search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அலி ஷாம்கானியின் மகன் ஹொசைன் ஷாம்கானி சத்தமே இல்லாமல் துபாயில் கச்சா எண்ணெய் வியாபார சாமர்ஜ்யத்தையே கட்டி எழுப்பியுள்ளார்
    • அந்த நிறுவனத்தை 'ஹெக்டார்' [Hector] என்ற புனைபெயருடன் ஹொசைன் ஷாம்கானி இயக்கி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது

    ஈரான் அரசியல் புள்ளி 

    ஈரான் அரசில் முக்கிய முடிவுகளை எடுக்கும் மதத் தலைவர் அயத்துல்லா காமேனி -இன் ஆலோசகராகவும் இருப்பவர் அலி ஷாம்கானி [Ali Shamkhani]. ஈரான் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலான Supreme National Security Council (SNSC) இன் தலைவராகவும் சுமார் 10 ஆண்டுகளாக அலி ஷாம்கானி இருந்துள்ளார். தற்போது அயத்துல்லா காமேனியின் ஆலோசகராக ஈரான் அரசியலிலும் ராணுவத்திலும் பலம் கொண்டவராக அலி ஷாம்கானி திகழ்ந்து வருகிறார்.

     

    ஹொசைனின் எண்ணெய் சாம்ராஜ்யம் 

    இவ்வாறாக அரசியலில் தனது இருப்பை நிலைநாட்டிவரும் அலி ஷாம்கானியின் மகன் ஹொசைன் ஷாம்கானி Hossein Shamkhan சத்தமே இல்லாமல் துபாயில் கச்சா எண்ணெய் வியாபார சாமராஜ்யத்தையே கட்டி எழுப்பியுள்ளார். ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் எண்ணெய் வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்ததுபோல ஈரான் மீது எண்ணெய் வர்த்தக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் ஹொசைன் ஷாம்கானி சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவராக இருப்பதாக புளூம்பெர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஹொசைன் ஷாம்கானியின் இந்த வளர்ச்சி ஈரான் அரசில் அவரது தந்தையின் அரசியல் தொடர்புகளே காரணம் என்கிறது அந்த அறிக்கை.

     

     

    ஹெக்டார் என்கிற ஹொசைன் ஷாம்கானி

    அந்த அறிக்கைப்படி, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் உள்ள கார்ப்பரேட் டவரில் மிலாவோஸ் Milavous Group Ltd, என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.ஆரம்பித்து சில மாதங்களிலேயே சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் குறிப்பிடத்தகுந்த இடத்தை அந்நிறுவனம் பிடித்துள்ளது. ப்ளூம்பெர்கிற்கு கிடைத்துள்ள தகவலின்படி வியாபார வட்டாரங்களில் அந்த நிறுவனத்தை 'ஹெக்டார்' [Hector] என்ற புனைபெயருடன் ஹொசைன் ஷாம்கானி இயக்கி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஈரான், ரஷியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெறப்பட்ட கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பில்லியன் கணக்கில் இந்த நிறுவனத்தின் வருவாய் எட்டியுள்ளது.

     

     நெட்வொர்க் 

    ஹொசைன் ஷாம்கானியின் வர்த்தக தொடர்பு நெட்வொர்க் ஆனது ஈரான் நாட்டை சேர்ந்த எண்ணெய் வர்த்தக நெட்வொர்க்களிலேயே மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் தடைகளை சட்டப்பூர்வமாக உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, மற்ற நிறுவனங்களுடனான பார்ட்னர்ஷிப் மூலமும் , ஷெல் நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் செயல்பாடு இல்லாத நிறுவனங்களை உருவாக்கியும் தனது சர்வதேச வர்த்தக ஆதிக்கத்தை ஹொசைன் ஷாம்கானி நிறுவியுள்ளார் என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஹொசைன் ஷாம்கானி மீதும் அவரது வர்த்தக நகர்வுகள் மீதும் அமெரிக்கா ஒரு கண் வைத்திருந்தாலும், 60 க்கும் மேற்பட்ட கப்பல்கள் கொண்டு பெரிய அளவில் இயங்கி வரும் அவரது நெட்வொர்க்கை முழுதாக செயலிழக்க செய்ய முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது

     

    அமெரிக்காவின் தேள் 

    ஹெக்டார் அதாவது ஹொசைன் ஷாம்கானியின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் மிலாவோஸ் நிறுவனம் சீனாவின் சினோபெக், செவ்ரான்,BP உள்ளிட்ட பெரு வணிக கொள்முதல் நிறுவனங்களுக்கு எண்ணெய் சப்ளை செய்து வருகிறது. ஆனால் இது அனைத்தும் சட்டபூர்வமாக நடப்பதால் அமெரிக்காவால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி ஆண்டுக்கு 35 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு இருப்பதால், ஹொசைன் ஷாம்கானியின் வர்த்தகத்தில் கை வைப்பது சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலையை  உயர்த்தும். அது அமெரிக்காவில் வர இருக்கும் அதிபர் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அமெரிக்கா தேள் கொட்டினாலும் பரவா இல்லை என்று  மவுனமாக இருந்து வருகிறது. 

