search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • குன்றுதோறும் குமரன் இருப்பது வழக்கம்.
    • கோவிலுக்கு வெளியே முருகன் வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் உள்ளது.

    முருகப்பெருமானுக்கு பிடித்தமான ஆலயங்கள் இரண்டு என்பார் அருணகிரிநாதர். ஒன்று திருச்செங்கோடு, மற்றொன்று திருச்சி வயலூர். வயலூரின் சிறப்பே அருணகிரிநாதருக்கு, முருகன் மயில் மீது அமர்ந்து காட்சி கொடுத்து திருப்புகழ் பாட வைத்ததுதான். அவர் நீண்டகாலம் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபட்டு, பாடி பரவசப்பட்ட இடம் இந்த வயலூர். குன்றுதோறும் குமரன் இருப்பது வழக்கம். ஆனால், இங்கு குன்றில்லாத சமவெளியில் முருகன் குடிகொண்டுள்ளார்.

    அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் கம்பத்து இளையவராக தடுத்தாட்கொண்ட முருகப்பெருமான், முதன்முதலில் வயலூருக்குத்தான் வரச்சொல்லி உத்தரவிட்டார். அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு 18 பாடல்கள் பாடிய பெருமை கொண்ட தலம் இது. இங்கிருந்தே திருப்புகழ் எனும் பெரும் பொக்கிஷம் உருவானது என்பதும் இவ்வாலய பெருமைகளில் ஒன்று. முருகப்பெருமானின் பெருமை சொல்லும் ஆலயமாக இது இருந்தாலும், ஆதியில் இது சிவாலயமாகவே உருவானது என்கிறது தலவரலாறு.

    உறையூரை தலைநகராக கொண்டு சோழர்கள் ஆட்சி செய்த காலம் அது. காட்டு விலங்குகளை வேட்டையாட சென்ற ஒரு சோழ மன்னன், அங்கிருந்த கரும்பு ஒன்றை ஒடிக்க வாளால் வெட்டினான். அப்போது ஒடிந்த கரும்பிலிருந்து ரத்தம் வடிந்தது. இதனால் பதறிய சோழன் வயலை தோண்டிப் பார்க்கையில், அங்கே ஈசன் லிங்கமேனியாக காட்சி அளித்தார். அங்கேயே அவருக்கு ஓர் ஆலயம் எழுப்பி, ஆதிநாதர் என்ற திருநாமம் இட்டு வணங்கினான் என்று சொல்லப்படுகிறது. 9-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட்டது.

    ராஜகேசரிவர்மன், குலோத்துங்கச் சோழன், பரகேசி வர்மன், ராஜேந்திர சோழன் ஆகியோரால் திருப்பணிகள் கண்ட இந்த கோவிலின் கல்வெட்டுகள் ஆலயத்தின் பழமையை எடுத்துக் கூறுகின்றன. இங்குள்ள ஆதிநாதர் தம்மை நாடிவரும் பக்தர்கள் கேட்பதை மறக்காமல் கொடுப்பதால் 'மறப்பிலி நாதர்' என்றும், அக்னி பகவான் வழிபட்டதால் 'அக்னீசுவரர்' என்றும், விடங்கப்பெருமான், திருமகாதேவன், திருக்கற்றளி பெருமான் என பல நாமங்களால் வணங்கப்படுகிறார். இங்கு அம்பிகையின் திருநாமம் ஆதிநாயகி. வன்னி மரம் இத்தலத்தின் விருட்சமாகும். கோவிலுக்கு வெளியே முருகன் வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் உள்ளது.

    தாய், தந்தையை வழிபட்டு அனைவருக்கும் வழிகாட்டுகிறார் வயலூர் முருகன். அதனால் கோவிலுக்குள் சென்றதும் நாம் எதிர்கொள்வது சிவ சொரூபமே. இந்த திருத்தலத்தில் உள்ள கணபதி 'பொய்யாக்கணபதி' என்று பெயர் கொண்டுள்ளார். இவரிடம் வேண்டினால் பொய்க்காது என்பது வாக்கு. இவர் சன்னிதிக்கு அருகே இங்கு அருணகிரிநாதருக்கும் சன்னிதி உள்ளது. ஆனி மூலத்தன்று இவர் முருகனுடன் புறப்பாடாவார்.

    எதிர்புறம் தட்சிணாமூர்த்தியின் தவக்கோலக்காட்சி. பொய்யாக்கணபதி சன்னிதியை அடுத்து முத்துக்குமாரசாமி. மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள முருகனை காண கண் கோடி வேண்டும். முத்துக்குமாரசாமியை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சகிதமாக காட்சியளிக்கிறார். வடபுற மூலையில் மகாலட்சுமி அருள்பாலிக்கிறார். வயலூர் முருகனை தரிசிப்பவருக்கு எனது அருள் கண்டிப்பாக உண்டு என்பதுபோல காட்சி தருகிறாள் மகாலட்சுமி.

    மூலஸ்தானத்தில் முருகனின் மயில் வடக்கு பக்கம் பார்த்து இருக்கிறது. இதற்கு தேவமயில் என்று பெயர். ஆதிநாயகி ஏனைய தலங்களில் வடக்கு முகம் பார்த்தே இருப்பாள். இங்கு மட்டும் தென்முகம் பார்த்து இருப்பது அபூர்வமானது. ஏனைய தலங்களில் முருகப்பெருமான் தாய், தந்தையரை தனித்து நின்று பூஜை செய்வார். ஆனால் தெய்வ குஞ்சரி வள்ளியோடு சேர்ந்து பூஜை செய்கின்ற தனிச்சிறப்பு வயலூர் தலத்திற்கு உண்டு.

    சிவன் சன்னிதிக்கு பின்புறம் தான் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இது சிவத்தலம் என்றாலும், இவரே விசேஷ மூர்த்தியாக வணங்கப்படுகிறார். கந்த சஷ்டியின்போது முருகன்-தெய்வானைக்கும், பங்குனி உத்திர திருவிழாவில் முருகன்-வள்ளி திருக்கல்யாணம் நடக்கும். வள்ளி திருமணத்தின்போது, முருகனுக்கு வேடன், கிழவன் போல அலங்காரம் செய்தும், யானையால் வள்ளி விரட்டப்படுவது போலவும் பாவனையாகச் செய்வர். தைப்பூசத்தன்று அருகிலுள்ள 4 கோவில் சுவாமிகளுடன், முருகன் சேர்ந்து பஞ்ச மூர்த்திகளாக காட்சி தருவார்.

