search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95993"

    • 135 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் சுமார் 70 சதவீதம் பேர் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.
    • கர்நாடக புதிய முதல்-மந்திரி தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்பு விழா வருகிற 18-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் முதல்-மந்திரி பதவியை பெறுவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இவர்களில் யாரை முதல்-மந்திரியாக தேர்வு செய்வது என்பது குறித்து நேற்று பெங்களூரில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். மாலை 6.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது.

    5 நட்சத்திர ஓட்டலில் நடந்த அந்த ஆலோசனை கூட்டத்தில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் யாரை முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்று எழுத்து பூர்வமாக எழுதி தரும்படி கேட்கப்பட்டது.

    மினி ஓட்டெடுப்பு போன்று இது நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் எழுதி கொடுத்த வாக்குகளுடன் மேலிட தலைவர்கள் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றனர். டெல்லியில் இன்று எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஆதரவாக முடிவு தெரிவித்துள்ளனர் என்பது ஆய்வு செய்யப்படும்.

    அதன்பிறகு புதிய முதல்-மந்திரி யார் என்பதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பார். கார்கேவுக்கு இந்த அதிகாரத்தை வழங்கி நேற்று நடந்த கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    135 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் சுமார் 70 சதவீதம் பேர் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் மீண்டும் முதல்-மந்திரியாக தேர்வு பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    அதே சமயத்தில் டி.கே.சிவக்குமாருக்கு மேலிட தலைவர்களின் ஆதரவு இருக்கிறது. எனவே புதிய முதல்-மந்திரி யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதற்கிடையே கர்நாடக புதிய முதல்-மந்திரி தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்பு விழா வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்களாக 33 பேர் தேர்வாக வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே தங்களுக்கு துணை முதல்-மந்திரி உள்பட 5 முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மந்திரிகள் பதவி வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் காங்கிரஸ் தலைவருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பஜ்ரங் தளம் அமைப்பு பற்றி அவதூறாக பேசியதாக இந்து சுரக்சா அமைப்பின் தலைவர் ஹிதேஷ் பரத்வாஜ் அவதூறு வழக்கை தொடர்ந்து உள்ளார்.
    • மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பஞ்சாப் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

    சண்டிகா்:

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் சங்ரூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. பஜ்ரங் தளம் அமைப்பு பற்றி அவதூறாக பேசியதாக இந்து சுரக்சா அமைப்பின் தலைவர் ஹிதேஷ் பரத்வாஜ் இந்த அவதூறு வழக்கை தொடர்ந்து உள்ளார்.

    இந்த வழக்கில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பஞ்சாப் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. ஜூலை 10-ந்தேதி அவர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்றார் கார்கே.
    • கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற இழுபறி நீடிக்கும் நிலையில் பயணம்.

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, கர்நாடக முதல்வர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

    அம்மாநிலத்தில் முதல்வர் பதவியை பெற சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே போட்டி நிலவுகிறது.

    கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். தற்போது வரை எல்லாமே சரியாக நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் ஆட்சியமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற இழுபறி நீடிக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் சித்தராமையா இன்று டெல்லி செல்கிறார்.

    இன்று பிற்பகல் 1 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்லும் சித்தயாமையாவின் இந்த பயணம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, கர்நாடக முதல்வர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கர்நாடக மாநில முதல்வரை கட்சி மேலிடம் தேர்வு செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்.

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, கர்நாடக முதல்வர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

     

    இந்த நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற 135 சட்டமன்ற உறுப்பினர்களுடன், சுயேட்சையாக வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    சட்டமன்ற கூட்டம் காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷில் குமார் ஷிண்டே, பொதுச் செயலாளர் ஜிதேந்திர சிங் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொது செயலாளர் தீபக் பபாரியா ஆகியோர் பார்வையாளர்களாக செயல்பட்டனர். அதன்படி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் முதல்வரை கட்சி மேலிடம் தேர்வு செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. 

    • முதல்வர் பதவியை பெற சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே போட்டி நிலவுகிறது.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எம்எல்ஏ-க்கள் கருத்தை கேட்டறிந்து கட்சி தலைமைக்கு அறிக்கை சமர்பிக்க குழு உருவாக்கம்.

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் முனைப்பில் உள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அம்மாநிலத்தில் முதல்வர் பதவியை பெற சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே போட்டி நிலவுகிறது.

    இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எம்எல்ஏ-க்கள் கருத்தை கேட்டறிந்து கட்சி தலைமைக்கு அறிக்கையாக சமர்பிக்க மூன்று பேர் அடங்கிய பார்வையாளர்கள் குழு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். தற்போது வரை எல்லாமே சரியாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஆட்சியமைக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    "யார் வாக்களித்தார்கள், யார் வாக்களிக்கவில்லை என்பதை கடந்து மாநில மக்களுக்கு சேவையாற்றுவதே எங்களின் குறிக்கோள். கர்நாடக மக்கள் பாஜக-வை நிராகரித்துள்ளனர். மக்கள் பணவீக்கம், வேலையின்மை மற்றும் ஊழல் போன்ற பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகின்றனர். இதன் காரணமாகவே காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது," என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • ஆளும் கட்சியாக இருந்த பா.ஜனதாவுக்கு எதிரான மனநிலையும், காங்கிரசின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளும் காங்கிரசை கைதூக்கி விட்டுள்ளது.
    • பா.ஜனதாவின் வாக்கு 36 சதவீதத்தில் இருந்து அதிகரிக்கவில்லை. ஆனால் காங்கிரசுக்கு 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

    கர்நாடகத்தில் காங்கிரசின் வெற்றி பெரு விரலை உயர்த்தி கர்வப்பட வைத்துள்ளது. அதேநேரத்தில் பா.ஜனதாவுக்கு பாடத்தையும் கற்றுக்கொடுத்துள்ளது.

    137 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய கட்சி என்று மார்தட்டினாலும் 2014 மற்றும் 2019 பாராளுமன்ற தேர்தல்களில் மிகப்பெரிய தோல்வியை காங்கிரஸ் கட்சி சந்தித்தது.

    மோடி என்ற மிகப்பெரிய ஜாம்பவானின் முன்பு கையின் ஜம்பம் பலிக்காமல் போனது என்பதே உண்மை.

    இனி காங்கிரஸ் கரை சேருமா? என்ற எண்ணம் சொந்த கட்சியினரிடமே ஏற்பட்டிருந்த நிலையில் 2018-ல் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 'கை' ஓங்கியிருக்கும் நிலையில் காங்கிரசுக்கு புது நம்பிக்கை கொடுத்துள்ளது. காங்கிரஸ், உள்ளூர் அரசியலை கையில் எடுத்து லாவகமாக அரசியல் செய்தது.

    1980-ல் பா.ஜனதா தொடங்கப்பட்டதில் இருந்து இப்போதுதான் இவ்வளவு பெரிய ஊழல் புகாரில் சிக்கியது. காங்கிரஸ் அதை கையில் எடுத்தது. 40 சதவீத கமிஷன் அரசு என்ற கோஷம் சாதாரண மக்கள் வரை சென்றடைந்தது.

    அதை உடைக்க மோடி என்ற பிம்பத்தை மட்டுமே பா.ஜனதா நம்பியது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் மக்கள் அதை நிராகரித்துவிட்டார்கள். பா.ஜனதாவில் உள்ளூர் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள்.

    ஆனால் காங்கிரஸ் உள்ளூர் தலைவர்களையே நம்பியது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் தங்களுக்குள் இருக்கும் கவுரவ பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு தீவிரமாக பணியாற்றியதும் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    சமூக ரீதியான பிரச்சினைகள் காங்கிரசுக்கு கை கொடுத்திருக்கிறது. மாண்டியா, ஹசன் பகுதியில் உள்ள ஒக்கலிகர் சமூகம் காங்கிரசுக்கு பெருமளவில் ஆதரவு அளித்துள்ளது. லிங்காயத்து சமூக ஆதரவு எதிர்பார்த்த அளவு பா.ஜனதாவுக்கு கிடைக்காமல் போனது.

    லிங்காயத்து சமூகத்தின் முகமாக பார்க்கப்படும் எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகிவிட்டார். அதேபோல் பா.ஜனதாவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், சவடி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததும் லிங்காயத்து சமூக வாக்குகள் காங்கிரசுக்கு கிடைக்க உதவி புரிந்தது.

    வழக்கமாக மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு வாக்களிக்கும் இஸ்லாமியர்கள் இந்த முறை காங்கிரசுக்கு ஆதரவாக திரும்பி இருக்கிறார்கள்.

