search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    • நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

    சென்னை:

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது இருவர் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

    இன்று காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து கூச்சல் அமளி நிலவியதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்குப் பிறகு அவை மீண்டும் கூடியது. அப்போது தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாக கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்பட 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 15 பேரின் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது.

    பா.ஜ.க. அரசின் சகிப்புத்தன்மையற்ற செயலைக் கண்டிக்கிறேன்.

    பாராளுமன்றம் விவாதம் நடத்தும் அவையாக இருக்கவேண்டும்.

    எம்.பி.க்களின் கருத்துரிமையைப் பறிப்பது புதிய பாராளுமன்ற விதிமுறையா?

    பாராளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய எம்பிக்களை தண்டிப்பதா?

    எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வகையில் பாராளுமன்றம் செயல்படக் கூடாது.

    எம்.பி.க்களின் சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.
    • நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது இருவர் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

    இன்று காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கூச்சல் அமளி நிலவியதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    2 மணிக்குப் பிறகு அவை மீண்டும் கூடியது. அப்போது தமிழக எம்.பி.க்களான கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், நடராஜன் உள்ளிட்டோர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாக கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன் உள்ளிட்ட 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக ஜோதிமணி எம்.பி. உள்ளிட்ட ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மேலும் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் விவரம்:-

    கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், சுப்பராயன், நடராஜன், கௌதம சிகாமணி, பென்னி பெஹனன், ஸ்ரீகண்டன், முகமது ஜாவேத், பிரதாபன், டெரிக் ஓப்ரையன், டீன் குரியகோஸ், ரம்யா ஹரிதாஸ், ஹைபி ஈடன்.

    • மக்களவையின் உள்ளே மற்றும் வெளியே கண்ணீர் புகை குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    கலர் புகை குண்டு வீசிய போது நான் மக்களவைக்குள் இருந்தேன். திடீரென சத்தம் கேட்டபோது ஒருவர் மேஜைகள் மீது ஏறி ஓடினார்.

    முதலில் குதித்தவர் கையில் காலணி இருந்தது. பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்தவர்களை எம்.பி.க்கள் தடுத்தனர்.

    இருவரும் தங்கள் காலுக்கு கீழ் இருந்த சிலிண்டர் போன்ற கருவியில் இருந்து புகையைப் பரப்பினர். புகையில் அவையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    அவை மீண்டும் கூடியபோதும் புகையால் அங்கு மூச்சுத்திணறல் இருந்தது. பார்வையாளர் மாடத்தில் இருந்து எளிதாக எம்பிக்கள் இருக்கும் இடத்தை அடையும் வகையில் கட்டட அமைப்பு உள்ளது.

    எம்.பி.க்கள் வருவதற்கு கட்டுப்பாடுகள் இருக்கும்போது இவர்கள் எப்படி வந்தார்கள்? உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்படும் பிரதமரே இங்கு வரும்போது இந்த தாக்குதலானது அச்சத்தை ஏற்படுத்துகிறது. பாராளுமன்ற கட்டடத்தில் பாதுகாப்பு இல்லாத உணர்வு ஏற்படுகிறது.

    கலர் புகைக்கு பதில் ஏதேனும் வைத்து தாக்குதல் நடத்தியிருந்தால் உயிரிழப்புகள் நடந்திருக்கும். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் தான் என தெரிவித்துள்ளார்.

    • கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
    • மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசுக்கு கவலை இல்லை

    குளச்சல் :

    மீனவர் கல்வி மற்றும் வளர்ச்சி அமைப்பு (பெடா), கோடிமுனை பங்கு பேர வை, பங்கு மக்கள் சார்பில் உலக மீனவர் தினம் கோரிக்கை மாநாடு மற்றும் கோடிமுனையில் மீன் பிடித்துறைமுகத்திற்கு அனுமதி அளித்த தமிழக அரசு, அமைச்சர்களுக்கு பாராட்டு விழா கோடி முனையில் ஊர் தலைவர் சார்லஸ் தலைமையில் நடந்தது. குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்த லைவர் எனல்ராஜ், பெடா தலைவர் பிரிட்டோ ஆன்றனி ஆகியோர் முன்னி லை வகித்தனர்.

