search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • இக்கோவிலில் எமனுக்கு என்று தனி சன்னதி உள்ளது.
    • வருகிற 16-ந்தேதி பாலாலயம் செய்து பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    திருவாரூர்:

    தமிழ்நாடு சட்டமன்ற கூட்ட த்தொடரில் நடைபெற்ற விவாதத்தின் போது நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ. இரா.காமராஜ் பேசியதாவது:-

    வாஞ்சிநாத சுவாமி கோவில்

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீவாஞ்சியத்தில் வாஞ்சிநாத சுவாமி கோவில் உள்ளது. காசியை விட ஒரு வீசம் அதிகம் உள்ளது என்ற பெருமை கோயிலுக்கு உண்டு.

    இக்கோவிலில் எமனுக்கு என்று தனி சன்னதியும் உள்ளது. வயல்வெளிகள், நாணல் புல் செடிகள் உள்ள ஸ்ரீவாஞ்சியத்தில் இதுவரை ஒருவர் கூட பாம்பு கடித்து இறக்கவில்லை என்பது இப்பகுதியின் சிறப்புகளில் ஒன்று.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலின் கும்பாபிஷேக பணிகள் 6.3.22 தேதியில் ரூ.94.65 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டது.

    ஓராண்டாக 20 சதவீதம் கூட பணிகள் நிறைவடை யவில்லை. ஆகவே கும்பாபிஷேக பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

    இக்கோவில் வெளிப்புற சுற்றுச்சுவரை அறநிலையத்துறை சார்பில் கருங்கல் கொண்டு அமைத்து தர வேண்டும்.

    அவலியநல்லூர் சட்டநாத கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தொடங்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

    விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அபய வரதராஜ பெருமாள் கோவில்

    அதுபோல் ஆலங்குடியில் உள்ள அபய வரதராஜ பெருமாள் கோவில் மொட்டை கோபுரமாக உள்ளது. இதற்கு ராஜகோபுரம் அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதில் அளித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோவிலில் வெளிப்புற சுற்றுச் சுவர் உபயதாரர்களால் மேற்கொள்ளப்பட்டு 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

    இந்நேரத்தில் கருங்கல் சுவராக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டால் உபயோதாரர்களிடம் ஆட்சேபம் ஏற்படும்.

    எனவே இக்கோவிலில் மீதமுள்ள இரண்டு சுற்று பிரகாரங்களை கருங்கல் சுவர்களாக அமைக்க கருத்துரு கேட்டு பெற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    அவலியநல்லூர் சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக ரூ .34.30 லட்சம் திட்டம் மதிப்பீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    பணிகள் 16.4.2023 அன்று பாலாலயம் செய்து தொடங்கப்பட உள்ளது.

    இதில் சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் ஆலங்குடி அபய வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது.

    அதிலுள்ள மொட்டை கோபுரம் தொல்லியல் துறை மூலம் ஆய்வுகள் நடத்தி, மொட்டை கோபுரத்தின் உறுதித்தன்மையை அறிந்து அதற்கேற்ற வகையில் ராஜகோபுரம் கட்டி தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு சிற்பக்கலை கிரியைகள் ஆரம்பமாகிறது.
    • நாளை சிலைகள் பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், சிலைகளுக்கு கண் திறப்பு போன்றவை நடக்கிறது.

    கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால் விளையில் இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அன்னை முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

    இதையொட்டி காலை 6.30 மணிக்கு திருமுறை பாராயணமும், கணபதிஹோமமும், தீபாராதனையும், அதைத்தொடர்ந்து யானையை வைத்து பூஜையும், தீபாராதனையும், மதியம் சமபந்தி விருந்தும் நடந்தது. மாலையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து புனித நீர் எடுத்து யானை மீது வைத்து கொண்டு வரும் தீர்த்த சங்கரகரணம் நிகழ்ச்சியும், இரவு சுமங்கலி பூஜை, தனபூஜை, சமபந்தி விருந்து, மகா தீபாராதனையும் நடந்தது.

    இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு திருமுறை பாராயணம், 9 மணிக்கு விநாயகர் பூஜை, சுத்திகலச பூஜை, சுதர்சன ஹோமம், கோபூஜை, தீபாராதனை, பகல் 12 மணிக்கு மகா தீபாராதனையும், 12.30 மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மங்கள வாத்தியமும் 6 மணிக்கு திருமுறை பாராயணமும், இரவு 7.30 மணிக்கு வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், தீபாராதனை, 8 மணிக்கு சமபந்தி விருந்து நடைபெறுகிறது. 8.30 மணிக்கு கும்ப அலங்காரம், காப்புகட்டுதல், யாகசாலை பூஜைகள் தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்றவை நடக்கிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு சிற்பக்கலை கிரியைகள் ஆரம்பமாகிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் சிலைகள் பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், சிலைகளுக்கு கண் திறப்பு போன்றவை நடக்கிறது. 6.30 மணிக்கு மங்கள இசையும், 7.30 மணிக்கு திருமுறை பாராயணமும், அபிஷேகமும், 11.30 மணிக்கு பூர்வாங்க பூஜைகளும் நடக்கிறது.

    நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு திரு முறை பாராயணமும் 5.30 மணிக்கு 4-வது கால யாக சாலை பூஜை, ஜெபம் அக்னி காரியம், மூல மந்திரஹோமம் போன்றவைகள் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு சாந்தி கலச பூஜை, கடம் புறப்பாடு ஆகியவை நடக்கிறது. 9.30 மணிக்கு அன்னை ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் ராஜகோபுரம் மற்றும் அதன் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

    • திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • “கோவிந்தா...கோவிந்தா...” என பக்தி கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயணன் பெருமாள் கோவில் உள்ளது. திவ்விய தேசங்களில் ஒன்றான இந்த கோவில்களில் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    கடந்த சில மாதங்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்தன. இந்தப்பணிகள் முடிவ டைந்ததையொட்டி கும்பாபி ஷேக விழா தொடங்கியது. அதன்படி கடந்த 23-ந்தேதி யாகசாலை பூஜை நடை பெற்றது. பட்டாச்சாரியார் ராமகிருஷ்ணன் தலைமை யில் 60-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகளை நடத்தினர்.

    கடந்த 3 நாட்களாக காலை, மாலைகளில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று (28-ந்தேதி) கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பெரு மாள்-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    நேற்று காலை 8ம் கால யாக பூஜை நிறைவு பெற்றது. அதனைத்தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் சவுமிய நாராயண பெருமாள், திருமாமகள் தாயார், ஆண்டாள் மற்றும் ராஜ கோபுரங்களில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா...கோவிந்தா..." என பக்தி கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோ வில் நிர்வாகம் செய்திருந்தது.

    • கொங்கேஸ்வரர்-ஏழுமுக காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அய்யா "ஆ"சிரமம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகொங்கேஸ்வரர், ஸ்ரீ ஏழு முக காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 23-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 24-ந்தேதி காலை 8.30 மணிக்கு முதற்கால யாஜ பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனை யும், 25-ந் தேதி 2-ம், 3-ம் கால யாக பூஜைகள், 26-ந் தேதி 4-ம், 5-ம் கால யாக பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை 6.35 மணிக்கு 6-ம் கால யாக பூஜை, கோ பூஜையும், 8.45 மணிக்கு மஹா பூர்ணாகுதி, தீபாராத னையும், காலை 9 மணிக்கு கடம் புறப்பாடும் நடந்தது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம் நடைபெற்றது.



    கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள். 

    கும்பாபிேஷகத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில் சிவகங்கை, காளையார்கோவில் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலரும், செட்டிநாடு பப்ளிக் பள்ளி தாளாருமான சுப.குமரேசன், சாந்திகுமரேசன், அருண் மற்றும் கொங்கேஸ்வரர் கோவில் டிரஸ்டிகள், மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பக்தர்கள் 'ஓம் சக்தி பராசக்தி' என விண்ணதிர பக்தி கோஷம் முழங்கினர்.
    • பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம் மீனவ கிராமத்தில் பழமையான படவேட்டம்மன் கோவில் உள்ளது. சிறியதாக இருந்த கோவிலை விரிவாக்கம் செய்து புனரமைக்க வேண்டியிருந்தது. இதற்காக கோவில் தர்மகர்த்தா கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. மற்றும் அவரது சகோதரர்கள் தங்கள் சொந்த நிலத்தை தானமாக வழங்கினர். இதையடுத்து கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதையொட்டி 19-ந்தேதி பந்தக்கால் நடப்பட்டது. 25-ந் தேதி முதல் கோ பூஜை, தன பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 4-ம் கால யாக சாலை பூஜை நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசம் எடுத்து வரப்பட்டு படவேட்டம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதே நேரத்தில் ராஜகோபுர வாயில் பஞ்ச கலசங்களில் புனிநீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் 'ஓம் சக்தி பராசக்தி' என விண்ணதிர பக்தி கோஷம் முழங்கினர். பின்னர் மூலவர் படவேட்டம்மன் மற்றும் நந்தி, பாலமுருகன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    கோவிலுக்கு பல ஊர் நிர்வாகம் சார்பில் சீர்வரிசைகள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இணைந்து மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் படவேட்டம்மன் கோவிலுக்கு சீர்வரிசை கொண்டு வந்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

