search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96694"

    ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பயனர் விவரங்களை சேகரித்து வழங்கிய ஐ.ஓ.எஸ். செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. #iOS



    ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் இருக்கும் சில செயலிகள் பயனர்களின் லொகேஷன் விவரங்களை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வழங்கியது சூடோ செக்யூரிட்டி குழுமம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

    பெரும்பாலும் இதுபோன்ற செயலிகள் வரி விளம்பரங்கள் சார்ந்தவைகளாக இருக்கின்றன. இவை ப்ளூடூத் எல்.இ. பீக்கன் டேட்டா, ஜி.பி.எஸ். லாங்கிடியூட் மற்றும் லேட்டிடியூட், வைபை எஸ்.எஸ்.ஐடி மற்றும் பி.எஸ்.எஸ்.ஐ.டி. உள்ளிட்டவற்றை கொண்டு பயனரின் லொகேஷன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு இருக்கிறது.

    சேகரிக்கப்பட்ட விவரங்களை செயலிகள் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. இந்த நிறுவனங்கள் பயனர் விவரங்களை விற்று வருகின்றன. சில சமயங்களில் இந்த செயலிகள் செல்லுலார் நெட்வொர்க் எம்.சி.சி./எம்.என்.சி, ஜி.பி.எஸ். ஆல்டிடியூட் மற்றும் பல்வேறு விவரங்களை வாடிக்கையாளர்களிடம் தகவல் கொடுக்காமலேயே எடுத்துக் கொள்கின்றன.



    செயலிகளின் தன்மை சார்ந்து ஜி.பி.எஸ். விவரங்கள் பயன்படுத்தப்பட வேண்டிய காரணத்தை மட்டும் குறிப்பிட்டு, அவை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படுவது குறித்த தகவல்களை பயனர்களுக்கு வழங்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. 

    சில செயலிகள் ஜி.பி.எஸ். விவரங்களுடன் அக்செல்லோமீட்டர் விவரங்கள், பேட்டரி சார்ஜ் நிலவரம் மற்றும் ஸ்டேட்டஸ் என பல்வேறு விவரங்களை சேகரிப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரிப்பதாக இதுவரை 24 செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



    முன்னதாக வெளியான தகவல்களில் உள்ளூர் மொழிகளில் செய்திகளை வழங்கும் கிட்டத்தட்ட 100 செயலிகள் வாடிக்கையாளர்களின் தகவல்களை சேகரித்து அவற்றை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வழங்குதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஐ.ஓ.எஸ். சாதனங்களில் நீங்கள் டிராக் செய்யப்படாமல் இருக்க செட்டிங்ஸ் -- பிரைவசி -- அட்வெர்டைசிங் ஆப்ஷன் சென்று லிமிட் ஆட் டிராக்கிங் வசதியை இயக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களது லொகேஷன் விவரங்கள் சேகரிக்கப்படாமல் இருக்கும். 

    இத்துடன் லொகேஷன் விவரங்களை சேகரிக்கும் செயலிகள் கூடுதல் விவரங்களுக்கு பிரைவசி பாலிசியை பார்க்கக் கோரும் பட்சத்தில் அதற்கான அனுமதியை வழங்காமல் இருப்பது நல்லது. 
    ஸ்கைப் கால் செய்வோருக்கு புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் முற்றிலும் கிளவுட் சார்ந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ஸ்கைப் செயலியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் செயலியை மேலும் எளிமையாக்கும் நோக்கில் ஹைலைட்ஸ் மற்றும் கேப்ச்சர் போன்ற அம்சங்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எடுத்தது.

    அந்த வகையில், ஸ்கைப் கால் செய்யும் போது அவற்றை ரெக்கார்டு செய்யும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் முழுமையாக கிளவுட் சார்ந்து இயங்கும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. மேம்படுத்தப்பட்ட பதிப்பில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், விண்டோஸ் 10 தவிர மற்ற இயங்குதளங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய அம்சம் தற்சமயம் வழங்கப்படாத நிலையில் விண்டோஸ் 10 தளத்திற்கு வரும் வாரங்களில் வழங்கப்படும் என மைக்ரோசாஃப்ட் உறுதி அளித்துள்ளது. அழைப்புகளை பதிவு செய்யும் போது மறுமுனையில் இருக்கும் அனைவருக்கும் அழைப்பு பதிவு செய்யப்படுவதை குறிக்கும் நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும். 



