search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • 50 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது
    • பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் அடுத்த, சப்தலிபுரம் கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    இதில் 2 நாட்களுக்கு முன்பாகவே அமைக்கப்பட்ட யாகசாலையில் 6 கால பூஜைகள் செய்து, யாகங்கள் வளர்க்கப்பட்டது.

    மேலும் அங்கு வைக்குப்பட்டு இருந்த 208 கலசத்திற்க்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    இதனையடுத்து யாகம் வளர்க்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசத்தை தலைமீது ஏந்தி மேல தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் மீது அமைந்துள்ள விமான கலச கோபுரத்தின் மீது ஊற்றினர். பின்னர் பக்தர்கள் புனித மீது தெளிக்கப்பட்டது.

    இதன் பின்பு மூலவருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்து, அலங்கரித்து தீபாராதனை நடைெபற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 32 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற மே மாதம் 24-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • ரூ.12 கோடியில் திருப்பணிகள் முழுமையாக நடைபெற்று நிறைவடையும் நிலையில் உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.

    இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

    இங்கு லிங்கம் , மூர்த்தம் சங்கமம், ஆகிய மூன்று வடிவங்களில் சிவபெருமான் அருள் புரிந்து வருகிறார்.

    கோயிலில் மலை மீது உமா மகேஸ்வரர், சட்டைநாதர் சுவாமிகள் அருள் பாலிக்கின்றனர்.

    திருஞானசம்பந்தர் அவதார ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது.

    இக்கோயில் பிரம்ம தீர்த்த குளத்தில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் திருமுலைப்பால் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த 1991 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

    இதற்கான ரூ.12கோடியில் திருப்பணிகள் முழுமையாக நடைபெற்று நிறைவுபெறும் தருவாயில் உள்ளது.

    இதனிடையே கோயில் கும்ப்பாபிஷேக பத்திரிக்கை அச்சிட்டு அதனை பிரம்மபுரீஸ்வரர்சுவாமி, திருநிலைநாயகிஅம்மன், சட்டநாதர் சுவாமி உள்ளிட்ட சுவாமி சன்னதிகளில் வைத்து வழிபாடு செய்து படைக்கப்பட்டது.

    அதன்பின்னர் கும்பாபிஷேக முதல் பத்திரிக்கையை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கிட அதனை திருப்பணி உபயதாரரும், சீர்காழி தமிழ்சங்க தலைவருமான இ.மார்கோனி பெற்றுக்கொ ண்டார்.

    அருகில் கோவில் கண்காணிப்பாளர் செந்தில் ஆசிரியர் கோவி.நடராஜன் உள்ளனர்.

    • இந்த கோவில் வரலாற்று சிறப்புமிக்க தலமாகும்.
    • இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடந்தது.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார். திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தலமாகும். மேலும் காசிக்கு அடுத்தபடியாக அஷ்ட பைரவர்களுக்கும் தனி சன்னதி இங்குதான் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடந்தது.

    இதையடுத்து அடுத்த மாதம் (மே) 24-ந் தேதி குடமுழுக்கு நடத்திட தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான திருப்பணிகளை தொடங்கி வைத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று குடமுழுக்குக்கான பத்திரிகையை தருமபுரம் ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் சட்டைநாதர் கோவிலுக்கு நேரில் வந்து திருநிலை நாயகி உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் திருஞானசம்பந்தர் , அஷ்ட பைரவர், விநாயகர், முருகன் உள்ளிட்ட சன்னதியில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தார்.அதைத்தொடர்ந்து குடமுழுக்கு பத்திரிகையை கோவிலில் உள்ள பக்தர்களுக்கு வழங்கி அருள் ஆசி வழங்கினார்.

    அப்போது தமிழ்ச் சங்க தலைவர் மார்க்கோனி, செயலாளர் கோவி நடராஜன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் மாரிமுத்து, தலைமை மருந்தாளுனர் முரளி, கோவில் நிர்வாகி செந்தில் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • இன்று கோபூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடக்கிறது.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பாவாஜிக்கோட்டை கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து நாளை(ஞாயிறுக்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது. விழாவையொட்டி இன்று(சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், தனபூஜை, கோபூஜை ஆகியவையும், மாலை 5 மணிக்கு கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடக்கிறது.

