search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    சென்னை- சேலம் 8 வழிச்சாலை வந்தே தீரும் என்று நிதின் கட்காரி பேசியது, யார் லாபம் அடைவதற்கு என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். #KamalHassan #ChennaiSalem8wayroad

    நாகர்கோவில்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    கனிம வளம், மண் வளம் என மக்களை சுரண்டிவிட்டு காசை எங்கு கொண்டு செல்கிறார்கள். நாளை நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் கிடக்கும்போது பணம் பயன்படாது. அதனை கண்கூடாக பார்த்துவிட்டோம். நாளைய சமுதாயத்தை பற்றி எண்ணி பார்க்க வேண்டும்.

    ஒரு கலைஞனாக வாழ்ந்து விட்டேன். எஞ்சிய வாழ்வை தொண்டனாக உங்களோடு கழிக்க விரும்புகிறேன். மத்திய மந்திரி (நிதின்கட்காரி) பேசுகிறார் 8 வழிச்சாலை வந்தே தீரும், கோர்ட்டு உத்தரவிட்டாலும் வந்து விடும் என்கிறார். யாருக்காக இந்த சாலை, மக்களுக்காகத் தானே, மக்கள் வேண்டாம் என்று சொன்ன பிறகு யாரிடம் யாரை விலை பேசுகிறீர்கள். எங்களுக்கு அது தெரிய வேண்டும். ஒரு தனிப்பட்ட வியாபாரிக்கு வருமானம் வர வேண்டும் என்பதற்காக இவர்கள் இங்கு வரக்கூடாது.

    ஜாலியன் வாலாபாக் படுகொலை நடத்தியவர்கள், இங்கு ஆளவந்தவர்கள், தூத்துக்குடியில் நாம் நியமித்த அரசாங்கம் நம்மை நோக்கி சுட்டிருக்கிறது. இதற்கு காரணம் நாம் மெத்தனமாக இருந்தது, உரிமைகளை கேட்க மறந்தது.

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக நிகழ்ந்தது. ஜல்லிக்கட்டு போராட்டம். அப்படி போராட்டம் மீண்டும் வராமல் ஜனநாயக முறையில் வெல்ல வேண்டும். அவ்வாறு வெல்ல முடியாவிட்டால் மீண்டும் ஜல்லிக்கட்டு போல் ஒரு போராட்டம் வரும். நான் அந்த கூட்டத்தில் இருப்பேன். இங்கு டாஸ்மாக் மழையில் நனைந்து கொண்டு சிலர் நின்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு விடிந்தால் நான் பேசியது புரியும். டாஸ்மாக் வீரர்கள் மக்கள் நீதிமய்யத்தில் ஓரங்கட்டப்படுவார்கள்.

    எங்களுக்கு தொழிலுக்காக மக்கள் சாக வேண்டும் என்றால் அந்த தொழில் இங்கு தேவையில்லை. மேற்கு கடற்கரையில் கப்பல் கட்டும் பாதைகள் உள்ளதுபோல் கார் தொழிற்சாலைகள் வரலாம். வேலைகளை வழங்க முடியும். ஆலைகளை உருவாக்க முடியும்.


    ஐ.பி.எல். போட்டியை தடுக்க சென்றவர்களிடம் நான் கூறினேன். சற்று தள்ளி செல்லுங்கள், 234 பேர் கோட்டையில் விளையாடுகிறார்கள். அவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கூறினேன். அதில் இப்போதும் நான் உறுதியாக உள்ளேன். அந்த விளையாட்டை நிறுத்த ஆரம்பம் ஏப்ரல் 18-ந் தேதி.

    இது ஒரு புரட்சியின் அமைதியான ஆரம்பம் தான். இனி செல்லும் தூரம் நிறைய இருக்கிறது. எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் இவ்வளவு சிறப்பான இடத்தை வேறு எங்கும் ஒதுக்கவில்லை. மேடை போட்ட பின்பு அதனை அகற்ற கூறுவார்கள். ஊருக்குள் வரக்கூடாது என்று ஊருக்கு வெளியே பேச சொல்வார்கள். வந்தால் பேசக்கூடாது என்பார்கள். இத்தனையும் கடந்து மக்கள் நீதி மய்யம் மக்களை சென்றடைந்துள்ளது.

