search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95208"

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.25,344-க்கு விற்பனையாகிறது. #Gold
    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்து 28-ந்தேதி சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது.

    இன்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.25, 344-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.23 ஆக உயர்ந்து ரூ.3,168-க்கு விற்கப்படுகிறது.

    கடந்த 21-ந்தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.24,640 ஆக இருந்தது. கிராம் ரூ.3,080-க்கு விற்கப்பட்டது.

    அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து 28-ந்தேதி சவரன் ரூ.25,016-ஐ தொட்டது. நேற்று சவரனுக்கு ரூ.144 அதிகரித்தது. இன்று ரூ.184 அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருகிராம் வெள்ளி ரூ.43.90-க்கும் ஒருகிலோ ரூ.43,900-க்கும் விற்கப்படுகிறது. இது நேற்றையை விலையைவிட கிராமுக்கு ரூ.30-ம், கிலோவுக்கு ரூ.300-ம் அதிகம் ஆகும். #Gold
    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.25 ஆயிரத்து 160-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.40 பைசா உயர்ந்து ரூ.43.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. Gold #GoldPrice
    சென்னை :

    சில நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்த தங்கம் விலை, நேற்று முன்தினம் புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை இல்லாத அளவு ரூ.25 ஆயிரத்தை தங்கம் விலை கடந்தது.

    சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 127-க்கும், பவுன் ரூ.25 ஆயிரத்து 16-க்கும் விற்பனை ஆனது. இந்நிலையில் கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ரூ.3 ஆயிரத்து 145-க்கும், பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.25 ஆயிரத்து 160-க்கும் தங்கம் நேற்று விற்பனை ஆனது. இந்த மாதத்தின் அதிகபட்ச விலை ஏற்றமாக இது பதிவாகி இருக்கிறது.

    வெள்ளியின் விலையும் நேற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ.40 பைசா உயர்ந்து ரூ.43.60-க்கும், கிலோவுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.43 ஆயிரத்து 600-க்கும் வெள்ளி விற்பனை ஆனது.

    ‘‘தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. அதேவேளை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி கண்டு வருவதால் தங்கம் விலை ஏறுமுகத்தில் செல்கிறது. இன்னும் ஓரிரு நாட்கள் இந்த நிலையே இருக்கும்’’, என்று சென்னை தங்கம்-வைரம் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜலானி கூறினார்.
    தங்கம் விலை ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை கடந்து, புதிய வரலாறு படைத்து உள்ளது. ஓராண்டில் ரூ.1,640 அதிகரிப்பால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். #Gold #GoldPrice
    சென்னை :

    திருவிழாக்கள், பண்டிகை காலங்கள், திருமணம் போன்ற விசே‌ஷ நிகழ்ச்சிகளின் போது தங்க நகைகள் அணிவதை மக்கள் பெருமையாகவும், ஆடம்பரமாகவும் கருதுகிறார்கள். எனவே தங்கம் விலை அதிகரித்தாலும், அதன் மவுசு மட்டும் குறைவதே இல்லை.

    இந்திய மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆண்டு தோறும் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படுவதால், அதன் விலை ஏறுமுகத்தில் செல்கிறது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும் நேரங்களிலும் தங்கம் விலையில் ‘கிடுகிடு’ உயர்வு காணப்படுகிறது.

    இந்த நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக காணப்பட்டது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 121-க்கும், பவுன் ரூ.24 ஆயிரத்து 968-க்கும் விற்பனை ஆனது. நேற்று கிராமுக்கு மேலும் ரூ.6 அதிகரித்து ரூ.3 ஆயிரத்து 127 ஆனது. இதன்மூலம் பவுன் ரூ.25 ஆயிரத்து 16 ஆக உயர்ந்து புதிய சரித்திரம் படைத்தது. தங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை கடப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்.

    சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரி 28-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 922-க்கும், பவுன் ரூ.23 ஆயிரத்து 376-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி ஓராண்டில் பவுனுக்கு ரூ.1,640 விலை அதிகரித்துள்ளது. கடந்த 1930-ம் ஆண்டு ஒரு கிராம் தங்கம் 14 ரூபாய் 50 காசுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    தங்கம் விலை உயர்வுக்கான காரணம் குறித்து சென்னை தங்க, வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜலானி, நிருபரிடம் கூறியதாவது:-

    அமெரிக்காவில் பொருளாதாரம், வேலைவாய்ப்பு குறியீடு சரிந்துள்ளது. அமெரிக்காவில் மக்கள் எதிர்ப்பை மீறி அந்நாட்டு அதிபர் டிரம்ப், மெக்சிகோ எல்லையில் வேலி அமைப்பதால் பொருளாதாரத்தில் சரிவுநிலை ஏற்பட்டுள்ளது.



    எனவே உலக சந்தையில் பெரும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்து வருகிறார்கள்.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த காரணங்களால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ரூ.25 ஆயிரத்தை கடந்துள்ளது.

    தங்கம் விலை மேலும் உயரக்கூடும் என்பதால், மக்கள் மத்தியில் முன்கூட்டியே தங்கத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதனால் நகை விற்பனையில் பாதிப்பு ஏற்படவில்லை.

    விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தால் மட்டுமே, தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தங்கத்தை போன்று வெள்ளி விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. சென்னையில் கடந்த 24-ந் தேதி ஒரு கிராம் வெள்ளி 42 ரூபாய் 10 காசுக்கும், கிலோ ரூ.42 ஆயிரத்து 100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று ஒரு கிராம் வெள்ளி 43 ரூபாய் 20 காசுக்கும், கிலோ ரூ.43 ஆயிரத்து 200 ஆகவும் விலை உயர்ந்து விற்பனை ஆனது. #Gold #GoldPriceHike
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 மணி நேர தொடர் முயற்சியில் 1.9 கிராம் தங்கத்தில் பொங்கல் பானை, கரும்பு, மாடு ஆகியவற்றை தங்க நகை தொழிலாளி சி.எஸ்.தேவன் உருவாக்கியுள்ளார். #Pongal
    வேலூர்:

    ஆம்பூரை சேர்ந்த தங்க நகை தொழிலாளி சி.எஸ்.தேவன் (வயது 52). இவர், வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், உலக சாதனை புரிவதற்காக முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் மகாத்மா காந்தி, அப்துல்கலாம் ஆகியோரின் உருவங்களையும், கிறிஸ்துமஸ் குடில், மிகச்சிறிய அளவில் கிரிக்கெட் உலக கோப்பை, திருக்குறள் சுவடி ஆகியவற்றையும் தங்கத்தில் உருவாக்கி சாதனை படைத்து உள்ளார்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 மணி நேர தொடர் முயற்சியில் 1.9 கிராம் தங்கத்தில் பொங்கல் பானை, கரும்பு, மாடு ஆகியவற்றை உருவாக்கியுள்ளார். 4 செ.மீ உயரத்தில் கரும்பு, 1 செ.மீ உயரத்தில் மாடு ஆகியவற்றை தங்கத்தில் செய்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்துவிட்டு செல்கின்றனர். #Pongal
    நகை, நாணயம் என்று எப்படித் தங்கம் வாங்கினாலும் வாங்குவோர் மனதில் ஒரு சந்தோஷம் நிழலாடும். ஆனால் தங்கம் வாங்கும்போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இங்கு பார்ப்போம்...
    நகை, நாணயம் என்று எப்படித் தங்கம் வாங்கினாலும் வாங்குவோர் மனதில் ஒரு சந்தோஷம் நிழலாடும். ஆனால் தங்கம் வாங்கும்போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இங்கு பார்ப்போம்...

    தங்கத்தின் சுத்தம் கேரட் என்பதன் மூலம் அளவிடப்படுகிறது. பொதுவாக 24 கேரட் தங்கம் என்றால் சுத்தமான தங்கம் என்பதையும், நாம் வாங்கும் ஆபரணத் தங்கம் 91.6 சதவீதம் சுத்தமான தங்கம் என்பதையும் உணர வேண்டும்.

