search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயில்"

    வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயில் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், தற்போது அவரை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். 

    முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கணேஷ் சந்திரா கையாண்டுள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கே.இ.ஞானவேல் ராஜா கைப்பற்றி உள்ளார். 

    ஜெயில்

    இந்நிலையில், இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    காவலாளியிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் வன சரகருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    ஈரோடு:

    கோபி வரப்பாளையம் அடுத்த எம்மாம்பூண்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் அந்த பகுதியில் உள்ள காவலாளியாக இருந்தார். இரவு பணி செய்ய வேண்டி இருந்ததால் அவர் பாதுகாப்பு பணிக்காக துப்பாக்கி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தார்.

    அவருக்கு துப்பாக்கி வழங்குவது தொடர்பாக விசாரிக்க சத்தியமங்கலம் வன அலுவலகத்துக்கு கடந்த 2-9-2005 அன்று உத்தரவு வந்தது.

    வன சரகராக இருந்த விஸ்வநாதன் இது பற்றி விசாரித்தார். அப்போது துப்பாக்கி வழங்க பாலசுப்பிரமணியத்துக்கு அனுமதி கடிதம் கொடுக்க விஸ்வநாதன் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

    ஆனால் லஞ்சம் கொடுக்க பாலசுப்பிரமணியத்துக்கு விருப்பம் இல்லை. எனவே அவர் இது தொடர்பாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். அதன்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் பாலசுப்பிரமணியம் சத்தியமங்கலம் வன அலுவலகத்துக்கு சென்றார்.

    அந்த பணத்தை வனசரகர் விஸ்வநாதனிடம் கொடுத்தார். அதை விஸ்வநாதன் பெற்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் விஸ்வ நாதனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு ஈரோடு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் மாஜிஸ்திரேட்டு மோகன் இன்று தீர்ப்பு கூறினார்.

    லஞ்சம் பெற்ற வழக்கில் வன சரகர் விஸ்வநாதனுக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், அரசு பணியை முறையாக செய்யாததால் 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு மோகன் தீர்ப்பு கூறினார்.

    இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.
    கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1000-க்கு போதை ஊசி மருந்துகள் விற்பனை செய்து வந்த 4 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
    பெங்களூர் மற்றும் வெளியூர்களில் இருந்து போதை ஊசி மருந்துகள் கோவைக்கு கொண்டு வரப்பட்டு கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி கடந்த ஏப்ரல் 23-ந் தேதி பெங்களூரில் இருந்து போதை ஊசி மருந்து அனுப்பும் அப்துல் ரகுமான்(24), மகேந்திரன்(27), அஜய்(24) ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    கும்பலின் முக்கிய புள்ளியான பெங்களூரை சேர்ந்த ஜாய் இமானுவேல்(28) என்பவரை தேடி வந்தனர். நேற்று அவரையும், அவரது கூட்டாளிகளான கோவை உக்கடத்தை சேர்ந்த முகமது சிஹாப் (22), ஜூல்பிகர் அலி(24), முகமது அனாஸ்(24) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்த கும்பல் பெங்களூர் உள்பட பல்வேறு இடங்களில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளை திருடி, அதை குளுக்கோசில் கலந்து கோவை கொண்டு வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்றது தெரிய வந்தது. ஒரு ஊசியை ரூ.100-க்கு வாங்கி மாணவர்களிடம் ரூ.300-ல் இருந்து ரூ.1000 வரை விற்றுள்ளனர்.

    இவர்கள் யார்-யாருக்கெல்லாம் போதை ஊசிகளை விற்பனை செய்தார்கள்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.
    ×