search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • புதுச்சாவடி கிராமத்தில் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • விழாவில் வாஸ்து சாஸ்திர ஹோமம், மகா கணபதி ஹோமம், அஷ்டதரன் மகா ஹோமம், சம்கார பூஜைகள், மண்டல பூஜை முதற்காலை யாகம் உள்ளிட்டவை நடைபெற்றது

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுச்சாவடி கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஆகாச மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன் தினம் வாஸ்து சாஸ்திர ஹோமம், மகா கணபதி ஹோமம், அஷ்டதரன் மகா ஹோமம், சம்கார பூஜைகள், மண்டல பூஜை முதற்காலை யாகம் உள்ளிட்டவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகாதீப ஆராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டார். இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி பழனிச்சாமி, மாநில நிர்வாகி ராம பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • சிவன்மலை சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி நடத்தி வைக்கிறார்கள்.
    • கொடுவாய் வெற்றி வேலன் குழுவினரின் வள்ளி கும்மியாட்டம், நேற்று காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தின் சங்கமம் ஒயிலாட்டமும் நடைபெற்றது.

    காங்கயம்:

    காங்கயம் அருகே உள்ள சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஸ்ரீவித்யா கணபதி மற்றும் அதன் பரிவார தெய்வங்களான தட்சிணாமூர்த்தி, பால சுப்பிரமணியசுவாமி, சரஸ்வதிதேவி, ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீ பிரம்மா ஆகியவை உள்ளன. இவைகள் கலைநயத்துடனும், சிற்ப சாஸ்திரப்படியும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் தொடங்கின.

    இதைத்தொடர்ந்து நாளை (புதன்கிழமை) காலை 9மணி முதல் 10-30மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. விழாவை கூனம்பட்டி ஆதீனம் ராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள், மடாதிபதிகள், சிவன்மலை சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி நடத்தி வைக்கிறார்கள்.

    விழாவை முன்னிட்டு கடந்த 23-ந்தேதி வாழும் கலை அமைப்பின் சார்பில் திவ்ய சத் சங்கம் நிகழ்ச்சி, கொடுவாய் வெற்றி வேலன் குழுவினரின் வள்ளி கும்மியாட்டம், நேற்று காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தின் சங்கமம் ஒயிலாட்டமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சிவன்மலை ஜேசீஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்துள்ளனர். முன்னதாக அனைவரையும் அறக்கட்டளை அங்கத்தினர்கள், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்கிறார்கள்.  

    • ஸ்ரீ பெரியாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
    • பரிவார தெய்வங்கள் மீது தெளிக்கப்பட்டு பின்பு கூடி இருந்த பக்தர்கள் மீதும் தெளிக்கபட்டது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், ஏ.கொல்லஹள்ளி பகுதியில் ஸ்ரீ பெரியாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

    சித்திரை மாதம் ஒன்பதாம் நாள் கணபதி பூஜை லட்சுமி ஹோமத்துடன் விழா நிகழ்வு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முதல் காலை யாகபூஜை, இரண்டாம் கால யாக பூஜை, துவார பூஜை, மண்டப அர்ச்சனை வேதிகா அர்ச்சனை நாடி சந்தனம் நடைபெற்று யாகசாலையில் இருந்து பூஜை செய்யப்பட்டது. தீர்த்தக் குடங்கள் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பங்காளிகள் கோவிலை சேர்ந்த வர்கள் பூஜையில் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரானது மூலவர் மற்றும் பரிவார தெய்வங்கள் மீது தெளிக்கப்பட்டு பின்பு கூடி இருந்த பக்தர்கள் மீதும் தெளிக்கபட்டது.

    கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்வுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் விழா குழுவினர் ஒன்றிணைந்து செய்திருந்தனர்.

