search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94689"

    • ஒரு வார காலமாக பனிபொழிவு குறைந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது
    • பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் காலை 37.85 அடியாக இருந்தது. 434க்கு கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கார்த்திகை மாதம் முழுவதும் கொட்டி தீர்த்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

    கடந்த ஒரு வார காலமாக பனிபொழிவு குறைந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. மதியம் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதையடுத்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே சிரமப்பட்டனர். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிப்பிற்கு ஆளானார்கள்.

    இந்த நிலையில் நேற்று காலை திடீரென சீதோசன நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக மதியம் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று இரவு மின்னல் கண்ணை பறிக்கும் வகையில் இருந்தது. இன்று அதிகாலையில் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. நாகர்கோவிலில் அதிகாலை 3 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் அரை மணி நேரம் இடைவிடாது பெய்தது. தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்தது.

    பூதப்பாண்டி, சுருளோடு, ஆரல்வாய்மொழி, மயிலாடி, கொட்டாரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 4.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் 1.8 மில்லி மீட்டர் மழை பதி வாகியுள்ளது. அதிகாலை யில் பெய்த மழையின் காரணமாக இதமான குளிர் காற்று வீசியது. பின்னர் காலையில் வழக்கம் போல் வெயில் அடிக்க தொடங்கி யது 

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 37.85 அடியாக இருந்தது. அணைக்கு 434க்கு கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 592 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 46.75 அடியாக உள்ளது. அணைக்கு 44 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 450 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணை நீர்மட்டம் 9.51 அடியாக உள்ளது. அணைக்கு 91 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 3 அணைகளில் இருந்தும் 1192 தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு உள்ளது. வழக்கமாக பாசனத்திற்காக ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும் அணைகள் பிப்ரவரி 26 -ந் தேதி மூடப்படுவத வழக்கம்.

    ஆனால் கடை மடை பகுதிகளில் விவசாயம் கருகும் நிலையில் இருப்பதால் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் மார்ச் 20 -ந்தேதி வரை தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

    • டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • வெயிலின் தாக்கம் குறைந்து மிதமான குளிர்ந்த காற்று வீசியது.

    தஞ்சாவூர்:

    கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கும் அதிகரித்து காணப்பட்டது.

    இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காட்சியளித்தது.

    திடீரென பகல் 12 மணியளவில் தஞ்சையில் மிதமான சாரல் மழை ெபய்தது.

    இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மிதமான குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது.

    • ராமநாதபுரம், கீழக்கரையில் திடீரென மழை பெய்தது.
    • வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் காணப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பகுதியில் அனைவரும் எதிர்பார்த்த வடகிழக்கு பருவமழை சில நாட்கள் மட்டும் லேசாக பெய்த நிலையில் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகள் வறண்டு விவசாயம் பாதிக்கப்பட்டது.

    வைகை தண்ணீர் பாய்ந்த பகுதிகளில் மட்டும் நீர் நிலைகள் நிறைந்து விவசாயம் நன்றாக உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கடலோர பகுதியில் கருமேகம் சூழ்ந்து இடைவிடாமல் 2மணி நேரம் மழை பெய்ய தொடங்கியது. சில பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழையாகவும், பல பகுதிகளில் இடை விடாமலும் பெய்தது.

    மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. மழையின்றி பனியின் தாக்கத்தில் இருந்து வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிலத்தடி நீராதாரத்திற்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    காலம் தாழ்ந்து பெய்த மழையால் நெல் விவசாயத்திற்கு எந்த பயனும் இல்லை என்றாலும் வைகை தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்துள்ள பகுதிகளுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்றும் மிளகாய், மல்லி போன்றவற்றிற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    மழையுடன் குளிர் காற்றும் வீசியதால் குளிர்ந்த நிலை நிலவியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கீழக்கரையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. போக்குவரத்து மிகுந்த முக்கிய ரோடு, தெருக்கள் சேதமடைந்து குண்டும் குழியுமாகி தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று காலை பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் காணப்பட்டது.

    • மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் திடீர் மழையால் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு ஒதுங்கி நின்றனர்.
    • கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வந்த வெயிலில் இருந்து தப்பித்ததாக பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    நெல்லை:

    தென்கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று நெல்லை மாவட்டத்தில் திடீரென சாரல் மழை பரவலாக பெய்தது.

    நெல்லையில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. காலை நேரங்களில் கடுமையான பனியும், பகலில் வெயிலும் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குறிப்பாக மாநகர பகுதியில் காலையில் திடீர் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பேட்டை, டவுன், சந்திப்பு, பாளை முருகன்குறிச்சி, சமாதானபுரம், கே.டி.சி.நகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இந்த திடீர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள், பணிக்கு சென்ற பெண்கள் ஆகியோர் குடைபிடித்தப்படி சாலையில் நடந்து சென்றதை காணமுடிந்தது. ஒருசில இடங்களில் சற்று கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஓடியது.

    மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் திடீர் மழையால் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு ஒதுங்கி நின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வந்த வெயிலில் இருந்து தப்பித்ததாக பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    அதேநேரத்தில் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் தற்போது நெல் அறுவடை பணிகள் நடந்து வருகின்றது. அங்கு திடீரென சாரல் மழை பெய்ததால் விவசாயிகள் சற்று கலக்கம் அடைந்தனர்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் சுற்று வட்டார கிராமங்களில் காலை 6 மணி முதல் 1 மணி நேரம் பரவலாக மழை பெய்தது.

    • பகலில் மழை மேகமூட்டம்-இரவில் கடும் குளிர்
    • தவிக்கும் திருச்சி வாழ் மக்கள் மாவட்டம் முழுவதும் 184 மி.மீ. பதிவானது

    திருச்சி, 

    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் நேற்று முன்தினம் அதி–காலை முதல் பரவலாக நல்ல மழை பெய்து வருகி–றது. நேற்று 2-வது நாளாக பெய்த மழையால் பல ஆயிரம் ஏக்கரில் அறுவ–டைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பலத்த சேத–மடைந்தன.மூன்றாவது நாளாக இன் றும் காலை முதல் வானம் மேக மூட்டத்துடனேயே காணப்படுகிறது. தமிழகத் தில் மழையானது படிப்ப–டியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனாலும் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள் ளது. மேலும் சாலை பணி–களுக்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு சேறும், சகதியுமாக இருப் பதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.அதேபோல் இரவு நேரங் களில் கடுமையான பனிப் பொழிவு காணப்படுகி–றது. நேற்று காலை முதல் மாலை வரை மேகமூட்டமாக காணப்பட்டது. கனமழை பெய்யக்கூடும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்தது.நேற்று மாவட்டம் முழு–வதும் 184.5 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதில் அதிக–பட்சமாக முசிறி பகு–தியில் 24 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதர பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்ட–ரில் வருமாறு:-கள்ளக்குடி-5.2, லால் குடி-3, நந்தியாறு அணைக் கட்டு-6.2, புள்ளம்பாடி-5.2, தேவிமங்கலம்-6.4, சமய–புரம்-6, சிறுகுடி-9.2, வாத் தலை அணைக்கட்டு-8, மணப்பாறை-6, பொன்ன–ணியாறு அணை-7, கோவில்பட்டி-9.4, மருங்கா–புரி-12.4, புலிவலம்-10, தா.பேட்டை-2, நவலூர் குட்டப்பட்டு-6.2, துவாக் குடி-8.3, கொப்பம்பட்டி-4, தென்பரநாடு-13, துறையூர்-4, பொன்மலை-8, திருச்சி விமான நிலையம்-7, திருச்சி ஜங்ஷன்-8, திருச்சி டவுன்-6.பெயரளவுக்கு மட்டுமே மழை பெய்திருந்தாலும் கடும் குளிர் காற்று வீசும் காரணத்தினால் மாநகரில் வயதானவர்கள் தங்கள் வீடுகளில் முடங்கி கிடக்கி–றார்கள். சீதோஷ்ண நிலை மாற்றம் குழந்தைகளுக்கு உடல் உபாதைகளையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே பொதுமக்கள் கொதிக்க வைத்த நீரை பருகவேண்டும் என்று டாக்டர்கள் கேட் டுக்கொண்டு உள்ளனர்.கடலோர பகுதி–களை உள்ளடக்கிய புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

    • வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் எந்திரத்தை இறக்கி அறுவடை செய்ய முடியாத சூழல் நிலவுகிறது.
    • தொடர் மழையால் பயிர்களை காப்பாற்ற முடியாமல் போகுமோ என விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முதலில் அவர் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர், மேலையூர், குலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை பார்வையிட்டார். வயலில் இறங்கி பயிர்கள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார். விவசாயிகளிடம் பயிர் சேதம் குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்து மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான சம்பா பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் எந்திரத்தை இறக்கி அறுவடை செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. குறைந்தது ஒரு வாரத்திற்காவது மழை இன்றி வெயில் அடித்தால் மட்டுமே தண்ணீர் வடிந்து அறுவடை செய்யும் நிலை உள்ளது. தற்போது தொடர் மழையால் பயிர்களை காப்பாற்ற முடியாமல் போகுமோ என விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.

    உடனடியாக தமிழ்நாடு அரசு டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை ஆய்வு செய்து கணக்கெடுத்து போர்க்கால அடிப்படையில் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். முதலமைச்சரும் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர் பயிரிடப்பட்ட நிலையில், 20 ஆயிரம் ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த நான்கு நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதால், லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர் பயிரிடப்பட்ட நிலையில், 20 ஆயிரம் ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டு உள்ளது.

    எஞ்சியுள்ள ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த நான்கு நாள் தொடர் மழை காரணமாக மழை நீர் தேங்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஏற்கனவே அறுவடை செய்த நெல்லையும் காய வைக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. மழை நீடித்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும். மயிலாடுதுறை மாவட்டத்தில் இருபதாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. உளுந்து, பயறு போன்றவற்றை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் நெல் மற்றும் கடலை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்போது, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.

