search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96693"

    மத்திய அரசு விதித்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் அது மட்டும் முடியாது என வாட்ஸ்அப் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. #WhatsApp


    வாட்ஸ்அப் செயலி தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய சட்ட அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் சில தினங்களுக்கு முன் தெரிவித்தார்.

    இந்தியா வந்திருந்த வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரி க்ரிஸ் டேனியல்ஸ் சில தினங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்தார். சந்திப்புக்கு பின் பேசிய மத்திய மந்திரி வாட்ஸ்அப் தளம் தவறாக பயன்படுத்தப்படுவதை குறைக்க புதிய சட்டம் மற்றும் வழிமுறைகளை கண்டறியப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் மத்திய அரசு கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக தெரிவித்திருந்த வாட்ஸ்அப் தற்சமயம் பதில் அளித்திருக்கிறது. அதன்படி மத்திய அரசு கேட்டுக்கொண்ட அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொள்கிறோம், எனினும் குறுந்தகவல்களை டிராக் செய்ய அனுமதி வழங்க முடியாது என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.


    கோப்பு படம்

    பயனரின் விவரங்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளது என்பதால் அவற்றை அரசிடம் வழங்க முடியாது என வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலி சார்ந்த வல்லுநர்கள் கூறும் போது, பயனர்களின் சில விவரங்கள் மட்டும் ஆஃப்லைன் சேவை வழங்கும் நோக்கில் கேச் செய்யப்படுகிறது, எனினும் இவை அந்நிறுவன சர்வர்களில் பதிவு செய்யப்படுவதில்லை என தெரிவித்துள்ளனர்.

    இந்த தகவல் பயனரின் சாதனத்தில் ஸ்டோர் செய்யப்படுகிறது. மத்திய அரசு சார்பில் கேட்கப்படும் டீக்ரிப்ஷன் வழிமுறை வாட்ஸ்அப் மட்டுமின்றி கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவன குறுந்தகவல் சேவைகளை முழுமையாக மாற்ற வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. இந்திய அதிகாரிகள் டீப்ரிஷன் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உலகில் வாட்ஸ்அப் சேவையை அதிகம் பயன்படுத்தும் நாடாக இந்திய இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் யு.பி.ஐ. சார்ந்து பண பரிமாற்ற வசதி, விளம்பரதாரர்களுக்கான சேவை வழங்குவது குறித்த பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது. எனினும் இவற்றின் அறிமுக தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
    உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், உலக மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #Apps


    உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகள் குறித்து ஃபோர்ப்ஸ் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. ஆப்டோப்பியா எனும் அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட தகவல்களின் படி கடந்த மூன்று மாதங்களில் உலக மக்கள் வாட்ஸ்அப் செயலியை மட்டும் சுமார் 8500 கோடி நிமிடங்கள் பயன்படுத்தியுள்ளனர். இதேபோன்று ஃபேஸ்புக் செயலியை சுமார் 3000 கோடி நிமிடங்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். 

    உலகளவில் குறுந்தகவல் அனுப்ப மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ஆப்டோப்பியா செய்தி தொடர்பாளர் ஆடம் பிளாக்கர் தெரிவித்தார். தகவல் பரிமாற்ற செயலிகளில் மக்கள் அதிக நேரம் செலவழித்து உள்ளனர் என பிளாக்கர் மேலும் தெரிவித்தார்.



    உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 10 செயலிகள் பட்டியல் பின்வருமாறு..,

    வாட்ஸ்அப், வீசாட், ஃபேஸ்புக், மெசன்ஜர், பன்டோரா, யூடியூப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள் மேப்ஸ் மற்றும் ஸ்பாடிஃபை போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த அறிக்கையில் சீனாவின் மூன்றாம் தரப்பு ஆன்ட்ராய்டு ஆப் ஸ்டோர்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. ஒருவேளை சேர்க்கப்பட்டிருந்தால் வீசாட் மற்றும் சீனாவை சேர்ந்த செயலிகள் முன்னணி இடங்களை பிடித்திருக்கும். எனினும் வீசாட் செயலி இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

    அதிக நேரம் பயன்படுத்தப்பட்ட பத்து செயலிகளில் ஃபேஸ்புக் மெசன்ஜர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்றவை இடம்பிடித்திருக்கின்றன. கூகுளின் யூடியூப் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்றவையும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் முதன்மை இடம் பிடித்துள்ளன.

    கேம்களை பொருத்த வரை கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் 3.83 பில்லியன் மணி நேரம் விளையாடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மை டாக்கிங் டாம், கேன்டி கிரஷ் சாகா, ஃபோர்ட்நைட், லார்ட்ஸ் மொபைல், சப்வே சர்ஃபர்ஸ், ஹெலிக்ஸ் ஜம்ப், ஸ்லிதர்.ஐஒ, பப்ஜி மொபைல் மற்றும் ஃபிஷ்டம் உள்ளிட்டவை அதிகம் விளையாடப்படுகின்றன.
    இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியில் மாற்றங்களை கொண்டு வரும் நோக்கில் வாட்ஸ்அப் சி.இ.ஒ. மற்றும் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். #WhatsApp


    வாட்ஸ்அப் செயலி தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய சட்ட அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

    இந்தியா வந்துள்ள வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரி க்ரிஸ் டேனியல்ஸ் இன்று மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்தார். சந்திப்புக்கு பின் பேசிய மத்திய மந்திரி வாட்ஸ்அப் தளம் தவறாக பயன்படுத்தப்படுவதை குறைக்க புதிய சட்டம் மற்றும் வழிமுறைகளை கண்டறியப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    இந்திய சட்ட விதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பல்வேறு குற்றசம்பவங்களுக்கு வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது, இவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 

    இவற்றை கருத்தில் கொண்ட வாட்அஸ்அப் தலைமை செயல் அதிகாரியிடம் மூன்று அம்சங்களை செய்ய பரிந்துரை வழங்கியதாக மத்திய மந்திரி தெரிவித்தார். அதன்படி குறைகளை களைய இந்தியாவுக்கான அதிகாரி, கார்ப்பரேட் நிறுவன கட்டமைப்பு மற்றும் இந்திய விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

    வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரியுடனான சந்திப்பு சிறப்பான ஒன்றாக அமைந்தது. இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாடு ஏற்படுத்தியிருக்கும் நன்மைகளை விளக்கி அவரிடம் நன்றி தெரிவித்ததாகவும் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

    க்ரிஸ் டேனியல்ஸ் வாட்ஸ்அப் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதியளித்ததாக மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
    கூகுளின் ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஏற்கனவே டெஸ்க்டாப் வெர்ஷனில் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #Gmail #Apps


    கூகுளின் மேம்படுத்தப்பட்ட ஜிமெயில் தளத்தில் புதிய கான்ஃபிடென்ஷியல் மோட் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை டெஸ்க்டாப் தளத்தில் மட்டும் வழங்கப்பட்டு இருந்த நிலையில், இந்த அம்சம் ஆன்ட்ராய்டு தளத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. 

    சர்வெர் சைடு அப்டேட் என்பதால் புதிய அம்சம் அனைவருக்கும் கிடைக்க சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. கான்ஃபிடென்ஷியல் மோட் மூலம் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின் தானாக அழிந்து விடும். ஜிமெயில் அல்லாத அக்கவுனட்களில் மின்னஞ்சலை திறக்க பிரத்யேக லின்க் அனுப்பப்படும்.

    ஜிமெயில் பயனர்களுக்கு மின்னஞ்சல்கள் வழக்கமான மின்னஞ்சல்களை போன்றே வரும். கான்ஃபிடென்ஷியல் மோட் பயன்படுத்த மின்னஞ்சலை கம்போஸ் செய்து மேலே காணப்படும் மெனுவில் உள்ள புதிய கான்ஃபிடென்ஷியல் மோட் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும். 

