search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி"

    • சமீபத்தில் புதுச்சேரி கவர்னராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டார்.
    • புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், குஜராத் தில் சப்-கலெக்டராக பணியில் சேர்ந்து, கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர்.

    இவர் குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி, முதல்-மந்திரியாக இருந்த போது, முதன்மை தலைமை செயலராக பணி புரிந்து ஓய்வு பெற்றார். ஓய்விற்கு பின்னரும், கடந்த ஜூன் மாதம் வரை முதன்மை செயலாராக பணி புரிந்தார்.

    இந்நிலையில் தான் சமீபத்தில் புதுச்சேரி கவர்னராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டார். குஜராத்தை பொருத்தவரை, சோலார் மின் உற்பத்தியில், மின் மிகை மாநிலமாக உள்ளது.

    நாட்டிலேயே, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனில் குஜராத் முன்னணியில் இருக்க முக்கிய காரணமாக விளங்கியவர் கவர்னர் கைலாஷ்நாதன்.

    இந்நிலையில் அவர் தற்போது புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இங்குள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும், சூரிய சக்தி மின் உற்பத்தியை தொடங்க உத்தரவிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, இது சம்பந்தமான விரிவான திட்ட மதிப்பீடு அறிக்கையை தயாரிக்கும் பணியை, மின்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின் றனர்.

    இதையடுத்து அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களில், சூரிய சக்தி மின் உற்பத்தி விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறந்து எத்தனால் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • கூட்டுறவு நூற்பாலையையும் தனியார் பங்களிப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசினர்.

    அப்போது வளர்ச்சி திட்டங்களில் உள்ள குறைபாடுகள், தொகுதிக்கு தேவையான திட்டங்கள், அரசின் செயல்பாடுகள் ஆகியவற்றை சுட்டிகாட்டியும் கோரியும் பேசினர்.

    இதனை தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் பதில் அளித்து பேசினர்.

    இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் தங்கள் துறைகளில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனர். அதில் பிரதான அம்சங்கள் வருமாறு:-

    குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். பிரதமர் கல்வீடு கட்டும் திட்டத்திலும் மத்திய அரசு உயர்த்தி அளித்துள்ள, ரூ.2¼ லட்சத்துடன், சேர்த்து ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

    சட்டமன்றத்திற்கான அடிக்கல் நாட்டி கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்படும். கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறந்து எத்தனால் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் கூட்டுறவு நூற்பாலையையும் தனியார் பங்களிப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லுக்கான ஊக்கதொகை கிலோவுக்கு ரூ.2 அதிகரிக்கப்படும். கால்நடை விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் மாட்டு தீவனம் ஆண்டு முழுவதும் வழங்கப்படும்.

    மாணவர்களின் ஊட்டச்சத்து அதிகரிக்க வாரம் 5 நாட்களும் சிறுதானிய பிஸ்கட், சிறுதானியம், வேர்க்கடலை, எள், பொட்டு கடலை மிட்டாய் ஆகியவை மாலை சிற்றுண்டியாக வழங்கப்படும்.

    பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், கலை, அறிவியல், வேளாண், சட்டம் போன்ற பிற பிரிவுகளில் சென்டாக் மூலம் சேரும் மாணவர்களுக்கு காமராஜர் நிதியுதவி திட்டம் விரிவுபடுத்தப்படும்.

    அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 10 சதவீத அரசு பள்ளி இடஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ். படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு அளிக்கப்படும்.

    • காலை 6 மணிக்கு ஆசிரமம் வாசிகளின் கூட்டு தியானம் நடைபெறுகிறது.
    • அரவிந்தர் அறை மற்றும் சமாதியை தரிசனம் செய்யலாம்.

    புதுச்சேரி:

    தேசிய மற்றும் ஆன்மிக வாதியான மகான் அரவிந் தர் 1872-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி மேற்கு வங்க மாநி லம் கொல்கத்தா வில் பிறந்தார். புதுச்சேரியில் ஆன்மிகப் பணியில் ஈடு பட்ட அரவிந்தர் 1950-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மறைந்தார்.

