search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96604"

    சேலம் அருகே ஓடும் ரெயிலில் லேப்-டாப்-செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் இளம்பிள்ளையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 22). இவர் இன்று அதிகாலை சேலம் புதிய பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்தார். இதை பார்த்த பள்ளப்பட்டி போலீசார் அவரிடம் விசாரித்தனர்.

    அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர். அதில் லேப்-டாப் மற்றும் ஆப்பிள் போனும் இருந்தது.

    இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திய போது அந்த பொருட்களை பெங்களூரில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் சென்ற கார்த்திகா என்ற பெண்ணிடம் ரெயிலில் இருந்து திருடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரெயில்வே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திண்டுக்கல்லை சேர்ந்த வாலிபர் ஆன்லைனில் பதிவு செய்திருந்த செல்போனுக்கு பதிலாக கூரியர் மூலம் சோப்பு கட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Onlineshopping #Cheating
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள பொன்னகரத்தை சேர்ந்தவர் வெற்றி (வயது 25). ஓட்டல் ஊழியர். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் செல்போன் வாங்குவதற்காக ஒரு தனியார் நிறுவன இணையதள முகவரியில் பதிவு செய்திருந்தார். ரூ.8 ஆயிரத்து 500 மதிப்புள்ள அந்த செல்போனை கூரியர் மூலம் பெறுவதற்காக தனது வீட்டு முகவரியையும் கொடுத்திருந்தார்.

    அதன்படி, அவருடைய வீட்டுக்கு நேற்று முன்தினம் கூரியர் மூலம் ஒரு பார்சல் வந்தது. அதனை திறந்து பார்த்த வெற்றி அதிர்ச்சி அடைந்தார். செல்போனுக்கு பதிலாக ஒரு சலவை சோப்பு கட்டி வைக்கப்பட்டிருந்தது. செல்போனுக்குரிய சார்ஜர், ஹெட்போன் ஆகியவை மட்டும் சரியாக இருந்தன. உடனே, கூரியர் நிறுவன ஊழியரை அழைத்து விவரத்தை கூறினார்.

    மேலும், தான் மோசடி செய்யப்பட்டதாக கூறி, அந்த நிறுவனத்தின் மீது புகார் அளிக்க போவதாகவும் வெற்றி தெரிவித்தார். இதையடுத்து, அந்த கூரியரை பெற்றுக்கொண்ட அந்த ஊழியர் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்தினார். இதனால், வெற்றி எங்கும் புகார் அளிக்கவில்லை. இதேபோல, ஏராளமான ஆன்லைன் மோசடிகள் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.  #Onlineshopping #Cheating
    சென்னை ஜாபர்கான்பேட்டையில் வாலிபரை தாக்கி செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள குடிநீர் சப்ளை செய்து வரும் நிறுவனத்தில் பணி புரிந்து வருபவர் சாமுவேல் சக்கரவர்த்தி. இவர் நேற்று மாலை நண்பருடன் காசி தியேட்டர் அருகே செல்போனில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த மூன்று பேர் திடீரென சாமுவேல் சக்கரவர்த்தியை சரமாரியாக தாக்கி அவரிட மிருந்து செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து எம்.ஜி.ஆர். போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் செல்போன் பறித்து தப்பி சென்ற 3 பேரை கே.கே.நகர் பஸ் நிலையம் அருகே போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்கள் எம்.ஜி.ஆர். நகர் சூளை பள்ளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், மணிகண்டன் மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுவன் என்பது தெரிந்தது. மேலும் 3 பேரும் பல்வேறு இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். கார்த்திக் தற்போது நிபந்தனை ஜாமீனில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவன் மீது ஏற்கனவே எம்.ஜி.ஆர். நகர், ராமாபுரம் காவல் நிலையங்களில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளது.

    விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் அருகே வாலிபரிடம் மர்மநபர் நூதன முறையில் நகை, செல்போனை பறித்த சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர், லட்சுமி நகரைச் சேர்ந்தவர் தினேஷ்(வயது 19). நேற்று முன்தினம் இரவு கோயம்பேட்டில் இருந்து வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் அருகே சென்றபோது பின்னால் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர், தினேசை வழிமறித்து நிறுத்தினார்.

