search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருத்தணி"

    இன்று காலை 10 மணி அளவில் காவடி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் தாலி சரடு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து தினசரி காவடி மண்டபத்தில் எழுந்தருளிய சண்முகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புஷ்பாஞ்சலி விழா நேற்று மாலை நடைபெற்றது.

    கொரோனா அச்சறுத்தல் காரணமாக லட்சார்ச்சனை ரத்து செய்யப்பட்டது. பக்தர் கள் உட்கார்ந்து தரிசிக்க கோவில் நிர்வாகம் தடை விதித்து இருந்தது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கவசம், வைர கிரீடம், பச்சைக் கல் மரகத மாலை மற்றும் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    திருத்தணி மா.பொ.சி. சாலையில் உள்ள சுந்தர விநாயகர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள் புஷ்பங்கள் அடங்கிய கூடைகளை மலைக்கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

    சுமார் ஒரு டன் எடையுள்ள பல்வேறு வகையான பூக்களால் சண்முகருக்கு புஷ்பாஞ்சலி நடத்தி தீப ஆராதனை செய்யப்பட்டது.

    இன்று காலை 10 மணி அளவில் காவடி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் தாலி சரடு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும்.
    ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா ஏழு நாட்கள் நடைபெறும்.

    திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ந் தேதி துவங்கியது. அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் உற்சவர் சண்முகர் சிறப்பு அலங்காரத்தில் காவடி மண்டபத்தில் எழுந் தருளினார்.

    அதனைத் தொடர்ந்து உற்சவர் சண்முகர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கொரோனா தொற்று காரணமாக உற்சவர் சண்முகருக்கு லட்சார்ச்சனை நடத்தப்படவில்லை.

    மேலும் இன்று அதிகாலை மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் அரக்கோணம் சாலையில் உள்ள அருள்மிகு சுந்தர விநாயகர் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக உற்சவர் சண்முகப் பெருமாள் காவடி மண்டபத்தில் எழுந்தருள்வார்.

    அதனைத் தொடர்ந்து மாலையில் சண்முகப் பெருமானுக்கு பல்வேறு மலர்களால் புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதனை நடைபெறும். நாளை காலை முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணமும் நடைபெறும்.

    புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதற்கு மாறாக பக்தர்கள் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோவில் யூடியூப்சேனல் மற்றும் இணைத்தளம் மூலம் நேரடி ஒளி பரப்பு செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும். முருகப்பெருமான் சினம் தணிந்து வள்ளியை திருமணம் செய்ததால் புஷ்பாஞ்சலி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோவில் யூடியூப்சேனல் மற்றும் வலை தளம் மூலம் நேரடி ஒளி பரப்பு செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
    திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை நடை பெற உள்ளது.

    கொரோனா தொற்று முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கோவிலில் லட்சார்ச்சனைக்கு அனுமதி இல்லை. விழா நாட்களில் பக்தர்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 9-ந் தேதி மாலை 5.30 மணியளவில் நடைபெறும் புஷ்பாஞ்சலி மற்றும் 10-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

    இதற்கு மாறாக பக்தர்கள் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோவில் யூடியூப்சேனல் மற்றும் வலை தளம் மூலம் நேரடி ஒளி பரப்பு செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், கைகளுக்கு கிருமிநாசினி தெளித்தும் பாதுகாப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இத்தலத்தில் முருகப்பெருமான் தன் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருப்பதுடன் இங்கு வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும் தந்தருள்கின்றார்.

    அமைவிடம் :


    திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து மும்பை செல்லும் ரயில்பாதை வழியில், அரக்கோணத்திற்கு வடக்கே 13 கிலோ மீட்டரிலும், சென்னையில் இருந்து வடமேற்கே 84 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருத்தணி. "தொண்டை நாடு" என்று அழைக்கப்படும் பகுதியில் திருத்தணி அமைந்திருப்பதாக தமிழ் நூல்கள் கூறுகின்றன.

    தொண்டை நாட்டின் தலைநகரமாகிய காஞ்சிபுரம் தெற்கிலும்; விரிஞ்சிபுரம் - வள்ளிமலை - சோளிங்கபுரம் ஆகியவை மேற்கிலும்; திருவாலங்காடு கிழக்கிலும்; திருக்காளத்தி - திருப்பதி வடக்கிலும் சூழ்ந்திருக்க, அவற்றிற்கு மத்தியில் நடுநாயகமாகத் திருத்தணிகைத் தலம் அமைந்துள்ளது.