    விழாவில் கிராம தலைவரும், கோவில் தர்மகர்த்தாவுமான கே.பி.சங்கர் எம்.எல்.ஏ., தொழிலதிபர் பரசு பிரபாகரன், கிராம ஆலோசகர்கள் அஞ் சப்பன், ஆறுமுகம், கவுன்சிலர் சொக்கலிங்கம் மற்றும் கிராம நிர்வாகிகள், கே.வி.கே. குப்பம் பொதுமக்கள், பல்வேறு மீனவ கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சார்பு ஆய்வாளர் அய்யனார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கொன்னத்தான்பட்டி கிராமத்தில் முத்து விநாயகர் கோவில் புனர் நிர்மானம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக 3 நாட்கள் நான்கு கால கணபதி, லட்சுமி ஹோமம் என பல்வேறு ஹோமங்கள் நடந்தன.

    பரிவார தெய்வங்களுக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. சிவாச்சாரியார்கள் யாக வேள்வியில் இருந்து கடம் புறப்பாடாகி வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பழனியப்ப தேவர், சோலை மணி தேசிகர் மற்றும் கிராம இளைஞர்கள், பொதுமக்கள், செய்திருந்தனர்.

    இதில் மகிபாலன்பட்டி, நெற்குப்பை உள்ளிட்ட 24½ கிராமத்தைச் சேர்ந்த நாட்டார்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம்-பிரசாதம் வழங்கப்பட்டது.

    நெற்குப்பை காவல் ஆய்வாளர் ரவீந்திரன், சார்பு ஆய்வாளர் அய்யனார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பரமக்குடியில் இன்று சுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட வண்டியூர் என்னும் காக்காத் தோப்பு சோலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது.

    இந்த கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் பதினெட்டாம்படி கருப்பணசாமி, சுந்தர பாலஆஞ்சநேய சுவாமி கோவில்களின் கும்பாபிஷேகம் இன்று காலை விமரிசையாக நடந்தது. கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை உரப்புளி ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி ரவிந்திரன், துணைத்தலைவர் மல்லிகா நாகராஜன், ஊராட்சி செயலர் ரமேஷ்குமார், வார்டு உறுப்பினர்கள் அசோக்குமார், கலை முருகன், தினகரன், விஜயலட்சுமி, மல்லிகா, லட்சுமி காந்தம், ராணி, சுலோசனா ஆகியோர் செய்திருந்தனர்.

    கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம்-அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கடந்த 24-ந்ேததி காலை 5 மணிக்கு கோ பூஜையுடன் விழா தொடங்கியது.
    • மங்கள இசை, நவகிரக ஹோமம், மாலை 5 மணிக்கு முதல் கால பூஜை நடைபெற்றது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட நேருவீதியில் காமாட்சிஅம்மன் கோவில் உள்ளது.பழமை வாய்ந்த இந்த கோவிலில் கும்பா பிஷேக விழா நடத்துவது என பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக புனரமை ப்பு பணிகள் நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.அதன் முதல் நிகழ்வாக கடந்த 24-ந்ேததி காலை 5 மணிக்கு கோ பூஜையுடன் விழா தொடங்கியது. மங்கள இசை, விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம் உள்ளி ட்டவை நடைபெற்றது. 2 ம் நாள் நிகழ்வாக 25-ந்தேதி காலை 7 மணிக்கு மங்கள இசை, நவகிரக ஹோமம், மாலை 5 மணிக்கு முதல் கால பூஜை நடை பெற்றது. நேற்று காலை 6 மணிக்கு 2-ம் கால பூஜை , 10:30 மணிக்கு விமான கலசங்கள் ஸ்தாபன நிகழ்ச்சி, மாலை 5 மணிக்கு 3-ம் கால பூஜை நடைபெற்றது.இன்று காலை 9 மணிக்கு விமான கலசங்கள், மங்கள வாத்தியங்களுடன் மூலாலயம் எழுந்தருளலும், 9.30 மணிக்கு காமாட்சி யம்மன் மற்றும் பரிவார விமான ங்களுக்கு கும்பாபிஷேகம் நடை பெற்றது. அதை த்தொடர்ந்து மகாஅபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9 மணிக்கு காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யா ணமும் அதைத் தொடர்ந்து திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தேவராட்டம், மங்கள வாத்தியங்கள் முழங்க முளைப்பாரிகை ஊர்வலமும், 6.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். விழாவில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கவுமார மடாலயம் குமர குருபர சுவாமிகள், ததேவாநந்த சரஸ்வதி சுவாமிகள், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகம், தலைவர் ராமராஜ் செட்டியார், அறங்காவலர் குழு நவநீதன், ஆறுச்சாமி, கோவிந்தராஜன், துரை அங்குசாமி, ராமராஜ், ராஜேந்திரன், முருகன் , அய்யப்பன், காளிதாஸ், சசிகுமார், ஆறுமுகம், மெய்யப்பன், சண்முக சுந்தரம், சவுந்தர குமார் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சண்முக சுந்தரம், மாரியம்மன் கோவில் அறங்காவலர் யு.எஸ்.எஸ். ஸ்ரீதர், டி.எஸ்.பி., தேன்மொழிவேல் மற்றும் உறுப்பினர்கள் மலையாண்டி, காமாட்சி குமார், கிருஷ்ணகுமார், தங்கவேல், அசோகன், கார்த்திக்கேயன், சாமிநாதன், நந்தகுமார், நவீன் பிரசாத், விஸ்வநாதன், பத்மநாபன், வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த கோவில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    • நாளை முதல் 48 நாட்கள் மண்டலபிஷேக விழா நடக்கிறது.

    திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், மதுரவாசல் கிராமத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ருக்மணி நாயிகா சமேத ஸ்ரீ வேணுகோபால பெருமாள் திருக்கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று காலை நடைபெற்றது.

    இதை முன்னிட்டு சனிக்கிழமை மாலை அனுக்ஞை,வேத பிரபந்தம் தொடக்கம்,அங்குரார்பணம், கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. நேற்று காலை கும்ப திருவாராதனம்,மகா சாந்தி, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல்,நவக்கலச ஸ்தாபனம்,மகா சாந்தி, திருமஞ்சனம் உள்ளிட்டவை நடைபெற்றது.

    இன்று காலை விஸ்வரூபம்,மகாபூர்ணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், ஆரணி தாசரதி பட்டாச்சாரி தலைமையில் புனித நீர் அடங்கிய கலசங்களை பட்டாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.காலை 9 மணிக்கு விமான கோபுரம்,மூலவர் உள்ளிட்டவைகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

    இதன் பின்னர்,மூலவருக்கு மகா அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னர்,பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம், அன்னதானம் உள்ளிட்டவைகள் கோவில் வளாகத்தில் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உற்சவர் மாட வீதி வழியாக திருவிதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில்,ஊராட்சி மன்ற தலைவர் கீதா கணபதி மற்றும் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம்.எஸ்.வரதராஜன் தலைமையில் திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.நாளை முதல் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபிஷேக விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    • காரணம்பேட்டை வீரமாத்தி அம்மன் கோவிலில் இருந்து புனித தீர்த்த குடங்கள் எடுத்து வருதல்.
    • பிள்ளையார் கலைவள்ளி கும்மி குழுவினரின் கும்மியாட்டம் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் கூப்பிடு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக திருக்கோவில் புனரமைப்பு பணிகள் நடந்து நிறைவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கும்பாபிஷேகப் பணிகள் 24ந் தேதி காலை 8 மணி அளவில் காரணம்பேட்டை வீரமாத்தி அம்மன் கோவிலில் இருந்து புனித தீர்த்த குடங்கள் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சியுடன் துவங்கியது.

