search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95993"

    • 2017-ம் ஆண்டு குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் பாதுகாத்தவர் டி.கே. சிவக்குமார்.
    • கர்நாடகாவில் 2013-2018 முதல் டி.கே. சிவக்குமார் மின்சாரத்துறையை நிர்வகித்தார்.

    கர்நாடக காங்கிரசில் வலிமை மிக்க தலைவராக திகழ்பவர் டி.கே.சிவக்குமார். இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இவர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். இவர் 1962-ம் ஆண்டு மே 15-ந்தேதி கனகபுராவில் தொட்டலஹல்லி கெம்பே கவுடா, கவுரம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

    கர்நாடகாவில் 2-வது பெரும்பான்மை சமூகமான ஒக்கலிகா கவுடாவை சேர்ந்த இவர் 1980-களில் மாணவர் பருவத்தில் காங்கிரசில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். தமது 27 வயதில் 1989-ல் மைசூரு மாவட்டத்தின் சாத்தனூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

    பின்னர் 1994, 1999, 2004 தேர்தல்களிலும் சாத்தனூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக வாகை சூடினார். 2008, 2013, 2018 மற்றும் தற்போதைய தேர்தல்களில் கனகபுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்து இருக்கிறார். கனகபுராவில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றவர் டி.கே.சிவகுக்மார். காங்கிரஸ் மேலிடத்தின் மிகுந்த நம்பிக்கைக்குரிய இவர் மாநிலங்களில் காங்கிரசுக்கு ஏதேனும் சிக்கல் என்றால் பா.ஜ.க.வை எதிர்த்து களம் இறங்குவது வழக்கம்.

    2002-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் விலாஸ்ராவ் தேஷ்முக் அரசுக்கு சிக்கல் ஏற்பட்ட போது எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைத்து அரசாங்கத்தை காப்பாற்றிய பணியில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. 2017-ம் ஆண்டு குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலின் போதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் பாதுகாத்தவர் டி.கே. சிவக்குமார்.

    கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்க்கப்பட்ட போது எம்.எல்.ஏக்களுக்காக மும்பையில் வீதியில் இறங்கி மல்லுக்கட்டியவர் இவர். அடுத்தடுத்த வழக்குகள், விசாரணைகள் என பாஜக அரசு அலைக்கழித்த போது ஒட்டுமொத்த ஒக்கலிகா கவுடா ஜாதியினரும் பெங்களூரு நகரை முற்றுகையிட்டு பிரம்மாண்டமாக நடத்திய பேரணி மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. 2020-ம் ஆண்டு முதல் கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்து வருகிறார்.

    இந்த முறை முதல்-மந்திரி பதவிக்காக முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டு முட்டுக்கட்டையாக நிற்காமல் விலகிக் கொண்டு துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த 5 நாட்களாக இந்திய அரசியலையே திரும்பி பார்க்க வைத்த இவருக்கு துணை முதல்வர் பதவியோடு 2 முக்கிய துறைகள் வழங்கப்பட உள்ளது. இதில் ஒன்று மின்சாரத்துறை. 2-வது துறை நீர்ப்பாசனத்துறையாகும்.

    கர்நாடகாவில் 2013-2018 முதல் டி.கே. சிவக்குமார் மின்சாரத்துறையை நிர்வகித்தார். அதன்பிறகு 2018 ல் அமைந்த காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சி கூட்டணியில் டி.கே. சிவக்குமார் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தார். இந்த முறையும் இந்த 2 துறையை அவர் நிர்வகிக்க வாய்ப்புள்ளது.

    • இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது வீட்டுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று இரவு முடிவு எட்டப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது. கடந்த 13ம் தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில் முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து யாரை முதலமைச்சராக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்துப் பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது. அவை அனைத்தும் டெல்லி கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது. நேற்று அவர்கள் இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது வீட்டுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடமும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார். முதல்வர் பதவியை முதல் 2 ஆண்டுகள் ஒருவரும், மீதமுள்ள 3 ஆண்டுகளை மற்றொருவரும் ஏற்கும் வகையில் செயல்படலாம் என்று கூறினார். இதை இருவரும் ஏற்க மறுத்து விட்டனர். சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரும் விட்டுக்கொடுக்க மறுத்ததால் புதிய முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடித்து வந்தது.

    தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று இரவு முடிவு எட்டப்பட்டது. கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் புதிய எம்.எல்.ஏக்களுக்கான பதவியேற்பு விழா பெங்களூருவில் வரும் 20ம் தேதி நடைபெறும் என நேற்று இரவு காங்கிரஸ் மேலிடம் தெரிவித்தது.