    வயலூரில் முருகன் தனது வேலினால் தடாகம் உருவாக்கி அம்மை அப்பரை வழிபட்டார். கோவிலின் வெளியே கல்லால மரத்தடியில் வேல் வடிவில் உள்ள தோற்றத்தை 'இடும்பன் கோவில்' என்றும், 'கிராம தேவதைக் கோவில்' என்றும் சொல்கிறார்கள். முருகன் கை வேலின் வடிவமாகிய தேரடியான் கோவிலும் வந்தோர்க்கு வளம் தரும் அம்சமாக காட்சியளிக்கிறது.

    திருவண்ணாமலையில் முருகப்பெருமானால் காப்பாற்றப்பட்ட அருணகிரிநாதர் "முத்தைத் திரு" பாடியபின்பு "வயலூருக்கு வா" என்று முருகன் சொல்ல, அதன்படி அருணகிரியார் இங்கு வந்துள்ளார். இங்குள்ள பொய்யாகணபதிதான் அருணகிரியாருக்கு அருள் தந்தவர் என்று செல்லப்படுகிறது. இங்குதான் அருணகிரி நாதர் திருப்புகழ் பாடும் ஆற்றலையும், அறிவையும் பெற்றார். இத்தலத்து முருகனே அருணகிரி நாதருக்கு நாவில் 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எழுதி, திருப்புகழை சரளமாக பாட அருள் செய்தார். அத்தகைய ெபரும் சிறப்பும் கொண்ட முருகன் தலம். திருப்புகழின் பெருமையில் வயலூர் முருகனுக்கு தனிச்சிறப்பு உண்டு. அருணகிரியார் திருப்புகழ் பாட அருளிய முருகன் என்பதால், எழுத்துத் துறையில் உள்ளவர்கள், பாடலாசிரியர்கள் இங்கு வேண்டிக்கொள்ள கலையில் சிறப்பிடம் பெறலாம். அருணகிரிநாதர் மட்டுமல்ல, ஞானவரோதயர் என்ற அடியாருக்கு அருள் புரிந்த திருத்தலம். இந்த ஞானவரோதயர், கந்தபுராணத்தில் 7-வது காண்டமாகிய உபதேச காண்டம் பாடியவர். விராலிமலைத் தலப்புராணமும் இவர் பாடியிருக்கிறார்.

    எண்ணினாலும், தரிசித்தாலும் எண்ணிலடங்கா பேறுகளையும், வரங்களையும் அள்ளித்தரும் வயலூரானை நேரில் தரிசித்தால், நலம் பெருகும். வளம் தழைக்கும் என்பது வாரியார் சுவாமிகள் வாக்கு.

    வயலூர் சுப்பிரமணியர் மணக்கோலத்தில் குமரனாக இருப்பதால், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டவர்கள் இவரை வழிபட, தோஷம் நீங்கி நல்ல வரன் அமையும். அருணகிரிநாதருக்கு திருமண கோலத்தில் குமாரராக காட்சி தந்ததால் தடைபட்ட திருமணங்கள் நடைபெறும் என்பது ஐதீகம். திருமண தோஷம் மற்றும் தடைகள் உள்ளவர்கள், முதல் நாள் இரவே இங்கு வந்து தங்கி, மறுநாள் சக்தி தீர்த்தத்தில் நீராடி, முருகப்பெருமானை வழிபட்டால் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. பழனி, திருச்செந்தூருக்கு வேண்டுதல் வைத்தவர்கள் இந்த கோவிலில் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தலாம். ஆனால், வயலூரானுக்கு வைத்த வேண்டுதலை வேறு கோவிலில் செலுத்த முடியாது. அசலோடு வசூலித்து விடுவான் இந்த வடிவேலன் என்பது இந்த ஊர் மக்களின் சொல்லாக இருக்கிறது.

    • குலதெய்வமே தொட்டியங்குளம் மாரியம்மா மாமதுரையிலே தெப்பக்குளம் மாரியம்மா
    • திருச்சியிலே சமயப்புரத்தம்மா வெக்காளியம்மா சிறுவாச்சூர் மதுரகாளியம்மா

    கண்ணிரண்டும் உன்முகமே காணவேண்டும்-அம்மா

    காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும்

    பண்ணமைக்கும் நா உனையே பாடவேண்டும்-அம்மா

    எல்லோரும் பக்தியோடு கையெடுத்து உன்னையே கும்பிடவேண்டும்!

    எண்ணமெல்லாம் உன்நினைவே ஆக வேண்டும்

    இருப்பதெல்லாம் உன்னுடைய தாகவேண்டும்!

    மண்ணடக்கும் தாயே பெரியபாளையத்தம்மா

    மண்ணளக்கும் தாயே!

    குலதெய்வமே தொட்டியங்குளம் மாரியம்மா

    மாமதுரையிலே தெப்பக்குளம் மாரியம்மா

    விருதுநகரிலே முத்துமாரியம்மா

    சிவகாசியிலே பத்ரகாளியம்மா

    வீரபாண்டியிலே கௌமாரியம்மா

    தாயமங்கலத்திலே முத்துமாரியம்மா

    இருக்கங்குடியிலே மாரியம்மா

    செந்தூரிலே சந்தன மாரியம்மா

    ஆரல்வாய் மொழியிலே  முப்பந்தலிலே இசக்கிமாரியம்மா

    பெருங்கரையிலே சதுரங்க நாயகியம்மா

    சிவகங்கையிலே வெட்டுடையார் காளியம்மா

    திண்டுக்கல்லிலே கோட்டை மாரியம்மா

    மணப்பாறையிலே முத்துமாரியம்மா

    திருச்சியிலே சமயப்புரத்தம்மா வெக்காளியம்மா

    சிறுவாச்சூர் மதுரகாளியம்மா

    மண்ணளக்கும் தாயே!

    வடநாட்டிலே காசி விசாலாட்சியம்மா

    வங்காளத்திலே காளியம்மா

    விஜயவாடாவிலே கனகதுர்க்கையம்மா

    கர்நாடக மாநிலத்திலே அன்னை சாமுண்டீஸ்வரி

    சாரதாம்பிகே-மூகாம்பிகே அம்மா

    தங்க வயலிலே கங்கையம்மா

    கேரளத்திலே சோற்றானிக்கரை பகவதியம்மே

    கொடுங்கல்லூர் பகவதியம்மே

    மண்ணளக்கும் தாயே!

