search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது.
    • ஒன்றிய குழு தலைவர் தலையிட்டு புதிய ஊழியர் நியமனம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கடந்த 2012-ம் ஆண்டு அம்மா சிமெண்ட் கிடங்கு கண்காணிப்பு ஊழியராக நியமனம் செய்யப்பட்ட வரை நீக்கி விட்டு வேறு ஒருவரை நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர் சுமித்ரா குமார் எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்பினார். இதனால் தி.மு.க. உறுப்பினர்களுக்கும் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஒன்றிய குழு தலைவர் தலையிட்டு புதிய ஊழியர் நியமனம் தொடர்பாக விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து வாக்குவாதம் முடிவுக்கு வந்தது. கூட்டத்தில் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி கவுன்சிலர்கள் பானு பிரசாத், கிருஷ்ண பிரியா வினோத், வெற்றி, தமின்சா, சகாதேவன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • பொங்கல் பண்டிகைக்கு பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
    • யாருக்கு இறுதி வெற்றி கிடைக்கப்போகிறது? என்பது அ.தி.மு.க. வட்டாரத்திலும் தமிழக அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் தான் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அன்று காலையில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ராயப்பேட்டை தலைமை கழகத்துக்கு ஓ.பி.எஸ். சென்றபோது அங்கு அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறின.

    இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தான் முதலில் வழக்கு தொடரப்பட்டது.

    இதில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓ.பி.எஸ்.சுக்கு சாதமாகவும் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவும் அமைந்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையே தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது.

    இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 4-ந்தேதி முதல் தீவிரப்படுத்தப்பட்டது. இரு தரப்பை சேர்ந்த வக்கீல்களும் தங்கள் தரப்பில் இருந்து பரபரப்பான வாதங்களை எடுத்து வைத்தனர். தொடர்ந்து 3 நாட்கள் நடந்த விசாரணைக்கு பின்னர் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

    கடந்த 2 நாட்களாக நடைபெற்ற வாதங்கள் மற்றும் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ்ராய் ஆகியோர் இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் தங்கள் தரப்பு வாதங்களை வருகிற 16-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த வக்கீல்கள் இதுவரை கோர்ட்டில் எடுத்து வைத்த வாதங்களை எழுத்து வடிவில் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதாடினார். பொதுக்குழு மற்றும் அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன் தரப்பில் மூத்த வக்கீல் முகுத் ரோகத்கியும், செயற்குழு தரப்பில் மூத்த வக்கீல் அதுல்சித்லே மற்றும் வக்கீல்கள் பாலாஜி, சீனிவாசன், கவுதம்குமார் ஆகியோரும் ஆஜராகி இருந்தனர். இவர்கள் தரப்பில் சுமார் 15 பக்கங்களை கொண்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த அறிக்கையை வருகிற 16-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.

    மூத்த வக்கீல் வைத்தியநாதன் வாதிடும்போது, கட்சி விதிகளுக்கு உட்பட்டே ஜூலை 11-ந்தேதி பொதுக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. 15 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்கிற மனுதாரரின் வாதம் ஏற்புடையதல்ல என தெரிவித்தார்.

    இந்த கூட்டம் நடத்தப்படுவதை அவர்கள் (ஓ.பி.எஸ். தரப்பினர்) அறிந்திருந்தனர். இதனை ஜூலை 4-ந்தேதி தாக்கல் செய்த சிவில் வழக்கிலும் தெரிவித்துள்ளனர். பொதுக்குழு கூட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று கட்சி விதிகளில் கூறப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.

    மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி வாதிடும்போது, பதவியில் இருந்து நீக்கி விட்டால் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக பொதுச்செயலாளர் ஆகி விடலாம் என்று நினைத்ததாக வாதிடுவது சரியல்ல. அ.தி.மு.க. அலுவலகத்தை சேதப்படுத்தி ஆவணங்களை எடுத்துச் சென்றபிறகே ஓ.பி.எஸ்.சை நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுபோன்ற முக்கிய தகவல்கள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட உள்ள அறிக்கையில் இடம்பெற உள்ளது.

    ஓ.பி.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கிருஷ்ணகுமார், வைரமுத்து சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரஞ்சித்குமார் ஆகியோர் வாதிடும்போது எந்தவித அடிப்படை காரணமும் இல்லாமல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு உள்ளன என்று வாதிட்டார்.