    விழாவில் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பா ளராக பங்கேற்றார். அவர் பேசியதாவது-

    ஒவ்வொரு நாளும் இயற்கையுடன் போரிட்டு, அதே சமயம் மிகவும் இயற்கையை நேசித்து வாழ்பவர்கள் மீனவ மக்கள். மீனவர்களின் துயரங்களை ஏற்றுக் கொள்ளாமல், கொண்டாடப்பட வேண்டி யவர்களை கொண் டாடாமல், மதிக்க வேண்டிய மீனவர்களுக்கு மரியாதை தராமல், ஒடுக்கும் சூழலை நாம் பார்த்துக் கொண்டி ருக்கிறோம்.

    சூழலியல் மாற்றத்தால் பனி பிரதேசத்தில் பனி உருகி கடல் மட்டம் உயரும் நிலை உள்ளது. கடல் மட்டம் உயரும் போது கடல் கரையில் இருக்கும் வீடுகள் அழியும் நிலை ஏற்படும். கடலில் மக்களின் வாழ்வி யலை பார்த்துவிட்டு ஆறு மாதங்களுக்கு பிறகு வந்து பார்த்தால் அந்த இடத்தில் இருந்த வீடுகள், கடற்கரை காணாமல் போகும் நிலை யை காண்கிறோம்.

    மீனவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் போராட் டமாகவே உள்ளது. கடலில் மீன் பிடிப்பவர்களுக்கு கடல் தாய் போன்றது. தாயில் பிரிவினை இல்லை. இது உன்னுடைய எல்லை, இது என்னுடைய எல்லை எனக்கூறி மீனவர்கள் கைது செய்யப்படுவது, படகுகள் பிடுங்கப்படுவதும் நடக்கி றது. மீனவர்கள் பாதிக்கப்ப டும் பிரச்சினையில் மத்திய அரசுக்கு கவலை இல்லை. மீனவர்களின் படகுகள் பிடித்து வைக்கப்படுவதில் அக்கறை இல்லை. மக்களை பிரித்தாளுவது, ஜாதி, மதத்தின் பெயரால் பிரச் சினைகளை உருவாக்கி காழ்ப்புணர்ச்சி ஏற்படுத்தி ஒருவரை ஒருவர் பிரிவினை ஏற்படுத்துவதில் மத்திய ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.

    பிரிவினையால் பிரச்சி னைகள் ஏற்படும்போது பாதிக்கப்படுவது பெண்க ளும், குழந்தைகளும் தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண் டும். எந்த மதமாச்சரி யங்களும் இல் லாமல் அனைவரும் ஒற்று மையாக இந்த விழாவை கொண்டாடு கிறோம். இது தொடர வேண்டும். நாம் ஒன்றுப்பட்ட மனிதர்களாக வாழும் சூழ்நி லையை தொடர வேண்டும்.

    ஒற்றுமையாக இருக்கும் போது, நம்மை பற்றி கவ லைப்படும் அரசு இருக் கும்போது கோரிக்கைகள் நிறைவேறும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டா லின் கடிதம் எழுதி உள்ளார். நானும் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன்.

    ஏற்கனவே சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கையில் வைத்துள்ளார். சட்டசபையில் மசோதா நிறைவேற்றினால் அதை நிறுத்தி வைக்கும் உரிமை ஆளுநருக்கு இல்லை என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. உங்கள் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீனவர்களுக்கு நலவாரி யம், தனித்துறை அமைக்கப் பட்டது கலைஞர் ஆட்சி யில்தான். தொடர்ந்து உங்களோடு நிற்கும் ஆட்சி, உங்களோடு கைகோர்த்து வரும் ஆட்சி. நிச்சயமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது, பழங்குடியினர் பட்டியலில் மீனவர்கள் சேர்க்கப்படு வார்கள்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    மீனவர்களை பழங்குடி யினர் பட்டியலில் சேர்த்திட வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தீர்மானத்தை பெடா பொதுச்செயலாளர் ராஜ் முன் மொழிந்தார். முன்னதாக குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா தலைமையில் சைமன்காலனி சந்திப்பில் கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கோட்டார் முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ், கோடிமுனை பங்குத்தந்தை சீலன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், தி.மு.க.தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன், குளச்சல் நகர செயலாளர் நாகூர்கான், பசிலியான் நசரேத், கோடிமுனை ஊர் பொருளாளர் சுரேஷ், குழியாளி ஜாண்சன், பெடா நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நிச்சயமாக இன்று ஒன்றிய அமைச்சரை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்வேன்.
    • மீனவர்களை பாதுகாக்கக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும்