    அரவிந்தரின் 152-வது பிறந்த நாள் வருகிற 15-ந் தேதி (சுதந்திர தினத் தன்று) கொண்டாடப் படுகிறது. இதனையொட்டி சர்வதேச நகரமான புதுவையையொட்டி தமிழக பகுதியில் அமைந்துள்ள ஆரோவில்லில் ஆம்பி தியேட்டரில் அதிகாலை 4. 45 முதல் 6.30 மணி வரை 'போன்பயர்' நிகழ்ச்சி (மூட்டப் பட்ட தீயை சுற்றி அமர்ந்து அமைதியாக தியானம் செய்தல்) மற்றும் கூட்டு தியானம் ஆகியவை நடைபெறுகிறது. இதில் ஆரோவில் பகுதியில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்கிறார்கள்.

    அதே நாளில் புதுச்சேரி மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் காலை 6 மணிக்கு ஆசிரமம் வாசிகளின் கூட்டு தியானம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து ஆசிரமத்தில் உள்ள அரவிந்தர் மற்றும் அவரது சீடரான அன்னை மீரா பயன்படுத்திய அறை பொது தரிசனத்திற்கு காலை 6 முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

    அரவிந்தர் பொது தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆசிரமம் பின்பக்க வழியாக வரிசையில் வந்து அமைதியான முறையில் அரவிந்தர் அறை மற்றும் சமாதியை தரிசனம் செய்யலாம்.

    • சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கியது.
    • மின் தடையால் பொதுமக்கள் அவதி.

    புதுச்சேரி:

    புதுவையில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறையவில்லை.

    பகல் பொழுதில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. பிற்பகலில் சாலையில் நடக்க முடியாத நிலைமை உள்ளது. அனல்காற்றும் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக மாலையில் கருமேகங்கள் திரண்டு, மழை பெய்வதற்கான அறிகுறிகளை காட்டுகிறது. ஆனால் மழை பெய்வதில்லை. சில நாட்கள் லேசான சாரல்மழை பெய்தது.

    இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் சுட்டெரித்தது. மாலை 6 மணியளவில் திடீ ரென வானிலை மாறியது. கருமேகங்கள் சூழ்ந்து மழைபெய்ய தொடங்கியது. நகர பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை சுமார் 2 மணி நேரம் பெய்தது.

    இதனால் நகர பகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கியது. எல்லா வீதிகளும் வெள்ளக்காடாக மாறியது.

    இருசக்கர வாகனங்கள் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நகரின் சில முக்கிய சாலைகளில் இருசக்கர வாகன என்ஜின் மூழ்கும் வரை மழைநீர் தேங்கியது.

    தற்காலிக பஸ்நிலையத்திலும் மழைநீர் வெள்ளம்போல தேங்கியது. இதனால் பஸ்களில் மக்கள் ஏறவும், இறங்கவும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். பஸ்நிலையம் சேறும், சகதியுமாக மாறி கிடக்கிறது.

    இரவு 10 மணியளவில் மழை முற்றிலுமாக நின்றது. இதனால் சாலைகளில் தேங்கிய மழைநீர் வெளி யேறியது. பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சுமார் 3 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிய டைந்தனர்.

    இன்று காலை 6 மணி முதலே வழக்கம்போல கடுமையான வெயில் அடித்து. இரவில் கன மழையும், பகலில் கடும் வெயில் என நூதன வானிலையால் புதுவை மக்கள் அவதிக்குள்ளாகி யுள்ளனர். * * * புதுவை புஸ்சி வீதியில் தேங்கிய மழை வெள்ளம்.

    • போலீசாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • போலீஸ் ஏட்டு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 பேர் கைது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வில்லியனூர் அருகே கோபாலன் கடை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவரது தம்பி பிரதீப். இவர்கள் இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக வில்லியனூர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் போதைப் பொருள் ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டு வசந்த் மற்றும் வில்லியனூர் போலீசார் கோபாலன் கடை பகுதிக்கு சென்றனர். வில்லியனூர் போலீசாரை சற்று தூரத்தில் நிற்க வைத்து விட்டு சதீஷ் வீட்டுக்கு போலீஸ் ஏட்டு வசந்த் சென்றார்.

    அங்கு சதீசை மடக்கி பிடித்து கை விலங்கிட்டு போலீஸ் ஏட்டு வசந்த் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல முயன்றார். அப்போது சதீசின் மனைவி ராஜேஸ்வரி சதீசை அழைத்து செல்ல விடாமல் தடுக்க முயன்றார்.

