search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96179"

    கோவையில் நடந்து விபத்தில் 6 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை கலெக்டர் மற்றும் எம்எல்ஏ நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்கள்.

    கோவை:

    கோவை சுந்தராபுரத்தில் பயணிகள் கூட்டத்தில் சொகுசு கார் புகுந்து 6 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்களை இன்று கலெக்டர் ஹரிஹரன் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

    கோவை சுந்தராபுரத்தில் இன்று காலை 10.30 மணியளவில் தனியார் வாகனம் பயணிகள் மீது மோதியதில் 6 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    அவர்களில் 2 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியிலும், மற்ற 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கார் டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டருடன் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, எட்டிமடை சண்முகம் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் வந்து இருந்தனர்.

    சங்கராபுரம் அருகே தறிகெட்டு ஓடிய பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். #SchoolBusAccident
    சங்கராபுரம்:

    சங்கராபுரத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் சங்கராபுரம், பிரம்மகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்களை பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வருவதற்காக வேன்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று காலை பிரம்மகுண்டம் பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் ஒன்று சங்கராபுரம் நோக்கி புறப்பட்டது. அந்த வேனை சங்கராபுரத்தை சேர்ந்த நசீர் மகன் காஜா ஷரீப் (வயது 22) என்பவர் ஓட்டினார்.

    சங்கராபுரம் அருகே மூக்கனூர் என்ற இடத்தில் வந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவர்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அபயக்குரல் எழுப்பினர்.

    இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த 12-ம் வகுப்பு மாணவிகள் கீதா, சுப்ரியா, மாணவர்கள் பரகான், நிசார் அலி, முஷரப், 11-ம் வகுப்பு மாணவி பிரிதா(16), மாணவர்கள் சஞ்சய், முஷரப், 10-ம் வகுப்பு மாணவர்கள் ஷாவித், ஜெயக்குமார் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதில் மாணவி பிரிதா மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 
    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வக்காரமாரி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 44), விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளராக உள்ளார். ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கீழ் புளியங்குடி தாமரை ஏரியில் வண்டல் மண் எடுத்து விவசாயிகளுக்கு கொடுக்கும் ஒப்பந்தத்தையும் பெற்றுள்ளார்.

    இந்த ஏரியில் இருந்து வண்டல் மண் ஏற்றிசெல் ம் டிராக்டர்கள் கீழ்புளியங்குடி பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி வழியாக சென்றுவந்தது. இதனால் அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது என கூறி அந்த வழியாக டிராக்டர்களை இயக்க அனுமதிக்கக்கூடாது என பள்ளி தலைமை ஆசிரியர் மெகரூன்நிஷா சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.

    இதை அறிந்த ரவி பள்ளி தலைமை ஆசிரியர் மெகரூன் நிஷாவின் கணவர் சேட்டிடம் உங்கள் மனைவி எதற்காக புகார் கொடுத்தார் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு ரவி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 15 பேருடன் ஸ்ரீமுஷ்ணம் அண்ணா சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சேட் மற்றும் அவரது உறவினர்களுக்கும் ரவி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கினர்.

    இந்த தாக்குதலில் ரவி மற்றும் சேட் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ரவியை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து இரு தரப்பினரும் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தனர். இதில் ரவி கொடுத்த புகாரின் பேரில் சேட் உள்பட அவரது உறவினர்கள் 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சேட் அளித்த புகாரின் பேரில் ரவி உள்பட 15 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் பாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த மோதல் சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கொண்டு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    விருத்தாசலம் அருகே சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் எதிர்பாரதவிதமாக பால் வேன் விபத்துக்குள்ளானதில் வேன் டிரைவர் அன்பழகன், கிளீனர் முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். #accident
    விருத்தாசலம்:

    கும்பகோணத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி நேற்று இரவு பால் வேன் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த வேனை அன்பழகன் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். முருகன் கிளீனராக இருந்தார்.

    அந்த வேன் நள்ளிரவு 12 மணிக்கு விருத்தாசலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே வந்தபோது சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் எதிர்பாரதவிதமாக மோதியது.

    இந்த விபத்தில் வேன் டிரைவர் அன்பழகன், கிளீனர் முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து விருத்தாசலம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #accident
     
    நிலக்கோட்டை அருகே விபத்து ஏற்படுத்திய மணல் லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வைகையாற்றில் மணல் கொள்ளை அதிகளவில் நடைபெற்றுவருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணல் லாரியை சிறைபிடித்து இரவு முழுவதும் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதும் மணல் கொள்ளை தொடர்ந்து கொண்டே இருந்தது.

