search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதி"

    கார்த்தி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
    கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் கார்த்தியுடன் நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இதில் கார்த்தி ஆயுள் தண்டனை கைதியாக நடித்திருந்தார். 

    தமிழ் சினிமா ரசிகர்களை எல்லாம் கடந்து, இந்தியளவில் பல பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்றதோடு, பல்வேறு விருதுகளையும் வென்றது. தற்போது இந்தியில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கைதி படத்தின் 2-ம் பாகமும் உருவாக உள்ளது.

    கைதி படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், கைதி படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகி உள்ளது. ஜப்பானில் ‘கைதி டில்லி’ என்ற பெயரில் இப்படம் வருகிற நவம்பர் 19-ந் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் ஒன்று ஜப்பானில் ரிலீசாவது இதுவே முதன்முறை. ஏற்கனவே ரஜினி நடித்த படங்கள் சில ஜப்பானில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளதால், கார்த்தியின் கைதி படத்துக்கும் அங்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கர்நாடக ஜெயிலில் இருந்து தூக்குதண்டனை கைதி தப்பி ஓடியது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகிறார்கள். #Karnatakajail

    பெல்காம்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவர் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் தாலுகாவில் உள்ள அரலே கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இங்கு ஈரோட்டை சேர்ந்த ராஜேந்திரன், ராஜம்மா, காசி, அவரது மனைவி சிலம்மா உள்பட 15 பேர் வேலை பார்த்தனர்.

    இந்த நிலையில் ராஜம்மா, சிலம்மாவிடம் முருகேசன் தவறாக நடக்க முயன்றார். இதில ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரன், ராஜம்மா, சிலம்மா, அவரது கணவர் காசி, மகள் ரோஜா ஆகிய 5 பேரையும் வெட்டி கொன்றார். இச்சம்பவம் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 15-ந்தேதி நடந்தது.

    கைது செய்யப்பட்ட முருகேசனுக்கு  தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பெல்காவி ஹிண்டல்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் சிறையில் இருந்த முருகேசன் திடீரென்று மாயமானார். அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறை முழுவதும் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. முருகேசன் ஜெயிலில் இருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

    தேர்தல் பாதுகாப்பு பணிக்கு போலீசார் சென்றதால் சிறையில் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி முருகேசன் தப்பி உள்ளார். அவரை கர்நாடக போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். #Karnatakajail

    அமெரிக்காவில் மரண தண்டனை கைதி ஒருவர் தனது மரணத்தை தானே தேர்வு செய்ததன் அடிப்படையில் அவருக்கு மின் அதிர்ச்சி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. #AmericaPrisoner #Prisoner
    நாஸ்வில்லே:

    அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்த டேவிட் ஏர்ல் மில்லர், 1981-ம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 36 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பின்னர் நேற்றுமுன்தினம் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்தன. டென்னிசி மாகாணத்தை பொறுத்தமட்டில் பொதுவாக விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றுவது வழக்கம். இது நீடித்த மற்றும் மிக வேதனையான மரணத்தை தரும். எனவே விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றினால் தனக்கு வலி அதிகம் இருக்கும் என கூறிய டேவிட் ஏர்ல் மில்லர், தன்னை மின்சார நாற்காலியில் அமர வைத்து, உடலில் மின்சாரத்தை பாய்ச்சி மரண தண்டனையை நிறைவேற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    அவருடைய கோரிக்கை ஏற்கப்பட்டது. அதன்படி நேற்றுமுன்தினம் மாலை உள்ளூர் நேரப்படி 7.25 மணிக்கு தலைநகர் நாஸ்வில்லேவில் உள்ள சிறைச்சாலையில் டேவிட் ஏர்ல் மில்லரை மின்சார நாற்காலியில் அமர வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    இது அங்கு முதல் முறை அல்ல. கடந்த 2013-ம் ஆண்டு சகோர்ஸ்கி என்கிற கைதி, இதே போன்று தனக்கு விஷ ஊசி வேண்டாம் என்றும் மின்சாரத்தை பாய்ச்சி மரண தண்டனையை நிறைவேற்றும் படியும் கேட்டார். அதன்படியே அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.  #AmericaPrisoner #Prisoner
    ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதி பல்சர்பாபுவை போலீசார் கைது செய்தனர்.