    • தாய்க்கு ‘அன்னை சுப்புலட்சுமி’ என்ற பெயரில் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகரில் கோவில் கட்டினர்.
    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரை சேர்ந்தவர் கல்யாண குமார். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு மே 14-ந் தேதி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

    இந்நிலையில் சுப்புலெட்சுமியின் மகள் ஜெய்சங்கரி (வயது 32), மகன் ராகவேந்திரா (29) ஆகியோர் உயிரிழந்த தனது தாய்க்கு 'அன்னை சுப்புலட்சுமி' என்ற பெயரில் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகரில் கோவில் கட்டினர். இதனையடுத்து நேற்று காலை இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

    இதையொட்டி நேற்று முன்தினம் காலை மகாகணபதி ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் நவக்கிரக ஹோம், சுதர்சன ஹோமம், மகாலெட்சுமி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. மாலையில் முதல்கால யாகசாலை பூஜையும், நேற்று காலையில் 2-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் விமான கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • 32 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் (மே) 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • கும்பாபிஷேகத்தன்று மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவிலில், 32 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் (மே) 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான திருப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

    இந்நிலையில், கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் அச்சிடப்பட்டு அதனை பிரம்மபுரீஸ்வரர், திருநிலைநாயகி அம்மன், சட்டைநாதர் உள்ளிட்ட சுவாமி சன்னதிகளில் வைத்து வழிபாடு செய்யப்ப ட்டது.

    அதன்பின்னர், அழைப்பிதழை விழாக்குழு வினர் பெற்றுக்கொண்டனர்.

    இதனை அடுத்து, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமையிலான விழாக்குழு வினர் கும்பாபிஷேக அழை ப்பிதழை கொடுத்தனர்.

    மேலும், கும்பாபி ஷேகத்தன்று மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • கடலூர் புதுப்பாளையம் படவட்டம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
    • கோவில் விழா கடந்த 20-ந்தேதி கணபதி பூஜை யுடன் தொடங்கியது.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையத்தில் ஸ்ரீ படவட்டம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த 20-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கி, மகா கணபதி ஹோமம், மகா லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து 21-ந் தேதி முதல் கால யாக சாலை பூஜையும், 22-ந் தேதி காலை விசேஷ சந்தி, 2-ம் கால யாக சாலை பூஜையும், அன்று மாலை 3-ம் கால யாக சாலை பூஜை, காயத்ரி மந்திர ஹோமம், மூல மந்திர ஹோமமும் நடை பெற்றது.

    கும்பாபிஷேக விழா இன்று காலை கோ பூஜையுடன் தொடங்கியது பின்னர் யாகத்தில் வைத்திருந்த புனித நீர் அடங்கிய கலசத்தை மங்கள வாத்தியத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

    பின்னர் வேத மந்திரம் முழுங்க கோவில் கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து படவட்டம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய வழிபடுவோர் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • நேற்று காலை 10 மணிக்கு 2-ம் கால யாக பூஜை நடந்தது.
    • மகாராஜன் தலைமையில் மஞ்சுநாதன் குழுவினரின் பட்டிமன்றம் நடக்கிறது.

    கோவை,

    கோவை சுண்டாக்காமுத்தூர் ராமசெட்டியாளையத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

    இதை முன்னிட்டு கடந்த 21-ந் தேதி காலை 8 மணியளவில் பொன்னப்பசெட்டியார் தோட்டத்தில் இருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலம், மாலை 4 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், விமான கலசங்கள் ஊர்வலம், இரவு 7 மணிக்கு முதலாம் கால யாக பூஜை நடந்தது.

    நேற்று காலை 10 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மாலை 6 மணியளவில் 3-ம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, காலை 8 மணிக்கு திருக்குடங்கள் கோவிலை சுற்றி வலம் வருதல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காலை 8.15 மணியளவில் கோவிலின் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இதையடுத்து காலை 8.45 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி நன்னீராட்டு விழா நடந்தது. கும்பாபிஷேக விழா ராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடந்தது.