    அது மட்டும் இல்லாமல் 18 கேரட், 14 கேரட் தூய்மை அளவிலும் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் வெள்ளி, தாமிரம், துத்தநாகம் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு இருக்கும்.

    24 கேரட் தங்கத்தால் ஆபரணங்கள் செய்ய முடியாது. பொதுவாக நகைக் கடைகளில் 22 கேரட் தங்க நகை ஆபரணங்கள்தான் விற்பனை செய்யப்படும். ஆன்லைனில் 14 மற்றும் 18 கேரட் தங்கம் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் விலை கூடுதல் என்பதைப் போல, அடமானம் வைக்கும்போது அல்லது விற்கும்போது அதிகம் பணம் கிடைக்கும். 14 அல்லது 18 கேரட் என்றால் அவற்றின் தரத்திற்கு ஏற்றார் போல் விலை குறையும்.

    ஆபரணத் தங்கம் வாங்கும்போது செய்கூலியும் அதன் விலையில் அடங்கும். அது பொதுவாக நிலையாக இருக்கும். சில நகைக் கடைக்காரர்கள் சலுகை என்ற பெயரில் செய்கூலி சதவீதத்தை கூட்டவும் குறைக்கவும் செய்வார்கள். எனவே தங்கம் வாங்கும்போது செய்கூலி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

    தங்க நகை வாங்கும்போது அது கையால் செய்யப்பட்டது என்றால் செய்கூலி விலை அதிகமாக இருக்கும். அதுவே எந்திரத்தின் வடிவமைப்பு என்றால் செய்கூலி குறைவாக இருக்கும்.



    ஆபரணத் தங்கம் எடை அளவினால்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதிக எடையில் வாங்கும்போது அதிகச் செலவாகும். சில நேரங்களில் வைரம், எமரால்டு போன்றவையும் தங்கத்தில் அலங்காரம் செய்யப்பட்டு விலையை உயர்த்தும்.

    பழைய நகையை மாற்றிப் புதிய நகை வாங்கப் பல நகைக் கடைகள் அனுமதி அளிக்கின்றன. நகையின் வடிவம் மற்றும் டிரெண்ட் வேண்டுமானால் மாறலாம். ஆனால் அதன் மதிப்பு ஒன்றுதான் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

    நம் நாட்டில் லட்சக்கணக்கான நகைக் கடைகள் உள்ளன. பெயர் தெரியாத சிறு கடைகளில் நகை வாங்கும்போது அதில் கலப்படங்கள் அதிகமாகித் தங்கத்தின் அளவு குறைவாக இருக்க வாய்ப்புகள் உண்டு. எனவே நம்பிக்கை வாய்ந்த, உள்ளூரில், மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்ற கடைகளில் நகையை வாங்குவது நல்லது.

    இந்திய தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஹால்மார்க் உள்ள நகைகளை மட்டுமே வாங்க வேண்டும். இந்த பிஐஎஸ் ஹால்மார்க் திட்டம் சர்வதேச அளவில் செல்லும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

    இவற்றை எல்லாம் மனதில் கொண்டு தங்க நகை வாங்கினால், அதன் சந்தோஷம் என்றும் நம் மனதில் தங்கும். 
    துபாய், சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்த சென்னை பயணிகளிடம் ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து இன்று காலை ஒரு விமானம் சென்னை வந்தது. இதில் விமான நிலையம் வந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது, அப்துல்லா, ஆசாத் ஆகியோர் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தகுந்த ஆவணங்கள் இல்லாமல் நூர்ஜகான் என்ற பெண் கொண்டு வந்த தங்க நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இது போல் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் சென்னை வந்த ஸ்ரீராகவலு என்பவருடைய சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அவர் சூட்கேஸ் கைப்பிடியில் தங்கத்தை மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று இரவும், இன்று காலையும் சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்த தங்கம் 710 கிராம். இதன் மதிப்பு 24 லட்சம் ரூபாய்.

    நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தில் செல்வதற்காக பயணிகள் வந்தனர். அவர்களுடைய உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த ஷாஜகான் என்பவர் சூட்கேசில் உள்ள ரகசிய அறையில் இருந்து ரூ.19 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் வைத்து இருந்தது தெரிய வந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.3075-க்கு விற்பனையாகிறது. #Gold
    சென்னை:

    திருமண சீசன் மற்றும் பண்டிகை காலங்களில் தங்கத்தின் விலை திடீரென்று உயர்வது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் கடந்த 1 மாதமாகவே ஆபரண தங்கம் கிராம் ரூ.3000-க்கு மேல் விற்பனையாகி வருகிறது.

    இது படிப்படியாக உயர்ந்து இன்று ரூ.3075 என்ற புதிய உச்சத்தை எட்டியது. இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது.


    ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.24-ம் பவுனுக்கு ரூ.192-ம் உயர்ந்தது. 22 கேரட் தங்கம் விலை இன்று காலை கிராம் ரூ.3075-க்கும் விற்பனையானது. ஒரு பவுன் (8 கிராம்) விலை ரூ.24,600 ஆக உள்ளது.

    வெள்ளி விலை கிராம் ரூ.42.80 ஆகவும், 1 கிலோ ரூ.42,800 ஆகவும் இருந்தது. #Gold
    கொருக்குப்பேட்டையில், நகை வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போனது. #GoldRobbery
    பெரம்பூர்:

    சென்னை கொருக்குப்பேட்டை உள்ளாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). இவர், சென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரம் செய்து வருகிறார். மேலும் வீட்டின் அருகிலேயே சொந்தமாக நகைக்கடையும் வைத்து உள்ளார்.

    நேற்று இவருடைய மனைவி, வீட்டை பூட்டிவிட்டு உறவினர்களுடன் வெளியில் சென்றுவிட்டார். சந்தோஷ், கடைக்கு சென்றுவிட்டார். மாலையில் வீட்டுக்கு வந்த சந்தோஷ், கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதுபற்றி சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை போலீசார் மற்றும் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவளிபிரியா சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

    அதில், சந்தோஷ் வியாபாரத்துக்காக தனது வீட்டில் வைத்து இருந்த 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போனது தெரிந்தது. சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

    மேலும் இதுபற்றி கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என சந்தோஷ் வீடு மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

    அத்துடன் நகை வியாபாரி சந்தோசிடமும், அவரது வீட்டுக்கு யார் யார்? வந்து செல்வார்கள்?, உண்மையிலேயே நகை, வெள்ளி கொள்ளை போனதா? அல்லது நாடகம் ஆடுகிறாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். #GoldRobbery
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து, ஒரு சவரன் 24,040-க்கு விற்பனையாகிறது. #Gold
    சென்னை:

    கடந்த 16-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.24 ஆயிரத்து 80 ஆக இருந்தது. பின்னர் விலை சரிந்தது. நேற்று பவுன் ரூ.23 ஆயிரத்து 986-க்கு விற்கப்பட்டது.

    இன்று பவுனுக்கு அதிரடியாக ரூ.144 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 40 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.18 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3005-க்கு விற்கிறது.

    16-ந்தேதி ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்துக்கு 80-க்கு விற்றது. தற்போது 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் ரூ.40-க்கு விற்கிறது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,704-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சில நாட்களாக தங்கம் விலை பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. கடந்த 11-ந்தேதி ஒருபவுன் ரூ.24 ஆயிரத்து 192 ஆக இருந்தது.

    பின்னர் விலை படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் பவுன் ரூ.23 ஆயிரத்து 944-க்கு விற்றது. நேற்று பவுனுக்கு 56 குறைந்து ரூ.23 ஆயிரத்து 888 ஆக இருந்தது.