    இவ்வாறு செய்ததும் ஜிமெயில் சார்பில் குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்து, மின்னஞ்சலை இயக்க பாஸ்வேர்டு செட் செய்ய வேண்டுமா என்றும் கோரும். கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்தால் வேலை முடிந்தது. மின்னஞ்சலை அனுப்பியதும் அதனை மாற்ற முடியாது. 
    ஐ.ஆர்.சி.டி.சி.-யின் ரெயில் கனெக்ட் ஆன்ட்ராய்டு செயலியில் கட்டணம் செலுத்த புதிய பேமென்ட் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. #PhonePe #IRCTC
     

    இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. உடன் இணைவதை போன்பெ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. ரெயில் கனெக்ட் ஆன்ட்ராய்டு செயலியில் பணம் செலுத்த இனி போன்பெ பயன்படுத்தலாம்.

    இதனால் போன்பெ செயலியை பயன்படுத்தும் சுமார் ஒரு கோடி பயனர்கள் யு.பி.ஐ., கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் போன்பெ வாலெட் பயன்படுத்தி தங்களது வங்கி கணக்குகளில் இருந்து நேரடியாக பணம் செலுத்தலாம்.

    "இந்தியாவில் பயணங்களை மேற்கொள்ள முன்பதிவுகளுக்கு நம்பத்தகுந்த தளமாக இருக்கும் ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கூட்டணியின் மூலம் இந்தியா முழுக்க டிஜிட்டல் பண பரிமாற்றங்களை அதிகரிக்க முடியும். ஐ.ஆர்.சி.டி.சி. செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பேமென்ட் வசதிகளுடன் பயனர்கள் இனி யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்த முடியும்," என போன்பெ நிறுவனததின் கார்திக் ரகுபதி தெரிவித்தார்.

    "இந்த கூட்டணி மூலம் ஐ.ஆர்.சி.டி.சி. பயனர்கள் சிறப்பான முன்பதிவு அனுபவம் பெறுவதோடு டிஜிட்டல் பேமென்ட் நன்மைகளை பெரும்பாலானோருக்கு கொண்டு சேர்க்கும்," என அவர் மேலும் தெரிவித்தார்.

    முன்னதாக ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் இ-வாலெட் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதை கொண்டு பயனர்கள் தட்கல் டிக்கெட்களை ஐ.ஆர்.சி.டி.சி. ரெயில் கனெக்ட் செயலிய மூலம் முன்பதிவு செய்ய முடியும். வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் நோக்கில் இ-வாலெட் சேவையில் பயனர்கள் முன்கூட்டியே பணத்தை சேர்த்து வைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற மொபைல் வாலெட் போன்றே இந்த பணம் கொண்டு டிக்கெட் முன்பபதிவின் போது பயன்படுத்தலாம்.
    வாட்ஸ்அப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் குறுந்தகவல்களை ஹேக் செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். #WhatsApp #Hacking


    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் நோக்கில் பல்வேறு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகையில் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்யும் போது ஃபார்வேர்டெட் (forwarded) லேபெல் இடம்பெறுகிறது. இத்துடன் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்தது. 

    எனினும் வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை மேம்படுத்த அந்நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. அதன்படி செக்பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் மெசேஜ்களை ஹேக்கர்கள் படிப்பதுடன் அவற்றை மாற்றவும் முடியும் என தெரியவந்துள்ளது.

    செக் பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய பிழை, செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்களை இடைமறித்து, அவற்றை மாற்றியமைக்க வழி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் க்ரூப் சாட் உள்ளிட்டவற்றுக்கும் இது பொருந்தும் என்பது கூடுதல் தகவல். 