    திறமையானவர்கள் பலர் காவல்துறையில் இருக்கிறார்கள். ஆனால் சிலரை ஏவல் துறையாக மாற்றி இருக்கிறது இந்த அரசு. எனவே இந்த அரசாங்கம் அகற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நான் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு சரியாக செயல்படாவிட்டால் என்னை மாற்றி விடலாம் என்று வேட்பாளர் எழுதிக் கொடுத்த கடிதத்தை தொண்டர்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் காண்பித்தார். #KamalHassan #ChennaiSalem8wayroad

    ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் `கடாரம் கொண்டான்' படத்தின் பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில், படத்தின் இசை பற்றிய அறிவிப்பை ஜிப்ரான் வெளியிட்டுள்ளார். #KadaramKondan #ChiyaanVikram
    ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்'. படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இசையமைக்கும் பணிகளில் ஜிப்ரான் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

    இந்த நிலையில், படத்தின் பின்னணி இசைக்கான பணியை துவங்கிவிட்டதாகவும், பின்னணி வேலைகள் சிறப்பாக உருவாகி வருவதாகவும், படத்தின் முதல் பாடல் வருகிற மே 1-ந் தேதி வெளியாகும் என்றும் ஜிப்ரான் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற மே இறுதி அல்லது ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KadaramKondan #ChiyaanVikram 

    மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டே நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்களை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும் என்று நெல்லை, தூத்துக்குடியில் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். #ParliamentElection #KamalHaasan #MakkalNeedhiMaiam

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரசாரம் செய்தார். தூத்துக்குடி ஏ.வி.எம். கமல வேல் மகாலில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-

    தூத்துக்குடி என்றால் துப்பாக்கி சூடும், அரசின் அராஜகமும் தான் நினைவுக்கு வருகிறது. தூத்துக்குடியை பொறுத்தவரை ஆலை வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் மாசு ஏற்படுத்தும் தொழிற் சாலைகள் வேண்டாம். இங்கு மக்களுக்கு வந்த நோய்கள் அரசின் அஜாக்கிரதையால் வந்தது.

    மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று ஒரு கட்சி அனுமதி வழங்கியது. மற்றொரு கட்சி விரிவாக்கம் செய்ய மாசுகட்டுப்பாட்டு வாரியம் அனுமதி இல்லாமல் தொழிற்சாலையை இயங்க அனுமதித்தது. யார் பிரதமராக வந்தாலும் தமிழகத்தை நசுக்க முடியாது. 1,000 பேர் இறப்பதை தடுக்க 13 பேர் இறந்து உள்ளனர் என்று கூறுகிறார்கள். அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டே துப்பாக்கி சூட்டை நடத்தியது. என்னை போன்றவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்து இருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது.


    நம் நாட்டின் காவல் தெய்வங்கள் ராணுவத்தினரை ஓட்டுக்காக அடையாளம் காட்டுகிறார்கள். அவர்களின் ரத்தத்தை வைத்து பிரதமர் ஓட்டு கேட்கிறார். அரசியல் மாண்பை மீட்டெடுக்க வந்த கட்சி மக்கள் நீதி மய்யம். எனக்கு பல சவால்கள் உள்ளன. எனக்கு ஓய்வு என்பதில் நம்பிக்கை இல்லை. நான் உழைத்தால் பார்ப்பதற்கு நீங்கள் இருக்கிறீர்கள். எனது எஞ்சிய வாழ்க்கை மக்களாகிய உங்களுக்காகத்தான். என் வாழ்வை ஏற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுடையதாகட்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் திறந்த காரில் நின்றவாறு  கமல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தல் இந்திய நாட்டின் பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல் ஆகும். இதில் நெல்லை பாராளுமன்ற தொகுதியின் நிலை என்ன? டெல்லிக்கு சென்று கேள்வி கேட்டும் ஒரு பிரதிநிதியை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர் என்னோடு பிரசாரம் நடந்த இடத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் மக்கள் நீதிமய்யத்தை தத்தெடுத்து இருக்கிறார்கள்.

    நமது மக்களுக்கு தேசிய வியாதியாக மறதி உள்ளது. இன்று நடக்கும் பெரிய பிரச்சினைகளை நாளை மறந்து விடுகிறார்கள். அது அரசியல்வாதிகளுக்கு வசதியாக போய் விடுகிறது.

    தூத்துக்குடியில் கருணாநிதி மகளை விரட்டி அடித்து உள்ளனர். ஏனென்றால் ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டும் போது அந்த கட்சியினர் உடனிருந்து உள்ளனர். பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் அவர்கள் ஆட்டுகிறார்கள்.

    மற்றொரு கழகம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சத்தம் போட்டால் வாயிலே சுடுமாறு கூறிஉள்ளது. தேவைப்பட்டால் ராணுவத்தை அனுப்புவதாகவும் கூறிஇருக்கிறார்கள். இந்த நிலை நெல்லைக்கும் வந்து விடக்கூடாது.

