search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96529"

    எங்கள் கட்சிகளுடன் தி.மு.க. இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த மாத இறுதிக்குள் பேச்சு வார்த்தை தொடங்க வாய்ப்பு உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார். #mkstalin #thirumavalavan #parliamentelection

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சு வார்த்தையில் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க.- அ.தி.மு.க. தலைமையில் 2 அணிகள் தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளன. தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு வரை முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது உள்ள சூழலில் தி.மு.க. தலைமையில்தான் 11 கட்சிகள் இடம் பெற்று மெகா கூட்டணியாக உருவாகியுள்ளது.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-

    டெல்லியில் ஆட்சி அமைப்பது யார்? என்பதை தமிழகம் தான் முடிவு செய்யும். தமிழகத்தின் தேர்தல் முடிவு தான் அகில இந்திய அளவில் எதிர் பார்க்கப்படுகிறது.

    மோடிக்கு எதிராக அணி திரளும் மத சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மத்தியில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம். மம்தா பானர்ஜி தலைமையில் 20 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன.

    இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயாராகி விட்டன. தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக தி.மு.க. கூட்டணியில் 11 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய முஸ்லிம் லீக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, பொன்குமாரின் கட்டிட தொழிலாளர் கட்சி ஆகியவை ஒன்றிணைந்துள்ளன.

    தி.மு.க.வுக்கு எதிராக ஒரு சில கட்சிகள் இருந்தாலும் இன்னும் அணி என்ற வடிவம் பெறவில்லை.

    பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. கூட்டணி வைக்க மாட்டார்கள். சி.பி.ஐ.யை வைத்து அச்சுறுத்தி தான் அ.தி.மு.க.வோடு பா.ஜனதா கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது. மனமுவந்து கூட்டணி அமையாது.

    பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தால் அது அ.தி.மு.க.வுக்கு தான் நஷ்டம். பலவீனம் ஆகி விடும்.

    பா.ம.க., தே.மு.தி.க.வுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. இருவரையும் சேர்த்து கொண்டால் கூட்டணியில் எண்ணிக்கைதான் கூடுமே தவிர பயன் இல்லை.

    கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த மாத இறுதிக்குள் பேச்சு வார்த்தை தொடங்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #mkstalin #thirumavalavan #parliamentelection

    பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் பிரேமலதா போட்டியிட விரும்புவதாக தே.மு.தி.க. வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. #DMDK #Vijayakanth #PremalathaVijayakanth
    சென்னை:

    தே.மு.தி.க. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்று இருந்து. பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார்.

    அதன் பிறகு கூட்டணியில் இருந்து விஜயகாந்த் ஒதுங்கினார். தற்போது பாராளுமன்ற தேர்தல் வருவதால் விஜயகாந்த் கட்சியை மீண்டும் கூட்டணியில் சேர்க்க முயற்சி நடக்கிறது.

    கடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இப்போது அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே கூட்டணி அமைய இருப்பதால் தே.மு.தி.க.வுக்கு தனியாக தொகுதிகள் ஒதுக்க அ.தி.மு.க. தரப்பில் முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கடலூர் ஆகிய 5 தொகுதிகளில் 4 தொகுதிகள் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகிறது.

    அமெரிக்காவில் இருக்கும் விஜயகாந்த் அடுத்த வாரம் சென்னை திரும்புகிறார். அவர் வந்தவுடன் தான் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விவரங்கள் முடிவு செய்யப்படும் என்று தே.மு.தி.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. கடைசி நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் சேர மறுத்து தனி அணியாக போட்டியிட்டது. அதன் பிறகு இந்த கூட்டணி கட்சிகள் பிரிந்து விட்டன. விஜயகாந்துடன் கூட்டணி வைத்த வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகள், தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது. தனியாக இருக்கும் தே.மு.தி.க. இந்த முறை அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் இடம் பெறுவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.