    பதிவு செய்யப்பட்ட அழைப்புகளை பயனர்கள் அடுத்த 30 நாட்களுக்குள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ அல்லது சேமித்துக் கொள்ளும் வசதி கொண்டுள்ளது.

    டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் அழைப்புகளை பதிவு செய்ய, திரையின் கீழே காணப்படும் "+" குறியை க்ளிக் செய்து, பதிவு செய்ய துவங்கலாம். மொபைல் செயலியில் அழைப்புகளை பதிவு செய்ய வட்ட வடிவில் காணப்படும் "+" குறியை க்ளிக் செய்ய வேண்டும்.

    பதிவு செய்யப்பட்ட அழைப்புகளை டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய, சாட் ஸ்கிரீன் சென்று மோர் -- சேவ் டு டவுன்லோடு ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், அழைப்பு பயனரின் டவுன்லோடு ஃபோல்டரில் பதிவு செய்யப்படும். மொபைலில் ரெக்கார்டெட் கால் ஆப்ஷனை க்ளிக் செய்து, அழுத்திப் பிடிக்க வேண்டும். 

    கம்ப்யூட்டர் மற்றும் மொபைலில் பதிவு செய்யப்படும் அழைப்புகள் MP4 வடிவில் சேமிக்கப்படும்.
    இன்ஸ்டாகிராம் நிறுவனம் புதிதாக ஷாப்பிங் ஆப் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #instagram



    இன்ஸ்டாகிராம் நிறுவனம் பிரத்யேகமாக ஷாப்பிங் செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய செயலி ஐ.ஜி. ஷாப்பிங் என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

    இன்ஸ்டாகிராம் நிறுவனம் பிரத்யேகமாக ஷாப்பிங் செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இன்ஸ்டா செயலியில் ஷாப்பிங் அம்சம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் புதிய செயலி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

    உலகம் முழுக்க சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வரும் இன்ஸ்டா செயலியில் ஷாப்பிங் மிகமுக்கிய அங்கமாக இருந்து வருகிறது. முன்னதாக செயலினுள் ஷாப்பிங் செய்ய ஏதுவான அம்சங்களை வழங்க முடிவு செய்யப்பட்டு, 2016-ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்ட நிலையில், தற்சமயம் பிரத்யேக செயலியாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



    பிரத்யேக செயலியில் பயனர்கள் பின்பற்றும் வியாபார மையங்களின் கணக்குகளில் இருந்து பொருட்களை தேடி, அவற்றை வாங்க இன்ஸ்டாகிராம் வழி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்சமயம் இந்த செயலி சோதனை செய்யப்படும் நிலையில், இதன் வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    சோதனை செய்யப்படுவதால் இன்ஸ்டாவின் ஷாப்பிங் செயலி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் அல்லது பொது அறிவிப்புக்கு முன் ரத்து செய்யப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. எனினும் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்த இன்ஸ்டாகிராம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    இன்ஸ்டாவாசிகளை கவரும் நோக்கில் பல்வேறு வியாபார மையங்களும், இன்ஸ்டாவில் தங்களை விளம்பரப்படுத்திக்கொண்டு வருகின்றன. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே சுமார் 2.5 கோடிக்கும் அதிகமான வியாபாரிகள் தங்களது பொருட்களை விளம்பரப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் இவ்வாறு செய்யவில்லை எனில் அவர்களது டேட்டா முழுமையாக அபேஸ் ஆகிவிடும். #WhatsApp


    வாட்ஸ்அப் பயனர்கள் கூகுள் டிரைவில் உள்ள விவரங்களை தானாக பேக்கப் செய்யவில்லை எனில், அவை தானாக அழிக்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. கூகுள் டிரைவில் வாட்ஸ்அப் சாட் உடன் மீடியாக்களை பேக்கப் செய்யாதவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது. 

