search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • கடந்த 2-ந் தேதி முதல் விழா தொடங்கியது.
    • நாட்டாணி கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    மணமேல்குடி தாலுகா நாட்டாணி கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ நந்தனவிநாயகர், ஸ்ரீ பூரணபுஷ் அம்பிகை சமேத ஸ்ரீ சதுரமுடைய அய்யனார் கோவிலில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.அதன்படி யாகசாலை அமைத்து கணபதி ஹோமத்துடன் கடந்த 2-ந் தேதி முதல் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 4கால யாக பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கண்ணன் சாஸ்திரிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக் காண திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • புனித நீர் சித்ரகுப்த சுவாமி கோவில் கோபுரம் மீது ஊற்றப்பட்டது.
    • காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

    காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள நெல்லுக்கார தெருவில் பிரசித்தி பெற்ற சித்ரகுப்தர் சுவாமி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். கேது தோஷம், கலத்தர தோஷம், வித்யா தோஷம், புத்திர தோஷம், நிவர்த்தியாகும் திருத்தலமாக இது விளங்கி வருகிறது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை விமரிசையாக நடை பெற்றது. புனித நீர் சித்ரகுப்த சுவாமி கோவில் கோபுரம் மீது ஊற்றப்பட்டது. இதில் காஞ்சீபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், வெளி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்ட னர். இதனால் காஞ்சீபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

    சித்ரகுப்தர்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி காஞ்சீபுரத்தில் போக்கு வரத்து மாற்றம் செய்யப் பட்டு இருந்தது. காஞ்சீபுரம் நெல்லுக்காரத் தெருவில் வாகனங்கள் செல்வதை தடுக்க காஞ்சீபுரம் டவுன் பேங்க் சந்திப்பு மற்றும் இரட்டை மண்டபம் சந்திப்பு அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதேபோல் காஞ்சீபுரம் டவுன் பேங்க் வழியாக இரட்டை மண்டபம் நோக்கி வரும் வாகனங்கள் பூக்கடைச் சத்திரம் மற்றும் அரசு ஆஸ்பத்திரி சாலை வழியாக திருப்பி விடப் பட்டன. இரட்டை மண்டபம் வழியாக டவுன் பேங்க் நோக்கி செல்லும் வாக னங்கள் பஸ் நிலையம் வழியாக சென்றன.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலை மையில் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகர் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
    • கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அகரமாங்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு காலயாக சாலை பூஜைகளை தொடர்ந்து, ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில் கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    குடமுழுக்கு விழா நிகழ்ச்சியில் அகரமாங்குடி அதனை சுற்றியுள்ள கிராமங்களை ஏராளமான கிராமமக்கள் பங்கேற்றனர்.

    கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை திருப்பணிகுழுவினர், கிராம முக்கியஸ்தர்கள், கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    • கும்பாபிஷேகம் 4-ந்தேதி நடக்கிறது.
    • மே 5-ந்தேதி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரத்தில் உள்ள கேது தலமாக விளங்கும் சித்ர குப்தர் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (4-ந்தேதி) நடைபெற உள்ளது.

    இதையொட்டி கோவிலில் விக்னேஷ்வர பூஜையுடன் யாக சாலை பூஜைகள் நேற்று தொடங்கியது.

    இந்தியாவிலேயே சித்ரகுப்தருக்கு என்று தனியாக சந்நிதி உள்ள ஆலயம் காஞ்சீபுரத்தில் உள்ள கர்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோவில். இந்த கோவிலில் வருகிற வியாழக்கிழமை (4-ந்தேதி) காலை 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முதல் நிகழ்ச்சியாக அனுக்கை விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோ மம், லட்சுமி ஹோமம், கோ பூஜை ஆகியவை காலையிலும் பிரவேச பலி, வாஸ்து சாந்தி ஆகியவை மாலையிலும் நடைபெற்றன.

    இன்று (செவ்வாய்க் கிழமை) காலை மூர்த்தி ஹோமும், யாக சாலை அலங்காரமும், மாலையில் யாக சாலை பூஜையும் முதல் கால தீபாராதனைகளும் நடைபெறுகிறது.