    நாளை காலை 6 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை தொடக்கம், தீபாராதனையும், 9.45 மணிக்கு கடம்புறப்பாடு, 10 மணிக்கு விமான குடமுழுக்கும், 10.15 மணிக்கு மூலவர் குடமுழுக்கும் நடக்கிறது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அத்திவெட்டி மறவக்காடு முத்துவைரவ ஆகாசம் சேர்வைக்காரர், பாலோஜி ரெகுநாதசமுத்திரம் கிராம மக்கள், பாவாஜிக்கோட்டை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    • அய்யனார் கோவில் சேமக்குதிரைக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
    • அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தாயமங்கலம் செல்லும் சாலையில் அலங்காரக்குளம் பகுதியில் ஒருங்கிணைந்த குலாலர் சமூக நலச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட வைகைக்கரை அய்யனார், சோணையா சுவாமி கோவில் உள்ளது. இதன் முதலாமாண்டு வருஷாபிஷேக விழா மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சேமக் குதிரை சிலை, அய்யனார், மடப்புரம் காளி, மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

    கோவில் வளாகத்தில் புனித நீர் கடங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தன. 2-ம் கால பூஜை முடிந்து பூர்ணாகுதி நடைபெற்றதும் கடம் புறப்பாடு நடைபெற்றது. சேமக் குதிரைக்கும், அதன் மீது எழுந்தருளியுள்ள அய்யனார் சுவாமிக்கும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்தை காண கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கோவிலில் உள்ள சோனையா சுவாமி, மாயாண்டி சுவாமி மற்றும் அய்யனார் சுவாமிக்கும் மகாஅபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு கார் வேன்களில் சென்ற ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அய்யனார், சோனையா சுவாமிகளையும், சேமக் குதிரையையும் தரிசனம் செய்தனர். மதியம் கோவிலில் நடந்த அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர். குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை மானாமதுரை ஒருங்கிணைந்த குலாலர் சமூக நலச்சங்கத்தின் தலைவரும், கோவில் பரம்பரை நிர்வாக அறங்காவலருமான காளீஸ்வரன் செய்திருந்தார்.

    • வாடிப்பட்டி அருகே பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை தாதம்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 8-வது வார்டு தாதம்பட்டி சடையாண்டி கோவில் வளாகத்தில் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு முதல் நாள் மாலை 6 மணிக்கு கணபதி ஹோமம், முதலாம் கால யாக பூஜை, வாஸ்துசாந்தி, பூர்ணாஹூதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. 2-ம் நாள் காலை 8 மணிக்கு 2-ம் காலை யாகசாலை பூஜை, கடம் புறப்பாடாகி காசி, ராமேசுவரம், அழகர் கோவில் உள்ளிட்ட புண்ணிய திருத்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு காலை 10 மணிக்கு கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    மூலவர் பால விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கும்பாபிஷேகத்தை பாலாஜி பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். பின்னர் அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடு களை தாதம்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • இந்த ஆண்டு 668 கோவில்களுக்கு திருப்பணிகளைத் தொடங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார்.
    • ரூ.17 கோடி செலவிலே திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் சட்டசபையில் பேசியதாவது:-

    கிணத்துக்கடவு பேரூராட்சியில் பொன்மலை வேலாயுதசுவாமி கோவில் திருப்பணி முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவியோடு நிதி ஒதுக்கப்பட்டு, சுற்றுச்சுவர் அமைக்கின்ற பணி, கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

    ஆனால், உபயதாரருடைய பணி அனைத்தும் ஓரளவுக்கு முடிந்துவிட்டது. எனவே இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர், பொன்மலை வேலாயுதசுவாமி கோவில் திருப்பணியை மீண்டும் தொடங்கி, கும்பாபிஷேகம் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

    அதேபோல, மாசாணியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் 2010 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் நேதி நடைபெற்றது. இப்போது 14 ஆண்டுகளாகிவிட்டன. அந்த மாசாணியம்மன் கோவில் திருப்பணிக்கும் உரிய கும்பாபிஷேகப் பணியை தொடங்கி சிறப்பாக நடத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பேசியதாவது:-