    கடந்த ஒருவருடமாக வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் தங்களது டேட்டாவை பேக்கப் செய்யவில்லை எனில், அவை அனைத்து தானாக அழிக்கப்படலாம். மேலும், வாட்ஸ்அப் தகவல்களை பேக்கப் செய்ய கூகுள் டிரைவ் கணக்கில் சைன்-இன் செய்து ஒரு வருடமாக பேக்கப் செய்யவில்லை எனில் வாட்ஸ்அப் கூகுள் டிரைவ் பேக்கப் அழிக்கப்பட்டு விடும். வாட்ஸ்அப் விவரங்களை பேக்கப் செய்ய இறுதி நாள் நவம்பர் 12 ஆகும்.

    "ஒரு வருடத்திற்கும் அதிகமாக அப்டேட் செய்யப்படாத வாட்ஸ்அப் பேக்கப்கள் கூகுள் டிரைவ் ஸ்டோரேஜில் இருந்து தானாக அழிக்கப்பட்டு விடும். இதை தவிர்க்க, வாட்ஸ்அப் தகவல்களை நவம்பர் 1, 2018க்குள் தானாக பேக்கப் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது,” என வாட்ஸ்அப் வலைத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    கோப்பு படம்

    மல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாயந்த செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. அந்த வகையில் பலரும் தங்களது புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்டவற்றை கூகுள் டிரைவில் பேக்கப் செய்துள்ளனர். கூகுள் டிரைவில் 15 ஜிபி அளவு இலவச ஸ்டோரேஜ் வழங்கப்படும் நிலையில், வாட்ஸ்அப் பேக்கப்கள் அதிகளவு கூகுள் டிரைவ் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது.

    வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எளிமையாக இருக்கும் பட்சத்தில், ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் கூகுளுடன் இணைந்து வாட்ஸ்அப் பேக்கப் ஃபைல்களை கூகுள் டிரைவில் இலவசமாக பேக்கப் செய்ய இணைந்துள்ளன. இந்த ஒப்பந்தம் நவம்பர் 12-ம் தேதி முதல் செயல்பாட்டு வருகிறது.

    வாட்ஸ்அப் ஸ்டோரேஜ்-க்கான இலவச கூகுள் டிரைவ் ஸ்டோரேஜை பெற பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் டேட்டாக்களை நவம்பர் 12-ம் தேதிக்குள் பேக்கப் செய்ய பரிந்துரைக்கப்படுகின்றனர்.
    மத்திய அரசு விதித்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் அது மட்டும் முடியாது என வாட்ஸ்அப் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. #WhatsApp


    வாட்ஸ்அப் செயலி தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய சட்ட அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் சில தினங்களுக்கு முன் தெரிவித்தார்.

    இந்தியா வந்திருந்த வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரி க்ரிஸ் டேனியல்ஸ் சில தினங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்தார். சந்திப்புக்கு பின் பேசிய மத்திய மந்திரி வாட்ஸ்அப் தளம் தவறாக பயன்படுத்தப்படுவதை குறைக்க புதிய சட்டம் மற்றும் வழிமுறைகளை கண்டறியப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் மத்திய அரசு கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக தெரிவித்திருந்த வாட்ஸ்அப் தற்சமயம் பதில் அளித்திருக்கிறது. அதன்படி மத்திய அரசு கேட்டுக்கொண்ட அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொள்கிறோம், எனினும் குறுந்தகவல்களை டிராக் செய்ய அனுமதி வழங்க முடியாது என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.


    கோப்பு படம்

    பயனரின் விவரங்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளது என்பதால் அவற்றை அரசிடம் வழங்க முடியாது என வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலி சார்ந்த வல்லுநர்கள் கூறும் போது, பயனர்களின் சில விவரங்கள் மட்டும் ஆஃப்லைன் சேவை வழங்கும் நோக்கில் கேச் செய்யப்படுகிறது, எனினும் இவை அந்நிறுவன சர்வர்களில் பதிவு செய்யப்படுவதில்லை என தெரிவித்துள்ளனர்.

