என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94643"

    • பிலிப்பைன்சில் பினிலி பகுதியின் தென்கிழக்கே நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.

    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டின் பினிலி பகுதியின் தென்கிழக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. இதனை அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் இழப்பு உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

    • பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சத்தீஸ்கரின் அம்பிகாபூரில் 4.8 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் அம்பிகாபூருக்கு மேற்கே 65 கிமீ தொலைவில், பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் அதிகாலை 5.28 மணியளவில் ஏற்பட்டது.

    இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் நில அதிர்வை உணர்ந்து பீதியில் வீட்டைவிட்டு வெளியேறினர். இருப்பினும் லேசான நில அதிர்வு என்பதால் யாருக்கும் பாதிப்போ அல்லது பொருட்சேதமோ இல்லை என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • நிலநடுக்கம் 12.7 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
    • நிலநடுக்கம் கிரீசின் தலைநகர் ஏதென்ஸ் மற்றும் பெலோபொன்னீஸ் பகுதியிலும் உணரப்பட்டது.

    ஐரோப்பிய நாடான கிரீசின் மத்திய பகுதியில் உள்ள கொரிந்த் வளைகுடாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகளாக பதிவானது.

    நிலநடுக்கம் 12.7 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தெரியவில்லை.

    இந்த நிலநடுக்கம் கிரீசின் தலைநகர் ஏதென்ஸ் மற்றும் பெலோபொன்னீஸ் பகுதியிலும் உணரப்பட்டது.

    • மியான்மரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.

    யாங்கூன்:

    மியான்மரில் இன்று காலை 3.52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவானது.

    பர்மாவின் வடமேற்கே 162 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

    • மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவின் மத்திய பசிபிக் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

    நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

    நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

    • தைவானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று பிற்பகல் 2.44 மணிக்கு 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • புஜியன், குவாங்டாங், ஜியாங்சு மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நில அதிர்வுகள் தெளிவாக உணரப்பட்டது.

    தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர நகரமான டைட்டங்கிற்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6. அலகாக பதிவாகியிருந்தது.

    நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டுமானங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட காயமோ பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் வெளியாகவில்லை.

    இந்நிலையில், தைவானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று பிற்பகல் 2.44 மணிக்கு 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைடுங் நகருக்கு வடக்கே 50 கி.மீ தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால் தைவான் அருகே உள்ள தொலைதூர தீவுகளுக்கு ஜப்பான் வானிலை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இன்று மாலை 4 மணியளவில் ஒரு மீட்டர் உயர அலைகள் எழும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலநடுக்கம், புஜியன், குவாங்டாங், ஜியாங்சு மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நில அதிர்வுகள் தெளிவாக உணரப்பட்டதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.

    • கடலோர நகரமான டைட்டங்கிற்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • ரிக்டர் அளவில் 7.0 மற்றும் அதற்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே சுனாமி எச்சரிக்கை வெளியிடப்படுகிறது

    தைபே:

    தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர நகரமான டைட்டங்கிற்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6. அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டுமானங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட காயமோ பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் வெளியாகவில்லை.

    தைவானைப் பொருத்தவரை நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக இருந்தால் மட்டுமே சுனாமி எச்சரிக்கை வெளியிடும். எனவே, இன்றைய நிலநடுக்கம் 6.6 என கடுமையானதாக இருந்தபோதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

    6.0 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவுகளில் சில நிலநடுக்கங்கள் ஆபத்தானதாகவும், கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கலாம். எனினும், நிலநடுக்கம் எந்த பகுதியில் தாக்குகிறது மற்றும் எந்த ஆழத்தில் உள்ளது என்பதைப் பொருத்து பாதிப்பு இருக்கும்.

    • பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மடாங் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.
    • நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த மோர்ஸ்பியில் இருந்து 300 மைல் வரையில் உள்ள நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

    ஜகார்த்தா:

    பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பப்புவா நியூகினியா நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் மடாங் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த மோர்ஸ்பியில் இருந்து 300 மைல் வரையில் உள்ள நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. வாங்நகரில் இந்த நிலச்சரிவுக்கு 3 பேர் பலியானார்கள்.