    2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி மேற்கொள்ளப்பட்ட கட்சி விதிகள் திருத்தம் அ.தி.மு.க.வினரால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அதற்கு முரண்பாடான வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செயல்பட்டிருப்பதாகவும் இரண்டு நீதிபதிகள் அமர்வு இந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் வாதிட்டனர்.

    இதற்கு முன்னரும், சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வாதங்களை ஓ.பி.எஸ். தரப்பு வக்கீல்கள் எடுத்து வைத்துள்ளனர். அவை அனைத்தையும் சேர்த்து ஓ.பி.எஸ். தரப்பிலும் எழுத்துப்பூர்வ அறிக்கை 16-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் வாதங்கள் மற்றும் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டதை யடுத்து இந்த வழக்கின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வழங்கப்பட்ட ஐகோர்ட்டு இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பு செல்லுமா? செல்லாதா? என்பதை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவிக்க உள்ளனர்.

    பொங்கல் பண்டிகைக்கு பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதில் யாருக்கு இறுதி வெற்றி கிடைக்கப்போகிறது? என்பது அ.தி.மு.க. வட்டாரத்திலும் தமிழக அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

    • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய பொதுக்குழுவே அவற்றை நீக்க முடியும் என்ற வாதம் தவறு.
    • ஜனவரி 16-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டனர்.

    அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் 5வது நாளாக விசாரணை நடைபெற்றது. இதில் இரட்டை தலைமை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினர்.

    அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்? என்று கேள்வி எழுப்பினர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனரா ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் கட்சியின் விதிப்படி நடைபெற்றது. ஒபிஎஸ் தனக்குத்தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என கூறுவது உண்மை அல்ல.

    ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டாரே தவிர, 1.5 கோடி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கிய பொதுக்குழுவே, அவற்றை ரத்து செய்துள்ளது என்று அதிமுக கட்சி சார்பில் வாதிடப்பட்டது.

    தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய பொதுக்குழுவே அவற்றை நீக்க முடியும் என்ற வாதம் தவறு.

    கட்சியின் உட்கட்சி பதவிகளுக்கான தேர்தலை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே அறிவித்தனர் என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது.

    2017-ம் ஆண்டில் அசாதாரண சூழலின்போது பொதுக்குழு கூடி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது.

    பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அவை தலைவருக்கு அதிகாரம் இல்லை என்பதை மறந்துவிட்டனர். ஜூலை 1ம் தேதி அளிக்கப்பட்டது நோடீஸ் அல்ல என வாதிடப்பட்டது.

    விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். ஜனவரி 16-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டனர்.

    • சட்டம், ஒழுங்கு குறித்த முதல்வரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    • போதைப்பொருள் புழக்கத்தை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.

    சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவர் அவையில் இருந்து வெளியேறியவுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வெளியேறினார்கள்.

    வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை சாலிகிராமத்தில் நடந்த தி.மு.க. பொதுக் கூட்டத்திற்கு பாதுகாப்பில் ஈடுபட்ட பெண் காவலரிடம் தி.மு.க.வினர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டனர். தவறு செய்த கட்சி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் சமாதான பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். 2 நாட்கள் கழித்துதான் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

    தவறு செய்தவர்கள் கையும் களவுமாக பிடிபட்ட போதிலும் அதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தியபிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. கூறியுள்ளார்.

    தமிழகத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை. சாமான்ய மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பார்கள். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு, வெளிநாட்டில் இருந்து கடல் வழியாக போதைப்பொருள் வருகிறது.

    கஞ்சா, கோகைன், பவுடர் உள்ளிட்ட பல்வேறு வடிவத்தில் போதை பொருள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மாணவர்கள் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். எங்கள் கருத்தை சட்டசபையில் வேண்டும் என்றே பதிவு செய்ய மறுக்கிறார்கள்.

    சபாநாயகர் நடுநிலையோடு செயல்படுவதாக கூறுகிறார். ஆனால் அவ்வாறு செயல்படாதது வருத்தம் அளிக்கிறது.

    தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் என தினமும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. சட்டம்- ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தோம்.