    இந்த தகவல் பயனரின் சாதனத்தில் ஸ்டோர் செய்யப்படுகிறது. மத்திய அரசு சார்பில் கேட்கப்படும் டீக்ரிப்ஷன் வழிமுறை வாட்ஸ்அப் மட்டுமின்றி கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவன குறுந்தகவல் சேவைகளை முழுமையாக மாற்ற வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. இந்திய அதிகாரிகள் டீப்ரிஷன் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உலகில் வாட்ஸ்அப் சேவையை அதிகம் பயன்படுத்தும் நாடாக இந்திய இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் யு.பி.ஐ. சார்ந்து பண பரிமாற்ற வசதி, விளம்பரதாரர்களுக்கான சேவை வழங்குவது குறித்த பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது. எனினும் இவற்றின் அறிமுக தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
    உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், உலக மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #Apps


    உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகள் குறித்து ஃபோர்ப்ஸ் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. ஆப்டோப்பியா எனும் அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட தகவல்களின் படி கடந்த மூன்று மாதங்களில் உலக மக்கள் வாட்ஸ்அப் செயலியை மட்டும் சுமார் 8500 கோடி நிமிடங்கள் பயன்படுத்தியுள்ளனர். இதேபோன்று ஃபேஸ்புக் செயலியை சுமார் 3000 கோடி நிமிடங்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். 

    உலகளவில் குறுந்தகவல் அனுப்ப மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ஆப்டோப்பியா செய்தி தொடர்பாளர் ஆடம் பிளாக்கர் தெரிவித்தார். தகவல் பரிமாற்ற செயலிகளில் மக்கள் அதிக நேரம் செலவழித்து உள்ளனர் என பிளாக்கர் மேலும் தெரிவித்தார்.



    உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 10 செயலிகள் பட்டியல் பின்வருமாறு..,

    வாட்ஸ்அப், வீசாட், ஃபேஸ்புக், மெசன்ஜர், பன்டோரா, யூடியூப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள் மேப்ஸ் மற்றும் ஸ்பாடிஃபை போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த அறிக்கையில் சீனாவின் மூன்றாம் தரப்பு ஆன்ட்ராய்டு ஆப் ஸ்டோர்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. ஒருவேளை சேர்க்கப்பட்டிருந்தால் வீசாட் மற்றும் சீனாவை சேர்ந்த செயலிகள் முன்னணி இடங்களை பிடித்திருக்கும். எனினும் வீசாட் செயலி இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

    அதிக நேரம் பயன்படுத்தப்பட்ட பத்து செயலிகளில் ஃபேஸ்புக் மெசன்ஜர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்றவை இடம்பிடித்திருக்கின்றன. கூகுளின் யூடியூப் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்றவையும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் முதன்மை இடம் பிடித்துள்ளன.

    கேம்களை பொருத்த வரை கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் 3.83 பில்லியன் மணி நேரம் விளையாடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மை டாக்கிங் டாம், கேன்டி கிரஷ் சாகா, ஃபோர்ட்நைட், லார்ட்ஸ் மொபைல், சப்வே சர்ஃபர்ஸ், ஹெலிக்ஸ் ஜம்ப், ஸ்லிதர்.ஐஒ, பப்ஜி மொபைல் மற்றும் ஃபிஷ்டம் உள்ளிட்டவை அதிகம் விளையாடப்படுகின்றன.
    இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியில் மாற்றங்களை கொண்டு வரும் நோக்கில் வாட்ஸ்அப் சி.இ.ஒ. மற்றும் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். #WhatsApp


    வாட்ஸ்அப் செயலி தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய சட்ட அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

    இந்தியா வந்துள்ள வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரி க்ரிஸ் டேனியல்ஸ் இன்று மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்தார். சந்திப்புக்கு பின் பேசிய மத்திய மந்திரி வாட்ஸ்அப் தளம் தவறாக பயன்படுத்தப்படுவதை குறைக்க புதிய சட்டம் மற்றும் வழிமுறைகளை கண்டறியப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    இந்திய சட்ட விதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பல்வேறு குற்றசம்பவங்களுக்கு வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது, இவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 

