search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிவலம்"

    வழக்கமாக மகாதீபம் ஏற்றப்படும் நாளன்றும், பவுர்ணமி அன்றும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கோவில் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    வழக்கமாக மகாதீபம் ஏற்றப்படும் நாளன்றும், பவுர்ணமி அன்றும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கார்த்திகை மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மதியம் 1.03 மணிக்கு தொடங்கி நேற்று பிற்பகல் 2.51 மணிக்கு நிறைவடைந்தது.

    இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது. மேலும் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி செல்வார்கள். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளிக்கும். மலை ஏறி இந்த மகாதீபத்தை தரிசனம் செய்யவும் தடை செய்யப்பட்டது.

    இந்தநிலையில், ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் 20 ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து 19 மாதங்களுக்கு பிறகு இந்தமாதம் மகாதீபத்தை முன்னிட்டு பவுர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலை 11 மணி வரை மழை பெய்தது. அப்போது கொட்டும் மழையிலும் குடையுடன் பக்தர்கள் பரவசத்துடன் கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.

    இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    இன்று(சனிக்கிழமை) காலை 4.32 மணிக்கு பவுர்ணமி தொடங்கி நாளை (ஞாயிற்றுக்கிழமை)காலை 3.36 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.
    சித்ரா பவுர்ணமி நாளில் திருவண்ணாமலை உள்பட அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்வர்.
    சித்ரா பவுர்ணமி என்பது சித்திரை மாதம் பவுர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் சித்ரா பவுர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேஷ ராசியில் (சித்திரை மாதத்தில்) வரும் பவுர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது. சிறப்புப் பொருந்திய இத் திருநாள் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது.
    இத் திதியும், நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால்; இத் தினம் அம்பாளை பூசிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதிர் தர்பணம் செய்ய மிகவும் உகந்த நாள். பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதம் கடைபிடிக்கலாம்.

    இத்தினத்தில் எல்லா அம்மன் ஆலயங்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விஷேச அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம்பெறும். சிவாலயங்களிலும், பெருமாள் (விஷ்ணு) கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறை வழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்றும் சிறப்பாக நடைபெறும். அம்மனுக்குச் சிறப்புப் பொருந்திய இச்சித்ரா பவுர்ணமி விரத நாளிலேயே எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுவதால் சித்திர புத்திரனார் விரதமும் அமைகின்றது.

    தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசை அன்று விரதமிருந்து வழிபாடு செய்வதைப் போன்று தாயாரை இழந்தவர்கள் சித்ரா பவுர்ணமி தினத்தில் விரதத்தை மேற்கொள்ளலாம். தாயாரை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து வழிபாடு செய்வதால் இந்நாள் பித்ருகளுக்குரிய விரத நாளாகவும் அமைகின்றது.

    நம்மைப் பெற்று, சீராட்டி வளர்த்தெடுத்த தாயாரை அவர் மறைந்த பின்பும் நன்றியுடன் நினைவு கூரும் நாளான இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் தாயின் தூய்மையின் பெருமையை மனதிலிருத்தி அவரது ஆன்மா இறைவன் திருவடியில் அமைதி பெற இறைவனைத் தொழும் நாளாகவும் சித்ரா பவுர்ணமி தினம் அமைகின்றது.

    வான் மண்டலத்தில்; சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தின் அளவை “திதி” என்கிறோம். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணையும் (ஒரே நேர் கோட்டில் அமையும்) நாளில் மூதாதையர்களுக்கு ”திதி” கொடுப்பதும், (அன்று சூரிய சந்திரர்கள் ஒரே டிகிரியில் இணைந்திருப்பார்கள்.) பவுர்ணமியன்று சிறப்பான பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறந்தது. (அன்று சூரிய சந்திரர்கள் சமமாக இருப்பார்கள்.)

    இந்நாளில் திருவண்ணாமலை உள்பட அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்வர்.

    சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரின் அருளை பெறுவதற்காக சித்தர்கள் பல்வேறு வடிவங்கள் எடுத்து கிரிவலம் வருவதாக நம்பப்படுகிறது. நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும். நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு பவுர்ணமியில் சக்தி அதிகரிக்கும்.

