search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலாறு"

    பொன்னையாற்றில் 40 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கமண்டல மகாநதியில் 16 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுவதால் பாலாற்றில் மேலும் வெள்ளம் அதிகரிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தின் வடமாவட்டங்களின் விவசாயத்தை வளமாக்கி ஜீவாதாரமாக விளங்கும் பாலாறு, கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகி 93 கி.மீ பயணித்து, ஆந்திராவில் 33 கி.மீ., தமிழகத்தில் 222 கி.மீ தொலைவுக்கு பயணித்து வயலூர் முகத்துவாரத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி கரையை கடந்த நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் பெய்த மழையால் பாலாறும் அதன் துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு அதிகபட்ச அளவை எட்டியது.

    ஆந்திர மாநிலத்தில் உற்பத்தியாகி வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக பயணித்து பாலாற்றுடன் கலக்கும் நீவா என்ற பொன்னை ஆற்றில் 1930-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக 60,000 கன அடிக்கு நீர்வரத்து இருந்தது.

    இந்த ஆற்றில் இன்று அதிகாலை முதல் மீண்டும் 40 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொன்னை தரைப்பாலத்துக்கு மேல் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது.

    இதனால் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை பாலத்துக்கு கீழே தண்ணீர் சென்றதால் பாலத்தில் நடந்து செல்ல மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போதுதான் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

    மரத்தின் ஒரு பகுதியில் தூண்கள் அப்படியே இறங்கி உள்ளது. தொடர்ந்து பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பொன்னை ஆற்றின் மேற்கு கரைப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    இங்கு வசிக்கும் மக்கள் அன்றாட தேவைக்கும் அலுவலகங்கள் ஆஸ்பத்திரி என அனைத்துக்கும் பொன்னை தான் வரவேண்டும்.

    பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருப்பதால் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

    பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையும் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் 1855-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான அணைகளில் ஒன்றாகும். அணையின் உயரத்தைவிட 3 அடி அளவுக்கு வெள்ள நீர் பாய்ந்தோடியது.

    தமிழகத்தில் 222 கி.மீ பயணிக்கும் பாலாற்றில் வாலாஜா அருகே 1854-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் அணை கட்டும் பணியை தொடங்கினர். 1858-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட அணையில் 4825.2 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணையின் மூலம் 14,309 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    சுமார் 163 ஆண்டுகள் பழமையான அணையை கடந்து நேற்று முன்தினம் உச்சபட்ச அளவாக 1 லட்சத்து 4 ஆயிரத்து 54 கன அடி நீர் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கடந்துள்ளது.

    பாலாற்றின் கிளை நதிகளான அகரம் ஆறு, மலட்டாறுகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து 16 ஆயிரம் கன அடிக்கு மேல் சீறி பாய்ந்து வரும் வெள்ளம் பாலாற்றில் கலந்து ஓடுகிறது.

    பொன்னை ஆறு, பாலாறு சந்திக்கும் இடத்தில் கடல் போல் காட்சியளிக்கிறது. ராணிப்பேட்டை பாலாற்றில் இன்று காலை சுமார் 70 ஆயிரம் கன அடி வெள்ளம் பாய்ந்து ஓடி சென்றது.

    1903-ம் ஆண்டு 504.23 கன அடி வெள்ளத்தால் பாலாறு அணைக்கட்டு சேதமடைந்துள்ளது. இதை 1905-ம் ஆண்டு சரி செய்துள்ளனர். 1903-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் வாணியம்பாடி நகரம் நீரில் மூழ்கியதுடன் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    திடீர் வெள்ளத்தால் பாலாறு வாணியம்பாடி நகரில் மூன்றாக பிரிந்து மீண்டும் ஆம்பூர் அருகே ஒன்றாக சேர்ந்து அகண்ட பாலாறாக பயணிக்கிறது. பெருவெள்ளத்தால் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அத்தனை தரைப்பாலங்களும் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    1903-ம் ஆண்டு வந்த பெரு வெள்ளத்தையும் தாண்டி 118 ஆண்டுக்கு பிறகு பாலாற்று வெள்ளம் புதிய வரலாறு படைத்துள்ளது.

    பாலாற்றில் சீறிப்பாய்ந்து செல்லும் பெருவெள்ளத்தை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். பாலங்களில் நின்று குழந்தைகளுடன் செல்பி எடுத்து வருகின்றனர். இது போன்ற வேடிக்கை பார்க்க வேண்டாம் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    பொன்னையாற்றில் 40 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கமண்டல மகாநதியில் 16 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுவதால் பாலாற்றில் மேலும் வெள்ளம் அதிகரிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.



