search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98068"

    • தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
    • குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அண்ணா நினைவு நாளான செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பை பலரும் வரவேற்று வரும் நிலையில், இதற்கு ஆதரவு தெரிவித்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், சொன்னதைச் செய்தார் முதல்வர் உரிமைத்தொகை அறிவித்துவிட்டார். சுயமரியாதையின் மறுபெயர் பணம், சுதந்திரத்தின் மறுபெயர் பணம் ஒரே அறிவிப்பில் பெண்களின் சுதந்திரம் சுயமரியாதை இரண்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். வாழ்த்துவோம் முதல்வரை போகப் போக இதை இந்தியா பின்பற்றும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகதிருவிழா நடைபெற்று வருகிறது.
    • இதில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகதிருவிழா நடைபெற்று வருகிறது. மகளிர் தினவிழாவை முன்னிட்டு நேற்று கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "நான் முதன்முதலில் வாசித்த புத்தகம், ஏழைபடும் பாடு என்ற பிரெஞ்ச் மொழி பெயர்ப்பு நாவலாகும். தேனி அருகே உள்ள கரட்டுப்பட்டியில் லாந்தர் வெளிச்சத்தில் இரவில் படிக்க தொடங்கிய நான் அதிகாலை சேவல் கூவும் நேரத்தில் வாசித்து முடித்தேன். அன்று என் நெஞ்சில் ஏற்பட்ட புத்தக வாசிப்பு என்ற நெருப்பு எனது 70 வயதிலும் எரிமலையாக எழுந்து நிற்கிறது.

    பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழை வாசிக்கவும், எழுதவும், பேசவும், படிக்கவும், பாரம்பரியத்தை அறிந்து கொள்ளவும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். அவர்களுக்கு சொத்து சேர்த்து வைப்பதை விட நல்ல புத்தகங்களை சேர்த்து வையுங்கள். தாயின் வழியாகத்தான் குழந்தைகள் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும். 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா உலக அளவில் புத்தக அச்சடிப்பில் 5-ம் இடத்தில் உள்ளது.

    வேட்டை யுகம், வேளாண்மை யுகம், தொழில் யுகம் ஆகியவற்றை கடந்து தற்போது கல்வி யுகத்தில் இருந்து வருகிறோம். இந்த யுகத்தில் தகுதியுள்ளவர்கள் மட்டுமே தப்பி பிழைக்க முடியும். பற்றவன், கல்லாதவன் என்ற நிலையானது தற்போது தொழில்நுட்பம் கற்றவன், தொழில்நுட்பம் கல்லாதவன் என்று மாறியுள்ளது. வயது முதிர்ந்த காலத்தில் நம்மை நாமே பராமரித்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இதற்கு தயாராக உள்ளவர்கள் மட்டுமே வாழ முடியும். தொழில் நுட்பத்தை மகனிடம் இருந்தும், பேரன் பேத்திகளிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

    தற்போதைய கல்வியுகத்தில் மாணவ-மாணவிகள், பெற்றோர், பொதுமக்கள் என அனைவரும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டும். எழுத்தாளர்களை எந்த குடும்பத்தினரும் ஏற்றுக்கொள்வதில்லை. எழுத்தாளராக இருக்கும் ஆண், பெண் அனைவருமே பாவம். பல தடைகளை தாண்டிதான் இவர்கள் எழுத வேண்டியுள்ளது. எழுத்தாளர்கள் எந்த காலத்திலும் கொண்டாடப்பட்டது கிடையாது.

    பாரதியார், புதுமைப்பித்தன் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு மரியாதை இல்லை. எந்த தேசத்தில் கற்றவர்கள் மதிக்கப்படுகிறார்களோ அங்கு மட்டுமே அறிவுள்ள ஆட்சி நடக்கிறது என்று பொருள். எனவே எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு மரியாதை செய்ய நாம் கற்றுக்கொள்ள வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • உலம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • மகளிர் தின வாழ்த்து தெரிவித்து வைரமுத்து கவிதையின் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான காளி படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.