    பாராளுமன்ற தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் வேட்பாளராக அறிவிக்க தே.மு.தி.க. திட்டமிட்டு உள்ளது. அவர் மதுரை தொகுதியில் போட்டியிடுவார் என்றும், அவருக்கு மதுரை தொகுதியை விட்டுக் கொடுக்க அ.தி.மு.க. தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க. முடிவு செய்துள்ளது.

    மதுரை விஜயகாந்துக்கு சொந்த ஊர் அங்குதான் அவர் அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதால் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் ஆதரவுடன் மதுரையில் பிரேமலதா போட்டியிட விரும்புவதாக தே.மு.தி.க. வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. #DMDK #Vijayakanth #PremalathaVijayakanth
    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நட்பு அடிப்படையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். #DMDK #Vijayakath #LKSudhish
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் மனைவி பிரேமலதாவும் சென்றுள்ளார்.

    இதன்காரணமாக பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் பா.ஜனதா கட்சியுடனும், மாநில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக எல்.கே.சுதீஷ் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-



    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. சிகிச்சை முடிந்து இந்த மாத இறுதியில் அவர் தமிழகம் திரும்புகிறார். பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நட்பு அடிப்படையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    இந்த தேர்தலில் தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறும். மாநில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 14 தொகுதியில் போட்டியிட்டோம். அதுவேதான் இப்போதைய கோரிக்கையாகவும் இருக்கிறது.

    விஜயகாந்த் வந்த பின்னர்தான் கூட்டணி குறித்து உறுதி செய்யப்படும். தே.மு.தி.க. இடம்பெறும் கூட்டணி வலிமையானதாக இருக்கும். அந்த கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMDK #Vijayakath #LKSudhish
    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இந்த மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என்று தே.மு.தி.க. துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார். #ParliamentElection #DMDK
    சென்னை:

    தே.மு.தி.க. துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார். அவர் விரைவில் தமிழகம் திரும்ப உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் முடிவு எட்டப்படும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிட்டோம். அதுவே தான் எங்களுடைய கோரிக்கையாக இப்போதும் உள்ளது.

    கூட்டணி குறித்து விஜயகாந்த் வந்த பின்னர் தான் உறுதி செய்யப்படும். தே.மு.தி.க. இருக்கும் கூட்டணி வலிமையானதாக இருக்கும். நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி, தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெறும். எங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்த பின்னர், பெயரிடப்படும். தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பிரசாரம் மற்றும் இதர தகவல்கள் பற்றி அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElection #DMDK
    அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இந்த வாரம் சென்னை திரும்புகிறார். விஜயகாந்த் உடல் நலம் தேறி புதிய உத்வேகத்துடன் அரசியலில் மீண்டும் வலம் வருவார் என்று அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். #vijayakanth #dmdk

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வரும் அவர் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக குழு ஒன்றை அமைத்துள்ளார்.

    எல்.கே. சுதீஷ் தலைமையில் மாநில நிர்வாகிகள் டாக்டர் இளங்கோவன், அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, திருப்பூர் அக்பர் ஆகியோர் குழுவில் இடம் பெற்று உள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த விஜயகாந்த் வருகைக்காக காத்து இருக்கிறார்கள்.

    கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில்தான் கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கப்படும் என்று திட்டவட்டமாக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

    விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இந்த வாரம் சென்னை திரும்புகிறார். விஜயகாந்த் உடல் நலம் தேறி புதிய உத்வேகத்துடன் அரசியலில் மீண்டும் வலம் வருவார் என்று அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடங்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    தமிழக அரசியல் களத்தில் தே.மு.தி.க. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் ஒரு வலுவான சக்தியாக இருந்துள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் கணிசமான இடங்களில் போட்டியிடவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

    2 இலக்க அளவில்தான் தேர்தலில் நிற்போம், கேப்டன் விஜயகாந்திற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. எங்களது கோரிக்கையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    தே.மு.தி.க.வில் ஏற்பட்டுள்ள தொய்வை சரி செய்ய விஜயகாந்த் ஒருவரால் மட்டுமே முடியும் என்பதால் அவரை மீண்டும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