    பின்னர் அவர், தனது நண்பரை மோட்டார்சைக்கிளில் இடித்துவிட்டு வந்து விட்டதாக கூறி அதற்கு இழப்பீடு தரும்படிகேட்டு, தினேஷிடம் இருந்த 2 பவுன் நகை, செல்போனை பறித்துக்கொண்டார். மேலும் தனது நண்பரிடம் வந்து மன்னிப்பு கேட்கும்படி வற்புறுத்தி தனது மோட்டார் சைக்கிளில் தினேஷை ஏற்றிச்சென்றார்.

    சிறிது தூரம் சென்றதும் மோட்டார்சைக்கிளை நிறுத்திய மர்மநபர், தினேஷிடம் பணம் கொடுத்து மதுபானம் வாங்கி வரும்படி கூறினார். பயந்துபோன தினேஷூம் கடைக்கு சென்று மதுபானம் வாங்கி வந்தார்.

    அப்போது அந்த நபரை காணவில்லை. அதன்பிறகுதான் அந்த நபர் நூதன முறையில் தன்னிடம் இருந்து நகை, செல்போனை பறித்து சென்றது தினேஷூக்கு தெரியவந்தது. இதுபற்றி விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    பொள்ளாச்சி அருகே செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் கை நரம்பை அறுத்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி வெங்கடேசா காலனியை சேர்ந்தவர் சசிகுமார். பெயிண்டர்.இவரது மகள் ஜீவிதா நிலாசினி (18). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் இருந்தார். அப்போது செல்போனை வெகுநேரம் உபயோகித்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் நித்யா கண்டித்தார். மேலும் செல்போனையும் பிடுங்கி கொண்டதாக தெரிகிறது.

    பின்னர் தாய் வெளியே சென்று விட்டார். மாணவி ஜீவிதா நிலாசினி மட்டும் வீட்டில் இருந்தார்.

    தாய் திட்டியதால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் திடீரென தனது கை நரம்பை கத்தியால் அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வழியிலே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    புழல் ஜெயிலில் இன்று அதிகாலை 100 போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் செல்போன் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. #PuzhalJail
    செங்குன்றம்:

    புழல் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் கைதிகள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கைதிகளுக்கு செல்போன், கஞ்சா, சொகுசு வாழ்க்கை தாராளமாக கிடைப்பதாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. மேலும் கைதிகள் உல்லாச வாழ்க்கை வாழும் புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் ஜெயிலில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 10-க்கும் மேற்பட்ட டி.வி.க்கள், 80 ரேடியோக்கள், பிரியாணி செய்ய பயன்படுத்தும் அரிசி, மெத்தைகள் உள்ளிட்ட வைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த சோதனை முடிந்த பின்னரும் தொடர்ந்து கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நீடித்து வந்தது.

    இந்த நிலையில் புழல் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்த போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி இன்று அதிகாலை 5.30 மணி அளவில் புழல் சரக உதவி கமி‌ஷனர் வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ஜெயந்தி உள்பட 100 போலீசார் ஜெயிலுக்கு வந்தனர்.

    அவர்கள் அதிரடியாக தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது தண்டனை ஜெயில் கழிவறை அருகே மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 2 செல்போன்களை கைப்பற்றினர். விசாரணை கைதிகள் அறையில் இருந்த 2 கஞ்சா பொட்டலங்களும் சிக்கியது.

    செல்போன், கஞ்சா எப்படி கைதிகளுக்கு கிடைக்கிறது. இதில் ஜெயில் ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்று விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக புழல் போலீசில் புகார் செய்துள்ளனர்.

    புழல் ஜெயிலில் 100 போலீசார் அதிரடியாக சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புழல் ஜெயிலில் விசாரணை கைதிகள் அறையில் 2ஆயிரத்து 600 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 154 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கைதிகளிடையே மோதலை தடுக்கவும், இட நெருக்கடியை போக்கவும் 154 குண்டர் சட்ட கைதிகள் 2-வது பிளாக்கில் உள்ள தண்டனை கைதிகள் அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். #PuzhalJail
    கஜா புயலால் மின்சாரம் முற்றிலும் தடைபட்டுள்ளதால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய் வாடகையாக பெறப்படுகிறது. #Gaja
    புதுக்கோட்டை மாவட்டத்தை புரட்டிப்போட்ட கஜா புயல் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் மீண்டு வர ஒரு சில வாரம் ஆகலாம் என கூறப்படுகிறது. மழையை தரும் புயல் என்று நம்பியிருந்த நிலையில் மரங்களை வேரோடு பிடுங்கி எறியும் புயலாகவே கஜா இருந்துள்ளது.