    இவற்றை கருத்தில் கொண்ட வாட்அஸ்அப் தலைமை செயல் அதிகாரியிடம் மூன்று அம்சங்களை செய்ய பரிந்துரை வழங்கியதாக மத்திய மந்திரி தெரிவித்தார். அதன்படி குறைகளை களைய இந்தியாவுக்கான அதிகாரி, கார்ப்பரேட் நிறுவன கட்டமைப்பு மற்றும் இந்திய விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

    வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரியுடனான சந்திப்பு சிறப்பான ஒன்றாக அமைந்தது. இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாடு ஏற்படுத்தியிருக்கும் நன்மைகளை விளக்கி அவரிடம் நன்றி தெரிவித்ததாகவும் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

    க்ரிஸ் டேனியல்ஸ் வாட்ஸ்அப் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதியளித்ததாக மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
    கூகுளின் ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஏற்கனவே டெஸ்க்டாப் வெர்ஷனில் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #Gmail #Apps


    கூகுளின் மேம்படுத்தப்பட்ட ஜிமெயில் தளத்தில் புதிய கான்ஃபிடென்ஷியல் மோட் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை டெஸ்க்டாப் தளத்தில் மட்டும் வழங்கப்பட்டு இருந்த நிலையில், இந்த அம்சம் ஆன்ட்ராய்டு தளத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. 

    சர்வெர் சைடு அப்டேட் என்பதால் புதிய அம்சம் அனைவருக்கும் கிடைக்க சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. கான்ஃபிடென்ஷியல் மோட் மூலம் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின் தானாக அழிந்து விடும். ஜிமெயில் அல்லாத அக்கவுனட்களில் மின்னஞ்சலை திறக்க பிரத்யேக லின்க் அனுப்பப்படும்.

    ஜிமெயில் பயனர்களுக்கு மின்னஞ்சல்கள் வழக்கமான மின்னஞ்சல்களை போன்றே வரும். கான்ஃபிடென்ஷியல் மோட் பயன்படுத்த மின்னஞ்சலை கம்போஸ் செய்து மேலே காணப்படும் மெனுவில் உள்ள புதிய கான்ஃபிடென்ஷியல் மோட் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும். 

    இவ்வாறு செய்ததும் ஜிமெயில் சார்பில் குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்து, மின்னஞ்சலை இயக்க பாஸ்வேர்டு செட் செய்ய வேண்டுமா என்றும் கோரும். கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்தால் வேலை முடிந்தது. மின்னஞ்சலை அனுப்பியதும் அதனை மாற்ற முடியாது. 
    வாட்ஸ்அப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் குறுந்தகவல்களை ஹேக் செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். #WhatsApp #Hacking


    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் நோக்கில் பல்வேறு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகையில் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்யும் போது ஃபார்வேர்டெட் (forwarded) லேபெல் இடம்பெறுகிறது. இத்துடன் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்தது. 

    எனினும் வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை மேம்படுத்த அந்நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. அதன்படி செக்பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் மெசேஜ்களை ஹேக்கர்கள் படிப்பதுடன் அவற்றை மாற்றவும் முடியும் என தெரியவந்துள்ளது.

    செக் பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய பிழை, செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்களை இடைமறித்து, அவற்றை மாற்றியமைக்க வழி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் க்ரூப் சாட் உள்ளிட்டவற்றுக்கும் இது பொருந்தும் என்பது கூடுதல் தகவல். 


    கோப்பு படம்

    இவ்வறு செய்வதால் ஹேக்கர்கள் தங்களுக்கு வேண்டியபடி தகவல்களை மாற்றியமைப்பதோடு, போலி தகவல்களை பரப்பும் அபாயம் உள்ளதாக பாதுகாப்பு தீர்வுகள் சார்ந்த நிறுவனமான செக் பாயின்ட் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

    வாட்ஸ்அப் செயலியில் கண்டறியப்பட்டுள்ள புதிய பிழை, மூன்று வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என வலைதளத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

    - ஹேக்கர்கள் பயனர் அனுப்பும் பதிலை மாற்ற முடியும். ஒருவர் தெரிவிக்காத தகவல்களை, தெரிவித்ததாக மாற்றியமைக்க முடியும்.