    தணிகை :

    முருகப்பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை மணந்துகொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, தணிந்து அமர்ந்த தலம் என்பதால் தணிகை எனப் பெயர் பெற்றதாக அறியப்படுகிறது.

    தேவர்களின் அச்சம் தணிந்த இடம். முனிவர்கள் காம வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம். அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும், இதற்குத் தணிகை என்று பெயரமைந்ததாகவும் கூறப்படுகிறது.

    தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் (பொறை) என்பதும் ஒரு பொருளாதலின், "அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம், திருத்தணிகை" என்று கொள்ளுதலும் பொருந்தும்.

    திருத்தணிகை மலை :

    இத்தலத்தில், முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி வீற்றிருக்கின்றார். ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், கோயில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முருகன் எழுந்தருளி விளங்கும் மலையின் இருபுறங்களிலும், மலைத் தொடர்ச்சிகள் பரவிப் படர்ந்துள்ளன. வடக்கே உள்ள மலை சிறிது வெண்ணிறமாக இருப்பதனால் "பச்சரிசி மலை" என்றும், தெற்கே உள்ள மலை கருநிறம் வாய்ந்திருப்பதனால் "பிண்ணாக்கு மலை" என்றும் கூறப்படுகின்றன.

    ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் மலையடிவாரம் உள்ளது. "சரவணப் பொய்கை" என வழங்கும் புகழ்மிக்க "குமார தீர்த்தம்" என்னும் பெரிய திருக்குளம், மலையடிவாரத்தில் உள்ளது. யாத்திரீகர்களும், பக்தர்களும் இதிலேயே பெரும்பாலும் நீராடுவது வழக்கம். இத்தீர்த்தத்தை சுற்றிப் பல மடங்கள் உள்ளன. அதனால் இப்பகுதிக்கு "மடம் கிராமம்" என்று பெயர் வழங்குகிறது. திருக்குளத்தின் தென்மேற்கு மூலையில், மலையடிவாரம் இருக்கின்றது.

    திருக்குளத்தின் கிழக்குக் கரையினின்று மலையைப் பார்த்தால், வளைவாக இடம்பெற்ற ஒரு மாலை போலவும், மூவுருவம் எடுத்த ஒரு பரம்பொருள் போலவும்; மூன்று மலைகள் விளங்கும். அவற்றின் மத்தியில் திருமுருகன் திருக்கோயில் நடுநாயகமாகச் சிறந்தோங்கி விளங்குவது மிகவும் அழகு நிறைந்த காட்சியாகும்.

    அருணகிரிநாதர் தனது பாடலில் "அழகுத் திருத்தணிமலை" என்று புகழ்ந்து போற்றியிருக்கின்றார். திருமுருகனுக்கு இணையான தெய்வங்கள் எதுவும் இல்லை என்பது போலவே, திருத்தணிகைக்குச் சமமான தலமும் வேறெந்த தலமும் இல்லை எனலாம்.

    தணிகைக்கோயிலின் தொன்மைச்சிறப்பு :


    திருத்தணிகை முருகன் திருக்கோயில், மிகவும் தொன்மை வாய்ந்தது. முருக பக்தரான அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றித் துதித்துள்ளார். அதனால் 600 ஆண்டுகளுக்கு முன்பே, இத்தலமும் கோயிலும் புகழோங்கித் திகழ்ந்திருந்தன என்பது திண்ணம்.

    தவிர, சுமார் 900 ஆண்டுகளுக்கும் முன்பே வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில் "மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சிபுரம் போலவும், மலைகளிலெல்லாம் சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே" என்று பாடியுள்ளார்.

    சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருப்புறம்பயம் தலத்துத் திருத்தாண்டகத்தில் "கல் மலிந்தோங்கும் கழுநீர்க் குன்றம்" என்று திருத்தணிகையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தேவேந்திரன் இங்கு முருகப் பெருமானை நீலோற்பலம் என்னும் கழுநீர் மலர்கொண்டு பூசித்தான் என்பது தலவரலாறு.

    தலச்சிறப்பு :

    சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த நக்கீரர் என்னும் நல்லிசைப் புலவர் பெருமான், முருகனைப் பற்றித் திருமுருகாற்றுப்படை என்னும் சிறந்த துதி நூலைப் பாடியிருக்கின்றார். அதன்கண் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்ச்சோலை என்னும் ஆறு திருத்தலங்களும், முருகனின் ஆறுபடை வீடுகள் என்று சிறப்பாகப் போற்றப்பெறும்.

