search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபம்"

    • தீபவழிபாட்டில் சிறப்பானது ‘கார்த்திகை தீபம் ஆகும்.
    • முருகப் பெருமானைக் கார்த்திகை பெண்கள் சீராட்டி வளர்த்தனர்.

    தீபவழிபாடு பண்டைய காலம் தொட்டே பலமுறைகளிலும் நடைபெற்று வருகிறது. சைவர், வைணவர், ஜைனர் என்ற பாகுபாடு இன்றி எல்லா மதத்தினரும் தீபவழிபாட்டைக் கடைபிடிக்கின்றனர்.

    இந்தியாவில் வடக்கில் தீபவழிபாடு 'தீபாவளி' என்றும் தெற்கே தீபவழிபாடு 'கார்த்திகை தீபம்' என்றும் கொண்டாடப்படுகிறது. தீபதானங்கள் பதினாறு வகை தென் நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது. தீபவழிபாட்டில் சிறப்பானது 'கார்த்திகை தீபம் ஆகும். இது கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவதாகும். பண்டைய காலத்தில் சூரியன், சந்திரன், நெருப்பு இம்மூன்றையும் தான் தமிழர்கள் வழிபட்டு வந்தனர் என்று சொல்வார்கள்.

    இன்று தினமும் காசியிலும், ஹரித்து வாரிலும் மாலையில் தீபம் ஏற்றி இலையில் வைத்து பூக்களுடன் ஆற்றில் விடும் பழக்கம் இருந்து வருகிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவது இன்றும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க நூல்களில் பாவை விளக்குகள் பற்றி முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 'கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள்' என்ற பொய்கையாழ்வார் கார்த்திகை தீபத்தை பற்றிச் சிறப்பாக குறிப்பிடுகிறார். காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதி யின் அழகைப் பற்றி வர்ணிக்கையில், சுயம்வர மண்டபத்தில் இந்துமதி வரும் அழகு தீப ஒளி போன்று, அங்கு அமர்ந்தி ருக்கும் அரசிளங்குமாரர்களின் மீது பட்டு அவர்களது முகம் ஜொலிப்பதாக கூறியுள்ளார். மாணிக்கவாசகர், 'சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே' என்று சிவபெருமானை குறித்து பாடியுள்ளார்.

    குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் லட்சுமிகரமாக இருக்கும். ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத்தன்மை, அன்பு இவற்றிற்கு ஒப்பிடுவார்கள். நமிநந்தி அடிகள், கலியநாயனார், கணம்பில்ல நாயானார் போன்றோர் திருவிளக்கு ஏற்றி வைத்து கோவில்களில் தொண்டு செய்ததாக பெரிய புராணம் கூறுகிறது. அகல், எண்ணெய், திரி, சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது 'விளக்கு' என்று அழைக்கப்படுகிறது. இவை அறம், பொருள், வீடு என்ற குறள் நெறியை உணர்த்துகின்றன. இவையே சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகும். இந்த அறிவொளியைத் தீபமாக, தீபசக்தியாக நாம் வணங்குகிறோம்.

    முருகப் பெருமானைக் கார்த்திகை பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால் முருகப்பெருமான் கார்த்தி கேயன் ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாக 'பரணி தீபம்' கொண்டாடப்படுகிறது. வள்ளலார் 'ஒளியின் வடிவம் சிவம்' என்று கருதி, அருட் பெருஞ்ஜோதி அகவல் பாடினார். அப்பர் பெருமான் 'நமசிவாய' மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.

    ரிக்வேதத்தில் இந்திரனுக்கு அடுத்த படியாக அக்னி பகவான் முக்கிய இடம் பெறுகிறார். கீதையில் கிருஷ்ண பகவான், விளக்கின் ஒளி போன்று மனதை ஆடாமல், அசையாமல் சஞ்சலமற்று ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார்.

    கார்த்திகை தீபத்தன்று வீடுகளில் மாலையில் தீபம் ஏற்றி நெல் பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

    • இயற்கை ஒத்துழைக்காத காரணத்தாலும் தீபம் தயாரிப்பு பணிகள் மந்தமான நிலையில் உள்ளது.
    • 1.5 லட்சம் அகல் விளக்குகள் மட்டும் தயாரிக்க முடிந்துள்ளது.