    காங்கிரசின் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளான பஸ்களில் பெண்கள் இலவச பயணம், மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும், 200 யூனிட் இலவச மின்சாரம், 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1500 என்ற அறிவிப்புகள் மக்களை வெகுவாக கவர்ந்ததும் ஒரு காரணம்.

    கர்நாடக தேர்தல் வெற்றி என்பது அந்த கட்சிக்கு சில மலரும் நினைவுகளையும் கண்முன் கொண்டு வந்துள்ளது. 1969-ல் பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டத்தில் சிண்டிகேட் மூலம் இந்திரா காந்தி வெளியேற்றப்பட்டார்

    அப்போது காங்கிரசின் சின்னம் பசுவும் கன்றும். கட்சி பிளவுபட்டதை அடுத்து இந்திரா கை சின்னத்தை சிக்மகளூருவில் அறிமுகப்படுத்தினார். அதாவது 1978-ல் அந்த தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இந்திரா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அதன்பிறகு 1980 பாராளுமன்ற தேர்தலில் கை சின்னத்தில் நாடு முழுவதும் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றது. மீண்டும் ஆட்சியை பிடித்தது. அதேபோல் 1999 பாராளுமன்ற தேர்தலில் பெல்லாரி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா தலைவர் மறைந்த சுஷ்மா சுவராஜை தோற்கடித்தார்.

    கடந்த கால இந்த வரலாற்று நிகழ்வுகளை சிக்மங்களூரில் நடந்த பிரசாரத்தின் போது பிரியங்கா காந்தி குறிப்பிட்டு பேசினார். பாட்டிக்கு மறுவாழ்வு கொடுத்த மாநிலம் கர்நாடகா.

    அதே போல் மீண்டும் காங்கிரசுக்கு கை கொடுங்கள் என்று உருக்கமாக பேசினார். இதுவும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த தவறவில்லை. சிக்மங்களூரில் அனைத்து தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது.

    ஆளும் கட்சியாக இருந்த பா.ஜனதாவுக்கு எதிரான மனநிலையும், காங்கிரசின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளும் காங்கிரசை கைதூக்கி விட்டுள்ளது. அதேநேரம் பா.ஜனதாவின் வாக்கு 36 சதவீதத்தில் இருந்து அதிகரிக்கவில்லை. ஆனால் காங்கிரசுக்கு 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

    1985 முதல் 38 ஆண்டுகளாக ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வருவதுதான் வரலாறு. கடைசியாக 1999 தேர்தலில் 132 தொகுதிகளை பெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அப்போது எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தார். அதன்பிறகு 24 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் தனி மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    • 2008-ம் ஆண்டு கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி அமைத்தபோது காங்கிரஸ் சார்பில் சித்தராமையாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது.
    • 2006-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 8 ஆண்டு காலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தை இழந்திருந்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இருவருமே கடுமையாக உழைத்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை வளர்த்து வெற்றியின் பாதைக்கு கொண்டு சென்ற பெருமை இவர்கள் இருவருக்கும் உண்டு.

    கர்நாடக காங்கிரசில் இருபெரும் தலைவர்களாக இருக்கும் சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோர் அரசியலில் கடந்து வந்த பாதை வருமாறு:-

    கர்நாடகாவில் குறிப்பிட்ட வாக்கு வங்கியை கொண்ட குருபா ஜாதியை சேர்ந்தவர் சித்தராமையா. இவர் ஆரம்பத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.

    கடந்த 2004-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்தது. அப்போது சித்தராமையா மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னணி தலைவராக இருந்தார். இதையடுத்து அவருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது.

    ஆனால் கூட்டணி ஆட்சியின்போது தனக்கு முதல் மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு முதல் மந்திரி பதவி வழங்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருந்தார்.

    மேலும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடாவுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சித்தராமையா அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    பின்னர் 2006-ம் ஆண்டு சித்தராமையா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தனது செல்வாக்கை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியில் முக்கிய இடத்துக்கு வந்தார்.

    2008-ம் ஆண்டு கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி அமைத்தபோது காங்கிரஸ் சார்பில் சித்தராமையாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது.

    2006-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 8 ஆண்டு காலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தை இழந்திருந்தது. காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அக்கட்சி தலைவர்களுடன் சித்தராமையாவும் கடுமையாக உழைத்தார். அவரது உழைப்பின் பலனாக 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றது.

    இதனால் சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது. 5 ஆண்டு காலம் அவரது ஆட்சி நீடித்தது.

