search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98643"

    • கடல் சீற்றத்தால் மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்தது.
    • காணாமல் போன ஒரு மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    கொச்சி:

    கேரளாவை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் ஒரே படகில் கொச்சியில் இருந்து வடமேற்கே 40 கடல் மைல் தொலைவில் கடந்த 28ந் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த பகுதியில் கடற்சீற்றம் காரணமாக அவர்களது மீன்பிடி படகு கவிழ்ந்தது. இதனால் கடலில் தத்தளித்த மீனவர்கள் உதவியை எதிர்பார்த்து உயிருக்கு போராடினர்.

    இதனிடையே, அந்த பகுதி வழியாக சென்ற சரக்கு கப்பல் ஒன்று, மீனவர்கள் குறித்த தகவலை கடலோர காவல்படையினருக்கு தெரிவித்தது. இதையடுத்து விரைந்து செயல்பட்ட கடலோர காவல்படை வீரர்கள், ரோந்து கப்பல் ஆர்யமான் மூலம் அப்பகுதிக்கு சென்றனர். இதனையடுத்து கூட்டு நடவடிக்கை மூலம் 5 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

    எனினும் அவர்களை உடனடியாக அங்கிருந்து அழைத்து செல்வதில் தாமதம் ஆனதால், கடலோர காவல்படையின் நவீன ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.  

    அந்த மீனவர்கள் ஒவ்வொருவராக கப்பலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காணாமல் போன மேலும் ஒரு மீனவரை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது.

    • மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம், நமது எல்லைக்குள் மீன்பிடிக்க வேண்டும்.
    • மீன் பிடிக்கும்போது கடல்பரப்பில் அன்னியர்கள், அயல் நாட்டவர்கள் வந்தால் உடன் காவல்துறைக்கு தெரியபடுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா அண்ணப்பேட்டை - சிந்தாமணிகாட்டில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி இந்திய கடற்படை மற்றும் மீன் வளத்துறையினரால் நடத்தபட்டது பயிற்ச்சிக்கு இந்திய கடற்படை நாகை முகாம் அதிகாரி டெப்டினன்ட் கமாண்டர் கர்வேந்தர் சிங் தலைமை வகித்தார் நிகழ்ச்சியில் கடற்படை வீரரர்கள் நவீன், ராஜேஷ், நந்தகுமார் மீன் வளத்துறை அதிகாரிகள் அருண், மற்றும் பிரியங்கா வாய்மேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் தமிழரசன், கார்த்திகேயன் மற்றும் மீனவர்கள் கலந்துகொண்டனா.

    கூட்டத்தில் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் என்றும் நமது எல்லைக்குள் மீன்பிடிக்க வேண்டும் மேலும் மீன் பிடிக்கும்போது கடல்ப ரப்பில் அன்னியர்கள், அயல் நாட்டவர்கள் வந்தால் உடன் காவல்துறைக்கு தெரி யபடுத்த வேண்டும் கடத்தல் தொழில் செய்பவர்கள் இருந்தால் உடன் தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் தற்போது அன்னிய நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது இதனால் அங்கிருந்து வெளியேறி தமிழகத்தில் இலங்கைநாட்டவர்கள் வர வாய்ப்பு உள்ளது அவ்வாறு யாரும் வந்தால் உடன் தெரிவிக்கவேண்டும் என மீனவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    • மேற்கு கடற்கரையில் தடையால் மீன் விலை மேலும் உயர வாய்ப்பு
    • கடலுக்குள் ஏற்படும் சுழற்சியால் வலைகள் சிக்கிக்கொள்கின்றன

    கன்னியாகுமரி:

    61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்த பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு போதுமான மீன்கள் கிடைக்காததால்அதிர்ச்சி தான் காத்திருந்தது.

    தற்போது நடுக்கடலு க்குள் ஏற்பட்ட சுழற்சி யின் காரணமாக கடலுக்குள் வீசப்படும் மீன் வலைகள் சுற்றி கயிறு போல் ஆகிவிட்டன. இதனால் பெரும்பாலான மீனவர்கள் வீசிய வலைகளில் மீன்கள் சிக்கவில்லை.