    காங்கயம் :

    கார்த்திகை தீபத்திருநாள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் தான். அன்றைய தினம் வீடுகள் தோறும் விதவிதமான அகல் விளக்குகள் கண்ணைக் கவரும் வகையில் வரிசை கட்டியிருக்கும். வருகிற 6-ந் தேதி கார்த்திகை தீபத்திருநாள் வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த அகல் விளக்குகள் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, காங்கயம், அவிநாசி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட கைவினை கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

    காங்கேயம் பகுதியில் சம்பந்தம்பாளையத்தில் பாரம்பரியமாகமண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பத்தினர் கடந்த இரு மாத காலமாக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வண்டல்மண், செம்மண் மற்றும் காற்றுமண் என்று சொல்லப்படும் மணல்கலந்த மண் சேர்த்து தண்ணீரில் ஊறவைத்து பின்னர் சக்கர உருளையில் வைத்து நேர்த்தியாக பல்வேறு விதமான அகல்விளக்குகளை வார்த்தெடுக்கின்றனர்.

    இவ்வாறு தயாரான அகல்விளக்குகளை சூளையில் வைத்து சுட்டு பக்குவப்படுத்தி விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். கடந்த 25ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமங்கள்தோறும் மண்பாண்டத் தொழிலாளர்கள் இருந்தபோது மண்பாண்டங்கள் மற்றும் அகல் விளக்குகள் பண்டமாற்று முறையில் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது மண்பாண்டங்களுக்கு பதில் பித்தளை, அலுமினியம், எவர்சில்வர் பாத்திரங்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதால் மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்ததால் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான குடும்பத்தினர் வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மட்டுமே இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவதால் பண்டமாற்று முறை போய் ரொக்கத்திற்கு அகல்விளக்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் மழைக்காலங்களில் அகல் விளக்குகள் தயாரிப்பு குறைவாக உள்ளது. போதிய களிமண் இல்லாத சூழலும், இயற்கை ஒத்துழைக்காத காரணத்தாலும் தீபம் தயாரிப்பு பணிகள் மந்தமான நிலையில் உள்ளது. இருப்பினும் மக்கள் தேவைக்கேற்ப காங்கயம்,திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தீபங்கள் தயாரித்து அனுப்பப்பட்டு வருகிறது. சிறிய விளக்குகள் ரூ.1 முதல் ரூ.3 வரையிலும், பெரிய மண் விளக்குகள் ரூ.5 முதல் ரூ.8 வரையிலும், ஐந்து முக தீபங்கள் ரூ.15 வரையிலும், குத்து விளக்கு போன்ற தீப வகைகள் ரூ.20க்கும் விற்க்கப்படுகிறது.

    இதுகுறித்து சம்பந்தம்பாளையத்தைச் சேர்ந்த மண்பாண்ட கைவினை கலைஞர் ஒருவர் கூறுகையில், நாங்கள் 5 தலைமுறையாக மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். அருகில் உள்ள குளத்தில் வண்டல் மண் எடுத்து வந்து அதனுடன் செம்மண், காற்றுமண் கலந்து பிசைந்து உருவாக்கி வருகிறோம். நாளொன்றுக்கு தலா ஆயிரம் அகல் விளக்குகள் வரை தயாரித்து வருகிறோம்.

    இதில் சாதாரண விளக்கு, பஞ்சமுக அகல்விளக்குகள், கோயில்களில் ஏற்றப்படும் பெரிய அளவிலான விளக்குகள் என பல்வேறு வகையிலான விளக்குகளை தயாரித்து வருகிறோம். நாங்கள் தயாரிக்கும் விளக்குகளை காங்கயம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். இந்த சீசனில் மட்டும் 3 லட்சம் விளக்குகளுக்கு மேல் சப்ளை செய்வோம். ஆனால் களிமண் போதிய அளவில் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் மண் கொண்டு வருவதற்கு பல கெடுபிடிகள் உள்ளது.

    தாலுகா விட்டு பக்கத்து தாலுகாவுக்கு மண் கொண்டு செல்ல முடிவதில்லை. அடையாள அட்டையை காண்பித்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் களிமண் கொண்டு வரலாம் என அரசு அனுமதிக்க வேண்டும். இந்த ஆண்டு குறைந்த அளவில் மண் கிடைத்ததால், உற்பத்தியும் குறைந்தது. இதனால் 1.5 லட்சம் அகல் விளக்குகள் மட்டும் தயாரிக்க முடிந்துள்ளது.