    இந்த தேர்தலில் புரட்சிக்கு பெயர் பெற்ற பாளையங்கோட்டை மக்கள் மீண்டும் ஓர் அமைதி புரட்சியை ஏற்படுத்த வேண்டும். வருகிற 18-ந்தேதி டார்ச்லைட் சின்னத்தை வெற்றி பெறச்செய்யுங்கள். முதன் முறையாக ஓட்டு போடும் இளைஞர்கள் நல்ல திசையை நோக்கி தமிழகத்தை நகர்த்த ஓட்டு போடுங்கள். வருகிற 18-ந்தேதி மக்கள் நீதிமய்யத்தை வெற்றி பெறச்செய்ய புறப்படுங்கள். இதை செய்தால் நாளை நமதே, வெற்றியும் நமதே.

    இவ்வாறு அவர் பேசினார். #ParliamentElection #KamalHaasan #MakkalNeedhiMaiam

    எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் திருமாவளவனுக்கு மட்டும் தான் என்று கமல்ஹாசனுக்கு மாணவி அனிதாவின் அண்ணன் பதில் அளித்துள்ளார். #LokSabhaElections2019 #KamalHaasan
    சென்னை:

    கமல்ஹாசன் சமூக வலைதளங்கள் மூலமாக பிரசார வீடியோ வெளியிட்டு வருகிறார். நேற்று ஒரு வீடியோவை வெளியிட்ட அவர், ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகளை மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார்.

    அதில், ‘மொத்த அரசாங்கமும் சேர்ந்து நீட் தேர்வு என்ற பெயரில் ஒரு பெண்ணை கொலை செய்தார்களே அந்தப் பெண்ணோட அப்பா அம்மாகிட்ட கேளுங்க. அவங்க சொல்வாங்க யாருக்கு ஓட்டு போடணும்னு” என்று கூறியிருந்தார்.

    கமலின் இந்தக் கேள்விக்கு அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-

    அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அண்ணன் கமலின் உண்மையான ரசிகன் நான். நடிப்புக்காக மட்டுமல்ல, திரையிலும் நிஜத்திலும் மரபுகளை உடைக்க நினைக்கும் கலைஞர், மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன தனக்கு சரியென்று படுவதைச் செய்யும் துணிச்சல்காரர்.

    ரசிகர் மன்றங்களைக் கலைத்து நற்பணி மன்றங்களாக மடைமாற்றம் செய்தவர். அவரைப் பார்த்துதான் 18 முறை ரத்ததானம் செய்துள்ளேன். உடல்தானம் செய்துள்ளேன்.

    புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சிதான், அந்த வகையில் அண்ணன் கமலுக்கும் மக்கள் நீதி மய்யத்துக்கும் என் வாழ்த்துகள். அண்ணன் கமல் சொன்னது போல யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் நானும், எங்கள் குடும்பமும் தெளிவாகவே இருக்கிறோம்.



    அனிதா இறந்தபோது ‘திருமாவளவன் இதைச் சும்மா விடக்கூடாது’ என்றார். அதே திருமாவளவன்தான் எங்கள் தொகுதியின் வேட்பாளர். மத்திய அரசிடம் நீட் விலக்கு என்பதை நிர்பந்திக்கும் வல்லமை கொண்ட ஒரே கட்சி தி.மு.க மட்டுமே.

    தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது அது எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது, ஆதலால், எங்களின் வாக்கு தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் திருமாவளவனுக்கு மட்டும் தான்.”

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அனிதாவின் தந்தை சண்முகம் கூறும்போது, கமல்ஹாசனின் பேச்சுக்கு அனைத்து கட்சிகளும் அதிருப்தி தெரிவித்து உள்ளன. ஆனால் அவரது பேச்சு சரியானதுதான். ஆனாலும் எங்களது குடும்பம் தி.மு.க. கூட்டணிக்குதான் ஓட்டு போடுவோம் என்றார். #LokSabhaElections2019 #KamalHaasan
    மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சித் தலைவர்கள்கூட வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், திறமை பற்றிய விவரங்களைக் கூறாமல் தம்தம் பெருமைகளையே பேசுவதாக சேரன் வேதனை தெரிவித்துள்ளார். #Cheran
    பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாள்களே உள்ளதால் இறுதிக்கட்ட பிரசார வேலைகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.

    தமிழக அரசியல் கட்சிகளின் பிரசாரம் குறித்து இயக்குநர் சேரன் வேதனை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ‘‘எல்லாரும் பேசிக்கிட்டே இருக்காங்க. யாரும் தீர்வை நோக்கி நகரவே இல்லை. பிரச்சினைகளுக்கு எந்த வகையான தீர்வுகள் சாத்தியம் என மக்களிடம் தெளிவுபடுத்தவில்லை. ஆனால், வாக்குறுதிகள் மட்டுமே இருக்கிறது அனைவரிடமும். யாரை நம்பி மாற்றம் தேடுவது. சாதாரண வாக்காளனாய் எனக்குத் தோன்றியது.


    மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும், தனித்து நிற்கும் கட்சிகளான மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சித் தலைவர்கள்கூட அவர்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், திறமை பற்றிய விவரங்களைக் கூறாமல் தம்தம் பெருமைகளையே பேசுகிறார்கள். தொகுதியில் பங்களிக்கப்போவது வேட்பாளர்கள் தானே.”