    பவுர்ணமி கிரிவலத்தால் தெய்வ அருள், மூலிகைக் காற்றால் உடல்நலம், நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது. வலம் வருபவர்கள் இறைநாமத்தை உச்சரித்தப்படி அமைதியாக வந்தால் பலன் இரட்டிப்பாகும். குறிப்பாக சித்தர்களின் அருளை நாம் கிரிவலத்தில் பெற முடியும். சித்ரா பவுர்ணமி வழிபாட்டின் மிக முக்கிய அம்சமாக சித்தர்களின் அருளை பெறுவது வலியுறுத்தப்பட்டுள்ளது.நமக்கு மட்டுமல்ல சித்தர்களுக்கும் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக சித்ரா பவுர்ணமி தினத்தன்று பூமி யில் இருந்து ஒருவித உப்பு கிளம்பும். அந்த உப்புக்கு பூமிநாதன் என்று பெயர். இந்த உப்பு அதிக சக்தி தரக்கூடியதாகும். இதை சித்தர்கள்தான் கண்டுபிடித்து உலகத்துக்கு தெரிவித்தனர்.

    சித்ரா பவுர்ணமி தினத்தன்று அந்த உப்பு சக்தி பெறுவதற்காகவே சித்தர்கள் பல இடங்களில் தோன்றுவது உண்டு. மேலும் பல முக்கிய தலங்களில் உள்ள இறைமூர்த்தங்களை வழிபடுவதற்காக சித்தர்களும் வருவார்கள். அந்த வகையில் திருவண்ணாமலை, சதுரகிரி மலை, பொதிகை மலை உள்பட பல்வேறு மலைகளில் சித்தர்களும் வலம் வருவார்கள்.

    வண்ணத்துப்பூச்சியாக, ஏதோ விலங்காக அல்லது மனிதர்கள் போலவே சித்தர்கள் வலம் வருவார்கள். அந்த சமயத்தில் நாமும் கிரிவலம் சென்றால் நமக்கு அண்ணா மலையாரின் அருளுடன் சித்தர்களின் அருள் ஆசியும் கிடைக்கும்.எனவேதான் கிரிவல தலங்களில் உள்ள சித்தர்களின் ஜீவ சமாதியை சித்ரா பவுர்ணமி தினத்தன்று தவறாமல் வழிபட வேண்டும் என்று நமது மூதாதையர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    திருவண்ணாமலையில் ஏற்கனவே நிறைய சித்தர்களின் அருள் உள்ளது. சித்ரா பவுர்ணமி தினத்தன்று மற்ற இடங்களில் உள்ள சித்தர்களும் திருவண்ணாமலைக்கு வந்து விடுவார்கள் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. ஆகையால் வருகிற 18&ந்தேதி இரவு திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்பவர்கள் ஈசன் பெயருடன் சித்தர்களையும் நினைத்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.பொதிகை மலையில் அகத்தியரை அன்று வழிபட்டால் சிவபெருமானின் திருவடியை மிக எளிதாக சென்றடைய முடியும் என்பார்கள்.

    சித்ரா பவுர்ணமி தினத்தன்று சித்திரை நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் சேர்வதால் கடலில் நீராடுவது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் கணித்து உள்ளனர். வருகிற 19-ந்தேதி கடலில் நீராடினால் இதுவரை சம்பாதித்த பாவங்கள் அனைத்தையும் கரைத்து விடலாம் என்பது ஐதீகம். சித்ரா பவுர்ணமி தினத்தன்று கடலில் புனித நீராட வருபவர்களுக்காக சித்தர்கள், ரிஷிகள் தயாராக காத்து இருப்பார்கள் என புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே வருகிற 19-ந்தேதி கடலில் புனித நீராடினால் சித்தர்களின் ஆசி பரிபூரண மாக நமக்கு கிடைக்கும்.



    தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா விசேஷமாக கருதப்படுகிறது. ஒருமுறை விருத்தராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான்.

    இதனால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான்.

    ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான்.

    இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார்.

    அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ரா பவுர்ணமி மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது.

