search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏரிகள்"

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 564 ஏரிகள் உள்ளன. இதில் 517 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி இருக்கிறது. 45 ஏரிகள் 76 முதல் 99 சதவீதம் நிரம்பி உள்ளது.
    காஞ்சீபுரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஏரி-குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மொத்தம் 1,523 பாசன ஏரிகள் உள்ளன. இதில் 1,283 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளில் 341 ஏரிகள் நிரம்பி உள்ளது. இதில் 38 ஏரிகள் 76 முதல் 99 சதவீதம் வரையும் நிரம்பி இருக்கிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 564 ஏரிகள் உள்ளன. இதில் 517 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி இருக்கிறது. 45 ஏரிகள் 76 முதல் 99 சதவீதம் நிரம்பி உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 578 ஏரிகளில் 425 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. 60 ஏரிகள் 76 முதல் 99 சதவீதமும், 36 ஏரிகள் 51 முதல் 75 சதவீதமும், 46 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும் நிரம்பி காணப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் மொத்தம் 14 ஆயிரத்து 138 ஏரிகள் உள்ளன. இதில் 7,123 ஏரிகள் நிரம்பி இருக்கிறது. 3,185 ஏரிகள் 76 முதல் 99 சதவீதமும், 1,578 ஏரிகள் 51 முதல் 75 சதவீதமும், 1,538 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 549 ஏரிகள் 25 சதவீதம் வரையும் நிரம்பி உள்ளது.

    இந்த தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. #PuzhalLake
    திருவள்ளூர்:

    வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் மாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    சென்னையில் இன்று காலையும் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதியான ஆவடி, அம்பத்தூர், புழல், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை கொட்டியது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பழவேற்காடு, மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, புழல், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழைபெய்தது. ஊத்துக்கோட்டையில் நேற்று மாலையில் தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது.

    தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் எதிர்பார்த்த நீர் வரத்து இல்லை.இந்த 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி நீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி மொத்தம் 1,704 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

    கடந்த 3-ந் தேதி 4 ஏரிகளையும் சேர்த்து 1,681 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. கடந்த 2 நாட்களில் 23 மில்லியன் கனஅடி நீர் அதிகரித்து உள்ளது.  #PuzhalLake

    விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்று ரூ.325 லட்சம் மதிப்பீட்டில் செங்கிப்பட்டி பகுதிகளில் 16 ஏரியில் மேற்கொண்டுவரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தனர்.
    பூதலூர்:

    காவிரி டெல்டா மாவட்ட விவசாயத்திற்காக கல்லணையில் இருந்து 22-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டி பகுதி முழுவதும் ஏரிகளில் தண்ணீர் நிரப்பி அதன் மூலம் பாசனம் பெற்று ஒரு போக சாகுபடி நடைபெறும்.

    செங்கிப்பட்டி பகுதி ஏரிகளுக்கு புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக்குண்டான் நீடிப்பு கால்வாய்களின் வழியாக தண்ணீர் நிரப்பப்படும். இந்த இரண்டு கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெற்று 77 ஏரிகள் நிரப்புவதன் மூலம் 10ஆயிரம் ஏக்கரில் நெல்சாகுபடி நடைபெறும். கடந்த 7 ஆண்டுகளாக முறையாக தண்ணீர் கிடைக்காததால் இந்த பகுதியில் விவசாயம் நடைபெறவில்லை. இதனால் ஏரிகள் அனைத்தும் முட்புதர்கள் முளைத்து காணப்பட்டன.

    இந்த ஏரிகள் அனைத்தையும் தூர்வாரப்பட வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று திருச்சியை மையகமாக கொண்டு செயல்படும் பொதுப்பணித்துறை ஆற்று பாதுகாப்பு கோட்டத்தின் சார்பில் 16 ஏரிகள் ரூ.325 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி கரைகளை வலுப்படுத்தி மதகுகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பூதலூர் ஒன்றியத்தில் செய்யப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட உயர் அதிகாரி சுப்பையன் மற்றும் கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் பார்வையிட்டனர். ராயமுண்டான்பட்டியில் மருவத்தி ஏரி, நெப்பி ஏரி ஆகிய ஏரிகளை தூர் வாரி கரைகளை உயர்த்தி இருக்கும் பணிகளையும், உய்யகுண்டான் நீடிப்பு கால்வாயில் ரூ.5 லட்சம் மதிப்பில் 3 கிலோ மீட்டர் தூரம் சீரமைக்கும் பணிகள், புதிய கட்டளை மேட்டு கால்வாயில் ரூ.7 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள், மதகுகள் சீரமைப்பு, சிறிய அளவிலான குடிமராமத்து பணிகளை அதிகாரி சுப்பையன் ஆய்வு செய்தார். பணிகள் அனைத்தையும் விரைவில் தரமாக முடிக்க உத்தரவிட்டார். அதிகாரிகளுடன் திருச்சி ஆற்று பாசன கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன்இருந்தனர்.

    அப்போது ஏரிகளின் கரைகளை உயர்த்தும் பணிகளும், ஆழப்படுத்தும் பணிகளும் சரியாக நடைபெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
    ×