search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபம்"

    கார்த்திகை தீப பண்டிகையின் அழகே வீடு தோறும் ஏற்றப்படும் எண்ணற்ற தீபங்கள் தான். தீபங்கள் ஏற்றுவதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது? என்று பார்க்கலாம்.
    இன்று (சனிக்கிழமை) கார்த்திகை மாதம் பிறந்தாச்சு.

    கார்த்திகை மாதம் என்றதும் கார்த்திகை தீப விழாதான் நம் நினைவில் வரும். இதுவும் ஒரு ஒளி விளக்குகள் விழாதான். கார்த்திகை தீப விழா மிக அதிகமாகக் கொண்டாடப்படுவது தமிழ்நாட்டில்தான்.

    சொல்லப் போனால் தீபாவளி, நவராத்திரி ஆகிய பண்டிகைகளை தமிழர்கள் கொண்டாட ஆரம்பிக்கும் முன்னதாகவே கார்த்திகை திருவிழா கொண்டாடும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது. இதனை அக நானூறு பாடல்களில் காண முடிகின்றது.

    கார்த்திகை பவுர்ணமி அன்று பரணி தீபம் எனக் கொண்டாடப்படும் இவ்விழாவிற்கும் பல சிறப்பு புராண கதைகள் உள்ளன.

    தீபம். தீப ஒளி என்றாலே தீமைகளை அகற்றுவது என்ற பொருளும் கூறப்படுகின்றது. என்ன தீமைகளை அழிக்கின்றது? ஒருமுறை பிரம்மாவும், விஷ்ணுவும் யார் பெரியவர் என்ற ஒரு போட்டி இருந்தபோது சிவபிரான் பெரும் தீப்பிழம்பாகி ஒளிர்கிறார். இவரது அடியையும், முடியையும் காண பிரம்மா அன்னமாக உருவெடுத்து அவரது முடியினைக் காண உயர்கின்றார். விஷ்ணு வாராக உருவமெடுத்து அவரது அடியினை காண முனைகின்றார். இருவரும் எவ்வளவு முயன்றும் அவர்களால் அடி முடியினைக் காண முடியவில்லை.

    இதனைத்தான் அடி முடி காண முடியா ‘அண்ணாமலையோனே’ என்கின்றோம். அருணாசலா என்பதற்கு புனித ஒளிப்பிழம்பு மலை என்று பொருள். இதனை கார்த்திகை தீபத் திருவிழா அன்று மலையில் தீபம் ஏற்றி வழிபட்டு மனதில் அகங்காரம், பெறாமை, ஆணவம் என்ற தீமைகளை அகற்றுகின்றோம்.

    மற்றொரு புராண கதையும் உண்டு. முன்பு ஒரு காலத்தில் ஒரு ராஜாவிற்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு வேறு சகோதர, சகோதரிகள் இல்லை. அவள் தன் அரண்மனையில் இருந்த யானையினை மிகுந்த ஆசையோடு வளர்த்து வந்தாள். அவளது திருமணத்திற்குப் பிறகு யானையை பிரிய வேண்டி நேர்ந்தது. தன் சகோதரனைப் பிரிவது போன்ற மன வருத்தம் அவளுக்கு ஏற்பட்டது.

    இதனால் கஜ விளக்கு ஏற்றும் பழக்கம் வந்தது.

    யானை வாழ: அரசன் வாழ: பெண் வாழ: பிறந்தகம் வாழ என தீபத் திருநாளன்று தன் சகோதரர் நலனுக்காகவும் பிறந்த வீடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கமும் நம் வழிபாட்டு முறையில் உள்ளது.

    கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருவதுதான் திருகார்த்திகை விழா. சர்வாலய தீபம் என இந்நாளை கொண்டாடுவர்.

    கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் அன்று குமராலய தீபம் என முருகன் ஆலயங்களில் வழிபடுவர். கார்த்திகை மாதத்தில் ரோகிணி நட்சத்திரமும் வரும். அந்த நாளை விஷ்ணு ஆலய தீபம் என வழிபடுவர்.

    பொதுவாக விரதம் இருப்பவர்கள் பரணி நட்சத்திரம் அன்று காலையில் நீராடி கோவிலுக்குச் சென்று பகல் ஒருபொழுது மட்டும் உண்டு கார்த்திகை நட்சத்திரம் முடியும்போது விரதத்தினை முடிப்பர். கார்த்திகை திருநாள் அன்று காலை நீராடி பிள்ளையார் பூஜை, குல தெய்வ பூஜை, நித்திய பூஜைகளை செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து காலையிலேயே சிவ பூஜையும், குமார பூஜையும் செய்ய வேண்டும். பூஜை என்பது சிவன், முருக அஷ்டோத்தரங்களைக் கூட சொல்லி வணங்கலாம். தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் நைவேத்தியம் செய்யலாம்.

    மாலையில் திருவண்ணாமலை தீபம் ஏற்றிய பிறகே வீடுகளில் விளக்கேற்றுவது வழக்கம். பொரி, வெல்லம் சேர்த்த உருண்டை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், அப்பம் இவைகள் நைவேத்தியமாகச் செய்யப்படும். சில குடும்பங்களில் 21 நாட்கள் விரதம் இருந்து நோன்பு கயிறு கட்டிக் கொள்ளும் வழக்கம் உள்ளது. சிலர் மாவிளக்கு போடும் வழக்கமும் உண்டு.

    கார்த்திகை தீப பண்டிகையின் அழகே வீடு தோறும் ஏற்றப்படும் எண்ணற்ற தீபங்கள் தான். குறைந்தது ஆறு தீபங்களாவது ஏற்றுங்கள் என்று கூறுவர். ஒளி ரூபம் சிவன், அக்னியினில் உருவான முருக பெருமான். காக்கும் கடவுள் விஷ்ணுவிற்கு ஏற்றப்படுபவைதான் இந்த தீபங்கள்.

    ஆமாம் தீபங்கள் ஏற்றுவதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது?

    தீபம் என்பது அக்னி-நெருப்பு. அக்னி தான் நமது வேண்டுதல்களையும், நாம் இறைவனுக்கு அளிக்கும் காணிக்கைகளையும் இறைவனிடம் கொண்டு சேர்க்கின்றது என்பது ஐதீகம்.  அக்னி இறைஞானத்தினை அளிப்பது. அக்னி இல்லாமல் வேத சம்பிரதாயங்களே இல்லை. தீபம் ஒருவரின் இறை நம்பிக்கையினை மேலும் உறுதியாக்கி ஆன்மீக பாதையில் அழைத்துச் செல்லும். தீபம் ஏற்றி வழிபட்டு தீப விளக்கின் பாதத்தில் பூசேர்த்து என் வேண்டுதல்களை இறைவனிடம் கொண்டு சேர்த்து விடு என பிராத்திப்பது வழக்கம்.

