search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொர்க்கவாசல்"

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 03.12.2021 முதல் 24.12.2021 வரை நடைபெறவிருக்கிறது. 14-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    பூலோக வைகுண்டமாகவும், 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும் திகழும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பு வாய்ந்தது.

    இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 03.12.2021 முதல் 24.12.2021 வரை நடைபெறவிருக்கிறது. பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை ஆயிரங்கால் மண்டபம் அருகே நடைபெற்றது.

    விழாவையொட்டி 3-ந் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி நடக்கிறது. 4-ந்தேதி பகல் பத்து உற்சவத்துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து 13-ந்தேதி நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    14-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு நம்பெருமாள் அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    20-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 21-ந்தேதி தீர்த்தவாரியும், 23-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது. அன்றுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று காலை 04.45 மணி முதல் இரவு 10.00 மணி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும்.
    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் 31-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் போது சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவது பிரசித்தி பெற்றதாகும். இதேபோல ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவது வழக்கம். அதன்படி திருமொழி சேவித்தல் நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

    நாளை முதல் வருகிற 30-ந்தேதி வரை கோவிலில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தல் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி நடைபெற உள்ளது. இரவு 7.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை பொது ஜன சேவை நடைபெறும். வருகிற 30-ந்தேதி இரவு 8.30 மணி முத்துக்குறி, வியாக்யானம், அபிநயம், அரையர் தீர்த்தம், ஸ்ரீ சடகோபம் சாதித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    நாளை முதல் 30-ந்தேதி வரை தாயார் புறப்பாடு இல்லை. மேலும் மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூலஸ்தான சேவை கிடையாது. திருவாய் மொழி எனும் ராப்பத்து நிகழ்ச்சி வருகிற 31-ந்தேதி (வியாழக் கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. வழிநடை உபயங்கள் கண்டருளி, ஆழ்வார்-ஆச்சாரியார் மரியாதையாகி மாலை 6.30 மணி அளவில் ஆஸ்தான மண்டபம் சேர்ந்தடைகிறார்.

    மாலை 6.45 மணிக்கு திருவாய்மொழி கோஷ்டி, அலங்காரம் அமுது செய்தல் நடைபெறும். இரவு 7.30 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டியும், இரவு 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் தீர்த்த கோஷ்டியும் நடைபெற உள்ளது. இரவு 8 மணி முதல் இரவு 8.45 மணி வரை பொது ஜன சேவை நடைபெறும். இரவு 9 மணிக்கு அலங்காரம், கோஷ்டி வகையறா கண்டருளி திருவாய்மொழி மண்டபத்தில் இருந்து புறப்பாடு நடைபெறும். வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சென்றடைவார். வருகிற 2-ந்தேதி வரை மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    வருகிற 3-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். மாலை 6.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை ஹிரண்யவதம், அரையர் தீர்த்தம், சடகோபாம் சாதித்தல் நடைபெறும். வருகிற 4-ந்தேதி மாலை 5.30 மணிக்கு தாயார் தீர்த்தவாரி கண்டருளுகிறார். இன்று மாலை 6.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். இரவு 7.15 மணி முதல் இரவு 8.45 மணி வரை திருமஞ்சனம் நடைபெற உள்ளது. வருகிற 5-ந்தேதி மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இயற்பா தொடங்கும். இரவு 8 மணிக்கு தீர்த்த வினியோகம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 5 மணி முதல் மூலஸ்தான சேவை கிடையாது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 
    காவேரிப்பாக்கம் திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 18-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
    ஆண்டுக்கு 25 ஏகாதசிகள் வருகின்றன. ஒரு மாதத்திற்கு 2 ஏகாதசிகள். ஆனால் மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி மங்கள நாளாக கருதப்படுகிறது. ஸ்ரீஆண்டாள் மார்கழி மாதம் 30 நாளும் பெருமாளையே நினைத்து நோன்பு இருந்து, அவரையே மணப்பேன் என்று தான் சூடி பிறகு ஆண்டவனுக்கு பூமாலை சூட்டி திருமணம் செய்து கொண்டார். இதுவே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது.

    இந்த சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி அன்று இரவு முழுவதும் சாமியின் திருநாமத்தை சொல்லிக்கொண்டு விழித்திருந்து மறுநாள் துவாதசி அன்று விடியற்காலை குளித்து பகவானை தரிசனம் செய்து, வீட்டில் படையல் கொடுத்துவிட்டு விரதத்தை முடிப்பது தான் வைகுண்ட ஏகாதசி விரதமாகும். இவ்வாறு வைகுண்ட ஏகாதசி அன்று நாள் முழுவதும் விரதம் இருந்து மகா விஷ்ணுவின் நாமத்தை துதிக்கும் பக்தர்களுக்கு இந்த பிறவியில் நிலைத்த புகழ், குழந்தை செல்வம், நோயற்ற வாழ்வு ஆகியவற்றை அளிப்பதோடு வைகுண்ட வாசம் (சொர்க்கம்) வழங்குவதாகவும், புராணங்களில் கூறப்படுகிறது.

    காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகின்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் 107-வது திவ்ய தேசமாக அழைக்கப்படுகிறது. இங்குள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தால் சித்ரகுப்தன் எழுதி வைத்த நம்முடைய பாவங்கள் விமோசனம் ஆகிறது என்பது ஐதீகம்.

    திருப்பாற்கடலில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிவலிங்கத்தின் மீது நின்ற கோலத்தில் வெங்டேச பெருமாள் காட்சி தருவது விசேஷமாகும். அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் கோவிலாக இக்கோவில் அமைந்துள்ளது. அதோடு வைணவத்தையும், சைவத்தையும் ஒன்றிணைக்கும் திருத்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

    இந்த கோவிலில் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதையொட்டி அதிகாலை 3 மணிக்கு பிரசன்ன வெங்கடேச பெருமாள் மற்றும் இதர மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 3.30 மணிக்கு ஆஞ்சநேயர் மூலவர், உற்சவர் சாமிகளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவையொட்டி அதிகாலை முதல் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் ஆற்காடு, காவேரிப்பாக்கம், சோளிங்கர், பனப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தக்கார் பரந்தாமகண்ணன், செயல் அலுவலர் திருஞானம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    அழகர்கோவில் கள்ளழகர் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வருகிற 18-ந்தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    ஆண்டுதோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது எதார்த்தம். அப்போது பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்ய வருகை தருவார்கள். அதன்படி இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.

    மதுரை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் 18-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து, அங்குள்ள சயன மண்டபத்தில் எழுந்தருளி கள்ளழகர் பெருமாள் அருள்பாலிப்பார்.

    இக்கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில், அதே நாளில் அதே நேரத்தில் சொர்க்கவாசல் வழியாக பெருமாள் எழுந்தருளுவார். அப்போது ஆயிரகணக்கான பக்தர்கள் கோவில்களில் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு இரவு 7.15 மணி அளவில் நடைபெறும். அப்போது பெருமாள் பரமபதவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உபகோவிலான கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோவிலில் வருகிற 18-ந் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை 5.30 மணியில் இருந்து 7 மணிக்குள் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு பெருமாள் கருடவாகனத்தில் திருவீதி உலா நடைபெறும்.

    இதேபோன்று மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் 18-ந்தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பெருமாள் கோவில்களில் 18-ந்தேதி சொர்க்க வாசல் திறக்கப்படும் நிலையில், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுவது விசேஷத்திலும் விசேஷம். பெருமாள் கோவில்களில் ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கவாசல் திறக்கப்படும். ஆனால் திருப்பரங்குன்றம் கோவிலில் ஆண்டு முழுவதும் திறக்கப்பட்டிருக்கும். திருப்பரங்குன்றத்தில் மலையை குடைந்து கருவறையாக அமைந்துள்ள 5 சன்னதிகளில் பவளக்கனிவாய் பெருமாள் சன்னதியும் ஒன்று. இந்தநிலையில் திருப்பரங்குன்றம் கோவிலில் 18-ந்தேதி மாலை 6 மணி அளவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருநெல்வேலியில் உள்ள நவதிருப்பதி கோவில்களில் பகல்பத்து, இராப்பத்து திருவிழா தொடங்கியது. 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
    நவதிருப்பதி கோவில்களில் முதலாவது தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில், 7வது தலமான தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில், 9வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் திரு அத்யயன உற்சவம் (பகல்பத்து, இராப்பத்து திருவிழா) நேற்று தொடங்கியது.

    காலையில் சுவாமி உடையவர் சன்னதியில் இருந்து ஆச்சாரியார்களுடன் புறப்பட்டு, சுவாமி நம்மாழ்வார் சன்னதிக்கு எழுந்தருளி அருளிப் பாடு பெற்று, பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து பெருமாள் நாச்சியார், சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளினர். பின்னர் திருப்பல்லாண்டு அரையர்சேவை நடந்தது.

    பகல்பத்து திருவிழா திருமொழி திருநாளாகவும், இராப்பத்து திருவிழா திருவாய்மொழி திருநாளாகவும் கொண் டாடப்படுகிறது. பகல்பத்து திருவிழா நாட்களில் தினமும் காலையில் பெருமாள் நாச்சியார் ஆஸ்தானத்தில் இருந்து அலங்கார வாத்தியங்களுடனும், சுவாமி நம்மாழ்வார் ஆஸ்தான த்தில் இருந்து தாலாட்டு வாத்தியங் களுடனும் எழுந்தருளுகின்றனர். தினமும் அரையர் சேவையாக சென்னி யோங்கு, திருப்பாவை, ஊனேறு செல்வம் போன்றவை நடைபெறும்.

    இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இரவில் சொர்க் கவாசல் திறக்கப்படுகிறது. விழாவின் நிறைவு நாளான வருகிற 29-ந்தேதி சுவாமி நம்மாழ்வார் வீடு விடை திருமஞ்சனம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் விசுவநாத், தக்கார் இசக்கியப்பன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    ×