    மலேசிய நாட்டிலே மகாமாரியம்மா

    சிங்கப்பூரிலே வீரமா காளியம்மா

    தஞ்சையிலே புன்னை நல்லூர் மாரியம்மா

    குடந்தையிலே படைவெட்டி மாரியம்மா

    வலங்கைமானிலே பாடைகட்டி மாரியம்மா

    நாகையிலே நெல்லுக்கடை மாரியம்மா

    வேளாங்கண்ணியிலே வேளாங்கண்ணியம்மா

    திருத்துறைப்பூண்டியிலே முள்ளாட்சியம்மா

    எட்டுக்குடியிலே துரோபதை மாரியம்மா

    ஆரூரிலே சீதலாதேவி எல்லம்மா

    பட்டுக்கோட்டையிலே நாடியம்மா

    அறந்தாங்கியிலே வீரமா காளியம்மா

    திருவப்பூர் மாரியம்மா

    கொன்னையூர் மாரியம்மா

    காரைக்குடியிலே கொப்புடைய நாயகியம்மா

    கண்கொடுத்த தெய்வமே நாட்டரசன்

    கோட்டை வாழ் என் கண்ணாத்தா

    மண்ணளக்கும் தாயே!

    படவேட்டிலே ரேணுகாபரமேஸ்வரியம்மா

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியம்மா

    மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரியம்மா

    வெட்டுவானம் எல்லையம்மா

    செங்கையிலே நாகாத்தம்மா

    மண்ணளக்கும் தாயே!

    மயிலையிலே முண்டக்கண்ணியம்மா

    சென்னையிலே அருள்மிகு தேவி

    கோலவிழி பத்ரகாளியம்மா

    அல்லிக்கேணியிலே எல்லம்மா

    புரசையிலே பாதாளபொன்னியம்மா

    மாம்பலத்திலே முப்பாத்தம்மா

    வட சென்னையிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா

    சேலத்திலே அன்னதான மாரியம்மா

    ஈரோட்டிலே சின்னமாரி-பெரியமாரியம்மா

    கோவையிலேதண்டுமாரியம்மா-கோணியம்மா

    சத்யமங்கலத்திலே பண்ணாரி மாரியம்மா

    மண்ணளக்கும் தாயே!

    • வீரம் கொண்ட அம்மன் கோவிலின் நிர்வாகியாக பாலசுப்பிரமணியன் என்பவர் இருந்து வருகிறார்.
    • திருட்டு குறித்து பாலசுப்பிரமணியன் ஊத்துமலை போலீசில் புகார் அளித்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள சண்முகாபுரம் கிராமத்தில் வீரம் கொண்ட அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகியாக அதே ஊரில் கீழத்தெருவில் வசிக்கும் பாலசுப்பிர மணியன்(வயது 53) என்பவர் இருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் கோவிலுக்கு சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 4 கிராம் எடை கொண்ட தங்கப்பொட்டு திருட்டு போயிருந்தது.

    இதுதொடர்பாக பாலசுப்பிரமணியன் ஊத்துமலை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • சதுரகிரி மலை ஏறுவது கடினமானது.
    • இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம்.

    சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும். இக்கோயிலுக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. மதுரை மாவட்ட மக்கள் வாழைத்தோப்பு பகுதி மற்றும் வத்திராயிருப்பு பகுதி மலைப்பாதையையும், தேனி மாவட்ட மக்கள் வருசநாடு பகுதி வழியிலான மலைப்பாதையையும் பயன்படுத்துகின்றனர். இப்பாதைகளில் வத்திராயிருப்புப் பகுதியிலிருந்து செல்லும் பாதை கடினமற்றது என்பதால் விருதுநகர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட மக்கள் இப்பாதையை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

    இம்மலையில் ஐந்து கோவில்கள் உள்ளன

    1) மகாலிங்கம்

    2) சுந்தரமூர்த்தி லிங்கம்

    3) சந்தன மகாலிங்கம்

    4) இரட்டை லிங்கம்

    5) காட்டு லிங்கம்

    மலையில் வாழும் பளியர் சாதியைச் சேர்ந்தவர்கள் வழிபட்டு வந்த இந்தக் கோயில் திருமலை நாயக்கர் ஆட்சிகாலத்தில் சாப்டூர் பாளையக்காரராக இருந்த ராஜகம்பளம் சமுதாயத்தை சேர்ந்த ராமசாமி காட்டைய நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டது. 1940 ஆம் ஆண்டு வரை இக்கோவில் சாப்டூர் பாளையக்காரர் பராமரிப்பில் இருந்து வந்தது. இம்மலை பகுதி 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

    சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

    வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

    சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.

    சிவபெருமான் அவனை தேற்றி, நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன், என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.

    சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.

    இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு. இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.

    கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.

    இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.

    இரட்டை லிங்கம்:

    ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.

    ""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

    லிங்க வடிவ அம்பிகை:

    சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

    • ஆதி ரத்தினேசுவரர் கோவில் சுவாமிகள் வீதி உலா நடந்தது.
    • 18-ந்தேதி தேரோட்டமும் 19-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையில் உள்ள ராமநாதபுர சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சினேக வல்லி அம்மன் சமேத ஸ்ரீ ஆதிரத்தினேசுவரர் கோவில் பாண்டி 14-சிவதலங்களில் 8-வது தலமாக கருதப்படுகிறது.

    வருண பகவானின் மகன் வாருணி என்பவர் துர்வாச முனிவரால் சாபத்துக்கு ள்ளாகி யானையின் உடலும் ஆட்டின் தலையும் பெற்று, இங்கு இறைவனை பூஜித்த பின் அந்த சாபம் விலகிய தால் ஆடானை என திரு சேர்ந்து திருவாடானை என பெயர் பெற்றது.

    பாடல் பெற்ற தலமான இந்த ஊருக்கு பாரிஜாத வனம், வன்னி வனம், குருக்கத்தி வனம், வில்வ வனம், முக்திபுரம், ஆதிரத்தினேசுவரம், ஆடானை, மார்க்கண்டேய புரம், அகத்தீஸ்வரம், பதுமபுரம், கோமத்தீஸ்வரம், விஜயேச்சுரம் என 12 பெயர்கள் உள்ளது.

