search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்கட்டணம்"

    ரிஷிவந்தியம் மின்வாரிய அலுவலகத்தை கிராம மக்கள் திடீரென முற்றுகையிட்டு, மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
    ரிஷிவந்தியம்:

    ரிஷிவந்தியம் பகுதிக்குட்பட்ட பாசார், சோழவாண்டிபுரம், முனிவாழை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்றவர்களுக்கு கடந்த சில மாதங்களாக மின்கட்டணம் அதிகமாக வசூல் செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை ரிஷிவந்தியம் மின்வாரிய அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு, மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை சமாதானம் செய்து, மின் கட்டண விவகாரம் குறித்து மின்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பாகிஸ்தான் நாட்டில் பெட்ரோல் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதன்படி அங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.145.82 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தற்போது கூடுதல் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. சமீபத்தில் அங்கு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது.

    பெட்ரோல் விலை உயர்வு அறிவிப்புக்கு முன் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இமரான்கான், இந்தியாவில் பெட்ரோல் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பின் படி ரூ.250க்கு விற்கப்படுகிறது. வங்காளதேசத்தில் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பின் படி ரூ.200க்கு விற்கப்படுகிறது என அண்டைநாடுகளுடன் ஒப்பிட்டுக் கூறினார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சாரத்தின் விலையை திடீரென உயர்த்தியுள்ளது. அதன்படி மின் கட்டணத்தை  யூனிட்டுக்கு 1.68  ரூபாயாக உயர்த்தியுள்ளது. ஒரு யூனிட் மின்சாரத்தின் விலையை அடிப்படை கட்டணத்தின் கீழ் உள்நாட்டு நுகர்வோருக்குரூ.1.68 ஆக உயர்த்தியுள்ளது. புதிய கட்டணங்கள் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

    இந்த புதிய கட்டண உயர்வால் மாதம் 200 யூனிட் வரை மட்டுமே மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறப்பட்டுள்ளது.

    காங்கிரசுக்கு போட்டியாக குஜராத் மற்றும் அசாமில் மின் கட்டணம், விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அம்மாநில பா.ஜனதா அரசுகள் உத்தரவிட்டுள்ளனர். #BJP #Congress #Gujaratgovernment
    அகமதாபாத்:

    5 மாநில சட்டசபை தேர்தல்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகியவற்றில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

    15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்த மத்திய பிரதேசத்திலும், சத்தீஷ்கரிலும் காங்கிரஸ் அரசு விவசாய கடன்களை ரத்து செய்தன. மத்தியபிரதேசத்தில் ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடனையும், சத்தீஷ்கரில் ரூ.6,100 கோடி வரையிலான விவசாய கடனையும் ரத்து செய்து அம்மாநில புதிய முதல்-மந்திரிகள் கமல்நாத், பூபேஷ் பாதேல் உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் காங்கிரசுக்கு போட்டியாக குஜராத் மற்றும் அசாமில் மின் கட்டணம், விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அம்மாநில பா.ஜனதா அரசுகள் உத்தரவிட்டன.

    குஜராத் மாநிலத்தில் விஜயரூபானி தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில அரசு குஜராத் கிராம மக்களின் ரூ.650 கோடி மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.



    இதுதொடர்பாக குஜராத் மின்சாரதுறை மந்திரி சவுரப்படேல் கூறும்போது, “கிராம பகுதிகளில் உள்ள 6.20 லட்சம் பேர் செலுத்த வேண்டிய ரூ.650 கோடி மின் கட்டணம் ஒரே தவணையில் தீர்வு காணும் திட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்றார்.

    மேலும் அவர் கூறும்போது, “மின் இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள் ரூ.500 மட்டுமே செலுத்தி தங்கள் இணைப்பை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.

    அசாம் மாநிலத்தில் சர்பானந்தா சோனோவால் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் ரூ.600 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. அம்மாநில மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

    இதுகுறித்து அம்மாநில மந்திரி சந்திரமோகன் படோவரி கூறியதாவது:-

    மந்திரிசபை கூட்டத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான விவசாய கடனை தள்ளுபடி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது விவசாயிகளால் வாங்கப்பட்ட கடனில் 25 சதவீதம் தொகை (அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம்) ரத்து செய்யப்படும். இதனால் 8 லட்சம் விவசாயிகள் உடனடியாக பயன் அடைவார்கள்.

