search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95766"

    • இந்தூர் மைதான ஆடுகளம் மோசம் என்று ஐ.சி.சி. நடுவர் கிறிஸ் பிராட் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
    • இந்தூர் ஆடுகளம் மோசம் என்ற தீர்ப்பை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் அப்பீல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்தூரில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் போட்டி 3 நாட்களிலேயே முடிவடைந்தது. இந்தூர் மைதான ஆடுகளம் மோசம் என்று ஐ.சி.சி. நடுவர் கிறிஸ் பிராட் தனது அறிக்கையில் குறிப்பிட்டார். அந்த ஆடுகளத்துக்கு 3 அபராத புள்ளிகளை வழங்கினார்.

    இந்த நிலையில் இந்தூர் ஆடுகளம் மோசம் என்ற தீர்ப்பை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் அப்பீல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும் போது, `நாங்கள் நிலைமையை ஆய்வு செய்து முடிவெடுப் போம்' என்றார். ஐ.சி.சி. விதிகளின்படி மேல்முறையீடு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது. ஒரு மைதானம் 5 அல்லது அதற்கு மேற்பட்ட அபராத புள்ளிகளை பெற்றால் அங்கு 12 மாதங்களுக்கு சர்வதேச போட்டிகளை நடத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஆஸ்திரேலிய அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 17-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
    • இதற்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    மும்பை:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளும் வரும் மார்ச் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

    இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது ஆஸ்திரேலிய அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 17-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ரோகித் சர்மாவுக்கு முதல் போட்டியில் மட்டும் ஓய்வு தரப்பட்டுள்ளதால், அதில் மட்டும் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார்.

    எனவே ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு தேர்வான வீரர்கள் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஆஜராக சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அங்கு வீரர்களுக்கு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறும் வீரர்கள் மட்டுமே இந்திய அணி முகாமில் இணைவார்கள்.

    ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முன்கூட்டியே என்.சி.ஏவுக்கு வரவழைத்துள்ளனர். யுவேந்திர சாஹல் மற்றும் உமான் மாலிக் ஆகியோர் ஏற்கனவே பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள்தான் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

    • உண்மையான போர்வீரர்கள் என்பதை இந்திய மகளிர் அணியினர் காட்டினர்.
    • அரையிறுதி போட்டியில் இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.

    கேப்டவுன்:

    பெண்கள் உலகக் கோப்பை 8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் கேப்டவுனில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் மல்லுக்கட்டின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 4விக்கெட் இழப்பிற்கு172 ரன்கள் குவித்தது.

    173 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 167 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 5 ரன் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

    5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா தொடர்ந்து 7-வது முறையாக இறுதி சுற்றை எட்டியிருக்கிறது. வெற்றியின் விளிம்புக்கு வந்து சறுக்கிய இந்திய அணி இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. அந்த சோகம் இந்த முறையும் நீடிக்கிறது.

    இந்நிலையில் உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணிக்கு ஆறுதல் கூறும் விதமாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்:-

    ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு கடுமையான தோல்வி. ஆனால் களத்தில் எங்கள் பெண்களின் உற்சாகத்திற்காக நாங்கள் பெருமைப்பட முடியாது. குழுவினர் தங்களால் முடிந்த அனைத்தையும் அளித்து. அவர்கள் உண்மையான போர்வீரர்கள் என்பதைக் காட்டினர். நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். நீல நிற பெண்களே.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • ரூ.350 கோடிக்கு அடிடாஸ் நிறுவனம், பிசிசிஐ உடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.
    • இந்த ஒப்பந்தம் வரும் 2028 ஆம் ஆண்டு வரையில் இருக்கும்.

    இந்தியாவின் ஜெர்சியில் ஆரம்பம் முதல் சஹாரா என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பிறகு இந்திய அணியின் ஜெர்சியின் நிறமும் மாறிக் கொண்டே வந்தது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், பைஜூஸ் எம்பிஎல், ஓப்போ ஆகிய நிறுவனங்கள் இந்திய அணியின் ஜெர்சிக்கு ஸ்பான்சராக இருந்தன.