    மேலும் மணல் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இன்று காலை அசுர வேகத்தில் வந்த மணல் லாரி குண்டலப்பட்டி பிரிவு அருகே சாலையோரம் நடந்து சென்ற திருப்பதி மனைவி சாத்தாவு(வயது43) என்ற பெண் மீது பயங்கரமாக மோதியது. படுகாயமடைந்த அவர் மதுரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதனை தொடர்ந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் அணைப்பட்டி- நிலக்கோட்டை சாலை குண்டலப் பட்டிபிரிவு அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்து விரைந்து சென்ற விளாம்பட்டி இன்ஸ் பெக்டர் சுகு மாறன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    கிராமமக்கள் சார்பாக 3 கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நஷ்டஈடு வழங்கவேண்டும். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பகுதியில் தொடர்ந்து வரும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தருமபுரி அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் உறவினர் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

    தருமபுரி:

    பெங்களூருரில் இருந்து சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைக்கு ஆம்னி பஸ் பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. பஸ்சை திருச்சி மாவட்டம், வெங்கடத்தானூர் பகுதியை சேர்ந்த மணி (வயது49) என்பவர் ஒட்டினார்.

    இன்று அதிகாலை தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டையை அடுத்த குடிப்பட்டி மேம்பாலம் அருகே வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென நடுரோட்டில் பிரேக் போட்டார். அப்போது எதிர்பாராத விதமாக கண்இமைக்கும் நேரத்தில் லாரி மீது ஆம்னிபஸ் மோதியது. இதில் பஸ் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. 

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அதியமான் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதில் பயணம் செய்த புதுக்கோட்டையை சேர்ந்த சுதா (39). இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயத்தின் அண்ணன் மகள் ஆவார். தேவக்கோட்டையை சேர்ந்த மகேஷ் (36). முசிறியை சேர்ந்த கோபி (22), கொளத்தூரை சேர்ந்த சுரேஷ் (42), மற்றும் டிரைவர் மணி ஆகிய 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிணத்துக்கடவு அருகே இன்று காலை மொபட் மீது அரசு பஸ் மோதி பெண் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    கிணத்துக்கடவு:

    கோவை சுண்டக்கா முத்தூரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (55) கட்டிட தொழிலாளி. கோவை குளத்துப்பாளையத்தை சேர்ந்த ருக்மணி (40). சித்தாள். இவர்கள் இருவரும் இன்று காலை கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம் பாளையத்தில் கட்டிட வேலைக்கு மொபட்டில் சென்றனர். கோவை-பொள்ளாச்சி சாலையில் ஏழூர் பிரிவு பகுதியில் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது கோவையில் இருந்து பழனிக்கு அரசு பஸ் வந்தது. இந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மொபட் மீது மோதியது. இதில் ருக்மணி பஸ் சக்கரத்தில் சிக்கினார். அவர் மீது சக்கரம் ஏறி இறங்கியது. அவர் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    வெங்கடாசலம் படுகாயம் அடைந்தார். மொபட் மீது மோதிய பின்னரும் கட்டுக்குள் வராத பஸ் அந்த வழியாக மற்றொரு மொபட்டில் சென்ற செட்டிப்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்த ரவிக்குமார் (40), போத்தனூர் மாந்தோப்பு ரெயில்வே காலனி நாகராஜன் (46) ஆகியோர் மீது மோதியது. இதில் இருவரும் காயம் அடைந்தனர். இவர்களும் கட்டிட தொழிலாளர்கள் ஆவார்கள். வேலைக்கு சென்ற போது விபத்தில் சிக்கி கொண்டனர்.

    இது குறித்து கிணத்துக் கடவு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த வெங்கடாசலம், ரவிக்குமார், நாகராஜன் ஆகியோரை மீட்டுசிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான ருக்மணி உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைக்கப்பட்டது.

    கிணத்துக்கடவு ஏழூர் பிரிவு பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இப் பகுதியில் தொடர் விபத்து நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் பீதியில் உள்ளனர். எனவே விபத்தை தடுக்க அப் பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    களக்காடு அருகே காரும், பைக்கும் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள வன்னியன்குடியிருப்பை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 22). இவரும், ஏர்வாடி நாடார் குடியிருப்பை சேர்ந்த அர்ஜூன் (20) என்பவரும் ஒரு பைக்கில் நேற்று மாலை களக்காட்டில் இருந்து ஏர்வாடிக்கு சென்று கொண்டிருந்தனர். எஸ்.என்.பள்ளிவாசல் அருகே சென்ற போது எதிரே நாகர்கோவிலில் இருந்து கல்லிடைகுறிச்சி நோக்கி சென்ற காரும், பைக்கும் மோதிக் கொண்டன.