    இருளை நீக்கும் தீப ஒளி மன இருளினையும் நீக்கும். தீபத்திற்கு தீய சக்தியினை விரட்டி இறை சக்தியினை ஈர்க்கும் சக்தி உண்டு. தீப கதிர் வீச்சு சுற்று புறத்தில் காந்த சக்தியினை காற்றில் சேர்க்கும். இக்காற்று மனித உடலிலும், மனதிலும் நல்ல ஆக்கப் பூர்வ மாற்றங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக பசு நெய் தீபத்திற்கு இப்புனித தன்மை மிகக் கூடுதலாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. நெய் தீபம், உடல் நலம், மனவளம், தீய சக்தி விலகுதல், மகாலட்சுமி கடாட்சம் இவற்றுக்கு உகந்ததாகக் கூறுகின்றனர்.

    நல்ல எண்ணெய்யால் ஏற்றப்படும் தீபத்தினால் அனைத்து தோஷங்களும் தீய சக்திகளும் நீங்குகின்றது. நீண்ட கால தீரா பிரச்சினைகளால் உடையவர்கள், பூர்வ ஜென்ம கர்மங்களால் பாதிக்கப்படுபவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம், சனி இவைகளின் பாதிப்பில் உடையவர்கள் நல்ல, எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

    வேப்பிலை எண்ணெய் குல தெய்வ வழிபாடு பராசக்தி வழிபாட்டிற்கு உகந்தது. சத்ருக்களால் பாதிக்கப்படுபவர்கள் வேப்ப எண்ணெய் கொண்டு 8 விளக்கேற்றி அமாவாசையில் பைரவரை வழிபடலாம்.

    விளக்கெண்ணை கொண்டு தீபம் ஏற்றுவது குடும்ப வளம், குடும்ப உறவுகள் ஒற்றுமை இவற்றினை கொடுக்கும்.
    தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்ற பிள்ளையார் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்ப மகிழ்ச்சி பெருகும்.
    பஞ்சு எண்ணெய் கொண்டு ஏற்றப்படும் தீபம் கண்திருஷ்டி, அறிவுப்பூர்வ எண்ணங்கள், வறுமை, நோய் இவற்றினை நீக்கும்.
    பொதுவில் நெய் தீபமும், நல்ல எண்ணெய் தீபமும் வீடுகளில் ஏற்றுவது நடைமுறையில் உள்ளது.

    கிழக்கு நோக்கி தீபம் ஏற்றுவது ஒருவரை இந்திரன் போல் ஆக்கிவிடுமாம்.
    மேற்கு நோக்கி தீபம் ஏற்றுவது கடன்தொல்லை, சனிதோஷம் நீக்கும்.
    வடக்கு நோக்கி தீபம் ஏற்றுவது திருமண தடைகளை நீக்கும்.
    தெற்கு நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.
    மண் விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும்.
    வெள்ளி விளக்கில் திருமகள் வாசம் செய்வாள்.
    பஞ்சலோக விளக்கில் தேவதை வசியமாகும்.
    வெண்கல விளக்கில் ஆரோக்கியம் கிடைக்கும்.
    இரும்பு விளக்கினால் சனி தோஷம் நீங்கும்.

    குத்து விளக்கினை நடு முற்றத்தில் போட்ட கோலத்தின் மீது வைத்து சந்தனம், குங்குமம் இட்டு மஞ்சள் திரி கொண்டு (கடைகளில் கிடைக்கும்) நெய் ஊற்றி விளக்கேற்றி, பூ சுற்றி வழிபட வறுமை நீங்கும்.

    மேற் கூறியவைகளை குறிப்பிடுவதன் காரணம் இவற்றினை அறிந்து அனைவரும் பயன்பெற வேண்டும் என்பது தான். கார்த்திகை பண்டிகையின் முதல்நாளை பரணி தீபம் என்று தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும்.

    இரண்டாம் நாள் கார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாட வேண்டும்.மூன்றாம் நாள் கொல்லைப்புரம், குப்பைதொட்டி, மாட்டு கொட்டகை இவைகளில் அகல் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது பாரம்பரிய தமிழர் பண்பாடு ஆகும். 23.11.18 அன்று வரும் கார்த்திகை தீபத்தன்று விமரிசையாகக் கொண்டாடுங்கள். ஆனால் மாதம் முழுவதும் தினமும் காலையிலும், மாலையிலும் இரண்டு அகல் விளக்குகள் ஏற்றி வைப்பது கூடுதல் சிறப்பு ஆகும். இந்த பழக்கம் கேரளாவில் அதிகம் உள்ளது.

    ‘திருச்சிற்றம்பலம்’
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகா தீபத்திருவிழா எல்லை தெய்வ வழிபாட்டுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை மறுதினம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அதைத்தொடர்ந்து, 10 நாட்களும் தீபவிழா கோலாகலமாக நடைபெறும். விழாவின் 6ம் நாளன்று வெள்ளித் தேரோட்டமும், 7ம் நாளன்று மகா ரதம் பவனியும் நடைபெறும். 23-ம் தேதி அதிகாலையில் பரணி தீபம், மாலையில் மகா தீப பெருவிழாவும் நடைபெற உள்ளது.

    தீபத் திருவிழாவின் தொடக்கமாக 3 நாட்கள் நடைபெறும் எல்லை காவல் தெய்வ வழிபாடு நேற்று விமரிசையாக தொடங்கியது.

    தீபத்திருவிழா எந்த தடையும் இல்லாமல், சிறப்பாக நடைபெறவும், தீபத்தை தரிசிக்க வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு பாதுகாப்பு அருளவும் வேண்டி, துர்க்கையம்மன், பிடாரியம்மன், விநாயகர் வழிபாடு நடத்தப்படுகிறது.

    அதன்படி, துர்க்கையம்மன் உற்சவம் நேற்று இரவு விமரிசையாக நடந்தது. விழாவை முன்னிட்டு, சின்னக்கடை வீதியில் பவழக்குன்று அருகேயுள்ள துர்க்கையம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடந்தது. கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் மகா தீப கொப்பரை புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

    அதைத்தொடர்ந்து, இரவு 9 மணி அளவில், காமதேனு வாகனத்தில் துர்க்கையம்மன் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடும் பனி மற்றும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் மாட வீதியில் திரண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    எல்லை தெய்வ வழிபாட்டின் 2-ம் நாளான இன்று பிடாரியம்மன் உற்சவம் நடைபெற உள்ளது. இன்று இரவு சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் பவனி வருகிறார். அருணாசலேஸ்வரர் கோவில் 3-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள பிடாரியம்மன் சன்னதியில் பிரமாண்டமான உணவு படையல் இன்று இரவு நடைபெறும். எல்லை தெய்வ வழிபாட்டின் நிறைவாக, விநாயகர் உற்சவம் நாளை நடைபெற உள்ளது.

    மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது.கொப்பரை சீரமைக்கப்பட்டு வர்ணம் தீட்டி அர்த்தநாரீஸ்வரர் படம் வரையப்பட்டு அனைத்து பணிகளும் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரைக்கு கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்படும்.அதன் பின்னர் கொப்பரை தலைச்சுமையாக மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
    மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மலை உச்சியில் வருகிற 23-ந் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

    மலையின் உச்சியில் உச்சி பிள்ளையாரும், மலையின் நடு பகுதியில் தாயுமானசுவாமியும், மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.

    இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6 மணி அளவில் உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செப்புக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும். இதையொட்டி முன்னதாக செப்புக்கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியை கொண்டு செய்த திரி வைக்கப்படும். அதில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவையும் ஊற்றப்படும்.

    செப்புக்கொப்பரையில் ஏற்றப்படும் கார்த்திகை தீப ஜோதி தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியக் கூடியதாகும். மேலும் கார்த்திகை தீபத்திற்காக திரி தயாரிக்கும் பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது. இதில் 300 மீட்டரில் தயாரிக்கப்படும் திரியை பணியாளர்கள் கயிறு கட்டி கோபுரத்தின் உச்சியில் உள்ள கொப்பரையில் வைப்பார்கள்.

    பின்னர் அதில் தயார் நிலையில் உள்ள 900 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றுவார்கள். இந்த எண்ணெய்யை திரி நன்றாக உறிஞ்சும். இந்த பணிகள் ஒரு சில நாட்களில் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    ஏழை எளியோர் தீபாவளி கொண்டாட உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். தீபாவளித்திருநாள் தித்திக்கும் திருநாளாக அமைய ஏழை எளியவர்களுக்கு மறக்காமல் தானம் செய்யுங்கள்.
    தீபாவளிக்கு முதல் நாள் இரவே சுவாமி அறையை சுத்தம் செய்து கோலமிட்டு ஒரு மணைப்பலகையில் சிறிது மஞ்சள் தூள், குங்குமம், மறுநாள் தேய்த்துக் குளிப்பதற்கான எண்ணெய், சிகைக்காய்ப்பொடி ஆகியவற்றை எடுத்து வைத்து விட வேண்டும். வெந்நீர் போட்டுக்குளிப்பதற்கான பாத்திரத்தினையும் நன்கு கழுவி, விபூதி பூசி, குங்குமம் இட்டு வைத்துக்கொள்ளலாம்.

    தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து விட வேண்டும். சுவாமி முன் வைத்துள்ள எண்ணெயை வீட்டிலுள்ள பெரியவர்கள் எடுத்து, சிறியவர்களுக்கு தலையில் தேய்த்து விட வேண்டும்.

    வெந்நீரை பொறுக்கும் சூட்டில் எடுத்துக்கொண்டு குளிப்பதற்கு முன் கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று கொண்டு, கொஞ்சம் நீரைக்கையில் எடுத்துக்கொண்டு

    கங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
    நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சன்னதிம் குரு!
    என்ற சுலோகத்தை சொல்லிவிட்டு பின் நீராட வேண்டும்.

    தீபாவளி நாளில் எல்லா நீரிலும் கங்கை வாசம் செய்வதாக ஐதீகம். புண்ணிய நதிகளான கங்கை, யமுனா, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய சப்த தீர்த்தங்களும் நான் குளிக்கும் இந்த நீரில் வாசம் செய்யட்டும் என்ற பொருள் உள்ள இந்த சுலோகத்தினை சொல்லிவிட்டு நீராடுவதால், சாதாரணக் குளியலும் புனித நீராடலாக மாறி விடும். இந்த நீராடல் நற்பலன் தரும்.

    நீராடியபின் புத்தாடை அணிந்து சுவாமி முன் கோலமிட்டு மஞ்சள் தூள், வெற்றிலை,பாக்கு,பழம், தேங்காய், பூ, புத்தாடை, பட்டாசு, பல காரங்கள் போன்றவற்றை வைத்து, தெரிந்த சுலோகங்களைச் சொல்லி( விஷ்ணு லட்சுமி, சிவ பார்வதி, குபேரன் துதிகளைச் சொல்வது சிறப்பு) தூப தீபம் காட்டி வணங்குதல் வேண்டும். அதன் பின்னர் பெற்றோர், பெரியோரை வணங்கி ஆசிபெற வேண்டும். பிறகு அவரவர் வழக்கப்படி முதலில் இனிப்பையோ அல்லது சிறிதளவு தீபாவளி லேகியத்தினையோ உண்ண வேண்டும்.

    இவை அனைத்தையும் விட முக்கியமானது எது தெரியுமா? ஏழை எளியோர் தீபாவளி கொண்டாட உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். தீபாவளித்திருநாள் தித்திக்கும் திருநாளாக அமைய ஏழை எளியவர்களுக்கு மறக்காமல் தானம் செய்யுங்கள்.
    ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி தினத்தன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. மற்ற பண்டிகைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு தீபாவளிக்கு உண்டு.
    ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி தினத்தன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. மற்ற பண்டிகைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு தீபாவளிக்கு உண்டு. ஒருவனுடைய பிறந்த நாளை நினைவு நாளாகக் கொண்டாடுவதுதான் வழக்கம். அந்த வழக்கத்திலிருந்து மாறுபட்டு இறந்த நாளை பண்டிகையாகக் கொண்டாடுகிறோமென்றால் அது தீபாவளி மட்டமே.

    மகாவிஷ்ணுவுக்கும், பூமாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன் நரகாசுரன். பூமாதேவி அவனைச் சிறந்த முறையில் வளர்த்து வந்தாள். தீயவர்களோடு பழகாமல் இருக்கும் பொருட்டு, வீட்டிலேயே வைத்து பாதுகாத்தாள். நாராயணனின் நாமத்தைச் சொல்லிக் கொடுத்து, அதை தினமும் ஜபம் செய்யவும் பயிற்சி அளித்தாள். ஆனால் அவளின் எண்ணம் ஈடேறவில்லை. இறைவனுக்கு மகனாகப் பிறந்திருந்த போதும், நரகாசுரனிடம் அசுர குணம் தலைதூக்கியது. தாயின் கட்டுப்பாட்டில் இருந்து வெளி உலகிற்கு வந்து அசுரர்களுடன் சேர்ந்து பலவித போர் பயிற்சிகளையும் பெற்றான். நாளடைவில் அசுரர்களுக்கு தலைவனானதோடு, தவங்கள் பல செய்து அளவில்லா வரங்களை பெற்றான்.