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணித்தார்.

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அமெரிக்க சுற்றுப்பயணத்தில் ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தந்தை பெரியாரின் 'இனிவரும் உலகம்' புத்தகத்தில் உள்ள கருத்தோடு தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அவரது பதிவில், "இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டவை" என்று பதிவிட்டுள்ளார்.


    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • உழைப்பாலும் - அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக்கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தமிழர்களை சந்தித்தது குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,

    அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள்!

    தங்களது உழைப்பாலும் - அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்! என்று தெரிவித்துள்ளார்.

    • Hawk Tuah என்பது நெட்டிஸின்களுக்கு பரிட்சயமான ஒரு சொல்
    • ஆபாச நடிகை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார்

    ஹா தூ[Hawk Tuah] என்பது நெட்டிஸின்களுக்கு பரிட்சயமான சொல்லாக மாறிப் போயுள்ளது. இணையத்தில் பரவிய வைரல் வீடியோ ஒன்றில் பெண் ஒருவரிடம் பாலியல் உறவு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலே ஹா தூ [Hawk Tuah]. இதுதொடர்பான மீம்கள் இணையத்தில் உலா வரும் நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பையும் Hawk Tuah வார்த்தையையும் இணைத்து டீ - சர்ட் அணிந்த நபர் விமானத்தில் இருந்து இறங்கிவிடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    அமெரிக்காவில் டெல்டா ஏர்லைன்ஸில் ஏறிய இளைஞர் ஒருவர் தான் செக்யூரிட்டியைத் தாண்டி வரும்வரை உள்புறம் வெளியிலும் வெளிப்புறம் உள்ளே இருக்குமாறு தான் அணிதிருத்த டி சர்ட்டை கழற்றி டிரம்ப் மற்றும் Hawk Tuah மீமியை இணைத்து மோசமான வகையில் சித்தரிக்கும் படம் கொண்ட டீ சர்டின் பகுதி வெளியே தெரியுமாறு அணிந்துள்ளார்.

    இதை கவனித்த விமான ஊழியர்கள் அந்த இளைஞரை விமானத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆபாச நடிகை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

     

    • செங்கல்பட்டில் 400 கோடியில் ஆலை.
    • 500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி இரவு அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றார்.

    அந்த வகையில் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் 400 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடியில் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    அனைத்து மாவட்டங்களில் இருக்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதிப்படுத்தவும் தமிழக அரசு தொடர்ச்சியாக இத்தகைய பயணங்களை 4-வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு இருக்கிறார்.

    அமெரிக்காவில் மின்பொருள் மற்றும் கனரக தொழிற்சாலைகளுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    • மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர்களுக்கு பரிசுப்பெட்டகம் வழங்கினார்.
    • என்னென்ன பொருட்கள் இருந்தது என்பது பற்றிய விவரம்.

    சென்னை:

    தொழில்முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பரிசுப்பெட்டகம் வழங்கினார். அதில் என்னென்ன பொருட்கள் இருந்தது என்பது பற்றிய விவரம் தெரியவந்துள்ளது.

     அந்த வகையில் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் அளித்த தடம் பரிசுப் பெட்டகத்தில், நெல்லையில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை), நீலகிரி தோடா எம்பிராய்டரி சால், பவானி ஜமுக்காளம், புலிகாடு பனை ஓலை ஸ்டாண்ட், கும்பகோணம் பித்தளை விளக்கு ஆகியவை அதில் உள்ளன.


    பவானி ஜமுக்காளம் நெசவாளர்கள் முதல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் டெரகோட்டா கைவினைக் கலைஞர்கள் மற்றும் நீலகிரியின் தோடா எம்பிராய்டரி கலைஞர்கள் வரை, சிறு சிறு சமூகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்துள்ளனர் என்பதை இந்த பரிசுப் பெட்டகம் வெளிப்படுத்துகிறது.

    தடம் திட்டத்தின் கீழ் கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், தன்னை சந்திக்கும் விருந்தினர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தடம் பெட்டகத்தை பரிசளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜான்ஸ்டவுன் பகுதியில் டிரம்பின் பேரணியில் மர்ம நபர் தடையை மீறி டிரம்பை நெருங்க முயற்சித்த செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சிறிது நேரத்திலேயே கூட்டத்திலிருந்த மற்றொரு நபரையும் கைவிளங்கிட்டு போலீஸ் அழைத்துச்சென்றது.