    பவுர்ணமி தினம் அன்று அம்பாளை வழிபட்டால் குடும்பத்தில் ஒளி உண்டாகும். துன்பங்களாகிய இருள் நீங்கி நன்மை கிட்டும். பௌர்ணமி அன்று உபவாசம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை.

    பவுர்ணமி பூஜை பொதுவாக அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய பூஜை என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள் திருமணப் பேறு கிட்டவும் இந்த பூஜை செய்து அம்பிகையின் அருள் பெறலாம்.

    சித்திரை மாத பவுர்ணமியன்று அம்பாளுக்கு பூப்போட்ட வஸ்திரம் சார்த்தி, பத்மராகம் என்ற நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும். மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

    அன்னதானம் செய்யுங்கள்

    சித்ரா பவுர்ணமியில் அன்னதானம் செய்து சிவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் கேட்டது கிடைக்கும். கேட்க மறந்ததும் கிடைக்கும். காரணம் சிவன் கருணை வள்ளல், தியாகராஜன், தன்னிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் கையேந்தி தன் அடியார்களை அவன் வெறுங்கையுடன் அனுப்பியது இல்லை.

    ஆகவே நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் வறுமை அகலும். நோய்கள் நீங்கும். கடன் தொல்லைகள் தீரும். திருமணம் நிறைவேறும். மகப்பேறும் கிடைக்கும். மனக்குழப்பங்கள் ஒழியும். புண்ணியங்கள் சேரும், வீடு பேற்றை அடையவும் முடியும்.

    வீடுகளில் தீபம் ஏற்றுங்கள்

    சித்ரா பவுர்ணமி தினத் தன்று தமிழகம் முழுவதும் அவரவர் வீடுகளில் தீபங்கள் ஏற்றி கோடிக் கணக்கான விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும்.
    வீட்டு வாசல்களிலும் தங்களுக்கு சொந்தமான நிறு வனங்களிலும், வர்த்தக கட் டிடங்களிலும், கோவில்களிலும், அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் குடும்பத்தோடு அல்லது சக ஊழியர்களோடு, தனியா கவோ அல்லது கூட்டா கவோ விளக்கேற்றி வைக்க வேண்டும்.

    ஏற்றி வைக்கும் விளக்கு, குத்து விளக்காகவும் இருக்கலாம். காமாட்சி விளக்காகவும் இருக்கலாம், சாதாரண அகல் விளக்காகவும் இருக்கலாம். அவரவர் வசதிக்கு ஏற்ப மாலை 6.30 மணிக்கு தமிழகம் முழுவதும் தீபங்களை ஏற்றி கோடிக் கணக்கான விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும்.

    சித்ராதேவி

    சித்ரா பவுர்ணமியன்று வணங்க வேண்டிய தெய்வம் சித்ராதேவி. இவள் குபேரனின் மனைவி. லட்சுமிக்குரிய செல்வத்தை குபேரன் பராமரிக்கிறான். உலக உயிர்கள் செய்யும் பாவ, புண்ணியம், முன் வினை பயன்களுக்கு ஏற்ப அதைப் பிரித்துத் தருகிறான்.

    அவ்வாறு தரும்போது, உழைப்பாளிகளுக்கு சற்று அதிகமாகத் தர சிபாரீசு செய்பவள் இவள். எனவே இவளை சித்ரா பவுர்ணமி நாளில் நெய் தீபமேற்றி வணங்க வேண்டும். இவளை வணங்கினால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

    எண்ணெய் முழுக்கு பலன்

    தீபாவளியைப் போல, எண்ணைக் குளியலுக்கு முக்கியமான மற்றொரு நாள் சித்ரா பவுர்ணமி. சித்ரா பவுர்ணமிக்குரிய தெய்வம் சித்ரகுப்தர். எமனின் கணக்குப் பிள்ளை இவர். எமனுக்கு உதவி செய்ய அவுதும்பரன், சண்டா முருகன், சம்பரன், சார்த்தூலன் என்ற நான்கு தூதர்கள் உள்ளனர். திசைக்கு ஒருவராகச் சென்று குறித்த நேரத்திற்குள் உயிரைப் பறிப்பது இவர்களின் பணி.