    பூந்தமல்லி:

    காசிமேடு பகுதியை சேர்ந்தவன் பாபு என்கிற பல்சர்பாபு. இவன் மீது ஏராளமான வழிப்பறி வழக்குகள் உள்ளன.

    ‘பல்சர்’ பைக்குகளில் மட்டுமே சென்று வழிப்பறியில் ஈடுபடுவது இவரது ஸ்டைல்.

    தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்ட பாபுவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    கடந்த மாதம் அவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவனை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கடந்த மாதம் 14-ந்தேதி அதிகாலை பாபு, டீ குடிக்க வேண்டும் என்று பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் தெரிவித்தான். அவனை போலீசார் தங்களது மோட்டார் சைக்கிளில் அமர வைத்து ஆஸ்பத்திரி முன்பு உள்ள டீக்கடைக்கு அழைத்து சென்றனர்.

    டீ குடித்துக் கொண்டு இருந்தபோது பாபு திடீரென போலீஸ்காரர்களை தள்ளி விட்டு அருகில் சாவியுடன் நிறுத்தி இருந்த அவர்களது மோட்டார் சைக்கிளை ஓட்டி தப்பி சென்று விட்டான்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஒரு மாதமாக பாபு போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்தான்.

    இந்த நிலையில் பாபு, பெருங்களத்தூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் விரைந்து சென்று பாபுவை கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடந்து வருகிறது.

    சென்னை புழல் சிறையில் கைதியிடம் மீண்டும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. #PuzhalJail

    செங்குன்றம்:

    கும்மிடிப்பூண்டி சுவாமி ரெட்டி கண்டிகை பகுதியை சேர்ந்தவர் பரத் என்கிற சிவபரத் (27). ஒரு வழக்கு தொடர்பாக இவரை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    நேற்று இரவு 10 மணி அளவில் பரத் ஜெயில் அறைக்கு வெளியே அமர்ந்திருந்தார். சிறை போலீசாரை பார்த்ததும் அவர் அறைக்குள் சென்று விட்டார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது அறையில் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு செல்போன், சார்ஜர், 2 சிம்கார்டு ஆகியவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து ஜெயிலர் உதயகுமார் புழல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அவருக்கு செல்போன், சிம்கார்டு, சார்ஜர் ஆகியவை எங்கிருந்து வந்தது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புழல் ஜெயிலில் கடந்த மாதம் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைதிகளிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் கைதியிடம் செல்போன் சிக்கியுள்ளது. #PuzhalJail

    சென்னை புழல் சிறையில் விசாரணை கைதியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    செங்குன்றம்:

    ராயப்பேட்டையை சேர்ந்தவர் விமலநாதன் என்கிற சைகோ விமல் (24). திருட்டு வழக்கு தொடர்பாக மறைமலைநகர் போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அவர் தான் அடைக்கப்பட்டிருந்த சிறை வாசலில் அமர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு ரோந்து சுற்றி வந்த சிறை காவலர்கள் அதை பார்த்து விட்டனர். உடனே விமலநாதன் தான் பேசிக் கொண்டிருந்த செல்போனை கழிவறையில் வீசி விட்டார். இதற்கிடையே அதிகாரிகளுடன் வந்து அங்கு சோதனை செய்த போலீசார் கழிவறையில் இருந்து செல்போனை எடுத்தனர்.