    இளைஞர்களின் எதிர்காலம் சீரழியக்கூடாது என்பதற்காகத்தான் எங்கள் கருத்தை பதிவு செய்ய வந்தோம். ஆனால் அதற்கு வாய்ப்பு தரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1.5 கோடி உறுப்பினர்கள் தொடங்கி, கிளை, நகரம், வட்டம், மாநகரம் ஆகியவற்றுக்கான கட்சி தேர்தலில் வாக்களிக்கின்றனர்.
    • பொதுக்குழுவின் அதிகாரம் கிளை உறுப்பினரிடம் இருந்து எப்படி கிடைக்கிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தபோது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அதே கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் பி.வைரமுத்து ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் கடந்த 6ம் தேதி மூன்றாவது நாளாக நடைபெற்றது.

    இதில், தலைமை கழக நிர்வாகிகளுக்கு பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் இல்லை. கட்சியின் தலைவர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என எம்ஜிஆர் விதிகளை உருவாக்கியுள்ளார். அதை யாராலும் மாற்ற இயலாது.

    இரட்டை தலைமை காலாவதியாகவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொது குழுவை கூட்ட முடியும் என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது.

    இதையடுத்து, இருதரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு தொடர்புடைய மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை இன்றைய (ஜனவரி 10ம் ) தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    அதன்படி, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு முன்னிலையில் 4வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    இன்றைய விசாரணையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    இதில், 2017ம் ஆண்டு வரை கட்சிக்கு ஒரே தலைமை இருந்தது. அதிமுகவின் பொதுக்குழு, அடிப்படை உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக உள்ளது. கட்சியின் விதிகளை திருத்தவும் அதிகாரத்தை கொண்டுள்ளது.

    ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை வேண்டுமென பொதுக்குழு உறுப்பினர்களால் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

    இரட்டை தலைமையில் ஏற்பட்ட குழப்பத்தால் கட்சிக்கு மீண்டும் ஒற்றை தலைமை தேவை என்ற நிலை ஏற்பட்டது. பொதுக்குழுவின் முடிவுகளை ஏற்கும் நபரே அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும் என விதி 7 கூறுகிறது. பொதுக்குழுவின் முடிவுகள் அடிப்படை உறுப்பினரை கட்டுப்படுத்தும். பொதுக்குழுவே கட்சியில் உட்சபட்ச அதிகாரம் பெற்றது.

    1.5 கோடி உறுப்பினர்கள் தொடங்கி, கிளை, நகரம், வட்டம், மாநகரம் ஆகியவற்றுக்கான கட்சி தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

    ஒவ்வொரு கிளையும் ஒரு செயலாளரை கொண்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் காலாவதியானது போல, பொதுக்குழு உறுப்பனர்களின் பதவிக்காலம் காலாவதியாகவில்லை.

    அதிமுக ஜனநாயக கட்சியாக இயங்கி வருகிறது. கட்சிக்கு உயர் அதிகாரம் படைத்த குழு தேவை என்று ஈபிஎஸ் தரப்பு வாதிட்டு வருகிறது.

    • எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வமே அமர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கவர்னர் உரையை தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத் தொடரையும் புறக்கணிக்க அ.தி.மு.க. முடிவு செய்து உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு பதிலாக எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதைத் தொடர்ந்து சட்டசபையில் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தும் அ.தி.மு.க.வினர் இது தொடர்பாக மனு அளித்தனர். ஆனால் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றப்படாது என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.

    இதனால் கடந்த சட்டமன்ற தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த தொடரிலும் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வமே அமர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டிக்கும் வகையில் கவர்னர் உரையை தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத் தொடரையும் புறக்கணிக்க அ.தி.மு.க. முடிவு செய்து உள்ளது.

    இது தொடர்பாக இன்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கூட்டம் நடத்தப்படுகிறது.

    இதில்  அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணிப்பது தொடர்பாகவும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் அடுத்தக் கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

    • தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
    • ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர்.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. காலை 10 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை தொடங்கினார்.

    ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முழக்கங்கள எழுப்பினர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இந்த நிலையில் தமிழக சட்டசபையில் இன்று இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவருக்கும் அருகருகே இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    • தமிழகத்தில் கடந்த 1957-ம் ஆண்டு முதல் இதுவரை 101 சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடந்துள்ளது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 102-வது இடைத்தேர்தல் ஆகும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் திராவிட கட்சிகளே மாறி, மாறி போட்டியிட்டு வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது மகன் திருமகன் ஈவெராவுக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு வாங்கி கொடுத்தார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் த.மா.கா. வேட்பாளர் யுவராஜா போட்டியிட்டார்.

    இதில் 8 ஆயிரத்து 904 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். இதனால் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு தொகுதி காங்கிரஸ் வசமானது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 67,300 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜா 58,396 ஓட்டுகள் பெற்று குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 11,629 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 10,005 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பெற்றனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதி காலியானது. இதையடுத்து இந்த தொகுதியில் 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும். தி.மு.க. அரசின் 1½ ஆண்டு ஆட்சி காலத்தில் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.

    கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது தி.மு.க. போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் கடந்த முறை த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது அ.தி.மு.க. போட்டியிட போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான சந்திரகுமார், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோர் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரசும், அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட த.மா.காவும் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன.

    காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் 2-வது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களும் மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் த.மா.கா.வும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    கடந்த முறை எங்களது வேட்பாளர் யுவராஜா குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். எனவே இந்த முறை நாங்களும் போட்டியிட விரும்புகிறோம். இதுகுறித்து எங்களது கட்சி தலைவர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி வேட்பாளரை அறிவிப்பார். அதற்கான காலம் இன்னும் உள்ளது.

    இதற்கிடையே தி.மு.க-அ.தி.மு.க. இடையே நேரிடையாக பலப்பரீட்சை ஏற்படுமா? அல்லது கூட்டணி தர்மத்திற்காக மீண்டும் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமா என்று தொண்டர்கள் எதிர்ப்பார்ப்புடன் காத்து உள்ளனர்.

    தமிழகத்தில் கடந்த 1957-ம் ஆண்டு முதல் இதுவரை 101 சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 102-வது இடைத்தேர்தல் ஆகும். இதுவரை நடந்த 101 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் 29 முறை எதிர்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

    இதில் 1959-ல் அருப்புக்கோட்டையில் எஸ்.சுந்தரபாரதி, 2017-ல் ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரன் ஆகியோர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ஆவர். மற்றவர்கள் ஆளும் கட்சி அல்லது அதன் கூட்டணியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

    ஒவ்வொரு இடைத்தேர்தலையும் ஆளும் கட்சியினர் கவுரவ பிரச்சினையாக கருதி தேர்தல் பணியாற்றி வருகின்றனர். கடந்த 1½ ஆண்டு கால தி.மு.க. ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று பா.ஜனதாவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதற்கு விடை சொல்லும் வகையில் அமைந்துள்ளது.

    • செய்யக்கூடிய வேலையில் நேர்மை இருந்தால் வெற்றி கிடைக்கும்.
    • பா.ஜ.க. தமிழர்களுக்கான கட்சி.

    சென்னை :

    சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் தமிழக பா.ஜ.க. கலை, கலாசார பிரிவு சார்பில் தமிழ்த்தாய் விருது வழங்கும் விழா நடந்தது. கலை, கலாசார பிரிவு மாநில தலைவர் பெப்சி சிவா தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்துகொண்டு, பழம்பெரும் நடிகர்-நடிகைகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    விழாவுக்குப் பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    செய்யக்கூடிய வேலையில் நேர்மை இருந்தால் வெற்றி கிடைக்கும். கலைஞன், படைப்பாளி ஆகியோர் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள். பா.ஜ.க.வை தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் எடுத்துச்செல்வோம். பா.ஜ.க. தமிழர்களுக்கான கட்சி. தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்காக இருக்கக்கூடிய முதன்மை கட்சி பா.ஜ.க.தான். தொடர்ந்து மக்களுக்காக உழைத்துக்கொண்டிருப்போம்.

    சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பெண் போலீசாரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அக்கட்சியினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று முதல்-அமைச்சருக்கு திருமாவளவன் முதலில் 'டுவிட்' செய்யவேண்டும். பெண் போலீஸ் மீது கை வைத்த 2 இளைஞர்களிடம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மன்னிப்பு எழுதி கடிதம் வாங்கினர். நடவடிக்கை எடுக்கவேண்டாம் என பெண் போலீசிடமும் கடிதம் எழுதி வாங்கியுள்ளனர்.