    இதன் தொடர்ச்சியாக 4-ந்தேதி (வியாழக்கிழமை) காலை மகா பூர்ணாஹுதி தீபாராதனைக்குப் பிறகு காலை 9.30 மணிக்கு ராஜ கோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதையடுத்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை கர்ணகி அம்பாளுக்கும், சிதரகுப்த சவாமிக்கும் திருக்கல்யாணமும், பின்னர் சுவாமியும், அம்மனும் காஞ்சீபுரம் ராஜ வீதிகளில் வீதியுலா வருகின்றனர்.

    மறுநாள் (மே 5-ந்தேதி) சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை காஞ்சீபுரம் சரக இணை ஆணையர் வான்மதி, கோவில் செயல் அலுவலர் அமுதா, அறங்காவலர் குழுவின் தலைவர் ரகுராமன், உறுப்பினர்கள் சந்தானம், ராஜாமணி மற்றும் கோவில் அர்ச்சர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சோழவந்தான் அருகே கும்பாபிஷேக விழா நடந்தது.
    • முன்னாள் ஒன்றிய சேர்மன் இளங்கோவன், அஜித்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள விக்கிரமங்கலத்தில் காமாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நான்கு கால பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தேறியது. பின்னர் யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகி நல்லகுட்டி வகையறாக்கள் புனிதநீர் குடம் சுமந்து கோவிலை வலம் வந்தனர். கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றிகும்பாபிஷேகம் செய்தனர். இதையடுத்து பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. இதன்பின் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மேக்கிழார் பட்டி, அம்மாபட்டி, குரும்பபட்டியை சேர்ந்த நல்லகுட்டி வகையறா, விக்கிரமங்கலம் ஆண்டித்தேவர் வகையறா மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். இதில் உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன், பார்வர்டு பிளாக் நிர்வாகி ரெட்காசி, அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ராஜா, ஊராட்சி சேர்மன் கலியுகநாதன், முன்னாள் ஒன்றிய சேர்மன் இளங்கோவன், அஜித்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • மானாமதுரை அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்கள் மீது பைப்புகள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மேலநெட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சாந்தநாயகி அம்பாள் சமேத சொர்ணவாரீசுவரர் கோவிலில் மகா கும்பாபிஷே விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. கோவில் அருகே பிரமாண்ட யாகசாலை அமைத்து மூலவர் சுவாமி, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மூலவர் விமான கலசங்கள் மற்றும் பரிவார விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். நிறைவாக கலசத்திற்கு பட்டு வஸ்திரம், பூ மாலை சாற்றி ஏக முக கற்பூர ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர் பக்தர்கள் மீது பைப்புகள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.

    இதில் தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம், மானாமதுரை பிரித்தியங்கிரா கோவில் சுவாமி ஞானசேகரன், ஸ்தபதி சண்முகம், சிவகங்கை தேவஸ்தானம் ராணி மதுராந்தக நாச்சியார், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா ராஜ்குமார், துணைத்தலைவர் சிவகாமி ராஜிபிள்ளை, கிராம நிர்வாகிகள் கருப்பையா, ரமேஷ் சுவாமி, முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர். செல்லப்பா குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. ஏ.டி.எஸ்.பி. நமச்சிவாயம், டி.எஸ்.பி.கண்ணன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ், சார்பு ஆய்வாளர் பூபதி ராஜா உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கருப்பட்டி, அம்மச்சியாபுரத்தில் காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விழா நடந்தது.
    • வரதராஜ பண்டிட்ஜி தலைமையில் யாகசாலை தொடங்கியது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி, அம்மச்சியாபுரத்தில் காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விழா நடந்தது. வரதராஜ பண்டிட்ஜி தலைமையில் யாகசாலை தொடங்கியது. செல்லப்ப சர்மா பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் முதல் கால பூஜை நடத்தினர். நேற்று காலை 7.45 மணியளவில் மஹா பூர்ணாகுதி பூஜை செய்து கடம் புறப்பாடானது. பாராயணம் படித்து வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