    நவம்பர் மாதம் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஜூலை 13 ஆம் தீதி பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் டிரம்ப் மீது நடத்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பென்சில்வேனியாவில் உள்ள ஜான்ஸ்டவுன் பகுதியில் டிரம்பின் பேரணியில் மர்ம நபர் தடையை மீறி டிரம்பை நெருங்க முயற்சித்த செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளில், தாடி வைத்து கூரோலிங் கிளாஸ் அணிந்த நடுத்தர வயது நபர் ஒருவர், பொதுமக்கள் தடையை மீறி செய்தியாளர்கள் இருந்த பகுதிக்குள் நுழைந்து மேடையில் ஏற முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீஸ் அங்கிருந்து அழைத்துச் சென்றது. சிறிது நேரத்திலேயே கூட்டத்திலிருந்த மற்றொரு நபரையும் கைவிளங்கிட்டு போலீஸ் அழைத்துச்சென்றது. தாடி வைத்த நபருக்கும், இரண்டாவது நபருக்கும் தொடர்பு உள்ளதாக என்று தெரியவரவில்லை. 

    • கலிபோர்னியாவில் வாழும் தமிழர்கள் விமான நிலையத்தில சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோவில் நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 19 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 27-ந்தேதி இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

     

    அமெரிக்கா சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கலிபோர்னியாவில் வாழும் தமிழர்கள் விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். 

    • வறுமை ஒழியவில்லை வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
    • எல்லாமே ஏமாற்று வேலையாக இருக்கிறது.

    மதுரை:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதி பேரையூர் பேரூர் அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பேரையூர் பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது

    இதில் மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி பேசியதாவது:-

    அமெரிக்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போவதனால் கவலையில்லை. அவர் போவதால் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படுமா என்பதுதான் தமிழ்நாட்டின் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    அதன் மூலமாக வேலை வாய்ப்பு வந்துவிட்டது, முதலீடு வந்துவிட்டது எனக் கூறுகிறார்கள் தொழிற்சாலைகள் எல்லாம் பெருகிவிட்டதாக கூறுகிறார்கள்.

    ஆனால் வறுமை ஒழியவில்லை வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை வைத்திருக்கிறார்கள். முதல்வர் என்று சொன்னால் மக்களோடு தான் இருக்க வேண்டும்.

    மு.க.ஸ்டாலின் இங்கிருந்து வெளிநாடு சென்று இங்கிருந்து தொழிலதிபர்களை வெளிநாட்டுக்கு வரச்சொல்லி அங்கே இருவரும் கையெழுத்து போட்டு போஸ் கொடுக்கிறார்கள். வெளிநாட்டு தொழில் முதலீடு கிடைத்தது என்று இரண்டு பேரும் சொல்வார்கள் .

    இங்கே தானே இருந்தீர்கள் இங்கே முடித்து இருந்தால் அரசிற்கு செலவாவது மிச்சமாய் இருக்கும் எல்லாமே ஏமாற்று வேலையாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆராய்ச்சி செய்து, உரிய விளக்கத்துடன் பதிலளிக்கும்படி அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது.
    • அதில் கேட்கப்பட்ட கேள்விகளைக் கண்ட மாணவர்கள் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் வீட்டுப்பாடம் செய்து வரும்படி அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது.

    அந்த அசைன்மென்டில் ஆராய்ச்சி செய்து, உரிய விளக்கத்துடன் பதிலளிக்கும்படி சில கேள்விகள் கொடுக்கப்பட்டன.

    அதில் கேட்கப்பட்ட கேள்விகளைக் கண்ட மாணவர்களின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதில் இடம்பெற்ற கேள்விகளை ஒரு மாணவியின் தாயார் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அது சர்ச்சையாக மாறியது.

    அதில் இடம்பெற்ற கேள்விகள் பின்வருமாறு:

    உலகம் உருவானது எப்படி? அதனை உருவாக்கியது யார்? எப்போது தீமை தோன்றியது. இப்போதும் உள்ளதா?

    ஒழுக்கம் என்றால் என்ன? மதம் என்றால் என்ன? கிறிஸ்துவம் என்றால் என்ன?

    கிறிஸ்தவராக இருப்பதன் அர்த்தம் என்ன? கடவுள் இருக்காரா? இல்லையா? சாத்தான் இருப்பது உண்மையா? நல்லது அல்லது கெட்டது அல்லது இரண்டையும் மக்கள் ஏற்றுக்கொண்டனரா?

    என இதுபோன்ற 10 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.