    இந்தியாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் எங்கும் நடைபெறாது. பாதிக்கப்பட்ட பெண் போலீசிடமே நடவடிக்கை எடுக்கவேண்டாம் என கடிதம் எழுதி வாங்கியது பற்றி திருமாவளவன் முதல்-அமைச்சரிடம் கேள்வி எழுப்பவேண்டும். பாதிக்கப்பட்ட பெண் போலீசுக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களுக்கு என்ன நிலை என்பதை முதல்-அமைச்சர் சொல்லவேண்டும்.

    பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சுமுகமாக செல்வதால், வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. உடன்தான் கூட்டணி. தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு.

    வருகிற பாராளுமன்ற தேர்தல் எங்களுக்கும், எங்கள் கூட்டணி கட்சிக்கும் மைல்கல்லாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் நடிகர் பாக்யராஜ், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், எஸ்.சி.சூர்யா, பிரமிளா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆவலாக உள்ளது.
    • அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமா? அல்லது இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியா? என்ற சர்ச்சைக்கு தீர்ப்பில் விடை கிடைத்துவிடும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தபோது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அதே கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் பி.வைரமுத்து ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினம் மதியம் 2 மணி முதல் மீண்டும் நடைபெற்று வருகிறது.

    அப்போது வைரமுத்து சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் தனது வாதத்தை தொடர்ந்தார். நேற்றும் வாதாடினார். அ.தி.மு.க. பொதுக்குழு சட்ட விதிமுறைபடி நடைபெறவில்லை. அதுவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். ஆனால் இந்த பொதுக்குழு அவ்வாறு கூட்டப்படவில்லை.

    அவைத் தலைவரை வைத்து பொதுக்குழுவை கூட்டினார்கள். ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கியதாக கூறினார்கள். ஆனால் அப்படி நீக்குவதற்கு முறைப்படி நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்கவில்லை. எனவே ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்று வாதிட்டார்.

    அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம், ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவின் தீர்மானங்களை எதிர்த்து இதுவரை எந்த கோர்ட்டிலும் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடரவில்லை. எனவே அந்த பிரச்சினையை இந்த வழக்கில் எழுப்ப முடியாது. 5-ல் ஒரு பகுதியினர் கடிதம் அளித்தாலே பொதுக்குழுவை கூட்டலாம் என்று கட்சி விதிகளில் உள்ளதாக வாதிட்டார்.

    எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பேச முற்பட்டபோது அதற்கு நீதிபதிகள் உங்கள் முறை வரும் போது உங்கள் வாதத்தை தொடரலாம் என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் தொடர்ந்து வாதிட்டார்.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கட்சி விதிகளில் எங்கெங்கு உள்ளதோ அதை பொதுச்செயலாளர் என்று மாற்றி உள்ளனர் என்று வாதிட்டார்.

    நேற்று மாலை 4.30 மணி வரை வாதங்கள் நீடித்ததால் விசாரணையை இன்று மதியம் 2 மணிக்கு தள்ளி வைத்தார்.

    இன்று இந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியதும் வைரமுத்து வழக்கறிஞரும், ஓ.பன்னீர் செல்வம் வழக்கறிஞரும் முதலில் வாதங்கள் செய்ய உள்ளனர். அதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் வாதாட உள்ளார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் இன்று நிறைவு செய்ய வேண்டும என்று நீதிபதிகள் கூறி உள்ளதால் அ.தி.மு.க. வழக்கு விசாரணை இன்று முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆவலாக உள்ளது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமா? அல்லது இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியா? என்ற சர்ச்சைக்கு தீர்ப்பில் விடை கிடைத்துவிடும்.

    • ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பொதுக்குழு அவரை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
    • கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியை மாற்றியுள்ளதாக வைரமுத்து தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஓ.பி.எஸ். ஆதரவாளரான வைரமுத்து என்பவரும் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் விசாரித்து வருகிறார்கள்.