    காலை 10 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை, 10.30 மணிக்கு மகா அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற வழிபாடும், இரவு 8 மணிக்கு வீடும், நாடும் சிறக்க காரணம் ஆண்களின் உழைப்பா? பெண்களின் உழைப்பா? என்ற தலைப்பில் தேவக்கோட்டை மகாராஜன் தலைமையில் மஞ்சுநாதன் குழுவினரின் பட்டிமன்றம் நடக்கிறது. மேலும் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.

    விழாவில் மாநகாரட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, கவுன்சிலர்கள் தென்றல் முருகேசன், குனிசை செந்தில்குமார், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை முருகன் தலைமையிலான கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • புனிதநீர் வைக்கப்பட்டு இருந்த கலசங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
    • ஏராளமான பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டாரில் புங்கையடி விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டன. தொடர்ந்து புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது.

    இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவின் 3-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை யொட்டி புனிதநீர் வைக்கப்பட்டு இருந்த கலசங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    தொடர்ந்து புனிதநீர் கலசங்கள் எடுத்துச்செல்லப் பட்டு கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முதலில் கோவில் ராஜாகோபுரம் முலாலய கோபுரத்தில் விநாயகருக்கும், அடுத்து பரிவார தெய்வங்களுக்கும் அர்ச்சகர்கள் புனித நீரை ஊற்றினர். தொடர்ந்து மகா அபிஷேகம் செய்து தீபாராதனை, கோபூஜை நடத்தினர்.

    அப்போது கோவில் முன்பு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று சுவாமியை வழிபட்டனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை 6.30 மணிக்கு விசேஷ அலங்காரத்துடன் புங்கையடி விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். கோட்டார் பட்டாரியார் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் புங்கையடி விநாயகர் கோவிலில் கடந்த 3 நாட்களாக நடந்த பூஜைகள், பண்ணிசை, கலை நிகழ்ச்சிகள், பல்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா குழு தலைவர் நாகராஜன், செயலாளர் முருகப்பெரு மாள், பொருளாளர் டி.ரவி மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள், கவுரவ ஆலோசகர்கள், செயற்குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • இன்று ஹோம வழிபாட்டுடன் விழா தொடங்கியது.
    • 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கோட்டார் இளங்கடை பட்டாரியர் புதுதெருவில் புங்கையடி விநாயகர் ஆலயம் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவில் கோட்டாறு பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செப்பிட்ட சாஸ்தா டிரஸ்ட் மூலம் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.

    இக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் படி இன்று (வெள்ளிக்கிழ மை) காலை தொடங்கி 3 நாட்கள் விழா நடைபெறு கிறது. இன்று காலை 7 மணிக்கு மங்கல இசை, நாதஸ்வரம் ஆகியவற்றுடன் விழா தொடங்கி தேவார பண்ணிசை பாடப்பட்டது.

    தொடர்ந்து மகா கணபதி ஹோமம், புண்யாக வாசனம், நவகிரக ஹோமம், கோ பூஜை செய்யப்பட்டு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இரவு 8.30 மணிக்கு நைட் பேர்ட்ஸ் இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கி றது. 2-ம் நாள் நிகழ்ச்சியாக நாளை (22-ந்தேதி) யும் சிறப்பு வழி பாடுகள், அன்னதானம் போன்றவை நடக்கிறது. மாலை 6 மணிக்கு வேதிகார்ச்சனை, விநாயகர் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டு விமானம், கோபுரம் கலச ஸ்தானம் செய்யப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு கடலூர் டாக்டர் சிவாஜி கண்ணன் வழங்கும் பல் சுவை நிகழ்ச்சி நடக்கிறது.

    23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழ மை) காலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெறுகிறது. அதன்பிறகு ராஜகோபுரம், முலாலய கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து புங்கையடி விநாயகருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், மகா தீபாராதனை, கோ பூஜை நடக்கிறது.

    அதன் பிறகு சிவானி சிவமித்ரா சகோதரர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு மாபெரும் அன்னதானம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நாதஸ்வர மேளதாளம் முழங்க விசேஷ அலங்காரத்துடன் மூசிக வாகனத்தில் புங்கையடி விநாயகர் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா குழு தலைவர் நாகராஜன், செயலா ளர் முருகப்பெரு மாள், பொருளாளர் ரவி மற்றும் கவுரவ ஆலோச கர்கள், செயற்குழு உறுப்பி னர்கள், நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ள னர்.