    கோப்பு படம்

    இவ்வறு செய்வதால் ஹேக்கர்கள் தங்களுக்கு வேண்டியபடி தகவல்களை மாற்றியமைப்பதோடு, போலி தகவல்களை பரப்பும் அபாயம் உள்ளதாக பாதுகாப்பு தீர்வுகள் சார்ந்த நிறுவனமான செக் பாயின்ட் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

    வாட்ஸ்அப் செயலியில் கண்டறியப்பட்டுள்ள புதிய பிழை, மூன்று வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என வலைதளத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

    - ஹேக்கர்கள் பயனர் அனுப்பும் பதிலை மாற்ற முடியும். ஒருவர் தெரிவிக்காத தகவல்களை, தெரிவித்ததாக மாற்றியமைக்க முடியும்.

    - க்ரூப்-இல் இருக்கும் ஒருவர் அனுப்பியதாக தகவல் ஒன்றை அனுப்ப முடியும். இது க்ரூப்பில் இருக்கும் மற்றவர்களுக்கு குறிப்பிட்ட பயனர் அனுப்பியதாகவே தெரியும்.

    - தனிப்பட்ட உரையாடல் ஒன்றை க்ரூப் சாட்டில் காண்பிக்க செய்ய முடியும். 

    புதிய பிழை குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், வாட்ஸ்அப் தரப்பில் இதுவரை பதில் வழங்கப்படவில்லை என செக் பாயின்ட் தெரிவித்துள்ளது. #WhatsApp #Hacking
    ஃபேஸ்புக் மெசன்ஜரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சம் மூலம் வீடியோ சாட்டில் இருந்த படி ஏ.ஆர். கேம்களை விளையாட முடியும். #AugmentedReality


    ஃபேஸ்புக் மெசன்ஜரில் புதிய கேம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மல்டி-பிளேயர் வீடியோ சாட் ஏ.ஆர். கேம்ஸ் என அழைக்கப்படும் புதிய வசதி மெசன்ஜரில் வீடியோ காலிங் அனுபவத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

    அதிகபட்சம் ஆறு பேருடன் வீடியோ கால் மேற்கொண்டு கேமிங் அனுபவத்தை அதிக உரையாடல்களுடன், நிஜமானதாக உணர முடியும். மெசன்ஜரில் உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கு சவால் விடுத்து, அவர்கள் எத்தனை நேரம் சிரிக்கமால் உள்ளனர் என்பதை பார்க்கவோ அல்லது விண்வெளியில் அதிரடி போர் விளையாட்டு போன்றவற்றை அனுபவிக்க முடியும்.

    இதுவெறும் துவக்கம் தான் என்றும் விரைவில் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்த புதிய கேம்கள் அடுத்தடுத்து சேர்க்கப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. அந்த வகையில் பந்தை பின்புறம் பாஸ் செய்யும் விளையாட்டு “பீச் பம்ப்”  (Beach Bump) என்ற பெயரிலும் மேட்ச் செய்யும் பூனை விளையாட்டு “கிட்டன் கிரேஸ்” (Kitten Kraze) என்ற பெயரில் வழங்கப்பட இருக்கிறது. 

    புதிய கேமிங் அனுபவத்தில் திளைக்க அப்டேட் செய்யப்பட்ட மெசன்ஜர் செயலியை பயன்படுத்த வேண்டும். அப்டேட் செய்தவர்கள் சாட் விண்டோவில் விளையாட விரும்புபவரை தேர்வு செய்து, மேலே காணப்படும் வீடியோ ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இந்த ஐகான் திரையின் மேல் வலது புறமாக காணப்படும்.