    மேலும் சதீசின் தம்பி பிரதீப் மற்றும் 17 வயதுடைய மற்றொரு தம்பி, ராஜேஸ்வரி, சதீஷ் ஆகிய 4 பேரும் சேர்ந்து போலீஸ் ஏட்டு வசந்த்தை சரமாரியாக தாக்கினர். அதோடு குக்கரின் மூடியால் வசந்த்தின் முகத்தில் குத்தினர். இதில் நிலை குலைந்து போன வசந்த் அலறல் சத்தம் போட்டார்.

    இந்த சத்தம் கேட்டு சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த வில்லியனூர் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த போலீஸ் ஏட்டு வசந்த்தை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதை தொடர்ந்து போலீஸ் ஏட்டு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ரவுடி சதீஷ், அவரது மனைவி ராஜேஸ்வரி, தம்பி பிரதீப் மற்றும் 17 வயதுடைய மற்றொரு தம்பி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கும்பலின் தலைவன் அசாம்கானை போலீசார் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
    • விசாரணையில் பெங்களூருவில் தங்கியிருந்த வடமாநில கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவருக்கு கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஆன்லைன் மோசடி கும்பல் ரூ.17 லட்சத்து 71 ஆயிரத்து பெற்று ஏமாற்றியது. இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பெங்களூருவில் தங்கியிருந்த வடமாநில கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் பெங்களூரில் பதுங்கி இருந்த கும்பலை கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் மாறு வேடத்தில் சென்று சுற்றி வளைத்து 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுபம் ஷர்மா (வயது 29), நிரஜ்சூர்ஜார்(29), உத்தர காண்டை சேர்ந்த ராஜ் கவுண்ட்(28) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. இவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அசாம்கான் தலைவனாக கொண்டு புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடாக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வேலை தேடும் இளைஞர்களை குறி வைத்து 3,400 பேரிடம் சுமார் ரூ.200 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    ஒரு மாதத்திற்கு ரூ.6 கோடி என இலக்கு வைத்து அவர்கள் வேலை தேடும் இளைஞர்களிடம் பணம் பறித்துள்ளனர்.

    இந்த நிலையில் கைதானவர்களிடம் இருந்து போலீசார் கைப்பற்றிய செல்போன், லேப்-டாப் ஆகியவற்றை ஆய்வு செய்த போது இதில் ஏமாந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

    ஏற்கனவே 3,400 பேரிடம் மோசடி செய்த அந்த கும்பல் மேலும் 360 பேரை தங்கள் வலையில் வீழ்த்தி பல கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

    மேலும் மாநில வாரியாக ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களின் விவரங்களை சைபர் கிரைம் போலீசார் தயார் செய்து வருகிறார்கள். அந்த பட்டியலை அந்தந்த மாநிலங்களை சேர்ந்த போலீசாருக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே இந்த பெரும் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட கும்பலின் தலைவன் அசாம்கானை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். போலீசார் தேடுவதை அறிந்த மோசடி கும்பல் தலைவன் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி கொள்வதால் அவனை பிடிப்பதில் போலீசாருக்கு சவாலாக உள்ளது. எனினும் ஓரிரு நாளில் அவன் புதுச்சேரி போலீசாரிடம் சிக்கி கொள்வான் என்று சைபர் கிரைம் போலீசார் உறுதியாக சொல்கிறார்கள்.

    • விரக்தியடைந்த முகேஷ்குமார் வீட்டை விட்டு வெளியேறினார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    புதுச்சேரியை சேர்ந்தவர் முகேஷ்குமார். இவர் அங்கு செயல்பட்டு வரும் தனியார் மருத்துவகல்லூரியில் 2 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். இதற்கிடையே சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் முகேஷ் குமார், இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்தார்.

    இதனை அறிந்த அவரது பெற்றோர், மகனுக்கு அறிவுரை கூறி திட்டியதோடு, முகேஷ்குமார் வைத்திருந்த செல்போனையும் வாங்கி வைத்துக்கொண்டனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு முகேஷ்குமார் ஆளானார். மேலும் பெற்றோரிடம் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார்.