    அதன்பிறகு 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. ஆனாலும் மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையில் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியை அமைத்தது. கூட்டணி அரசில் சித்தராமையாவுக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. ஆனாலும் இரு கட்சிகளின் முன்னணி தலைவர்கள் அங்கம் வகிக்கும் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சித்தராமையா பணியாற்றினார்.

    2019-ம் ஆண்டு மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. அப்போது சித்தராமையாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது.

    எதிர்க்கட்சி தலைவராக சித்தராமையா திறம்பட பணியாற்றினார். பா.ஜனதா ஆட்சியின் முறைகேடுகளை சட்டசபையிலும், மக்கள் மத்தியிலும் சித்தராமையா பகிரங்கப்படுத்தினார்.

    பா.ஜனதாவின் கொள்கைகளை அவர் துணிவுடன் எதிர்த்தார். இதையடுத்து அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகியது. இது காங்கிரசின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

    மேலும் சித்தராமையா தேர்தல் பிரசாரத்தின்போது இது தனது கடைசி தேர்தல் என்று கூறி இருந்தார். எனவே தனக்கு மீண்டும் முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சித்தராமையா காத்திருக்கிறார்.

    டி.கே.சிவகுமார்

    கர்நாடகாவில் 2-வது பெரிய சமூகமான ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர் டி.கே.சிவகுமார். இவர் சித்தராமையாவுக்கு துணையாக இருந்து கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தினார். இவர் மாணவ பருவத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களுள் ஒருவராக வளர்ந்து வந்தார். 1989-ம் ஆண்டு முதல் சாந்தனூர், கனகபுரா தொகுதிகளில் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்றுள்ளார். இவர் நேரு குடும்பத்தின் செல்லப் பிள்ளையாகவும் விளங்கி வருகிறார்.

    டி.கே.சிவகுமார் அரசியலில் ராஜீவ் காந்தியால் அடையாளம் காட்டப்பட்டு சோனியா காந்தியால் வளர்த்தெடுக்கப்பட்டவர்.

    கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக தினேஷ் குண்டுராவ் பதவியில் இருந்தபோது 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதால் அதற்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து 2020-ம் ஆண்டு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக டி.கே.சிவகுமார் நியமிக்கப்பட்டார்.

    கடந்த 3 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியை தொண்டர்கள் பலம் கொண்ட கட்சியாக மாற்ற டி.கே.சிவகுமார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். பா.ஜனதா அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். மேலும் விலைவாசி உயர்வை கண்டித்தும், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த கோரியும் போராட்டங்களில் ஈடுபட்டார்.

    பா.ஜனதா கட்சியின் குறைபாடுகளை மக்கள் மத்தியில் சுட்டிக்காட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இதன்மூலம் கர்நாடகாவில் சரிந்து கிடந்த காங்கிரசின் செல்வாக்கை மீட்டெடுத்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றியானது தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி கொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

    எனவே முதல்-மந்திரி பதவி தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் டி.கே.சிவகுமார் காத்திருக்கிறார்.

    • தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தொகுதிகளிலும் பா.ஜனதா தோல்வியையே தழுவி இருக்கிறது.
    • புலிகேசிநகர் (தனி), கோலார் தங்க வயல் (தனி), ஜெயநகர், ஹனூர் ஆகிய தொகுதிகளில் தமிழ் வேட்பாளர்கள் தோல்வியை தழுவியது தமிழ் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    கர்நாடகத்தில் சிக்மங்களூர், கோலார், மாண்டியா, ராம்நகர், குடகு, மைசூரு உள்பட 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட பா.ஜனதா வெற்றி பெறாதது அந்த கட்சியினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

    இதேபோல் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தொகுதிகளிலும் பா.ஜனதா தோல்வியையே தழுவி இருக்கிறது. புலிகேசிநகர் (தனி), கோலார் தங்க வயல் (தனி), ஜெயநகர், ஹனூர் ஆகிய தொகுதிகளில் தமிழ் வேட்பாளர்கள் தோல்வியை தழுவியது தமிழ் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ராமநகரா, நரசிம்ஹ ராஜா, பெல்காம் வடக்கு, சிவாஜி நகர், சாம்ராஜ் பேட், குல்பர்கா வடக்கு, மங்களூரு, சாந்திநகர், பிதூர் ஆகிய 9 தொகுதிகளில் இஸ்லாமிய வேட்பாளர்களை காங்கிரஸ் களம் இறக்கியது. அவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