    இது குறித்து ஜெயிலர் உதயகுமார் புழல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    புழல் சிறையில் உள்ள கைதி ஒருவரை ஜாமீனில் விடுவிப்பதற்காக வந்த கடிதத்தில் முகமதுஷெரீப் தனது பெயரை மாற்றி தப்பியது தற்போது தெரியவந்துள்ளது. #PuzhalJail
    சென்னை:

    சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் முகமதுஷெரீப் (வயது 27). வீடு புகுந்து திருடிய வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி முகமது ஷெரீப்பை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவன் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டான்.

    புழல் சிறையில் உள்ள ஜெயிலர் மற்றும் சப்-ஜெயிலரிடம் முகமது ஷெரீப் நன்றாக பழகினான். இதனால் அவனை உதவியாளர் போல அதிகாரிகள் வேலை வாங்கினர்.

    இந்த நிலையில் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதியை ஜாமீனில் விடுவிப்பதற்கான கடிதம் கடந்த 4-ந்தேதி ஜெயிலுக்கு வந்தது. அந்த கடிதத்தை முகமது ஷெரீப் வாங்கி அதிகாரிகளிடம் கொடுக்க சென்றார்.

    திடீரென்று முகமது ஷெரீப் கடிதத்தின் உறையில் இருந்த பெயரை நீக்கி தனது பெயரை மாற்றி எழுதி தன்னை ஜாமீனில் விட கடிதம் வந்துள்ளதாக அதிகாரிகளிடம் கொடுத்தான். அதிகாரிகளும் அதை சரியாக கவனிக்காமல் முகமது ஷெரீப்பை கடந்த 5-ந்தேதி வெளியே விட்டு விட்டனர்.

    இந்த நிலையில் முகமது ஷெரீப்பை ஜாமீனில் விடுவதற்கான கடிதம் ஜெயிலுக்கு வந்தது. அதன் பிறகே வேறொருவருக்கு வாங்கிய ஜாமீனில் முகமது ஷெரீப் தனது பெயரை மாற்றி தப்பியது தெரியவந்தது. இதனால் ஜெயிலில் பரபரப்பு ஏற்பட்டது. #PuzhalJail

    சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறையில் சோதனை நடத்திய அதிகாரிகள் 2 செல்போனை பறிமுதல் செய்தனர்.
    சேலம்:

    சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்தியது தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் சிறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது கைதிகளிடம் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    சேலம் மத்திய சிறையில் சுமார் 850-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று சிறை அதிகாரிகள் டவர் பிளாக்கில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறையில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது ஒரு கைதியிடம் 2 செல்போன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த செல்போன் அவருக்கு எப்படி கிடைத்தது? என்பது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கைதிகள் மனதில் நல்ல மாற்றத்தை உருவாக்கும்நோக்கத்தில், மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை தொடங்கப்பட்டுள்ளது. #DeviAhilyabaiOpenColony #Prision
    இந்தூர்:

    கைதிகள் மனதில் நல்ல மாற்றத்தை உருவாக்கும்நோக்கத்தில், மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை தொடங்கப்பட்டுள்ளது. ‘தேவி அகில்யாபாய் திறந்தவெளி காலனி’ என்று அதற்கு பெயர். மாவட்ட ஜெயிலுக்கு அருகிலேயே சிறை நிர்வாகத்தின் கண்காணிப்பில், இந்த சிறைச்சாலை செயல்படுகிறது.

    முதல்கட்டமாக, திருமணமான 10 கைதிகள் அங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், ஆயுள் தண்டனை கைதிகளும் அடங்குவர். பெரும்பகுதி தண்டனை காலத்தை வேறு சிறைகளில் அனுபவித்து விட்டு, மீதி தண்டனையை அங்கு கழிப்பதற்காக, அவர்கள் வந்துள்ளனர்.

    அவர்களுக்கு 2 அறைகள் கொண்ட வீடு ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு அவர்கள் மனைவி, குழந்தைகளுடன் தங்கிக் கொள்ளலாம். வெளியே வேலைக்கு சென்றும் சம்பாதிக்கலாம். காலை 8 மணிக்கு வெளியே சென்று விட்டு, மாலை 6 மணிக்குள் திரும்பி விட வேண்டும். நகர எல்லையை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை. பிள்ளைகள், பள்ளிக்கு சென்று வரலாம்.