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Cheran #KamalHaasan #Seeman #MakkalNeethiMaiam #NaamThamizharKatchi

    நான் பயந்திருந்தால் அரசியலுக்கு வந்திருக்கமாட்டேன். தமிழகம் தான் எங்கள் இலக்கு என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறினார். #LokSabhaElections2019 #KamalHaasan
    திருவண்ணாமலை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் திருவண்ணாமலை, ஆரணியில் அவரது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் 37 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அமைப்பை ஆரம்பிப்பதற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் 37 ஆண்டுகளாக நற்பணி மன்றங்கள் அமைத்து உதவிகள் செய்து வந்தோம்.

    இந்த தேர்தல் நமக்கு இல்லை என முடிவு செய்தேன். ஆனால் இந்த தேர்தலில் கண்டிப்பாக தமிழக மக்களின் நலனில் அக்கறையை கருத்தில் கொண்டு களத்தில் இறங்கி உள்ளோம்.

    இந்த தேர்தலில் நான் பயத்தில் போட்டியிடவில்லை என்கிறார்கள். நான் பயந்திருந்தால் அரசியலுக்கு வந்திருக்கமாட்டேன். தமிழகம் தான் எங்கள் இலக்கு. தமிழகத்தில் உள்ள 39 தொகுதியிலும் நானே நிற்பதாக நினைத்து கொள்ளுங்கள். எங்களது வேட்பாளர்கள் உங்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறார்கள்.

    அவர்கள் வெற்றி பெற்ற பின்னர் சரியாக செயல்படவில்லை என பொதுமக்கள் புகார் அளித்தால் அதன் மீது விசாரணை நடத்தி எங்களது எம்.பி.க்களின் ராஜினாமா கடிதம் உங்களை வந்தடையும்.

    இந்த ஊருக்கு பட்டு ஜவுளி பூங்கா அமைத்து தருவதாக உறுதி அளித்தார்கள், செய்தார்களா? திண்டிவனத்தில் இருந்து ஆரணி வழியாக ஆந்திர மாநிலம் நகரிக்கு செல்லும் ரெயில் பாதை திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர்.

    இதுவரை அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார்களா? இங்கு அரசு கலைக்கல்லூரி இல்லை. ஆனால் தனியாருக்கு கல்வியை தாரை வார்த்ததால் மூட்டை மூட்டையாக பணம் கொண்டு சென்றார்கள். பார்த்தீர்களா?

    சாராயத்தை கொண்டே ஆட்சியை நடத்துகிறார்கள். அந்த துறையையும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்காணிக்கிறார். ஒரு நாட்டிற்கு முக்கியமானவை கல்வி, மருத்துவம், சுகாதாரம். ஆனால் இவற்றை தனியாருக்கு கொடுத்துவிட்டனர்.

    கல்வியை உலகத்தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தரமான இலவச கல்வியை கொடுக்க முடியும். இடம் கொடுத்தால் நாங்கள் செய்து காட்டுவோம்.

    எங்களை நீங்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும். நாளைய தமிழகத்துக்கு நீங்கள் தான் மாற்றத்துக்கான முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும். காமராஜர் போன்ற நல்லவர்கள் ஆட்சியை பார்த்து வெகு காலமாகிவிட்டது. நாங்கள் அவர்களின் பாதையில் பயணிப்போம்.

    ‘மக்களை பார்த்து சுடு’ என காவல்துறையை ஏவலாக மாற்றியது இந்த அரசு. தூத்துக்குடி சம்பவம் மறக்கமுடியுமா? மறக்க முடியாது. மனதில் பதிந்துள்ளது.

    புயல் அடிக்கும்போது பிரதமர் எங்கு சென்றார். ஆனால் தற்போது 4-வது முறையாக வருகிறார். ‘கோ பேக்’ என்று கூறினாலும் அவர் ‘கம் பேக்’ என்று வந்து கொண்டிருக்கிறார். டெல்லியில் யார் வந்தாலும் தமிழகத்துக்கு பதில் கூறவேண்டும். மாற்றத்தை மக்கள் நீதி மய்யம் கொண்டு வரும். எங்களால் இந்தியாவில் ஒரு எடுத்துக்காட்டு மாநிலமாக தமிழகத்தை மாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #LokSabhaElections2019 #KamalHaasan

    பா.ஜனதா தேர்தல் அறிக்கையை ரஜினி ஆதரித்து பேசியது அது பா.ஜனதாவுக்கு மறைமுக ஆதரவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. #KamalHaasan #bjp #rajinikanth

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடப் போவதாக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி அறிவித்தார்.