    இங்கு வைகாசி விசாகத் திருவிழா கடந்த வைகாசி 10-ந் தேதி கொடியேற்றத்து டன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. 6-ந் திருவிழாவான இன்று ராமநாதபுர மன்னரின் மண்டப் படியாக வெள்ளி ரிஷப வாகனமும், திருஞான சம்பந்தரின் திருமுலைப் பால் உற்சவமும் தபசு மண்டபத்தில் நடைபெறு கிறது.

    இதையொட்டி இன்று விநாயகர் எலி வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வீதிஉலா வந்தனர். வைகாசி 18-ந்தேதி தேரோட்டமும் 19-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    • கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதி கொண்டனர்.
    • 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    விருதுநகர்

    வெம்பக்கோட்டை ஆலங்குளத்தை அடுத்துள்ள உப்புப்பட்டியில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதில் அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி, அவரது கணவர் மருதுபாண்டி ஆகியோர் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது அதே ஊரை சேர்ந்த அஜய், குமரகுரு, விக்னேஸ்வரன் உள்பட 5 பேர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    இதில் மகாலட்சுமி, மருதுபாண்டி உள்பட 3 பேர் தாக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் விக்னேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் மருதுபாண்டி மற்றும் அவரது தரப்பை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    • மறைந்த மங்கை மறுபடியும் ஒருநாள் சிவபெருமான் முன் தோன்றினாள்.
    • சாம்பலால் அகில உலகை காத்து இரட்சித்தாள் தாய்! பாம்புருக்கொண்டு பாங்காக வேற்காட்டில் அமர்ந்தாள்.

    வேயுறு தோனி பங்கன்! விடமுண்ட கண்டன்! மாதொரு பாகனாய் வீற்றிருக்கும் இடம் திருக்கயிலை. ஓங்காரத்தின் உட்பொருள்! பரம்பொருள்!! அம்மையும் அப்பனுமாய் அமர்ந்திருக்கும் இடம் கயிலைமலை. அருளே உருவானவன். பொன்னவிர் மேனியான். கங்கையும் திங்களும் அணிந்தவன்.

    அவர்கள் இருவருக்கும் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையையும் கொன்று வந்தான்.

    தேவகி எட்டாவது முறையாக கர்ப்பமானாள். அதே சமயத்தில் கோகுலத்தில் நந்தகோபனின் மனையாளும் கர்ப்பமானாள். அவளது கர்ப்பத்தில் உதித்தவள் மாயை என்னும் மகாசக்தி.

    இறைவனின் எண்ணப்படி இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரசவம். வசுதேவர் குழந்தைகளை இடம் மாற்றினார். மாயக்கண்ணன் ஆயர்பாடியில்! மாயாசக்தி கம்சனின் சிறைக்கூடத்தில்.

    வாளெடுத்து வந்தான் கம்சன். பச்சிளம் குழந்தையைக் கொல்லும் மாவீரன். பிறந்தது பெண்ணென்றாலும் கொல்வேன் என்று அந்த மாணிக்கத்தை தூக்கி வீசினான்.

    அடுத்த கணம்...

    அந்தரத்தில் நின்று சிரித்தாள் அந்த மகாசக்தி! அடேய் கொலைப்பாதகா! நான் கருமாறி வந்தவளடா! ஊர் மாறி பேர் மாறி உருமாறி கருமாறி வந்த என்னைக் கொல்லப் போகிறாயா? அது உன்னால் முடியுமா? மும்மூர்த்திகளாலும் முடியாத செயலை, அற்பனே, நீ செய்ய முனைந்தாயா? உன்னை ஒரே நொடியில் பொடிப்பொடியாக்கிவிடுவேன். ஆனால் மண்ணுலக மக்களுக்கு அருள் செய்ய புறப்பட்டவள் நான்! உன்னைக்கொன்று மறுபடியும் ரௌத்காரியாக மாற விரும்பவில்லை.உன்னை கொல்ல வேறொருவன் பிறந்துவிட்டான் என்று கூறி அந்தரத்தில் நின்றவள் மறைந்தாள்.

    மறைந்த மங்கை மறுபடியும் ஒருநாள் சிவபெருமான் முன் தோன்றினாள். கிருஷ்ணமாரியாகத் தோன்றியவளின் உக்கிர சொரூபத்தைக் கண்டு தேவர்களே திகைத்தனர். அசுரரின் கொட்டத்தை அடக்கிட சாம்பலை அள்ளித் தந்தார் சிவபெருமான்.

    சாம்பலால் அகில உலகை காத்து இரட்சித்தாள் தாய்! பாம்புருக்கொண்டு பாங்காக வேற்காட்டில் அமர்ந்தாள். கலியின் வெங்கொடுமை மீண்டும் தலைதூக்கியது. மக்களை காக்க மாதா மீண்டும் தோன்றினாள் மீண்டும் கருமாரியாகக் கோவில் கொண்டாள்.

    • ஆகாச மாரியம்மனை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவிலுக்குள் கொண்டு சென்றனர்.
    • கூடியிருந்த பக்தர்கள் பூக்களை தூவி அம்மனை வரவேற்றனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் அமைந்துள்ள ஆகாச மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் வைகாசி மாத அமாவாசையை தொடர்ந்து வரும் வெள்ளி க்கிழமையில், சமயபுரத்தி லிருந்து மாரியம்மன் மல்லி கைப்பூ, கைவளையலுக்கு ஆசைப்பட்டு ஆண்டுக்கு 15 நாட்கள் மட்டும் இங்கு வந்து தங்கி அருள்பாலிப்பதாக ஐதீகம்.

    வைகாசி திருவிழாவை யொட்டி நேற்று அரசலாற்றில் இருந்து கரகம் எடுத்து வந்து திருநறையூர் செங்கழுநீர் விநாயகர் கோவிலில் ஆகாச மாரியம்மன் அலங்கரி க்கப்பட்டு அங்கிருந்து நள்ளிரவில் மின்விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மனை எழுந்தருள செய்து மேளதா ளங்கள் முழங்க திருநறையூர், நாச்சியார்கோவில் கிராமங்களில் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் உலா வந்தார். தொடர்ந்து, இன்று காலை அம்மன் பல்லக்கு கோவிலை வந்தடைந்தது.