    கிராமங்களின் அழகை முற்றிலும் அழித்துள்ள இந்த புயலால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அத்துடன் பெரும்பாலும் வீடுகளில் உணவு சமைப்பது முதல் குளிப்பது வரை பொதுமக்களின் தண்ணீர் தேவைக்கு போர்வெல் கிணறே ஆதாரமாக இருந்தது. ஆனால் தற்போது மின்சாரம் இல்லாததால் மக்கள் முடங்கியுள்ளனர். செல்போன் ரீசார்ஜ் செய்ய கடைவீதிகளில் உள்ள நிறுவனங்களை நாடியுள்ளனர்.

    இந்தநிலையில் புதுக்கோட்டை நகர் பகுதியில் திருக்கோகர்ணம், திலகர்திடல், காமராஜ் நகர் பகுதியில் ஜெனரேட்டர்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. ஒருமணி நேரத்திற்கு ரூ.1000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இதனை நாடியுள்ளனர்.
    பட்டுக்கோட்டையில் கஜா புயலால் பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆறுதல் கூறினார். #Gaja #GajaCyclone
    பட்டுக்கோட்டை:

    கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து உள்ளது. ‘கஜா’ புயல் சேத பகுதிகளை பார்வையிடுவதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார்.

    நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி கடற்கரைக்கு முதலில் முக ஸ்டாலின் சென்றார். அப்போது அவர், சேதம் அடைந்த பைபர் படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன்படி உபகரணங்களை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அங்கிருந்த மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நாகையில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டார். நாகையில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் வழியில் காரில் இருந்து இறங்கிய அவர், நாகை அக்கரைப்பேட்டை மீன் இறங்கு தளத்துக்கு சென்றார். அங்கு புயலால் சேதமடைந்து இருந்த மீன் இறங்கு தளத்தின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார். மேலும் புயல் காற்றால் ஒன்றோடொன்று மோதி சேதமடைந்த படகுகளையும் பார்வையிட்டார்.

    பின்னர் அங்கிருந்து வேதாரண்யம் காந்திநகர் பகுதியில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்ட முக ஸ்டாலின், அங்கு உள்ள உயர்நிலை பள்ளியில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் பாதிப்புகளை நேரில் பார்க்கும்போது சில குறைகள் உள்ளதை பார்த்தேன். இந்த குறைகளை சொல்லித்தான் ஆக வேண்டும். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை யாரும் வந்து பார்க்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் தெரிவித்தனர். புயல் சேதம் அதிக அளவில் உள்ளது. இந்த சேத விவரங்களை ஊடகங்கள்தான் தெரியப்படுத்த வேண்டும்.

    கஜா புயலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து பட்டுக்கோட்டை சிவக்கொல்லை பகுதியில் கஜா புயலால் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் பலியான சதீஷ் குமார், ரமேஷ்குமார், தினேஷ் குமார், அவரது உறவினர் அய்யாதுரை ஆகியோரது வீட்டுக்கு முக ஸ்டாலின் சென்றார். அங்கு 4 பேரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து பட்டுக்கோட்டை அருகே அணைக்காட்டில் தென்னை மரம் விழுந்ததில் பலியான ஜெயலெட்சுமி வீட்டுக்கு சென்று முக ஸ்டாலின் ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.
    கஜா புயல் காரணமாக மூன்று நாட்கள் மின்சாரம் இல்லாததால் செல்போன் பவர் பேங்க், எமர்ஜென்சி லைட் அதிக அளவில் விற்பனையாகிறது. #Gaja #GajaCyclone
    கோரதாண்டவம் ஆடிய கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டது. புயல் - மழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததாலும், மின்கம்பங்கள் சாய்ந்ததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

    தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அனைத்து துறை ஊழியர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் அன்றாட தேவையான மின்சாரம் மற்றும் குடிநீர் ஆகியவை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்த போதிலும் கடந்த 3 நாட்களாக மின் இணைப்பு கிடைக்காமல் 100-க்கும் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

    தஞ்சையில் ஒரு சில இடங்களில் மின்சார கம்பங்கள் சீரமைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மின் ஊழியர்கள் மின்கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஊழியர்கள் தஞ்சைக்கு வரவழைக்கப்பட்டு மின் கம்பங்கள் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கஜா புயலில் மின்சாரம் முழுமையாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் வீடுகள் 3 நாட்களாக இருளில் மூழ்கி உள்ளன. எப்போதும் மக்கள் கைகளில் இருக்கும் செல்போன்கள் சார்ஜ் போட வசதி இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகியிருக்கும் நிலை நீடித்து வருகிறது.