    சித்ரகுப்தர் உயிர்கள் செய்த பாவ, புண்ணியங்களை கணக்கிட்டு எமதர்ம ராஜாவுக்கு அறிக்கை அளிப்பார். அதன் அடிப்படையில் எமன் அவர்களுக்கு தண்டனை கொடுப் பார். சித்ரா பவுர்ணமி அன்றுதான் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுமாம்.

    எனவே அன்று சித்ரகுப்தரை மனதார நினைத்து, சித்ர குப்தரே என் பாவ, புண்ணிய கணக்கை எழுதும் போது, பாவங்களைக் குறைத்து புண்ணியத்தை எழுதுவீர். இனி நான் எத்தகைய பாவத்தையும் செய்ய மாட்டேன். இதுவரை செய்த பாவங்களுக்கு, இந்த எண்ணை குளியலுடன் முழுக்கு போட்டு விடுகிறேன் எனச் சொல்லி, நல்லெண்ணையை தேய்த்து குளித்து விட வேண்டும். இதற்கு கை மேல் பலன் உண்டு.
    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.

    இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    நாளை (வியாழக்கிழமை) இரவு 7.05 மணிக்கு பவுர்ணமி தொடங்கி வெள்ளிக்கிழமை மாலை 5.35 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.
    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நாளை பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.

    இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    நாளை(புதன்கிழமை) காலை 9.41 மணிக்கு பவுர்ணமி தொடங்கி நாளை மறுநாள் (வியாழக்கிழமை)காலை 7.28 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.
    இந்த மாதம் பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பவுர்ணமி செல்ல உகந்த நேரம் என்னவென்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.

    இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இன்று (திங்கட்கிழமை) இரவு 11.53 மணிக்கு பவுர்ணமி தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 9.32 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.

    பவுர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் நேற்று பகலில் இருந்தே திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து கிரிவலம் செல்ல தொடங்கினர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் மகா தீபம் ஏற்றப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலமும் செல்வார்கள். பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் நேற்று மதியம் 1.17 மணிக்கு தொடங்கி இன்று (திங்கட்கிழமை) காலை 11.08 வரை நடைபெற உள்ளது. பவுர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் நேற்று பகலில் இருந்தே திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து கிரிவலம் செல்ல தொடங்கினர். மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பகலில் குறைந்த அளவிலான பக்தர்களே கிரிவலம் சென்றனர். நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. பின்னர் ஏராளமான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

    கிரிவலத்தை முன்னிட்டு கோவிலிலும், திருவண்ணாமலை நகரத்திலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    திருவண்ணாமலையில் இந்த மாதம் பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள். இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1.17 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் (திங்கட்கிழமை) காலை 11.08 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.
    திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வருவது போல பழனியிலும் கிரிவலம் நடைபெறுகிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வருவது போல பழனியிலும் கிரிவலம் நடைபெறுகிறது. பழனிமலை சுமார் 2 1/2 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. பெரும்பாலானவர்கள் கிரிவலம் செய்த பிறகே மலைக்கு சென்று தண்டாயுதபாணியை வணங்குகின்றனர்.

    அக்னி நட்சத்திரத்தின் போது சித்திரை மாத இறுதியிலும், வைகாசி மாத தொடக்கத்திலும் 14 நாட்கள் மக்கள் இரவு, பகலாக பழனி மலையை சுற்றி கிரிவலம் செல்கிறார்கள். இந்த 14 நாட்களும் பழனி மலை அடிவாரத்தில் உள்ள கடம்ப மலர்கள் தலையில் சூடி கிரிவலம் செல்வார்கள்.

    14-வது தினத்தன்று உற்சவர் ஸ்ரீமுத்துக்குமாரசாமி கிரிவலம் செல்வார். இந்த திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இன்று அதிகாலை அண்ணாமலையார் கிரிவலம் கொண்டு செல்லப்பட்டார். இன்று இரவு அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் இடையே மறுவூடல் வைபவம் நடக்கிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று திருவூடல் திருவிழா நடந்தது. இதனையொட்டி அதிகாலையில் நந்திக்கு தரிசனம் கொடுத்து விட்டு திட்டி வாயிலில் சூரிய பகவானுக்கும் காட்சி கொடுத்து மாடவீதியை 3 முறை சாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் சுற்றி வந்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணி அளவில் திருவூடல் தெருவில் திருவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருவூடல் திருவிழாவின்போது சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டதையடுத்து அம்மன் மீண்டும் கோவிலுக்கு சென்று விட்டார். அண்ணாமலையார் மட்டும் குமரக்கோவிலுக்கு சென்று விட்டார். இரவு முழுவதும் அங்கேயே தங்கினார்.