    இன்று காலையில் அடுத்தகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. சித்தராமையா அடுத்த முதல்வர் என்றும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வர் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. டி.கே.சிவக்குமார் மாநில தலைவராகவும் நீடிப்பார் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 5 நாட்களாக நிலவி வந்த மூட்டுக்கட்டை நீங்கியது.

    அடுத்து சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. புதுமுகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் பதவியை பெற சில மூத்த தலைவர்கள் டெல்லிக்கு சென்றுள்ளனர். அமைச்சர் பதவியை பெறுவதற்கு எம்எல்ஏக்களிடையே கடும் போட்டி இருப்பதால் குழப்பம் நிலவுகிறது. 

    • முதல்வரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.
    • பாஜகவின் போலிச் செய்தி தொழிற்சாலைக்கு ஊடகங்களின் ஒரு பகுதி பலியாகி விட்டது.

    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வரை தேர்வு செய்யும் பணியில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு மேலிட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இது தொடர்பாக பல்வேறு யூகமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

    முதல்வரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர். இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் (கர்நாடகா பொறுப்பாளர்) ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:-

    பாஜகவின் போலிச் செய்தி தொழிற்சாலைக்கு ஊடகங்களின் ஒரு பகுதி பலியாகி விட்டது. பாஜக பல மாநிலங்களில் முதல்வர்களை தேர்வு செய்வதற்காக 7 முதல் 10 நாட்கள் எடுத்துக் கொண்டபோது, பிரதமரிடம் இதேபோல் கேள்வி எழுப்பினார்களா? ஆனால் அதே நபர்கள், ஒரு குறிப்பிட்ட ஊடகங்கள், உண்மையான ஜனநாயக மரபுகளின்படி செயல்படும் மல்லிகார்ஜுன் கார்கேவின் செயல்முறைக்கு ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளன.

    கர்நாடக சகோதர சகோதரிகளால் நிராகரிக்கப்பட்ட பாஜகவின் விரக்தி எங்களுக்கு புரிகிறது. முதல்வர் தேர்வு விவகாரம் தொடர்பாக இங்கிருந்து காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அறிக்கை வெளியிட வேண்டாம். யாராவது கருத்து தெரிவித்தால் ஒழுக்கமின்மையாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • யாரை முதல்-மந்திரியாக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்து பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது.
    • சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடமும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள போதிலும் முதல்-மந்திரி பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறது.

    கடந்த 13-ந்தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் விருப்பம் தெரிவித்தனர்.

    இதையடுத்து யாரை முதல்-மந்திரியாக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்து பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது. அவை அனைத்தும் டெல்லி கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது. நேற்று அவர்கள் இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது வீட்டுக்கு வர வழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடமும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார். முதல்-மந்திரி பதவியை முதல் 2 ஆண்டுகள் ஒருவரும், மீதமுள்ள 3 ஆண்டுகளை மற்றொருவரும் ஏற்கும் வகையில் செயல்படலாம் என்று கூறினார்.

    இதை இருவரும் ஏற்க மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து சித்தராமையா முதல்-மந்திரியாகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்-மந்திரியாகவும் பொறுப்பு ஏற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

    கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் சித்தராமையாதான் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று எழுதி கொடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்பேரில் கார்கே, ராகுல் காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் சோனியா, பிரியங்கா ஆகியோர் டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை அறிந்ததும் கார்கேவும் தனது நிலையை மாற்றிக்கொண்டு டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக பேசி வருவதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், அகில இந்திய பொதுச்செயலாளர்களில் ஒருவருமான ரன்தீப்சுர்ஜிவாலாவும் டி.கே.சிவகுமாருக்கு ஆதரவு தெரிவித்து இருந்ததாக தெரியவந்துள்ளது.

    சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரில் யார் முதல்-மந்திரியாக தேர்வு பெறுவது என்ற விவகாரம் கர்நாடகா மாநில காங்கிரசை இரண்டு கோஷ்டிகளாக பிளவுபடுத்தி இருக்கிறது. அதன் எதிரொலி டெல்லி காங்கிரசிலும் கேட்க தொடங்கி உள்ளது. டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்களும் இந்த விவகாரத்தில் இரு பிரிவாக பிரிந்துள்ளனர்.