    தஞ்சை நகரத்தில் பெரும்பாலானவர்களின் செல்போன்கள் சார்ஜ் போட வசதி இல்லாமல் சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் அவர்கள் செல்போன்களுக்கு சார்ஜ் செய்ய பவர் பேங்குகளை வாங்க கடைகளில் திரண்டனர்.

    செல்போன் வசதி இருந்தால் மட்டும் எந்த தகவல்களையும் மற்றவர்களுக்கு பரிமாற முடியும். மேலும் ஏதாவது ஆபத்து என்றால் கூட உதவிக்கு மற்றவர்களை அழைக்க முடியும் என்பதால் செல்போனில் சார்ஜ் வைத்திருப்பது இந்த தருணத்தில் அவசியமாக உள்ளது.

    இதையொட்டி தஞ்சை பர்மா பஜாரில் உள்ள கடைகளில் நேற்று மக்கள் அதிக அளவில் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் பவர் பேங்குகளை வாங்கி சென்றனர். பவர் பேங்குகளை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு கடைக்காரர்கள் அவர்களது செல்போனில் சார்ஜ் ஏத்தி விட்டும், அவர்கள் வாங்கி செல்லும் பவர் பேங்கில் சார்ஜ் முழுமையாக ஏத்தி விட்டும் விற்பனை செய்தனர்.

    இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, மக்கள் அவர்கள் பகுதியில் மின் இணைப்பு இல்லை என்பதால்தான் பவர் பேங்க் வாங்கி செல்கின்றனர். இதனால் எங்களால் முடிந்த உதவியாக அவர்கள் செல்போனுக்கும், வாங்கி செல்லும் பவர் பேங்குக்கும் சார்ஜ் நிரப்பி கொடுக்கிறோம் என்றனர்.

    இதேபோன்று மின்சாரம் இல்லாமல் பேட்டரியில் இயங்கும் எமர்ஜென்சி லைட்டுகளும் தஞ்சையில் அதிகமாக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
    இப்போது பல வீடுகளில் குழந்தைகள் எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கிக்கிடப்பதையே காணமுடிகிறது. செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் சிறுவயதிலேயே கண்பார்வை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது.
    இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் செல்போன்கள் எல்லோரின் ‘செல்லப்பிள்ளைகள்’ போல் மாறிவிட்டன. இணைய தகவல்களை அள்ளிக் கொண்டு வருவது முதல், செல்பி, போட்டோக்கள், வீடியோக்கள், விளையாட்டுகள் என அத்தனை வாய்ப்புகளையும் ஸ்மார்ட்போன்கள் வாரி வழங்குகின்றன.

    இதனால் ஸ்மார்ட் போன் வைத்திருப்போரின் சுட்டுவிரலுக்கும் வேலைப்பளு அதிகமாகிவிட்டது. வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் நொடிக்கு நொடி, நிமிடத்துக்கு நிமிடம் என்று ஸ்மார்ட் போன்களில் வரும் தகவல்கள், செய்திகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகையர் பற்றிய விமர்சன மீம்ஸ்களை பார்க்கும் ஆர்வம் மக்களிடையே ஆக்கிரமித்து இருப்பதே அதற்கு காரணம்.

    செல்போன் நிறுவனங்களின் வியாபார போட்டிகள், உற்பத்தி அதிகரிப்பு, விலை மலிவு போன்றவற்றின் காரணமாக அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் போன்கள் வலம் வருகின்றன. இப்படி வீடுகள்தோறும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்மார்ட் போன்களால் எந்த அளவுக்கு நல்ல விஷயங்கள் இருக்கிறதோ, அதற்கு நேர்மாறாக பிரச்சினைகளும் கூடவே உள்ளன. குறிப்பாக குழந்தைச் செல்வங்கள், பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர், சிறுமியர் செல்போன்களில் உள்ள விளையாட்டுகளுக்கு அடிமையாகிப் போகிறார்கள்.