    தே.மு.தி.க.வை இழுக்க அ.தி.மு.க. முயற்சி செய்கிறது. இந்த கூட்டணி உறுதியானால் இதுவும் தி.மு.க.வுக்கு நிகரான மெகா கூட்டணியாக அமையும்.  #vijayakanth #dmdk

    திருச்சியில் பாராளுமன்ற தேர்தல் குறித்து தே.மு.தி.க. சார்பில் அனைத்து அணி மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. #dmdk #parliamentelection
    திருச்சி:

    திருச்சியில் தே.மு.தி.க. சார்பில் அனைத்து அணி மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தே.மு.தி.க. தலைவர் டி.வி.கணேஷ் தலைமை தாங்கினார்.  அவை தலைவர் அலங்கராஜ் முன்னிலை வகித்தார்.தே.மு.தி.க. மாநில இளைஞரணி செயலாளர் நல்லதம்பி, மாநில மகளிர் அணி செயலாளர் மாலதி, மாநில வக்கீல் அணி செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில நெசவாளர் அணி செயலாளர் செந்தில்குமார் மற்றும் பல்வேறு மாநில அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது. தேர்தல் களத்தில் எவ்வாறு செயல்படுவது? ஒவ்வொரு  அணியும் தே.மு.தி.க. வெற்றிக்காக எப்படி பங்காற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 

    இதில் திருச்சி மாவட்ட துணை செயலாளர் ஜெயராமன், செயற்குழு உறுப் பினர்கள் ராமு, ராஜ்குமார், பெருமாள், இளைஞர் அணி செயலாளர் சாதிக், மாவட்ட மாணவர் அணி செயலாளர் மணிகண்டன்,பகுதி செயலாளர்கள் மோகன், வெல்டிங்சிவா, லோகராஜ், அய்யாசாமி, நூர்முகமது, கருணாகரன்  உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #dmdk #parliamentelection
    வருகிற தேர்தலிலும் பா.ஜனதா கூட்டணியில் பாமக சேருவது தொடர்பான பேச்சுவார்த்தை ரகசியமாக நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பா.ம.க.வுக்கு 9 தொகுதிகள் ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது. #bjp #pmk #parliamentelection

    சென்னை:

    தமிழகத்தில் பா.ஜனதா வலுவான கூட்டணி அமைக்கும் என்று டெல்லி தலைவர்கள் கூறி வரும் நிலையில் தமிழகத்தில் அதற்கான அறிகுறிகள் வெளிப்படையாக தெரியாவிட்டாலும் ரகசிய பேச்சுவார்த்தைகள் ஒவ்வொரு முகாமிலும் தீவிரமாக நடந்து வருகிறது.

    வருகிற 27-ந்தேதி பிரதமர் மோடி மதுரையில் தனது முதல் பிரசாரத்தை தொடங்குகிறார். அன்றைய தினம் கூட்டணி அறிவிப்புகளையும் வெளியிடும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திப்போம் என்று பா.ம.க. அறிவித்துள்ளது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க.வை சேர்ப்பது தொடர்பாக மூத்த நிர்வாகிகள் இருவர் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.

    தொகுதி ஒதுக்குவது உள்ளிட்ட சில பிரச்சினைகளில் உடன்பாடு ஏற்படாததால் பா.ம.க., தி.மு.க. கூட்டணியில் சேரும் முடிவை கைவிட்டது.

    ஏற்கனவே கடந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


    வருகிற தேர்தலிலும் பா.ஜனதா கூட்டணியில் சேருவது தொடர்பான பேச்சுவார்த்தை ரகசியமாக நடந்து வந்தது.

    இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி பா.ம.க.வுக்கு 9 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதேபோல் அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க.வுடனும் பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.