    பின் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்து மெசன்ஜரில் காணப்படும் ஏ.ஆர். கேம்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இனி நீங்கள் தேர்வு செய்த நபருக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும். புதிய அனுபவங்கள் ஏ.ஆர். ஸ்டூடியோ மேலும் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இவை உங்களுக்கு அதிகம் அறிமுகமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க ஏதுவாக இருக்கும். #Facebook #AugmentedReality
    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை எதிர்கொள்ளும் நோக்கில், புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #WhatsApp


    ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். வெர்ஷனில் புதிய மென்பொருள் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ்அப் அப்டேட் ஐபோனில் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்வோருக்கு பாதகமாக அமைந்துள்ளது. அதன்படி ஐபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு அதிகமாக மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்ய முடியாது. 

    இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஃபார்வேர்டு மெசேஜ்களால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த அம்சம் ஜூலை 2018-இல் முதல் முறையாக அறிவிக்கப்பட்டது. புதிய அப்டேட் மூலம் போலி செய்திகளை பரப்புவதற்கு மாற்றாக, வாட்ஸ்அப் குறிக்கோளான பிரைவேட் மெசேஜிங் ஆப் என்ற பிம்பத்தை அந்நிறுவனம் தற்காத்து கொள்ள முடியும். 



    புதிய அம்சங்கள் வாட்ஸ்அப் ஐஓஎஸ் ஸ்டேபிள் வெர்ஷனில் சில நாட்கள் சோதனைக்கு பின் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து அப்டேட் செய்து கொள்ள முடியும். வாட்ஸ்அப்-இல் அதிகளவிலான போலி குறுந்தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வசதி ஜூலை மாத வாக்கில் அறிவிக்கப்பட்டது. 

    முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கவும், ஃபிஷிங், ஸ்பேம் போன்ற தொல்லைகளை தடுக்கவும் சஸ்பீஷியஸ் லின்க் எனும் புதிய அம்சத்தை வழங்கியது. அதன்படி செயலியில் பரப்பப்படும் வலைதள முகவரி போலியானதாக இருப்பின், அதனை வாட்ஸ்அப் சஸ்பீஷியஸ் லின்க் என அடையாளப்படுத்தும்.

    ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.204 பதிப்பில் மிக குறைந்த அளவு பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட்டு, அதன்பின் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.221 வெர்ஷனில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்பதையும் வாட்ஸ்அப் FAQ பக்கத்தில் பதிவிட்டது. #WhatsApp #iOS #Apps
    கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் விண்டோஸ் இயங்கக்கூடிய மால்வேர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. #GooglePlayStore #Apps


    கூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் புதிய மால்வேர் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் 145 செயலிகளில் தீங்கிழைக்கும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்-இல் இயங்கக்கூடிய ஃபைல்களை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பிரச்சனை கூகுளிடம் தெரிவிக்கப்பட்டதால், இவை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. மால்வேர் தவிர, இந்த செயலிகள் ஆன்ட்ராய்டு மொபைல் இயங்குதளத்துக்கு தீங்கிழைக்காதவை தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீங்கிழைக்கக்கூடிய விண்டோஸ்-இல் இயங்கும் இந்த பைனரிக்கள், மற்ற தளங்களில் இயங்காது என்பதால், இவை ஆன்ட்ராய்டு தளத்தில் தீங்கிழைக்க முடியாது.

    இதுபோன்ற செயலிகளை டெவலப்பர்கள் மால்வேர் நிறைந்த விண்டோஸ் சிஸ்டம்களில் உருவாக்குவதாலேயே இதுபோன்ற பிரச்சனைகள் எழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே டெவலப்பர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் பாதிக்கப்பட்ட செயலிகள் மற்றும் பாதிப்பு இல்லாத செயலிகள் என இரண்டையும் வழங்குகின்றனர்.

    இதுகுறித்து வெளியாகியிருக்கும் அறிக்கையில், பாதிக்கப்பட்ட செயலிகள் அக்டோபர் 2017 முதல் நவம்பர் 2017 வரையிலான காலக்கட்டத்தில் வெளியிடப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை பிளே ஸ்டோரில் ஆறு மாதங்களுக்கும் மேல் இருந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட செயலிகளில் சிலவற்றை சுமார் 1000-க்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்து இருக்கின்றனர்.

