என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 97462"
- பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படம் 'சியான் 61'.
- இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் படம் 'சியான் 61'. இந்த படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா, நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார்கள்.
சியான் 61
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் இதன் டெஸ்ட் ஷூட் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், 'சியான்61' படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சியான் 61
அந்த பதிவில், "சியான்61 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளது. இது ஒரு கில்லர் ரைடாக இருக்கப்போகிறது. இசையை பொருத்தவரை மிகவும் சுவாரஸ்யமான கதை" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
#chiyaan61 @beemji @StudioGreen2 …. Update very very soon 🔥🔥🔥 .. going to be a killer ride … musically a very interesting project to work on….. exciting times ahead 🔥
— G.V.Prakash Kumar (@gvprakash) October 22, 2022
- இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘சியான் 61’.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்றது.
சியான் ௬௧ பூஜை
இதைத்தொடர்ந்து, பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. 'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா, நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் இதன் டெஸ்ட் ஷூட் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், சியான் 61 படத்தின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பசுபதி
அதன்படி, இந்த படத்தில் நடிகர் பசுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும், சியான் 61 படத்திற்கு 'கோல்டு' என டைட்டில் வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘சியான் 61’.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்றது.
இதைத்தொடர்ந்து, பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. 'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா, நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் இதன் டெஸ்ட் ஷூட் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் சியான் 61 படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழில் மாஸ்டர், பேட்ட, மாறன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்த மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- தில், காசி, ஜெமினி, சாமுராய், தூள், சாமி, பிதாமகன், அந்நியன், தெய்வதிருமகள், ஐ என பல வித்யாசமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர் விக்ரம்.
- இவர் திரைத்துறைக்கு அறிமுகமாகி கிட்டத்தட்ட 32 வருடங்கள் ஆகியுள்ளது.
1990-ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் விக்ரம். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்த விக்ரம், இரட்டை இயக்குனர்களான ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் வெளியான உல்லாசம் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் தடம் பதித்தார். இதனை தொடர்ந்து பாலா இயக்கிய சேது படத்தில் இவரின் நடிப்பு மூலம் தமிழ் திரையுலகினரை திரும்பி பார்க்க செய்தார். தில், காசி, ஜெமினி, சாமுராய், தூள், சாமி, பிதாமகன், அந்நியன், தெய்வதிருமகள், ஐ என பல வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து இவரின் நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து தனக்கான இடத்தை பிடித்தார்.
விக்ரம் நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடகர் என பண்முகத்தன்மை கொண்டவர். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். இப்படத்தின் புரோமஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட விக்ரம் பேசியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. அதில், நான் படங்களில் நடிப்பதற்கு முன்பு சோழா என்ற ஒரு விளம்பரப் படத்தில் நடித்திருந்தேன். இப்பொழுது சோழ நாட்டின் இளவரசனாக நடித்திருக்கிறேன் என்று நெகிழ்ச்சியோடு பகிர்ந்திருந்தார். விக்ரம் திரைத்துறைக்கு அறிமுகமாகி 32 வருடங்களின் உழைப்பை சமூக வலைத்தளத்தில் பலரும் வெகுவாக பாராட்டினர்.
இந்நிலையில் விக்ரம் திரைத்துறைக்கு அறிமுகமாகி 32 வருடங்களை ரசிகர் ஒருவர் ஒரு சிறிய வீடியோ தொகுப்பாக உருவாக்கி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை பகிர்ந்த விக்ரம், இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெரும் முயற்சி மட்டுமே. இந்த 32 வருடத்துக்கு நன்றி. இந்த வீடியோவை தொகுத்த நபருக்கு நன்றி என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெரும் முயற்சி மட்டுமே. 💛 இந்த 32 வருடத்துக்கு நன்றி. & Abhinandan KK. Thank you for your lovely edit. pic.twitter.com/fv2Pz56IUL
— Aditha Karikalan (@chiyaan) October 17, 2022
- இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘சியான் 61’.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
பா. ரஞ்சித்
இதில் விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, பா. ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது. 'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா, நீலம் ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.
சியான் 61 படக்குழு
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில், 'சியான் 61' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் இதன் டெஸ்ட் ஷூட் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் வெற்றியைத் தொடர்ந்து 'சியான் 61' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
- 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வலிமை, பீஸ்ட், விக்ரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்கள் வெளியானது.
- இந்த படங்களில் முதல் நாள் அதிகபடியாக வசூல் செய்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கான வருகையை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து திரையரங்குகளில் கொண்டாடுவர். அந்த வகையில் ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சூர்யா என நடிகர்களின் படங்களை முதல் நாள் திரையரங்குகளில் விழாக்கோலம் போல மேளம் அடித்து பட்டாசு வெடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி தீர்ப்பார்கள். அதன்படி இந்த வருடம் திரையரங்கில் அஜித்தின் வலிமை படமும், விஜய்யின் பீஸ்ட் படமும், கமல் விஜய் சேதுபதியின் விக்ரம் படமும், திரைப்பிரபலங்கள் பலரும் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படமும் வெளியானது.
