search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94803"

    • டாஸ் ஜெயித்து இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • 20 ஓவர் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று பிரிஸ்டலில் நடந்தது. டாஸ் ஜெயித்து இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அபார பந்து வீச்சில் இந்தியா விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க வரிசையில் முதல் 5 வீராங்கனைகள் ஒற்றை இலக்கில் அவுட் ஆனார்கள்.

    அதன் பின்னர் தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் தாக்கு பிடித்து விளையாடினார்கள். இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்தது. ரிச்சா கோஷ் 33 ரன்னும், தீப்தி சர்மா 24 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீராங்கனைகளான ஷோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டும், சாரா கிளென் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் விளையாடிய இங்கிலாந்து 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சோபியா டங்லே 49 ரன்னும், ஆலிஸ் கேப்சி 38 ரன்னும், டேனி வியாத் 22 ரன்னும் எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் 20 ஓவர் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. அடுத்20 ஓவர் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.து இரு அணிகளும் மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகின்றன. முதல் போட்டி வருகிற 18-ந்தேதி நடக்கிறது.

    • முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 30.5 ஓவர்களில் இலக்கை எட்டியது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே- இந்தியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் ஆகியோரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர்கள் ஷிகர் தவான் 88 ரன்களும், ஷூப்மான் கில் 82 ரன்களும் விளாச, இந்தியா 30.5 ஓவர்களில் 192 ரன்களை குவித்தது. இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி 20ம் தேதி நடைபெறுகிறது.

    • வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
    • 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

    ஹராரே:

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் போட்டி இன்று ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டை இழந்தனர். நிலைக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை கைப்பற்றி, ஜிம்பாப்வே அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் ஜிம்பாப்வே அணி சற்று நிதானமாக ஆடியது. கேப்டன் ரெஜிஸ் 35 ரன்களும், பிராட் ஈவன்ஸ் 33 ரன்களும், ரிச்சர்டு 34 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். இதனால் ஜிம்பாப்வே, 40.3 ஓவர்களில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    6 மாதத்திற்கு பிறகு பார்முக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் ஆகியோரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

    • நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்தது.
    • 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    கிங்ஸ்டன்:

    வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது.

    முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 146 ரன் இலக்காக இருந்தது.

    பிலிப்ஸ் அதிகபட்சமாக 26 பந்தில் 41 ரன்னும் ( 4 பவுண்டரி , 2 சிக்சர் ), கேப்டன் வில்லியம்சன் 24 ரன்னும் ( 2 பவுண்டரி ) எடுத்தனர். ஓடியன் சுமித் 3 விக்கெட்டும் , அகீல் ஹூசைன் 2 விக்கெட்டும் , டொமினிக் டிரேக்ஸ், ஹைடன் வால்ஷ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார் கள்.

    பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கோப்பை வென்ற நியூசிலாந்து அணி வீரர்கள்

    கோப்பை வென்ற நியூசிலாந்து அணி வீரர்கள்

    புரூக்ஸ் 56 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), பிரண்டன் கிங் 35 பந்தில் 53 ரன்னும் (4 பவுண்டரி , 3 சிக்சர்) போவெல் 15 பந்தில் 27 (2 பவுண்டரி , 2 சிக்சர் எடுத்தனர். சவுத்தி, சோதிக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.

    முதல் 2 போட்டியிலும் தோற்று தொடரை இழந்த வெஸ்ட் இண்டீசுக்கு இது ஆறுதல் வெற்றியாகும். 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் வருகிற 17-ந்தேதி பிரிட்ஜ் டவுனில் நடக்கிறது.

    • இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 44 ரன்கள் குவித்தார்.
    • வெஸ்ட் இண்டீஸ் அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 33 ரன்கள் விளாசினார்.

    சூரியகுமார் யாதவ் 14 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 24 ரன்கள் சேர்த்தார். ரிஷப் பண்ட் 31 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரியுடன் 44 ரன்கள் குவித்தார். தீபக் (21), தினேஷ் கார்த்திக் (6), சஞ்சு சாம்சன் (30 நாட் அவுட்), அக்சர் பட்டேல் 20 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓபட் மெக்காய், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர் பிரான்டன் கிங் 13 ரன்னுடன் வெளியேறினார். கெயில் மேயர்ஸ் 14 ரன்னுக்கு அவுட்டானார்.