    கடந்த ஆண்டு எம்பிஎல் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்ததைத் தொடர்ந்து கில்லர் நிறுவனம் இந்திய அணிக்கு ஸ்பான்சராக இருந்தது. தற்போது அதனுடைய ஒப்பந்தம் முடிவடைய உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிக்கு அடிடாஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

    விளையாட்டுப் பொருட்களின் ஜாம்பவானான அடிடாஸுடன் பிசிசிஐ பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. எல்லாம் சரியாக நடந்தால், ஜூன் 1-ம் தேதிக்குள் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராக அடிடாஸ் களமிறங்கும்.

    ரூ.350 கோடிக்கு அடிடாஸ் நிறுவனம், பிசிசிஐ உடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இந்தியா டீம் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.65 லட்சம் பிசிசிஐக்கு வழங்கும். வரும் ஜூன் மாதம் அடிடாஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர் ஆரம்பமாகிறது. இந்த ஒப்பந்தம் வரும் 2028 ஆம் ஆண்டு வரையில் இருக்கும்.

    • ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.
    • ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் கேப்டனாக ரோகித்தும், துணை கேப்டனாக பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.

    இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியையும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார் என பிசிசிஐ குறிப்பிடவில்லை.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் கேப்டனாக ரோகித்தும், துணை கேப்டனாக பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் குடும்ப பொறுப்புகள் காரணமாக ரோகித் சர்மா முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை. எனவே இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கங்குலிக்கு விராட் கோலியை பிடிக்காது என சேத்தன் சர்மா கூறியிருந்தார்.
    • சேத்தன் சர்மாவின் ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்றுள்ளார்.

    தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் பல சர்ச்சைகுரிய கருத்துகளை சேத்தன் சர்மா தெரிவித்திருந்தார்.

    இந்திய அணி தொடர்பான பல ரசியங்களை சேத்தன் சர்மா கசிய விட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார்.

    சேத்தன் சர்மாவின் ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்றுள்ளார். 

    • பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவும் மாணவியை பாராட்டினார்.
    • இந்த வீடியோவை இதுவரை மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு ஷேர் செய்து வருகின்றனர்.

    சமீபத்தில் பெண்கள் பிரீமியர் லீக் ஏலத்தில் இந்திய வீராங்கனைகள் பல கோடி ரூபாய்க்கு ஏலம் போனார்கள். இந்நிலையில் ராஜஸ்தான் கிராமத்தில் ஒரு சிறுமி கிரிக்கெட்டில் பொளந்துகட்டும் வீடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில் பள்ளி மாணவி ஒருவர் ஒரு மைதானத்தில் தன் வயது சக சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி அபாரமான பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களை அடித்து அசத்தியுள்ளார்.

    இந்த வீடியோவில் வைரலாகும் அந்த சிறுமியின் பெயர் முமல் மெஹர். இவருக்கு 14 வயதுதான் ஆகிறது. இவரது அதிரடியான பேட்டிங் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரும் பகிர்ந்துள்ளார்.

    மாணவியின் பேட்டிங்கை பார்த்து மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவும் மாணவியை பாராட்டினார்.


    ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள ஷெர்புரா கனாசர் பகுதியைச் சேர்ந்தவர் முமல் மெஹர். இது ஒரு சிறிய கிராமம். அவருக்கு கிரிக்கெட் விளையாடுவது பிடிக்கும். வெறும் 34 வினாடிகள் பேட்டிங் செய்து அனைத்து தரப்பு மக்களின் இதயங்களையும் வென்றுள்ளார்.

    மூமல் கிராமத்தில் உள்ள தனது வயது சிறுவர்களுடன் தினமும் பள்ளியிலிருந்து திரும்பியதும் கிரிக்கெட் விளையாடுவார். மூமல் மெஹர் எட்டாம் வகுப்பு மாணவர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பேட்டிங் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிரும் போது அது வைரலாகி வருகிறது.