    தன் தாயைத் தவிர, வேறு எவராலும் தனக்கு மரணம் வரக்கூடாது என்று வரத்தைப் பிரம்மாவிடம் இருந்து பெற்ற நரகாசுரன், ஆணவச் செருக்கினால் மக்களைப் பலவாறு துன்புறுத்தினான். தவம் செய்யும் முனிவர்கள், தவச்சீலர்கள், தேவர்கள் என எவருமே அவனுடைய கொடுமைகளிலிருந்து தப்ப முடியவில்லை. அவனுடைய கொடுமைகள் அதிகமானதால் அதற்கும், அவனுக்கும் முடிவு ஏற்பட வேண்டிய நேரம் நெருங்கியது.

    தேவர்களின் தலைவன் இந்திரன், கிருஷ்ணரிடம் சென்று நரகாசூரனின் கொடுமைகளைக் கூறி முறையிட்டார். ஸ்ரீகிருஷ்ணர், நரகாசுரனுடன் போர் புரியச் சென்றார். அவரது தேருக்குச் சாரதியாக பூமாதேவியின் அம்சமான சத்தியபாமா இருந்தாள். போர் கடுமையாக நடந்தது. இருவரும் பலவித அஸ்திரங்களை ஏவுவதும், தடுத்து நிறுத்துவதுமாக இருந்தனர். அந்த சமயத்தில், நரகாசுரன் எய்த அம்பு பட்டு, மயக்கம் அடைந்த கிருஷ்ணர் தேரிலேயே சரிந்தார்.

    இதைக் கண்டு சாரதியாகச் சென்ற சத்தியபாமா, தானே வில்லை ஏந்தினாள். தன் தாயின் அன்புக்கு அடிபணியாது அசுரனான நரகாசுரன் அவளின் அம்புக்கு இரையானான். பிரம்மாவிடம் தான் பெற்ற வரப்படி தன் தாயாலேயே மரணமடைந்தான். தாயே மகனைக் கொன்றதுதான் தீபாவளி பண்டிகையின் விசேஷம். அறம் தவறாது இருப்பது மனித குணம். அதைத் தவறி நடப்பவன் மகனேயானாலும் தண்டிக்கப்பட வேண்டியவன் என்பதால் பெற்ற தாயே போரிட்டுக்கொன்றாள்.

    தன் தாயின் அம்புக்கு அடிப்பட்டு வீழ்ந்த நரகாசுரன் தவறுக்கு வருந்தியதோடு, தன்னுடைய இறந்த நாளை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என வேண்டிக் கேட்டான். அவனுடைய பெற்றோர்களும் அதை அங்கீகரித்தனர். மக்களும், மற்றோரும் அசுரனின் துன்பங்களிலிருந்து விடுபட்ட நாளை, அவன் விருப்பப்படியே “தீபாவளி” பண்டிகையாக நாம் கொண்டாடுகின்றோம்.இது தென்மாநில மக்கள் தீபாவளி கொண்டாடுவதற்கான காரணம்.

    இதே தீபாவளிப் பணிடிகையை, வடமாநில மக்கள் வீடு முழுவதும் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, தீபத் திருநாளாக கொண்டாடுகின்றனர். தன் தந்தை கொடுத்த வரத்தை நிறைவேற்றுவதற்காக வனவாசம் செய்ய ஸ்ரீராமர் காட்டிற்குச் சென்று விடுகிறார். அதன் பின்னர் ராவணனைக் கொன்று வெற்றி பெற்று, 14 ஆண்டுகள் வனவாசத்தையும் முடித்துக் கொண்டு காட்டை விட்டு அயோத்தி நகருக்கு வருகிறார்.

    ஆண்டுகள் பல பார்க்காமலிருந்த ஸ்ரீராமபிரானைக் காண மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ராமர் காட்டில் இருந்து நாட்டிற்கு வரும் நாளை வீடுகள் தோறும் தீபங்களை ஏற்றி வைத்துக் கொண்டாடுகின்றனர். அந்த நாளையே “தீபாவளி” என்று வடமாநில மக்கள் அழைக்கின்றனர். தென்னகத்தில் நரகாசுரன் என்ற அசுரனின் அழிவும், வடமாநிலத்தில் ஸ்ரீராமபிரான் என்ற அவதாரப் புருஷனின் வருகையும் தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது.

    தீபாவளியன்று, அதிகாலையில் எழுந்து மூலிகை போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணையை தலையில் வைத்து, கதகதப்பான வெந்நீரில் குளிக்க வேண்டும். வெந்நீரானாலும், குழாய் நீரானாலும், கிணற்று நீரானாலும், அதில் தீபாவளியன்று கங்கை பிரசன்னமாவதாக ஐதீகம். பின்னர், வீட்டிலுள்ள பூஜை அறையில் திருமால், மகாலட்சுமி ஆகிய படங்களின் முன் புத்தாடைகளுக்கு மஞ்சள் தடவி வைக்க வேண்டும். அன்று செய்த பலகாரங்களையும், இனிப்புப் பண்டங்களையும் நைவேத்தியமாக படைத்து, பூஜைகள் செய்து திருமாலையும், மகாலட்சுமியையும் வணங்கி, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று புத்தாடைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    குழந்தைகள் பட்டாசுகளை வெடித்து மகிழ, பெரியவர்களோ, சுற்றத்தார்களையும் நண்பர்களையும் வீட்டிற்கு அழைத்து வருதல், தன்னிடம் வேலை செய்யும் வேலையாட்களுக்குப் புத்தாடைகள், பட்டாசுகள், பரிசுகள் தருதல் என மற்றவர்களை மகிழ்வித்து கொண்டிருப்பார்கள். அன்று மாலை குடும்பத்தினரோடு ஆலயங்களுக்கு சென்று வழிபடுதல் வேண்டும்.
    தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து இருளைப் போக்கி ஒளியை வரவழைத்து இறைவனை வழிபடுவது என்பது தீபாவளியின் ஆழ்ந்த அர்த்தமாகும்.
    தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து இருளைப் போக்கி ஒளியை வரவழைத்து இறைவனை வழிபடுவது என்பது தீபாவளியின் ஆழ்ந்த அர்த்தமாகும். ‘ஆவளி’ என்பதற்கு வரிசை என்பது பொருள். தீப+ஆவளி= தீபாவளி. ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சத் திரயோதசி இரவுப் பொழுது கழிந்து, புலரும் காலத்தில் வரும் சதுர்த்தசி தினம் தீபாவளியாகும். நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்த தினம் என்பதால், இதனை ‘நரக சதுர்த்தசி’ என்றும் அழைப்பார்கள்.

    பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஞான பிரகாசத்தை, ஞான ஒளியை அடைய வேண்டும் என்பது தான் தீபாவளியின் உண்மையான தத்துவம். நல்லெண்ணம் ஆகிய எண்ணெய்யை நமது உடலில் பூச வேண்டும். சித்தமாகிய அரப்பினால் தேய்த்து, சஞ்சலம், கெட்ட எண்ணம் போன்ற மனதில் படிந்திருக்கும் அழுக்காற்றை போக்குதல் வேண்டும். ஞானமாகிய வெண்ணிற புத்தாடைகளை உடுத்தி புனிதமாக இருத்தல் வேண்டும்.

    காமம், தேவையற்ற கெட்ட சிந்தனைகள் போன்ற அரக்கர்களை பட்டாசு என்னும் திட உறுதிகளால் சுட்டுப் பொசுக்க வேண்டும். இவை அனைத்தையும் செய்யும் போது நம்மையும் அறியாமல் நம் அகத்தில் ஒருவித ஒளிப் பிரகாசம் தோன்றும். அதன் மூலம் ஆனந்தம் உண்டாகும். அந்த நிலையை உருவாக்குவதே தீபாவளி போன்ற பண்டிகையின் உள்நோக்கம்.

    கண்ணபிரான் நரகாசுரனை அழிக்க சென்ற போது, அவனது கோட்டைகளான கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் என்ற நான்கையும் தாண்டி உட்புகுந்தார். பஞ்ச பூதங்களால் ஆன நமது உடலின் உள்ளே புகுந்து தீயவற்றை விலக்கி இறைவன் நமக்கு அருள்புரிகிறார் என்பதை உணர்த்தும் தத்துவம் இதுவாகும். கிரி துர்க்கம் - மண், அக்னி துர்க்கம் - நெருப்பு, ஜல துர்க்கம் - நீர், வாயு துர்க்கம் - காற்று (நான்கு பூதங்கள் இருக்கும் இடத்தில் ஆகாயமான ஐந்தாவது பூதமும் இருக்கும்).

    பஞ்சபூதங்களால் ஆன நமது உடலில் இறைவனை குடியமர்த்திக் கொள்ள வேண்டும். இறைவன் நம் உள்ளத்தில் இருக்க இடம் அளித்தால், அவன் நம் உள்ளத்தில் இருக்கும் அறியாமையை அகற்றி உள்ளத்தில் ஒளியேற்றுவான். அவ்வாறு ஒளிபெற்ற ஒருவனது வாழ்வில் ஆண்டின் ஒரு தினம் அல்ல, ஆண்டின் ஒவ்வொரு தினமும் தீபாவளியாகவே அமையும்.

    அதனால் தான் தீபாவளியைப் பற்றி ரமண மகரிஷி இப்படிச் சொல்கிறார். ‘தீய எண்ணங்கள் தான் நரக(ம்)ன். அவன் குடியிருக்கும் வீடு, நம் உடம்பு. நமது உடலில் இருந்து அந்த மாயாவியை அழித்து நாம் அனைவரும் ஆத்மஜோதியாக திகழ்வதே தீபாவளி’
    தீபாவளி தினத்தன்று வீட்டில் மட்டுமின்றி கோவில்களுக்கு சென்று தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பலன்களை பெற முடியும்.
    தீபாவளி தினத்தன்று வீட்டில் மட்டுமின்றி கோவில்களுக்கு சென்று தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பலன்களை பெற முடியும்.

    பொதுவாக செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் மாலையில் கோவிலில் விளக்கு ஏற்றி வருவது நல்லது. நெய்தீபம் ஏற்றினால் கிரகதோஷம் நீங்கும்.
    வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றினால் திருமணம் நடைபெறும் மற்றும் வியாபாரம் நன்கு நடைபெறும், கிரகதோஷங்கள் நீங்கும்.

    எண்ணெய் தீபம் ஏற்றினால் அஷ்டமத்து, ஏழரைச்சனி, செவ்வாய் தோஷம், ராகு, கேது பீடை அகலும். மனசஞ்சலம் இருக்காது. குத்துவிளக்கு ஐந்து முகம் ஏற்றி விளக்கின் பாதத்தில் குங்கும அர்ச்சனை செய்தால் சந்தான பாக்கியம் கிட்டும். சொத்து வாங்கலாம். கடன் தீரும்.

    நெய்தீபம் ஏற்றினால் பாவம் நீங்கும், வேலை கிடைக்கும். விநாயகருக்கு விளக்கேற்றினால் கேது தோஷமும் காரியத் தடைகளும் நீங்கும். சிவாலய தீபம் கண் நோயைத் தீர்க்கும். சவுபாக்கியம் கூடும்.

    தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றினால் படிப்பு நன்றாக வரும். பிரயாணத்தில் இடைஞ்சல் வராது. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ராமானுஜர் கோவிலில் ஒவ்வொரு திருவாதிரை அன்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு, அதனால் ஏற்படும் பலனை அனுபவித்து வருகின்றனர்.

    மேலும் கோவிலுக்கு நல்ல எண்ணெய் நம்மால் முடிந்த அளவு வாங்கிக் கொடுக்கலாம். நிறைய கோவில்களில் தீபம் ஏற்ற இயலாத நிலைமையில் உள்ளது. அதுபோன்ற கோவில்களுக்கு எண்ணெய் வாங்கிக் கொடுப்பது நம்முடைய குடும்பத்திற்கே நல்லது.

    தீபம் எப்படி கோவிலுக்கு வெளிச்சம் கொடுக்கிறதோ அதுபோல நம்முடைய வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கும். கோவிலுக்கு நெய், நல்ல எண்ணெய் வாங்கிக் கொடுக்கும் போது நெய், எண்ணெய் மட்டும் வாங்கிக் கொடுக்க கூடாது. திரியும் சேர்த்து கொடுக்க வேண்டும்.