    • காங்கிரசார் ெபாதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
    • கர்நாடக மாநில சட்டபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை கொண்டாடினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகர காங்கிரஸ் சார்பில் கர்நாடக மாநில சட்டபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் காந்தி சிலை ரவுண்டானாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

    நகர தலைவரும், கவுன்சிலருமான சங்கர் கணேஷ் தலைமை தாங்கினார். ஜ.என்.டி.யு.சி. தலைவர் பிரபாகர், டைகர் சம்சுதீன், பி.கே.துரை, பால்கனி, சிவசுப்பிரமணி, ரவிராஜா, வெங்கட்ராமன், ராஜாராம், ஸ்ரீமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு பெங்களூருவில் நடக்கிறது.
    • சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே முதல்-மந்திரி பதவியை பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

    224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. நள்ளிரவில்தான் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது.

    காங்கிரஸ் கட்சி 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. 1999-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் காங்கிரஸ் 132 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது.

    காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. கடைசியாக 1989 தேர்தலில் 178 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. அதன் பிறகு தற்போது சாதனை வெற்றியை பெற்று முத்திரை பதித்தது.

    ஆளும் பா.ஜனதா அனைத்து தொகுதியிலும் போட்டியிட்டு 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. மதசார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதியை கைப்பற்றியது. சுயேட்சை மற்றும் இதர கட்சிகள் 4 இடங்களில் வென்றன.

    ஜெயநகர் தொகுதியில் முதலில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 294 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    பின்னர் மறுவாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா வேட்பாளர் சி.கே.ராமமூர்த்தி 17 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கூறியதால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. இதனால் நள்ளிரவில்தான் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது.

    ஆட்சி அமைக்க 113 இடங்களே தேவை. ஆனால் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அந்த கட்சிக்கு 42.88 சதவீத ஓட்டுகள் கிடைத்தது.

    2018-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரசுக்கு 55 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது. கடந்த தேர்தலில் 80 இடங்களில் அந்த கட்சி வெற்றி பெற்று இருந்தது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தன. ஆனால் கணிப்புகளை தாண்டி காங்கிரஸ் தனி பெரும்பான்மை பெற்றது.

    பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்தும் பா.ஜனதா கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

    36 சதவீத ஓட்டுகளை பெற்று 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முறை அந்த கட்சி 38 இடங்களை இழந்தது.

    எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் இதர கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்கும் கனவில் இருந்த குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 13.29 சதவீத ஓட்டுகளே பெற்றது. இந்த தேர்தலில் 18 இடங்களை அந்த கட்சி இழந்தது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு பெங்களூருவில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி தேர்ந்து எடுக்கப்பட உள்ளார். அகில இந்திய பார்வையாளர்கள் இதற்காக பெங்களூரு வந்துள்ளனர். அவர்களது மேற்பார்வையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்படுகிறது.

    கர்நாடக முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே முதல்-மந்திரி பதவியை பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது.

    இரு தரப்பு ஆதரவாளர்களும் முதல்-மந்திரி பதவியை வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவரே முதல்-மந்திரி ஆவார்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முதல்-மந்திரி தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

    சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே போட்டி நிலவினாலும் முதல்-மந்திரியை ஒரு மனதாக தேர்வு செய்யவே காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது. இது தொடர்பாக மேலிட பார்வையாளர்கள் நேற்று இரவு இருவரிடமும் ஆலோசனை மேற்கொண்டனர். இதனால் ஒருமனதாக முதல்-மந்திரி தேர்வு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இரு தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாகவும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    முதல்-மந்திரி தேர்வுக்கு பிறகு கவர்னரை சந்தித்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரும். கர்நாடக புதிய முதல்-மந்தரி பதவி ஏற்பு விழா வருகிற 17 அல்லது 18-ந் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஏராளமான இலவச திட்டங்களை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.
    • 2018-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த சித்தராமையா ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருந்தார்.
    • கடந்த பா.ஜனதா ஆட்சியில் அந்த கடன் ரூ.3 லட்சம் கோடியை தாண்டியது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ் கட்சி 130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஏராளமான இலவச திட்டங்களை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