    இவைகளுள் குன்றுதோறாடல் என்பது, முருகன் எழுந்தருளி விளங்கும் மலைத் தலங்கள் எல்லாவற்றையுமே குறிக்குமாயினும், திருத்தணிகை தலத்தையே தனிச்சிறப்பாகக் குறிக்கும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

    முருகப்பெருமான், தன் கிரியா சக்தியாகிய தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டாற்போல், திருத்தணிகையில் தன் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருந்தருள்கின்றார். திருத்தணிகையின் சிறப்பிற்கு இதுவே சிறந்த பெருங்காரணமாகும்.

    பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், கந்தப்ப தேசிகர், கச்சியப்பமுனிவர், கச்சியப்ப சிவாசாரியர், அருணகிரிநாதர் ஆகிய அருட்பெருஞ் சான்றோர்கள் பலரும், திருத்தணிகை முருகனைப் பெரிதும் புகழ்ந்துப் பாடியுள்ளனர்.

    வள்ளலார் பெற்ற அருள் :

    19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வடலூர் இராமலிங்க அடிகளார், திருத்தணி முருகப்பெருமானை நினைந்து உருகி அப்பெருமானையே ஞான குருவாகக் கொண்டார். வள்ளலார் இளம் வயதிலேயே கண்ணாடியில் திருத்தணி முருகப்பெருமானின் காட்சி கிடைக்கப் பெற்றவர். இதனால், பிரார்த்தனை மாலையில் திருத்தணி முருகனை போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.

    பல லட்சக்கணக்கான மக்கள், திருத்தணிகை முருகனைத் தம் குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு நலம் பெற்று வருகின்றனர்.
    திருத்தணி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பள்ளிப்பட்டு:

    திருத்தணி அருகே உள்ள தாடூர் காலனியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    அவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனை கண்டித்தும், குடிநீர் வழங்கக் கோரியும் அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று காலை இ.என். கண்டிகையில் திருத்தணி- சித்தூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கிராம மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஆங்கில புத்தாண்டு மற்றும் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை என்பதால் திருத்தணி கோவிலில் காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.
    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில், இன்று அதிகாலை, 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், நடந்தது, தொடர்ந்து, மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.



    இரவு, 7.30 மணிக்கு வெள்ளிநாக வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, மாடவீதியில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆங்கில புத்தாண்டு மற்றும் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை என்பதால் திருத்தணி கோவிலில் காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால், பொது வழியில் 6 மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.
    திருத்தணி அருகே கார் உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரம் அருகே தனியார் கார் உதிர் பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.

    இந்த கம்பெனியில் திருத்தணி, ஆர்.கே. பேட்டை அரக்கோணம் சோளிங்கர், திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து 1500 பேர் இரண்டு ஷிப்டுகளில் பணியாற்றி வருகின்றனர்.

    முதல் ஷிப்ட் 8 மணி முதல் ஐந்து மணிவரை. இரண்டாவது ஷிப்ட் 5 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை என 2 ஷிப்டுகளில் 1500 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இதில் காரின் உதிரிபாகங்களான ஸ்டேரிங், இண்டிகேட்டர், ஸ்விட்ச் கியர் உள்ளிட்ட ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கப்படுகிறது.

    நேற்று இரவு வழக்கம் போல் பணியாற்றிவிட்டு தொழிலாளர்கள் இரவு 2 மணிக்கு மேல் சுமார் 30 தொழிலாளர்கள் மட்டுமே பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இரவு சுமார் 2 மணி அளவில் எதிர்பாராதவிதமாக ஸ்பார்க் ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது மளமளவென தீ நாலாபுறமும் பற்றி எரிந்தது. இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் போலீசார் அங்கு சென்றனர்.

    திருத்தணி மற்றும் திருவள்ளூர் அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகி விட்டதாக கூறப்படுகிறது.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருத்தணி அருகே விபத்தில் 3 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டை அடுத்த பாண்டறவேடு கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 32). நேற்று இரவு அவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து விட்டு அதே பகுதியை சேர்ந்த நண்பர் அரிகிருஷ்ணனுடன் (30) ஒரே மோட்டார் சைக்கிளில் திருத்தணி நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

    திருத்தணி அருகே முருகம்பட்டு சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த முருகம்பட்டு கிராமத்தை சேர்ந்த அஜித் (18), கதிரேசன் (24) ஆகியோர் மீது பாஸ்கரன்-அரிகிருஷ்ணன் வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிளில் இருந்த பாஸ்கரன், அஜித், கதிரேசன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    அரிகிரு‌ஷணன் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    விபத்தில் 3 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருவள்ளூர் மற்றும் திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவள்ளூர்:

    தமிழகத்தில் பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கு மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கவேண்டும். முறையான பதவி உயர்வு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் கூட்டு நடவடிக்கை குழுவின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் டாக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமா, ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான அரசு மருத்துவமனை டாக்டர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு திருத்தணி பிராந்தியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் அரசு டாக்டர்கள் தங்களது அனைத்து மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சந்திரன் தலைமை தாங்கினார். இதில் திருத்தணி அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் ஹேமாவதி மற்றும் திருத்தணி பிராந்தியத்துக்கு உட்பட்ட பீரகுப்பம், பூனிமாங்காடு, அத்திமாஞ்சேரிபேட்டை, ஆர்.கே.பேட்டை ஆகிய மருத்துவமனைகளை சேர்ந்த டாக்டர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    அப்போது அவர்கள் கூறும்போது, “எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்போராட்டங்கள் நடத்தப்படும். முதல் கட்டமாக வருகிற 24-ந்தேதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 27-ந்தேதி முதல் அலுவலக ரீதியாக ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும். அடுத்தமாதம் 21-ந்தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்வோம்” என்றனர். 
    வேலூரில் இருந்து திருத்தணிக்கு 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று அரசு போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.
    வேலூர்:

    முருகன், கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா வரும் 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து முருகனை வழிபடுவார்கள். திருத்தணி கோவிலுக்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் இன்றிலிருந்தே அதிகளவில் காவடி எடுத்து செல்கின்றனர்.

    இதற்காக வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 400 பஸ்கள் இயக்கபடுகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு (வெள்ளி, சனி, ஞாயிறு) வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 516 டிரிப் (நடை), பழைய பஸ் நிலையத்தில் இருந்து 279 டிரிப், ஆற்காட்டில் இருந்து 119 டிரிப், பேர்ணாம்பட்டில் இருந்து 42 டிரிப், திருப்பத் தூரில் இருந்து 158 டிரிப் என மொத்தம் 1,310 டிரிப்களாக சிறப்பு பஸ்கள் திருத்தணிக்கு இயக்கப்படுகிறது. அதே நேரம் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானால் சிறப்பு பஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருத்தணி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ. 1½ கோடி மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருத்தணியை அடுத்த கோரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாமோதரன், ருக்மாங்கதன். இவர்கள் சென்னை திருமுல்லைவாயில் ஜெயலட்சுமி நகரை சேர்ந்த தாமோதரனுடன் இணைந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.

    இவர்களிடம் கோரமங்கலம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி ராஜூ உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்தனர். முனுசாமி ராஜூ கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை ரூ. 3½ லட்சம் கட்டி இருந்தார்.

    ஏலச்சீட்டு முடிந்ததும் அவருக்கு பணம் கொடுக்கப்படவில்லை. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டோருக்கும் பணம் வழங்கவில்லை.

    ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முனுசாமி ராஜூ ஏலச்சீட்டு மோசடி குறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    இதுபற்றி விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு போலீஸ் சூப்பிரண்டு சிபி. சக்கரவர்த்தி உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் அனுமந்தன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் ரூ. 1½ கோடி வரை ஏலச்சீட்டு மோசடி நடந்து இருப்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து ஏலச்சீட்டு நடத்திய தாமோதரன், ருக்மாங்கதன், வெங்கடராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். #Tamilnews
    திருத்தணி அருகே ஆசிரியருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பள்ளிப்பட்டு:

    திருத்தணியை அடுத்த தும்பிகுளம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    தலைமை ஆசிரியர் உள்பட மொத்தம் 13 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். கணக்கு ஆசிரியர் சரிவர வகுப்புக்கு வருவதில்லை என்று கடந்த ஆண்டு மாணவர்களும், பெற்றோர்களும் புகார் தெரிவித்தனர். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும், திருத்தணி உதவி தொடக்க கல்வி அலுவலரிடமும் புகார் மனு கொடுத்து இருந்தனர்.

    அப்போது கணக்கு ஆசிரியர் இடமாற்றம் செய்யப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த கல்வியாண்டில் மாணவர்கள் வகுப்புக்கு சென்ற போது குற்றம் சாட்டப்பட்ட கணக்கு ஆசிரியர் மீண்டும் வகுப்புக்கு வந்தார்.

    இதனை அறிந்த மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாணவர்களின் பெற்றோர்களும் பங்கேற்று உள்ளனர். அவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். #Tamilnews
    ×