search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    • இந்த வாரத்தில் ஈரான், இஸ்ரேல் மீதான தாக்குதலை முன்னெடுக்கும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
    • எங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எங்களின் உரிமை என்று ஈரான் அதிபர் மசூத் தெரிவித்துள்ளார்

    ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட சம்பவம் இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையில் போர் மூலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு, ஏமன் நாட்டில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் என இஸ்ரேலின் பாலஸ்தீன தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈரானின் புதிய அதிபராகத் தேர்வான சீர்திருத்தக் கட்சியைச் சேர்ந்த மசூத் பெசஸ்க்கியானின் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக ஈரான் வந்த இஸ்மாயில் ஹனியே அவரது வீட்டில் வைத்து கொல்லப்பட்டார். இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஈரான் குற்றம்சாட்டியது. இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தெரிகிறது. நேரடித் தாக்குதலுக்கு அதிபர் மசூத் மற்றும் ஈரான் புரட்சிகர படையினர் இடையில் கருத்து வேறுபாடு இருந்தாலும், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.

     

     

    இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வாரத்தில் ஈரான், இஸ்ரேல் மீதான தாக்குதலை முன்னெடுக்கும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. எனவே இஸ்ரேலை பாதுகாக்க நீர்மூழ்கிகளையும், ஏர்கிராப்ட்களையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்துள்ளது.

     

     

    மேலும் அமெரிக்காவுடன் சேர்ந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய மேற்கு நாடுகள் இணைந்து ஈரானை எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மீதான ராணுவ நடவடிக்கை, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், பிராந்தியங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் மேற்கூறிய  நாடுகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டும், தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு பேசியும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் எங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எங்களின் உரிமை என்று ஈரான் அதிபர் மசூத் பேசஸ்கியான் உறுதிபட தெரிவித்துள்ளார். 

     

    • ஒலிம்பிக்கில் பதக்க பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும்.
    • கடைசிப் போட்டியில் தங்கம் வென்ற அமெரிக்கா பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தினர்.

    ஒலிம்பிக் தொடரின் பதக்க பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும். அதற்கு அடுத்து வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கல பதக்கங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில், பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு சீனா இடையே கடும் போட்டியை தந்தது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பதக்க பட்டியல் விவரம் வருமாறு:

    40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் என 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

    40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களுடன் சீனா 2-வது இடம் பிடித்தது.

    20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என 45 பதக்கங்களுடன் ஜப்பான் 3-வது இடத்தில் உள்ளது.

    18 தங்கம், 19 வெள்ளி, 16 வெண்கலம் என 54 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 4வது இடம் பிடித்துள்ளது.

    16 தங்கம், 26 வெள்ளி, 22 வெண்கலம் என 64 பதக்கங்களுடன் பிரான்ஸ் 5வது இடத்தில் உள்ளது.

    பாகிஸ்தான் ஒரே ஒரு தங்க பதக்கம் வென்று 62-வது இடத்தில் உள்ளது.

    இந்திய அணி ஒரு வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடன் 71-வது இடத்தை பிடித்துள்ளது.

    இந்தியா 5 வெண்கல பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஒரு வெள்ளி பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதலில் இந்தியா 3 வெண்கல பதக்கங்களை வென்றது. ஆண்கள் ஹாக்கியில் மற்றொரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. மல்யுத்தத்தில் ஒரு வெண்கலம் கிடைத்தது. இதையடுத்து, 6 பதக்கங்களுடன் இந்தியா 71-வது இடத்தில் உள்ளது.

    • கென்யா வீராங்கனை பெய்த் கிபியெகான் ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
    • 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனையை முறியடித்து அமெரிக்க அணியே புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற ஆண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்க அணி புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தது.

    கிறிஸ்டோபர் பெய்லி, வெரோன் நார்வுட், புரூஸ் டெட்மான், ராய் பெஞ்சமின் ஆகியோர் அடங்கிய அணி பந்தய தூரத்தை 2 நிமிடம் 54.43 வினாடியில் கடந்து தங்கம் வென்றது.

    இதற்கு முன்பு 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அமெரிக்க அணி 2 நிமிடம் 55.39 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனையை முறியடித்து அமெரிக்க அணியே புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

    போஸ்ட்வானா அணிக்கு வெள்ளியும் (2 நிமிடம் 54.53 வினாடி), இங்கிலாந்து அணிக்கு (2 நிமிடம் 55.83 வினாடி) வெண்கலமும் கிடைத்தன.