    பாதிக்கப்பட்ட செயலிகளில், ஒரு ஏ.பி.கே. ஃபைலில் அதிகளவு தீங்கிழைக்கும் பி.இ. ஃபைல்கள் வெவ்வேறு லொகேஷன்களில், வெவ்வேறு பெயர்களில் இருக்கும். முக்கியமான இரண்டு பி.இ. ஃபைல்கள் பாதிக்கப்பட்ட அனைத்து செயலிகளிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று இந்த செயலிகளால் நேரடியாக ஆன்ட்ராய்டு ஹோஸ்ட்களில் இயங்க முடியாது, எனினும் ஏ.பி.கே. ஃபைல் அன்பேக் செய்யப்பட்டால் இவை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தலாம். #GooglePlayStore #Apps
    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. #WhatsApp


    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் சோதனை செய்யப்படுகிறது. 

    இந்த ஆண்டு துவக்கத்தில் ஐஓஎஸ் இயங்குதளத்தில் வழங்கப்பட்ட பிக்சர்-இன்-பிக்சர் மோட் ஆன்ட்ராய்டு பீட்டா அப்டேட் 2.18.234 வெர்ஷனில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

    பிக்சர்-இன்-பிக்சர் மோட் வசதியுடன் யூடியூப் வீடியோக்களை வாட்ஸ்அப் செயலியில் இருந்த படியே பார்த்து ரசிக்க முடியும். யூடியூப் வீடியோ திரை அளவை மாற்றிக் கொள்ளும் மிதக்கும் விண்டோ மூலம் வாட்ஸ்அப் சாட் ஸ்கிரீனில் இருந்து கொண்டே வீடியோக்களை பார்க்க முடியும்.



    வாட்ஸ்அப்பில் எவரேனும் யூடியூப் லின்க் அனுப்பும் போது, அந்த வீடியோவை வாட்ஸ்அப் செயலியை விட்டு வெளியேறாமல் பார்க்க முடியும். வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் பிக்சர்-இன்-பிக்சர் மோட் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற செயலிகளுக்கு வேலை செய்கிறது.

    இதேபோன்று பி.ஐ.பி. மோட் இன்ஸ்டாகிராம் வீடியோக்களையும் சப்போர்ட் செய்கிறது, எனினும் இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வீடியோக்களுக்கு பொருந்தாது. ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று இந்த அம்சம் இதுவரை சோதனையில் இருப்பதால் பயனர்கள் இதனை பயன்படுத்த முடியாது.

    எனினும் அடுத்து வரயிருக்கும் அப்டேட்களில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #WhatsApp #Apps
    பிரபல மியூசிக்கல்.லி செயலி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பயனர்கள் தற்சமயம் டிக்டாக் சேவைக்கு மாற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. #musically #TikTok


    இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் மியூசிக்கல்.லி செயலி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பயனர்கள் டிக்டாக் என்ற சேவைக்கு மாற்றப்படுகின்றனர். டிக்டாக் செயலியும் மியூசிக்கல்.லி போன்றே சிறிய அளவிலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் செயலி தான். 

    சீனாவை சேர்ந்த இன்டர்நெட் நிறுவனமான பைட் டான்ஸ் மியூசிக்கல்.லி செயலியை கடந்த ஆண்டு நவம்பரில் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று மியூசிக்கல்.லி செயலியின் பயனர்கள், தரரவுகள் மற்றும் பின்தொடர்வோர் புதிய டிக்டாக் செயலிக்கு மாற்றப்படுவர்.

    பைட் டான்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி டிக்டாக் செயலியை உலகம் முழுக்க சுமார் 50 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக ஜூன் மாதத்தில் மியூசிக்கல்.லி தனது நேரலை செயலியான லைவ்.லி செயலியை மூடுவதாக அறிவித்து பயனர்களை சீட்டா மொபைலின் லைவ்மி செயலிக்கு மாற அறிவுறுத்தியது.