    இன்று அதிரடியாக மீண்டும் பவுனுக்கு ரூ.184 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 704 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.23 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,963-க்கு விற்கிறது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது திருமண சீசன் இல்லாததால் தங்கம் விலை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.39 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.39.80-க்கு விற்கிறது.
    ரோடியம் பிளேட்டிங் என்பது நகை வடிவமைப்பில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது நகைகளில் ரோடியம் டிப் செய்வது (அ) ரோடியம் பிளஷிங் செய்வது என்பதன் மூலம் நகையின் உறுதி தன்மை அதிகரிக்கிறது.
    ரோடியம் பிளேட்டிங் என்பது நகை வடிவமைப்பில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது நகைகளில் ரோடியம் டிப் செய்வது (அ) ரோடியம் பிளஷிங் செய்வது என்பதன் மூலம் நகையின் உறுதி தன்மை அதிகரிக்கிறது. தேய்மானம் ஏற்படாது என்பதுடன் ஒளிபாய்ச்சும் தன்மையும் நகைகளில் ஏற்பட உதவி புரிகிறது. ஏனெனில் ரோடியம் ஒளி வீசும் உலோகம் என்பதால் இந்த ரோடியம் பிளேட்டட் செய்யப்பட்ட நகைகள் கீறல் பாதுகாப்பு திறன் கொண்ட நகையாக உள்ளன.

    ரோடியம் பிளேட்டிங் என்பது வெள்ளி நிறமுடைய நகைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதாவது வெள்ளி நகைகள், வெள்ளை தங்கம், பிளாட்டினம் மற்றும் பல்லடியம் போன்றவைகளில் பயன்படுத்தப்படுகிறது. ரோடியம் பிளேட்டிங் என்பதின் தடிமன் 0.75 முதல் 1.0 மைக்ரோன் அளவுகளில் தான் இருக்கும்.

    ரோடியம் என்பது உறுதியானது

    ரோடியம் என்பது மிகக்குறைவான அளவில் கிடைக்கக்கூடிய மிக மதிப்பு மிக்க உலோகம். அதாவது தங்கத்தைவிட 10 முதல் 25 மடங்கு விலை மதிப்புமிக்கது. ரோடியம் என்பது பிளாட்டினம் வகை உலோகத்துடன் சார்ந்த வகையில் இணைக்கப்பட்டுள்ளது. வெள்ளி நிறத்தில், அதிகபட்ச ஒளிரும் தன்மையுடன் உள்ளது. ரோடியம் என்பது சுலபமாக ஒரு வடிவத்திற்கு கொண்டு வரமுடியாத உலோகம். அதனால் இதனை கொண்டு நகைகள் செய்வதில்லை. அதன் காரணமாகவே பிற நகைகள் மீது ரோடியம் பிளேட்டிங் செய்யப்பட்டு அதனை மேம்படுத்த உதவுகிறது.

    ரோடியம் பிளேட்டிங் மிக பாதுகாப்பானது


    ரோடியம் பிளேட்டிங் என்பது மிக பாதுகாப்பானது. இதன் மேம்பட்ட ஒவ்வாமை தன்மை என்பதன் மூலம் அணிபவரின் தோல் பகுதியில் ஏதும் பாதிப்பு ஏற்படுத்தாது. ரோடியம் என்பது நிக்கல் போன்று எந்த ஒவ்வாமையும் ஏற்படுத்தாத தன்மை கொண்டது. பிற நகைகளால் ஏதும் ஒவ்வாமை ஏற்பட்டு இருப்பினும் ரோடியம் பிளேட்டிங் செய்யப்பட்ட நகைகள் அணிந்தால் எந்த பிரச்சினையும் இருக்காது.