    பெற்றோரின் கைகளில் செல்போனை பார்த்துவிட்டால் போதும். வெடுக்கென பிடுங்கிக் கொண்டு ஓடுவது, பெற்றோருக்கு தெரியாமல் செல்போனை எடுத்துக் கொண்டு தனியிடத்துக்கு சென்று விளையாட்டுகளை பார்ப்பது என்று சிறுவயதினரின் சேட்டைகள் சகஜமாகிவிட்டது. அவ்வாறு தூக்கிக்கொண்டு ஓடும் குழந்தைகளின் கைகளில் இருந்து செல்போன்கள் கீழே விழுந்தும், சில குழந்தைகள் கோபத்தில் செல்போனை தூக்கி எறிந்தும் பெற்றோருக்கு செலவு வைத்துவிடுவதும் உண்டு. தங்களது குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு செல்போனை கொடுத்துவிட்டு அதைப்பார்த்து மகிழும் சில பெற்றோரும் உண்டு. ஆனால் அதுவே, பிள்ளைகளை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பதை ஏனோ அவர்கள் உணருவதில்லை.

    முன்பெல்லாம் சிறுகுழந்தைகள் வீட்டு முற்றங்களில் நன்றாக ஓடி விளையாடுவது உண்டு. உடல் தசைகள் இறுக்கம் கொள்ளவும், அவர்களை திடகாத்திரமானவர்களாக அது மாற்றவும் உதவியது. அதனால்தான் முண்டாசுக் கவிஞன் பாரதி, ‘ஓடி விளையாடு பாப்பா...நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ என்று மழலைகளுக்கு விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தினார். ஆனால் இன்றைய நிலை ‘செல்லுக்குள் முடங்காதே பாப்பா...நீ செயலிழந்துபோவாய் பாப்பா’ என்று பாடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.



    இப்போது பல வீடுகளில் குழந்தைகள் எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கிக்கிடப்பதையே காணமுடிகிறது. நகரங்களில் மட்டுமல்ல...கிராமங்களிலும்கூட இந்த நிலை வந்துகொண்டிருக்கிறது. கிராமங்களுக்கே உரித்தான ஓடிப்பிடிக்கும் விளையாட்டு, பம்பரம் சுற்றுதல், கண்ணாமூச்சி ஆட்டம், கில்லி, எறிபந்து, நொண்டியடித்தல், போலீஸ்-திருடன் விளையாட்டு, கோலிக்குண்டு போன்ற விளையாட்டுகள்கூட இந்தக்கால குழந்தைகளுக்கு எட்டாக்கனியாகிவிட்டது.

    இதனால் மழலைகளின் உடல் போதிய வலுப்பெறுவதில்லை. சுறுசுறுப்பு குறைந்து, இயல்பான செயல்பாடுகளில் மந்த நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள். மேலும் செல்போனின் கதிர்வீச்சு குழந்தைகளை எளிதாக தாக்கும். செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் சிறுவயதிலேயே கண்பார்வை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது. போதிய சுய சிந்தனை, கற்பனைத்திறனை பெறும் சக்தி அவர்களுக்கு குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள், அவர்கள்.

    அதுமட்டுமின்றி, இப்போதெல்லாம் கடும் போட்டி காரணமாக உற்பத்தி செய்யப்படும் செல்போன்களில் தரமில்லாத பல போன்கள் அவ்வப்போது வெடித்துச் சிதறவும் செய்கிறது. இதனால் உடல்சேதம் மட்டுமல்லாமல் சில சமயங்களில் உயிர்ச்சேதமும் ஏற்பட்டுவிடுகிறது. அதற்கு, குழந்தைகளிடம் செல்போன்களை தராமல் இருப்பதே அவர்களது நல்வாழ்வுக்கு நலம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

    இதேபோல் குழந்தைப் பருவத்தை தாண்டி பள்ளி பருவத்தினரும், செல்போன்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருவதும் அதிகரித்து வருகிறது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியவர்கள் செல்போனில் படம் பார்ப்பதிலும், விளையாடுவதிலுமாக இருக்கிறார்கள். இது அவர்களது நல்ல எதிர்காலத்துக்கு அவர்களே ஏற்படுத்திக் கொள்ளும் முட்டுக்கட்டையாக வாய்ப்பு உள்ளது.