    தேர்வில் இரு பாடங்களில் பெயில் ஆனதால் பெற்றோர் அறிவுரை கூறி திட்டியதோடு செல்போனையும் வாங்கி வைத்துள்ளனர். இதனால் கடும் விரக்தியடைந்த முகேஷ்குமார் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் புதுச்சேரியில் இருந்து மதுரைக்கு வந்தார்.

    மதுரையில் டவுன்ஹால் ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். இன்று நீண்ட நேரம் ஆகியும் அவர் தங்கியிருந்த அறை கதவு திறக்கப்படாமல் இருந்தது. விடுதி ஊழியர்கள் பலமுறை தட்டிப்பார்த்தும் அறைக்குள் இருந்து எந்த விதமான பதிலும் வர வில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த விடுதி நிர்வாகத்தினர் திடீர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் முகேஷ் குமார் தங்கியிருந்த அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைத்தது.

    அறையின் மின் விசிறியில் முகேஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முகேஷ்குமார் விடுதியில் அளித்த முகவரியின் அடிப்படையில் புதுச்சேரியில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் தற்போது மதுரை விரைந்துள்ளனர். எம்.பி.பி.எஸ். தேர்வில் தோல்வி அடைந்ததால் மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்ப டுத்தி உள்ளது.

    • கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்கிறது.
    • 11 மணிக்கு முன்பாக சட்டசபை கூட்டத்தை முடிக்க திட்டம்.

    புதுச்சேரி:

    தெலுங்கானா கவர்ன ராகவும், புதுச்சேரியில் பொறுப்பு கவர்னராக பதவி வகித்து வந்த தமி ழிசை சவுந்தரராஜன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால், கவர்னர் பதவியை கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார்.

    அவருக்கு பதிலாக ஜார்க்கண்ட் மாநில கவர்னராக பதவி வகித்து வந்த தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் பதவி வழங்கப்பட்டது.

    தற்போது அவர் மகாராஷ்டிரா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 27-ந் தேதி புதுச்சேரியின் புதிய கவர்னராக கே.கைலாசநாதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.

    புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள கைலாசநாதன் 7-ந் தேதி (புதன்கிழமை) பதவியேற்கிறார். 6-ந் தேதி மாலை புதுச்சேரி வருகிறார். 7-ந் தேதி காலை 11.15 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்கிறது.

    இதில் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கிருஷ்ண குமார் புதிய கவர்னராக நிமியக்கப்பட்டுள்ள கைலாசநாதனுக்கு பதவி பிரமானமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைக்கிறார்.

    விழாவில் முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர திகாரிகள் கலந்து கொண்டு கவர்னருக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கவர்னர் மாளிகை செய்து வருகிறது.

    இந்த பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பதற்காக, 7-ந் தேதி காலை 11 மணிக்கு முன்பாக சட்டசபை கூட்டத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • காலநிலை மாற்றத்தால் ஏற்படுகிறதா என கண்டறிந்து நிரந்த தீர்வு காணப்பட உள்ளது.
    • கடற்கரை பகுதிகள் கடல் அரிப்பால் சிறிது, சிறிதாக மாயமாகி வருகிறது.

    புதுச்சேரி:

    வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள அழகிய சுற்றுலா நகரம் புதுச்சேரி. மினி கோவா என அழைக்கப்படும் புதுச்சேரியில் கனகசெட்டிக் குளம் தொடங்கி புதுக்குப்பம் முள்ளோடை வரை 31 கி.மீ. நீள கடற்கரை உள்ளது.

    இதில் பழைய சாராய ஆலையில் இருந்து சீகல்ஸ் ஓட்டல் வரை உள்ள ப்ரோமனட் கடற்கரை (ராக் பீச்), பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, நோணாங்குப்பம் பேரடைஸ் கடற்கரை பிரசித்தி பெற்றது.

    இங்குள்ள கடற்கரை பகுதிகள் கடல் அரிப்பால் சிறிது, சிறிதாக மாயமாகி வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு இருந்த கடற்கரையின் ஒரு பகுதி, திடீரென மாயமாகி விடுகிறது. அந்த அளவுக்கு புதுச்சேரி கடலில் காலநிலை மாற்றத்தால் கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது.