    பாலாற்றில் இன்று 4-வது நாளாக அதிக வெள்ளம் செல்வதால் வேடிக்கை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் ஆற்றோரம் திரண்டனர்.
    சென்னை:

    பாலாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் சென்றது. இன்றும் அதே போல தொடர்ந்து தண்ணீர் செல்கிறது. வேலூரில் தொடங்கி கல்பாக்கம் வரை பாலாறு கரைபுரண்டு ஓடுகிறது.

    இதன் குறுக்கே உள்ள அனைத்து பாலங்களையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இன்று 4-வது நாளாக அதிக வெள்ளம் செல்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதை வேடிக்கை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் ஆற்றோரம் திரள்கிறார்கள். பாலங்களின் நடுவில் நின்றும் அதன் அழகை ரசிக்கிறார்கள்.

    பொதுமக்கள் யாரும் பாலாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ அல்லது ஆற்றினை கடக்கவோ முயற்சி செய்ய வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு தடுப்பணைக்கு நீர்வரத்து 1,05,000 கனஅடியாக உயர்ந்துள்ளதால் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் பாலாற்றின் கரையோரங்களில் உள்ள 30க்கும் அதிகமான கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் கனமழை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    வரலாறு காணாத வகையில் சுமார் 100 வருடங்களுக்கு பின்பு வாலாஜா அணைக்கட்டு தடுப்பணைக்கு பொன்னை மற்றும் பாலாற்றிலிருந்து நீர்வரத்து அதிகரித்து தற்போது தடுப்பணைக்கு 1,05,000 கன அடி நீர் வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் பாலாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் உள்ள சாதம்பாக்கம், திருமலைச்சேரி, பூண்டி, சுமைதாங்கி உள்ளிட்ட 30-க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்கள் யாரும் பாலாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ அல்லது, ஆற்றினை கடக்க முயற்சி செய்ய வேண்டாம் எனவும் தாழ்வான பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    மேலும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களை மீட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

    வாலாஜா அடுத்த சாதிக்பாட்சா நகர் பாலாற்றை ஒட்டி தாழ்வான பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை பாலாற்று வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்புகளில் வசித்து வந்த 1200-க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    பாலாறு அணைக்கட்டில் அதிகாலை 3 மணியளவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



    ஓச்சேரி அருகே பாலாற்றில் குளிக்க சென்ற 7 இளைஞர்களை மாவட்ட தீயணைப்பு துறை மற்றும் அரக்கோணம் தேசிய பேரிடர் குழுவினர் மீட்டனர்.
    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த மாமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏழுமலை மகன் நந்தகுமார் (வயது 18), ரஞ்சித்குமார் மகன் சின்ராசு (18), முனுசாமி மகன் விசுவநாதன் (20), சிங்காரம் மகன் சுபாஷ் (20), முருகன் மகன் ரமேஷ் (20), சுதாகர் மகன் கோகுல் (20),மதியழகன் மகன் அமுதன் (20). இவர்கல் 7 பேரும் மாமண்டூர் பாலாற்றில் குளிக்க சென்றுள்ளனர். குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென வெள்ளப்பெருக்கு அதிகரித்து்ள்ளது.

    இதனால் 7 பேரும் கரைக்கு செல்ல முடியாமல் ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் சிக்கிக் கொண்டனர். இதனைக் கண்ட கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வருவாய் துறையினர் கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் நவீன கருவிகளுடன் வருகை புரிந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆகியோர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.

    சுமார் ½ மணி நேரத்தில் ஆற்றின் மையப்பகுதியில் மணல் திட்டில் சிக்கி தவித்த 7 பேரையும் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நவீன மோட்டார் படகின் உதவியோடு மீட்டனர். அப்போது பாலாற்றில் 10 ஆயிரம் கன அடி நீர் சென்று கொண்டிந்தது.

    7 பேரையும் மீட்ட பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்களை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பாராட்டினர்.
    ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 21 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், மேலும் 30 தடுப்பணைகள் கட்ட அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. #Reservoir #PalarRiver
    வேலூர்:

    கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கிலோ மீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டரும் பாய்ந்து வாணியம்பாடி அருகே புல்லூர் என்ற இடத்தில் தமிழகத்துக்குள் நுழைகிறது.