    மியூசிக்கல்.லி செயலியில் பயனர்கள் தங்களது முக பாவனைகளை வீடியோவாக பதிவு செய்து, அவற்றின் பின்னணியில் பாடல்கள் அல்லது ஆடியோ போன்றவற்றை சேர்த்து, அவற்றை பகிர்ந்து கொள்ள வழி செய்தது. அந்த வகையில் புதிய டிக்டாக் செயலியில் பயனர்களுக்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகிறது. 

    அதன்படி ரியாக்ஷன் எனும் அம்சம் பயனர்கள் தங்களது நண்பர்களின் பதிவுகளுக்கு தங்களது கருத்துக்களை ஜெஸ்ட்யூர் ஃபில்ட்டர் வடிவில் சேர்க்க முடியும். இத்துடன் ஃபன்-ஹவுஸ் மிரர் கேமரா எஃபெக்ட்கள், கிரீன்ஸ்கிரீன் போன்ற எஃபெக்ட்கள் வழங்கப்படுகின்றன. 

    புதிய டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்ய விரும்புவோர் அதன் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யலாம். ஏற்கனவே மியூசிக்கல்.லி செயலியை பயன்படுத்துவோருக்கு ஏற்கனவே இந்த செயலி டிக்டாக் என அப்டேட் செய்யப்பட்டு இருக்கும். #musically #TikTok
    வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியின் ஸ்டேட்டஸ்-இல் விளம்பரங்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #WhatsApp


    வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படலாம் என்ற வாக்கில் பலமுறை தகவல்கள் வெளியாகி, பின் அவை வதந்தி என கூறப்பட்டது. ஆனால் இம்முறை வாட்ஸ்அப் உண்மையாகவே கட்டணம் வசூலிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

    அதன்படி வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் குறுந்தகவல்களுக்கு 24 மணி நேரத்திற்கு பின் பதில் அனுப்பினால் கட்டணம் செலுத்த வேண்டும் என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. மேலும் ஸ்டேட்டஸ்களில் விளம்பரங்களை வழங்க திட்டமிடுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    வாட்ஸ்அப் செயலியை கூர்ந்து கவனிப்பவராக இருந்தால், சில நிறுவனங்கள் உங்களை அணுக வாட்ஸ்அப் மூலம் அனுமதி கேட்டிருக்கலாம், மேலும் இதே வழிமுறையை ஃபேஸ்புக் பின்பற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.


    கோப்பு படம்

    புதுவகையான விளம்பரங்கள் மூலம் பயனர்கள் வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு அழைப்பு விடுக்காமல், நேரடியாக நிறுவனங்களை வாட்ஸ்அப் மூலம் தங்களது சந்தேகங்கள் அல்லது புகார்களை தெரிவிக்க முடியும். ஒவ்வொரு நாட்டிலும் நிறுவனங்கள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் கட்டணம் வசூலிக்கும்.

    சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், உபெர் என ஏற்கனவே கிட்டத்தட்ட 100 நிறுவனங்கள் ஏற்கனவே இந்த அம்சத்தை சோதனை செய்ய துவங்கியிருக்கின்றன. எனினும் புதிய ஸ்டேட்டஸ் விளம்பரங்கள் 2019 முதல் தெரிய ஆரம்பிக்கும். ஸ்டேட்டஸ் பகுதியில் பயனர் எழுத்து, புகைப்படங்கள் அல்லது வீடியோ உள்ளிட்டவற்றை வைக்கலாம், இவை 24 மணி நேரத்திற்கு பின் தானாக அழிந்து போகும்.

    உலகில் இதுவரை சுமார் 45 கோடி பேர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் ஏற்கனவே விளம்பரங்கள் வருகின்றன. #WhatsAppBusiness #Apps
    ×