    கேப்டன் பூரன் மற்றும் பாவல் ஆகியோர் தலா 24 ரன்கள் அடித்து அவுட்டாகினர். ஹெட்மயர் 19 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஹோல்டர் 13 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர் முடிவில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 


    இதன் மூலம் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை கைப்பற்றியது. இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களும், அவேஷ்கான், அக்சர் படேல், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 

    • இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 44 ரன்கள் குவித்தார்.
    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓபட் மெக்காய், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி, இன்று லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 33 ரன்கள் விளாசினார். சூரியகுமார் யாதவ் 14 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 24 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் தீபக் ஹூடா-ரிஷப் பண்ட் ஜோடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். ரிஷப் பண்ட் 31 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரியுடன் 44 ரன்கள் குவித்தார். தீபக் (21), தினேஷ் கார்த்திக் (6), சஞ்சு சாம்சன் (30 நாட் அவுட்), அக்சர் பட்டேல் 20 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓபட் மெக்காய், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.

    • கிரிக்கெட் அணிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

    காரைக்குடி

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 16 வயதுக்குட்பட்டோருக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி இன்று (4-ம் தேதி) முதல் வருகிற (7ம் தேதி) வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் நடக்கிறது.

    இதற்கான சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணியில் விளையாட அணித்தேர்வு அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் செல்லப்பன் வித்யா மந்திர் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பைச் சேர்ந்த ஏ.கனிஷ்கர், எஸ்.கே.கவுதம் பாலாஜி, 8-ம் வகுப்பை சேர்ந்த டி.நவீன் ராகவன், சி.சித்தார்த், எஸ்.கைலாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வான மாணவர்களையும் மற்றும் பள்ளியின் கிரிக்கெட் பயிற்சியாளர் ராகவனையும், பள்ளித் தாளாளர் சத்யன், பள்ளி நிர்வாக இயக்குனர் சங்கீதா சத்யன், பள்ளியின் கல்வி இயக்குனர் ராஜேஸ்வரி, பள்ளி முதல்வர் ராணிபோஜன் மற்றும் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

    • மைதானத்தில் மழை நின்றபின் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு 9 மணியளவில் டாஸ் போடப்பட்டது.
    • கோவை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட்போட்டி இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று அரங்கேறும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கோவை கிங்சும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

    டி.என்.பி.எல். வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி (3 முறை) என்ற பெருமைக்குரிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    அதே நேரத்தில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளதால் அந்த அணி பட்டத்தை வெல்ல தீவிர முனைப்பு காட்டும். மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

    இந்த நிலையில் வழக்கமாக 7.15 மணிக்கு தொடங்கும் டி.என்.பி.எல் போட்டி இன்று மழை காரணமாக டாஸ் போடுவதில் நீண்ட நேரம் தாமதம் ஆகியது. இறுதி போட்டியில் மழை குறுக்கிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருந்தனர். மழை நின்றபின் மீண்டும் போட்டி தொடங்கபட்டால் ஓவர்கள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    அதே போல் மைதானத்தில் மழை நின்றபின் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு 9 மணியளவில் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    லைகா கோவை கிங்ஸ் (விளையாடும் லெவன்): கங்கா ஸ்ரீதர் ராஜு, ஜே சுரேஷ் குமார் சாய் சுதர்சன், ஷிஜித் சந்திரன், ஷாருக் கான், யு முகிலேஷ், அபிஷேக் தன்வார், வள்ளியப்பன் யுதீஸ்வரன், மணீஷ் ரவி, எஸ் அஜித் ராம், பாலு சூர்யா, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (விளையாடும் லெவன்): கௌசிக் காந்தி , என் ஜெகதீசன், எஸ் ராதாகிருஷ்ணன், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், உத்திரசாமி சசிதேவ், ராஜகோபால் சதீஷ், எஸ் ஹரிஷ் குமார், சோனு யாதவ், மணிமாறன் சித்தார்த், ஆர் அலெக்சாண்டர், சந்தீப் வாரியர்.

    • 3 ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஷிகர் தவான் தலைமையிலான அணியில் ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா உள்ளனர்.

    ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான அணியில் ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா உள்ளனர்.

    மேலும், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களை தவிர, குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல், அவேஷ் கான், பிரஷித் கிருஷ்ணா, சிராஜ், தீபக் சாஹர் அணியில் உள்ளனர்.

    • கிரிக்கெட் போட்டியில் கோவிலூர் கெமிக்கல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சுழற்கோப்பையை தட்டிச் சென்றது.

    காரைக்குடி

    காரைக்குடியில் லத்தீப் மெமோரியல் 8-ம் ஆண்டு மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி மைதானங்களில் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நாக் அவுட் முறையில் போட்டிகள் நடந்தன. இறுதிப்போட்டியில் கோவிலூர் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் அணியும், காரைக்குடி மூன்லைட் அணியும் மோதியதில் கெமிக்கல்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சுழற்கோப்பையை தட்டிச் சென்றது.

    சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் தொடர்நாயகனாக கெமிக்கல்ஸ் அணியின் பார்த்தசாரதியும், பந்து வீச்சாளராக ராமச்சந்திரனும், ஆல்ரவுண்டராக நைட்ஸ் அணியின் சிவசங்கரும், சிறந்த பயிற்சியாளராக அழகப்பா கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அசோக்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகளை வென்றனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் காரைக்குடி நகர்மன்ற உறுப்பினர் ஹரிதாஸ், தொழிலதிபர் செந்தில்குமார், பள்ளத்தூர் சங்கர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் சங்கர், துணை தலைவர் பெஸ்ட் பாண்டியன், லத்தீப் மெமோரியல் அணி செயலாளர் சிவானந்தம், பழமலை, திருச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது
    • ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் போட்டிகள் துவங்க உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது.'நாக் அவுட்' முறையில் நடத்தப்படும் இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சுழற்கோப்பை, பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும். ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் போட்டிகள் துவங்க உள்ளது.

    இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் ஆர்வமுள்ள, திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அணிகள் தங்கள் அணியை சங்க அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 93442 07615 என்ற எண்ணில் தகவல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • நெல்லை அணியில் அபாரமாக ஆடிய சூரியபிரகாஷ் 62 ரன்களும், சஞ்சய் யாதவ் 87 ரன்களும் குவித்தனர்.
    • பரபரப்பான கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14 ரன்கள் எடுத்து சமன் செய்தது.

    நெல்லை:

    ஆறாவது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நெல்லை சங்கர் நகரில் நடைபெற்றது. இதில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும் மோதின.

    முதலில் ஆடிய நெல்லை அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய சூரியபிரகாஷ் 62 ரன்களும், சஞ்சய் யாதவ் 87 ரன்களும் குவித்தனர்.

    இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில், கேப்டன் கவுசிக் காந்தி, ஜெகதீசன் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஜெகதீசன் 25 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ராதாகிருஷ்ணன் ஒரு ரன்னிலும், சசிதேவ் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அவர்களைத் தொடர்ந்து கவுசிக்குடன் இணைந்த சோனு யாதவ் அதிரடியாக ஆடினார். அவர் 23 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 34 ரன்கள் சேர்த்த நிலையில், ஆட்டமிழந்தார். சதீஷ் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கேப்டன் கவுசிக் அரை சதம் கடந்தார். தொடர்ந்து ஆடிய அவர் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 43 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி 2 சிக்சருடன் இந்த இலக்கை எட்டினார்.

    பரபரப்பான கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஹரிஷ் ரன் எடுக்கவில்லை. 2வது பந்தில் பவுண்டரி, 3வது பந்தில் ரன் எடுக்கவில்லை. 4வது பந்தில் சிக்சர், கடைசி பந்தில் 4 ரன்கள் எடுக்க, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14 ரன்கள் எடுத்து சமன் செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

    முதலில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் செய்தது. அதிசயராஜ் வீசிய அந்த ஓவரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 9 ரன் சேர்த்தது. இதையடுத்து சூப்பர் ஓவரை எதிர்கொண்ட நெல்லை அணி, 10 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 

    ×