    இதற்கு பெற்றோர் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். குழந்தைகளின் படிப்பு, எதிர்காலத்தை கருதி அவர்கள் கல்வியில் வெற்றிமகுடம் சூட்டும்வரை செல்போன்களை வாங்கிக் கொடுப்பதை தவிர்ப்பதோடு, தங்களது செல்போன்களையும் அவர்கள் பயன்படுத்தாதவாறு கண்காணிக்கலாம். ஆரோக்கியமானவர்களாக தங்களது மழலைச் செல்வங்கள் உருவாக அவர்களை நான்கு சுவற்றுக்குள் அடைத்துவிடாமல், உடலுக்கு உற்சாகத்தை தரக்கூடிய விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க வேண்டும்.

    அதோடு பிள்ளைகளுக்கு கற்பனைத்திறன் ஊற்றெடுக்கும் வகையில் நூல்களை படிக்க வைத்தல், கதை, கட்டுரைகளை எழுத பயிற்சி அளித்தல், தனித்திறன்களை வெளிப்படுத்த உறுதுணையாக இருத்தல், பொது அறிவை புகுத்த நூலகங்களுக்கு அனுப்பி வைத்தல், வாழ்வில் ஒழுக்கநெறி கொண்டவர்களாக உருவாக நீதிக்கதைகள், நன்னெறிக்கதைகளை கற்றுவித்தல் ஆகியவற்றில் பெற்றோர்கள் ஈடுபாடு கொள்ள வேண்டும். எதிர்கால இந்தியாவுக்கு தேவை வெறும் அறிவார்ந்தவர்கள் மட்டுமல்ல... ஆரோக்கியம், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை கட்டிக்காக்கும் இளைய சமுதாயமே. மொத்தத்தில் ஓடிவிளையாட வேண்டிய வயதில் சின்னஞ்சிறுசுகள் நான்கு சுவற்றுக்குள் முடங்கும் சூழல் முடிவுக்கு வந்தால் நலம்.

    -முக்கூடற்பாசன். 
    குழந்தைகளே நீங்கள் செல்போனில் விளையாடுவதை சந்தோஷமாக நினைக்கிறீர்கள், ஆனால் அதன் மூலமாக உங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
    குட்டீஸ், உங்களுக்கு மிக மிகப் பிடித்த விளையாட்டுப் பொருள் என்றால், அது அம்மாவின் செல்போன்தானே. உங்களைப்போலவே உங்கள் தோழிகளும், நண்பர்களும் அம்மாவின் போன்களில் விளையாடுவதாக பெற்றோர்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள். நீங்கள் செல்போனில் விளையாடுவதை சந்தோஷமாக நினைக்கிறீர்கள், ஆனால் அதன் மூலமாக உங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்று தெரியுமா?

    செல்போனில் விளையாடும் நீங்கள் ஓடி விளையாட மறந்து வருகிறீர்கள். அதன் மூலம் கிடைக்கும் பயனையும் இழந்து வருகிறீர்கள். கிரிக்கெட், செஸ், கேரம், கால்பந்து, பேட்மிட்டன் போன்ற இன்னும் பல பாரம்பரிய விளையாட்டுகள் ஆரோக்கியம் தரக்கூடியவை. ஆனால் இந்த விளையாட்டுகளை செல்போன், கணினியில் விளையாடுவதால் எந்த பயனும் இல்லை. புதையல் எடுத்தல், ஷூட்டிங், குக்கிங், டெம்பிள்ரன், ரேஸ் என செல்போனில் நீங்கள் விளையாடும் அத்தனை விளையாட்டுகளும் சுவாரஸ்யமானவைதான். அவை உங்கள் மூளை வளர்ச்சியைத் தூண்டும் வேகத்தைப்போலவே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வேகமும் அதிகமாக இருக்கிறது.