    பெண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் அமெரிக்கா தங்கம் வென்றது. அந்த அணி பந்த தூரத்தை 3 நிமிடம் 15.17 வினாடியில் கடந்தது. நெதர்லாந்து 3 நிமிடம் 19.50 வினாடியில் கடந்து வெள்ளியும், இங்கிலாந்து 3 நிமிடம் 19.72 வினடியில் கடந்து வெண்கலமும் பெற்றன.

    பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனை பெய்த் கிபியெகான் ஒலிம்பிக் சாதனை படைத்தார்.

    அவர் பந்தய தூரத்தை 3 நிமிடம் 51. 29 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இதற்கு முன்பு அவர் 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் 3 நிமிடம் 53.11 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. பெய்த் கிபியெ கான் தனது சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். அவர் தான் உலக சாதனையாளாராகவும் உள்ளார்.

    ஆஸ்திரேலிய வீராங்கனை வீராங்கனை ஜெசிகா ஹல் 3 நிமிடம் 52.56 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், இங்கிலாந்தை சேர்ந்த ஜார்ஜியா பெல் 3 நிமிடம் 52.61 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினார்கள்.

    ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் கென்ய வீரர் இம்மானுவேல் வன்யோனி 1 நிமிடம் 41. 19 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். கனடாவை சேர்ந்த மார்கோ அரோப் 1 நிமிடம் 41.20 வினாடியில் கடந்து வெள்ளியும், அல்ஜீரியா வீரர் டிஜ்மெல் செட் ஜாட்டி 1 நிமிடம் 41.50 வினாடியில் கடந்து வெண்கலமும் பெற்றனர்.

    ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் நியூசிலாந்து வீரர் கெர்ஹமிஸ் 2.36 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். அமெரிக்க வீரர் ஷெல்பைக்கு வெள்ளியும், கத்தாரை சேர்ந்த பார்சிமுக்கு வெண்கலமும் கிடைத்தன.

    ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் நார்வேக்கு தங்கம் கிடைத்து. அந்நாட்டை சேர்ந்த ஜேக்கப் இன்ஜெப்ரிஸ்டன் பந்தய தூரத்தை 13 நிமிடம் 13.66 வினாடியில் கடந்தார். ரொனால்டு கெமோய்க்கு வெள்ளியும் (கென்யா, 13 நிமிடம் 15.04 வினாடி), கிராண்ட் பிஷ்சருக்கு (அமெரிக்கா, 13 நிமிடம் 15.13 வினாடி) வெண்கலமும் கிடைத்தன.

    பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, செக்குடியரசு அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் கிடைத்தன.

    பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மசாய் ரஸ்சல் 12.33 வினாடியில் கடந்து தங்கம் வென்றார்.

    பிரான்சை சேர்ந்த சைரனா சம்பா வெள்ளி பதக்கமும் (12.34 வினாடி), போர்டோரிகோ வீராங்கனை ஜேஸ்மின் கேமாச்சோ (12.36 வினாடி) வெண்கலமும் பெற்றனர்.

    • குஜராத் அரசுத் தொடக்கப்பள்ளியில் பாவனா பட்டேல் ஆசிரியராக உள்ளார்.
    • வருடத்திற்கு ஒரு மாதம் மட்டுமே பள்ளிக்கு வருவதாகவும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் புகார் அளித்துள்ளார்.

    குஜராத்தில் அரசுத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் அமெரிக்காவில் இருந்தபடி கடந்த 8 ஆண்டுகளாக மாதந்தோறும் அரசு சம்பளம் வாங்கி வந்தது அம்பலமாகியுள்ளது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பஞ்சா என்ற கிராமத்தில் இயங்கி வரும் அரசுத் தொடக்கப்பள்ளியில், பாவனா பட்டேல் ஆசிரியராக உள்ளார்.  

    ஆனால் பாவனா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் குடியேறிவிட்டதாகவும் வருடத்திற்கு ஒரு மாதம் மட்டுமே பள்ளிக்கு வருவதாகவும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பருல் மெஹ்தா மாவட்ட கல்வித்துறை அதிகாரியிடம் புகார் அளித்தார்.

     

    அந்த புகாரில், அமெரிக்காவில் குடியேறிய பாவனா பட்டேல், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மாத சம்பளத்தை பெற்று வருவதாகவும், அவர் முறையாக பள்ளிக்கு வராததால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பிரபுல் பன்சேரியா உறுதியளித்துள்ளார்.   

    • வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தபின் போராட்டக்காரர்கள் சொத்துகளை சேதப்படுத்தி வருகின்றனர்.
    • இந்து கோவில்கள், வீடுகள், வணிக தொடர்பான இடங்கள் தாக்கப்பட்டு வருகின்றன.

    வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக கடந்த மாதம் 2-வது வாரம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. பின்னர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அறிவிக்க போராட்டம் தணிந்தது. அதன்பின் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டம் ஆளும் அவாமி லீக் கட்சிக்கு எதிராக தொடங்கியது. பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினர். போராட்டம் வன்முறையாக வெடித்து கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனால் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    ஷேக் ஹசீனா கடந்த திங்கட்கிழமை ராஜினமா செய்தார். அதன்பின் போராட்டக்காரர்கள் அவாமி லீக் கட்சி தலைவர்களின் சொத்துகளை நாசப்படுத்த தொடங்கினர். அங்கு வாழும் இந்துக்களை தாக்க தொடங்கினர். இதனால் வன்முறை நின்றபாடில்லை. வங்கதேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளனர். இவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பிறகு, வன்முறைக்கு 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உதவ வேண்டும் என அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களாக அமெரிக்கா வாழ் இந்தியர்கள் தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனுக்கு கடிதம் எழுத்தியுள்ளார்.

    ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு ஆகஸ்ட் 5-ந்தேதி கவிழ்ந்தது. அதில் இருந்து வங்காளதேசத்தின் 52 மாவட்டங்களில் 205 தாக்குதல் சம்பவங்கள் மைனாரிட்டி இந்துக்களுக்கு எதிராக நடைபெற்றுள்ளன. ஆயிரக்கணக்கான வங்கதேச இந்துக்கள் வன்முறையில் இருந்து தப்பிக்க அண்டை நாடான இந்தியாவுக்கு தப்பியோட முயற்சி செய்கிறார்கள்.

    வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முஹம்மது யூனுஸ் பதவியேற்றுள்ள நிலையில், வன்முறை மற்றும் உள்நாட்டு அமைதியின்மை முடிவுக்கு வருவதை உறுதிசெய்ய, இந்தப் புதிய அரசாங்கத்திற்கு நெருக்கமாக பணியாற்றும் கடமை அமெரிக்காவுக்கு உள்ளது.

    துன்புறுத்தப்பட்ட வங்கதேச இந்துக்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினருக்கு அகதிகள் என்ற தற்காலிக பாதுகாக்கப்பட்ட அந்தஸ்தை வழங்குமாறு பிடன் நிர்வாகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன் என மிட்சிகன் பாராளுமன்ற உறுப்பினரான தானேதர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ஏராளமான இந்து கோவில்கள், வீடுகள், வணிகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவாமி லீக் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த இரண்டு இந்து தலைவர்கள் கொல்லப்பட்டுள்னர்.

    • ஒலிம்பிக்கில் பதக்க பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும்.
    • இந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பதில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர்.

    ஒலிம்பிக் தொடரின் பதக்க பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும். அதற்கு அடுத்து வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கல பதக்கங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில், பதக்க பட்டியலில் முதலிடம் பிடிப்பதில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    தற்போது பதக்க பட்டியலில் 33 தங்கம், 39 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என 111 பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

    33 தங்கம், 27 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 83 பதக்கங்களுடன் சீனா 2-வது இடத்திலும், 18 தங்கம், 16 வெள்ளி, 14 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் உள்ளது.

    இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடன் 69-வது இடத்தை பிடித்துள்ளது.

    அதேசமயம், பாகிஸ்தான் ஒரே ஒரு தங்க பதக்கம் வென்று 59-வது இடத்தில் உள்ளது.

    இந்தியா 5 வெண்கல பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஒரு வெள்ளி பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதலில் இந்தியா 3 வெண்கல பதக்கங்களை வென்றது. ஆண்கள் ஹாக்கியில் மற்றொரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. மல்யுத்தத்தில் ஒரு வெண்கலம் கிடைத்தது. இதையடுத்து, 6 பதக்கங்களுடன் இந்தியா 69-வது இடத்தில் உள்ளது.

    • இந்த வெடிகுண்டுகள் அழுத்தத்தினால் வெடிக்கக்கூடியவை.
    • வெடி விபத்து நடப்பதை அருகில் இருந்து பார்த்துவிட்டு அவர் சென்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கழிவறை இருக்கைகளுக்கு அடியில் குண்டுகள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாஷ் டப் கார் வாஷிங் நிறுவனத்தின் கிளை நிலையங்களில் உள்ள கழிவறைகளில் சமீபமாக அடுத்தடுத்து சிறிய அளவிலான வெடி விபத்துகள் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகே, நிலையங்களில் உள்ள கழிவறை இருக்கைகளில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

     

    இந்த வெடிகுண்டுகள் அழுத்தத்தினால் வெடிக்கக்கூடியவை.அதாவது, யாரேனும் கழிவறை இருக்கைகளில் அமர்ந்து வெடிகுண்டுக்குத் தேவையான அளவு ஏற்படும் பட்சத்தில் அவை வெடிக்கும். இவை சிறிய அளவிலான சேதத்தையே ஏற்படுத்துவன. இதுபோன்ற வெடிவிபத்துகள் கடந்த ஜூலை 19, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தொடர்ந்து நடந்துள்ளது. சமீபத்திய வெடி விபத்தில் பெண் கஸ்டமர் ஒருவர் காயமடைந்தார்.