    பெரும்பாலான மூத்த தலைவர்கள் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கர்நாடகா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்களின் விருப்பபடி சித்தராமையாவை முதல்-மந்திரியாக தேர்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    டி.கே.சிவகுமார் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் அது எதிர்காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி விடக்கூடும் என்று அந்த காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். என்றாலும் சோனியா, பிரியங்கா இருவரது ஆதரவும் இருப்பதால் டி.கே.சிவகுமார் தனது நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறார்.

    மாநில காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் தேர்தலில் வெற்றி பெற வைத்து இருப்பதால் தனக்கே முதல்-மந்திரி பதவி தரப்பட வேண்டும் என்று டி.கே.சிவகுமார் தொடர்ந்து பிடிவாதமாக வலியுறுத்தி வருகிறார். தனது பிடிவாதத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை நீடிக்கிறது.

    சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரும் விட்டுக்கொடுக்க மறுப்பதால் 4 நாட்களாக புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடிக்கிறது.

    புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்யும் பொறுப்பை காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் கார்கேவிடம் ஒப்படைத்து இருந்தனர். ஆனால் அவரால் இறுதி முடிவு எடுத்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது பேச்சை டி.கே.சிவகுமார் மற்றும் கர்நாடகா மாநில தலைவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.

    இதையடுத்து இன்று (புதன்கிழமை) 4-வது நாளாக டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இன்று காலை ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுத்தே தீர வேண்டும் என்று உறுதியான நிலைப்பாட்டுடன் களத்தில் இறங்கினார்.

    தன்னை வந்து சந்திக்கும்படி சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவருக்கும் அழைப்பு விடுத்தார்.

    அதன்படி 11.30 மணிக்கு சித்தராமையா ராகுலை சந்தித்து பேசினார். கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு தனது பங்களிப்பை அப்போது அவர் விளக்கி கூறினார். ராகுல் தெரிவித்த சில திட்டங்களை ஏற்றுக்கொண்டு சித்தராமையா முதல்-மந்திரி பதவியை தனக்கே தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    அவரை தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு ராகுல் காந்தியை டி.கே.சிவகுமார் வந்து சந்தித்தார். 75 வயதாகும் சித்தராமையா ஏற்கனவே 5 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் இருந்து விட்டார். எனவே காங்கிரசை வெற்றி பெற வைத்த தனக்கே முதல்-மந்திரி பதவி தர வேண்டும் என்று தெரிவித்தார்.

    இரு தரப்பினரின் கருத்துக்களை கேட்ட ராகுல் காந்தி அடுத்தகட்டமாக சோனியா, கார்கேவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பிறகு கர்நாடகா புதிய முதல்-மந்திரி யார் என்பதில் தீர்வு ஏற்படும் என்று தெரிகிறது. வெற்றி பெற்று 4 நாட்கள் ஆன பிறகும் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய முடியாததால் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராகுல் காந்தி கடந்த மார்ச் மாதம் லண்டன் சுற்றுப்பயணத்தின் போது இந்திய ஜனநாயகம் பற்றி அவர் பேசிய பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • பிரதமர் மோடி ஜூலை மாதம் 22-ந்தேதி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்ல உள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிற 31-ந்தேதி முதல் 10 நாள் பயணமாக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஜூன் 4-ந்தேதி அவர் நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளி நாடுவாழ் இந்தியர்களுடன் (என்.ஆர்.ஐ.) உரையாற்ற உள்ளார்.

    அமெரிக்கா பயணத்தின் போது அவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    10 நாள் பயணமாக அவர் அமெரிக்கா செல்லும் போது வாஷிங்டன் டிசி மற்றும் லாஸ்ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களுக்கும் செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த நிகழ்ச்சியில் அரசியல்வாதிகள் மற்றும் தொழில் முனைவோர்களும் கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் உரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பயண திட்டம் இதுவரை இறுதி செய்யப்படவில்லை எனவும், இந்த வாரத்திற்குள் முழு பயண திட்டமும் உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

    பிரதமர் மோடி ஜூலை மாதம் 22-ந்தேதி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்ல உள்ளார். அதற்கு முன்பாக ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்.

    ராகுல் காந்தி கடந்த மார்ச் மாதம் லண்டன் சுற்றுப்பயணத்தின் போது இந்திய ஜனநாயகம் பற்றி அவர் பேசிய பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    வெளிநாட்டு மண்ணில் அவர் இந்தியாவை இழிவுபடுத்தி விட்டதாக கூறி பா.ஜனதா கட்சி நாடு முழுவதும் ராகுல்காந்திக்கு எதிராக போராட்டங்களை நடத்தி இருந்தது. இந்த நிலையில் ராகுல் காந்தி தற்போது அமெரிக்கா சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.

    • முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்வை சந்தித்து பேசினார்.
    • முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்ற கருத்து டிகே சிவக்குமாரிடம் கேட்கப்பட்டதாக தகவல்.

    கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, மாநிலத்தில் ஆட்சியமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வரை காங்கிரஸ் கட்சி மேலிடம் தேர்வு செய்யும் என்று கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது. இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர், முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று டெல்லி சென்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்வை சந்தித்து பேசினார். இவரைத் தொடர்ந்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் இன்று (மே 16) டெல்லி புறப்பட்டு சென்றார்.

    இன்று மாலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை டிகே சிவக்குமார் சந்தித்து பேசினார். இருவரின் பேச்சுவார்த்தையின் போது, கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா என்று அவரிடம் யாரும் தெரவிக்கவில்லை என்றும், அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்ற கருத்து டிகே சிவக்குமாரிடம் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    'எனக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்றால், நான் சாதாரண சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்ற தயார். சித்தராமையா கட்சியில் இணைந்தது முதல், ஒன்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அல்லது முதலமைச்சர் என்று அதிகாரத்திலேயே இருந்து வந்துள்ளார்,' என்று டிகே சிவக்குமார் மல்லிகார்ஜூன கார்கேவிடம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

    • கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ராஜீவ்காந்தி ஜோதிக்கு திசையன்விளை அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.

    திசையன்விளை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ராஜீவ்காந்தி ஜோதிக்கு திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரம் சந்திப்பில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் அமுதா கார்த்திகேயன், மாநில காங்கிரஸ் விவசாய அணி செயலாளர் விவேக் முருகன், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மருதூர் மணிமாறன், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத்தலைவர் விஜயபெருமாள், திசையன்விளை நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணி பிரிவினர் தற்போது கம்யூனிஸ்டு கூட்டணியில் உள்ளனர்.
    • சமீபத்தில் பாரதிய ஜனதாவினர், கிறிஸ்தவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் பிஷப்புகளை சந்தித்து பேசினர்.

    திருவனந்தபுரம்:

    கர்நாடகா தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வியடைந்து காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அனைத்து மாநிலத்திலும் கொண்டு செல்ல காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் வலுவாக இருக்கும் மாநிலங்களில் கட்சியை மேலும் பலப்படுத்த முடிவு செய்து அதற்கான வேலைகளில் காங்கிரஸ் இறங்கி உள்ளது.

    இதில் முதல் கட்டமாக கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் விதமான நடவடிக்கை எடுக்க மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் முன்பு கூட்டணியில் இருந்த கேரளா காங்கிரஸ் (மாணி பிரிவு) கட்சியை மீண்டும் தங்கள் அணிக்கு இழுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மாணி பிரிவினர் தற்போது கம்யூனிஸ்டு கூட்டணியில் உள்ளனர். அவர்களுக்கு மத்திய கேரளாவில் கிறிஸ்தவர்களின் ஆதரவு உள்ளது. இதனாலேயே அவர்களை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    மேலும் சமீபத்தில் பாரதிய ஜனதாவினர், கிறிஸ்தவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் பிஷப்புகளை சந்தித்து பேசினர். இதனை கருத்தில் கொண்டும் தான் காங்கிரஸ் இந்த நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்த விரும்பவில்லை.
    • என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நான் மாநில தலைவராக ஒரு பொறுப்பை பெற்றிருக்கிறேன்.

    பெங்களூரு:

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து முதல்-மந்திரி பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

    நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கட்சி மேலிடத்திற்கு வழங்கி ஒரே வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதன் அடிப்படையில் புதிய முதல்-மந்திரி யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க உள்ளது. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவை ஆதரித்து கருத்து கூறி இருப்பதாகவும், அதனால் சித்தராமையா புதிய முதல்-மந்திரியாக அறிவிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, பெரும்பான்மையான லிங்காயது, ஒக்கலிகர் சமூகங்களை சேர்ந்த மடாதிபதிகள் டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இந்தநிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் அழைப்பின்பேரில் சித்தராமையா நேற்று மதியம் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மகன் யதீந்திரா மற்றும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சில எம்.எல்.ஏ.க்களும் சென்றனர்.