    ஆன்மீகச் சிந்தனையில் முதலில் வீட்டில் அந்த சூழ்நிலையை உருவாக்குவது முக்கியம். அதிகாலை வேளையில் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவில் கோலமிட்டால் அங்கு லட்சுமி தாண்டவமாடுவாள் என்பது ஐதீகம். கோலத்தைச் சுற்றி செம்மண் பூசினால் பகவானையும் தாயாரையும் நம் வீட்டுக்கு அழைக்கிறோம் என்பது பொருள். அரிசி மாவில் கோலமிடுவதன் மூலம் எறும்புகளுக்கு உணவு கிடைக்கிறது. இதனால் பெரும் புண்ணியம் ஏற்படும். இவ்வாறு புண்ணியம் தரும் கோலத்தை வீட்டிலுள்ள குடும்பத்தலைவிகள் அல்லது பெண் குழந்தைகளே போட வேண்டும். வீட்டு வேலையாட்களை கோலம் போடச் சொல்லக்கூடாது.

    வீட்டில் காலையிலும் மாலையிலும் பூஜையின்போது திருவிளக்கு ஏற்றி வழிபடுவது என்றும் இறைவனின் துணையுள்ள நன்மை தரும் தூய சக்தியை வீட்டில் வரவழைக்க ஏதுவான முக்கிய வழியாகும்.

    திருவிளக்கு அசையாமல் எரியும்போது அதை விடாமல் பார்த்துக் கொண்டிருந்தால் சஞ்சலமுள்ள மனது நிலைப்படும். தீப ஒளியைப் பார்ப்பது ஒரு வகை ‘குட்டி தியானம்‘ என்றால்கூட மிகையாகாது. திருவிளக்கை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையில்லை. ஆனால், பொதுவாக மாலை 6.30 மணிக்கு ஏற்றுவதே நமது மரபு. இதை ‘கருக்கல்’ நேரம் என்பர்.

    சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பு இருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகிறோம் என்பது அறிவியல் உண்மை.

    திருவிளக்கு மும்மூர்த்தி உருவம் என்று கூறப்படுகிறது. ஆசனமாகிய அடிப்பகுதி பிரம்மன் என்றும், நடுத்தண்டாகிய மத்திய பகுதி விஷ்ணு என்றும், அகல் பகுதி சிவன் என்றும், அதற்கு மேல் உள்ள பகுதி மகேஸ்வரன் என்றும், சிகரமாக உள்ள உச்சிப் பகுதி சதாசிவன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வீட்டுக்கு வீடு ஐந்து திரி இரட்டைத்திரி நான்கு திரி ஒற்றைத்திரி என அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப விளக்கேற்றுகிறார்கள். திருவிளக்கை ஏற்றினால் வீட்டில் துஷ்ட சக்திகள் அணுகாது என்பது பழங்கால நம்பிக்கை. அறிவியல் ரீதியாக விளக்கெரிக்க நல்லெண்ணெய் பயன்படுத்துவதே நல்லது.

    ஏனெனில் இதிலிருந்து பரவும் மணத்தில் இரும்புச் சத்து இருக்கிறது. செம்பு, வெள்ளி, அலுமினியம் ஆகிய வகை விளக்குகளை ஏற்றும்போது மனித உடலில் எந்த உலோகத்தின் பற்றாக்குறை இருக்கிறதோ அது ஈடுகட்டப்படுகிறது என்பதும் ஒரு நம்பிக்கை.
    தீபாவளியன்று வீடு முழுக்க தீபம் ஏற்றி வழிபட்டால் தீப வடிவில் தீப லட்சுமி நம் வீட்டிலும் நிலைபெற்று வாழ்வை பிரகாசிக்க செய்வாள் என்பது ஐதீகம்.
    நாராயணனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டதும் நரகாசுரனின் நண்பர்களான சில அசுரர்கள் பரந்தாமனை பழிவாங்க நினைத்தார்கள். திருமாலும் பூமாதேவியும் போர்க்களம் போய்விட்டதால் லட்சுமி மட்டும் வைகுண்டத்தில் தனித்து இருப்பதை அறிந்து அசுரர்கள் அவளைக் கடத்தி வர நினைத்து அங்கே போனார்கள்.

    அசுரர்கள் வருவதை உணர்ந்த மகாலட்சுமி சட்டென்று தீபமொன்றில் ஜோதியாக மாறி பிரகாசித்தாள். தீப வடிவாக இருந்த ஜோதிலட்சுமியை உணர முடியாததால் ஏமாற்றத்தோடு திரும்பிபோனார்கள் அசுரர்கள்.

    திருமகள் தீபமகளாகத் திருவடிவம் கொண்ட தினம் என்பதால்தான் தீபாவளியன்று தீபங்களை ஏற்றிவைக்கும் வழக்கம் ஏற்பட்டது. தீபாவளியன்று வீடு முழுக்க தீபம் ஏற்றி வழிபட்டால் தீப வடிவில் தீப லட்சுமி நம் வீட்டிலும் நிலைபெற்று வாழ்வை பிரகாசிக்க செய்வாள் என்பது ஐதீகம்.
    தீப தானத்தை சூரிய உதயத்திற்கு முன்பே தர வேண்டும் என்ற நியதி பின்பற்றப்பட்டு வந்தது. எமன் இந்த தீப தானத்தினால் மிகவும் திருப்தி அடைகிறான் என்று சொல்லப்படுகிறது.
    லட்சுமி தேவியே தீப மங்கள ஜோதியாக விளங்குபவள். இல்லங்களை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொண்டு அந்தி மயங்கியதும் தீபம் ஏற்றி தெய்வத்தை தொழுவதால் லட்சுமி விஜயம் செய்வாள்.

    தங்களையும் அழகு செய்து கொண்டு, கொல்லைக் கதவை அடைத்து வாசல்கதவை திறந்து வைத்து, விளக்கைத் துடைத்து குங்குமம் இட்டு மலர் சூட்டி, அழகு செய்து, குத்துவிளக்கை ஏற்றி தூய உள்ளத்துடன் தொழும்போது அந்த தீபச் சுடரிலே ஊரூராக வீடு வீடாக சுற்றிப்பார்த்து வரும் மகாலட்சுமியின் சுடர்மேனியை தரிசித்து பேறு பெறலாம் என்பர்.

    விளக்கே லட்சுமியின் உருவாகும். விளக்கை ஏற்றாமல் எந்த பூஜையையும், சுப காரியத்தையும் நாம் செய்வதில்லை. தீபம் இருளை விரட்டி ஒளியை பரப்புகிறது. குத்துவிளக்குகளில் சாதாரணமாக ஐந்து முகங்கள் உண்டு. இந்த ஐந்தையும் திரிபோட்டு ஏற்றினால் மங்களகரமாக விளங்குகிறது.