    கிராம பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து அம்மனை வணங்கினர், அம்மச்சியாபுரம் கிராம மக்கள், விழா கமிட்டியினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • அறந்தாங்கி அருகே முத்துவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகா தாணிக்காடு கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துவிநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் கடந்த 26-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 2 நாட்களாக 3 கால யாக பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அப்பகுதி சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏம்பல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • பெரம்பலூர் கல்யாண் நகர் ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • சுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையிலான சுவாமிகள் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் துறையூர் சாலை கல்யாண் நகரில் புதிதாக ஸ்ரீசித்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் மகா கும்பாபிஷேகம் விழாவையொட்டி நேற்றுமுன்தினம் (26ம்தேதி) காலை 7 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் பூர்வாக பூஜை துவங்கியது. இதை தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்தது.அதை தொடர்ந்து காலை விநாயகர் பூஜை, இரண்டாம் கால யாகபூஜை நடந்தது. தொடர்ந்து யாத்ரா தானம், கடம்புறம்பாடு நடத்தப்பட்டு காலை 10 மணிக்கு விமான மகாகும்பாபிஷேகமும், காலை 10.10 மணிக்கு ஸ்ரீசித்தி விநாயகர் மூலாலய மகா கும்பாபிஷேகமும் நடந்தது.

    சுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையிலான சுவாமிகள் கும்பாபிஷேக விழாவை நடத்திவைத்தனர்.விழாவில் ஒபிஎஸ் அணி அதிமுக மாவ ட்ட செயலாளரும், முன்னா ள் எம்எல்ஏவான ராமச்ச ந்திரன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பேபிகா மராஜ், திருமால் நிறுவ னங்களின் இயக்குனர் கோகுல், கல்யாண் நகர் நற்பணி மன்ற தலைவர் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழாக்கு ழுவினர் செய்திருந்தனர்.


    • சிங்கம்புணரி அருகே செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சிவாச்சாரியார்கள் ேகாபுர கலத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரி வேங்கைபட்டி ரோட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாகுதியுடன் முதல் கால பூஜைகள் நிறைவு பெற்றன. அதை தொடர்ந்து நேற்று 2-ம்கால பூஜைகள் நடந்தது. இன்று காலை பல்வேறு சிறப்பு பூைஜகள்,ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் ேகாபுர கலத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 4-ம் கால பூஜை, தீபாராதனை, கலசங்கள் புறப்பட்டு ஆலயம் வலம் வருதல் ஆகியவை தொடர்ந்து கும்பாபிஷேகம் தொடங்கியது.
    • 6 சுவாமிகளின் கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே உள்ள சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கோவிலில் வித்யா கணபதி மற்றும் அதன் பரிவார தெய்வங்களான தட்சிணாமூர்த்தி, பாலசுப்பிரமணிய சுவாமி, சரஸ்வதி தேவி, ஹயக்ரீவர், பிரம்மா ஆகிய தெய்வங்கள் உள்ளன. இவைகளை அழகிய கலை அம்சத்துடனும், சிற்ப சாஸ்திரப்படியும் பள்ளி நிர்வாகம் வடிவமைத்தது. அதை தொடர்ந்து ஆன்மிக முறைப்படி மகா கும்பாபிஷேகமும் நடத்த பள்ளியின் ஜேசீஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நேற்று காலை விநாயகர் வழிபாடு, 4-ம் கால பூஜை, தீபாராதனை, கலசங்கள் புறப்பட்டு ஆலயம் வலம் வருதல் ஆகியவை தொடர்ந்து கும்பாபிஷேகம் தொடங்கியது.

