search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    • தி.மு.க. கூட்டணியில் 10-க்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன.
    • தி.மு.க. வுடன் சமூக நீதி, மாநில உரிமைகள், மொழி உரிமை என கருத்தியல் ரீதியாக உடன்பாடு இருக்கிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. கூட்டணியில் 10-க்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன. அவரவர் கோரிக்கைகளுக்கு ஏற்ப தொகுதிப் பங்கீடுகளை முடிக்க வேண்டிய பொறுப்பு தி.மு.க. தலைமைக்கு இருக்கிறது. தனிப்பட்ட முறையில் கட்சியின் பலம் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிட கூட்டணி பலம் மிகவும் முக்கியம். அப்போதுதான் நமது கொள்கை பகைவர்களை வீழ்த்த முடியும்.

    வி.சி.க.வுக்கு தனியாக சின்னம் இல்லை. புதிதாக ஒரு சின்னத்தை நினைவூட்டி இறுதிவரை வழி காட்டுவது கடினம். அதைத் தவிர்ப்பதற்காகத்தான் தி.மு.க. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துகிறது. மேலும் உதயசூரியன் சின்னத்தில் நின்றால், அது தி.மு.க.வுக்கு கிடைத்த வாக்கு வங்கியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும்.

    எனவே, வி.சி.க. என்னும் கட்சிக்கு வாக்கு வங்கி இருப்பதை நிரூபிக்க வேண்டியிருந்தது. கடந்த மக்களவைத் தேர்தலில் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் வாக்கு வங்கி இருந்ததால் சிதம்பரத்தில் பானை சின்னத்திலும் போட்டியிட்டோம். அதன் பின், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்த சின்னத்தில் போட்டியிட்டு வாக்கு வங்கியை உறுதி செய்தோம். எந்தச் சின்னத்தில் போட்டி என்பது பேச்சுவார்த்தையில் தெரியும். சாதிவன்முறை, பெண்கள் தொடர்பான பிரச்சினை, மொழி, இனம் அடிப்படையிலான பிரச்சினை, வர்க்கப் பிரச்சினைகள் எனப் பல தளங்களிலும் முரண்பாடுகள் இருக்கின்றன. அதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க முடியாது. தி.மு.க.வுடன் சமூக நீதி, மாநில உரிமைகள், மொழி உரிமை என கருத்தியல் ரீதியாக உடன்பாடு இருக்கிறது. அந்த புள்ளியில் தி.மு.க.வு டன் வி.சி.க. நீடிக்கிறது.

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதைக் கற்பனை கூட செய்ய முடியாது. மாநிலங்கள் இருக்காது, தேர்தல் இருக்காது, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்கள் இருக்காது. ஒன் இந்தியா, ஒன் நேசன், ஒன் கல்ச்சர், ஒன் எலக்சன். ஒன் பார்ட்டி என ஆபத்தான நிலையை இந்தியா எட்டும்.

    இவ்வாறு தொல். திருமாவளவன் கூறி உள்ளார்.

    • தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது.
    • மத்திய அரசின் ஜி.எஸ்.டி.யால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வியாபாரிகள், தொழில் முனைவோர், நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்து கேட்டு வருகிறார்கள். கோவையில் நேற்று கருத்து கேட்பு நிகழ்ச்சி நடந்த நிலையில் இன்று சேலம் 5 ரோடு ஜென்னிஸ் கேட்வே ஓட்டலில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    இதில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., மருத்துவ அணி செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட அறிக்கை தயாரிக்கும் குழுவினர் பங்கேற்றனர்.


    கருத்து கேட்பு கூட்டத்தில் நாமக்கல் முட்டை கோழி பண்ணையாளர்கள், லாரி உரிமையாளர்கள், பஸ் உரிமையாளர்கள் சங்கம் , துணி ஏற்றுமதியாளர்கள், பட்டு உற்பத்தியாளர்கள், கைத்தறி உற்பத்தியாளர்கள், தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் உரிமையாளர்கள், ட்ரெய்லர் உரிமையாளர்கள், மோட்டார் மெக்கானிக் சங்கம், பழங்குடியினர் மக்கள் சங்கம், பால் உற்பத்தியாளர் சங்கம், அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், நெசவாளர் சங்கம், நூல் உற்பத்தியாளர் சங்கம், மரவள்ளி கிழங்கு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களை சார்ந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை மனுவாக வழங்கினர். அப்போது முக்கிய கருத்துக்களை அவர்கள் நேரடியாக நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.

    அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து தேர்தல் அறிக்கையில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக குழுவினர் உறுதி அளித்தனர்.

    தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டு அறிந்து நேரடியாக பெற்று தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் அனைத்து தரப்பினர் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்வதுடன் சில முக்கியமானவற்றை நேரடியாக எங்களிடம் தெரிவிக்கலாம்.


    தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது. வெள்ள நிவாரணம் கொடுக்க மறுத்து வருகிறது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி.யால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல குழப்பங்கள் அதில் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவில்லை. கோரிக்கையை காது கொடுத்து கேட்கவும் தயாராக இல்லை.

    மத்திய அரசு நாம் சொல்வதை கேட்கும் அரசாக அமைய வேண்டும். மக்களை ஒருங்கிணைத்து அழைத்து செல்லும் அரசாக அது இருக்க வேண்டும். ஒற்றுமையான மத்திய அரசாக , வேலைவாய்ப்பு உருவாக்கும் அரசாங்கமாக உரிமைகளை மதிக்கும் அரசாக இருக்க வேண்டும். மக்களையும், மொழி உணர்வையும் மதிக்கும் அரசாக உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த பாராளுமன்ற தேர்தலை அனைவரும் இணைந்து எதிர் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.
    • கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் தி.மு.க. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஆலோசனை கூட்டம் கோவையில் இன்று (பிப்ரவரி 10) நடைபெற்றது. இந்த கூட்டம், அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.

    ஆலோசனை கூட்டத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொழில்துறையினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "கோவை மட்டுமல்ல, தமிழகம் முழுக்க சிறு, குறு தொழில் செய்பவர்கள் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. மற்றும் கொரோனா உள்ளிட்டவைகளால் பெரிய பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர். ஜி.எஸ்.டி.-யில் நிறைய சிக்கல்கள் உள்ளன. அதை கட்ட முடியாமல் சிறு, குறு தொழில் செய்வோர் தங்களது தொழிலை செய்ய முடியாத சூழலில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்."

    "கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மின் கட்டண உயர்வு தொடர்பாக பலமுறை தொழில்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும்," என்று தெரிவித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜி.எஸ்.டி.யில் உள்ள பல குழப்பங்கள் பற்றி வியாபாரிகள், சிறு, குறு தொழில் சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
    • பல மாநில முதலமைச்சர்கள் களத்தில் போராட வேண்டிய சூழலுக்கு ஒன்றிய அரசு தள்ளியுள்ளது.

    ஓசூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, கடந்த 5-ந் தேதி முதல், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை சேர்ந்த கோவி. செழியன், அப்துல்லா எம்.பி மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் நேற்று வந்தனர்.

    ஓசூரில், தளி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த குழுவினர், தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்றனர். இதில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து, கனிமொழி எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகம் முழுவதும் 2 கருத்துகளை ஒரே மாதிரியாக பார்க்க முடிகிறது. ஜி.எஸ்.டி.யில் உள்ள பல குழப்பங்கள் பற்றி வியாபாரிகள், சிறு, குறு தொழில் சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்.

    குறிப்பாக ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு, தொழிற் சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன என்பதை தெரிவித்து உள்ளனர்.

    மாநிலங்களுக்கு நிதி பகிர்வு வழங்குவதில் பிரதமர் மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது கூறிய கருத்துக்களுக்கு முற்றிலும் எதிராக, தற்போது பிரதமராக உள்ள நிலையில் அவர் தனது நிலைப்பாட்டை எடுத்துள்ளார். பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநில முதல்வர்கள் இந்த விவகாரத்தில் போராட்டங்களை கையில் எடுத்து வருகிறார்கள்.

    பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து தமிழக முதலமைச்சர் மட்டுமின்றி பல மாநில முதலமைச்சர்கள் களத்தில் போராட வேண்டிய சூழலுக்கு ஒன்றிய அரசு தள்ளியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் 39 இடங்களையும், புதுச்சேரியில் ஒரு இடத்தையும் என 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குஜராத் மாநிலத்தில் முதலமைச்சாரக பிரதமர் மோடி இருந்த போது மத்திய அரசை விமர்சித்து பேசினார்.
    • இதுதொடர்பான வீடியோவை தி.மு.க. எம்.பி. கனிமொழி எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    சென்னை:

    மத்திய பா.ஜ.க அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. அடுத்த நாள் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட்டில் எந்த வித நல்ல திட்டங்களும் இல்லை, அறிவிப்புகளும் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

    இந்த பட்ஜெட்டில் எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு மத்திய அரசு குறைந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது எனக்கூறி கர்நாடகா, தமிழ்நாடு, கேரள அரசுகள் போராட்டம் அறிவித்தன.

    நேற்று முன்தினம் மத்திய அரசை கண்டித்து கர்நாடக அரசும், நேற்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் போராட்டமும் நடைபெற்றது. தமிழ்நாட்டை சேர்ந்த தி.மு.க எம்.பி.க்கள் கருப்புச் சட்டை அணிந்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் முதல் மந்திரியாக பிரதமர் மோடி இருந்தபோது ஒன்றிய அரசை விமர்சித்துப் பேசிய வீடியோவை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், 'ஒரு காலத்தில் முதலமைச்சர், இப்போது பிரதமர்' என தலைப்பிட்டு தி.மு.க. எம்.பி. கனிமொழி பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவில் பேசும் மோடி, குஜராத் மாநில அரசு, மத்திய அரசுக்கு வரியாக ரூ.60,000 கோடியை அளித்து வருகிறது. ஆனால் மத்திய அரசு குஜராத் அரசு திருப்பிக்கொடுப்பது ரூ.8,000 கோடி. ரூ.10,000 கோடி. ரூ.12,000 கோடி. குஜராத் மாநில அரசை என்ன பிச்சைக்காரர் என்று நினைக்கிறீர்களா?

    மத்திய அரசிடம் நிதியைப் பெற குஜராத் மாநில அரசு பிச்சை எடுக்க வேண்டுமா? என தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • அனைத்து கட்சிகளையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரவணைத்து தான் செல்கிறார்.
    • தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.

    மதுரை:

    மதுரையில் தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை பெற்ற கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரையில் இன்று நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சிறு, குறு தொழி ல்களை ஊக்கப்படுத்த வேண்டும் என அதிகளவில் மனு வழங்கியுள்ளனர். பிரதமர் மோடி 3 முறை தமிழகம் வருகை தந்தும் சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ள சேதங்களுக்காக நிவாரண நிதி 1 ரூபாய் கூட தரவில்லை. முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்தே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட போதிலும் எந்தவித பாரபட்சமும் காட்டப்படவில்லை. அனைத்து கட்சிகளையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரவணைத்து தான் செல்கிறார்.

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அறிவிப்புகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் நிதியை ஒவ்வொரு ஆண்டும் குறைத்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக ரெயில்வே திட்டங்களுக்கான நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருமாவளவன் மட்டும் பானை சின்னத்தில் போட்டியிட்டார்.
    • தனி சின்னத்தில் நின்று ஜெயித்து கட்சிக்கு அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் திருமாவளவன் உறுதியாக உள்ளார்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அதனை தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. 6 சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 4 தொகுதியில் வெற்றி பெற்றனர்.

    இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து களம் இறங்க தயாராக உள்ள விடுதலை சிறுத்தை 4 தொகுதிகளையும் ஒரு மேல்சபை எம்.பி.யும் கேட்க உள்ளனர்.

