search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95169"

    கன்னியாகுமரியில் கடந்த 2010-ம் ஆண்டு சீனிவாச திருக்கல்யாணம் நடந்தது. இந்த நிகழ்ச்சிதான் கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உருவாவதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது.
    திருப்பதியில் நடக்கும் உற்சவங்களில் சீனிவாச கல்யாணம் உற்சவம் மிகவும் தனித்துவம் கொண்டது. இந்த உற்சவம் பக்தர்களுக்கு பலன்களை வாரி வழங்கும் முக்கியத்துவம் கொண்டது. இதனால்தான் சீனிவாச கல்யாண உற்சவத்தில் பங்கேற்க ஒவ்வொரு பக்தரும் ஆசைப்படுவார்கள். ஆனால் அந்த ஆசை அவ்வளவு எளிதில் நிறைவேறுவதில்லை.

    பக்தர்களின் பொருளாதார வசதி, பயண தூரம் மற்றும் பல காரணங்களால் பல லட்சம் பக்தர்கள் சீனிவாச கல்யாணத்தை நேரில் பார்க்க முடியாத நிலையில் உள்ளனர். அத்தகைய பக்தர்களின் மனக்குறையை தீர்க்கும் வகையில் திருப்பதி-திருமலை தேவஸ்தானம் அடிக்கடி வெளியூர்களில் சீனிவாசன் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி வருகிறது.

    அந்த வகையில் கன்னியாகுமரியில் கடந்த 2010-ம் ஆண்டு சீனிவாச திருக்கல்யாணம் நடந்தது. இந்த நிகழ்ச்சிதான் கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உருவாவதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது. இதுபற்றிய விவரங்களை சென்னை திருமலை-திருப்பதி தேவஸ்தான ஆலய சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் மோகன்ராவ் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது-:-

    கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரத்தில் கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச கல்யாணம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதை நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளும் இத்தகைய மக்கள் வெள்ளத்தை கண்டு ஆச்சரியப்பட்டனர். அந்த சமயத்தில்தான் திருப்பதி ஆலயம் ஒன்று நாட்டின் மற்ற நகரங்களிலும் கிளை ஆலயங்களை உருவாக்க திட்டமிடப்பட்டு இருந்தது. எனவே கன்னியாகுமரியில் ஒரு ஆலயத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

    இதை அறிந்ததும் விவேகானந்தா கேந்திரம் சார்பில் நிலம் தந்து உதவினார்கள். அங்கு கம்பீரமாக குமரிமுனை திருப்பதி ஆலயம் எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த கோவிலால் இறையருள் கிடைத்து உள்ளது.

    கலியுக வைகுண்டம்

    திருமலையில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் அனைத்து விதமான பூஜைகளும் இந்த ஆலயத்தில் நடைபெறும். ஏழுமலையானுக்கு எத்தனை அலங்காரம், நைவேத்தியம் செய்யப்படுகிறதோ அதேபோன்று இங்கும் நடைபெறும். இந்த திருக்கோவிலானது கன்னியாகுமரியின் கலியுக வைகுண்டமாக கருதப்படும்.  திருமலை தேவஸ்தானம் சார்பில் ஏற்கனவே சென்னை தி.நகரில் ஒரு ஆலயம் செயல்பட்டு வருகிறது.

    தற்போது கன்னியாகுமரியில் மற்றொரு ஆலயம் உருவாகி உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 2 இடங்களில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஆலயம் எழுந்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி இரு ஏழுமலையான் ஆலயங்கள் அமையவில்லை. எனவே குமரிமுனை திருப்பதி ஆலயம் ஒட்டுமொத்த தமிழகத்துக்குமே ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

