search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96595"

    ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.


    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் விற்பனை செய்யும் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. 

    அந்த வரிசையில், ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. இந்த கார் சென்னையில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் உண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

     ஹூண்டாய் ஐயோனிக் 5

    சர்வதேச சந்தையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் ஆட்டோ பிளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், பாராமெட்ரிக் பிக்சல் டிசைன் கொண்டிருக்கிறது. ஐயோனிக் 5 மாடல் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் பிரத்யேக பி.இ.வி. ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கிறது.

    இந்த எஸ்.யு.வி. 58 கிலோவாட் ஹவர் அல்லது 72.6 கிலோவாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 481 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 185 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது.

     
    ஹூண்டாய் மோட்டார் கம்பெனி நிறுவனம் செவன் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது. எல்.ஏ. ஆட்டோ விழாவில் அறிமுகமாகி இருக்கும் புது எலெக்ட்ரிக் கார் செவன் கான்செப்ட் என அழைக்கப்படுகிறது.

    செவன் கான்செப்ட் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் எலெக்ட்ரிக் குளோபல் மாட்யூலர் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இந்த மாடல் நீண்ட வீல்பேஸ் மற்றும் பிளாட் பிளாட்பார்ம் கொண்டிருக்கிறது. இது பயனர்களுக்கு முற்றிலும் புது அனுபவத்தை வழங்குகிறது.

     ஹூண்டாய் செவன்

    புதிய ஹூண்டாய் செவன் மாடல் 350 கிலோவாட் சார்ஜர் உடன் வரும் என தெரிகிறது. இந்த சார்ஜர் காரை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 20 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது. இந்த கான்செப்ட் மாடல் முழு சார்ஜ் செய்தால் 483 கிலோமீட்டர் வரை செல்லும்.

    ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களுக்கு இந்தியாவில் சிறப்பு தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.



    கார் தயாரிப்பில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ள கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் புதிதாக வென்யூ என்ற மாடல் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் அதிகபட்ச தள்ளுபடி சலுகையை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

    ஹூண்டாய் வெர்னா, ஐ20, சான்ட்ரோ, கிராண்ட் ஐ10, எக்ஸென்ட் என அனைத்து மாடல் கார்களுக்கும் தள்ளுபடி சலுகையை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 2013-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கிராண்ட் ஐ10 மாடல் 2017-ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட மாடலாக வெளிவந்தது. 



    இந்த ஆண்டு அக்டோபரில் புதிய தலைமுறை கிராண்ட் ஐ10 வர இருக்கிறது. இந்நிலையில் இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ.95,000 வரை தள்ளுபடி அளிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

    ஹூண்டாய் எக்ஸென்ட் காருக்கு ரூ. 85,000 வரை தள்ளுபடி கிடைக்க உள்ளது. வெர்னா மாடலுக்கு ரூ.30,000 சான்ட்ரோ மாடலுக்கு ரூ.31,000 தள்ளுபடி அளிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ஹூண்டாய் ஐ 20 மற்றும் ஐ20 ஆக்டிவ் ஆகிய மாடல் கார்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
    ×