    திறந்தவெளி சிறைச்சாலைக்கு 3 காவலாளிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அங்கு வருபவர்களின் பெயரை எழுதிய பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள்.  #DeviAhilyabaiOpenColony #Prision
    புழல் ஜெயிலில் கைதிக்கு கஞ்சா கொடுக்க உள்ளாடையில் மறைத்து வைத்து கொன்றச் சென்ற சிறைக்காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    செங்குன்றம்:

    புழல் ஜெயிலில் காவலராக பணியாற்றி வந்தவர் பாலாஜி. இவர் நேற்று முன்தினம் மாலை பணிக்கு வந்தார். அப்போது பிரதான நுழைவு வாயிலில் இருந்த போலீசார் அவரை சோதனை செய்தனர்.

    இதில் பாலாஜி உள்ளாடையில் மறைத்து வைத்து கஞ்சா கடத்தி வந்ததும், அதனை சிறையில் உள்ள கைதிக்கு கொடுக்க இருந்ததும் தெரியவந்தது.

    இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். விசாரணையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஏஜெண்டாக செயல்பட்ட அருண் செல்வராஜ் என்பவரிடம் ரூ.2 ஆயிரம் வாங்கிக் கொண்டு காவலர் பாலாஜி கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.

    இதற்கிடையே சிறைக் காவலர் பாலாஜியை ‘சஸ்பெண்டு’ செய்து ஜெயில் சூப்பிரண்டு செந்தாமரைக் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். பாலாஜியின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆகும்.
    பாகிஸ்தான் நாட்டின் லாகூர் மத்திய சிறையில் 36 ஆண்டுகள் கைதியாக அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்தியர் விடுதலை செய்யப்பட்டு இன்று தாயகம் திரும்பினார். #GajanandSharma #Lahoreprison
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டின் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 26 மீனவர்கள் உள்பட 29 கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசு நேற்று விடுதலை செய்தது.

    அவர்கள் இன்று இந்திய எல்லைப்பகுதியான அட்டாரி-வாகா எல்லைப்பகுதிக்கு இன்று பஸ் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

    விடுதலை ஆனவர்களில் ஒருவரான கஜானந்த் சர்மா கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து திடீரென்று தனது 32 வயதில் காணாமல் போனார்.

    அவரது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல இடங்களில் தேடியும் கஜானந்த் சர்மாவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர், அவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பல ஆண்டுகள் கழித்து குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்தது.

    வாழ்நாளில் இனி ஒரு முறையாவது தனது கணவரின் முகத்தை காண வேண்டும் என்ற ஆவலுடனும், ஏக்கத்துடனும் காணாமல் போவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட கஜானந்த் சர்மாவின் பழைய புகைப்படத்துடன் அவரது மனைவி மக்னி தேவி காலம் கடத்தி வந்தார்.

    இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்ட 29 கைதிகளில் ஒருவராக லாகூர் மத்திய சிறையில்  36 ஆண்டுகள்  அடைத்து வைக்கப்பட்டிருந்த கஜானந்த் சர்மா இன்று தாயகம் திரும்பினார்.

    தற்போது 68 வயது முதியவராக இருக்கும் கஜானந்த் சர்மாவை அட்டாரி-வாகா எல்லைப்பகுதியில் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடன் கட்டித்தழுவி வரவேற்றனர். #GajanandSharma #Lahoreprison
    தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்கு ஏதுவாக கைதி ஒருவரின் ஜாமீன் வழக்கை நள்ளிரவில் விசாரித்து தீர்ப்பை ஐகோர்ட்டு நீதிபதி வழங்கியுள்ளார். #HighCourtJudge #bail
    சென்னை:

    சென்னை ராயுபுரத்தைச் சேர்ந்தவர் டேவிட்சன். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தாக்கிய வழக்கில் கடந்த 23-ந் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் டேவிட்சனின் தந்தை விஜயகுமார் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக டேவிட்சனை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி டேவிட்சனின் உறவினர்கள் வக்கீல் ஏ.கே.கோபாலை அணுகினர்.