    இந்த ஆலயம் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதி அதிகாலை 6.30 மணிஅளவில் பூஜை போடப்பட்டு தொடங்கப்பட்டது ஆகும். 6 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு தற்போது இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தென் தமிழக பக்தர்கள் அனைவரும் இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்று திருப்பதி வெங்கடாஜலபதியின் அருளை பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு மோகன்ராவ் கூறினார்.
    நெல்லை டவுனில் நேற்று இரவு பஞ்ச கருட சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தைத்திருவோணமும், தை அமாவாசையும் இணைந்து இந்த ஆண்டு வருவதால் பெருமாள் கோவில்களில் கருட சேவை நிகழ்ச்சி நேற்று வெகு சிறப்பாக நடந்தது. இதையொட்டி நெல்லையை அடுத்த பேட்டை தென்திருப்பதி எனப்படும் வெங்கடாசல பெருமாள், சங்காணி வெங்கடாசல பெருமாள், நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள், லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் மகிழ்வண்ணநாத பெருமாள் ஆகிய கோவில்களில் நேற்று காலை திருமஞ்சனம் நடந்தது.

    பின்னர் அந்த கோவில்களில் சிறப்பு வழிபாடு, அலங்கார தீபம் நடந்தது.மாலை 6 மணிக்கு கரியமாணிக்க பெருமாள் கோவில்களில் இருந்து அனைத்து சுவாமிகளும் எழுந்தருளினர். சந்தி விநாயகர் கோவில், லாலா சந்திர முக்கில் 5 கருட வாகனங்களில் உள்ள பெருமாள்களுக்கும் தீபாராதனை நடந்தது.

    பின்னர் அங்கிருந்து புறப்பாடாகிய சுவாமிகள் பெரிய தேரடி திடல் அருகில் வந்தடைந்தனர். அங்கு சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது. அங்கு இருந்து புறப்பாடாகி நெல்லையப்பர் தேரடி திடல் பகுதிக்கு சென்று பக்தர்களுக்கு சுவாமிகள் காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து இருந்தனர். 
    மாதம் தோறும் வரும் ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்கள் சகல சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.
    தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

    அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, 'முரன்' பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

    விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம். 
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தை மாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தை மாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து காலை தங்க சப்பரத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று இரவு 7 மணிக்கு சிம்ம வாகனத்தில் உற்சவர் வீரராகவர் வீதி உலா வருகிறார். வருகிற 2-ந் தேதி கருட சேவையும், 4-ம் தேதி தை அமாவாசையையொட்டி காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை உற்சவர் வீரராகவர் ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 6-ந் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    12 ஆழ்வார்கள் பாடிய 4 ஆயிரம் பாடல்களின் தொகுப்பே ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. எந்தெந்த ஆழ்வார்கள் எத்தனை பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.
    தமிழ் மொழியில் திருமாலின் புகழை வாயார பாடியவர்கள் 12 ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் பாடிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரம் ஆகும். இந்த 4 ஆயிரம் பாடல்களின் தொகுப்பே ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. எந்தெந்த ஆழ்வார்கள் எத்தனை பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.

    தொண்டரடிப் பொடியாழ்வார் - 55 பாசுரங்கள்

    திருப்பாணாழ்வார் - 10 பாசுரங்கள்

    திருமங்கையாழ்வார் - 1361 பாசுரங்கள்

    குலசேகராழ்வார் - 105 பாசுரங்கள்

    மதுரகவியாழ்வார் - 11 பாசுரங்கள்

    ஆண்டாள் - 173 பாசுரங்கள்

    பொய்கை ஆழ்வார் - 100 பாசுரங்கள்

    பூதத்தாழ்வார் - 100 பாசுரங்கள்

    பேயாழ்வார் - 100 பாசுரங்கள்

    திருமழிசையாழ்வார் - 216 பாசுரங்கள்

    பெரியாழ்வார் - 473 பாசுரங்கள்

    நம்மாழ்வார் - 1296 பாசுரங்கள்
    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் 31-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் போது சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவது பிரசித்தி பெற்றதாகும். இதேபோல ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவது வழக்கம். அதன்படி திருமொழி சேவித்தல் நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