    முமல் மெஹர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு ஷேர் செய்து வருகின்றனர்.

    • அணியின் பல்வேறு விஷயங்களை கசியவிட்ட சேத்தன் ஷர்மாவின் பதவிக்கு இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.
    • காயத்தில் இருந்து மீண்ட ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புவதில் நிர்வாகத்தில் இருவிதமான கருத்துகள் நிலவியது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தேர்வு குழு தலைவராக சேத்தன் சர்மா இருக்கிறார்.

    முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர் தனியார் டெலிவிஷன் சேனல் நடத்திய ரகசிய ஸ்டிங் ஆபரேசனில் இந்திய அணி குறித்த பல்வேறு ரகசியங்களை வெளியிட்டு உள்ளார். அவரது இந்த தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    சேத்தன் சர்மா கசிய விட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

    விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே ஈகோ இருந்தது உண்மைதான். ரோகித் சர்மாவுக்கு கங்குலி ஆதரவாக செயல்பட்டார் என்று சொல்ல முடியாது. ஆனால் அதே நேரத்தில் விராட் கோலியையும், கங்குலிக்கு அவ்வளவாக பிடிக்காது.

    அணி கூட்டம் ஒன்றில் கோலி சொன்ன விஷயத்துக்கு எதிராக கிரிக்கெட் வாரிய தலைவரான கங்குலி விமர்சித்தார். அப்போது முதல் இருவருக்குமே தீர்க்க முடியாத பிரச்சினை எழுந்து விட்டது.

    தனது கேப்டன் பதவி பறிபோனதற்கு கங்குலி தான் காரணம் என்று கோலி நினைத்தார். அதே நேரத்தில் கங்குலிக்கு எப்போதுமே கோலியை பிடிக்காது.

    வீடியோ கால் மூலம் நடந்த தேர்வு குழு சந்திப்பில் என்னோடு சேர்த்து மொத்தம் 9 பேர் பங்கேற்று இருந்தார்கள். அப்போது கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவு மறுபரிசீலனை செய்ய சொல்லி கங்குலி ஒரு முறை கேட்டுள்ளார். அதை கோலி கவனிக்காமல் விட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    நிருபர்கள் சந்திப்பின் போது கேப்டன் விலகல் முடிவை கங்குலி மறு பரிசீலனை செய்ய சொல்லவில்லை என்று கோலி பேசியிருந்தார். கோலி பொய் சொல்வதாக கங்குலி கூறினார். ஆனால் கோலி அப்படி சொன்னது ஏன் என்று இன்று வரை புரிந்து கொள்ள முடியவில்லை.

    20 ஓவர் அணியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காகவே விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் ஓய்வு கொடுத்தோம். 20 ஓவர் அணியில் ரோகித் சர்மா இனி கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்படுவார். ஹர்த்திக் பாண்ட்யாவே கேப்டன் ஆவார்.

    பும்ராவால் தனது முதுகை வளைக்க கூட முடியவில்லை. அவரை போன்ற காயம் அடைந்த சில வீரர்கள் தனியாக சில ஊசி எடுத்து கொண்டு முழு உடல் தகுதியுடன் இருப்பதாக கூறி இருக்கிறார்கள். முழுமையாக உடல் தகுதி இல்லாத வீரர்கள் இப்படி ஊசி மருந்துகளை எடுத்து கொண்டு 80 சதவீத உடல் தகுதியுடன் ஆடி இருக்கிறார்கள்.

    இந்திய அணியில் ரோகித் சர்மாவும், ஹர்த்திக் பாண்டியாவும் தான் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இருவரும் பலமுறை எனது வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள்.

    இவ்வாறு சேத்தன் கூறியுள்ளார்.

    இந்த சர்ச்சை காரணமாக சேத்தன் சர்மா மீது கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

    • வீரர்களின் கடினமான காலத்தில் அவர்களுக்கு துணையாக கிரிக்கெட் வாரியம் இருக்க வேண்டும்.
    • வீரர்களுக்கு எப்படி ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதற்கு பிசிசிஐ ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.

    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீரராக ஒரு காலத்தில் விளங்கியவர் உமர் அக்மல். கம்ரான் அக்மலின் தம்பியான உம்ரான் அக்மல் பாகிஸ்தானுக்கு 16 டெஸ்ட், 121 ஒருநாள் போட்டி மற்றும் 84 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    உமர் அகமல் ஸ்பாட் பிக்சிங் செய்ய சொல்லி புக்கிகள் தன்னை அணுகியது குறித்து புகார் அளிக்காத குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தான் அணியில் இருந்து உமர் மாலிக் தடை விதிக்கப்பட்டார்.

    எனினும் தமது செயலுக்கு அவர் மன்னிப்பு கூறியதையடுத்து தடை நீக்கப்பட்டு உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.ஆனால் இதுவரை ஒரு முறை கூட மீண்டும் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சேர்க்க வாய்ப்பு தரவில்லை.

    இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா உமர் அக்மலின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைந்து விட்டதாக வெளிப்படையாக கூறியிருந்தார்.

    தற்போது இதற்கு பதில் அளித்துள்ள உமர் அகமல்:-

    ரமீஸ் ராஜா இவ்வாறு கூறியதற்கு நான் உண்மையிலே வெட்கப்படுகிறேன். பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்து இருக்கிறேன். ஆனால் என்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தப்படும் விதம் சரியல்ல. வீரர்களின் கடினமான காலத்தில் அவர்களுக்கு துணையாக கிரிக்கெட் வாரியம் இருக்க வேண்டும்.

    உதாரணத்துக்கு விராட் கோலியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் கிரிக்கெட் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவருக்கு தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் வாய்ப்பு கொடுத்தது. இதன் மூலம் தற்போது அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி உள்ளார். வீரர்களுக்கு எப்படி ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதற்கு பிசிசிஐ ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.

    ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அப்படி செய்யவில்லை ரமீஷ் ராஜா என் பெயரை குறிப்பிடாமல் எனக்கு வாய்ப்பில்லை என்று சொல்லியிருந்தால் கூட என் மனது அமைதியாக இருக்கும் என்று உமர் அக்மல் வேதனை தெரிவித்துள்ளார்.

    அண்மையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பிராஸ் அகமதுக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்த நிலையில், உமர் அக்மலும் மீண்டும் அணிக்குள் வர போராடுகிறார்.

    • 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றியது.
    • இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் தங்களது வாழ்த்துக்களை வீடியோ மூலம் தெரிவித்தனர்.

    பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதின. இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் ஷபாலி வர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில் ஜூனியர் டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு, ஆடவர் கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் தங்களது வாழ்த்துக்களை வீடியோ மூலம் தெரிவித்தனர்.


    இதில் பேசிய ராகுல் டிராவிட், இந்திய பெண்கள் ஜூனியர் அணிக்கு ஒரு முக்கியமான நாள் என வாழ்த்துக்கள் கூறினார். உங்களுக்கு ஆடவர் ஜூனியர் உலக கோப்பையை வென்ற பிரித்வி ஷா வாழ்த்துக்களை தெரிவிக்க உள்ளார் என கூறினார்.

    அதனையடுத்து பேசிய பிரித்வி ஷா, ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகப் பெரிய சாதனை என கூறினார். அதனை தொடர்ந்து அனைத்து வீரர்களும் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தேர்வுக்குழுவின் 5 பதவிகளுக்கான விளம்பரத்தைத் தொடர்ந்து, சுமார் 600 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.
    • தனிப்பட்ட நேர்காணல்களுக்கு 11 நபர்களை கிரிக்கெட் ஆலோசனைக் குழு பட்டியலிட்டது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்து, கடும் விமர்சனம் எழுந்ததைத் தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை பிசிசிஐ கடந்த நவம்பர் மாதம் கலைத்தது. பின்னர் இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுக்குழுவை ஏற்படுத்தும் நடைமுறை தொடங்கியது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வுக்குழு உறுப்பினர்களாக ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரதோ பானர்ஜி, சலீல் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தேர்வுக்குழுவுக்கு ஹர்வீந்தர் சிங்கும் விண்ணப்பித்திருந்தார். நேர்காணலுக்குப் பிறகு அவரது பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை.

    இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், "2022ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 5 பதவிகளுக்கான விளம்பரம் வெளியிட்டதைத் தொடர்ந்து, சுமார் 600 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. விண்ணப்பங்களை கவனமாக பரிசீலித்த பிறகு, தனிப்பட்ட நேர்காணல்களுக்கு 11 நபர்களை ஆலோசனைக் குழு பட்டியலிட்டது. நேர்காணல்களின் அடிப்படையில், தேர்வுக் குழுவிற்கு தேர்வானர்களின் பெயர்களை ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

    • ஆலோசனை குழு இறுதி செய்த பட்டியலில் முன்னாள் வேகப்பந்து வீரர் வெங்கடேஷ் பிரசாத் இடம்பெறவில்லை.
    • சேட்டன் சர்மாவை மீண்டும் தேர்வு குழு தலைவராக தேர்ந்து எடுப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் மோசமாக தோற்று வெளியேறியது. இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனம் எழுந்தது.

    இதை தொடர்ந்து இந்திய வீரர்களை தேர்வு செய்யும் 5 பேர் கொண்ட தேர்வு குழுவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அதிரடியாக கூண்டோடு கலைத்தது.

    முன்னாள் வேகப்பந்து வீரர் சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவில் சுனில்ஜோஷி (தெற்கு மண்டலம்) ஹர்விந்தர் சிங் (மத்திய மண்டலம்) தேபாஷிஸ் மொகந்தி (கிழக்கு மண்டலம்) ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். ஒருவர் விலகி இருந்தார். அவருக்கு பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தது. இந்த குழுவை தான் கிரிக்கெட் வாரியம் நீக்கி புதிய தேர்வு குழுவை தேர்வு செய்ய முடிவு செய்தது.

    புதிய தேர்வு குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை குழு நியமிக்கப்பட்டது. அசோக் மல்கோத்ரா, ஜக்னி பரண்ஜோ, சுலக்சனா நாயக் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்று இருந்தனர்.

    இந்தகுழு புதிய தேர்வு குழுவை தேர்வு செய்வதில் தாமதம் செய்தது. இதனால் பழைய தேர்வு குழுவை இலங்கை தொடருக்கான அணி வீரர்களை தேர்வு செய்தது.

    புதிய தேர்வு குழுவுக்கு பலர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 13 பேரின் பெயர்களை இறுதி செய்து அவர்களிடம் கிரிக்கெட் ஆலோசனை குழு நேர்கானல் நடத்தியது. ஆலோசனை குழு இறுதி செய்த பட்டியலில் முன்னாள் வேகப்பந்து வீரர் வெங்கடேஷ் பிரசாத் இடம்பெறவில்லை.

    அமய் குருசியா, அஜய் ரத்ரா, எஸ்.எஸ்.தாஸ் சலீல் அங்கோலா, எஸ். சரத், கானர் வில்லியம்ஸ் முன்னாள் தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா, ஹர்விந்தர் உள்ளிட்டோ ரிடம் நேர்கானல் நடத்தப்பட்டது. இதில் 5 பேர் தேர்வு குழு பதவிக்கு நியமிக்கப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் சேட்டன் சர்மாவை மீண்டும் தேர்வு குழு தலைவராக தேர்ந்து எடுப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.குறுகிய காலத்துக்கு அவர் தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

    ×