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் மாநகராட்சிக்குட்பட்ட 5 இடங்களில் மொத்தம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 5 இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

    அதனை கனிமொழி எம்.பி. திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    புயல் அபாயத்தை தொடர்ந்து கரை ஒதுங்கிய தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் உள்பட 12 தமிழக மீனவர்கள் மாலத்தீவில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும் என்பதற்காக கடிதம் எழுதி உள்ளேன்.

    நிச்சயமாக இன்று ஒன்றிய அமைச்சரை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்வேன். விரைவிலேயே அந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு மறுபடியும் அவர்கள் தூத்துக்குடிக்கு வந்து அவர்களது குடும்பங்களை வந்து சேர வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை ஒன்றிய அரசு செய்து அவர்கள் மீட்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.

    இதுபோன்ற பிரச்சனைகள் மாலத்தீவிலும் தொடர்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி., இலங்கை-தமிழக மீனவர்கள் பிரச்சனையை அங்குள்ள மீனவ அமைப்புகளோடு இங்குள்ள மீனவ அமைப்புகளும் பேசி அதற்கு ஒரு தீர்வை காண வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

    அந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறாத சூழல் உள்ளது. அதை மறுபடியும் தொடர்ந்து நடத்தினாலே இப்பிரச்சனைகள் தீர்க்க முடியும்.

    ஒவ்வொரு இடத்திலும் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மிகப்பெரிய போராட்டத்திற்கும் பிறகு அவர்கள் விடுதலை செய்யப்படுவதும், படகுகளை பிடித்து வைத்துக்கொள்வதும் அவர்களது வாழ்வாதாரங்களை பறிப்பது என்பது தொடர்கதையாக மாறிக்கொண்டிருக்க கூடிய சூழலில் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். மீனவர்களை பாதுகாக்கக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

    பேட்டியின்போது தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு காவல்துறையில் இடமளிக்கப்பட்டது.
    • மத்திய பாஜக ஆட்சியில் குடியரசு தலைவராக இருக்கட்டும்.

    சென்னை:

    திமுக மகளிர் உரிமை மாநாட்டில் அவர் பேசிவருவதாவது:-

    பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் மகளிர் இட ஒதுக்கீடை பாஜக நடைமுறைபடுத்தாது . புதுச்சேரியில் பட்டியல் இன பெண் என்பதால் அமைச்சரே ராஜினாமா செய்யும் நிலை உள்ளது. மேலும் பாஜக கொண்டு வந்துள்ள மகளிர் இட ஒதுக்கீடு 50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வராது.

    மத்தியரசின் கொள்கை முடிவுகளில் மகளிருக்கு இடமில்லை. இந்த மாநாட்டில் அறிவொளி பெற்ற தீபங்களாக மகளிர் அணியினர் பங்கேற்று உள்ளனர். ஒடுக்கப்பட்ட சமூக பெண் என்பதால் குடியரசு தலைவரும் அவமதிக்கப்படுகிறார். மணிப்பூரில் பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் கொடுமைகள் நடந்துள்ளன. மேலும் டெல்லியில் போராடிய விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த மத்திய பாஜக ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை.

    மேலும் பேசிய அவர், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு காவல்துறையில் இடமளிக்கப்பட்டது. மேலும் படிக்கும் ஆர்வமுள்ள பெண்களை கைதூக்கி விட நிதியுதவி அளித்து வருகிறது திமுக அரசு. மேலும் பெண்கள் முன்னேற்றத்திற்காக மகளிர் உரிமை தொகை வழங்கியுள்ளது, இதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழ்நாட்டில்தான் 11 பெண் மேயர்கள் உள்ளனர்,

    மத்திய பாஜக ஆட்சியில் குடியரசு தலைவராக இருக்கட்டும், விளையாட்டு வீராங்கனைகளாக இருக்கட்டும், சாமானிய பெண்களாக இருக்கட்டும் எந்த நிலை பெண்களுக்கும் நீதி கிடைக்காது, என்றும் அவர் பேசினார்.