    எனவே குறைந்த அளவு மீன்களுடன் அவர்கள் கரைக்கு திரும்பி வருகின்றனர். மீன் வரத்து குறைந்ததால் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    தடை காலத்தில்ரூ.250க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சுறாமீன் தற்போதும் அதே விலையில் விற்கப்படுகிறது. இதேபோல் வஞ்சிரம் ரூ.350- க்கும், கருப்பு வாவல் ரூ.250- க்கும் , நண்டு ரூ.150- க்கும் ,ஊசி கணவாய் ரூ.200-க்கும், கொடுவா ரூ.250-க்கும், சங்கரா ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விளமீன் ரூ.250- க்கும், கொச்சாம்பாறை ரூ250- க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடலில் மீன்கள் அதிக மாக கிடைத்தபோது கன்னியாகுமரி சின்ன முட்டம் துறைமுகத்துக்கு தினமும் 5 முதல் 10 டன்கள் வரை மீன்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் தற்போதைய நிலையில் 700 கிலோ முதல் 1 டன்வரை தான் மீன்கள் வருகின்றன. இதனால் மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    மேலும் கடலுக்குள் வெகு தொலைவு செல்ல வேண்டி உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மீனவர்கள் விசைப் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும்போது 1500 முதல் 2000 லிட்டர் டீசல், 50 ஐஸ்கட்டிகள், உணவு பொருட்கள் என ரூ.1 லட்சம் செலவாகிறது.

    ஆனால் தற்போது மீன்கள் குறைவாக கிடைப்பதால் முதலுக்கே மோசமாகிவிட்ட கதை யாகிவிட்து என்று மீனவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் வருகிற ஜூலை மாதம் வரை நீடிப்பதால் மீன் விலை இன்னும் கிடுகிடு வென உயரும் என்று மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

    • மீன்பிடி தடைகாலம் முடிந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
    • காசிமேடு மார்க்கெட் முழுவதும் மக்கள கூட்டமாக காணப்பட்டது.

    ராயபுரம்:

    தமிழகத்தில் ஏப்ரல் 15-ந்தேதி முதல் கடந்த 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்தது. தடைகாலம் முடிந்து 15-ந் தேதி முதல் மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மொத்தம் 1200 விசைப்படகுகள், 800-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். மீன்பிடி தடைகாலம் முடிந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

    தடைகாலம் முடிந்து இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுமார் 100 விசைப்படகு மீனவர்கள் அதிகாலையில் கரை திரும்பினர்.

    பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் அதிகாலை முதலே வியாபாரிகளும், பொதுமக்களும் மீன் ஏலம் விடும் பகுதியில் அதிக அளவில் குவிந்தனர். இதனால் காசிமேடு மார்க்கெட் முழுவதும் மக்கள கூட்டமாக காணப்பட்டது.

    ஆனால் எதிர்பார்த்த அளவு பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. சிறியவகை நெத்திலி, சங்கரா, காரப்பொடி உள்ளிட்ட மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு குவிந்து இருந்தது.

    ஆனாலும் மீன் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. கடந்த வாரம் விலையே இன்றும் இருந்தது. வஞ்சிரம் உள்ளிட்ட பெரிய வகை மீன்கள் எதுவும் விற்பனைக்கு வராததால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    எனினும் அவர்கள் சிறிய அளவிலான மீன்களை ஆர்வத்துடன் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். வஞ்சிரம்- ரூ.1400, வவ்வாள்- ரூ. 1100,சங்கரா ரூ.400 முதல்ரூ.800 வரை விற்கப்பட்டது.

    மீனபிடி தடைகாலம் முடிந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு மொத்த வியாபாரிகள் மீன் ஏலக்கூடத்தில் வந்து மீன்களை மொத்தமாக வாங்கிச் சென்றதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காசிமேடு பகுதி மீண்டும் மீன் விற்பனையில் களை கட்டி இருந்தது.

    வழக்கமாக ஆழ்கடலில் விசைப்படகில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் குறைந்தது 10 முதல் 15 நாட்கள் வரை கடலில் தங்கி மீன்பிடித்து கரைக்கு திரும்புவது வழக்கம்.

