயம் வாழ்நாள் தடை விதித்து இருந்தது. அவரும் லாகூர் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கும் நீதிபதி மஜாகிர் அலி அக்பர் நக்வி தலைமையில் 2 நீதிபதிகள் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

    இரு தரப்பு வாதத்துக்கு பின்னர் அவர் மீதான வாழ்நாள் தடையையும் நீதிபதிகள் ரத்து செய்து தீர்ப்பு வழங்கினர். அவர் ஜீலம் தொகுதியில் போட்டியிட அனுமதியும் அளித்தனர்.  #Abbasi #Pakistan #tamilnews
    ×