    வைரமுத்து

    வைரமுத்து

    இன்று உலகம் முழுவதும் மகளிர் தினத்தை கொண்டாடி வரும் நிலையில் மகளிர் தினத்திற்கு வைரமுத்து கவிதையின் வாயிலாக வாழ்த்து கூறியுள்ளார். அதில், மாலையும் நகையும் கேட்கவில்லை பெண்; மதித்தல் கேட்கிறாள் வீடும் வாசலும் விரும்பவில்லை பெண்; கல்வி கேட்கிறாள் ஆடம்பரம் அங்கீகாரம் ஆசைப்படவில்லை பெண்; நம்பிக்கை கேட்கிறாள் கொடுத்துப் பாருங்கள்; அவளே பாதுகாப்பாள் ஆண்களையும். உலக மகளிர் திருநாள் வாழ்த்து என்று பதிவிட்டுள்ளார்.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    • இவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    வைரமுத்து - மு.க.ஸ்டாலின்

    அதில், "தமிழ்நாட்டு முதலமைச்சரின் 70-ஆம் பிறந்தநாளை முன்னிட்டு அவரை முகாம் அலுவலகத்தில் சந்தித்தேன். நீண்டகாலம் வாழவேண்டும்; வாழும்வரை ஆளவேண்டும் என்று வாழ்த்தினேன். பொன்னாடை பூட்டி நான் எழுதிய புத்தகம் கொடுத்தேன் தலைப்பைப் பார்த்ததும் சில்லென்று சிரித்தார், சிகரங்களை நோக்கி". என்று பதிவிட்டுள்ளார்.


    • ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
    • மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் மரணம் அடைந்தார்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95). நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


    பழனியம்மாள் நாச்சியார்

    ஓ.பன்னீர்செல்வம் நேற்று மருத்துவமனைக்குச் சென்று அவரது தாயாரைப் பார்த்து வந்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு விசாரித்தார். தொடர்ந்து ஓபிஎஸ் தாயாருக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் மரணம் அடைந்தார்.

    ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "உங்களைப் போலவே நானும் கலங்குகிறேன். மூத்து முதிர்ந்து உதிர்ந்தாலும் தாய் தாய்தானே. ஒரு முதலமைச்சரைப் பெற்றுக்கொடுத்தோம் என்ற பெருமாட்டியின் பெருமை மறைவதில்லை. என் பரிவும் இரங்கலும் பன்னீர்செல்வம் அவர்களே. எல்லாத் துன்பங்களிலிருந்தும் காலம் உங்களை மீட்டெடுப்பதாகுக" என்று பதிவிட்டுள்ளார்.


    • இந்திய திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் வைரமுத்து.
    • உலம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான காளி படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.

     

    வைரமுத்து

    வைரமுத்து


    இன்று உலகம் முழுவதும் காதலர் தினத்தை கொண்டாடி வரும் நிலையில் காதலர் தினத்திற்கு வைரமுத்து கவிதையின் வாயிலாக வாழ்த்து கூறியுள்ளார். அதில், எந்த நிலையிலும் வரலாம் எந்த வயதிலும் வரலாம் அது ஒன்றல்ல ஒன்றிரண்டு மூன்று நான்கென்று எண்ணிக்கை ஏறலாம். ஆனால், என்னதான் அது என்ற இருதயத் துடிப்புக்கும், எப்போதுதான் நேரும் என்ற உடலின் தவிப்புக்கும் இடைவெளியில் நேருகின்ற துன்பம் குழைத்த இன்பம்தான் காதல். அந்த முதல் அனுபவம் வாழ்க என்று பதிவிட்டுள்ளார்.

    • துருக்கியில் திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தால் துருக்கியில் 5 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ளனர்.

    துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி - சிரியாவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.


    தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 5 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 1 ஆயிரத்து 832 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 726 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது. ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன. வான்தொட்ட கட்டடங்கள் தரைதட்டிவிட்டன. மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன. மாண்டவன் மானுடன்; உயிர் பிழைத்தவன் உறவினன். உலக நாடுகள் ஓடி வரட்டும் கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.


    • மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • கவிஞர் வைரமுத்துவின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர் இந்தி திணிப்பை எதிர்த்தும் தமிழ் மொழியைக்காக்கவும் தங்களது இன்னுயிரை நீத்துள்ளனர்.


    வைரமுத்து

    இந்தநிலையில் அவர்களின் நினைவு போற்றும் விதமாக மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மொழிப்போர் வீரர்களை நெற்றி நிலம்பட வணங்குகிறோம்.

    கண்ணகி மதுரையில் இட்ட நெருப்புக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சுட்டது தமிழுக்காக எங்கள் மறவர்கள் தேகத்தில் மூட்டிக்கொண்ட தீ தான். தேகங்கள் அணைந்துவிட்டன தீ அப்படியே. செந்தீயைத் தீண்டாதே தள்ளிநில் இந்தியே" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ட்ரெண்டாகி வருகிறது.


    • சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது ‘மீ டு’பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
    • தற்போது வைரமுத்துவை சந்தித்த பிரபல நடிகையை எச்சரித்து பதிவிட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகின் பிரபல பாடகியான சின்மயி, சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது 'மீ டு'பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்மீது குற்றம் சாட்டினார். மேலும் கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

     

    அர்ச்சனா

    அர்ச்சனா

    பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சின்மயி, கவிஞர் வைரமுத்துவை சந்தித்த தொலைக்காட்சி நடிகையை எச்சரித்து பதிவிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி நடிகையும், தொகுப்பாளினியுமான அர்ச்சனா சில தினங்களுக்கு முன்பு வைரமுத்துவை சந்தித்த பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அப்பொழுது வைரமுத்து ஆசிர்வாதம் அளிப்பது போன்ற புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.

     

    வைரமுத்துவை சந்தித்த அர்ச்சனா

    வைரமுத்துவை சந்தித்த அர்ச்சனா

    இந்நிலையில் நடிகை அர்ச்சனாவின் பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள சின்மயி, துணைக்கு யாரும் இல்லாமல் வைரமுத்துவை சந்திக்க வேண்டாம் என எச்சரித்து பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.

    • இயக்குனர் கவுதமன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இயக்குனர் கவுதமன் 'கனவே கலையாதே', 'மகிழ்ச்சி' போன்ற படங்களின் மூலம் பிரபலமடைந்தவர். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார்.


    இயக்குனர் கவுதமன்

    இந்நிலையில், இந்த படத்திற்காக பாடலமைக்கும் பணியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் கவுதமன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள கவிஞர் வைரமுத்து இது தொடர்பாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    படக்குழு

    அந்த பதிவில், "ஜி.வி.பிரகாஷ் வீடு கெளதமன் படத்துக்குப் பாட்டுக் கட்டுகிறோம். மகிழ்ச்சியின் இழைகளில் நெய்யப்படுகிறது பாட்டு வஞ்சிக்கொடியே வாடி - நீ வளத்த பொருளத் தாடி பாசத்த உள்ளவச்சுப் பாசாங்க வெளியவச்சு வேசங்கட்டி வந்தவளே வெறும்வாய மெல்லுறியே பத்தே நிமிடத்தில் பாட்டு பிரமாதம் பிரகாஷ்! " என்று பதிவிட்டுள்ளார்.



    • இந்திய திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் வைரமுத்து.
    • வைரமுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க்கிற்கு கவிதையின் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார்.

    ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான காளி படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.

     

    இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க்கிற்கு வைரமுத்து கவிதையின் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார். அந்த பதிவில் "ட்விட்டர் நிறுவனத்தின் புதிய அதிபர் எலான் மஸ்க் அவர்களே, இந்தியாவின் தமிழகத்திலிருந்து வாழ்த்துகிறேன். வலதுசாரி, இடதுசாரி இரண்டுக்கும் ட்விட்டர் ஒரு களமாகட்டும். ஆனால், பொய்ச் செய்திக்கும் மலிந்த மொழிக்கும் இழிந்த ரசனைக்கும் இடம் தர வேண்டாம். உலக நாகரிகத்தை ஒழுங்கு படுத்துங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    எலான் மஸ்க் ட்விட்டரை பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 44 பில்லியன் டாலர்களுக்கு முழுமையாக வாங்கியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

    • இந்திய திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் வைரமுத்து.
    • வைரமுத்து இந்தி திணிப்பு குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான காளி படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.

     

    வைரமுத்து

    வைரமுத்து

    சமீபத்தில் ஐஐடி உட்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் இந்தியில் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

     

    வைரமுத்து

    வைரமுத்து

     

    இந்நிலையில் இந்தி திணிப்பு குறித்து கண்டனம் தெரிவித்து வைரமுத்து பதிவிட்டுள்ளார். அதில், "எங்களை ஆண்ட இஸ்லாமியரோ தெலுங்கரோ மராட்டியரோ வெள்ளையரோ தங்கள் தாய் மொழியை எங்கள் தலையில் திணித்ததில்லை. தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்? அதிகாரமிக்கவர்களே அன்போடு சொல்கிறேன். புலியைத் தொட்டாலும் தொடுக மொழியைத் தொடாது விடுக" என குறிப்பிட்டுள்ளார்.  

    ×