    ரோடியம் பிளேட்டிங் செய்யும் முறை

    ரோடியம் பிளேட்டிங் செய்யும் முறை என்பது எலக்ட்ரோ பிளேட்டிங் முறையில் செய்யப்படுகிறது. இதற்கு முன் ரோடியத்தில் உள்ள கசடுகளை நீக்கிட வேண்டும். டிஸ்லிட் வாட்டர், நீராவி முறை மற்றும் எலக்ட்ரோ கிளினிங் முறையில் ரோடியம் சுத்தம் செய்யப்படுகிறது. எலக்டிரிகல் சார்ஜ் மூலம் குறைவான வெப்ப அளவில் மட்டுமே பிளேட்டிங் செய்ய வேண்டும். அதிக படியான வெப்ப அளவில் பிளேட்டிங் செய்தால் ரோடியம் கருப்பு நிறமாக மாறிவிடும்.

    ரத்தின கற்கள் வைத்த நகையில் ரோடியம் பிளேட்டிங் செய்வது கூடாது. அதாவது முத்து, தோப்பிஸ், பவளம், ஓபல், மாணிக்க மரகத கற்கள் பதித்த நகைகளில் ரோடியம் பிளேட்டிங் செய்யும் போது அதிலுள்ள சல்பரிக் ஆசிட் என்பது கற்களை பாதிப்படைய செய்யும். எனவே ரத்தின கற்கள் பதியப்பட்ட நகைகளின் மீது ரோடியம் பிளேட்டிங் செய்வது கூடாது.

    தங்க நகைகளில் ரோடியம் பிளேட்டிங்

    தங்க நகைகளின் மீது ரோடியம் பிளேட்டிங் செய்வது நடைமுறையில் உள்ளது. அதாவது மஞ்சள் நிறமான தங்க நகையின் மீது வெள்ளை நிறத்தை ஏற்படுத்தும் வகையில் ரோடியம் பிளேட்டிங் செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்க நகை கூடுதல் அழகு மற்றும் இரட்டை வண்ண சாயல் கொண்ட வகையிலான நகை அமைப்பை தருகின்றது.

    ரோடியம் பிளேட்டிங் என்பது அதிக நாட்கள் நீடிக்கிறது. அதாவது குறைந்த பட்சம் சில வருடங்கள் மட்டுமே அதன் மேற்பூச்சு நிலைத்து இருக்கும். அதிகமான பயன்படுகின்ற நகைகளில் குறைந்த பட்சம் 6 மாதங்கள் மட்டுமே ரோடியம் பிளேட்டிங் நிலைத்து இருக்கும்.

    விலை அதிகமான ரோடியம் பிளேட்டிங்


    ரோடியம் பிளேட்டிங் என்பது மிக அதிகமான விலை மதிப்பில் நிகழ்த்தப்படுகிறது. அதாவது விலைமதிப்புமிக்க ரோடியத்தை கொண்டு இப்பணி செய்யப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது ரோடியம் பிளேட்டிங் செய்யப்படும் நகை அளவு, அதற்கென பயன்படுத்தப்பட்ட உலோக எடை போன்றவற்றை கணக்கிட்டே அதற்கு விலை நிர்ணயம் அமைகிறது. எனவே எந்த அளவு ரோடியம் பூச்சு செய்யப்பட்டது என்பதை அறிய அந்த நகையுடன் அதன் அளவு குறிப்பிட்ட அட்டை நகையோடு இணைந்தும் கிடைக்கின்றது. பளபளப்பான ரோடியம் பிளேட்டிங் சற்று விலை அதிகமானது என்றாலும் அது பூசப்பட்ட நகைகள் வரவும் அதிகரித்துள்ளது.
    திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் வெளிநாட்டு பணம் மற்றும் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #TrichyAirport #GoldSmuggling

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்றிரவு தனியார் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த முகமது உசேன் என்பவரின் கைப்பையை சோதனை செய்த போது அதில் இங்கிலாந்து, மலேசியா, அமெரிக்க நாட்டுப் பணம் இருந்தது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7லட்சத்து 10 ஆயிரம் வைத்திருந்தார். இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதே போல் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது தஞ்சையை சேர்ந்த சாந்தி என்பவர் விதிமுறைகளை மீறி ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 100 கிராம் தங்கத்தை அணிந்து வந்திருந்தார். அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் முகமது உசேன், சாந்தியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். #TrichyAirport #GoldSmuggling

    ×