    அதுபோல் டி.கே.சிவக்குமாருக்கும் டெல்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் இரவு 7.30 மணி அளவில் பெங்களூருவில் இருந்து விமானத்தில் டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் டெல்லி செல்லும் முடிவை திடீரென ரத்து செய்தார். சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று உறுதியாகி இருப்பதாகவும், இதனால் டி.கே.சிவக்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அதனாலேயே அவர் டெல்லி செல்வதை தவிர்த்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

    இதை தொடர்ந்து டெல்லி மேலிட தலைவர்கள் டி.கே.சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். டி.கே.சிவக்குமாரிடம் போனில் பேசிய பிரியங்கா காந்தி பேச்சுவார்த்தைக்காக டெல்லி வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று டி.கே.சிவக்குமார் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று பிற்பகலில் டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

    முன்னதாக பெங்களூரு விமான நிலையத்தில் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி எனக்கு பலத்தை அளித்துள்ளது, மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையாக உள்ளோம். காங்கிரஸ் என்னும் வீட்டில் நானும் ஒரு பகுதி. யார் முதுகிலும் நான் குத்தமாட்டேன். யாரையும் மிரட்ட மாட்டேன். காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நான் மாநில தலைவராக ஒரு பொறுப்பை பெற்றிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லியில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகிய இருவரிடமும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். அதன்பின்னர் காங்கிரஸ் மேலிடம் புதிய முதல்-மந்திரியை அறிவித்து, பதவி ஏற்பு விழாவை வருகிற 18-ந் தேதி நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுவதால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
    • உடல்நலக்குறைவு காரணமாக நேற்று டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் ரத்தானது.

    பெங்களூரு:

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

    முதல்-மந்திரி பதவி கேட்டு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் என 2 பேரும் பிடிவாதமாக இருப்பதால் யாரை ஆட்சியில் அமர வைப்பது என்று முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது.

    இந்தநிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் அழைப்பின்பேரில் சித்தராமையா நேற்று மதியம் 1 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மகன் யதீந்திரா மற்றும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சில எம்.எல்.ஏ.க்களும் சென்றுள்ளனர்.

    அதுபோல் டி.கே.சிவக்குமாருக்கும் டெல்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் டெல்லி செல்வதாக கூறினார். அவர் இரவு 7.30 மணி அளவில் பெங்களூருவில் இருந்து விமானத்தில் டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் டெல்லி செல்லும் முடிவை திடீரென ரத்து செய்தார்.

    சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று உறுதியாகி இருப்பதாகவும், இதனால் டி.கே.சிவக்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அதனாலேயே அவர் டெல்லி செல்வதை தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுவதால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. சித்தராமையா டெல்லி சென்ற நிலையில் டி.கே.சிவக்குமார் தனது பயணத்தை ரத்து செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் அடுத்த கர்நாடக முதல்-மந்திரி யார் என்பது குறித்து ஆலோசிக்க கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இன்று டெல்லி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உடல்நலக்குறைவு காரணமாக நேற்று டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் ரத்தான நிலையில் இன்று அவர் டெல்லி செல்கிறார்.

    பிரியங்கா காந்தி டி.கே.சிவகுமாரை டெல்லி வருமாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அவர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.

    • கூட்டம் முடிந்து வெளியே வந்த டி.கே.சிவக்குமார் உற்சாகத்துடன் காணப்பட்டார்.
    • சித்தராமையா கொஞ்சம் இறுக்கமாக முகத்தை வைத்திருந்தார்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபையை கைப்பற்றப்போவது யார் என்று கடந்த 6 மாதங்களாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி ஆட்சிக்கு வந்துவிட்டது. இருப்பினும் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது. இதைத்தொடர்ந்து முதல்-மந்திரியை தேர்வு செய்ய நேற்று முன்தினம் மாலை 5.30 மணி அளவில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் நடந்தது.

    இதில் முதல்-மந்திரியை தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் அமைத்த குழுவை சேர்ந்த மராட்டிய முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் ஜிதேந்திர சிங், தீபக் பபாரியா ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதில் டி.கே.சிவக்குமார், ஒக்கலிக சமுதாய மக்கள் காங்கிரஸ் கட்சியை இந்த முறை ஆதரித்துள்ளனர். எனவே தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கூறினார். மேலும் சித்தராமையா- டி.கே.சிவக்குமாருக்கு தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்தளிக்கும் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்கு அவர் ஆட்சேபனை தெரிவித்தார்.