    பின்னர், பல்லக்கில் இருந்த ஆகாச மாரியம்மனை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு ஆடி அசைந்து கோவிலுக்குள் கொண்டு சென்றனர். அப்போது கோவிலில் கூடியிருந்த பக்தர்கள் பூக்களை தூவி அம்மனை வரவேற்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    அதனை தொடர்ந்து, லட்சுமி, சரஸ்வதி, மதனகோபாலன், மகிஷாசுரமர்த்தினி, சேஷசயன, ராஜராஜேஸ்வரி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி பெரிய திருவிழாவும், 7-ந்தேதி சிறிய தேரில் அம்மன் வீதி உலாவாக வந்து பின்னர் சமயபுரத்திற்கு அம்மன் எழுந்தருளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • குரு பரிகார தலங்கள் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் உள்ளன.
    • திருமணத்தில் தடை ஏற்படுபவர்கள் குரு பகவானை வழிபாடு செய்ய வேண்டும்.

    ஆன்மிக பூமியான தமிழகத்தில் ஆயிரக் கணக்கான ஆலயங்கள் நிறைந்துள்ளன. நவக்கிரக கோவில்களும் நட்சத்திர கோவில்களும் இங்குதான் உள்ளன. குரு பரிகார தலங்கள் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் உள்ளன. அவற்றில் முக்கியமான ஆலயங்கள் பற்றி பார்ப்போம்.

    தென்குடி திட்டை

    திட்டை திருத்தலம், தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ் டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்ப தாகும்.

    இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குரு பகவான் ராஜ குருவாக வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்திலும் காண முடியாத தனிச் சிறப்பாகும்.

    பாடி திருவலிதாயம்

    சென்னைக்கு அருகில் உள்ள பாடி திருவலிதாயத்தில் அமைந்துள்ள வலிதாய நாதர் கோவில், குரு பகவான் வழிபட்ட தலமாகும். வியாழ பகவான், தான் செய்த ஒரு தவறால், தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார்.

    இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனை படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்தருளினார். குருவுக்கு இங்கு சன்னிதி உள்ளது. இவர் சிவனை வணங்கும் வகையில் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பான அமைப்பு.

    திருச்செந்தூர்

    குரு பகவானுக் குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது, முருகனுக் குரிய ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஆகும். தேவர்களைக் காக்க முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது.

    இங்குள்ள மேதா தட்சிணா மூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானைகளுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். வலதுகையில் சிவபெருமானுக் குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒரு முறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.

    குருவித்துறை

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னிதியில் குரு பகவானும், சக்கரத் தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் 'மிருத சஞ்சீவினி' மந்திரம் கற்றிருந்தார். இதனால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார். அந்த மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையிலிருந்து ஒருவரை சுக்ராச்சாரியாரிடம் அனுப்ப முடிவு செய்தனர்.

    தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவ தாகச் சொன்னான். அதன்படி சுக்ராச் சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச் சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர்.

    கசனைக் காணாத தேவயானி, தந்தையிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுரலோகத்தில் இருந் து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார்.

    பட்டமங்கலம்

    கிழக்கு நோக்கிய அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் அருளுகிறார். இவரது சன்னிதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆல மரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னிதி அமைந்துள்ளது. சன்னிதி முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி பிரதானம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக் கிழமை குரு ஓரை நேரத்தில் (மதியம் 1 - 2 மணி) இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். மதுரையில் இருந்து 65 கி.மீ., திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக 90 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர் இருக்கிறது. இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில் பட்டமங்கலம் அமைந்துள்ளது.

    அகரம் கோவிந்தவாடி

    காஞ்சீபுரம் - அரக்கோணம் பேருந்து வழியில், கம்மவார்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோவிலுக்குச் செல்லலாம். இத்தலத்திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரிகிறார். இது சிறந்த குரு பரிகாரத் தலம். இவர், வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

    தக்கோலம்

    வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. இத்தலத்து இறைவன் வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்..

    • திருவேற்காட்டுத் தலத்தினில் தனிப்பெரும் கருணையோடு, புன்னகை தவழும் முகத்தோடு அவள் வீற்றிருக்கிறாள்.
    • அன்னை கருமாரி கலியுகத்திலே கண்கண்ட தெய்வம்! மஞ்சளால் மகிமை புரிபவள்! எலுமிச்சம் பழத்தில் அதிசயம் காட்டுபவள்!

    சைவத் திருமுறைகள் பன்னிரண்டு அதில் முதலாம் திருமுறையை அருளியவர் திருஞான சம்பந்தப் பெருமான். பதினொரு இன்சுவைப் பாக்களால் திருவேற்காட்டைப் பாடுகிறார். அதில் உறையும் வேதபுரீசனைப் பாடுகிறார்.

    1. உயரிய பரம்பொருளை நினைப்பவரே தேவர். அவருக்கு நற்கதியை அளிப்பவன் வெள்ளிமலையான். அவன் விரும்பி உறையும் இடம் வேற்காடு.

    அன்னை கருமாரியின் அருள் வரலாறு

    தாய்! ஒரு குழந்தை காணும் முதல் முகம்! அந்த தாய் தான் குழந்தையிடம் அளப்பரிய அன்பு கொண்டவள். எனவே குழந்தைகள் அன்னையைத் தான் முதலில் நாடும். தனக்குத் தேவையானவற்றை அன்னையிடம் கூறி அவள் மூலம் தந்தையிடமிருந்து பெறுவதே குழந்தையின் இயல்பு.

    அதேபோல் ஆண்டவனின் அருளை நாடுவோர் முதலில் அன்னையை நாடுவர். அம்மை மனம் கனிந்தால் அப்பனின் அருள் எளிதில் கிடைக்கும். அந்த அன்னை எண்ணிலா வடிவங்களில், எண்ணிலா பெயர்களில் எண்ணிலாத் திருக்கோவில்களில் காட்சி செலுத்திக் கொண்டிருக்கிறாள்.

    திருவேற்காட்டுத் தலத்தினில் தனிப்பெரும் கருணையோடு, புன்னகை தவழும் முகத்தோடு அவள் வீற்றிருக்கிறாள்.

    உடுக்கை ஏந்திய கரம் ஒன்று

    திரிசூலம் தாங்கிய கரம் மற்றொன்று

    வாள் தாங்கிய வளைக்கரம் இன்னொன்று

    பொற்கிண்ணம் ஏந்திய பூங்கரம் வேறொன்டு

    நாற்கரத்து நாயகி! சிவசக்தியாய் அமர்ந்த நிலையில் ஒரு திருக்கோலம்!

    தலைகாட்டி உடல் மறைந்த நாரணியாய் மற்றொரு கோலம்.