இந்நிலையில் 2022ல் திரையரங்குகளில் வெளியாகி தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் செய்த படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பீஸ்ட் படம் ரூ.39 கோடியும், வலிமை படம் ரூ.28 கோடியும், பொன்னியின் செல்வன் ரூ.26 கோடியும், விக்ரம் திரைப்படம் ரூ.22 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வெளியான பீஸ்ட் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளதை விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார்.
- அதன்பின்னர் விக்ரம் அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கும் 'சியான் 61' படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விக்ரம் அடுத்து நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கங்கனா ரணாவத் நடிக்கும் சீதா (The Incarnation - Sita) படத்தில் விக்ரம் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அலௌகிக் தேசாய் இயக்கும் இப்படத்திற்கு பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.
- இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம்.
- இப்படம் டிசம்பரில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
துருவ நட்சத்திரம்
இப்படத்தின் வேலைகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில பிரச்சினைகளால் தள்ளிப்போனது.
இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளதாகவும் அதற்காக விக்ரம் 15 நாள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.
துருவ நட்சத்திரம்
இந்நிலையில், 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் பணிகளை முடித்து இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் விக்ரம் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார்.
- நடிகர் விக்ரம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலனாக வரும் விக்ரம் படத்தின் மிக சரியான தேர்வு என்றும் தனது திறமையான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் பலரும் அவர்களின் விமர்சனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ''நன்றி.. தேங்க்ஸ்.. சுக்ரியா.. நன்னி.. தன்யவாத்.. இப்படி எந்த மொழியில் சொன்னாலும், கேட்பதற்கும் உணர்வதற்கும் நன்றாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு ஆதித்த கரிகலானுக்கு கிடைத்த அந்த ஆக்ரோஷமான பின்னூட்டம் ரொம்ப நன்றி.
நான் நிறைய படங்களில் நடித்திருக்கேன்; நிறைய நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருக்கேன். எப்போதும் எல்லா படங்களையும், என் படம், என்னுடைய கதாபாத்திரம் என பெருமைப்படுவேன். எல்லோரும் இது எங்களுடைய படம் என கொண்டாடுவது எனக்கு பெரிய மகிழ்ச்சி. படக்குழு உள்ளிட்டவர்களுக்கும் இயக்குநர் மணிரத்னத்துக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.
- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த அனுபவம் குறித்து விக்ரம் பேசியுள்ளார்.
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை வெளியாவதை தொடர்ந்து படக்குழுவினர் நிருபர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் கூறியதாவது, இந்தியா முழுவதும் நிறைய வரலாற்று கதைகள் இருக்கிறது, இது போன்ற கதைகளில் நான் நடிக்க மாட்டேனா என்ற கனவுகளும் இருந்தது; எனக்கு பிடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் அமைந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆதித்த கரிகாலனின் காதல் எனக்குள் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது; அவனுடைய காதலுக்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். அதை உணர்ந்து தான் நான் நடித்தேன். பொன்னியின் செல்வனில் இது சிறந்த காதல் காவியமாக அமையும் என கூறினார்.
- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
- இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
இதனிடையே நடிகர்-நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் சரித்திர காலத்து ஆடை ஆபரணங்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களை தங்கள் வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். நேற்று நடிகர் பார்த்திபன் படப்பிடிப்பு தளத்தில் கண்ணாடி அணிந்து ஐஸ்வர்யாரா மற்றும் சரத்குமாருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு ஐஸ்வர்யாராயை கவிதை வடிவில் பாராட்டியிருந்தார்.
இந்த புகைப்படத்திற்கு கீழே ஒரு ரசிகர் சார் எனக்கு ஒரு சின்ன ஹாய் சொல்லுங்க என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பார்த்திபன் அந்த ரசிகரை கலாய்க்கும் வகையில் "சின்ன ஹாய்" என்று பதிவிட்டிருந்தார். இதனை ஒரு மீம் பக்கத்தில் குறிப்பிட்டு இந்த புகைப்படத்துடன் ஒரு மீம் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் அந்த மீம் புகைப்படத்தை இணைத்து நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார். அதில், மீன்ல விரால் நல்லது, மீம்ஸ் வைரல் ஆவது நல்லது! (எடிட்டர் ஹரீஷ் அனுப்பியதால் வந்த தத்துவமிது) இங்கு நல்ல மீம்கள் விற்கப்படும்! என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
- இப்படத்தின் புரமோஷனுக்காக படக்குழு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொன்னியின் செல்வன்
இதில் நடிகர் விக்ரம் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், "இந்த படத்தில் எனக்கு இருக்கும் ஒரு சோகம் இதிலும் ஐஸ்வர்யா ராய் எனக்கு கிடைக்கவில்லை.
ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் நடித்த 'ராவணன்' படத்தில் ஐஸ்வர்யா ராய் மீது காதல் கொள்ளும் கதாபத்திரத்தில் நடித்திருந்தாலும் கடைசியில் ராவணன் இறந்துவிடுவார். இதை தொடர்ந்து இந்த முறை 'பொன்னியின் செல்வன்' படத்தில், இணைந்துள்ளோம். ஏன் ஐஸ்வர்யா இப்படி செய்தீர்கள்" என்று ஜாலியாக பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்