    இன்று அதிகாலை அண்ணாமலையார் கிரிவலம் கொண்டு செல்லப்பட்டார். சாமியுடன் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலபாதையில் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், மாலை அணிவித்தும் தரிசனம் செய்தனர்

    8 லிங்கங்கள் முன்பாக சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அண்ணாமலையார் கொண்டு வரப்பட்டார்.

    இன்று இரவு அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் இடையே மறுவூடல் வைபவம் நடக்கிறது. இதில் சுந்தரமூர்த்தி நாயனார் சமரசம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதனை யடுத்து அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மார்கழி மாதம் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எதுவென்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.

    இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1.40 மணிக்கு தொடங்கி, சனிக்கிழமை நள்ளிரவு 12.25 மணிக்கு பவுர்ணமி நிறைவு பெறுகிறது. அந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    திருவண்ணாமலை கிரிவல வழிபாடு எப்போது தோன்றியது? கிரிவலம் மேற்கொள்ளும் அனைத்துப் பக்தர்களும் இதைத்தெரிந்து கொள்ள வேண்டும். இதன் புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பக்தர்களை பொறி வைத்து பிடித்து ஞானமும், முக்தியும், அருளும் திருவண்ணாமலை தலத்தில், கைமேல் பலன் தரும் வழிபாடாக கிரிவல வழிபாடு திகழ்கிறது. இந்த கிரிவலம் எப்போது தோன்றியது? கிரிவலம் மேற்கொள்ளும் அனைத்துப் பக்தர்களும் இதைத்தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஜோதியாக தோன்றி பிறகு மலையாக அமர்ந்த அண்ணாமலையாரே இங்கு கிரிவலத்தை தொடங்கி வைத்தார். அவர் நடத்திய ஒரு திருவிளையாடல்தான் கிரிவலம் தோன்ற காரணமாக அமைந்தது. அந்த திருவிளையாடலால் திருவண்ணாமலையில் முதன் முதலில் கிரிவலம் சென்றது பார்வதிதேவி ஆவார். இதன் பின்னணியில் அமைந்த புராண வரலாறு வருமாறு:

    ஒரு தடவை கைலாயத்தில் சிவபெருமானின் இரு கண்களையும் பார்வதி தேவி மூடியதால் உலகம் இருண்டு உயிரினங்கள் அனைத்தும் தவிக்க நேரிட்டது. இதனால் பார்வதிதேவிக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்திற்கு பரிகாரம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டதால் பார்வதி தேவி திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்தார். அவர் தவத்தை கண்டு மனம் இறங்கிய சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார். வேண்டிய வரம் கேள் என்றார். அதற்கு பார்வதிதேவி உங்களை என்றென்றும் பிரியாது இருக்கும்படி உங்கள் உடலில் பாதியை தந்து அருள வேண்டும் என்றார்.

    உடனே சிவபெருமான் அப்படியானால் நீ என்னை சுற்றி வர வேண்டும் என்று கூறினார். அதை ஏற்றுக்கொண்ட பார்வதிதேவி திருவண்ணாமலையில் ஈசனே மலையாக வீற்றிருப்பதால் அந்த மலையை சுற்றத் தொடங்கினார். மலையை வலம் வருதல் என்பது சிவபெருமானையே சுற்றி வருவதற்கு சமமாகும் என்பதை உணர்ந்ததால் அவர் தன் தலை மீது கை கூப்பியபடி வலம் வந்தார்.