    வேலாயுதசுவாமி திருக்கோவில் என்பது உபயதாரர்கள் மற்றும் ஆணையர் பொது நல நிதியிலிருந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உபயதாரர்கள் நிதியில் மேற்கொள்ளப்படுகிற பணிகள் 80 சதவீதம் அளவிற்கு நிறைவுற்றிருக்கி றது. அதேபோல, சுற்றுச்சுவர் அமைக்கின்ற பணி தொடங்கப்பட்டு, பணிகள் எவ்வளவு முடிவுறுகிறதோ, அதற்கேற்றாற் போல் ஆணையர் பொதுநல நிதியில் வழங்கப்பட்ட அந்தத்தொகைக்கு ஒப்பந்ததாரர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகின்றது. இன்னும் போர்க்கால அடிப்படையில் விரைவாக நடவடிக்கை எடுத்து, அந்த சுற்றுச்சுவர் பணியை வேகப்படுத்துவோம்.

    ஆகம விதிப்படி 12 ஆண்டுகளில் எந்தெந்த கோவில்களில் எல்லாம் திருப்பணிகள் தொடங்கப்பட வேண்டுமோ, அவற்றையெல்லாம் கணக்கெடுத்து, இந்த ஆண்டு 668 கோவில்களுக்கு திருப்பணிகளைத் தொடங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார். எனவே மாசாணியம்மன் கோவிலுக்கு மண்டலக் குழு, தொல்லியல் குழு, அதேபோல், மாநிலக் குழு ஆகிய மூன்றும் ஒப்புதல் பெறப்பட்டு, ரூ.17 கோடி செலவிலே திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வேதிகார்ச்சனை, கோபூஜை ஆலயவிக்ரகங்களுக்கு காப்பு காட்டுதல் நடைபெற்றது.
    • அலங்கார பூஜை, தச தரிசனம் கோவிலில் நடைபெற்றது.

    உடுமலை :

    உடுமலையில் புகழ்பெற்ற பழமையான சொர்ண காமாட்சி அம்மன் என்கின்ற ஸ்ரீ தலை கொண்ட அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை 7 மணிக்கு மங்கள இசை, நான்காம் காலவேள்வி ஆரம்பம் ,வேதிகார்ச்சனை ,கோபூஜை ஆலயவிக்ரகங்களு க்கு காப்பு காட்டுதல் நடைபெ ற்றது. பின்னர் புண்ணிய தலங்களான ராமேஸ்வரம் ,கொடுமுடி ,பேரூர் ,திருமூர்த்தி மலை ,பழனி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோபுர கலசம் மேல் ஊற்றபட்ட பின் சொர்ண காமாட்சி அம்மன் என்கின்ற ஸ்ரீ தலை கொண்ட அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கார பூஜை ,தச தரிசனம் கோவிலில் நடைபெற்றது.

    கும்பாபி ஷேக விழாவையொட்டி சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். உடுமலை டிஎஸ்பி., தேன்மொழிவேல் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • சிறப்பு பூஜைகள் நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அருகே முருகர்கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கீழ்பென்னாத்தூர் அடுத்த ராயம்பேட்டை கிராமத்தில்மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலயம் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    விநாயகர், முருகர், பரிவாரதேவதைகள், சக்திவேல், கோபுர கலசங்கள் பிரதிஷ்டை செய்தும், கலசங்கள் அமைக்கப்பட்டும் யாக பூஜைகள் நடந்தது.

    சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் ஓத பூஜைகள் நடத்தப்பட்டு, மேள தாளத்துடன் கோபுர கலசத்திற்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, தீபாரனை செய்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில், மூலவர் முருகபெருமானுக்கு பால் அபிஷேகம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

    தொடர்ந்து பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சக்திவேல், காவடி, உற்சவதிருத்தேர், செடல் ஊர்வலம் என பக்தர்கள் ராயம்பேட்டை கிராமத்தில் வீதி உலா வந்தனர்.

    நிகழ்ச்சியில், அருணை குழுமம் எ.வ.வே.கம்பன், கீழ்பென்னாத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி எ.எஸ்.ஆறுமுகம், அதிமுக ஒன்றிய செயலாளர் தொப்பளான் மற்றும் கிராம பிரமுகர்கள், பொதுமக்கள், திருப்பணி குழுவினர்கள், விழாக்குழுவினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கருமலை சாத்த அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கொன்னத்தான்பட்டி ஊர் பொதுமக்கள், கிராமத்து இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கொன்னத்தான்பட்டி கிராமத்தில் கருமலை சாத்த அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு 29 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி 3 நாட்கள் சிறப்பு ஹோமம் நடந்தது.