    திங்கட்கிழமை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் வி.சி.க. அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. கூட்டணி கட்சியின் சின்னத்தில் நிற்காமல் தனி சின்னத்தில் முழுமையாக நிற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருமாவளவன் மட்டும் பானை சின்னத்தில் போட்டியிட்டார். ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை ஒதுக்கப்படுகின்ற அனைத்து தொகுதியிலும் தனி சின்னத்தில் நின்று ஜெயித்து கட்சிக்கு அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் திருமாவளவன் உறுதியாக உள்ளார்.

    இரண்டு தேர்தலில் தனி சின்னமான பானை சின்னத்தில் போட்டியிட்டு குறுகிய காலத்தில் மக்களிடம் சின்னம் குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டது. மிக குறுகிய காலத்தில் பானை சின்னம் வாக்காளர்கள் மத்தியில் இடம் பிடித்தது. அதனால் இந்த முறையும் பானை சின்னத்தில் போட்டியிடவே திருமாவளவன் ஆர்வம் காட்டுகிறார்.

    அதற்காக தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. 2 முறை பானை சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு கணிசமாக வாக்குகள் பெறப்பட்டு இருப்பதை குறிப்பிட்டு மீண்டும் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • தஞ்சாவூர் மாவட்டத்துக்கு செல்வது 16-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • பொது தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்க உள்ளனர்.

    சென்னை:

    தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் கடந்த 5-ந் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டமாக பல்வேறு தரப்பட்ட மக்களிடம் சென்று தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்டு வருகிறது.

    இந்த குழு மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணத்தின் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டம் செல்கின்றனர்.

    நாளை (8-ந் தேதி) தஞ்சை-திருவாரூர், நாகை-திருவாரூர், திருச்சி-புதுக்கோட்டை மாவட்டங்களின் நிர்வாகிகளை சந்திப்பதாக இருந்தது. ஆனால் இப்போது தஞ்சாவூர் மாவட்டத்துக்கு செல்வது 16-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    9-ந் தேதி சேலத்துக்கு பதில் ஓசூர் செல்கிறார்கள். 10-ந் தேதி கோவை, திருப்பூருக்கும், 11-ந் தேதி சேலம் செல்லும் வகையிலும் சுற்றுப்பயணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 17-ந் தேதி விழுப்புரம், 18-ந் தேதி வேலூர், ஆரணிக்கு செல்லும் இந்த குழுவினர் 21, 22, 23-ந் தேதிகளில் சென்னையில் பொது தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்க உள்ளனர்.

    • தேர்தல் அறிக்கை என்பது நம்முடைய உரிமைகளை மீட்பதற்கான ஒரு தேர்தல் அறிக்கை.
    • நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து மக்களை ஒற்றுமையாக முன்னேற்ற பாதையில் அழைத்துச்செல்வோம்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் நடந்த தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் கருத்து கேட்பு கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கக்கூடிய பல துறைகளை சார்ந்த சங்கங்களை சார்ந்த அத்தனை பேருக்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களை சந்தித்து மக்களுடைய கருத்துக்களை, கோரிக்கைகளை கேட்டு எழுதப்படக்கூடிய மக்களுடைய தேர்தல் அறிக்கையாகத்தான் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இருக்கும்.

    இப்போது அந்த வழியில் தொழிலாளர்கள், நம்முடைய முதலமைச்சர் கழக தலைவர் தளபதி அவர்களுடைய கட்டளைக்கு இணங்க தேர்தல் சார்ந்து தொழிலாளர், விவசாயிகள், மீனவர்களை சந்தித்து அவர்களுக்கு இருக்கக்கூடிய கோரிக்கைகளை எல்லாம் தேர்தல் அறிக்கையாக உருவாக்கக்கூடிய வாய்ப்பை நாங்கள் பெற்று இருக்கிறோம்.

    இந்த தேர்தல் அறிக்கை என்பது நம்முடைய உரிமைகளை மீட்பதற்கான ஒரு தேர்தல் அறிக்கை. மத்தியில் இருக்கக்கூடிய அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாநில உரிமைகளை சிதைத்து கொண்டிருக்கிறது.

    அதேபோல் மக்களை பிரித்தாளக்கூடிய ஒரு மனப்பான்மையோடு நம்முடைய ஒற்றுமையை சிதைத்து, ஒவ்வொரு மாநிலத்தின் அடையாளங்களை எல்லாம் அழித்து, மக்களுக்கு இடையே பிரச்சனைகளை உருவாக்கி, வேறு பிரச்சனைகளை கொண்டு வந்து அதை முன்வைத்து, மக்கள் அன்றாடம் சந்திக்கும் வேலைவாய்ப்பு இல்லாமை, விவசாய பிரச்சனை, மீனவர்களுடைய உரிமைகளை பறிக்கப்படுவதை மறக்கடிக்க செய்து வேறு ஒரு புதிய மதக்கலவரத்தையோ ஜாதி பிரச்சனைகளையோ தூண்டி அதில் அரசியல் செய்யலாம் என்ற நிலைப்பாடு உடையவர்கள் தான்.

    அதனால் இதை நாம் சரியாக புரிந்து கொண்டு மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளை காண நம்முடைய முதலமைச்சர் கட்டளைதான் இந்த தேர்தல் குழு. உங்களுக்கு இருக்கக்கூடிய கோரிக்கை, அது மாநில அரசு சார்ந்ததாகவும் இருக்கலாம். மத்தியில் ஆட்சி நிச்சயமாக மாறும் என்ற நம்பிக்கையோடு, நாம் அந்த ஆட்சி மாற்றத்திற்கான உழைப்பை முதலில் செய்து கொண்டிருக்கிறோம்.

    அந்த ஆட்சி மாற்றம் வந்த பிறகு நம்முடைய உரிமைகளை மீட்பதற்காக நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அதையும் நீங்கள் எங்களிடம் வழங்க வேண்டும். நிச்சயமாக நம்முடைய முதலமைச்சரால் உங்களுடைய வழிகாட்டுதலின் வழியே ஒரு ஆட்சி மாற்றம் இந்த நாட்டிலே உருவாகும். அந்த ஆட்சி மாற்றம் மூலம் இந்த நாட்டை மீட்டெடுப்போம். நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து மக்களை ஒற்றுமையாக முன்னேற்ற பாதையில் அழைத்துச்செல்வோம்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

    • இன்று 2-வது நாளாக நாகர்கோவிலில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • ஜி.எஸ்.டி. பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு வணிகர்களின் நிலைமை காப்பதற்கு 2 சதவீத வரி ஒதுக்கீடு செய்திட முன் மொழிய வேண்டும்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன்படி இந்த குழுவினர் நேற்று தூத்துக்குடியில் இருந்து கருத்து கேட்பு கூட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    இன்று 2-வது நாளாக நாகர்கோவிலில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் உறுப்பினர்கள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முன்னாள் எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே. எஸ்.விஜயன், தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோ.வி.செழியன் எம்.எல்.ஏ., எழிலரசன் எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் எம்.பி., டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ, மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு அறிந்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உட்பட்ட பொதுமக்கள், மீனவர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், மலைவாழ் மக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை மீனவர்கள் வழங்கினார்கள். விவசாய சங்க பிரதிகளும் கலந்து கொண்டனர்.

    வின்ஸ்ஆன்றோ, புலவர் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.வி.எம். சானலை தூர்வார வேண்டும், குளங்களை தூர்வார விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கனிமொழி எம்.பி.யிடம் வழங்கினார்கள்.

    இதே போல் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பிலும் மனு வழங்கப்பட்டது. வணிகர்களை அரசு ஊழியர்களுக்கு இணையாக நடத்துவதற்கான சட்ட முன் வடிவை முன்மொழிந்திட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையாக ஓய்வூதிய பணபலன்களும், குடும்ப பாதுகாப்பு நலநிதி காப்பீடு பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். தனிநபர் வருமான வரி உச்சவரம்பை குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் ஆக உயர்த்தி அறிவிக்க முன்மொழிந்திட வேண்டும்.