    அவருக்கு சிவபெருமான் கிரிவல பாதையில் நேர் அண்ணாமலை அருகே ரிஷப வாகனத்திலும், ஈசான்ய பகுதியில் ஒளி ரூபத்திலும் இரண்டு இடங்களில் காட்சி கொடுத்து ஆசீர்வதித்தார். பின்னர் தனது உடலின் இடபாகத்தை வழங்கி தன்னோடு ஐக்கியமாக்கி கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார். அப்போது பார்வதிதேவி, “நான் தங்களை சுற்றி வந்ததால் என்னை ஆசீர்வதித்ததை போல திருவண்ணாமலை மலையை கிரிவலம் வரும் ஒவ்வொரு பக்தனுக்கும் அருள் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு சிவபெருமான் சம்மதித்தார். இந்த முறையில்தான் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.

    பார்வதி தேவியை தொடர்ந்து இதர கடவுள்கள், தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள், மகான்கள் என அனைத்து தரப்பினரும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து ஈசனாகிய அண்ணாமலையாரின் அருளை பெற்றனர். இதைத் தொடர்ந்து சித்தர்களின் வழிகாட்டுதலின் பேரில் சாதாரண மனிதர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.

    ஆனால் கால ஓட்டத்தில் மனிதர்கள் கிரிவலம் செல்வது கொஞ்சம் கொஞ்சமாக மறந்து மறைந்து போனது. சித்தர்கள், ரிஷிகள், மகான்கள் மட்டும் அங்கு அரூப வடிவில் கிரிவலம் மேற்கொண்டு ஈசனின் அருளை பெற்று வந்தனர். இந்த நிலையில் மூவேந்தர்கள் ஆட்சியின்போது கிரிவலத்தின் மகிமையை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவானது. அந்த வாய்ப்பை இந்த உலகுக்கு பெற்று தந்த சிறப்பு ஒரு பாண்டிய மன்னனுக்கு கிடைத்தது.

    அந்த பாண்டிய மன்னனின் பெயர் வஜ்ராங்கதன். ஒரு தடவை அவன் வேட்டையாடுவதற்காக காட்டுக்கு சென்றான். அப்போது அழகான புனுகுப் பூனையை கண்டான். வாசனையோடு திகழ்ந்த அந்த பூனையை பிடிக்க முயற்சி செய்தான். ஆனால் அது அவனிடமிருந்து தப்பி ஓடியது. மன்னன் தனது குதிரையில் விடாமல் விரட்டினான். அந்த பூனையோ அருணாசலம் மலையை அடைந்தது.

    என்றாலும் மன்னன் வஜ்ராங்கதன் தொடர்ந்து பூனையை விரட்டினான். அந்த பூனை திருவண்ணாமலை மலையை கிரிவலம் போல சுற்றி வந்தது. மலையை முழுமையாக சுற்றி முடித்ததும் அந்த பூனை ஒரு இடத்தில் கீழே விழுந்து இறந்தது. அந்த சமயத்தில் மன்னனை சுமந்து வந்த குதிரையும் கீழே விழுந்து உயிரை விட்டது. மன்னன் மட்டும் உயிர் தப்பினான். அப்போது ஒரு அதிசயம் நடந்தது.

    குதிரையும், பூனையும் கந்தர்வர்களாக மாறி காட்சி அளித்தனர். அவர்கள் இருவரும் விண்ணுலகம் செல்ல தயார் ஆனார்கள். இதை கண்டு ஆச்சரியம் அடைந்த மன்னன் வஜ்ராங்கதன் அவர்கள் இருவரிடமும், “நீங்கள் யார்? எதற்காக இந்த திருவிளையாடல் நடக்கிறது” என்று கேட்டார். அப்போது அவர்கள் முன் ஜென்மத்தில் நடந்த ஒரு சம்பவத்தை தெரிவித்தனர்....

    “நாங்கள் இருவரும் வித்யாதரர்கள். ஒரு தடவை துர்வாச முனிவர் இருந்த வனத்துக்குள் சென்று அங்கிருந்த செடி-கொடிகளை நாங்கள் நாசமாக்கி விட்டோம். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் எங்கள் இருவரையும் பூனையாகவும், குதிரையாகவும் மாறும்படி சாபம் கொடுத்து விட்டார். பிறகு அவரே எங்களுக்கு சாப விமோசனத்திற்கான வழியையும் தெரிவித்தார்.