    எனவே ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணத்தை இந்த அரசு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

    அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    • நாகர்கோவிலில் அதிகபட்சமாக 14 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நாகர்கோவில்:

    வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று குமரி மாவட்டத்தில் பல இடங்களிலும் பரவ லாக மழை பெய்தது. நாகர்கோவிலில் அதிகபட்ச மாக 14 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளின் மழை அளவு வருமாறு- கன்னிமார்- 9.4, இரணியல் -8.4,பாலமோர் -7.2,பூதப்பாண்டி- 7.2, மாம்பழத் துறையாறு - 6.8,குருந்தன்கோடு-6.4, முள்ளங்கினாவிளை- 6.4,ஆனைகிடங்கு -5.2, குளச்சல் - 3.6, மைலாடி -3.6, கோழிப்போர்விளை -3.4,அடையாமடை -3, கொட்டாரம் - 1.8, பேச்சிப்பாறை - 1, பெருஞ்சாணி - 1

    இந்த மழையின் காரணமாக அணை களுக்கு நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 40.95 அடியாக உள்ள நிலையில் நீர் வரத்து விநாடிக்கு 472 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 531 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 60.50 அடியாக உள்ள நிலையில் நீர் வரத்து விநாடிக்கு 153 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 375 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • நெல்லை மாவட்டத்தின் மற்ற இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்துள்ளது.
    • நெல்லை மாநகர பகுதியில் பெய்த மழை காரணமாக நகரின் பல இடங்களில் சாலையோரம் மழை நீர் தேங்கி கிடந்தது.

    நெல்லை:

    வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை இலங்கையில் கரையை கடந்தது.

    இந்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று நிலவ கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

    இதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    அதன்படி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முதலே பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் நெல்லை மாநகர பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அதே நேரம் மாஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

    இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக மாஞ்சோலை ஊத்து பகுதியில் 158 மில்லி மீட்டர் (15.8 சென்டி மீட்டர்) மழை பெய்துள்ளது. நாலுமுக்கு பகுதியில் 13.2 சென்டி மீட்டர், காக்காச்சி பகுதியில் 11.7 சென்டி மீட்டர், மாஞ்சோலையில் 10.1 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தின் மற்ற இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்துள்ளது. களக்காட்டில் 12.20 மில்லி மீட்டர், பாளையில் 10, பாபநாசத்தில் 13, மூலைக்கரைப்பட்டியில் 10, அம்பையில் 8, சேரன்மகாதேவியில் 7, மணிமுத்தாறில் 8.40, நாங்குநேரியில் 9, ராதாபுரத்தில் 2.40, நெல்லையில் 4.60, சேர்வலாறு அணை பகுதியில் 5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    கன்னடியன் கால்வாய் பகுதியில் 8.60, கொடுமுடியாறு அணை பகுதியில் 7, நம்பியாறு அணை பகுதியில் 5 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மொத்தத்தில் ஒரே நாளில் 61.8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இது சராசரியாக 34.34 மில்லி மீட்டர் ஆகும்.

    நெல்லை மாநகர பகுதியில் பெய்த மழை காரணமாக நகரின் பல இடங்களில் சாலையோரம் மழை நீர் தேங்கி கிடந்தது.

    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் மட்டக்களப்பு - திரிகோணமலை இடையே கரையை கடந்தது
    • நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று மழை பெய்தது.

    திருவாரூர்:

    வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழையும், குமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 3-ம் தேதி (நாளை) விடுமுறை அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உத்தரவிட்டுள்ளார்.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் மட்டக்களப்பு - திரிகோணமலை இடையே கரையை கடந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்தது.

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மழை பெய்தது. தூத்துக்குடி கடலோர பகுதியில் இன்று அதிகாலை முதலே மழை பெய்தது.
    • காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

    நெல்லை:

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 3.30 மணியில் இருந்து 4.30 மணிக்குள் இலங்கையின் மட்டக்களப்பு - திரிகோணமலை இடையே கரையை கடந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மழை பெய்தது. தூத்துக்குடி கடலோர பகுதியில் இன்று அதிகாலை முதலே மழை பெய்தது. காலை 9 மணிக்கு பின்னர் மாநகர பகுதி மற்றும் மாவட்டத்தின் பல இடங்களிலும் சாரல் மழை பெய்தது.

    நெல்லை மாநகரில் அதிகாலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதிகாலையில் சாரலாக மழை பெய்தது. காலை 10 மணிக்கு டவுன் வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட மாநகர பகுதி முழுவதும் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பரவலாக பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. மீன்வளத்துறை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்று 3-வது நாளாக 5 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி துறைமுகத்தில் மற்றும் கடற்கரை பகுதியில் 260 விசைபடகுகள் நிறுத்தப்பட்டிருந்தது.

    நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ராதாபுரம் மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன் காரணமாக கூத்தங்குழி, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, கூடுதாழை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரம் நாட்டுப்படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    இதே போல் தென்காசி மாவட்டத்திலும் தென்காசி, ஆலங்குளம், குற்றாலம், செங்கோட்டை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று சாரல் மழை பெய்தது.

    ×