    பின்னர் பரிகார தெய்வங்களுக்கு மகா பூர்ணாகுதி, தீப ஆராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார் ராமசாமி தலைமையில் கடம் புறப்பாடகி, கோவில் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேக விழாவில் பூங்குன்ற நாட்டு அம்பலம் சண்முகம், கொன்னத்தான்பட்டி ஊர் அம்பலம், பழனியப்பா தேவர் என்ற விஜய், ஊராட்சித்மன்ற தலைவர் அழகு பாண்டியன், சின்ன அம்பலம் முத்தையா தேவர், பூசாரி கருப்பையா, சோலைமணி தேசிகர், கணேச வேளாளர், மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கொன்னத்தான்பட்டி ஊர் பொதுமக்கள், கிராமத்து இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பல லட்சம் ரூபாய் செலவில் சுடு களிமண்ணால் அந்த சாமி சிலைகள் செய்யப்பட்டு, மலைக்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
    • செல்லியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலான பெரியசாமி மலைக்கோவில், அருகே உள்ள மலையில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந்தேதி நடைபெற்றது. இந்த நிலையில் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பெரியசாமி மலைக்கோவிலில் உள்ள சுடு களிமண்ணால் செய்யப்பட்ட சாமி சிலைகளை நாதன் என்பவர் உடைத்து சேதப்படுத்தினார்.அந்த சிலைகளை புதிதாக பிரதிஷ்டை செய்ய பாலாயம் நடத்தப்பட்டு, புதுச்சேரி மாநிலத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் சுடு களிமண்ணால் அந்த சாமி சிலைகள் செய்யப்பட்டு, மலைக்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.இதைத்தொடர்ந்து பெரியசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 27-ந் தேதி நடத்தப்பட்டது. அப்போது செல்லியம்மன் சிலை மட்டும் முறையாக முழுமையாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. பெரியசாமி உள்ளிட்ட சாமி சிலைகள் முழுமையாக பிரதிஷ்டை செய்யப்படவில்லை. இதனால் செல்லியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    • மதுரையில் கல்யாண விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை மதுரை நாடார் உறவின்முறை சுப்புராஜ நாடார்-கிருஷ்ணம்மாள் மன்றத்தினர் செய்துள்ளனர்.

    மதுரை

    மதுரை நாடார் உறவின்முறை சுப்புராஜநாடார்- கிருஷ்ணம்மாள் மன்றம் கல்யாண விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (செவ்வாய்கிழமை) தொடங்குகிறது.விழாவை முன்னிட்டு காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை,புண்ணியாஹவாசனம், 11 மணிக்கு தன பூஜை, மகா கணபதி ஹோமம்,நவக்கிரக ஹோமம்,வாஸ்து சாந்தி நடந்தது. மாலை 5மணிக்கு விக்னேஸ்வர பூஜை,புண்ணியா ஹவாசனம்,முதற்கால யாக பூஜை ஆகியவை நடக்கிறது.

    கும்பாபிஷேக விழா நாளை 5-ந்தேதி நடக்கிறது. காலை 6மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியா ஹவாசனம், 2-ம் கால யாக பூஜை, நாடி சந்தானம், கலசங்கள் புறப்பாடு, 9.15 மணிக்கு கல்யாண விநாயகர் விமான மகா கும்பாபிஷேகம், கல்யாண விநாயகர் மூலாலய கும்பாபிஷேகம், மகா அபிஷேகம்,மகாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது. 6-ந் தேதி முதல் மண்டல பூஜை தொடங்கி 48 நாட்களுக்கு நடக்கிறது.

    கும்பாபிஷேக பூஜைகளை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இரண்டாம் தானீகம் ராஜா பட்டர் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மதுரை நாடார் உறவின்முறை சுப்புராஜ நாடார்-கிருஷ்ணம்மாள் மன்றத்தினர் செய்துள்ளனர்.

    ×