    இந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போது மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் மலை கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதை அந்த பகுதி எம்.பி. கெஸ்சி சவாங் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நிலநடுக்கத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப் கூறுகையில், 'இது மிகப் பெரிய நிலநடுக்கம்' என்றார்.

    • பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இது 7.7 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியிருந்தது.

    இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 65 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

    சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின்போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தோனேஷியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.
    • கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 25 பேர் இறந்தனர்.

    ஜகார்தா:

    இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கம் பொதுமக்களை பீதிக்குள்ளாக்கியது.

    இந்தோனேஷியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமாக மேற்கு பபுவா மாகாணம் திகழ்ந்து வருகிறது. இங்கு உள்ள மத்திய மம்பெரமோ மாவட்டத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 4 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இதனால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. அச்சம் அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

    இந்த நிலநடுக்கம் 6.2 மற்றும் 5.5 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக இந்தோனோஷிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்து உள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்ட விவரம் எதுவும் தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.

    இந்தோனேஷியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

    கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 25 பேர் இறந்தனர். இதேபோல் கடந்த ஆண்டு மேற்கு சுலாவேசி மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 100 பேர் பலியானார்கள். 6,500 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சில இடங்களில் வீடுகள் லேசான அதிர்வு ஏற்பட்டது.
    • ரேசாய் மாவட்டம் கத்ரா பகுதியில் காலை 7.52 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ஜம்மு காஷ்மீரில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ரேசாய் மாவட்டம் கத்ரா பகுதியில் காலை 7.52 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது.

    இந்த நிலநடுக்கத்தில் உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. சில இடங்களில் வீடுகள் லேசான அதிர்வு ஏற்பட்டது. உடனடியாக மக்கள் வீட்டைவிட்டு வெளியேறினர்.

    கடந்த மாதத்தில் ஜம்மு மண்டலத்தில் உள்ள தோடா, ரேசாய், கிஸ்ட்வா, உத்தம்பூர் மாவட்டங்களில் 13 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கம் எதிரொலியாக 50000-க்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.
    • சீனாவின் செஞ்சிலுவை சங்கம், அவசரகால நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறது

    பீஜிங்:

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் லூடிங் கவுன்டியில் கடந்த திங்கட்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.8 ஆக பதிவானது. இதனால், பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. நிலச்சரிவு ஏற்பட்டதில் பெரிய கற்கள் உருண்டு விழுந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

    நிலநடுக்கத்திற்கு பின்னர் அருகேயுள்ள பல பகுதிகளில் தொடர் அதிர்வுகளும் உணரப்பட்டு உள்ளன. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் ரிக்டரில் 3.0 அளவிலான மொத்தம் 10 நிலஅதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. நிலநடுக்கம் எதிரொலியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

    சிச்சுவானின் தலைநகர் செங்டுவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசு விதித்த தடையை அடுத்து 2.1 கோடி மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனை தொடர்ந்து, இந்த பகுதியில் அதிகாரிகள் பல பசுமை வழிகளை ஏற்படுத்தி, மீட்பு பணியாளர்கள் லூடிங் பகுதிக்கு செல்வதற்கு ஏற்ற வகையில் வழி ஏற்படுத்தி தந்துள்ளனர். நிவாரண பணி மேற்கொள்ள வசதியாக விரைவு சாலை வழியே செல்ல 700 சிறப்பு வழிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 1,900-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஆயுத போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் நிலநடுக்கம் பாதித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இறந்தவர்களின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டவண்ணம் உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    நேற்று மாநில நிலவரப்படி 65 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர் இன்று மேலும் 9 பேரின் இறப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

    உயிர்களை காப்பாற்றுவதற்கான அனைத்து வித நிவாரண முயற்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும்படி சீன அதிபர் ஜின்பிங், அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். சீனாவின் செஞ்சிலுவை சங்கம், அவசரகால நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கூடாரங்கள், நிவாரண தொகுப்புகள், மடிப்பு படுக்கைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. நிவாரண மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக பணியாளர் குழு ஒன்றையும் அந்த அமைப்பு அனுப்பி வைத்து உள்ளது. நிலநடுக்கம் பாதித்த பகுதியிலுள்ள 22 ஆயிரம் வீடுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், நிலைமை சீர் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதியை இணைக்கும் சாலைகளும் சரி செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.

    ×