    அடுத்த மாதம் இந்த கட்சிகளுடனான பேச்சு வார்த்தை முடிவடைந்து விடும் என்று கூறப்படுகிறது. #bjp #pmk #parliamentelection

    வருகிற பாராளுமன்ற , சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும் என்று எல்கே சுதிஷ் பேசினார். #lksudhish #dmdk #vijayakanth #parliamentelection

    வடவள்ளி:

    கோவை மாநகர் மேற்கு மாவட்டம் சாய்பாபா காலனி பகுதி தே.மு.தி.க. சார்பில் பொங்கல் பொருள் பரிசளிப்பு விழா தடாகம் ரோடு வேலாண்டி பாளையம் ஆனந்த ஹவுசிங் காலனி 13-வது வார்டில் நடைப்பெற்றது. விழாவில் பொதுமக்கள் 4100 பேருக்கு 15 லட்சம் செலவில் பொங்கல் பொருள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தே.மு.தி.க. மாநில துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்கி பேசியதாவது:-

    வெளிநாட்டிற்கு சிகிச்சை பெற விஜயகாந்த் சென்றாலும் தமிழ் மக்களின் நலனை எந்நேரமும் விசாரித்தபடி உள்ளார். விஜயகாந்தை விமர்சித்து மீம்ஸ் போட்டவர்கள் எல்லாம் தற்போது அவரை சிறந்த தலைவர் என ஒத்துக்கொண்டு உள்ளனர்.

    ஊழல் இல்லாத தலைவன் விஜயகாந்த் மட்டுமே. வரும் மார்ச் மாதம் திருப்பூரில் நடக்கும் மாநாட்டில் அவர் வந்து பேசுவார்.


    வருகிற பாராளுமன்ற , சட்ட மன்ற தேர்தலாக இருந்தாலும் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும் .

    வேலூரில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணி நடைப்பெறுகிறது. இதனால் 13 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கும் . கஜா புயலால் 6 மாவட்டங்கள் பாதிப்பு அடைந்து உள்ளன. மாநிலத்தில் 20- க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிப்பு அடைந்து உள்ளது.

    விவசாயிகள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோருக்கு அடுத்து நாம் ஆட்சிக்கு வரமுடியாது என்பது தெரிந்து விட்டது.


    அ.தி.மு.க.- தி.மு.க. கட்சிகள் மக்களால் தூக்கி எறியப்படும். வருகின்ற தேர்தலில் தே.மு.தி.க. அதிக இடங்களில் போட்டியிடும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவுக்கு சாய்பாபா காலனி பகுதி செயலாளர் சிவராமன் தலைமை தாங்கினார். மாநகர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.முருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைச்செயலாளர்கள் பார்த்தசாரதி , அக்பர் , கோவை மாவட்ட செயலாளர்கள் காட்டன் செந்தில், தினகரன் , தியாகராஜன், மாநில கலை இலக்கிய அணி துணைச்செயலாளர் சிங்கை சந்துரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் வார்டு செயலாளர் தவசிமுருகன், பகுதி இளைஞரணி சதிஷ் குமார் , வார்டு இளைஞரணி சக்தி , 14 - வது வட்ட செயலாளர் ராஜா , பகுதி துணைச்செயலாளர் திருநாவுக்கரசு , பகுதி பிரதிநிதி கருப்பையா , சிவபாலன் , கோவிந்தன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #lksudhish #dmdk #vijayakanth #parliamentelection

    பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாநில சார்பு அணி நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாநில சார்பு அணி நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் நல்லதம்பி, மாநில மகளிர் அணி செயலாளர் மாலதி, மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பன்னீர்செல்வம், மாநில நெசவாளர் அணி செயலாளர் கோதை மாரியப்பன், மற்றும் அந்தந்த அணி நிர்வாகிகள் துணைச் செயலாளர்கள் கலந்து கொண்டு பெரம்பலூர், மாவட்ட , ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆய்வுகள் மேற் கொண்டனர்.