    - க்ரூப்-இல் இருக்கும் ஒருவர் அனுப்பியதாக தகவல் ஒன்றை அனுப்ப முடியும். இது க்ரூப்பில் இருக்கும் மற்றவர்களுக்கு குறிப்பிட்ட பயனர் அனுப்பியதாகவே தெரியும்.

    - தனிப்பட்ட உரையாடல் ஒன்றை க்ரூப் சாட்டில் காண்பிக்க செய்ய முடியும். 

    புதிய பிழை குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், வாட்ஸ்அப் தரப்பில் இதுவரை பதில் வழங்கப்படவில்லை என செக் பாயின்ட் தெரிவித்துள்ளது. #WhatsApp #Hacking
    ஃபேஸ்புக் மெசன்ஜரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சம் மூலம் வீடியோ சாட்டில் இருந்த படி ஏ.ஆர். கேம்களை விளையாட முடியும். #AugmentedReality


    ஃபேஸ்புக் மெசன்ஜரில் புதிய கேம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மல்டி-பிளேயர் வீடியோ சாட் ஏ.ஆர். கேம்ஸ் என அழைக்கப்படும் புதிய வசதி மெசன்ஜரில் வீடியோ காலிங் அனுபவத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

    அதிகபட்சம் ஆறு பேருடன் வீடியோ கால் மேற்கொண்டு கேமிங் அனுபவத்தை அதிக உரையாடல்களுடன், நிஜமானதாக உணர முடியும். மெசன்ஜரில் உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கு சவால் விடுத்து, அவர்கள் எத்தனை நேரம் சிரிக்கமால் உள்ளனர் என்பதை பார்க்கவோ அல்லது விண்வெளியில் அதிரடி போர் விளையாட்டு போன்றவற்றை அனுபவிக்க முடியும்.

    இதுவெறும் துவக்கம் தான் என்றும் விரைவில் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்த புதிய கேம்கள் அடுத்தடுத்து சேர்க்கப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. அந்த வகையில் பந்தை பின்புறம் பாஸ் செய்யும் விளையாட்டு “பீச் பம்ப்”  (Beach Bump) என்ற பெயரிலும் மேட்ச் செய்யும் பூனை விளையாட்டு “கிட்டன் கிரேஸ்” (Kitten Kraze) என்ற பெயரில் வழங்கப்பட இருக்கிறது. 

    புதிய கேமிங் அனுபவத்தில் திளைக்க அப்டேட் செய்யப்பட்ட மெசன்ஜர் செயலியை பயன்படுத்த வேண்டும். அப்டேட் செய்தவர்கள் சாட் விண்டோவில் விளையாட விரும்புபவரை தேர்வு செய்து, மேலே காணப்படும் வீடியோ ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இந்த ஐகான் திரையின் மேல் வலது புறமாக காணப்படும்.

    பின் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்து மெசன்ஜரில் காணப்படும் ஏ.ஆர். கேம்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இனி நீங்கள் தேர்வு செய்த நபருக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும். புதிய அனுபவங்கள் ஏ.ஆர். ஸ்டூடியோ மேலும் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இவை உங்களுக்கு அதிகம் அறிமுகமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க ஏதுவாக இருக்கும். #Facebook #AugmentedReality
    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை எதிர்கொள்ளும் நோக்கில், புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #WhatsApp


    ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். வெர்ஷனில் புதிய மென்பொருள் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ்அப் அப்டேட் ஐபோனில் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்வோருக்கு பாதகமாக அமைந்துள்ளது. அதன்படி ஐபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு அதிகமாக மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்ய முடியாது. 

    இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஃபார்வேர்டு மெசேஜ்களால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த அம்சம் ஜூலை 2018-இல் முதல் முறையாக அறிவிக்கப்பட்டது. புதிய அப்டேட் மூலம் போலி செய்திகளை பரப்புவதற்கு மாற்றாக, வாட்ஸ்அப் குறிக்கோளான பிரைவேட் மெசேஜிங் ஆப் என்ற பிம்பத்தை அந்நிறுவனம் தற்காத்து கொள்ள முடியும். 



    புதிய அம்சங்கள் வாட்ஸ்அப் ஐஓஎஸ் ஸ்டேபிள் வெர்ஷனில் சில நாட்கள் சோதனைக்கு பின் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து அப்டேட் செய்து கொள்ள முடியும். வாட்ஸ்அப்-இல் அதிகளவிலான போலி குறுந்தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வசதி ஜூலை மாத வாக்கில் அறிவிக்கப்பட்டது. 

    முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கவும், ஃபிஷிங், ஸ்பேம் போன்ற தொல்லைகளை தடுக்கவும் சஸ்பீஷியஸ் லின்க் எனும் புதிய அம்சத்தை வழங்கியது. அதன்படி செயலியில் பரப்பப்படும் வலைதள முகவரி போலியானதாக இருப்பின், அதனை வாட்ஸ்அப் சஸ்பீஷியஸ் லின்க் என அடையாளப்படுத்தும்.

    ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.204 பதிப்பில் மிக குறைந்த அளவு பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட்டு, அதன்பின் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.221 வெர்ஷனில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்பதையும் வாட்ஸ்அப் FAQ பக்கத்தில் பதிவிட்டது. #WhatsApp #iOS #Apps
    கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் விண்டோஸ் இயங்கக்கூடிய மால்வேர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. #GooglePlayStore #Apps


    கூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் புதிய மால்வேர் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் 145 செயலிகளில் தீங்கிழைக்கும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்-இல் இயங்கக்கூடிய ஃபைல்களை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பிரச்சனை கூகுளிடம் தெரிவிக்கப்பட்டதால், இவை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. மால்வேர் தவிர, இந்த செயலிகள் ஆன்ட்ராய்டு மொபைல் இயங்குதளத்துக்கு தீங்கிழைக்காதவை தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீங்கிழைக்கக்கூடிய விண்டோஸ்-இல் இயங்கும் இந்த பைனரிக்கள், மற்ற தளங்களில் இயங்காது என்பதால், இவை ஆன்ட்ராய்டு தளத்தில் தீங்கிழைக்க முடியாது.

    இதுபோன்ற செயலிகளை டெவலப்பர்கள் மால்வேர் நிறைந்த விண்டோஸ் சிஸ்டம்களில் உருவாக்குவதாலேயே இதுபோன்ற பிரச்சனைகள் எழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே டெவலப்பர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் பாதிக்கப்பட்ட செயலிகள் மற்றும் பாதிப்பு இல்லாத செயலிகள் என இரண்டையும் வழங்குகின்றனர்.

    இதுகுறித்து வெளியாகியிருக்கும் அறிக்கையில், பாதிக்கப்பட்ட செயலிகள் அக்டோபர் 2017 முதல் நவம்பர் 2017 வரையிலான காலக்கட்டத்தில் வெளியிடப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை பிளே ஸ்டோரில் ஆறு மாதங்களுக்கும் மேல் இருந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட செயலிகளில் சிலவற்றை சுமார் 1000-க்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்து இருக்கின்றனர்.

    பாதிக்கப்பட்ட செயலிகளில், ஒரு ஏ.பி.கே. ஃபைலில் அதிகளவு தீங்கிழைக்கும் பி.இ. ஃபைல்கள் வெவ்வேறு லொகேஷன்களில், வெவ்வேறு பெயர்களில் இருக்கும். முக்கியமான இரண்டு பி.இ. ஃபைல்கள் பாதிக்கப்பட்ட அனைத்து செயலிகளிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று இந்த செயலிகளால் நேரடியாக ஆன்ட்ராய்டு ஹோஸ்ட்களில் இயங்க முடியாது, எனினும் ஏ.பி.கே. ஃபைல் அன்பேக் செய்யப்பட்டால் இவை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தலாம். #GooglePlayStore #Apps
    ×