    பல கட்டங்களாக தொடர்ந்து நடந்த இந்த வழக்கின் விசாரணை நேற்றும் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க வேண்டியதன் அவசியத்தையும், இதுவரை வழக்கு கடந்து வந்த பாதைகளையும் கேட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல் சி.ஏ.சுந்தரம், சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் சிவில் வழக்கு தொடர்ந்ததையும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட விபரத்தையும் எடுத்து கூறினார்கள்.

    ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டனர். அந்த பதவி 2026-ம் ஆண்டு வரை உள்ளது என்று வைரமுத்து தரப்பு வக்கீல் ரஞ்சித் குமார் கூறினார். ஆனால் இருவரும் போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டது செயற்குழுவில் தான். அதற்கு பொதுக் குழுவின் ஒப்புதல் தேவை என்றார். அ.தி.மு.க. பொதுக்குழு கட்சியின் விதிகளுக்கு முரணாக கூட்டப்பட்டதாகவும், தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளரை அந்த பொதுக்குழுவில் நீக்கி இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    அதற்கு, ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பொதுக்குழு அவரை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. 

    இந்த பரபரப்பான கட்டத்தில் இன்று பிற்பகலில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, அதிமுக பொதுக்குழுவை ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும், தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட முடியும் என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது.

    அதிமுகவின் அடிப்படை விதிகளையே தற்போது மாற்றி அமைத்துள்ளனர், கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியையும் மாற்றியுள்ளனர் என வைரமுத்து தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை நாளை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைத்தனர். இந்த வாரத்திற்குள் விசாரணையை நிறைவு செய்ய நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். அதனால் நாளை இரு தரப்பினரும் வாதங்களை இறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதற்கேற்ப இரு தரப்புக்கும் நேரம் ஒதுக்கப்படும்.

    • ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பொதுக்குழு அவரை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
    • அ.தி.மு.க.வுக்கு நீயா? நானா? என்று எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே எழுந்துள்ள அதிகார போட்டியின் முடிவு சுப்ரீம் கோர்ட்டின் கைகளில் உள்ளது.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. யார் கைக்கு செல்லப் போகிறது என்ற எதிர்பார்ப்பை சுப்ரீம் கோர்ட்டில் சூடு பிடித்து வரும் பொதுக்குழு தொடர்பான விசாரணை எகிற வைத்துள்ளது.

    அ.தி.மு.க.வுக்கு நீயா? நானா? என்று எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே எழுந்துள்ள அதிகார போட்டியின் முடிவு சுப்ரீம் கோர்ட்டின் கைகளில் உள்ளது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.

    அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த ஐகோர்ட்டு பெஞ்ச் பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்தது.

    ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஓ.பி.எஸ். ஆதரவாளரான வைரமுத்து என்பவரும் மேல்முறையீடு செய்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் விசாரித்து வருகிறார்கள். பல கட்டங்களாக தொடர்ந்து நடந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க வேண்டியதன் அவசியத்தையும், இதுவரை வழக்கு கடந்து வந்த பாதைகளையும் கேட்டனர்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல் சி.ஏ.சுந்தரம், சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் சிவில் வழக்கு தொடர்ந்ததையும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட விபரத்தையும் எடுத்து கூறினார்கள்.

    ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டனர். அந்த பதவி 2026-ம் ஆண்டு வரை உள்ளது என்று வைரமுத்து தரப்பு வக்கீல் ரஞ்சித் குமார் கூறினார்.

    ஆனால் இருவரும் போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டது செயற்குழுவில் தான். அதற்கு பொதுக் குழுவின் ஒப்புதல் தேவை என்றார்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கட்சியின் விதிகளுக்கு முரணாக கூட்டப்பட்டதாகவும், தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளரை அந்த பொதுக்குழுவில் நீக்கி இருக்கிறார்கள்.

    அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பொதுக்குழு அவரை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.

    நீதிபதிகள் இந்த வழக்கை நீட்டிக்க விரும்பவில்லை. இந்த வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

    வைரமுத்து தரப்பில் 45 நிமிடங்கள், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஒரு மணி நேரம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் 30 நிமிடம் வாதிடுவதற்கு நேரம் கேட்டுள்ளார்கள்.

    இந்த பரபரப்பான கட்டத்தில் இன்று பிற்பகலில் மீண்டும் விசாரணை தொடங்கியது. இன்று அல்லது நாளைக்குள் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×