     

    இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் நபர் ஒருவர் சந்தேகத்துக்கிட்டமான வகையில் அனைத்து கிளைகளுக்கும் வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசில் வாஷ் டப் புகார் அளித்தது. இதனைத் தொடர்ந்து விசாரணையைத் தொடங்கிய போலீஸ், அல்டென் என்ற நபரை கைது செய்தது. அல்டென் அந்நிறுவனத்தின் வாடிக்கை கஸ்டமர் என்றும், வெடி விபத்து நடப்பதை அருகில் இருந்து பார்த்துவிட்டு அவர் சென்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. 

     

    • லண்டனில் தற்காலிகமாக குடியேற ஷேக் ஹசீனா அனுமதி கேட்டுள்ளார்.
    • இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.

    வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது இந்தியாவில் உள்ளார்.

    லண்டனில் தற்காலிகமாக குடியேற அனுமதி கேட்டுள்ளதாக தெரிகிறது. அனுமதி கிடைத்தால் லண்டனில் அடைக்கலம் புகுவார்.

    ஆனால் இங்கிலாந்தின் குடியேற்ற சட்டத்தின்படி தனிநபர் இங்கிலாந்துக்கு பயணம் செய்து அடைக்கலம் அல்லது தற்காலிக தஞ்சம் கோர முடியாது. ஆனாலும் முறையாக அடைக்கலம் கோரிக்கை குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
    • குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளராகக் களமிறங்குகிறார்.

    அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளராகக் களமிறங்குகிறார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

    முதலில் அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்த நிலையில் அவரது உடல் மற்றும் மன நிலையில் உள்ள தடுமாற்றம் விமர்சனத்துக்குள்ளானதால் கடந்த மாதம் அதிபர் ரேஸில் இருந்து விலகினார்.

    இதனை தொடர்ந்து ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக டிம் வால்ஸ்டை பிரதமர் வேட்பாளர் கமலா ஹாரீஸ் அறிவித்தார்.

    அமெரிக்காவின் மின்னெசோட்டா மாகாண ஆளுநராக டிம் வால்ஸ் (60) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது
    • ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன

    பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனிடையே, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 31ம் தேதி கொல்லப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கு மற்றும் இஸ்ரேலுக்கிடையில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இதற்கிடையில் லெபனானில் செய்யப்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய தளங்களின் மீது ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

    இந்த குழப்பங்களுக்கு மத்தியில் மற்றொரு மத்திய கிழக்கு நாடான ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளம் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைத்தளத்தைக் குறிவைத்து இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை ஈரான் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

     

    • கடந்த மாதம் 15ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது.
    • மருத்துவ காரணங்களுக்காக விமானம் தரையிறக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண்ணின் தலையில் பேன்கள் இருப்பதாக சக பயணிகள் கூச்சலிட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த மாதம் 15ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது. ஆனால் மருத்துவ காரணங்களுக்காக விமானம் தரையிறக்கப்பட்டதாக அந்நிறுவனம் அப்போது தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், விமான நிறுவனம் கூறிய காரணம் உண்மையில்லை என விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

    இந்த பேன் பிரச்னைக்கு பிறகு அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் 12 மணி நேரம் கழித்து மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா பயணம்.
    • 15 நாட்கள் பயணத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க இந்த மாதம் அமெரிக்கா செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்கப் பட்டிருந்தது.

    மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அவர் அமெரிக்கா செல்வதற்கு முறைப்படி அனுமதி வழங்கி விட்டது. 15 நாட்கள் அமெரிக்கா சென்று வரும் வகையில் முதலமைச்சரின் பயணத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    அமெரிக்காவில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ளார். அத்துடன் அமெரிக்கா வாழ் தமிழர்களை சந்திப்பதுடன் அவர்களையும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுக்க உள்ளார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகளும் உடன் செல்ல உள்ளனர்.

    அமெரிக்காவில் பயணத்திட்டம் என்னென்ன என்பது பற்றியும் மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது. இதைத்தொடர்ந்து அமெரிக்க தூதரகத்தில் விசா அனுமதியும் கிடைத்து விட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 22- ந் தேதி அமெரிக்கா செல்வார் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் இப்போது அவர் 27-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) அமெரிக்கா புறப்படுவார் என்று தகவல் தெரிய வந்துள்ளது.

    ×