    அவற்றில் முக்கியமான 5 திட்டங்களில், பெண்களுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை, வீடுகளுக்கு தலா 200 யூனிட் இலவச மின்சாரம், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா 10 கிலோ அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தலா ரூ.3 ஆயிரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் ஆகியவை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த இலவச திட்டங்கள் காங்கிரஸ் வெற்றிக்கு கை கொடுத்தது என்றால், அது மிகையாகாது. இந்த இலவச திட்டங்கள் காங்கிரசின் பொய் வாக்குறுதி என்று பிரதமர் மோடி, அமித்ஷா, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தலைவர்கள் கூறினார்கள். ஆனாலும் வீடு, வீடாக உத்தரவாத அட்டையை காங்கிரஸ் வழங்கியதுடன், மந்திரிசபையின் முதல் கூட்டத்திலேயே இலவச திட்டங்களுக்கு அனுமதி வழங்குவோம் என தலைவர்கள் கூறினார்கள். பா.ஜனதாவும் அரை லிட்டர் பால் இலவசம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தது.

    ஜனதாதளம் (எஸ்) கட்சியும் ஆண்டுக்கு 5 இலவச கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட இலவசங்களை அறிவித்திருந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளதால், அந்த கட்சி அறிவித்த இலவச திட்டங்களை நிறைவேற்றுமா?, அது சாத்தியமாகுமா?, இதற்காக ஆண்டுக்கு எத்தனை கோடி ரூபாய் தேவை? என்பதை பற்றி பார்க்கலாம்.

    அதாவது வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்காக ஆண்டுக்கு சராசரியாக ரூ.25 ஆயிரத்து 800 கோடி தேவை ஆகும். அதுபோல், பி.பி.எல்.(வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர்) கார்டு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்குவதற்காக ஆண்டுக்கு சராசரியாக ரூ.30 ஆயிரம் கோடி தேவையாகும். ஏனெனில் மாநிலம் முழுவதும் 1.28 கோடி பெண்கள் பி.பி.எல். கார்டு வைத்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க ரூ.30 ஆயிரம் கோடி தேவை என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதற்காக ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி தேவைப்படும் என கருதப்படுகிறது. இதுதவிர வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கவும், 10 கிலோ இலவச அரிசி வழங்குவதற்காகவும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி முதல் ரூ.17 ஆயிரம் கோடி வரை தேவைப்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    ஒட்டு மொத்தமாக காங்கிரஸ் அளித்துள்ள முக்கியமான இந்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ.75 ஆயிரம் கோடி தேவையாகும். கடந்த 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்-மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை ரூ.3 லட்சம் கோடிக்கு தாக்கல் செய்திந்தார். அதே நேரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த சித்தராமையா ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருந்தார். கடந்த பா.ஜனதா ஆட்சியில் அந்த கடன் ரூ.3 லட்சம் கோடியை தாண்டியது.

    இதன்மூலம் கர்நாடக அரசுக்கான கடன் தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், அந்த கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டியும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்காக மேலும் கடன் வாங்க வேண்டிய நிலை தான் ஏற்படும். இதனால் தான் காங்கிரசால் இலவச திட்டங்களை நிறைவேற்ற முடியுமா?, அது சாத்தியமாகுமா? என்ற கேள்வியை பொருளாதார நிபுணர்கள் எழுப்பி உள்ளனர். என்றாலும், காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? அதற்காக தலைவர்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன? என்பதை பொருத்திருந்ததுதான் பார்க்க வேண்டும்.

    • பா.ஜனதா தோல்வியை சந்தித்துள்ளது.
    • காங்கிரஸ் அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறது.

    பெங்களூரு

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதா தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்திருந்தார்கள்.

    ஆனாலும் பா.ஜனதா தோல்வியை சந்தித்துள்ளது. இதன்மூலம் கர்நாடகத்தில் 1985-ம் ஆண்டுக்கு பின்பு ஆட்சியில் இருக்கும் கட்சி, தொடர்ந்து வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்ததில்லை என்ற வரலாறு தொடருகிறது. அதாவது 1985-ம் ஆண்டுக்கு பின்பு ஒவ்வொரு கட்சியும் மாறி, மாறி வெற்றி பெற்று தான் ஆட்சியை பிடித்திருந்தது.

    அதன்படி, தற்போதும் ஆட்சியில் இருந்த பா.ஜனதாவால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாமல், காங்கிரஸ் அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறது. கர்நாடக அரசியலில் கடந்த 38 ஆண்டு வரலாற்றில் தொடர்ந்து இருமுறை எந்த கட்சியும் ஆட்சியை தக்க வைத்து கொண்டதில்லை என்பது நேற்று நடந்த தேர்தல் முடிவுகள் மூலமாக உறுதியாகி இருக்கிறது.

    ×