    புதிய கட்சி ஆரம்பிக்கும் போது, அதில் 1 கோடி பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று ரஜினி விரும்பினார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை, “ரஜினி மக்கள் மன்றம்” என்று பெயர் மாற்றி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினார்.

    ஆனால் ரஜினி எதிர் பார்த்தது போல உறுப்பினர்கள் சேர்க்கை திருப்திகரமான அளவுக்கு அமைய வில்லை. இதனால் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது தாமதம் ஆனபடி உள்ளது.

    இதற்கிடையே ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பிறகு அவர் நடிப்பில் காலா, 2-0, பேட்ட ஆகிய 3 படங்கள் வெளியானது. அந்த மூன்று படங்களும் சுமாராக ஓடிய நிலையில் அடுத்து “தர்பார்” என்ற படத்தில் ரஜினி நடித்து வருகிறார். எனவே ரஜினியின் அரசியல் பிரவேசம் மேலும் தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.

    தமிழக சட்டசபை தேர்தலே தனது இலக்கு என்று கூறி வரும் ரஜினி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து இருக்கிறார். அதோடு பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி அறிவித்து இருக்கிறார்.

    இதற்கிடையே ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றிய கேள்வி எழுந்தபோது, பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி மறைமுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதை உறுதிப்படுத்துவது போல நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த ரஜினி, பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை வர வேற்று இருக்கிறார்.

    இது தொடர்பாக ரஜினி கூறுகையில், “நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறி வருகிறேன். நதிகளை இணைப்பது என்பது மிகப்பெரிய திட்டமாகும். எனவே இந்த திட்டத்துக்கு, “பகீரத யோஜனா” என பெயர் சூட்டும்படி ஒருமுறை வாஜ்பாயை சந்திக்கும்போது கூறினேன்.

    இப்போது பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைக்க புதிய ஆணையம் அமைப்போம் என்று கூறியுள்ளனர். இது வரவேற்கத்தக்கது. பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைத்தால் முதலில் நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். இதனால் வறுமை பாதியாக குறைந்து விடும்” என்றார்.

    ரஜினியின் இந்த கருத்து மூலம் அவர் பாரதீய ஜனதா கூட்டணிக்கு மறைமுக ஆதரவு தெரிவித்து இருப்பதாக கருத்தப்படுகிறது.

    ரஜினி நேற்று பேட்டி அளித்த போது, “கமல்ஹாசன் உங்களிடம் ஆதரவு கேட்டாரே... உங்கள் முடிவு என்ன?” என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ரஜினி, “எனது முடிவை நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். அதில் எந்தவித மாற்றமும் இல்லை” என்றார்.

    இதையடுத்து, “உங்கள் ஆதரவை கமல்ஹாசன் கட்சியினர் எதிர்பார்க்கிறார்களே...?” என்று நிருபர்கள் விடாமல் ரஜினியிடம் கருத்து கேட்டனர். அதற்கு ரஜினி, “இதுபற்றி பேசி வி‌ஷயத்தை பெரிதாக்கி எங்கள் நட்பைக் கெடுத்து விடாதீர்கள்” என்று கூறியபடி புறப்பட்டு சென்று விட்டார்.


    ரஜினியின் இந்த பதில் மூலம், அவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிக்கவில்லை என்பது மீண்டும் ஒரு முறை உறுதியாகி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் 19 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ள நடிகர் கமல்ஹாசன் தனக்கு ரஜினி ஆதரவு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தார். இதுபற்றி சமீபத்தில் கமல்ஹாசன் கூறுகையில், “ரஜினி எங்களை ஆதரிப்பதாக கூறினார். இதுபற்றி அவர் தான் அறிவிப்பு வெளியிட வேண்டும். நாங்கள் தொடர்ந்து அவரிடம் இது பற்றி கேட்க முடியாது” என்று கூறியிருந்தார்.

    ஆனால் ரஜினியோ நேற்று திட்டவட்டமாக கமல் ஹாசனின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். இது கமல்ஹாசனுக்கும், அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

    இந்த நிலையில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையை ரஜினி ஆதரித்து வரவேற்றதற்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், நடிகை குஷ்பு மற்றும் இடது சாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #KamalHaasan #bjp #rajinikanth

    தமிழகத்தில் பழைய அரசியல்வாதிகளை ஒழித்து தள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று வேலூரில் கமல்ஹாசன் பேசியுள்ளார். #kamalhaasan #makkalneedhimaiam #tnpolitical

    வேலூர்:

    வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சுரேசுக்கு ஆதரவாக வேலூர் மண்டித்தெருவில் நேற்று இரவு பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இதில், கமல்ஹாசன் பேசியதாவது:-

    தமிழகத்தில் எங்கு சென்றாலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு நான் மிகவும் நன்றி கடன்பட்டுள்ளேன். 4 வயது முதல் என்னை தோளிலும், மார்பிலும் சுமந்தது தமிழகம். மக்கள் நீதி மய்யத்தின் கூட்டம் நடைபெறும் இடங்களில் எல்லாம் கூட்டம் முடிந்த பின்னர் அப்பகுதியை தொண்டர்கள் சுத்தம் செய்வது வழக்கம். அதேபோன்று தமிழகத்தையும் சுத்தம் செய்வோம். நாங்கள் பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி வைத்திருக்கின்றோம். இளைஞர்கள், படித்தவர்கள் உங்களுக்காக உழைக்க தயாராகி விட்டார்கள்.

    பழைய அரசியல்வாதிகளை ஒழித்து தள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. பழையன கழிந்தே ஆகும், புதியன புகுந்தே ஆகும். அதேபோல் தமிழகத்தில் பழைய அரசியலும் ஒழியும். புதிய அரசியல் உருவாகும். காடுகளில் தீப்பிடித்தால் அதனை இயற்கை பார்த்து கொள்ளும் என்று சொல்லும் அரசியல்வாதிகள் நமக்கு தேவையில்லை. ஆபத்து நம்மை நோக்கி வருவதற்கு முன்பாக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    உலகில் தண்ணீர் இல்லாமல் தவிக்க போகும் நகரங்களில் பெங்களூரு 2-வது இடத்தை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. அதுபோன்ற நிலை வேலூருக்கோ, தமிழகத்துக்கோ வரக்கூடாது. குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்.

    எங்கள் வேட்பாளரை வெற்றிபெறச்செய்தால் விவசாயிகள், சிறுவியாபாரிகள், பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மனித கழிவுகளை மனிதனே அள்ளும் நிலையை ஒழித்து காட்டுவோம்.

    உங்களின் பணத்தை உங்களுக்கே இலவசம் என்ற பெயரில் தருவது இனிமேல் நடக்காது. 5 ஆண்டு வாழ்க்கையை பொதுமக்கள் 5 ஆயிரம் ரூபாய்க்காக விற்று விடாதீர்கள். மக்கள் நீதி மய்யம் அனைவருக்கும் கல்வியை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கும். ஏழைகளை வெகு நாட்கள் ஏமாற்ற முடியாது.

    ஒரேநாளில் எதுவும் நடக்காது தான். ஆனால் அதற்கான விதையை நாங்கள் விதைத்து விட்டோம். நாற்காலியின் நுனியில் உட்காராமல் உங்களுக்கான தேவைகளை கேட்டு வாங்கி வருவார்கள் எங்கள் வேட்பாளர்கள். நான் தேர்தலில் போட்டியிடாததால் பயந்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். நான் பயப்படுபவனாக இருந்திருந்தால் இங்கு வந்திருக்க மாட்டேன். என்னுடைய இலக்கு தமிழகம் தான். அரசியல் என் தொழில் அல்ல. நான் ஏற்றுக்கொண்ட பொறுப்பு. இனி என் எஞ்சிய காலம் தமிழக மக்களுக்காக தான்.

    சாராயத்தை உன்னதமான தொழிலாக எண்ணி அரசு அதனை நடத்தி வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காமராஜர் கண்ட கனவுபோல் நாங்களும் கனவு காண துணிவோம். நமது சொத்தையே நமக்கு இலவசம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் தருகிறார்கள். நோட்டாவிற்கு ஓட்டு போடாமல் நல்ல வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள். காவல்துறையை தங்கள் கடமையை செய்ய விட்டால் நிமிர்ந்து நிற்பார்கள். அரசியல்வாதிகள் காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மக்களின் ஏவல்துறையாகும்.

    இவ்வாறு அவர் பேசினார். #kamalhaasan #makkalneedhimaiam #tnpolitical

    நேர்மையற்ற அரசியல்வாதிகளை தட்டி கேட்பவர்களாக நீங்கள் மாற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam

    கோவை:

    மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் டாக்டர் மகேந்திரனை ஆதரித்து கமல்ஹாசன் உக்கடம், தேர் நிலை திடல் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    என்னை பார்த்து என்ன சொல்வது என்று தி.மு.க.க்கு புரியவில்லை. என்னை பா.ஜனதாவின் ‘பி’ அணி என்று கூறுகின்றனர். அப்படி என்றால் பக்கத்து மாநிலத்தில் பினராயி விஜயனும் ‘பி’ அணி தான். இந்த கூட்டம் மாற்றத்திற்காகவும், அன்பிற்காகவும் என இரண்டும் வேண்டும் என்று வந்த கூட்டம். நானும் அப்படித்தான். தொடர்ச்சியாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக கோவையும், பொள்ளாச்சியும் மாறி வருவது வருத்தத்தை அளிக்கிறது. அதற்கு காரணம் மெத்தனமான அரசு தான். இத்தகைய கொடூரம் நடந்து விட்டதற்கு மிகவும் வருந்துகிறேன் என்று முதல்-அமைச்சர் இதுவரை சொல்லவில்லை. வருத்தம் சொல்லவேண்டிய உணர்வு கூட இல்லாதவராகத் தான் அவர் உள்ளார்.