    நாளை முதல் வருகிற 30-ந்தேதி வரை கோவிலில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தல் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி நடைபெற உள்ளது. இரவு 7.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை பொது ஜன சேவை நடைபெறும். வருகிற 30-ந்தேதி இரவு 8.30 மணி முத்துக்குறி, வியாக்யானம், அபிநயம், அரையர் தீர்த்தம், ஸ்ரீ சடகோபம் சாதித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    நாளை முதல் 30-ந்தேதி வரை தாயார் புறப்பாடு இல்லை. மேலும் மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூலஸ்தான சேவை கிடையாது. திருவாய் மொழி எனும் ராப்பத்து நிகழ்ச்சி வருகிற 31-ந்தேதி (வியாழக் கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. வழிநடை உபயங்கள் கண்டருளி, ஆழ்வார்-ஆச்சாரியார் மரியாதையாகி மாலை 6.30 மணி அளவில் ஆஸ்தான மண்டபம் சேர்ந்தடைகிறார்.

    மாலை 6.45 மணிக்கு திருவாய்மொழி கோஷ்டி, அலங்காரம் அமுது செய்தல் நடைபெறும். இரவு 7.30 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டியும், இரவு 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் தீர்த்த கோஷ்டியும் நடைபெற உள்ளது. இரவு 8 மணி முதல் இரவு 8.45 மணி வரை பொது ஜன சேவை நடைபெறும். இரவு 9 மணிக்கு அலங்காரம், கோஷ்டி வகையறா கண்டருளி திருவாய்மொழி மண்டபத்தில் இருந்து புறப்பாடு நடைபெறும். வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சென்றடைவார். வருகிற 2-ந்தேதி வரை மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    வருகிற 3-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். மாலை 6.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை ஹிரண்யவதம், அரையர் தீர்த்தம், சடகோபாம் சாதித்தல் நடைபெறும். வருகிற 4-ந்தேதி மாலை 5.30 மணிக்கு தாயார் தீர்த்தவாரி கண்டருளுகிறார். இன்று மாலை 6.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். இரவு 7.15 மணி முதல் இரவு 8.45 மணி வரை திருமஞ்சனம் நடைபெற உள்ளது. வருகிற 5-ந்தேதி மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இயற்பா தொடங்கும். இரவு 8 மணிக்கு தீர்த்த வினியோகம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 5 மணி முதல் மூலஸ்தான சேவை கிடையாது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 
    கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 2-வது நாளாக யாகசாலை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.22½ கோடி செலவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் வருகிற 27-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 16 யாக குண்டங்கள் மூலம் இந்த பூஜைகள் நடந்து வருகிறது. திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் பூஜைகள் நடத்தப்பட்டது.

    நேற்று 2-வது நாள் யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை பஞ்ச கவ்ய திவ்சமும், தொடர்ந்து பசுவும், கன்றும் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் அர்ச்சகர்கள் மூலஸ்தானத்துக்கு சென்று கருவறையில் தானியத்தில் வைக்கப்பட்டுள்ள வெங்கடாசலபதி சிலைக்கு பூஜைகள் நடத்தினர். பத்மாவதி தாயார், ஆண்டாள் அம்பாள், கருட பகவான் ஆகிய சிலைகளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டது. மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோமம், பூர்ணாகுதியும் நடந்தது.

    மேலும், காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி காப்பு அணிவித்தார். கன்னியாகுமரி திருப்பதி கோவில் உதவி செயல் அலுவலர் ரவி, விவேகானந்த கேந்திரா செயலாளர் அனுமந்தராவ், சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய உறுப்பினர்கள் மோகன்ராவ், ரவிபாபு, சீனிவாசலு, ராமராவ், சுரேஷ்குமார், சலபதி, குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, லெவிஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரி தலைவர் கிருஷ்ணபிள்ளை, திருப்பதி தேவஸ்தான துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் சவுடு உள்பட பலருக்கும் காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து ஹோமம் நடைபெற்றது.