    எனவே அடுத்த வாரம் அதிக அளவிலான விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பும் போது பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மீன்விலை குறையும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.வரும் நாட்களில் கரை திரும்பினால் மீன்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, விசைப்படகு மீனவர்கள் குறைந்தது 2 வாரம் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிப்பது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குறைந்த அளவு விசைப்படகு மீனவர்கள் கரைக்குதிரும்பி உள்ளனர். சிறியவகை மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு வந்திருந்தது. பெரியவகை மீன்கள் அதிகம் வரவில்லை. இதனால் மீன்விலையிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. அடுத்த வாரம் ஆழ்கடல் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பும்போது பெரிய மீன்கள் விற்பனைக்கு வரும். அப்போது மீன்விலை குறையும் என்றார்.

    • கடல் சீற்றத்தில் சிக்கி விசைப்படகு கடலில் மூழ்கியது குறித்து ராமேசுவரம் மீன்துறை அலுவலகம் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.
    • அவர்கள் தங்களது புகாரில், தாங்கள் பிடித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்களும் விசைப்படகுடன் கடலுக்குள் மூழ்கி விட்டதாக கூறி உள்ளனர்.

    ராமேசுவரம்:

    மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலான 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், 15-ந்தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

    ராமேசுவரம் பகுதியில் 820-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கடந்த 15-ந்தேதி முதல் சுழற்சி முறையில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

    அதேபோல் நேற்று ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 500 மீனவர்கள் மீன்துறை அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெற்று விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    தங்கச்சிமடத்தை சேர்ந்த பாதுவைராஜன் என்பவரது விசைப்படகில் சென்றிருந்த பிரகாஷ், எபிரோன், பாண்டி, டல்லஸ், முனியசாமி, எமரிட் ஆகிய 6 மீனவர்களும் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த பகுதியில் கடல் சீற்றத்துடன் இருந்துள்ளது.

    அப்போது அவர்களது படகு கடல் அலையில் சிக்கி நடுக்கடலில் கவிழ்ந்து மூழ்கியது. படகில் இருந்த பிரகாஷ் உள்ளிட்ட 6 பேரும் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர். இதனை அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் உடனடியாக அங்கு வந்து கடலில் தத்தளித்த 6 மீனவர்களையும் மீட்டனர். விசைப்படகு கவிழ்ந்து மீனவர்கள் தத்தளித்ததை சக மீனவர்கள் உடனடியாக பார்த்ததால், அந்த 6 மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களை சக மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.

    கடல் சீற்றத்தில் சிக்கி விசைப்படகு கடலில் மூழ்கியது குறித்து ராமேசுவரம் மீன்துறை அலுவலகம் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.

    அவர்கள் தங்களது புகாரில், தாங்கள் பிடித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்களும் விசைப்படகுடன் கடலுக்குள் மூழ்கி விட்டதாக கூறி உள்ளனர்.

    • ஏ.ஐ.சி.சி.டி.யு. சார்பில் மீன்வள திருத்த மசோதா
    • 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) மற்றும்ஏ.ஐ.சி.சி.டி.யு. சார்பில் மீன்வள திருத்த மசோதா மற்றும் சாகர்மாலா திட்டம் ஆகியவற்றை கைவிட கேட்பது, மீனவர் குடியிருப்புகளுக்கு நிபந்தனையின்றி பட்டா வழங்க கேட்பது, கடலில் மாயமாகும் மீனவர் குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்க உரிய ஆணைய திட்டம் உருவாக்கிட கேட்பது உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18 ம் தேதி திங்கள்நகரில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.முன்னதாக மீனவர் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் மணவாளக்குறிச்சியில் மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து தலைமையில் நடந்தது.