    பாரம்பரியமாக தொன்று தொட்டு இந்த தொழிலை செய்து கொண்டு வருகிறோம். மக்கள் அனைவரும் களிமண்ணால் கையால் செய்த விளக்குகளை வாங்கி பயன்படுத்தினால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பெறவும் அவர்களின் வாழ்வாதாரம் காக்கவும் வசதியாக இருக்கும் என தெரிவித்தார்.

    • ஆகாச தீபம் ஏற்றப்பட்டால் மகாவிஷ்ணு சந்தோஷப்படுவார்.
    • வீட்டு மொட்டை மாடி போன்ற உயரமான இடத்திலும் தீபம் ஏற்றலாம்.

    கார்த்திகை மாதம் முழுவதும் தினசரி சூரியன் அஸ்தமிக்கும் மாலை வேளையில் வீட்டுக்கு அல்லது ஆலயத்துக்கு அருகில் வீதியில் உயரமான தீபம் ஏற்ற வேண்டும். அல்லது வீட்டு மொட்டை மாடி போன்ற உயரமான இடத்திலும் தீபம் ஏற்றலாம். இந்த தீபத்துக்கு ஆகாச தீபம் என்று பெயர்.

    இதன் ஒளியானது எட்டு திசைகளிலும் பரவ வேண்டும். இன்று (புதன்கிழமை) மாலை சூரியன் மறைந்த பின் தீபம் ஏற்றி சுவாமி சன்னதியில் சங்கல்பம் செய்து கொண்டு மண்அகல் விளக்கில் நல்லெண்ணை விட்டு எட்டு திரி போட்டு ஏற்றி அருகில் உள்ள கோவிலோ தனது வீட்டு மாடியிலோ உயரமான இடத்தில் தீபம் வைத்து வணங்க வேண்டும்.

    கார்த்திகை மாதம் முழுவதும் ஆகாச தீபம் ஏற்ற முடியாதவர்கள் கடைசி 3 நாட்களில் (நவம்பர் 21, 22, 23) ஏற்றலாம். ஒரு நாளாவது ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம் சென்று தீபம் ஏற்றி வைத்து வணங்க வேண்டும். ஆகாச தீபம் ஏற்றப்பட்டால் மகாவிஷ்ணு சந்தோஷப்படுவார். இதனால் மகாவிஷ்ணு மனம் மகிழ்ந்து தீபம் ஏற்றுபவர்களின் அனைத்து துன்பங்களையும், கடனையும் விலக செய்வார் என்பது நம்பிக்கையாகும்.

    • தினமும் ஆயுட்ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா மற்றும் பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது.
    • அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் உடனாகிய அபிராமி கோவில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானது. இந்த கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். தினமும் ஆயுட்ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா மற்றும் பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும்.

    ஏகதின லட்சார்ச்சனை 108 கலசங்களுடன் அபிஷேகம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு கோவிலில் 108 கலசங்கள் வைத்து ஏகாதின லட்சார்ச்சனை அபிராமி அம்மனுக்கு தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசீக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. அபிராமிக்கு அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது. முன்னதாக தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு, ஆராதனை நடைபெற்றது.

    உலக நன்மை வேண்டியும், மக்கள் கொடுர நோய்களிலிருந்து விடுதலை பெறவேண்டி மகேஷ் குருக்கள், சுந்தரமூர்த்தி குருக்கள் உள்ளிட்டோர் சிறப்பு யாகம் செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு காவிரி ஆற்றில் குளிக்கவும் காவிரி தாய் மற்றும் கன்னி தெய்வங்களுக்கு படையலிட்டு நன்றி செலுத்தும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
    • இதனால் பொதுமக்களும்,பக்தர்களும் இன்றி பரமத்தி வேலூர் காசிவிஸ்வநாதர் ஆலய காவிரி வெறிச்சோடி காணப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு காவிரி ஆற்றில் குளிக்கவும் காவிரி தாய் மற்றும் கன்னி தெய்வங்களுக்கு படையலிட்டு நன்றி செலுத்தும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களும்,பக்தர்களும் இன்றி பரமத்தி வேலூர் காசிவிஸ்வநாதர் ஆலய காவிரி வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்நிலையில் நாடும்,நாட்டு மக்களும் நலம் பெறவும்,விவசாயம் செழிக்கவும், நல்ல மழை பொழியவும் வேண்டி வேலூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து மோட்ச தீபம் எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் விடப்பட்டது. இதனால் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி புதிய பாலத்தில் இருந்து மோட்ச தீபத்தை பார்த்து ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய என பயபக்தியுடன் பொதுமக்கள் வழிபட்டனர்.