    • கடந்த தேர்தலில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டது.
    • அரசியலுக்காக பா.ஜனதா வெறுப்புணர்வை உருவாக்கும் போது பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கிண்டி நட்சத்திர ஓட்டலில் சோனியாவும், பிரியங்காவும் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.

    மதியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சோனியாவுக்கு விருந்தளிக்கிறார். ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறு, சிறு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    பிரதான கட்சியான காங்கிரசுடன் இதுவரை பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை.

    கடந்த தேர்தலில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை ஒரு தொகுதி கூடுதலாக காங்கிரஸ் எதிர்பார்ப்பதாகவும் சில தொகுதிகளில் மாற்றம் செய்ய வேண்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சோனியாவிடம் பேச வாய்ப்பு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறினார்கள்.

    இந்த நிலையில் இன்று கனிமொழி எம்.பி.யை நிருபர்கள் சந்தித்த போது இது பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த கனிமொழி இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எதுவும் இன்று நடைபெறாது.

    அரசியலுக்காக பா.ஜனதா வெறுப்புணர்வை உருவாக்கும் போது பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றார்.

    • மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
    • இந்தியா கூட்டணி அமைத்த பிறகு இதுவரை பொதுக்கூட்டம் எதுவும் நடைபெறவில்லை.

    சென்னை:

    சென்னையில் தி.மு.க. மகளிர் அணி ஏற்பாட்டில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு மகளிர் உரிமை மாநாடு இன்று நடைபெறுகிறது.

    இதற்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடலை சுற்றிலும் 300 ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் கலைஞர் அகில இந்திய தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள், ஜனாதிபதிகள் ஆகியோரை சந்தித்து பேசியது. முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றது உள்ளிட்ட அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

    அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த மகளிர் நல திட்டங்கள் தொடர்பான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சோனியா, பிரியங்கா ஆகியோர் நேற்று இரவே சென்னை வந்தனர். அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார். அவருடன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., டி.ஆர்.பாலு எம்.பி., காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட தி.மு.க. மற்றும் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினர்.

    இன்று மாலை 5 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.

    இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, ஐக்கிய ஜனதாதள தேசிய நிர்வாக குழு உறுப்பினரும் பீகார் மாநில மந்திரியுமான லெஷிசிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் ஆனிராஜா, ஆம் ஆத்மி கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராக்கி பிட்லன், திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், சமாஜ்வாடி எம்.பி. டிம்பிள் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் பேசுகிறார்கள். நிறைவாக சோனியா காந்தி விழா பேரூரையாற்றுகிறார்.

    இந்தியா கூட்டணி அமைத்த பிறகு இதுவரை பொதுக்கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. மகளிர் உரிமை மாநாடு என்று நடத்தப்பட்டாலும் இந்தியா கூட்டணி கட்சிகளின் பெண் தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள். எனவே இது இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டமாகவே எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்திய பெருமை காங்கிரசுக்கு உண்டு.

    தற்போது பா.ஜனதா அரசு மசோதாவை நிறைவேற்றினாலும் உடனடியாக அமல்படுத்தாததை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தேர்தலுக்கான ஏமாற்று வேலை என்றும் குற்றம் சாட்டுகின்றன.

    இந்த சூழலில் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகளை சோனியா காந்தி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மத ரீதியான கலவரம் என்றாலும், மணிப்பூர் கலவரமாக இருந்தாலும் இன்றுவரை மிக அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் தான்.
    • அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கவே மகளிர் உரிமை மாநாடு நடத்துகிறோம்.

    சென்னை:

    சென்னையில் நடைபெறும் தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு குறித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    தன் வாழ்நாள் முழுவதும் பெண்களின் முன்னேற்றம், பெண்களுக்கான அங்கீகாரம், பெண் கல்வி என்று தன் ஆட்சி பொறுப்பில் இருக்க கூடிய அந்த கால கட்டத்தில் பல்வேறு திட்டங்களை அதற்காக கொண்டு வந்த தலைவர் கலைஞர்.