    இந்த நிலையில் நேற்று காலை 6:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. தொடர்ந்து திருமஞ்சன வழிபாடு, பேரொளி வழிபாடு, நடைபெற்று காலை 9:30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை துவங்கியது. திருக்குடங்கள் வேள்விசாலையில் எழுந்திருதல், 108 மூலிகை ஆகுதி, திருமுறை விண்ணப்பம், விமான கலசம் நிறுவுதல், எண் வகை மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5;30 மணிக்கு, பிள்ளையாருக்கு மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. இதில் திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு ஆகியவை நடைபெற்றது. கூப்பிடு பிள்ளையார் கலைவள்ளி கும்மி குழுவினரின் கும்மியாட்டம் நடைபெற்றது. இதனை ஏராளமானோர் கண்டு களித்தனர். இந்த நிலையில் இன்று காலை யாக வேள்வியுடன் கும்பாபிஷேக பூஜை துவங்கியது. 8: 30 மணிக்கு விமான கலசங்கள், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூப்பிடு பிள்ளையாருக்கு அபிஷேக அலங்கார பூஜை நடைபெ ற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கூப்பிடு பிள்ளையார் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காரணம்பேட்டை மெயின் ரோட்டில் இருந்து ஊர் முழுவதும் அலங்கார விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு அந்தப் பகுதியே மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.

    காரணம்பேட்டை கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி, கரடிவாவி, சூலூர், பல்லடம், திருப்பூர் கோவை உள்ளிட்ட இடங்களிலிருந்து பக்தர்கள் வந்து கூப்பிடு பிள்ளையார் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று வருகின்றனர்.

    • இந்த கோவிலின் திருவிழா வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது.
    • நாளை காலை 7 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சியை அடுத்த பேரை ஸ்ரீகிருஷ்ணா நகரில் கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் 59-வது வருட திருவிழா நடைபெற்று வருகிறது.

    நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில செயலாளர் மீனாதேவ் கலந்து கொண்டு பேசுகிறார்கள். வெள்ளி மலை இந்து சமய வித்யா பீடம் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், காணிமடம் யோகிராம் சுரத்குமார் மந்திராலய மடத்தின் நிறுவனர் பொன் காமராஜ் சுவாமி, குமாரகோவில் சின்மயா மிஷன் சுவாமி நிஜானந்தா ஆகியோர் ஆசி வழங்கி பேசுகிறார்கள்.

    விழாவில் ரவீந்திரநாத குரூப், திக்குறிச்சி ராமச்சந்திரன், பாக்கியராஜ், ஜெயக்குமார், முருகேசன், ஸ்ரீகுமார் ராபின், பி.கே.சிந்துகுமார், சேகர், சந்திரசேகர், செல்லன், மிசா சோமன், கிருஷ்ணகுமார், ஜெயசீலன், பாலஸ், ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். நிகழ்ச்சிக்கு தோமஸ்ராஜ் தலைமை தாங்குகிறார்.

    இந்த கோவிலின் திருவிழா வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு யானை மீது சாமி பவனி நடைபெறுகிறது. கோவிலில் இருந்து யானை மீது சாமி பவனி புறப்பட்டு ஆலம்பாறை தி, திக்குறிச்சி சிவன் கோவில், மலையாரம்தோட்டம், வேளச்சேரி, ஞாறான்விளை, பாப்பிரிக்கோணம், ஆலுவிளை காலனி, குழிச்சாணி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைகிறது.

    விழா நாட்களில் தினமும் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேகங்கள், பூஜை, தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி மற்றும் இளைஞர் கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.

    • 2009-ம் ஆண்டு ஜூன் 5-ந்தேதி குடமுழுக்கு நடந்தது.
    • இன்று முதல் கால யாக சாலை பூஜை நடக்கிறது.

    கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆதிகும்பேஸ்வரர் மங்களாம்பிகை அம்பாளுடன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்தக்கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 5-ந்தேதி குடமுழுக்கு நடந்தது.

    இந்தநிலையில் மீண்டும் கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக அரசு மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் ரூ.8 கோடியில் திருப்பணி தொடங்க முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பாலாலய சிறப்பு யாகம் நடந்தது.

    இன்று(சனிக்கிழமை) முதல் கால யாக சாலை பூஜைகளும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) 2, 3-ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெறுகிறது. வருகிற 27-ந்தேதி 4-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி, யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு, அத்திமரத்தில் வரையப்பட்ட 27 விமான சித்ர படத்துக்கு கலசாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் சு.சாந்தா, செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    ×