    இதில் கூனம்பட்டி ஆதினம் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமி, மடவளாக ஆதினம் ஆருத்ர கபாலீஸ்வர குருசுவாமிகள், வீர சோழபுரம் ஆதினம், வேதாந்தபண் மதகுரு சுவாமிகள் மற்றும் சிவச்சாரியார்கள் , 6 சுவாமிகளின் கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    விழாவில் பள்ளியின் ஜேசீஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், அங்கத்தினர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள், கணேசமூர்த்தி எம்.பி., காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்குமார், துணை தலைவர் ஜீவிதா ஜவகர், சிவன்மலை ஊராட்சி தலைவர் துரைசாமி, காங்கயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், காங்கயம் தாலுகாவின் தமிழர் பாரம்பரிய கலைமன்ற நிர்வாகி லதா, தனியார் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியின் தாளாளர்கள் மற்றும் முதல்வர்கள், காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.கே. சிவானந்தன், காங்கயம் நகர அ.தி.மு.க. செயலாளரும், கூட்டுறவு வங்கியின் தலைவருமான வெங்கு மணிமாறன், திருப்பூர் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் எம். ராமசாமி, காங்கயம் தாலுகா அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி, காங்கயம் தாலுகா தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் என்.எஸ்.என். தனபால், காங்கயம் ஆத்மா அறக்கட்டளையின் தலைவர் சன். பழனிசாமி, மடவளாகம் ஆருத்ர கபாலீஸ்வரா் கோவிலின் நிர்வாகிகள், ஜேசீஸ் பள்ளியின் பெற்றோர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பய பக்தியுடன் சுவாமிகளை வழிபட்டனர். முன்னதாக விழாவில் மங்கள இசை, தீபாராதனை, முளைப்பாரி எடுத்து தீர்த்தக்குடத்துடன் அழைத்து வருதல், முதற்கால, 2-ம் கால, 3-ம் கால பூைஜகள், யாக வேள்வி பூஜை, கோமாதா பூைஜ நடந்–தது. மேலும் கோமாதா பூஜை, வாழும் கலை அமைப்பின் திவ்ய சத்சங்க நிகழ்ச்சி, வெற்றி வேலன் குழுவினரின் வள்ளி கும்மியாட்டம், தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தின் சங்கமம், ஒயிலாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சி நடந்தது. மேலும் விழாவில் பங்கு கொண்ட முக்கியஸ்தர்களுக்கு பள்ளியின் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து விழாவின் 4 நாட்களும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஜேசீஸ் கல்வி அறக்கட்டளை துணை தலைவர் உமா தேவி அர்ச்சுணசாமி, செயலாளர் மற்றும் தாளாளர் சி.பழனிசாமி, துணை செயலாளர் சம்பத், பொருளாளர் மோகன சுந்தரம், முன்னாள் பொருளாளர் அசோகன், மற்றும் அங்கத்தினர்களான கொங்கு ராஜன், மதியழகன், சுப்பிரமணி, டாக்டர் ஆனந்த் விஷ்ணு, அகாடமி டைரக்டர் சாவித்திரி சுப்பிரமணியம், பிரேம்சுதா மற்றும் பள்ளியின் முதல்வர் பி.சுப்பிரமணி, ஆசிரியர்கள், அலுவலர்கள், முன்னாள் மாணவர்கள், தற்போது படிக்கும் மாணவர்கள் செய்திருந்தனர். மேலும் கோவிலின் 48 நாட்களுக்கான மண்டல பூஜை இன்று (வியாழக்கிழமை) முதல் தொடர்ந்து நடைபெறுகிறது.

    • இடையான்குடிகாடு தும்பிக்கை ஆழ்வார், வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்

    அரியலூர:

    அரியலூர் மாவட்டம் இடையன்குடி காடு தும்பிக்கை ஆழ்வார், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 24-ம் தேதி முதல் காலம் யாக பூஜை தொடங்கி நடைபெற்றது. 25-ம் தேதி திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜையுடன் இரண்டாம் கால யாக பூஜையும், சாந்தி ஹோமம் பூர்ணாஹீதியுடன் மூன்றாம் கால யாக பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, வாணவேடிக்கை, பட்டாசு முழக்கத்துடன் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. இரவு வாணவேடிக்கை, மேளதாளத்துடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. கும்பாஷேக விழாவில் இடையான்குடிகாடு மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்த கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தளவாய் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×