    யாகசாலை பூஜையில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் திருவம்பலம் நிருபர்களிடம் கூறுகையில், கன்னியாகுமரி திருப்பதி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி வருகிற 27-ந் தேதி அதிகாலை 5 மணி முதல் மாலை வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்களும் இயக்கப்படும். நாகர்கோவில் வடசேரி, களியக்காவிளை, தக்கலை, வள்ளியூர் போன்ற இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றார்.

    கும்பாபிஷேக விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், நாகர்கோவில் உதவி கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் கோவிலை பார்வையிட்டனர். 
    திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அரங்கநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த தலம் 108 வைணவத் தலங்களில் முதன்மையானது.
    திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அரங்கநாதர் திருக்கோவில் உள்ளது. இத்தல மூலவர் பெரிய பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். உற்சவருக்கு அழகிய மணவாளன், ரங்கராஜர், நம்பெருமாள் போன்ற பெயர்கள் உள்ளன.

    108 வைணவத் தலங்களில் முதன்மையானது இது. 156 ஏக்கர் பரப்பரளவில் உள்ள இந்த ஆலயம் 11 ஆழ்வார்களால் பாடப்பெற்ற சிறப்பு மிக்க திருத்தலம் ஆகும். இத்தல மூலவரின் வலது கை திருமுடியை தாங்கிட, இடது கை திருப்பாதத்தை சுட்டிக்காட்ட, தெற்கு திசையான இலங்கையை நோக்கி வீற்றிருக்கிறார்.

    21 கோபுரங்கள் கொண்ட இந்த ஆலயத்தில் இருக்கும் கருட பகவான் மேற்கூரையை முட்டும் அளவுக்கு பெரிய உருவத்துடன் அருள்கிறார். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் 114 நாட்கள் உற்சவங்களும், விழாக்களும் கொண்டாடப்படுகிறது.
    கன்னியாகுமரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வெங்கடாசலபதி கோவிலில் வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. யாகசாலை பூஜை இன்று தொடங்குகிறது.
    கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா கடற்கரை வளாகத்தில் 5½ ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.22½ கோடி செலவில் பிரமாண்டமான முறையில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு திருப்பதி ஏழுமலையான் சன்னதி, பத்மாவதி தாயார், ஆண்டாள் அம்மாள், கருடாழ்வார் சன்னதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், சீனிவாச திருக்கல்யாண மண்டபம், தியான மண்டபம், அன்னதானக்கூடம் உள்பட பல்வேறு மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன.

    இந்த கோவிலை சுற்றி மாடவீதிகள், தோரண வாயில்கள், புல்வெளிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட வெங்கடாசலபதி கோவிலுக்கு வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் யாகசாலை பூஜை தொடங்குகிறது.

    இதற்காக கோவிலில் 16 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜையையொட்டி அங்குகுரார்ப்பணம், வேதாரம்பம் போன்றவை நடக்கிறது. நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை பஞ்சகவ்ய திவ்சமும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோமம், பூர்ணாகுதியும் நடைபெறுகிறது.

    24-ந் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை கேஸரா திவ்சமும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோமம், பூர்ணாகுதியும், 25-ந் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை ஜலாதி வாஸமும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோமம், பூர்ணாகுதியும் நடக்கிறது. 26-ந் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை கலசாஸ்னாப்னம், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மகாசாந்தி, திருமஞ்சனம் மற்றும் பூர்ணாகுதியும், தொடர்ந்து சாயனாதிவ்சமும் நடைபெறுகிறது.