    குத்துவிளக்கு திருமணமான பெண்களுக்கு அளிக்கப்படும் சீர்வரிசைகளில் முக்கியமானதாகும். இந்த ஐந்து முகங்களும் பெண்களுக்கு இருக்க வேண்டிய ஐநது முக்கிய குணங்களை நினைவூட்டுகிறது என்பார்கள். அவை அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோகித புத்தி, சகிப்புத்தன்மை.

    அம்பிகையை பூஜிக்கும் போது தீபத்தில் ஆவாகனம் செய்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அப்படி தீபத்தில் அம்பிகையை ஆவாகனம் செய்யும் போது சாட்சி தீபம் என்று மற்றொரு தீபம் இருக்க வேண்டும். குத்துவிளக்குகள் லட்சுமி சொரூபம். இரவில் குத்துவிளக்கை அணைக்கும் முன் அதற்கு பால்தொட்டு வைத்து பின்னரே அணைப்பது வழக்கம். எந்த தெய்வ வழிபாடும் குத்துவிளக்கு இல்லாமல் செய்வதில்லை.

    குத்துவிளக்கு திரிமூர்த்தி சொரூபம் எனவும் கூறப்படுகிறது. ஆசனமாகிய அடிப்பாகம் பிரம்ம சொரூபம். நடுத்தண்டாகிய மத்திய பாகம் விஷ்ணு, நெய் ஏந்தும் அகல் பகுதி சிவன். அதற்கு மேல் உள்ள பகுதி மகேஸ்வரன். சிகரமாக உள்ள உச்சப் பகுதி சதாசிவன்.

    நெய்-நாதம், திரி-பிந்து, சுடர்-திருமகள், தீப்பிழம்பு-கலைமகள், தீ-சக்தி.

    இந்த விளக்கு நம் உடலிலும் இருக்கிறது. அடிப்பாகம் நாபிக்குக் கீழ் உள்ள மூலாதாரம். மேல்நோக்கி ஓடும் சுசூம்னா நாடியே விளக்கின் தண்டு. கழுத்துக்கு மேற்பட்ட பகுதியே குத்துவிளக்கின் தலைப்பாகம். புருவ மத்தியில் ஜோதி ஜோலிப்பதே குத்துவிளக்கின் சுவாலை. ஆத்ம ஜோதியை வணங்குவதே தீப பூஜையின் தத்துவம்.

    தமிழர்கள் விளக்கையை தெய்வமாகக் கொண்டனர். இருட்டில் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது என்பது தமிழர்களின் கொள்கை. 8 மங்கள பொருட்களின் ஒன்றாக விளக்கையும் சேர்த்தார்கள்.

    திருமணமாகி புதுக் குடித்தனம் செய்ய போகும் பெண்ணுக்கு அளிக்கும் சீர்வரிசைகளில் குத்துவிளக்கு முதலிடம் பெறுகிறது. சில திருமண சடங்குகளில் ஏற்றி வைத்த குத்துவிளக்கை மணமக்கள் வலம் வருவது உண்டு. ஊஞ்சலில் மணமக்கள் மனமகிழ உட்கார வைத்து தீபத்தை எடுத்துக் கொண்டு சுமங்கலிகள் சுற்றி வருவதைக் கவனித்திருக்கலாம்.

    ஆலயங்களில் விளக்கு ஏற்றுவது மாபெரும் புண்ணியம். பண்டைக் காலத்தில் நம் முன்னோர்கள் கோவில்களில் விளக்கு எரிய காணிக்கை அளித்ததுடன் அந்த விளக்கினை எரிய நெய் இடுவதற்காக பல நிவந்தங்களும் ஏற்படுத்தி இருந்தனர்.

    குலோகத்துங்க சோழன் ஆட்சியில் ஒரு வேடன் தவறுதலாக ஒரு மனிதனைக் கொன்றுவிட்டான். அந்த கொலை குற்றத்துக்காக அவனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராத தொகையை கொண்டு கோவிலில் எப்போதும் அணையாத விளக்கு ஏற்றி வைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இறந்துபோனவனின் ஆவியினால் கொலை செய்தவனுக்கு ஏற்படும் தீங்குகளில் இருந்து அவனைக் காக்க இத்தகைய வழி கண்டு பிடிக்கப்பட்டது.

    ராஜராஜசோழன் பிருகதீஸ்வரர் கோவிலில் நாள் தோறும் நெய் விளக்கு ஏற்ற நாள் ஒன்றுக்கு இவ்வளவு நெய் அளிக்க வேண்டும் என்று ஏராளமான பசுக்களை மானியமாக அளித்தான். இந்த மாதிரி பல மன்னர்கள், பிரபுக்கள் நிவந்தம் ஏற்படுத்தி உள்ளனர். லட்சுமி தீபத்தில் பூஜை செய்வது வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம். செவ்வாய்க்கிழமைகளில் செய்வது மங்களகவுரி விரதம் எனப்படும். இதை அங்கார வார விரதம் என்றும் சொல்வார்கள்.

    தீபத்திற்கான திருவிழாக்களில் முதன்மையானது தீபாவளி. தீப ஆவலி (தீபவரிசை) தான் தீபாவளியாகி விட்டது. நரகாசூரன் கொடுமை என்ற இருள் உலகில் சூழ்ந்த போது கண்ணன் என்ற ஒளி பிரகாசித்தது. அதைக் கொண்டாடுவதே தீபாவளி என்று வடநாட்டில் தீபாவளி அன்று தீபங்களை ஏற்றி வரிசையாக வைக்கிறார்கள்.

    இந்த விழாக்களில் விளக்கு ஏற்றுவது பெரிதல்ல. அவைகளை அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விளக்கு அணைவது தீய சகுனம், விளக்கில் இருந்து பொறி உதிர்ந்தால் இறை அருள் நிச்சயம் என்ற அர்த்தம். சாப்பிடும் போது விளக்கு அணைந்தால் அத்துடன் எழுந்துவிடுவது முற்கால வழக்கம். ஆதிசங்கரர் சிறுவனாக இருந்த போது ஆற்றுக்குச் சென்றார். அப்போது ராக்காலம் அவருடைய காலை ஒரு முதலை பிடித்துக் கொண்டது. அப்போது ''என் தாயாரிடம் சொல்லிவிட்டு வருகிறேன்'' என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டு சங்கரர் அன்னையிடம் வந்து நடந்ததைக் கூறினார். சங்கரர் ஆற்றிற்குத் திரும்பிய போது அவர் அன்னை ஒரு எரிகிற விளக்கை மரக்காலுக்குள் மறைத்துக் கொண்டு வந்தாள்.