    ஒக்லஹாமாவில் உள்ள உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட அசைன்மென்ட். உலக வரலாற்றில் கேட்கப்பட்ட கேள்விகள். இதனை ஆராய்ச்சித்தாள் என்கின்றனர். இது மிகவும் அற்பத்தனமானது என பதிவிட்டுள்ளார்.

    அவரது இந்தப் பதிவைக் கண்ட சமூகதள வாசிகள் அப்பள்ளியையும், கேட்கப்பட்ட கேள்விகளையும் விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

    இணைய தளத்தில் பேசுபொருளான நிலையில், இந்தக் கேள்விகள் குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என அப்பள்ளி நிர்வாகம் விளக்கமளித்தது.

    • பாஜக தலைவர் அண்ணாமலையின் நோக்கமும், குறிக்கோளும் இனிதே நிறைவேற உளமார வாழ்த்துகிறேன்.
    • பொறுப்புமிக்க, அதிகாரம் நிறைந்த அரசுப் பணியை உதறிவிட்டு தேசப்பணி ஆற்ற விரும்பியவர்.

    சென்னை:

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து படிப்பதற்காக நாளை லண்டன் செல்லும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இதில் நடிகர் சரத்குமார் கூறியிருப்பதாவது:-

    பாஜக தலைவர் அண்ணாமலையின் நோக்கமும், குறிக்கோளும் இனிதே நிறைவேறி, வெற்றியோடும், மனநிறைவோடும் தாயகம் திரும்ப வேண்டுமென்று உளமார வாழ்த்துகிறேன்.

    பொறுப்புமிக்க, அதிகாரம் நிறைந்த அரசுப் பணியை உதறிவிட்டு தேசப்பணி ஆற்ற விரும்பியவர்.

    மூத்த நிர்வாகிகளை அரவணைத்து, மிகக் குறுகிய காலத்தில்,தமிழகத்தில் பாஜக எனும் கட்சியை முக்கிய எதிர்கட்சியாக அறியப்படச் செய்தவர்.

    இவைகள் மட்டுமல்லாமல் தமிழக அரசியல் களத்திலும், மக்கள் மனதிலும் மிக முக்கியமான இடத்தை இந்த இளம்வயதிலேயே ஈர்த்து வைத்திருப்பவர்.

    நேர்மையிலும், உழைப்பிலும், தன்னம்பிக்கையிலும், தேசப்பணியிலும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழும் அன்புச் சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களது வெளிநாட்டுப் பயணமும், கல்வியும் வெற்றிகரமாக அமைய வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

    தமிழ் அன்னையை வணங்குவோம்!

    பாரத அன்னையை போற்றுவோம்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளது விண்வெளி வீரர்களின் வேலையில் உள்ள ஆபத்தின் அளவை உணர்த்தும்.
    • இத்தகு கடினமான வேலையில் ஈடுபடும் நாசா விண்வெளி வீரர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்ற கேள்வியும் பலருக்கு இருக்கிறது

    விண்வெளி அறிவியலில் கோலோச்சும் உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனமாக நாசா உள்ளது. நிலவில் முதல் முறையாகக் கால்பதித்து முதல் விண்வெளி ரகசியங்களை அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் வெளிக்கொணரும் நாசாவில் விஞ்ஞானியாக, விண்வெளி வீரராக வேலை பார்ப்பது என்பது சிறுவயது முதலே அறிவியலில் ஆர்வம் கொண்டது பலரது விருப்பமாக இருக்கும். அதிலும் விண்வெளி வீரர் வேலை என்பது மிகவும் துணிச்சல் மற்றும் கடின உழைப்பைப் கோரும் வேலையாக உள்ளது.

    கல்பனா சாவ்லா தொடங்கி சுனிதா வில்லியம்ஸ் வரை இந்தியர்களும் நாசாவில் முக்கிய பங்காற்றி உள்ளனர். பூமிக்கு திரும்புவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளது விண்வெளி வீரர்களின் வேலையில் உள்ள ஆபத்துகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

     

    இத்தகு கடினமான வேலையில் ஈடுபடும் நாசா விண்வெளி வீரர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்ற கேள்வியும் பலரிடத்தில் எழுந்திருக்கக் கூடும். அந்த வகையில் நாசா அமைப்பின் இணையத்தில் உள்ள 2024 ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, விண்வெளி வீரர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு இந்திய மதிப்பில் 1.27 கோடி ரூபாய் [$152,258] சம்பளமாக வழங்கப்படுகிறது. அதாவது விண்வெளி வீரர்களுக்கு சுமார் 10 லட்சத்துக்கு 58 ஆயிரம் ரூபாய் மாத சம்பளமாகக் கிடைக்கிறது. ரேங்க் படிநிலையை பொறுத்து இந்த தொகை மாறுபடும். மேலும்  இந்தியாவில் விண்வெளி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 4 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

    ×