    27-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தர்ம தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் வழங்கப்படுகிறது. மேலும் பிரசாதமாக திருப்பதி கோவில் லட்டும் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. மாலையில் சீனிவாச கல்யாணம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கோவிலில் நேற்று 40 அடி உயரத்தில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கொடிமர பிரதிஷ்டை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற்றது. இதையொட்டி கொடி மரத்திற்கு பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தனம், குங்குமம், புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. மேலும், கொடி மரத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டி, விசேஷ பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, கொடிமர பீடத்திற்கும் பூஜைகள் நடத்தப்பட்டு கொடிமர பிரதிஷ்டை நடந்தது.

    நிகழ்ச்சியில், சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் ஆலோசனை மற்றும் தகவல் மைய உதவி செயல் அலுவலர் ரவி, சிறப்பு அதிகாரி முனிரத்தினம், ஆலோசனை மைய உறுப்பினர்கள் மோகன்ராவ், சந்திர சேகர், விவேகானந்தா கேந்திரா துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவ், திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்தபதி முனுசாமி ரெட்டி, லெவிஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரி தாளாளர் கிருஷ்ண பிள்ளை, திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயற்பொறியாளர் சந்தரமவுலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    அதைத்தொடர்ந்து மாலை ஏழுமலையான் கோவிலில் கோதாதேவி பரிநய உற்சவம் நடந்தது. பெரிய ஜீயர் சுவாமிகள் மடத்தில் வைத்து மாலைகளுக்குச் சிறப்புப்பூஜைகள் போடப்பட்டது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பார்வேடு உற்சவமும், கோதாதேவி பரிநய உற்சவமும் நடந்தது. அதையொட்டி நேற்று மதியம் 1 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோர் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பார்வேடு மண்டபத்துக்கு மேள தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு, உற்சவர்களுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜை ஆகியவைகள் நடந்தது. அப்போது நைவேத்தியம் செய்த பொருட்களை பக்தர்களுக்கு அர்ச்சகர்கள் பிரசாதமாக வழங்கினார்கள்.

    பார்வேடு மண்டபத்தில் இருந்து உற்சவர்கள் புறப்படும்போது, அர்ச்சகர்கள் ஈட்டியை கையில் எடுத்துக் கொண்டு ஓடி விலங்குகளை வேட்டையாடுபோல் நடித்து ஈட்டியை வீசி எறிந்து, சிறிது தூரம் ஓடி வந்தனர்.

    அதைத்தொடர்ந்து மாலை ஏழுமலையான் கோவிலில் கோதாதேவி பரிநய உற்சவம் நடந்தது. அதையொட்டி காலை 9 மணியளவில் திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலைகளை திருமலையில் உள்ள பெரிய ஜீயர் சுவாமிகள் மடத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு வைத்து மாலைகளுக்குச் சிறப்புப்பூஜைகள் போடப்பட்டது.

    அந்த மாலைகளை கூடைகளில் வைத்து கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து, மூலவர் வெங்கடாசலபதிக்கு அர்ச்சகர்கள் அணிவித்தனர். அத்துடன் கோதாதேவி பரிநய உற்சவம் முடிந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
    இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெங்கடாசலபதி கோவிலை கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, வட இந்தியா மற்றும் தென் இந்தியாவில் கோவில்களை கட்டி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நாட்டின் தென்கோடி கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. கோவிலுடன் மடப்பள்ளி, கல்யாண மண்டபம், அர்ச்சகர்கள் தங்கும் குடியிருப்பு, சகஸ்ர தீப அலங்கார மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இந்த மாதம் நிறைவு பெற்று வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

    அதன்படி கும்பாபிஷேக விழா வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. 22-ந் தேதி நவதானியங்களை முளையிடுதல், மாலை 6 மணி முதல் 9 மணி வரை அங்குரார்ப்பணம், வேதாரம்பம் போன்றவை நடக்கிறது.