    சூறையாடி கற்பழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்ன தண்டனை? தண்டனையை முடிவு செய்யும் நாள் ஏப்ரல் 18. நாங்கள் செயல்படுத்தக்கூடிய திட்டங்களை அறிவித்து இருக்கிறோம். நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள், நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம்.

    நாங்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்று சொல்லிக் கொண்டு வந்தவர்களின் வீட்டில் எல்லாம் மூட்டை, மூட்டையாக பணம் சிக்கி இருப்பதை நாம் பார்க்கிறோம். அவர்கள் என்னை விட பெரிய நடிகர்கள். எனக்கும் நடிக்க தெரியும். அதனால் என்னிடம் பலிக்காது. இனி தமிழக மக்களிடமும் அது பலிக்காது. நேர்மையற்ற அரசியல்வாதிகளை தட்டிக்கேட்பவர்களாக நீங்கள் மாற வேண்டும். அதை மாற்ற வேண்டியது எங்கள் கடமை. அப்படி செய்யும்போது தமிழகம் முன்னேற்றத்தை நகரும் தேராக இருக்க வேண்டும். அது நகரும். அதை நகர்த்த வேண்டியது உங்கள் பொறுப்பு.

    புதிய தமிழ்நாட்டை உருவாக்கும் பொறுப்பில் நாம் இருக்கிறோம். நாம் வாழ்ந்த வாழ்க்கையை நம் சந்ததியினர் வாழாமல் இருக்க வேண்டும். காலத்தே பயிர் செய்ய வேண்டும். இது தான் அந்த காலம். அடுத்த முறை பார்த்து கொள்ளலாம் என்று தாமதப்படுத்தி விடாதீர்கள். அதற்கு வழிவிடாமல் நல்ல எதிர்காலத்துக்கு உங்கள் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்ற டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #KamalHaasan #MakkalNeedhiMaiam

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நாளை வேலூர், ஆம்பூரில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். #LoksabhaElections2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan
    வேலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 18-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நாளை மாலை 5 மணிக்கு ஆம்பூர் பைபாஸ் சாலையில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இதையடுத்து மாலை 6 மணிக்கு வேலூர் மண்டி தெருவில் பாராளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சுரேஷை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். #LoksabhaElections2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan

    தமிழக மக்கள் தங்கள் கோபத்தை ஓட்டாக காட்ட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan
    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் போட்டியிடுகிறார்.

    கோவை பாராளுமன்ற தொகுதி தேர்தல் அறிக்கையை கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று கோவையில் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். அதனால் தான் தொகுதிகளுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடுகிறோம். நான் கடந்த 60 வருடங்களில் நிறைய அன்பை பெற்று விட்டேன்.

    மக்களுக்கான திட்டங்கள் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. நாம் ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் திட்டங்களை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை நாம் இழந்து விட்டோம். சிஸ்டம் கெட்டுப் போய் விட்டது. அதை நாம் தான் கெடுத்தோம். களைய வேண்டியதை தூக்கி போட்டுவிட்டால் எல்லாம் சரியாகி விடும்.

    50 ஆண்டுகளில் திரைத்துறையில் கிடைத்திராத மன நிறைவு தற்போதைய சமீப கால அரசியல் பயணத்தில் கிடைத்துள்ளது. நான் செல்லும் இடங்களில் எல்லாம், சிறிய கிராமங்களில் மக்களின் கண்ணை பார்ப்பதில் இருந்து உத்வேகம் கிடைக்கிறது. டார்ச்லைட் கண் கூசும் அளவுக்கு பிரகாசமாக இருக்கும்.

    தமிழக மக்கள் மீது இருக்கும் இழுக்கை துடைப்போம். இந்த முறை பிரதமர் தேர்வு இழுபறியாக அமையும். அதன் காரணமாக மக்கள் நீதி மய்யம் இருக்கும். 3-வது அணிக்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

    இது மிக மிக வித்தியாசமான தேர்தல். புரட்சியின் விளிம்பில் தமிழகம் நின்று கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் தங்கள் கோபத்தை ஓட்டாக காட்ட வேண்டும். தமிழகத்தின் சூழல் தான் எங்களை இணைத்திருக்கிறது.

    மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும். 3-வது கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இருந்து மக்கள் நீதி மய்யம் சார்பில் நிறைய எம்.பி.க்கள் செல்வோம். 3-வது அணி வந்தே தீரும். நாடு முழுவதும் பெரும் தலைவர்கள் மக்கள் நீதி மய்யம் குறித்து யோசிக்கிறார்கள். அந்த மனப்பாங்கு வந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan
    நல்ல தலைவர்களை தேர்ந்தெடுப்பது இளைஞர்கள் பொறுப்பு என்று ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். #LokSabhaElections2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan
    ஈரோடு:

    பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று மாலை ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.

    காமராஜர், எம்ஜிஆர் போன்ற பெரிய தலைவர்கள் பெரிதாக படித்தவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் மக்களை படித்தவர்கள், அவர்களை பார்த்து, படித்து நான் இங்கு வந்திருக்கிறேன். இந்த தேர்தல் பிரதமர் யார் என்று முடிவு செய்வதற்கான தேர்தல் அல்ல.

    நம்முடைய எதிர்காலம் என்ன என்று நாம் முடிவு செய்யும் தேர்தல். நாட்டுக்கு நல்லது எது என முடிவு செய்யும் தேர்தல். யார் பிரதமர் என்பதை தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்கள் சேர்ந்து தான் முடிவு செய்ய வேண்டும். இப்போதே முடிவு செய்து சொல்வது என்பது அரசியல் மாண்பு இல்லை.

    ஓட்டுப்போடுவதை அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என இளைஞர்கள் விட்டுவிடக்கூடாது. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என 30 ஆண்டுகளை கடந்து விட்டீர்கள். நல்ல தலைமையை தேர்ந்தெடுப்பது உங்கள் பொறுப்பு.

    தமிழகம் புரட்சியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. அதற்கு வலுசேர்க்க மக்கள் நீதி மய்யத்தில் சேர திமுக, அதிமுகவில் இருந்து ஏராளமான இளைஞர்கள் வருவார்கள். எங்களை நோக்கி இளைஞர்கள் வரக்காரணம், நாங்கள் நேர்மையானவர்கள் என்பது தான்.

    பண மூட்டை பதுக்கிக் கொண்டிருக்கும் திருடர்கள் எப்படி பேச முடியும். இப்போது திருடர்களுக்கு தேள் வேறு கொட்டி விட்டது, இனி பேசவே மாட்டார்கள். ஈரோட்டில் இருந்த பெரியவர் கொடுத்த தைரியத்தில் தான் நான் இவ்வளவு தைரியமாக பேசுகிறேன். யாரையும், எந்த தலைவரையும் அவமதிப்பது என்னுடைய நோக்கமல்ல. ஆனால் திருடனை, திருடன் என்று சொல்லும் தைரியம் எனக்கு உள்ளது. இந்த தைரியம் தமிழ் மக்களுக்கு வந்தே ஆக வேண்டும்.

    ஊழல் செய்பவர்கள் எல்லோருமே திருடர்கள் தான். அவர்களை நீங்கள் வணங்கக் கூடாது. அவர்கள் உங்களை வணங்க வைக்க வேண்டும். நம்முடைய குடியரசுக்கு வணங்கியாக வேண்டும். மாண்புள்ள தலைவர்கள் பலர் இருந்த தமிழ்நாடு, திருடர்கள் நாடாக மாறிவிடக் கூடாது. இது திரு நாடு, திருடர்கள் நாடு அல்ல.

    ஆட்சியாளர்கள் திருடுவதை நிறுத்தினாலே, 2 தமிழ்நாடு நடத்த முடியும். இதை நீக்கியே ஆக வேண்டும். இவர்கள் இத்தனை நாள் மாண்புடன் வணங்கிக் கொண்டிருந்த 2 கழகங்கள் அன்றைய தமிழகத்தின் தேவையாக இருந்தது. அதனால் அப்போது அவர்கள் வந்தார்கள்.

    இன்றைய தேவை அவர்கள் அகற்றப்பட வேண்டும். காலம் உங்களுக்கு காட்டும் செய்தியாக மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். நாம் நல்ல ஒரு காலத்தை நோக்கி தமிழகத்தை நடத்துவதற்கு மக்கள் இந்த தேர்தலில் யோசித்து செயல்பட வேண்டும்.

    இளைஞர்கள் நோட்டாவுக்கு ஓட்டுப் போடாதீர்கள். நாடு நன்றாக இருக்க, உங்கள் மனசாட்சி சொல்லும் நல்லவருக்கு ஓட்டுப் போடுங்கள். அந்த நல்லவர் கண்டிப்பாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக இருப்பார். ஓட்டு போடப் போகும் போது உங்கள் மனதை மாற்ற பல வேலைகள் நடக்கும்.

    ஆனால் எதிர் காலத்தை மனதில் வைத்து கொண்டு ஓட்டுப் போடுங்கள். உங்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் நீதி மய்ய பிரதிநிதி தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் அவரது ராஜினாமா கடிதம் உங்களுக்கு வந்து சேரும்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #LokSabhaElections2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan

    ×