    அதுபோல் சித்தராமையா, புதியதாக தேர்வான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பவரை முதல்-மந்திரியாக ஆக்கும்படி வலியுறுத்தினார். சட்டசபை தேர்தலில் அதிரடியான வேலைகளை செய்து காங்கிரசின் வெற்றிக்குவித்திட்டவர் டி.கே.சிவக்குமார் என்பதாலும், மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் சித்தராமையா என்பதாலும் யாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்குவது என்பதில் காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வாக தனித்தனியாக அழைத்து கருத்துக்களை கேட்டனர். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் பகிரங்கமாக கருத்து கூற விரும்பவில்லை என்றனர். இதையடுத்து அவர்களின் கருத்துக்களை காகிதங்களில் எழுதி ஒரு பெட்டியில் போட்டனர். இந்த ரகசிய ஓட்டெடுப்பால் இந்த கூட்டம் நள்ளிரவை தாண்டி நடந்தது.

    பின்னர் டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் கட்சி மேலிடம் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறினர். இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள், எம்.எல்.ஏ.க்கள் கூறிய கருத்துக்களை அறிக்கையாக தயாரித்த மேலிட பார்வையாளர்கள், அதனை நேற்று டெல்லிக்கு எடுத்துச் சென்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி,ராகுல்காந்தியிடம் ஆலோசனை நடத்தி புதிய முதல்-மந்திரியை தேர்வு பற்றி விவாதித்தனர்.

    பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதிகாலை 1.30 மணி அளவில் நிறைவடைந்தது. கூட்டம் முடிந்து வெளியே வந்த டி.கே.சிவக்குமார் உற்சாகத்துடன் காணப்பட்டார். அவர் சிரித்த முகத்துடன் புறப்பட்டு சென்றார். சித்தராமையா கொஞ்சம் இறுக்கமாக முகத்தை வைத்திருந்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் எந்த பதிலும் கூறாமல் சித்தராமையா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் சதீஷ் ஜார்கிகோளி கூறுகையில், "முதல்-மந்திரி யார் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமும் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. அதுபோல் நானும் எனது கருத்தை மேலிட பார்வையாளர்களிடம் தெரிவித்தேன். முதல்-மந்திரி யார் என்பதை மேலிடம் இறுதி செய்யும். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மந்திரி பதவியை எதிர்பார்க்கிறார்கள். அதுபோல் எனக்கும் மந்திரி பதவி மீது ஆசை உள்ளது. கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அதுபடி செயல்படுவோம்" என்றார்.

    இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் எம்.எல்.ஏ. கூறுகையில், "முதல்-மந்திரி யார் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கள் மேலிடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. அதன்படி கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும்" என்றார்.

    மற்றொரு எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான செலுவராயசாமி நிருபர்களிடம் கூறுகையில், "அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மேலிட பார்வையாளர்களிடம் தங்களது கருத்துக்களை எடுத்து கூறியுள்ளனர். முதல்-மந்திரி யார் என்பது பற்றி மேலிடம் தான் முடிவு செய்ய இருக்கிறது" என்றார்.

    • கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் டெல்லி செல்ல இருந்தார்.
    • என்னிடம் எந்த சட்டமன்ற உறுப்பினரும் இல்லை. கட்சி மேலிடமே முடிவை எடுக்கட்டும்.

    கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, ஆட்சியமைக்கும் முனைப்பில் உள்ளது. அம்மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக நேற்று மாலை காங்கிரஸ் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று சித்தராமையா டெல்லி சென்றுள்ளார். இவரைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் டெல்லி செல்ல இருந்தார். இந்த நிலையில், டெல்லி பயணத்தை ரத்து செய்த டிகே சிவகுமார் விமான நிலையம் செல்லாமல் வீடு திரும்பினார்.

    இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் இன்று டெல்லி செல்லவில்லை. மொத்தம் 135 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். என்னிடம் எந்த சட்டமன்ற உறுப்பினரும் இல்லை," என்று டிகே சிவகுமார் தெரிவித்தார்.

    "நான் போர்க்கொடி தூக்கவில்லை. யாரையும் மிரட்டவில்லை. முதலமைச்சரை தேர்வு செய்யும் பொறுப்பை கட்சி மேலிடத்திடம் விட்டுவிட்டேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மை ஆதரவு சித்தராமையாவுக்கு இருந்தால் அவருக்கு எனது வாழ்த்துகள்," என்று அவர் மேலும் தெரிவித்தார். 

    டெல்லி பயணத்தை ரத்து செய்ததோடு, சித்தராமையாவுக்கு டிகே சிவகுமார் வாழ்த்து தெரிவித்து இருப்பதால் கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ×