search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95935"

    • இலங்கையில் இருந்து வந்த பயணியிடம் விலை உயர்ந்த கற்கள் பறிமுதல்.
    • கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை.

    சென்னை விமான நிலையத்தில் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது குறித்து விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர்.

    அப்போது துபாயில் இருந்து வந்த சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த ரகீம் (வயது 30), ஆலந்தூரை சேர்ந்த முகமது ஆசீப் (32) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். பின்னர் 2 பேரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது 2 பேரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து ரூ. 59 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 281 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்த ரூ. 4 லட்சத்தி 86 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களையும் கைப்பற்றினார். 



    இதேபோல் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த தங்கராஜா (37) என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரிடம் இருந்த ரூ. 23 லட்சத்தி 13 ஆயிரம் மதிப்புள்ள 1706.05 கேரட் விலையுர்ந்த கற்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

    இந்த அதிரடி சோதனை மூலம் மொத்தம் ரூ. 87 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், விலையுர்ந்த கற்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன. கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.At Chennai Airport Rs.59.70 lakh worth of gold seized

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,560-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. கிராம் ரூ. 58-க்கும், கிலோ ரூ.58 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது. ஆவணி மாதம் முகூர்த்த காலம் என்பதால் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பது வழக்கம்.

    சென்னை:

    சென்னையில் கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. கிராம் நேற்று ரூ. 4,710-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.4,695 ஆக குறைந்துள்ளது.

    பவுன் ரூ.37 ஆயிரத்து 680-ல் இருந்து ரூ. 37,560-ஆக குறைந்து இருக்கிறது. இன்று ஒரே நாளில் தங்கம் கிராம் ரூ.15-ம், பவுன் ரூ.120-ம் குறைந்து இருக்கிறது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. கிராம் ரூ. 58-க்கும், கிலோ ரூ.58 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது. ஆவணி மாதம் முகூர்த்த காலம் என்பதால் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தற்போது தங்கம் விலை குறைந்து வருவது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,680-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.60-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.58-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த வாரம் ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. ஆனால் இந்த வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.

    கடந்த 24-ந்தேதி 1 பவுன் தங்கம் ரூ.38,440-க்கு விற்கப்பட்டது. மறுநாள் 25-ந்தேதி அது அதிரடியாக உயர்ந்து ரூ.38,800 ஆனது. 26-ந்தேதி தங்கம் விலை ரூ.38,560 ஆக குறைந்தது. 27-ந்தேதி மீண்டும் குறைந்து ரூ.38,440-க்கு விற்கப்பட்டது.

    29-ந்தேதி மீண்டும் குறைந்து ரூ.38,120-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ரூ.38,320 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று ரூ.38,032 ஆக குறைந்தது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்து ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்தது. இன்று பவுனுக்கு ரூ.352 குறைந்து ரூ.37,680-க்கு விற்பனை ஆகிறது.

    கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி 1 பவுன் தங்கம் ரூ.37,880-க்கு விற்றது. அதன் பிறகு இன்று பவுன் ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்தது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,754-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.4,710-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.60-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.58-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.58,000-க்கு விற்பனையாகிறது.

    • பயிற்சியின் முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும்.
    • தற்போதைய படிப்பிற்கு இடையூறு இல்லாமல் தமது கல்வி தகுதியினை உயர்த்தி கொள்ள இப்பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு ேமலாண்மை நிலையத்தில் 2022-ம் ஆண்டிற்கான நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பட்டயச் சான்றிதழ் சேர்க்கை நடைபெறுகிறது.

    இது குறித்து முதல்வர் (பொ) அன்பு பசும்படியார் வெளிட்டுள்ள செய்திகுறிப்பு:

    மேற்படி பயிற்சிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. பட்டதாரிகளும் இப்பயிற்சியில் சேரலாம். 01.09.2022 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் அதிக பட்ச வயது வரம்பு இல்லை.

    மேலும் ''நகை மதிப்பீட்டாளர் பயிற்சி'' 10.09.2022 தேதி துவக்கப்பட உள்ளது.

    நகைக் கடைகளிலும், அடகு கடைகளிலும் மற்றும் வங்கிகளிலும் நகைகளின் புழக்கம் அதிகமாகவுள்ளது.

    தங்கத்தை மதிப்பீடு செய்து அதன் தரத்தை கண்டறிய வேண்டியது அவசியம்.

    இதற்கு அறிவியல் பூர்வமான பயிற்சி தேவை.

    இளைய தலைமுறையினர் அனைவரும்இப்பயி ற்சியினை பயின்றுவேலை வாய்ப்பு பெறவும், சுய தொழில் தொடங்கவும், தங்கத்தைப் பற்றிய விழிப்பு ணர்வு பெறுவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.