    புதுச்சேரி கடற்கரையில் ஏற்படும் கடல் அரிப்பு மற்றும் அதனை தடுப்பதற்கான வழிகளை கண்டறிய மத்திய அரசின் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் புதுச்சேரியில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி, டாபோ கிராபிகல் கருவி மூலம் கடற்கரை உருவாக்கம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு முறை இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடற்கரை மற்றும் கடல் நீரூக்குள் 1 மீட்டர் வரையிலான ஆழம் வரை சென்று கடல் அலையின் உயரம் உள்ளிட்டவை குறித்த தகவல்களை சேகரிக்கின்றனர்.

    இப்படி ஆண்டு முழுதும் 3 மாதத்திற்கு ஒரு முறை எடுக்கப்படும் ஆய்வு தரவுகள் ஒட்டுமொத்தமாக சேகரித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. அதன் பிறகே கடலில் தூண்டில் முள் வளைவுக்காக கொட்டிய கல், செயற்கை கடற்கரை உருவாக்க செய்யப்பட்ட கூம்பு வடிவ இரும்பு பொருள் உள்ளிட்டவையால் கடல் அரிப்பு ஏற்படுகிறதா, காலநிலை மாற்றத்தால் ஏற்படுகிறதா என கண்டறிந்து நிரந்த தீர்வு காணப்பட உள்ளது.

    • தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையில் அமர்ந்து கவர்னர் உரையை கேட்டனர்.
    • கடந்த பட்ஜெட் அறிவிப்புகளையே அரசு நிறைவேற்றவில்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரை இன்று நடைபெற்றது.

    இதையொட்டி காலை 9.25 மணிக்கு கவர்னர் மாளிகையிலிருந்து கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கார் மூலம் புதுச்சேரி சட்ட சபைக்கு வந்தார். அவரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சட்டசபை செயலாளர் தயாளன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து கவர்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    கவர்னரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சட்டசபை மைய மண்டபத்துக்கு அழைத்து வந்தார். சட்ட சபையில் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கவர்னரை வரவேற்றனர். சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமர்ந்தவுடன், காலை 9.30 மணிக்கு சபை நிகழ்வுகள் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

    கவர்னர் தனது உரையை தொடங்க முயன்றபோது, எதிர்கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால்கென்னடி, நாகதியாகராஜன், செந்தில் குமார், சம்பத், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத் ஆகியோர் எழுந்து, மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கவில்லை.


    இந்த நிலையில் கவர்னர் உரையில் எந்த மக்கள் நலத்திட்டமும் இருக்காது என குற்றம்சாட்டி விமர்சித்து பேசினர்.

    அப்போது அவர்களை சமாதானப்படுத்திய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான் என வைத்துக்கொண்டாலும், நான் என்ன சொல்லப் போகிறேன் என முழுமையாக கேட்டுக்கொண்டு, அதற்கு பின் பதில் வைத்தால் உண்மையான ஜனநாயகமாக இருக்கும். தயவு செய்து அமர்ந்து என்ன உரையாற்றப் போகிறேன் என்பதை உன்னிப்பாக கேளுங்கள், தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், அதை ஆளும் கட்சி திருத்திக்கொள்ள வேண்டும். உங்களிடம் அற்புதமான சிந்தனை இருந்தால் அதையும் எடுத்து வையுங்கள். அதை ஆளும் கட்சி எடுத்துக் கொள்ளட்டும். தயவு செய்து அமருங்கள், நான் எனது உரையை தொடங்குகிறேன் எனக்கூறி உரையாற்ற தொடங்கினார்.

    இதையேற்று தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையில் அமர்ந்து கவர்னர் உரையை கேட்டனர். சுமார் 15 நிமிடங்கள் அமர்ந்து கவர்னர் உரையை அமைதியாக கேட்ட தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் உரையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஏதும் இல்லை. கடந்த பட்ஜெட் அறிவிப்புகளையே அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறினர்.

    தொடர்ந்து 9.45 மணியளவில் எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில், கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக கூறி சபையிலிருந்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளி நடப்பு செய்தனர்.

    • ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
    • தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வீராம்பட்டினம் முகத்துவாரம் அருகே மாங்குரோவ் காட்டில் ஏற்பட்ட தீயை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

    சுனாமி பேரழிவின் போது, கடற்கரையில் வளர்ந்திருந்த அடர்ந்த மாங்குரோவ் காடுகள் தடுப்புச் சுவராக நின்று சுனாமி அலைகளை தடுத்து, கரையோரம் வாழும் மக்களை காத்தன. இதனால், சுனாமிக்கு பிறகு தமிழகம், புதுச்சேரி கடற்கரையோரம் மாங்குரோவ் காடுகள் வளர்க்க அரசுகள் பரிந்துரை செய்தது.

    இதையடுத்து, தேங்காய்த் திட்டு துறைமுக பகுதியில் ஏற்கனவே இருந்த மாங்குரோவ் காடுகளுடன், புதிதாக பல இடங்களில் மாங்குரோவ் செடிகள் நட்டு வளர்க்கப்பட்டன. அவை சிலரது சுயநலத்தால் தற்போது அழிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தேங்காய்த் திட்டு துறைமுகத்தின் தெற்கு பக்கம் வீராம்பட்டினம் கரையோரம் மாங்குரோவ் மரங்களுடன், கருவேல மரங்களும் சேர்ந்து வளர்ந்து இருந்தது.

    இதற்கிடையில், அரசு இடத்தில் இருந்த கருவேல மரங்கள் மற்றும் மாங்குரோவ் மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் யாரோ அழித்து ஒரே இடத்தில் குவித்து வைத்து இருந்தனர். நேற்று இரவு வெட்டி குவித்து வைக்கப்பட்டிருந்த மரங்கள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதில் அருகில் இருந்த கருவவேல மரங்களும் மற்றும் மாங்குரோவ் மரங்களும் தீயில் கருகியது.

    புதுச்சேரி மற்றும் கோரிமேடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேங்காய்த்திட்டு துறைமுக முகத்துவாரம் அருகே கரையோரம் பல ஏக்கரில் இருந்த மாங்குரோவ் காடுகள் ஏற்கனவே அழிந்து விட்டது.

    தற்போது, வீராம்பட்டினம் முகத்துவார பகுதியில் திடீரென மரங்கள் தீப்பற்றி எரிந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மரங்கள் அல்லது காய்ந்த சருகுகள் தானாக எரிய வாய்ப்பு இல்லை. எனவே, இதுகுறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • பாலமுருகன் வீட்டிற்கு தபாலில் பிரான்ஸ் குடியுரிமை சான்றிதழ் வந்தது.
    • போலீசார் வழக்கு பதிந்து மிலன் அருள்மணியை தேடி வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 26) இவர் டிப்ளமோ கேட்ரிங் படித்து விட்டு,புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.

    இவர் வேலைபார்க்கும் ஓட்டல் மூலம் அறிமுகமான புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த மிலன் அருள்மணி (46) என்பவர் பாலமுருகனுக்கு பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெற்றுதருவதாக கூறி அவரிடம் இருந்து முன்பணமாக ரூ.10 ஆயிரம் பெற்றார்.

    பின்னர் படிப்படியாக பள்ளி ஒரிஜினல் சான்றிதழ், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்ளுடன் மொத்தம் ரூ.1¼ லட்சம் பணத்தை கடந்த பிப்ரவரி மாதம் மிலன் அருள்மணி வாங்கினார்.

    அதனை அடுத்து பாலமுருகன் வீட்டிற்கு தபாலில் பிரான்ஸ் குடியுரிமை சான்றிதழ் வந்தது. அந்த சான்றிதழை பாலமுருகன் எடுத்துக் கொண்டு சென்னையில் உள்ள வெளியுறவு துறை அமைச்சகத்தின் மூலம் சரிபார்த்தார். அப்போது அது போலி சான்றிதழ் என தெரியவந்தது. மிலன் அருள்மணி பிரான்ஸ் குடியுரிமை சான்றிதழை போலியாக தயாரித்து தபாலில் பாலமுருகனுக்கு அனுப்பியது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சிடைந்த பாலமுருகன் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து மிலன் அருள்மணியை தேடி வந்தனர்.

    இந்நிலையில் தலைமறைவாக இருந்த மிலன் அருள்மணியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    ×