    இந்த விபத்தில் பைக்கில் சென்ற அஜித்குமார், அர்ஜூன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் அஜித்குமார் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், அர்ஜூன் வள்ளியூர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் சிப்பாய் துப்பாக்கியால் சுட்டதில், எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். #JammuKashmir
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள அக்னூர் என்ற இடத்தில், எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் சிப்பாய் துப்பாக்கியால் சுட்டதில், எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து அவருக்கு அந்த பகுதியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக உதாம்பூரில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    எல்லைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் இந்திய வீரர்கள் படுகாயம் அடைவது இது 2-வது தடவை ஆகும். கடந்த 7-ந் தேதி இதே மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் இந்திய வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.  #tamilnews 
    புதுக்கோட்டையில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் பெண் பலியானார். பெண் பார்க்க சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அசோக்நகரை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 74). இவரது உறவினர்கள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ளனர். இந் நிலையில் மீனாட்சி அவர்களை பார்க்க செஞ்சிக்கு சென்றார். பின்னர் உறவினர்கள் ஜெயந்தி (60), ஜெயலட்சுமி,  நிசாந்தன் (1) சாரதா உள்பட 5 பேருடன் ஒரு வாடகை காரில் திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக புதுக்கோட்டைக்கு சென்றனர். காரை செல்வம் என்பவர் ஓட்டினார்.

    கார் இன்று அதிகாலை திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை சிப்காட் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால் டிரைவரின் கட்டுபாட்டை இழந்த கார் தாறுமாறாக  ஓடி சாலையில் ஒரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் மீனாட்சி சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த ஜெயந்தி, ஜெயலட்சுமி, நிசாந்தன், சாரதா, கார் டிரைவர் செல்வம் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த மீனாட்சி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
    குன்னூர்:

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் இயக்குவதற்காக 14 புதிய பஸ்கள் ஊட்டி கோட்டத்திற்கு வழங்கப்பட்டது. இதன் இயக்கத்தை கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். குன்னூர் கிளைக்கு வழங்கப்பட்ட புதிய பஸ்களில் ஒன்று நேற்று குன்னூரில் இருந்து கோவைக்கு இயக்கப்பட்டது. இந்த பஸ்சில் 52 பயணிகள் பயணம் செய்தனர்.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் கே.என்.ஆர். நகர் இடையே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் தாறுமாறாக சென்று எதிரே கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த லாரி மீது மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும், பஸ்சில் பயணம் செய்த கோவையை சேர்ந்த பத்மாவதி (வயது 45), குன்னூரை சேர்ந்த உஷா (50), கரோலின் (50), சுந்தரி (60) ஆகிய 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் சக பயணிகள் மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    சாராய விற்பனையை தடுக்க சென்றபோது நாட்டு துப்பாக்கி வெடித்து ஆயுதப்படை போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.
    வாணாபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய விற்பனையை தடுக்க மதுவிலக்கு அமலாக்க போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, திருவண்ணாமலையை அடுத்த தண்டராம்பட்டு அருகே உள்ள மலைக் கிராமப்பகுதிகளில் போலீசார் நேற்று முன்தினம் வழக்கம் போல் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நாட்டு துப்பாக்கி ஒன்று கிடந்தது. அதனை போலீசார் எடுத்து கொண்டு மலையில் இருந்து கீழே இறங்கினர்.

    இதையடுத்து ஆயுதப்படை போலீஸ்காரர் அசோக்குமார் அந்த துப்பாக்கியை இயக்கி பார்த்து உள்ளார். அப்போது துப்பாக்கி இயங்கவில்லை.

    வாணாபுரம் அருகே குங்கிலியநத்தம் ஏரிக்கரை அருகில் வரும்போது நாட்டு துப்பாக்கி அசோக்குமார் கையில் இருந்து தவறி விழுந்து வெடித்தது. அதில் இருந்து வெளியே வந்த குண்டு அசோக்குமாரின் காலில் பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அசோக்குமார் வலியால் அலறித் துடித்தார். படுகாயம் அடைந்த அசோக்குமாரை மீட்ட சக போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×