    அவரது நூற்றாண்டில், இப்போது தேர்தல் அடுத்த ஆண்டு வரக்கூடிய இந்த நேரத்தில் சரி பாதியாக இருக்கக் கூடிய பெண்கள் தங்களுடைய கருத்துக்களை தங்கள் குரலைபதிவு செய்யக்கூடிய ஒரு மாநாடாக, அவர்களுடைய குரல் ஓங்கி ஒலிக்கக்கூடிய ஒரு இடமாக இந்த மாநாடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தி.மு.க.வில் உள்ள பெண்களும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகிறோம்.

    மத ரீதியான கலவரம் என்றாலும், மணிப்பூர் கலவரமாக இருந்தாலும் இன்றுவரை மிக அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் தான். எனவே அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கவே மகளிர் உரிமை மாநாடு நடத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநாட்டுக்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
    • மாநாட்டு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகளை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் முன்னின்று கவனித்து வருகின்றனர்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அவர் பிறந்த தினமான ஜூன் 3-ந்தேதி முதல் இந்த ஆண்டு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதையொட்டி தி.மு.க. சார்பிலும், அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் தி.மு.க.வின் ஒவ்வொரு அணிகளின் சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் இப்போது தி.மு.க. மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னையில் நாளை நடத்தப்படுகிறது.

    தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னின்று நடத்தும் இந்த 'மகளிர் உரிமை மாநாடு' நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை 4.30 மணிக்கு பிரமாண்டமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய மகளிர் தலைவர்களை பங்கேற்க செய்ய கனிமொழி எம்.பி. அழைப்பு அனுப்பி இருந்தார்.

    அந்த அழைப்பை ஏற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான அவரது மகள் பிரியங்கா காந்தி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, பீகார் மாநில உணவுத்துறை அமைச்சர் ஐக்கிய ஜனதாதள தேசிய நிர்வாக குழு உறுப்பினர் லெஷி சிங், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆனிராஜா, திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், ஆம் ஆத்மி கட்சி தேசிய செயல் உறுப்பினரான டெல்லி சட்டசபை துணை சபாநாயகர் ராக்கி பிட்லன் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பெண் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

    இந்த மாநாட்டுக்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றுகிறார். துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.

    மாநாட்டு தொடக்கத்தில் மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் வரவேற்று பேசுகிறார். மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி நன்றி கூறுகிறார்.

    இந்த மாநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெண்கள் முன்னேற்றத்துக்கு அயராது பாடுபட்டது குறித்தும் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது, அரசு வேலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு உள்ளிட்ட பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பல சட்டங்களை கொண்டு வந்தது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து மாநாட்டில் விளக்கி பேச உள்ளனர்.

    இது தவிர இன்றைய அரசியலில் பெண்களின் நிலைப்பாடு அவர்களது வளர்ச்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்தும் இந்த மாநாட்டில் தலைவர்கள் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி இருவரும் இன்றிரவு 10.40 மணிக்கு விமானம் மூலம் சென்னை வருகிறார்கள்.

    அவர்கள் இருவரும் கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்கள். இதேபோல் மாநாட்டுக்கு வருகை தரும் மற்ற பெண் தலைவர்கள் அனைவருக்கும் அதே ஓட்டலில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    அனைத்து வி.ஐ.பி.க்களும் கிராண்ட் சோழா ஓட்டலில் தங்குவதால் ஓட்டலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள், பெண் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பெண் தலைவர்கள் கவுன்சிலர்கள் என அனைத்து தரப்பு மகளிர் அணியினரும் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த மாநாட்டு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகளை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் முன்னின்று கவனித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • "மகளிர் உரிமை மாநாடு" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
    • தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மகளிர் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    சென்னை:

    தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னையில் அக்டோபர் 14-ந் தேதி மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த "மகளிர் உரிமை மாநாடு" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

    தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மகளிர் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    • ஆலோசனைக் கூட்டம் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை நடக்கிறது.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒருவாரம் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. தி.மு.க. மகளிர் அணி சார்பில் அடுத்த மாதம் 14-ந்தேதி கருத்தரங்கு நடைபெறுகிறது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட தேசிய பெண் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளரான கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நாளை (24-ந்தேதி) மாலை நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கும் கனிமொழி எம்.பி. பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

    ×