    நிர்வாகிகளிடம் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கண்ணுசாமி, பெரம்பலூர் நகர செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தவசி அன்பழகன், சிவா அய்யப்பன், மலர்மன்னன், பொன் சாமிதுரை, மாவட்ட துணை செயலாளர் சங்கர், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் வலுவான கூட்டணியை உருவாக்க பா.ஜ.க.வின் உயர்மட்ட குழு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் பாமக, தேமுதிகவை இழுக்க முயற்சி நடக்கிறது. #parliamentelection #bjp #dmdk #pmk

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் மாநில கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை உறுதி செய்யும் முயற்சிகளில் தேசியக் கட்சிகளான பாரதீய ஜனதாவும், காங்கிரசும் ஈடுபட்டுள்ளன.

    பாரதீய ஜனதாவுக்கு எதிராக பெரும்பாலான மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து “மெகா கூட்டணி”யை உருவாக்க காங்கிரஸ் திட்டமிட்டது. ஆனால் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட சில கட்சிகளின் தயக்கம் காரணமாக காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி உருவாகுமா என்பதில் தெளிவில்லாத நிலை உள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க., தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டுக்கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, சரத்யாதவ் கட்சி உள்பட சில கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆம் ஆத்மி உள்பட சில கட்சிகள் காங்கிரஸ் அணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன.

    இதன் காரணமாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பா.ஜ.க. அணியில் இருந்த சில முக்கிய கட்சிகள் விலகியுள்ளன. பா.ஜ.க. அணியில் உள்ள சில கட்சிகள் அதிருப்தியில் உள்ளன.

    குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம் மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணியில் கருத்து வேறுபாடுகளும், உரசல்களும் நீடித்தப்படி உள்ளன. இதனால் மற்ற மாநிலங்களில் கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைமையில் புதிய அணியை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இந்த கூட்டணியில் சேரும் என்று தெரிகிறது.

    இந்த கூட்டணி வலிமையாக இருப்பதால், அதற்கு சவால் விடும் வகையில் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக சில கட்சிகளை சேர்க்க வேண்டும் என்று தீர்மானித்து அந்த கட்சிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அந்த கூட்டணியில் 14 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

    எனவே இந்த தடவையும் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.வை சேர்க்க விரும்புவதாக மாநில பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை தெரிவித்துள்ளார்.


    பிரதமர் மோடி தலைமையை ஏற்க விரும்பும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரலாம் என்று தமிழிசை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் மிகவும் வலுவான கூட்டணியை உருவாக்க பா.ஜ.க.வின் உயர்மட்ட குழு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. விரைவில் கூட்டணி முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக பாரதீய ஜனதா சில மாதங்களுக்கு முன்பு வரை அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க தீவிரம் காட்டியது. ஆனால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், எம்.பி.க்கள், எல்.எல்.ஏ.க்களில் கணிசமானவர்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக்கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதை நன்கு உணர்ந்துள்ள பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க.வுக்கு பதில் பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் சில கட்சிகளை சேர்க்க தீவிரமாகியுள்ளது. இதற்காக பா.ம.க., தே.மு.தி.க. தலைவர்களுடன் பா.ஜ.க. தலைவர்கள் பேச்சு வார்த்தையைத் தொடங்கி உள்ளனர்.


    பா.ம.க.வுக்கும், தே.மு.தி.மு.க.வுக்கும் அதிக தொகுதிகளை விட்டுத் தரும் வகையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இது பற்றிய தகவல்களை உறுதி செய்ய பா.ம.க., தே.மு.தி.க. தலைவர்கள் மறுத்து விட்டனர்.

    பா.ஜ.க.வின் இந்த முயற்சியைக் கண்டு அ.தி.மு.க. அதிர்ச்சி அடைந்துள்ளது. பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து விட்டால் பாராளுமன்ற தேர்தல் களத்தில் தனித்து விடப்பட்டு விடுவோம் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து பா.ம.க., தே.மு.தி.க. இரு கட்சிகளையும் தங்கள் அணிக்குள் கொண்டு வர அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. தே.மு.தி.க.வுக்கும் 234 தொகுதிகளிலும் ஓரளவு வாக்குகள் இருக்கிறது.