    தமிழகத்தில்தான் அதிக அளவாக 222 கி.மீ. தூரம் பயணித்து காஞ்சிபுரம் மாவட்டம், வயலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.



    உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி ஏற்கெனவே கர்நாடகத்தில் பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளும், ஆந்திர மாநிலத்தில் சிறியதும், பெரியதுமாக 21 தடுப்பணைகளும் கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாலாறு வறண்டு கிடக்கிறது.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள 21 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்க அம்மாநில அரசு கடந்த நவம்பர் மாதம் ரூ.41.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு பாலாற்று பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில், தற்போது 500 மீட்டருக்கு ஒரு தடுப்பணை என்ற அடிப்படையில் பாலாற்றின் குறுக்கே புதிதாக மேலும் 30 தடுப்பணைகளைக் கட்ட ஆந்திர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இதுதொடர்பாக, அம்மாநில நீர்வள ஆதாரத்துறையின் சித்தூர், பலமநேர் கண்காணிப்பு பொறியாளர்கள் அலுவலகம் மூலம் ஆந்திர அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    இதை வேலூர் மேம்பாலாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் அன்பரசன், வேலூர் நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளருக்கு அனுப்பியுள்ள கடிதமும் உறுதிப்படுத்துகிறது.

    ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்பட்டால் தமிழகத்தில் பாலாறு பாலைவனமாக மாறி விடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு மனு அனுப்பியிருப்பதாக வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக் குழு உறுப்பினர் அசோகன் தெரிவித்தார்.

    இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:-

    கடந்த 2000-2005ஆம் ஆண்டுகளில் ஆந்திர மாநிலம், கணேசபுரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே அணைகட்டி 40 அடி உயரத்துக்கு தண்ணீரைத் தேக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

    இதையடுத்து, அந்த தண்ணீரை பல தடுப்பணைகள் கட்டித் தேக்குவதற்கு திட்டமிட்டு தொடர்ந்து தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இதனால், பாலாற்றுப் படுகை பகுதியில் வேலூர், குடியாத்தம், ஜோலார்பேட்டை, பேர்ணாம்பட்டு, திருப்பத்தூர் ஆகிய மேல்பாலாற்றுப் பகுதிகள் ஏற்கெனவே கருப்பு வட்டங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஒருசொட்டு தண்ணீர் கூட வராமல் பாலாறு பாலைவனமாக மாறிவிடும்.

    பாலாற்றுப் படுகையில் ஆந்திரா தொடர்ந்து தடுப்பணைகளைக் கட்டுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இனியாவது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். #Reservoir #PalarRiver




    ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணைகள் கட்டும் வழக்கில் ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. #APReservoir #SC
    புதுடெல்லி:

    கர்நாடகத்தில் பெங்களூர் நகரின் வடக்கே நந்தி மலைப் பகுதியில் உற்பத்தியாகும் பாலாறு கோலார் மாவட்டம் வழியாக ஆந்திராவுக்குள் நுழைந்து பின்னர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வழியாக தமிழகத்தில் பாய்ந்தோடி கடலில் கலக்கிறது.

    பாலாறில் ஆந்திர அரசு 22 தடுப்பணைகள் கட்டி தமிழகத்துக்கு வரும் தண்ணீரை தடுத்து தேக்கி வைத்துள்ளது. வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையான புல்லூரில் கனக நாச்சியம்மன் கோவில் அருகில் உள்ள தடுப்பணையை சமீபத்தில் 12 அடியாக உயர்த்தியுள்ளது. இதனால் தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு அடியோடு நின்றுவிட்டது.



    இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் புல்லூர் அருகே கங்குத்தி பெத்த வங்கா என்ற இடத்தில் புதிதாக தடுப்பணை கட்டும் பணியில் ரகசியமாக ஈடுபட்டு வந்துள்ளது. அணை கட்டும் பணி முடிவடையும் நிலையில் தமிழக விவசாயிகள் இதை அறிந்து தமிழக அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

    இதுபற்றியும் சுப்ரீம் கோர்ட்டு கவனத்துக்கு தமிழக அரசு வக்கீல்கள் கொண்டு சென்றனர். இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வருகிற ஜனவரி மாதம் முதல் பாலாறு தடுப்பணை வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்தனர். #APReservoir #SC

    ×