    வேண்டுவோர்க்கு வேண்டுவன அருளும் தேவி! அனைத்து துன்பங்களையும் வேரறுக்கும் அனந்த நாயகி!

    ஆயிரம் கண்ணுடையாள்!

    ஆதிபராசக்தி

    வேற்காட்டுக் கருமாரி

    கண்ணின் கருமணி போன்றவள்

    ஒரே ஒரு முறை தன்னிடம் அடைக்கலம் வந்தோரையும் ஆதரிப்பவள். வளமான வாழ்வளிப்பவள். சகல செல்வங்களும் தரும் தயாபரி. அகிலமதிலே நோயின்மை, கல்வி, தனம், தான்யம், அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலிமை, துணிவு, வாழ்நாள், வெற்றி, தீமை கழித்து நல்லூழ் நாட்டுதல், நுகர்ச்சி ஆகிய பதினாறு பேறும் கண்சிமிட்டும் நேரத்தில் அருள்பவள்.

    பாமரர்களின் பரிபூரண நம்பிக்கை!

    படித்தவர்களின் பரம்பொருள் நாயகி!

    பதவியில் இருப்பவர்க்குப் பரதேவதை!

    செல்வாக்கு உள்ளவர்களுக்கு அஷ்டலட்சுமி!

    கிராம மக்களுக்குக் குலதெய்வம்

    நகர மக்களுக்கு பிரும்மாண்ட நாயகி!

    அனைத்து மக்களுக்கும் அன்புத்தாய்

    அகில உலகுக்கும் ஆதிபராசக்தி!

    ஏழை பணக்காரன் முதல் படித்தவன், பாமரன் ஈராறாக அவள் பதம் காண ஓடிவருவர். அனைவருக்கும் அருளும் அன்பு தெய்வம்! குறை தீர்க்கும் கற்பகவல்லி! நிறை வாழ்வு நல்கும் நித்தில் நாயகி!

    அந்த அன்னையின் வடிவழகு! அதை ஆண்டாண்டு காலமாய் பாடிய பாவலர் கோடானு கோடி!

    மனிதரும், தேவரும், மாயமா முனிவரும் வந்து சென்னி

    குனிதரும் சேவடிக் கோமளேமே! கொன்றை வார்சடைமேல்

    பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த

    புனிதரும் நீயுமென் புந்தி என்னாளும் பொருந்துக

    என்று நமது அபிராமிப் பட்டரை போல் பாடிப்பரவியோர் பலபேர்!

    நமது அன்னையை மனிதர்கள் போற்றுவார்களாம். தேவர்கள் ஏத்துவார்களாம். மாயம் செய்யும் மாமுனிவர் பணிவார்களாம். சென்னியைக் குனித்துச் சேவடி தொழுவார்களாம். அந்த கோமளவல்லி அன்னை பராசக்தியை! கொன்றைப்பூவை வரிச்சடைகளில் சூடியவர் மனேஸ்வரன். பனிபொருந்திய குளிர்தரும் நிலவை அந்த வார்சடைகளில் பொருத்தி வைத்தவர். அதுமட்டுமா? பாம்பை மலராகச் சூடியவர். பகீரதியை தலைமேல் சுமந்தவர். அந்த தயாநிதி உடனுறை தாயாகிய அவளை என்னாளும் என் நினைவில் பொருந்துகவே என்று வேண்டி உருகுவோர் எண்ணற்ற பேர்.

    அன்னை கருமாரி கலியுகத்திலே கண்கண்ட தெய்வம்! மஞ்சளால் மகிமை புரிபவள்! எலுமிச்சம் பழத்தில் அதிசயம் காட்டுபவள்! வேப்பிலை தன்னிலே வெப்புநோய் தணிப்பவளே! சாம்பலிலே உயிர்காப்பவள்!

    எண்ணும் எழுத்தும் இருகரமாய்க் கொண்டவள்! பண்ணை பாடும் போது பூரிப்பவள்! பரதத்தை ஆடும்போது புன்னகைப்பவள்! பைந்தமிழ் கேட்டு இன்புறுபவள்! நண்ணும்போது நயந்து அருள்பவள்! விண்ணும் மண்ணும் வாழ்த்திடும் வித்தகி! திருவேற்காட்டு வேற்கண்ணி!

    இதைத்தான் அருட்கவி கருமாரிதாசர்

    எண்ணும் எழுத்தும் இருக்கையாய்க் கொண்டிடும் ஏந்திழையே

    பண்ணும் பரதமும் பைந்தமிழ்ப் பாடலும் பாடிடவே

    நண்ணும் பொழுதில் நயந்தருள் செய்கரு மாரியளே

    விண்ணும் உலகமும் வாழ்ந்திடும் வித்தகி வேற்கண்ணியே

    என்ற பாடி மகிழ்கிறார்.

    அந்த வேற்கண்ணியை-வேற்காட்டு மாரியை முழுதும் அறிந்தவள் யாருளர்?

    அன்னவளுக்கு வரலாறு உண்டோ?

    புராணம் இருக்கிறதோ?

    சில மதியீனர்கள் சொல்வார்கள்- மாரிக்கு ஏது புராணம்? குறி சொல்லும் குறத்திதானே அவள்? எல்லை காக்கும் காளி தானே அவள்? ஊரைக் காக்கும் படாரிதானே அவள்? என்று!

    அறியாமையால் கேட்கப்படும் கேள்வி! வேதமந்திரங்களே அவள் பெயரை முழங்குகின்றன. ஸ்ரீகிருஷ்ணமாரி என்ற அட்சரங்களால் வழங்குகின்றன.

    கருணையை மாரிபோல் பொழிபவள்

    கருமாரி என்னும் திருநாமம் கொண்டவள்

    நாற்கரம் தாங்கிய நாயகி! நற்கதியளிக்கும் நாரணி! ஐந்து பூதங்களுக்கு அப்பாற்பட்டவள்! பஞ்சாட்சரி! ஆறுமுகனுக்கு வேலைத் தந்த அன்னை பரமேஸ்வரி!

    யோகம், ஞானம், வேதங்களுக்கு எட்டாதவள்! ஏங்குவோர்க்கு ஏக்கம் தீர்க்கும் அருமருந்து!

    வேதங்கள் அறிய முடியாத வித்தகி! வேப்பிலையை விரும்பிச் சூடியவள்! உடுக்கையலி கேட்டு ஓடிவருபவள்! கேட்க வரம் தந்த நம்மைக் காத்து இரட்சிப்பவள்!