    நகை மதிப்பீடும்அதன் நுட்பங்களும் குறித்த பயிற்சியின்போது வகுப்பறை பயிற்சியில் அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தைப் பற்றியஅடிப்படை விபரம், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, சுத்த தங்கம் கணக்கிடும் முறை, தங்கத்தை அழித்து தரம் அறியும் முறை, அழிக்காமல் தரம் அறியும் முறை, நகைகளின் வகைகளை கண்டறிதல், வங்கிகளில் நகைக்கடன் வழங்கும் முறை, ஹால்மார்க், அடகு பிடிப்போர் நடைமுறை சட்டம் மற்றும் விதிகள் போன்ற பாடங்கள் 40 மணிநேர வகுப்பறை பயிற்சியும், நகை செய்முறை 30 மணிநேரமும், உரைகல் முறையில் தங்கத்தின் தரம் கண்டறியம் செய்முறைப்பயிற்சி 30 மணி நேரமுமாக மொத்தம் 100 மணிநேரப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்த பயிற்சியின் போது தேவையான உபகரணங்கள் வழங்கப்படும். இப்பயிற்சியின் முடிவில் தமிழக அரசால் அங்கீகரி க்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும் இப்பயிற்சியினை முடித்தவர்கள் தேசிய வங்கிகள், வணிக வங்கிகள், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிதிநிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றவும், அடகு கடை, ஆபரணக்கடை, நகை வணிகம் செய்யவும் நல்ல வாய்ப்பு உள்ளது. சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.

    சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மொத்தம் 18 நாட்கள் பயிற்சி நடைபெறும். தற்போது விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    இப்பயிற்சியில் சேர 18 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவ/மாணவிகளும், ஆண்களும், பெண்களும் எந்த பகுதிதியினை சேர்ந்தவராக இருந்தாலும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்ற கல்லூரிகளில் படித்து வருபவர்கள் தற்போதைய படிப்பிற்கு இடையூறு இல்லாமல் தமது கல்வித் தகுதியினை உயர்த்திக் கொள்ள இப்பயிற்சி துவக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம், மெடிக்கல் காலேஜ் ரோடு, தஞ்சாவூர் தொலைபேசி எண்: 04362-238253, 9626011552 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,320-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.60 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.10-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.38 ஆயிரத்து 120-க்கு விற்றது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 320-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 790 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.60 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.10-க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,160-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளி ஒரு கிராம் ரூ.60.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 4 நாட்களாகவே குறைந்து வருகிறது. கடந்த வாரம் தங்கம் விலை சற்று அதிகமாகவே இருந்தது.

    கடந்த 20-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.38,640-க்கு விற்கப்பட்டது. 22-ந்தேதி அது ரூ.38,520 ஆக குறைந்தது. 23-ந்தேதி மீண்டும் ரூ.38,400 ஆக குறைந்தது. 24-ந்தேதி சற்று அதிகரித்து ரூ.38,440 ஆக விற்கப்பட்டது.

    மறுநாள் 25-ந்தேதி அதிரடியாக உயர்ந்து ரூ.38,800 ஆனது. அதன் பிறகு தங்கம் விலை குறையத்தொடங்கியது. 26-ந்தேதி அது ரூ.38,560 ஆக குறைந்தது. நேற்று முன்தினம் மீண்டும் குறைந்து ரூ.38,440-க்கு விற்றது. நேற்று அதேவிலையில் நீடித்தது.

    இந்தநிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.38,160-க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,805-க்கு விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.4,770-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளி ஒரு கிராம் ரூ.60.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.60-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.60 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,440-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையும் சற்று குறைந்து இருக்கிறது. கிராம் ரூ 61.30-ல் இருந்து 60.70 ஆகவும், கிலோ ரூ 61,300-ல் இருந்து ரூ.60, 700 ஆகவும் குறைந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று கிராம் ரூ.4,820-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.4,805 ஆக குறைந்து உள்ளது.

    ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்து 560-ல் இருந்து ரூ.38 ஆயிரத்து440 ஆக குறைந்து இருக்கிறது. ஒரு கிராம் 15 ரூபாயும், பவுன் 120 ரூபாயும் குறைந்து உள்ளது.

    இதே போல் வெள்ளி விலையும் சற்று குறைந்து இருக்கிறது. கிராம் ரூ 61.30-ல் இருந்து 60.70 ஆகவும், கிலோ ரூ 61,300-ல் இருந்து ரூ.60, 700 ஆகவும் குறைந்து உள்ளது.

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.38,720-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.61 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.30-க்கு விற்கிறது.

    சென்னை:

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.38 ஆயிரத்து 720-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 840 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.61 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.30-க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38 ஆயிரத்து 640-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.61 ஆயிரத்து 100-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.10-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று 2-வது நாளாக விலை உயர்ந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.200 அதிகரித்தது.ரூ.38 ஆயிரத்து 640-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 830 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.61 ஆயிரத்து 100-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.10-க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.38 ஆயிரத்து 400-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.60 ஆயி ரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.70-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலை இன்று 2-வது நாளாக குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38 ஆயிரத்து 400-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 800 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.60 ஆயி ரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.70-க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.38 ஆயிரத்து 520-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.61 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி 61.10க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற தாழ்வு இருந்து வரும் நிலையில் இன்று விலை குறைந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38 ஆயிரத்து 520-க்கு விற்றது. ஒரு கிராம் 4 ஆயிரத்து 815 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.61 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி 61.10க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 640-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 830-ஆக உள்ளது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.61 ஆயிரத்து 300-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.30-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்ற-தாழ்வு இருந்து வருகிறது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 640-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 830-ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.61 ஆயிரத்து 300-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.30-க்கு விற்கிறது.

    ×