    பா.ம.க. வட மாவட்டங்களில் நல்ல வலுவான வாக்கு வங்கியுடன் காணப்படுகிறது. எனவே அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. மூன்றும் ஓரணியில் இணைந்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியும் என்ற வியூகம் முன் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டணி உறுதியானால் தமிழ்நாட்டில் பா.ஜ.க. தனிமையாகி விடும். இதனால் பா.ம.க., தே.மு.தி.க.வை வளைக்க பா.ஜ.க.வும் தீவிரமாக உள்ளது.

    பா.ம.க., தே.மு.தி.க. இரு கட்சிகளும் யார் பக்கம் சாய்வார்கள் என்பது தொகுதிகள் எண்ணிக்கையை பொருத்தே அமையும். இந்த நிலையில் ரஜினியின் ஆதரவை பெறவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த கூட்டணிகள் பற்றிய தெளிவான நிலை தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #parliamentelection #bjp #dmdk #pmk 

    அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தை விஜயகாந்த் விரைவில் நலம் பெற்று கம்பீர குரலுடன் மீண்டும் வருவார் என்று விஜய பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Vijayakanth #VijayaPrabhakaran
    சென்னை:

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை தே.மு. தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் இன்று சந்தித்தார். அப்போது அவர் உடலை வருத்தி போராட்டத்தில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    ஆசிரியர்களுடன் அமர்ந்து அவர்களது பிரச்சனைகளை கேட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆசிரியர்களின் இந்த நிலைக்கு தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்த அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள்தான் காரணம். ஆசிரியர்கள் போராட்டம் பற்றி பள்ளி கல்வித்துறை அமைச்சர் கவலைப்படாமல் உள்ளார்.


    எனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த வி‌ஷயத்தில் தலையிட வேண்டும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது ஆசிரியர்களின் சம்பளம் குறைவு. ஆனால் கல்வி தரம் 3-வது இடத்தில் உள்ளது.

    எனவே அவர்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் எனது தந்தை விஜயகாந்த் விரைவில் நலம் பெறுவார். கம்பீர குரலுடன் அவர் மீண்டும் வருவார். பாராளுமன்ற தேர்தலுக்குள் அவரது உடல்நிலை சரியாகி விடும் என்று நம்புகிறேன்.

    தேர்தல் தொடர்பான முடிவுகளையும் அப்போது அவர் எடுப்பார்.

    இவ்வாறு விஜய பிரபாகரன் கூறினார். #DMDK #Vijayakanth #VijayaPrabhakaran #TeachersProtest
    தலைவரும், கட்சி தலைமையும் விரும்பினால் எந்த தேர்தலிலும் போட்டியிடுவேன் என்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கூறினார். #DMDK #Vijayakanth #Vijayprabhakaran
    ராயபுரம்:

    தே.மு.தி.க. வடசென்னை மாவட்டம் சார்பில் புதுவண்ணாரப்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.

    இதில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பங்கேற்றார். அப்போது விஜயகாந்த் உடல்நலம் பெற பிரார்த்தனை நடந்தது. விழாவில் விஜயபிரபாகரன் நலத்திட்ட உதவி மற்றும் பிரியாணிகளை வழங்கினார்.

    ஆதரவற்ற குழந்தைகள் கருணை இல்லத்துக்கு நிதி உதவி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தபிறகு கூட்டணி குறித்தும், வியூகம் குறித்தும் அறிவிக்கப்படும். தலைவரும், கட்சி தலைமையும் விரும்பினால் எந்த தேர்தலிலும் போட்டியிடுவேன். தேர்தலில் போட்டியிட எந்த பயமும் எனக்கு இல்லை. எங்கள் கட்சிக்குள் குழப்பம் இல்லை. எனது வளர்ச்சிக்கு சுதீப் பக்கபலமாக இருக்கிறார். எனக்கும் அவருக்கும் பிரச்சனை இருப்பதாக கூறுவது வதந்தி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மதிவாணன், முன்னாள் எம்.எல்.ஏ, நல்ல தம்பி, பகுதி செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMDK #Vijayakanth #Vijayprabhakaran
    ×