    அந்த அன்னையின் வரலாற்றை அன்பு மனத்தோடு படியுங்கள்! உங்கள் கலி நீங்கி வளம் ஓங்கும்.

    கருமாரி பெயர் காரணம்

    மாரி என்றால் மழை.

    மாரியும் உண்டு ஈங்கு உலகு புரப்பதுவே என்று குறிஞ்சிக் கபிலர் பாடுவார்.

    கருமாரி என்றால் கருமையான மேகம் எனப்பொருள் கொள்ளலாம்.

    உயிர்கள் வாடுவதைக் கண்டு கருமாரி பொழியும். இது விண்மாரி! அதேபோல் அடியவர் வாட்டத்தை கண்டு அன்னை அருள்மாரி பொழிவாள்! இது மண் மாரி! மண்ணுலகைக் காக்கும் மகாமாரி!

    அன்னை ஆயிரங் கண்ணுடையாள்! கோடி கோடி வடிவங்களில் தோன்றுபவள்! அவ்வடிங்களில் ஒன்பது வடிவங்கள் சிறப்புடையவை! அவ்வடிவங்களில் ஒன்று குளிர் மாரி வடிவம். அவள் சன்னதியின் முதல் படியில் கால் வைக்கும் போதே மனம் குளிரும். மதிகுளிரும். பிறந்த வீட்டில் நுழையும் பெண்ணைப் போல தாய் வீட்டுக் கருணை நெஞ்சில் நிறையும்.

    துர்க்கை, மகாகாளி, மகாலட்சுமி முதலான அன்னையின் அம்சம் தான் கருமாரி! ஆதிபராசக்தி, மகிஷா சூரமர்த்தினி ஆகிய சொருபங்களின் மூலம் தான் கருமாரி!

    • அலங்காநல்லூர் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள மேலசின்னணம்பட்டி கிராமத்தில் மூங்கிலணை காமாட்சி அம்மன், விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 2 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் சிறப்பு ஹோமங்கள் நடந்தன. கோ பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி புனித நீர் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

    • முருகன் வள்ளி- தெய்வானையுடன் கையில் வில்லும், அம்பும் தரித்த நிலையில் காட்சியளித்ததார்.
    • சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள கோவிலைக் கட்டியதாக வரலாறு கூறுகின்றது.

    இந்து கடவுளர்களில் இளம் வயது கடவுள், முருகப்பெருமான் மட்டுமே. 'முருகு' என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். முருகன் என்றால் இளமையான அழகன் என்று கூறலாம். முருகு என்பதிலுள்ள மூன்று எழுத்துக்களும் (ம்+உ, ர்+உ, க்+உ - முருகு) உகார எழுத்துக்களாகும். இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றைக் குறிக்கின்றன. நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஆறு வகை சமயங்களில் ஒன்றான 'கவுமாரம்' என்பதன் தெய்வமும் முருகனே ஆவார். மேலும் இவர் தமிழ்க் கடவுளாகவும் போற்றப்படுகிறார்.

    சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்படுத்திய நெருப்பு காமனை எரித்த பின்னர், வாயு பகவானால் சரவணப்பொய்கை ஆற்றில் விடப்பட்டது. அந்த நெருப்புஆறு குழந்தைகளாக உருவாகி கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி அந்த ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று சமய நூல்கள் கூறுகின்றன. இவருக்கு கந்தன், கடம்பன், வேலாயுதன், சரவணபவன், குமரன், வேலவன், தண்டாயுதபாணி போன்ற பல பெயர்கள் உள்ளன.

    ஒருநாள் நாரதர், கயிலாயம் சென்று சிவன் மற்றும் பார்வதி ஆகியோரிடம் ஒரு ஞானப்பழத்தைக் கொடுத்தார். அந்த பழம் தனக்கு வேண்டும் என முருகனும், விநாயகரும் முரண்டுபிடித்தனர். அதைப் பெறுவதற்காக உலகை மூன்று முறை சுற்றி வர வேண்டும் என்று சிவபெருமான் போட்டி வைத்தார். முருகன் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகைச் சுற்ற புறப்பட்டார். ஆனால் விநாயகர் தம் அறிவுக்கூர்மையால் 'தாய் தந்தையரே உலகம்' என்று கருதி அவர்களை மும்முறை சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றுக் கொண்டார்.

    உலகை சுற்றிவந்த முருகன் இந்தச் செயலால் கோபம் கொண்டு, பழனி மலை மீது ஆண்டிக்கோலமாக அமர்ந்தார். அதனடிப்படையில் மலை தோறும் முருகன் கோவில்கள் உருவானது. தென்னிந்தியாவில் மலைகள் அதிகம் என்பதால் முருகன் கோவில்களும் அதிகமானது, அவரை வழிபடும் பக்தர்கள் கூட்டமும் உயர்ந்தது. முருக பக்தர்கள் அதிகரிக்க மலைகளைத்தாண்டி சமவெளிப் பகுதிகளிலும் முருகன் கோவில்கள் உருவானது. இப்படி உருவான முருகன் கோவில்களில் ஒன்றே வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்.

    தலவரலாறு

    புராண காலத்தில், ஆலயம் அமைந்துள்ள இந்தப் பகுதி அடர்ந்த வனமாக இருந்துள்ளது. அதனுடைய அடையாளமாக ஆலயத்தைச் சுற்றி இன்றளவும் அதிக ஆலமரங்கள் இருப்பதைக் காணலாம். முருகப்பெருமான் வள்ளியை மணம் செய்து கொள்ள வள்ளிமலைக்கு வந்துவிட, தேவர்களும் முனிவர்களும் பெருமானைத் தேடி பூலோகம் வந்து அலைந்து திரிந்தனர். பல இடங்களில் தேடியும் அவர்களால் முருகனை காணமுடியவில்லை. இதனால் அவர்கள் மனதளவில் துவண்டு வருத்தமுற்றனர். அப்போது அருவமாக தோன்றிய முருகன், "இங்கிருந்து இரண்டரை காத தூரத்தில் நான் உங்களுக்கு காட்சி தருவேன்" என்று கூறினார்.