    முதலை சங்கரரின் காலைப் பிடித்து உண்ண ஆரம்பித்தது. பின்னால் நின்ற அன்னை மூடியிருந்த விளக்கை திடீரென்று வெளியே காட்டி உடனே அணைத்துவிட்டாள். தீய சகுனம் ஏற்பட்டு விட்டதால் முதலை அவரை உண்ணாமல் விட்டது. சங்கரர் உயிர் தப்பினார். ஆறு அறிவு இல்லாத பிராணிகள் கூட தர்மத்திற்கு கட்டுப்பட்டிருந்த காலம் அது.

    பண்டைக்கால விளக்குகளில் இத்தீபங்களை வைக்கவே தனிமாடங்கள் அமைக்கப்படும். வாயிற்படியின் இருபுறங்களில் இந்த தீப மாடங்கள் கட்டாயம் இருக்கும். கிராமப்புறங்களில் பசு மாடுகள் மேய்ந்துவிட்டு சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் வீடு திரும்பும். பசு லட்சுமி சொரூபமானதால் அவை வருவதற்கு முன்பே தீபம் ஏற்றிவிடுவது வழக்கம்.

    இந்த விளக்குகளில் தான் எவ்வளவு வேலைப்பாடுகள், ஹம்சம், கிளி, மயில், இவைகளை எல்லாம் விளக்கின்மேல் அமைத்து அபூர்வ வேலைப்பாடுகளுடன் விளங்கும். மொகலாய சக்கரவர்த்தி அக்பர் ஒவ்வொரு விளக்குமே தெய்வீக ஒளியின் அம்சம் என்று கருதினார். வேத காலத்தில் அக்னி எப்போதுமே அணையாது பாதுகாக்கப்படும். அணையாமல் அதை காப்பது குடும்பத் தலைவியின் முக்கிய கடமைகளில் ஒன்று.

    அக்பர் தன் அரண்மனையில் இந்த வேதகால வழக்கத்தைப் பின்பற்றி அக்னியை அணையாமல் காத்துவர ஏற்பாடு செய்தார் என்று அபூ பைசல் எழுதிய ''அயீன் அக்பரி'' கூறுகிறது. ஏற்றிய தீபத்தை தானம் அளிப்பது பத்துவித முக்கிய தானங்களில் ஒன்றாகும். இறந்தவர்களின் ஆவி நற்கதி அடைய இந்த தானம் கொடுக்கப்பட்ட விளக்கின் ஒளி வெளிச்சம் காட்டுகிறதாம்.

    முன் காலத்தில் இந்த தீப தானத்தை சூரிய உதயத்திற்கு முன்பே தர வேண்டும் என்ற நியதி பின்பற்றப்பட்டு வந்தது. எமன் இந்த தீப தானத்தினால் மிகவும் திருப்தி அடைகிறான் என்று சொல்லப்படுகிறது. தென்னிந்தியாவில் 16 வித தீப தானங்கள் இருந்ததாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. பனை ஓலையில் படகு மாதிரி செய்து அதில் தீபம் ஏற்றி தானம் செய்வது.

    அதில் ஒரு முறை, கங்கைக்கரையில் தீப தானம் அளிப்பது மிகவும் விசேஷம். கங்கையில் அகலில் தீபத்தை ஏற்றி அதை மிதக்க விடுவது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. தீபத்தை எடுத்துக் கொண்டு பிரதட்சணம் வருவதில் பெரும் புண்ணியம் உண்டு. கன்னிப்பெண்கள் இப்படி தீபத்துடன் பிரதட்சணம் செய்தால் அவர்களுக்கு சீக்கிரமே திருமணம் நடைபெறும். தபோவனம் ஸ்ரீ ஞானானந்த சுவாமிகள் மடத்தில் இந்த வழக்கம் தினமும் பின்பற்றப்பட்டு வருகிறது.
    கோவில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம். அந்த அகல்விளக்கில் நவக்கிரகங்களும் வீற்றிருக்கின்றன. அது எப்படி? அறிந்து கொள்வோம்.
    கோவில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம். அந்த அகல்விளக்கில் நவக்கிரகங்களும் வீற்றிருக்கின்றன. அது எப்படி? அறிந்து கொள்வோம்.

    அகல் விளக்கு - சூரியன்

    நெய்/எண்ணெய் - சந்திரன்

    திரி - புதன்

    எரியும் ஜூவாலை - செவ்வாய்

    கீழே விழும் ஜூவாலையின் நிழல் - ராகு

    ஜூவாலையில் உள்ள மஞ்சள் நிறம் - குரு

    ஜூவாலையால் பரவும் வெளிச்சம் - கேது

    திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது - சுக்ரன்

    தீபம் அணைந்ததும் அடியில் இருக்கும் கரி - சனி

    இதில் சுக்ரன், ஆசையை குறிப்பதாகும். ஆசையை குறைத்துக் கொண்டால், இன்பம் வந்து சேரும். ஆசை தான் நம்மை அழிக்கிறது. அந்த ஆசை தான் முக்தி கிடைக்கவிடாமல் நம்மை மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கச் செய்கிறது. இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம். 
    மார்க்கண்டேஸ்வரர் கோவிலில் ஒரு லட்சத்து 8 தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே செங்கமங்கலம் அம்மையாண்டி கிராமத்தில் மார்க்கண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மார்க்கண்டேஸ்வரர் அபிராமி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இங்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி 1 லட்சத்து 8 தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி மார்க்கண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடந்தன. விழாவில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி, சாமி தரிசனம் செய்தனர்.

    தீபம் ஏற்றுவதற்கான அகல் விளக்கு, திரி, எண்ணெய் ஆகியவை கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
    தோஷங்கள் நீங்க எளிமையான பரிகாரமாக தெய்வங்களுக்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டாலே போதுமானது. எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
    ஜோதிடத்தின் கிரக பலன்களைப் பொறுத்தே வாழ்வு அமையும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். கிரக நிலைகள் சரியில்லாத வேளையில் சில தோஷங்கள் தோன்றலாம். அந்த தோஷங்கள் நீங்க எளிமையான பரிகாரமாக தெய்வங்களுக்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டாலே போதுமானது. எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

    ராகு தோஷம் - 21 தீபங்கள்

    சனி தோஷம் - 9 தீபங்கள்

    குரு தோஷம் - 33 தீபங்கள்

    திருமண தோஷம் - 21 தீபங்கள்

    புத்திர தோஷம் - 51 தீபங்கள்

    சர்ப்ப தோஷம் - 48 தீபங்கள்

    காலசர்ப்ப தோஷம் - 21 தீபங்கள்

    களத்திர தோஷம் - 108 தீபங்கள்

    துர்க்கைக்கு - 9 தீபங்கள்

    ஈஸ்வரனுக்கு - 11 தீபங்கள் 
    ×