    விழாவையொட்டி கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    • கும்பாபிஷேக விழா ஜூன் 25-ந் தேதி நடைபெற உள்ளது.
    • யாகபூஜை ஜூன் 21-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது.

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் 4-வது கும்பாபிஷேக விழா வருகிற ஜூன் மாதம் 25-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்துவதற்காக 13 துணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் கோபுரங்கள், கட்டிடங்கள், உட்பிரகாரங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் கோவில் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களில் பொருத்தப்பட்டிருந்த 16 கலசங்கள், சாமி, அம்பாள் சன்னதிகளில் உள்ள கொடிமரங்கள் தங்க முலாம் பூசப்பட உள்ளது. இதையொட்டி கோவிலில் உள்ள 16 கலசங்களை புதுப்பித்து தங்க முலாம் பூசுவதற்காக அவை அங்கிருந்து மாற்றும் பணி நேற்று நடந்தது. இந்த பணியில் மதுரையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். கோவில் கோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டு விரைவில் அவை கோபுரங்களில் பொருத்தப்பட உள்ளது.

    இதுகுறித்து கோவில் செயலாளர் சுரேஷ் கூறுகையில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகபூஜை ஜூன் 21-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. ஜூன் 25-ந் தேதி காலை 9.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்.

    கோவில் கோபுர கலசங்களை புதுப்பித்து தங்க முலாம் பூசப்பட்டு அவை விரைவில் அதே இடத்தில் வைக்கப்பட உள்ளது. சினிமா தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக தங்கத்தேர் செய்து கோவிலுக்கு வழங்க உள்ளார். இதற்கான பணிகள் கோசாலையில் நடைபெற்று வருகிறது என்றார்.

    • சிறப்பு தீபாராதனை நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னதானம்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட அம்மையப்பன் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ முனீஸ்வரன் ஸ்ரீ வன காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு ஸ்ரீ காளியம்மன் உள்ளிட்ட 4 அம்மனுக்கு கோபுர கலச பிரதிஷ்டை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மங்கல இசை சிறப்பு பூஜை வாஸ்து சாந்தி முதல் கால யாக பூஜை மற்றும் தீப ஆராதனையும் நடைபெற்றது.

    அதன் பிறகு திருப்பத்தூர் சிவா ஸ்ரீ ரவி குருக்கள் மற்றும் சுவாமி நாத மகேஷ் குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் அம்மையார் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மின்கம்பியையும், கம்பத்தையும் மாற்றி அமைத்துதர பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • திருப்பணி வேலைகள் முடிந்து கோவில் கும்பாபிஷேகம் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா

    பெரம்பூர் ஊராட்சி காளியம்மன்கோயில் தெருவை சேர்ந்த சுரேஷ் தலைமையில் பொதுமக்கள், கலெக்டர் மகாபாரதியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    எங்கள் ஊரில் உள்ள காளியம்மன்கோயில் மேலே மிகவும் ஆபத்தான நிலையில் மின்கம்பி தாழ்ந்து செல்வதால் கடந்த ஐந்து வருடங்களாக திருப்பணி வேலைகள் முடிந்து கோயில் கும்பாபிஷேகம் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம்.

    தற்பொழுது கோயில் கும்பாபிஷேகம் செய்ய முயற்சி செய்து வருவதால் மின்சாரம் ஓடிக்கொண்டி ருக்கும் மின் கம்பியால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    கோயிலுக்கு மேலே தாழ்ந்து செல்லும் மின்கம்பி யையும், கம்பத்தையும் மாற்றி அமைத்துதர மின்சார துறையில் பல முறை புகார் கொடுத்தும் எந்த வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே தாழ்ந்து செல்லும் மின் கம்பிகளையும், மின்கம்பத்தையும் மாற்றி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×