    திருவண்ணாமலைக்கு சென்று வசியுங்கள். ஒரு காலத்தில் வஜ்ராங்கதன் என்ற மன்னன் வருவான். அவன் மூலம் உங்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி நாங்கள் இருவரும் திருவண்ணாமலைக்கு வந்து வசித்து வந்தோம். நீங்கள் விரட்டியதால் நாங்கள் சிவபெருமானே மலையாக இருக்கும் இந்த புண்ணிய மலையை கிரிவலமாக வரும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் நாங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டுள்ளோம்.

    நீ இந்த மலையை நடந்து வராமல் குதிரையில் வந்ததால் உனக்கு இந்த கிரிவலத்திற்கான பலன் கிடைக்கவில்லை. உனக்கு அனைத்து செல்வமும் முக்தியும் வேண்டுமானால் இந்த மலையை நடந்து கிரிவலம் செய்ய வேண்டும். எங்களுக்கு முக்தி கிடைத்ததால் விடைபெறுகிறோம்” என்று கூறியபடி விண்ணுலகம் சென்று விட்டனர்.

    அதன் பிறகே வஜ்ராங்கதன் மன்னனுக்கு திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் ஈசனின் அருளைப் பெற்று அத்தனை சிறப்புகளையும் பெற முடியும் என்ற உண்மை தெரிய வந்தது. மிகவும் மகிழ்ச்சி அடைந்த அவன் உடனடியாக மன்னர் பதவியில் இருந்து விலகினான். ஆட்சி பொறுப்பை தனது மகன் ரத்னாங்கத பாண்டியனிடம் ஒப்படைத்து விட்டு திருவண்ணாமலைக்கு வந்து தினமும் கிரிவலம் செய்ய ஆரம்பித்தான். அதோடு நாட்டு மக்களையும் கிரிவலம் செல்ல வைத்தான். அதன் பிறகே திருவண்ணாமலை கிரிவலம் பார் புகழும் வகையில் பரவியது.

    இதற்கிடையே சித்தர் பெருமக்களும் கிரிவலத்தின் சிறப்பை மக்களுக்கு உணர்த்தினார்கள். திருவண்ணாமலை மலை ஜோதி லிங்க வடிவமாகி பிறகு ஸ்ரீ சக்கர வடிவத்தில் அமைந்துள்ள உலகின் உன்னதமான மலை என்பதையும் அதை சுற்றி வந்தால் பிறவி பிணிகள் அனைத்தும் தீரும் என்பதையும் சாதாரண மனிதர்களிடம் சித்தர்கள் தெரிய வைத்தனர். இதனால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தது.

    திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் என்னென்ன பலன்களைப் பெறலாம் என்று அருணாசல புராணம் உள்பட பல்வேறு புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலையை சுற்றி நடந்து வந்த சிவந்த பாதங்களை கண்டாலே நாலாவித பாவங்களும் காணாமல் போய்விடும். கிரிவலம் வருபவர்களின் காலடி தூசு ஒருவரது உடலில் பட்டாலே அவரை பிடித்த தோஷங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் கிரிவலம் வரவேண்டும் என்று சொன்னாலே போதும்.... பிரம்மஹத்தி தோஷம் தீர்ந்து விடும். ஒரு அடி எடுத்து வைத்தால் யாகம் செய்த பலன்கள் கிடைக்கும். இரண்டடி எடுத்து வைத்தால் ராஜ பதவியை பெறக்கூடிய யாகம் செய்த பலன் வரும். மூன்றடி எடுத்து வைத்தால் தானம் செய்த பலன் கிடைக்கும். நான்குஅடி எடுத்து வைத்தால் அஷ்டாங்க யோக பலன்கள் கிடைக்கும்.

    கிரிவலம் வந்து சிவபெருமானிடம் பார்வதிதேவி பலன் பெற்றது ஒரு பவுர்ணமி தினமாகும். எனவே பவுர்ணமியில் கிரிவலம் செல்வது கூடுதல் பலன்களை தருவதாக கருதப்படுகிறது. பொதுவாக திருவண்ணாமலையில் எந்த தினத்திலும் எப்போது வேண்டுமானாலும் கிரிவலம் செல்லலாம். நேரம்-காலம் கிடையாது. நள்ளிரவில் கூட கிரிவலம் செல்பவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாள் கிரிவலத்துக்கும் திருவண்ணாமலை மலையானது ஒவ்வொரு விதமாக காட்சி தரும். அதை கிரிவலம் செல்பவர்கள் உன்னிப்பாக பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