    “குழந்தைகளின் மூளை வளர்ச்சி, முதல் மூன்று வயது வரை வேகமாக இருக்கும் இருக்கும்.. அப்போது மூளையைத் தூண்டிவிடும் விளையாட்டுகளை விளையாடும் போது குழந்தைகளின் கற்பனைத்திறன், கூர்ந்து கவனிக்கும் திறன் மேம்பட்டுப் படைப்பாளியாக மாறுவார்கள். ஆனால், டிவி, கணினி, செல்போன் போன்ற சாதனங்கள், குழந்தைகளை முடக்கினால் ஒரு ரோபோ போல உருவாகி எதிர்காலத்தில் யாரிடம் எப்படி பேசவேண்டும், பழக வேண்டும் எனத் தெரியாமல் தவறான முடிவு எடுப்பவர்களாக மாறும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்” என்று நிபுணர்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள்.



    கணினி மற்றும் போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு முதலில் ஏற்படுவது பார்வைக் கோளாறுதான். தொடர்ச்சியாக திரையைப் பார்ப்பதால் கண் எரிச்சல், தலைவலி ஏற்படும். இமைக்காமல் விளையாடுவதே இதற்கு காரணமாகும். சிறுவயதில் கண்ணாடி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு செல்போன் விளையாட்டுகளே முக்கிய காரணமாக இருக்கிறது. அதேபோல காதுகளையும் வெகுவாகப் பாதிக்கிறது.

    விளையாடும்போது ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால் கொழுப்பு சேர்ந்து உடல் பருமன் அதிகரிக்கும். எலும்புகளின் பலம் குறைந்து எலும்பு தேய்மானம், முதுகு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    அது உங்கள் கவனத்தை இழுத்து மற்றவற்றில் உங்கள் மனதை ஈடுபடாத மனச்சிதைவை உண்டாக்குகிறது, நட்பை பாழாக்குகிறது, உறவுகளையும் சிதைக்கிறது. இன்னும் பல ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு அடித்தளம் அமைக்கிறது. செல்போன் கதிர்வீச்சுகள் இதயம், மூளை, சிறுநீரகத்தை பாதிப்பதாக அறிவுறுத்தப்படுகிறது.

    செல்போன் விளையாட்டுகளின் தோல்வியும், அம்மா போனை வாங்கிக் கொண்டால் வரும் ஏக்கமும், கோபமும், நாளைடைவில் மன பாதிப்பை உருவாக்குகிறது. அது தனிமைப்படவும், தன்னம்பிக்கை இழந்த மனிதராக நீங்கள் வளரவும் காரணமாக அமைகிறது. இரவில் விளையாடுவதால் தூக்கம் கெடுகிறது. அது மறுநாள் பள்ளிப்பாடங்களை எழுதுவது படிப்பது, பள்ளியில் பாடங்கள் கவனிப்பது போன்ற அனைத்தையும் பாதிக்கிறது. இதுபோன்ற தொடர்பாதிப்புகளால் கண்ணுக்குத் தெரியாமலே உங்கள் எதிர்காலம் பாழாகிறது.

    இப்படி பல வழிகளிலும் பாதிப்பை உருவாக்கும் செல்போன்களையும், செல்போன் விளையாட்டுகளையும் ஒதுக்கி வைப்பது புத்திசாலித்தனமாகும். நீங்கள் சமர்த்துக்குட்டி, இனி அதிகமாக செல்போனில் விளையாட மாட்டீர்கள்தானே!
    யு.டி.எஸ். சேவை மூலம் இந்தியா முழுவதும் பயணிகள், எக்ஸ்பிரஸ் என எல்லாவித ரெயில்களிலும் முன்பதிவில்லா டிக்கெட்டை தங்களது செல்போனிலேயே பயணிகள் உடனடியாக எடுக்கலாம். #SouthernRailway #OnlineTicket
    சென்னை:

    செல்போன் மூலம் காகிதமில்லா டிக்கெட் பெறும் வசதி, இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம் வரை மட்டுமே இந்த வசதி செயல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் சென்னை முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    இந்தநிலையில் இந்தியா முழுவதும் இந்த யு.டி.எஸ். சேவை இன்று (வியாழக்கிழமை) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்மூலம் காகிதமில்லா டிக்கெட் சேவையை பயன்படுத்த குறிப்பிட்ட ரெயில் நிலையம் 5 கி.மீ.க்குள் அமைந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்தியா முழுவதும் பயணிகள், எக்ஸ்பிரஸ் என எல்லாவித ரெயில்களிலும் முன்பதிவில்லா டிக்கெட்டை தங்களது செல்போனிலேயே பயணிகள் உடனடியாக எடுக்கலாம்.

    இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  #SouthernRailway #OnlineTicket 
    ×