    ஐகோர்ட்டு விடுமுறை நாட்களில் அவசர மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட வக்கீல், பதிவாளரை அணுகி அவசர நிலையை எடுத்துக்கூற வேண்டும். வக்கீலின் கோரிக்கை உடனடியாக விசாரிக்கப்பட வேண்டியதுதானா? என்பதை பதிவாளர் பரிசீலித்து தலைமை நீதிபதியிடம் எடுத்துக்கூறுவார். அதன்பின்பு, தலைமை நீதிபதியிடம் உரிய அனுமதி பெற்று ஏதாவது ஒரு நீதிபதி மூலம் விசாரணை நடத்த பதிவாளர் ஏற்பாடு செய்வார்.

    இளம் வக்கீலான ஏ.கே.கோபாலுக்கு இந்த விவரம் தெரியாததால் ஜாமீன் மனுக்களை விசாரித்து வரும் நீதிபதி ஜெகதீஷ்சந்திராவின் வீடு இருக்கும் ராஜா அண்ணாமலைபுரத்துக்கு சென்றார். அப்போது நீதிபதி வீட்டில் இல்லை என்றும், குடும்பத்தினருடன் வெளியில் சென்றிருப்பதாகவும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர்.

    இதனால் வக்கீல், நீதிபதியின் வீட்டு முன்பு காத்திருந்தார். இதற்கிடையே இரவு 10 மணிக்கு நீதிபதி வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பு, இளம் வக்கீல் ஒருவர் நிற்பதை பார்த்து விவரம் கேட்டார். அப்போது வக்கீல் கோபால், தனது கட்சிக்காரரான டேவிட்சன் என்பவரது தந்தை இறந்து போனதாகவும், இறுதி சடங்கில் கலந்து கொள்ள அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்ய வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    அப்போது நீதிபதி, பதிவாளர் மூலம் தான் இந்த மனுவை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். இந்த விவரம் தனக்கு தெரியாது என்று நீதிபதியிடம், வக்கீல் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து நீதிபதி ஜெகதீஷ்சந்திரா மனிதாபிமான அடிப்படையில் தலைமை நீதிபதியிடம் தொடர்பு கொண்டு உரிய அனுமதி பெற்று அந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து அரசு வக்கீலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசு தலைமை குற்றவியல் வக்கீல் எமிலியாஸ் அறிவுறுத்தலின் பேரில் அரசு வக்கீல் முகமது ரியாஸ், டேவிட்சன் மீதான வழக்கு விவரங்களை போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்டு நீதிபதி வீட்டுக்கு வந்தார்.

    இதைத்தொடர்ந்து இரவு 11 மணிக்கு நீதிபதி அந்த மனுவை விசாரித்தார். நள்ளிரவு 12.30 மணிக்கு விசாரணை முடிந்தது. இறுதியில், டேவிட்சனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். பொதுவாக ஐகோர்ட்டு உத்தரவு நகல் தட்டச்சு செய்து வழங்கப்படும். நள்ளிரவு நேரம் என்பதால் ஜாமீன் உத்தரவு நகலை தட்டச்சு செய்வதற்கு அலுவலர்கள் யாரும் இல்லை. இதனால் நீதிபதி தனது கைப்படவே ஜாமீன் உத்தரவை எழுதி அதை ஐகோர்ட்டு பணியாளர் மூலம் புழல் சிறை சூப்பிரண்டுக்கு அனுப்பி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை புழல் சிறையில் இருந்து டேவிட்சன் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுபோல் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குடும்பத்தினரின் ஜாமீன் மனுவை நீதிபதி ஜெகதீஷ்சந்திரா நள்ளிரவில் விசாரித்து தீர்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×