    ஆதி காலத்தில் திருவண்ணாமலையில் வருட பிறப்பு, மாத பிறப்பு, பவுர்ணமி, அமாவாசை, கார்த்திகை நட்சத்திரம், சிவராத்திரி நாட்களில் கிரிவலம் செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தனர். பின்னர் அமாவாசைக்கு கிரிவலம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் சந்திரனின் முழு சக்தியும் பவுர்ணமி தினத்தன்றுதான் வெளிப்படுகிறது என்பதை மக்கள் தெரிந்து கொண்ட பிறகு பவுர்ணமியில் கிரிவலம் செல்வது அதிகரித்துள்ளது. ஆனால் திருவண்ணாமலையை பொறுத்தவரை 24 மணி நேரமும் கிரிவலம் நடக்கிறது. மலையைச் சுற்றி, எப்போதும், யாராவது ஒருவர் கிரிவலம் சென்று கொண்டு இருப்பதை பார்க்கலாம்.

    கிரிவல பாதை மொத்தம் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. கிரிவல பாதையில் உள்ள அஷ்டலிங்கம் ஆலயங்கள் உள்பட அனைத்து ஆலயங்களையும் தரிசனம் செய்தபடி வந்தால் கிரிவலத்தை முடிப்பதற்கு சுமார் 4 மணி நேரம் ஆகலாம்.

    கிரிவலப் பாதையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் தவிர மடங்கள், ஆசிரமங்கள், தரிசனப் பகுதிகள், சித்தர்களின் ஜீவ சமாதிகள் என பல்வேறு இடங்கள் உள்ளன. அடி அண்ணாமலை, இடுக்குப் பிள்ளையாரும் இருக்கிறார்கள். இப்படி கிரிவலப்பாதையில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று வருவதாக இருந்தால் குறைந்தது 5 மணி நேரமாகி விடும்.

    அப்படி இல்லாமல் கிரிவலத்தை மட்டும் மேற்கொண்டால் 3 மணி நேரத்தில் கிரிவலத்தை நிறைவு செய்து விடலாம். ஆனால் அதற்காக வேக வேகமாக கிரிவலப் பாதையில் நடக்க கூடாது.

    பஸ்சை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரக்க பரக்க கிரிவலம் செல்லக்கூடாது. டி.வி. சீரியல் பற்றி பேசிக்கொண்டோ அல்லது ஊரில் யார் குடியைக் கெடுக்கலாம் என்று பேசிக் கொண்டோ அல்லது யார் பற்றியாவது புறம் பேசிக் கொண்டோ கிரிவலம் செல்லக்கூடாது. கிரிவலம் வருவது என்பது சூட்சுமமாக பல நன்மைகளை நமக்கு தரக்கூடியது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

    கிரிவல பாதையில் உள்ள நம் கண்களுக்கு தெரியாத சித்தர்கள் அனைவரும் நம்மை ஆசீர்வதிக்க தயாராக இருக்கிறார்கள் என்பதை நம்ப வேண்டும். இந்த பலன்களை எல்லாம் பெற வேண்டுமானால் மனம் ஒரே சிந்தனையில் ஈசனை மட்டும் நினைத்தபடி நமசிவாய என்று உதடுகள் உச்சரித்தபடி வேறு எந்த செயல்களிலும் ஈடுபடாமல் கிரிவலம் மேற்கொள்ள வேண்டும்.

    அது மட்டுமல்ல, எந்த தினத்தில் நாம் கிரிவலம் செல்ல வேண்டும்? கிரிவலம் செல்லும் போது நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எந்தெந்த இடங்களில் வணங்க வேண்டும்? எந்தெந்த இடங்களில் மலையை பார்த்து கும்பிட வேண்டும்? என்றெல்லாம் வரைமுறைகளும், ஐதீகங்களும் உள்ளன. இதை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு கிரிவலம் சென்று வந்தால்தான் நீங்கள் கிரிவலம் மேற்கொள்வதற்கான முழு பலன்களும் கிடைக்கும்.
    ×