    ஜி.எஸ்.டி. பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு வணிகர்களின் நிலைமை காப்பதற்கு 2 சதவீத வரி ஒதுக்கீடு செய்திட முன் மொழிய வேண்டும். ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் நோயாளிகள் மாணவர்கள் நலன் கருதி ரூ.1000-த்துக்கு குறைவான விடுதி கட்டிடங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்கள்.

    மீன் வலை தயாரிப்பாளர் சங்கம் சார்பில் செயலாளர் நாகூர்கான் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர். மனுவில், கொல்கத்தா, மும்பை துறைமுகங்கள் வழியாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் இறக்குமதியாகும் வலைகளை தடுப்பதுடன் மலிவுவிலை சீனப் பொருட்களுடன் மறைத்து இறக்குமதி செய்யப்படுகின்ற சீன வலைகளை முற்றிலுமாக தடுக்க வேண்டும். விவசாய பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு இருப்பது போன்று மீனவர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் மீன் வகைகளுக்கும் பூஜ்ஜியம் சதவீத வரி மட்டுமே நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதைத் தொடர்ந்து சின்னமுட்டம் விசைப்படகு மீனவர் சங்கம், தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள், குடியிருப்போர் நலசங்க நிர்வாகிகள், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை நிர்வாகிகள், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு நிர்வாகிகளும், கனிமொழி எம்.பி.யிடம் மனு அளித்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், அவைத் தலைவர் எப்.எம் ராஜரத்தினம் பொருளாளர் கேட்சன், தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரை பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்ட பொதுமக்களிடமும் கனிமொழி எம்.பி. கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

    • அரசு நிறுவனங்களை தனியார் நிறுவனங்களாக மாற்ற முயற்சி செய்கிறார்கள்.
    • மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் காணாமல் போய்விடும்.

    உடன்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் உடன்குடி பஜாரில் நேற்று இரவு நடந்தது.

    கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார்.

    உடன்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் தலைவருமான பாலசிங் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், பாராளுமன்ற குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-

    இந்தியாவில் உள்ள மக்கள் ஜாதி, மதத்தை மறந்து அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகிறோம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து உதவிக்கரம் நீட்டி ஒற்றுமையாக வாழ்கிறோம்.

    ஆனால் பா.ஜனதா அரசு இந்துக்களை பாதுகாக்கவில்லை. இந்திய மக்களை பிரிக்கிறார்கள். இந்துக்களை அரசியல் கேடயமாக பயன்படுத்துகிறார்கள்.

    விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட திட்டங்களை கொண்டு வருகிறார்கள். அரசு நிறுவனங்களை தனியார் நிறுவனங்களாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். மாநில உரிமைகளை கொஞ்சம், கொஞ்சமாக பறிக்கிறார்கள்.

    மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் காணாமல் போய்விடும். மதத்தை வைத்து அனை வரையும் பிரித்து விடுவார்கள். தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம், பெண்களும் அர்ச்சகராகலாம் என்று ஆணையிட்டு அதை செயல்படுத்தி வருகிறார் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

    அனைத்து தரப்பு மக்களை அரவணைத்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது.
    • விலை வாசி ஏற்றத்தாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி-பாலக்காடு சாலை தனியார் கல்யாண மண்டபத்தில் பொள்ளாச்சி நகர அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை சபாநாயகரும், எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது. இதற்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். மேலும் விலை வாசி ஏற்றத்தாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


     பொள்ளாச்சி நகராட்சி ஊழலின் ஊற்றுக்கண்ணாக உள்ளது. பொள்ளாச்சி நகரத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை.

    ஒரு போலீஸ் அதிகாரி மோட்டார் சைக்கிள் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.

    அந்தளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு காணப்படுகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெறும்.

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியை பொறுத்த வரை எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்று கொள்பவர்களுடனே நாங்கள் கூட்டணி அமைப்போம். அப்படி வருபவர்களை சேர்த்து கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×