    மாநில குழு உறுப்பினர் சுசீலா, மாவட்ட குழு உறுப்பினர் செல்வராஜ், அய்பா தலைவர் கார்மல், ஏ.ஐ.சி.சி.டி.யு.மாவட்ட பொதுச்செயலாளர் அய்யப்பன், லெனினிஸ்ட் கடற்கரை பகுதி செயலாளர் நசரேன் பெர்னாட் மற்றும் கவிதா, தங்கலட்சுமி, தாமஸ் பெனிபர், பாரஸ்ராஜ், ஆரோக்கிய மகேஷ், ரமேஷ் குமார், ஆரோக்கிய மகேஷ், வர்க்கீஸ், கிரேட்டஸ் லியா உள்பட நிர்வாகிகள் கலந்து கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் தடைக்கால நிவாரணத்தை வழங்க வேண்டுமென மீனவா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மீனவர்களின் ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு கள ஆய்வு நடந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மீன்கள் இனப்பெருக்கத்தை கவனத்தில் கொண்டு ஆண்டு தோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

    மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவா்கள் நலன் கருதி அரசு சாா்பில் நிவாரண நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 37 ஆயிரத்து 986 குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    குடும்பத்துக்கு தலா ரூ.6 ஆயிரம் என நிதி அறிவித்து சம்பந்தப்பட்டோா் வங்கிக்கணக்கிலும் நிவாரணத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரத்தில் தடைக்கால நிவாரணத்தை இன்னும் 3,900 பேருக்கு வழங்கவில்லை என மீனவா்கள் சங்கத்தினா் கூறிவருகின்றனா்.

    இதுகுறித்து மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநா் காத்தவராயன் கூறுகையில், நடப்பு ஆண்டில் புதிதாக நிவாரணம் பெறுவதற்கு சோ்க்கப்பட்ட 3,900 பேருக்கு மட்டுமே இன்னும் நிவாரண நிதி அளிக்கப்படவில்லை.

    அவா்களது ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு கள ஆய்வு நடந்து வருகிறது. ஆய்வு முடிவுக்குப் பிறகே நிதி அளிக்கப்படும் என்றார்.

    மீன்பிடி தடைக்காலம் 3 நாட்களில் முடிவடைந்ததால் கடலுக்கு செல்ல கடலூர் மாவட்ட மீனவர்கள் தயாரானார்கள்.

    கடலூர்:

    தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடற்பகுதிகளில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்க காலமாக, மத்திய அமைச்சகம் மீன்வளத்துறை கண்டறிந்துள்ளது.

    இந்த நாட்களில் மீன் வளத்தை பெருக்கும் நோக்கில் இந்த கால கட்டத்தில் ஆண்டுதோறும் 61 விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ல் தொடங்கியது.

    தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்று ம்இழுவை ப்படகுகள்கடற்கரை பகுதிகளில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் வருகிற 14-ந் தேதியுடன் முடிகிறது. எனவே கடலூர் மாவட்ட த்தை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகு களை பழுது நீக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். படகுகளை துறைமுகத்தின் கரை பகுதிக்கு கொண்டு வந்து வெல்டிங் செய்வது, படகுமுழுவதும் வர்ணம் பூசுவது, புதிய வலைகளை நெய்தல், பழைய வலைகளை சீரமைத்தல்போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படகுகளின் இயக்கம் சீராக உள்ளதா? என துறைமுக பகுதிகளில்வெள்ளோட்டம் பார்த்து வருகின்றனர்.

    மீன்பிடி துறைமுகத்தின் கரை பகுதிக்கு கொண்டு வந்து வெல்டிங் செய்தல், படகு முழுவதும் வர்ணம் பூசுதல், புதிய வலைகள் நெய்தல், பழைய வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் சீரமைத்த படகுகள் நன்றாக இயங்குகிறதா? என்று துறைமுகம் பகுதியில் வெள்ளோட்டமும் பார்த்து வருகிறார்கள்.

    • தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை
    • கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்டமணப்பாடு கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் மீன்பிடித் தொழிலுக்கு பெரும் இடையூறாக கடற்கரையில் இயற்கையான முறையில் பெரும் மணல் குன்றுகள் தோன்றின.

    இதனால் மீனவர்கள் கடலுக்குகள் படகுகளை கொண்டு செல்வதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மீன்பிடித்தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டது.