    அதன்படி இடும்பன், வீரன், ஐயனார் ஆகியோர் சூழ ஒரு அழகிய சோலையின் நடுவே ஜோதி வடிவமாக காட்சியளித்தார். இந்த ஜோதி வடிவத்தை சப்த கன்னிகளும், தேவர்களும், முனிவர்களும் கண்டுகளித்தனர். ஆனால் அதில் நிறைவு கொள்ளாத அவர்கள் மீண்டும் அருட்காட்சி தரவேண்டும் என்று வேண்டினர். அதை ஏற்ற முருகன் வள்ளி- தெய்வானையுடன் கையில் வில்லும், அம்பும் தரித்த நிலையில் காட்சியளித்ததார். அதனால் இத்தலம் 'வில்லுடையான்பட்டு' என பெயர் பெற்றது. பிறகு தமது வேலாயுதத்தை ஊன்றி நீரோடை ஒன்றை உருவாக்கி அதற்கு 'சரவண தீர்த்தம்' என்று பெயரிட்டார். இவ்வாறு முருகன் காட்சியளித்து தனது வேலையும் இங்கு ஊன்றியதால் இந்த ஊர் 'வேலுடையான்பட்டு' என்று அழைக்கப்பட்டது. அனைவருக்கும் காட்சியளித்த முருகப்பெருமான் அந்த இடத்தில் கல்லுருவமாய் மாறி பூமியில் நிலைத்தார்.

    இவ்விடத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பான ஆலயம் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் ஆலயம் மண்மேடிட்டு மறைந்தது. அதன்பின்னர் இப்பகுதியை ஆட்சிசெய்த சித்திரகாடவன் என்னும் பல்லவ வம்சத்து அரசன், சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள கோவிலைக் கட்டியதாக வரலாறு கூறுகின்றது. கி.பி. 13-ம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த அம்மன்னனின் பசுக்கள், இந்தப் பகுதியில் மேயச் செல்வது வழக்கம். ஆனால், அரண்மனைக்குத் திரும்பியதும் பால் கொடுப்பதில்லை. மன்னருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

    ஒருநாள் மேயச் செல்லும் பசுக்களை பின் தொடர்ந்து சென்றார். வனத்தில் ஒரு புதருக்கு அருகில் பசுக்கள் தானாக பாலைச் சொரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தார். வியப்புற்ற மன்னன் அந்த இடத்தை மண்வெட்டியால் வெட்டினான். அப்போது ரத்தம் பீறிட்டு எழவே திடுக்கிட்டு அந்த இடத்தில் இருந்த புதரை மெள்ள மெள்ள அப்புறப்படுத்திவிட்டுப் பார்த்தபோது, மண்வெட்டி பட்டதால் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் பெருகிய நிலையில் சிலையாக முருகப்பெருமான் காட்சி தந்தார். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், தமக்கு அந்த இடத்தில் ஒரு கோவில் கட்டும்படி உத்தரவிட்டார். அப்படி உரு வானதுதான் வேலுடையான்பட்டு வில்லேந்திய வேலவனின் திருக்கோவில்.

    மூலவர் மண்ணிலிருந்து சுயம்புவாகத் தோன்றியவர் என்றால், உற்சவரோ கடலிலிருந்து கிடைத்தவர். ஆம்! இங்குள்ள உற்சவர் சிலை, கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டு, கோவிலில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டது. ஆனால் எங்கு எப்போது கிடைத்தது என்பதற்கான சான்றுகள் எதுவுமில்லை.

    ஆலய அமைப்பு

    கிழக்கு நோக்கி அமைந்துள்ள இவ்வாலயம் கோபுரமின்றி தெய்வானை திருமண சிற்பத்துடன் கூடிய தோரண வாசலுடன் அமைந்துள்ளது. அதை அடுத்து முகப்பு மண்டபத்தில் ஐந்து சூலாயுதங்களும், பலிபீடமும், கொடிமரமும், மயில் சிற்பமும் இடம் பெற்றுள்ளன. மகாமண்டபத்திற்கு வெளிப்புறத்தில் இடது பக்கத்தில் விநாயகர், ஆதிலிங்கம், வலது பக்கத்தில் தண்டாயுதபாணி ஆகியோரின் சிறு சன்னிதிகள் உள்ளன. மகாமண்டபத்தின் உட்புறம் இடது பாகத்தில் அருணகிரிநாதர், நால்வர் சன்னிதிகளும், அதற்கு நேர் எதிரில் தூணில் ஆஞ்சநேயரும், தெற்கு நோக்கி நடராஜர் சபையும் அமைந்துள்ளது.

    கருவறைச் சுற்றிலும் விநாயகர், விசாலாட்சி, விசுவநாதர், அகத்தியர்-லோபமுத்ரா, துர்க்கை ஆகிய சன்னிதிகளும், சனிபகவான், ஐயப்பன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். அர்த்தமண்டபத்தைத் தாண்டி உள்ளே செல்ல கருவறையில் சுயம்புவான மூலவர் வள்ளி- தெய்வானை உடனாய சிவசுப்ரமணியசுவாமியாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். வெளிப்பிரகாரச் சுற்றில் வடக்கு பகுதியில் கிழக்கு நோக்கிய சுந்தரேசுவர பெருமான் சன்னிதியும், தெற்கு நோக்கிய மீனாட்சி அம்பாள் சன்னிதியும், மேற்கு நோக்கிய பைரவர் சன்னிதியும் அதனை ஒட்டி முருகப்பெருமானின் வாகனமான மயில்கள் வாழுமிடமும் இடம் பெற்றுள்ளது.

    ஆலயத்தின் வாசலை ஒட்டி வலதுபுறம் நவக்கிரக சன்னிதியும், தலவிருட்சங்களும், தேர் வடிவ வசந்த மண்டபமும் இடம்பெற்றுள்ளது. ஆலயத்திற்கு வெளியே முருகப்பெருமானை நோக்கியவாறு இடும்பன் உள்ளார். அவருக்குப்பின்னால் முருகன் தன் சூலாயுதத்தை நட்டு உருவாக்கிய சண்முக தீர்த்தம் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது. தீர்த்தத்தின் படித்துறையில் கிழக்கு நோக்கியவாறு வலம்புரி செல்வ விநாயகர் அமர்ந்துள்ளார்.

    அமைவிடம்

    கடலூர் மாவட்டம் நெய்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை-கும்பகோணம் சாலையில் பண்ருட்டிக்கும் வடலூருக்கும் இடைபட்ட வடக்குத்து என்ற ஊரிலிருந்து மேற்காக செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் பயணித்தால் ஆலயத்தை அடையலாம். வடலூரில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.

    -நெய்வாசல் நெடுஞ்செழியன்.

    ×