    23-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை யாகசாலை வாஸ்து, பஞ்சகவ்ய பிரசன்னம், மாலை 6 மணி முதல் 8 மணி வரை அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனை போன்றவையும், 24-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஹோமம், பூர்ணாகுதி, மாலை 6 மணி முதல் 8 மணி வரை ஹோமம் ஆகியவையும் நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஹோமம், ஜலாதிவாசம், திருமஞ்சனம் போன்றவை நடைபெறும்.

    27-ந் தேதி காலை 4 மணி முதல் 7 மணி வரை சுப்ரபாதம், கும்பஆராதனை, நிவேதனம் ஹோமம், காலை 7 மணி முதல் 7.30 மணி வரை கும்பம் உற்சவமூர்த்திகள் வீதி உலா, 7.30 மணி முதல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் ஆகியவை நடக்கிறது.

    மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நித்திய கைகர்யம், இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை சர்வ தரிசனம், இரவு 8.45 மணிக்கு ஏகாந்த சேவை போன்றவை நடைபெறும்.

    கும்பாபிஷேகத்தன்று பகல் 12.30 மணி முதல் பக்தர்கள் இலவச தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளதால் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    திருவக்கரை தலத்தில் உள்ள பெருமாள் சன்னதி மேற்கு திசையைப் பார்த்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    வைணவத் தலங்களில் பெருமாள் கிழக்கு முகமாக பார்த்தே பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதற்கு ஏற்ப பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டிருக்கும். ஆனால் திருக்கரை தலத்தில் உள்ள பெருமாள் சன்னதி மேற்கு திசையைப் பார்த்த நிலையில் கட்டப்பட்டுள்ளது.

    திருவக்கரை தலத்தில் எல்லா சன்னதிகளும் வக்கிரமாக மாறுபட்ட நிலையில் கட்டப்பட்டதற்கு ஏற்ப, பெருமாள் சன்னதியும் மாறுபாடாக உள்ளது. இத்தலத்து பெருமாள், வரதராஜபெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

    வக்கிராசூரனை சம்ஹாரம் செய்யும் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால், பெருமாள் வழக்கமாக பார்க்கும் கிழக்கு திசையை தவிர்த்து விட்டு மேற்கு முகமாக நிற்கிறார். அவர் ஏந்தியுள்ள சக்கராயுதம், வக்கிராசூரனை வதம் செய்தபோது, எப்படி பிரயோகப்படுத்தப்பட்டதோ, அதே தோற்றத்துடன் உள்ளது.

    அதாவது மற்ற வைணவத் தலங்களில் சக்கராயுதம் பெருமாளை நோக்கி இருக்கும். ஆனால் திருவக்கரை தலத்தில் மட்டும் பக்தர்களை நோக்கியபடி சக்கரம் இருக்கிறது. அசுரனை சக்கரத்தால் வதம் செய்து விட்டு வந்து அப்படியே அவர் காட்சி கொடுப்பதாக ஐதீகம்.

    தனி சன்னதியில் நின்ற கோலத்தில் அருளும் வரதராஜ பெருமாள் இங்கு தனியாக உள்ளார். அருகில் தாயார் இல்லை. இந்த சன்னதியின் ஒரு ஓரத்தில் ராமகிருஷ்ணன் சிலை உள்ளது. ராம அவதாரத்திலும், கிருஷ்ணர் அவதாரத்திலும் அந்த அவதாரங்கள் இங்கு காட்சி கொடுத்ததாக சொல்கிறார்.

    ராமகிருஷ்ணர் சிலையின் ஒரு கையில் வில் உள்ளது. மற்றொரு கையில் புல்லாங்குழல் இருக்கிறது. கிருஷ்ணருக்கு அருகில் ருக்மணியும் ராமருக்கு அருகில் சீதையும் உள்ளனர். ஆலயத்தின் எதிரில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் உள்ளனர்.

    மேற்கே பார்த்த வரதராஜபெருமாளை வழிபாடு செய்தால் தடைபட்ட திருமணம் உடனே கைகூடும் என்பது ஐதீகம். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் வரதராஜபெருமாளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    ×