    இதையறிந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது சொந்த செலவில் ராட்சத எந்திரங்கள் மூலம் மணல் குன்றுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார். எனினும் மணல் குன்றுகள் உருவாகுவது குறையவில்லை.

    இதையடுத்து நிரந்தரத் தீர்வாக தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை தமிழக முதல்-அமைச்சரிடம் அமைச்சர் தெரிவித்ததையடுத்து நபார்டு மூலம் ரூ.45 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

    கடலுக்குள் தூண்டில் வளைவு அமைக்கப்படும் இடத்தை நேற்று மாலை அமைச்சர் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் நேரில் படகு மூலம் கடலுக்குள் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மீனவர்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    மீனவர்களின் மீன்பிடித் தொழில் தடைஇன்றி சிறப்பாக நடைபெற்று அவர்களின் பொருளாதாரம் மேம்பட தூண்டில் வளைவு திட்டப் பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும்.நான் படகு மூலம் கடலுக்கு சென்று ஆய்வு செய்து வந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மீன்வளத்துறை தலைமைப் பொறியாளர் ராஜ், செயற்பொறியாளர் சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் ரவி, தயாநிதி, தி.மு.க. மாநில மாணவரணி துணைசெயலர் உமரிசங்கர், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங், துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் அலி பாதுஷா,

    தி.மு.க. மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் லெபோரின், மணப்பாடு ஜெயப்பிரகாஷ், மாவட்ட நிர்வாகிகள் மகாவிஷ்ணு, ரவிராஜா, இளங்கோ, மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மணப்பாடு மீனவர்கள் பலர் உடனிருந்தனர்.

    சர்வதேச கடல் எல்லை அருகில் இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்தபோது, அவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
    போர்பந்தர்:

    குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த 7 மீனவர்கள் குஜராத் கடற்பகுதிக்கு உட்பட்ட அரபிக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் சர்வதேச கடல் எல்லை அருகில் இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்தபோது, அவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மகாராஷ்டிர மீனவர் ஸ்ரீதர் ரமேஷ் சாம்ரே (வயது 32) உயிரிழந்தார். திலிப் சோலங்கி என்ற மீனவர் காயமடைந்தார்.

    இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த 10 வீரர்கள் மீது போர்பந்தர் மாவட்டம் நபி பந்தர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

    கொலை, கொலை முயற்சி மற்றும் ஆயுத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் 10 பேர், 2 படகுகளில் வந்து இந்திய மீன்பிடி படகு மீது தாக்குதல் நடத்தியதாக எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.

    சர்வதேச கடல் எல்லை அருகில் மீனவர்கள் சென்றபோது, அவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
    தேவபூமி துவாரகா:

    குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த 7 மீனவர்கள் குஜராத் கடற்பகுதிக்கு உட்பட்ட அரபிக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். சர்வதேச கடல் எல்லை அருகில் அவர்கள் சென்றபோது, அவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மகாராஷ்டிர மீனவர் ஸ்ரீதர் ரமேஷ் சாம்ரே (வயது 32) உயிரிழந்தார். ஒரு மீனவர் காயமடைந்தார்.

    நேற்று மாலை இந்த தாக்குதல் நடந்துள்ளது. உயிரிழந்த மீனவரின் உடல் குகா துறைமுகத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது. போர்பந்தர் நபி பந்தர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 
    கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். #Rameswaramfishermen #fishermen

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று விசைப் படகுகளில் கடலுக்கு புறப்பட்டனர். இவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி 30-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றிவளைத்தனர்.

    இந்த பகுதியில் மீன்பிடிக்க அனுமதி இல்லை எனக்கூறி மிரட்டியதோடு உடனே இங்கிருந்து செல்லுங்கள் என விரட்டினர்.

    மேலும் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக கரை திரும்பினர்.

    பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினர் எங்களை விரட்டியடிப்பது, வலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்திய எல்லையில் மீன் பிடித்தாலும் இலங்கை கடற்படையினரின் தொந்தரவு உள்ளது. இதற்கு மத்திய அரசுதான் தீர்வு காணவேண்டும் என்றனர். #Rameswaramfishermen #fishermen

    ×