search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    ஜனநாயக உச்சி மாநாடு என்கிற பெயரில் அடுத்த மாதம் (டிசம்பர்) 9,10 ஆகிய தேதிகளில் காணொலி காட்சி வாயிலாக அமெரிக்கா இந்த மாநாட்டை நடத்துகிறது.
    வாஷிங்டன்:

    உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இருநாடுகளின் உறவு மோசமடைந்துள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் முதல் முறையாக காணொலி காட்சி வாயிலாக அண்மையில் சந்தித்து பேசினர். இதன் மூலம் இருநாடுகளின் உறவில் இணக்கமான சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இதே போல் அமெரிக்க அரசு துறைகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல், உக்ரைனை ஆக்கிரமிக்கும் முயற்சி போன்ற விவகாரங்களில் ரஷியா மற்றும் அமெரிக்கா இடையே உரசல் போக்கு நீடித்து வருகிறது.

    இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ரஷியா அதிபர் புதினும் விரைவில் நேரில் சந்தித்து பேச முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    அமெரிக்கா கொடி


    இந்த நிலையில் ஜனநாயகம் தொடர்பாக அமெரிக்கா தலைமையில் நடக்கும் சர்வதேச உச்சி மாநாட்டில் சீனா மற்றும் ரஷியாவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    ‘ஜனநாயக உச்சி மாநாடு’ என்கிற பெயரில் அடுத்த மாதம் (டிசம்பர்) 9,10 ஆகிய தேதிகளில் காணொலி காட்சி வாயிலாக அமெரிக்கா இந்த மாநாட்டை நடத்துகிறது.

    முதல் முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா, பாகிஸ்தான் உள்பட 110 நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

    அதன்படி ஜனாதிபதி ஜோ பைடனின் தலைமையில் நடக்கும் இந்த 2 நாள் மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பல்வேறு ஜனநாயக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றின் வாய்ப்புகள் குறித்து இந்த உச்சிமாநாடு கவனம் செலுத்தும்.

    மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளின் தலைவர்கள் தங்கள் நாட்டில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்த தனிப்பட்ட மற்றும் கூட்டு அர்ப்பணிப்புகள், சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை அறிவிக்க வாய்ப்புள்ளது.

    இதனிடையே ஜனநாயகம் தொடர்பாக நடக்கும் இந்த முதல் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனாவையும், ரஷியாவையும் அமெரிக்கா அழைக்கவில்லை. அந்த இரு நாடுகளிலும் ஜனநாயக அச்சுறுத்தல்கள் இருப்பதாக அமெரிக்க தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், அந்த நாடுகளை அமெரிக்கா புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது ஒரு புறம் இருக்க மாநாட்டில் பங்கேற்க சீனாவை அழைக்காத அமெரிக்கா, தைவானுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தீவு நாடான தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வரும் நிலையில், அமெரிக்கா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானை ஆதரித்து வருகிறது.

    இந்த சூழலில் ஜனநாயக மாநாட்டில் சீனாவை புறக்கணித்து விட்டு, தைவானை அமெரிக்கா அழைத்திருப்பது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சூடானில் மீண்டும் அப்துல்லா ஹம்டோ தலைமையிலான ஜனநாயக ஆட்சி நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
    ஹர்டோம்:

    சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. அங்கு 2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார்.

    ஆனால், அந்நாட்டில் கூட்டணி ஆட்சியை கவிழ்ந்து கடந்த மாதம் 25-ம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.

    அதேவேளை ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சூடானின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மீது ராணுவத்தினர் கண்மூடித்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் ஏற்கனவே 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையில், ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் ஹர்டோமின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன் தினம் பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு, கண்ணீர்புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் போராட்டக்காரர்கள் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதனால், சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

    சூடானில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது சூடான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சூடானில் மீண்டும் அப்துல்லா ஹம்டோ தலைமையிலான ஜனநாயக ஆட்சி நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.


    இந்த சோதனையானது, இதுவரை 1,500 க்கும் மேற்பட்ட கண்காணிக்கக்கூடிய சுற்றுப்பாதையில் பயணிக்கும் கழிவு பொருட்கள் மற்றும் லட்சக்கணக்கான சிறிய சுற்றுப்பாதை குப்பைகளை உருவாக்கியுள்ளது.
    வாஷிங்டன் :

    விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணையை ரஷியா நேற்று முன்தினம் சோதித்தது. இந்த ஏவுகணை சோதனையில், ரஷியாவுக்கு சொந்தமான செயற்கைக்கோள் ஒன்று வெடித்து சிதறியது. இது விண்வெளியில் குப்பைகளை உருவாக்கியதால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு விண்கலத்துக்குள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனிடையே ரஷியாவின் இந்த ஏவுகணை சோதனை ஆபத்தான மற்றும் பொறுப்பற்றது என கூறி அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் “இன்று, ரஷிய கூட்டமைப்பு பொறுப்பற்ற முறையில் அதன் சொந்த செயற்கைக்கோள்களில் ஒன்றுக்கு எதிராக, நேரடியாக தாக்கக்கூடிய செயற்கைக்கோள்களுக்கு எதிரான ஏவுகணை சோதனையை நடத்தியது. இந்த சோதனையானது, இதுவரை 1,500 க்கும் மேற்பட்ட கண்காணிக்கக்கூடிய சுற்றுப்பாதையில் பயணிக்கும் கழிவு பொருட்கள் மற்றும் லட்சக்கணக்கான சிறிய சுற்றுப்பாதை குப்பைகளை உருவாக்கியுள்ளது, அவை இப்போது அனைத்து நாடுகளின் நலன்களையும் அச்சுறுத்துகின்றன” என கூறினார்.
    20 மாதங்களுக்கு பிறகு தனது எல்லைகளை திறந்துள்ள அமெரிக்கா முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளை அனுமதிக்க தொடங்கியுள்ளது.
    வாஷிங்டன் :

    உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. கொரோனா வைரசின் முதல் அலையின்போது அந்த நாடு கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது.

    இதன் காரணமாக வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது தரை வழி எல்லைகளை மூடிய அமெரிக்கா வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா மற்றும் இதர பயணிகள் வருவதற்கும் தடை விதித்தது.

    அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் விதித்த இந்த தடையை அவருக்கு பின் கடந்த ஜனவரியில் பதவிக்கு வந்த ஜோ பைடன் மேலும் நீடித்தார்.

    இதனால் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த பயணத் தடை குடும்பங்களை பிரித்து, சுற்றுலாவை முடக்கியது.

    இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் பலனாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு கணிசமாக சரிந்தது. இதை தொடர்ந்து ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவிக்க தொடங்கியது. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள விமான நிறுவனங்கள் அனைத்தும் சர்வதேச பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை நீக்குமாறு ஜோ பைடன் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தன.

    நீண்ட ஆலோசனைக்கு பிறகு, முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சர்வதேச பயணிகள் நவம்பர் மாதம் 8-ந்தேதி முதல் அமெரிக்கா வரலாம் என ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்தது.

    மேலும் இது தொடர்பாக சர்வதேச பயணிகளுக்கான புதிய பயண கொள்கையையும் ஜோ பைடன் நிர்வாகம் அண்மையில் வெளியிட்டது.

    அதன்படி அமெரிக்கா வரும் சர்வதேச பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனா ‘நெகடிவ்’ சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் 20 மாதங்களுக்கு பிறகு அமெரிக்கா நேற்று தனது எல்லைகளை திறந்து சர்வதேச பயணிகளை நாட்டில் நுழைய அனுமதித்தது. முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிக அளவில் படையெடுப்பார்கள் என விமான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

    குறிப்பாக ஐரோப்பா மற்றும் பிற நாடுகளில் இருந்து அதிகமான பயணிகளை விமான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. மேலும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையிலான விமான போக்குவரத்து கடந்த மாதத்தை விட இந்த மாதம் 21 சதவீதம் அதிகரிக்கும் என புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஹூஸ்டன் இசைவிழாவில் ஏற்பட்ட நெரிசல் தொடர்பாக ஹாரிஸ் கவுண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் கடந்த 5ம் தேதி இரவு பிரபல ராப் பாடகர் டிராவிஸ் காட்டின் அஸ்ட்ரோவேல்ட் இசை விழா நடைபெற்றது. இசை நிகழ்ச்சியின்போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். டிராவிஸ் ஸ்காட் பாடும்போது, மேடை நோக்கி வந்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் நெரிசல் ஏற்பட்டது. இதனால், ரசிகர்களிடையே பீதி ஏற்பட, முண்டியடித்து வெளியேற முற்பட்டனர். இதனால் நெரிசல் மேலும் அதிகரித்து பலர் கீழே விழுந்து காயமடைந்தனர்.
     
    இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நெரிசலில்  சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விபத்து தொடர்பாக ராப் பாடகர்கள் டிராவிஸ் ஸ்காட், டிரேக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெரிசலில் சிக்கி பலத்த காயமடைந்த கிறிஸ்டியன் பாரடேஸ் என்ற வாலிபர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹூஸ்டன் ஹாரிஸ் கவுண்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

    இதேபோல் டிராவிஸ் ஸ்காட் மற்றும் அஸ்ட்ரோவேல்டு நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்திருப்பதாக மூத்த வழக்கறிஞர் பென் கிரம்ப் தெரிவித்துள்ளார்.
    இசை விழா நடைபெறும் மேடையை நோக்கி பலர் முன்னேறி வந்ததால் நெரிசல் ஏற்பட்டு பலர் தரையில் விழுந்தனர்.
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் நேற்று இரவு அஸ்ட்ரோவேல்ட் இசை விழா நடைபெற்றது. இசை நிகழ்ச்சியின்போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். தொடர்ந்து ரசிகர்கள் வந்தவண்ணம் இருந்தனர். இதனால் மேடையின் முன்பகுதியில் நேரம் செல்லச் செல்ல நெரிசல் அதிகரித்தது. 

    ஒரு கட்டத்தில் கூட்டத்தில் இருந்த சிலர், நெரிசலை சமாளிக்க முடியாமல் தரையில் விழுந்தனர். அவர்களால் எழுந்திருக்க முடியவில்லை. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். இந்த தகவல் பரவி ரசிகர்களிடையே பீதி ஏற்பட, முண்டியடித்து வெளியேற முற்பட்டனர். இதனால் நெரிசல் மேலும் அதிகரித்து பலர் கீழே விழுந்து காயமடைந்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    2 தடுப்பூசிகள் போட்டுக்கொண்டிருந்தால் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் 8-ந் தேதி முதல் (நாளை மறுதினம்) அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவார்கள்.
    வாஷிங்டன் :

    உலகளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல பயண கட்டுப்பாடுகளை வெளிநாட்டினருக்கு அமெரிக்கா விதித்திருந்தது.

    தற்போது ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து பிற நாடுகளில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தள்ளது.

    இந்த நிலையில் கொரோனா கால கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:-

    * 2 தடுப்பூசிகள் போட்டுக்கொண்டிருந்தால் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் 8-ந் தேதி முதல் (நாளை மறுதினம்) அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக கொரோனா இல்லை என காட்டுகிற ‘நெகட்டிவ் ’ சான்றிதழை காட்ட வேண்டும். பயணத்துக்கு 3 நாட்கள் முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து இந்த சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

    * தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகள், அவர்கள் அமெரிக்க குடிமக்களாகவோ, நிரந்தர குடியுரிமை பெற்றவர்களாகவோ இருந்தால், ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத வெளிநாட்டினர் சிறிய குழுவினராக இருந்தால், அவர்கள் புறப்பட்ட ஒரு நாளுக்குள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    * தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சிறுவர், சிறுமியர் தாங்கள் பயணம் செய்கிற பெரியவர்களுடன் அதே நேரத்தில் சோதனை செய்து கொள்ள வேண்டும். ( அதாவது 2 தடுப்பூசிகளும் போட்டுக்கொண்ட பெரியவர்களுடன் பயணத்துக்கு 3 நாட்கள் முன்னதாகவும், தடுப்பூசி போடாத பெரியவர்களுடன் செல்கிறபோது ஒரு நாளுக்குள்ளும்).

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தைவான் விஷயத்தில் சீனாவின் நோக்கங்கள் குறித்து தாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    வாஷிங்டன்:

    சீனாவின் ராணுவ பலம் மற்றும் அந்த நாட்டின் பாதுகாப்பு முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டசன ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆய்வறிக்கையை பென்டகன் நேற்று வெளியிட்டது.

    அதில்,  ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்க அதிகாரிகள் கணித்ததை விட சீனா தனது அணுசக்தியை மிக வேகமாக அதிகரித்து வருகிறது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    ‘எதிர்பார்த்ததைவிட சீனா அதிவேகமாக அணு ஆயுதங்களைப் பெருக்கி வருகிறது. சீனா கடந்த ஆண்டு 200 அணு ஆயுதங்களை வைத்திருந்ததாக மதிப்பிடப்பட்டது. ஆனால் தொடர்ந்து அணு ஆயுதங்களை பெருக்கி வருவதால்,  அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 6 ஆண்டுகளுக்குள் 700 ஆக அதிகரிக்கலாம். 2030க்குள் 1,000 ஆக உயரலாம்’ என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

    தைவான் விஷயத்தில் சீனாவின் நோக்கங்கள் குறித்து தாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தைவானை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சீனாவின் நோக்கங்கள் பற்றிய புதிய எச்சரிக்கைகள் மற்றும் அணுசக்தி திறன் கொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணைகள் சோதனை என தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அமெரிக்கா இந்த புதிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ‘புளோரிஸ் யுனைடெட் மெதடிஸ்ட்' தேவாலயத்தில் தமிழ் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் பாரம்பரிய முறைப்படி சேலை, பாவாடை-தாவணி அணிந்தவாறும், ஆண்கள் வேட்டி-சட்டையிலும் பங்கேற்றனர்.
    வாஷிங்டன் :

    அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள ஹென்டன் என்ற இடத்தில் தமிழர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

    ஹென்டன் நகரில் பிரசித்தி பெற்ற ‘புளோரிஸ் யுனைடெட் மெதடிஸ்ட்' தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் வழக்கம்போல பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தது. அப்போது, தமிழ் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் பாரம்பரிய முறைப்படி சேலை, பாவாடை-தாவணி அணிந்தவாறும், ஆண்கள் வேட்டி-சட்டையிலும் பங்கேற்றனர்.

    இதையடுத்து அவர்கள், தேவாலயத்தில் உள்ள பீடத்தில் நின்று தமிழ் பாடலை தங்களுக்கே உரித்தான பாணியில் ஒருமித்த குரலில் பாடினர். இதனை தேவாலயத்தில் பிரார்த்தனையில் பங்கேற்ற அமெரிக்கர்கள் மற்றும் பிற நாடுகளை சேர்ந்தவர்களும் ரசித்து பாராட்டினர்.
    ஆப்கானிஸ்தானில் ராணுவ அகாடமியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.
    காபூல் நகரில் உள்ள ராணுவ அகாடமியில் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு பயங்கரவாதி ஒருவன் தாக்குதலை நடத்த முயற்சி செய்துள்ளான். அப்போது அவனை பாதுகாப்பு படையினர் அடையாளம் கண்டு தடுக்க முயற்சி செய்த போது அவன் வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான். 

    இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர் என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான பேச்சுவார்த்தையை அமெரிக்கா மேற்கொண்டாலும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல் தொடர்கிறது.
    போர் கப்பல்களை தாக்கியதாக அமெரிக்கா கூறும் அனைத்து தகவல்களும் பொய் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.



    ஐக்கிய அரபு எமிரேட்களின் கிழக்குப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு கப்பல்கள் மீது சில தினங்களுக்கு முன் அதிரடி தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. தாக்குதல் சம்பவத்திற்கு ஈரான் தான் காரணம் என்ற வாக்கில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் குற்றஞ்சாட்டினர்.

    இவரது அறிவிப்பைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட் தாக்குதல்களுக்கு ஈரான் தான் முழு காரணம் என்ற வாக்கில் அமெரிக்கா முழுக்க செய்திகள் பரவின. 



    போல்டன் குற்றச்சாட்டு தெரிவித்ததோடு தாக்குதல் தொடர்பாக எவ்வித ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.  

    இந்நிலையில், அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மையில்லை என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா இதுபோன்ற நகைச்சுவை மிக்க வதந்திகளை பரப்புவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என ஈரான் வெளியுறவு மந்திரி அபாஸ் மௌசாவி தெரிவித்தார். 

    ஈரானின் அமைதி, கவனமான செயல்பாடுகள் பதற்றத்தை தூண்ட முற்படும் போல்டனின் திட்டத்தை பலிக்க விடாது என அவர் மேலும் தெரிவித்தார்.
    அமெரிக்காவில் இந்தியர் உள்பட 5 முன்னாள் பாதிரியார்களுக்கு எதிராக செக்ஸ் புகார் கூறப்பட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் டெட்ராய்ட், லான்சிங், கலமாசோ மறைமாவட்ட பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்களாக 5 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.

    அவரது பெயர் ஜேக்கப் வெல்லியன் (84). இவர்கள் அனைவரும் பணி ஓய்வு பெற்று விட்டனர். இந்த நிலையில் இவர்கள் மீது ‘செக்ஸ்’ புகார் கூறப்பட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த 4 பாதிரியார்கள் அரிசேனா, கலிபோர்னியா, பிளோரிடா, மிச்சிகன் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

    பாதிரியார் வெல்லியன் தற்போது கேரள மாநில கோட்டயத்தில் உள்ள தெல்லாகோம் என்ற இடத்தில் தங்கியுள்ளார். விசாரணைக்காக இவரை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடைபெறுகிறது.

    பாதிரியார் வெல்லியன் அமெரிக்காவின் மிச்சிகன் மறைமாவட்டத்தில் கடந்த 1970-ம் ஆண்டுகளில் பணி புரிந்தார். நல்லொழுக்கம் மற்றும் இறைபக்தி மிக்கவர் என தேவாலய வட்டாரத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

    ×