    மேலும் விவசாயிகள் வாங்கும் கடனுக்கான வட்டியில் 4 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. அடுத்த நிதியாண்டு முதல் 19 லட்சம் விவசாயிகளால் வட்டி இல்லாமல் விவசாய கடன் வாங்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறனார்.

    இதேபோல மேலும் பல சலுகைகளை அம்மாநில அரசு அறிவித்தது. #BJP #Congress #Gujaratgovernment
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone
    சென்னை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடிவடையவில்லை. எனவே, புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு டிச.26 வரையும், தஞ்சை மாவட்டத்திற்கு டிச.31 வரையும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.



    திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர் கோட்டங்களில் டிச.26 வரை மின்கட்டணம் செலுத்தலாம். தஞ்சை மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஒரத்தநாடு கோட்டங்களில் டிச.31வரை மின்கட்டணம் செலுத்தலாம்.

    நாகையில் 14 பிரிவுகளில் உள்ள நுகர்வோர் டிச.26 வரை அபராதமின்றி மின்கட்டணம் செலுத்தலாம். திருவாரூர் கோட்டங்களிலும், புதுக்கோட்டையின் அனைத்து கோட்டங்களிலும் டிச.26 வரை மின்கட்டணம் செலுத்தலாம்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நலன் கருதி 3வது முறையாக அவகாசத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் நீட்டித்துள்ளது.

    தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மட்டும் அவகாசம் பொருந்தும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. #GajaCyclone
    சூலூர் பகுதியில் உள்ள வீட்டு உபயோக மின்சார பயன்பாட்டாளர்களிடம் 65 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்து வருவதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பொது மக்களின் வீட்டு உபயோக மின்சார பயன்பாட்டிற்கான கட்டணத்திற்கு 65 சதவீத சேவை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

    பாப்பம்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த சென்ற போது 95 ரூபாய் மின் கட்டணத்திற்கு மத்திய அரசின் பொருட்கள் மற்றும் சேவை வரியாக 31.50 ரூபாயும்,மாநில அரசின் பொருட்கள் மற்றும் சேவை வரியாக 31.50 ரூபாய் என 158 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து மின்வாரிய அலுவலர்களிடம் கேட்டபோது, இது அதிகாரிகளின் உத்தரவு கம்பயூட்டரில் வந்த பதிவுப்படி தான் வசூலிக்கிறோம் என கூறினர்.

    100 யூனிட் வரை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்கும் போது அதற்கு 9 ரூபாய் வரி வசூலிப்பதாக பாதிக்கப்பட்ட ஆறுமுகம் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் கூறுகையில் இந்த மாதிரியான வரி எங்கும் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது. இலவசத்திற்கும் வரிவிதிப்பது இங்குதான் .இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக பொதுமக்களுக்கு நல்ல தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.
    சென்னை மாநகராட் சியில் சொத்துவரி, தொழில் வரி, மின்கட்டணம், குடிநீர் வரி ஆகியவற்றை ஸ்மார்ட் கார்டு மூலம் செலுத்தும் நடைமுறை அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. #Chennaicorporation

    சென்னை:

    சென்னை மாநகராட்சியுடன் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி இணைந்து ஸ்மார்ட்கார்டு வசதியை உருவாக்கி வருகிறது. இந்த கார்டு அடுத்த மாதம் முதல் இ-சேவை மையங்களில் கிடைக்கும்.

    இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் விரைவில் மெட்ரோ ரெயில், மின்சார ரெயில், மாநகர போக்குவரத்து கழகங்களிலும் பயணம் செய்யும் வசதியை உருவாக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நம்ம சென்னை செயலி மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், சொத்து வரி, தொழில் வரி, வர்த்தக உரிமம் போன்ற 5 சேவைகள் இப்போது இணைக்கப்பட்டுள்ளது.

    நம்ம சென்னை செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பிறப்பு, இறப்பு, தொழில் வரி, சொத்துவரி மற்றும் வர்த்தக உரிமம் சான்றிதழ்கள், ரசீதுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும் கூடுதலாக இதன் நிலைப்பாடு பற்றியும் இச்செயலி வாயிலாக அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #Chennaicorporation

    ×