    மேலும் பாதுகாப்பு கருதி பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் ஏராளமான போலீசார் காவிரி கரையோர பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான சிவன்-பெருமாள் தீபம் ஆற்றில் விடும் விழா நடந்தது.
    • இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கோவில் செயல் அலுவலர் இரா.சுகுமார் (கூடுதல் பொறுப்பு) முன்னிலையில் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி மகுடேஸ்வரர், வீர நாராயணப் பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுபவது வழக்கம். கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விழா நடத்தப்படவில்லை.

    இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான சிவன்-பெருமாள் தீபம் ஆற்றில் விடும் விழா நடந்தது.

    இதனையொட்டி மகுடேசுவரர், வடிவுடையநாயகி அம்பாள், வீர நாராரயணப் பெருமாள், ஶ்ரீ தேவி-பூதேவி, உற்சவ மூர்த்திகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைத்து வீதி உலா வர முன்பாக சிவன் தீபத்தை கோவில் முதன்மை சிவாச்சாரியார் பாபுசுவாமிகள், பிரபு சுவாமிகள் எடுத்து வந்தனர்.

    பெருமாள் தீபத்தை கோவில் முதன்மை பட்டாச்சாரியார் ஸ்ரீதர் முன்னிலையில் ராஜா சுவாமிகள் காவிரி ஆற்றுக்கு எடுத்து வந்தார். ஆற்றங்கரை ஓரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    காவிரி ஆற்றங்கரைப் பகுதிக்கு பொது மக்கள், பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. சிவாச்சாரியார், பட்டாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் காவிரி ஆற்றுக்கு சென்றனர்.

    புதிய படித்துறை, பழைய படித்துறை இரண்டுக்கும் இடையில் உள்ள கொம்பனை என்ற இடத்தில் முதலாவதாக சிவன் தீபத்தை பாபு சிவாச்சாரியார் பக்தர்களின் கரகோசத்துக்கிடையே ஆற்றில் விட்டார். அதனை தொடர்ந்து ராஜா பட்டாச்சாரியார் கோவிந்தா, கோவிந்தா என்ற கரகோசத்துக் கிடையே பெருமாள் தீபத்தை ஆற்றில் விட்டார். தீபம் ஆற்றில் மிதந்து செல்வதை பக்தர்களும், பொதுமக்களும் தொலைவில் நின்று வணங்கி வழிபட்டனர்.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கோவில் செயல் அலுவலர் இரா.சுகுமார் (கூடுதல் பொறுப்பு) முன்னிலையில் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    • வடக்கு திசை நோக்கி ஏற்றினால் தாமத திருமணம் நீங்கும்.
    • தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்ற கூடாது என்று சொல்லப்படுகிறது.

    * வீடு தூய்மையாக இருந்தால் எல்லா வளங்களும் நாம் அடையாளம். வீட்டை தூய்மையாகவும் நல்ல அதிர்வலைகளோடு இருப்பதற்கு மிக எளிமையான வழி விளக்கு ஏற்றுவது. விளக்கின் ஒளி வீட்டிற்குள் இருக்கும் தீய சக்திகளை அழிக்கும். விளக்கு எந்த எண்ணெயில் ஏற்ற வேண்டும். எந்த திசை நோக்கி ஏற்ற வேண்டும்; எத்தனை முகம் கொண்ட விளக்கு ஏற்ற வேண்டும்.விளக்கு ஏற்றும் முறை பற்றி பார்ப்போம்.

    * விளக்கேற்றும் நல்லெண்ணையோடு பச்சை கற்பூரத்தை பொடியாக்கி சேர்த்து ஏற்றினால் மிக நல்ல பலன்களை கொடுக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்; மஹாலட்சுமி உங்கள் வீட்டில் தங்குவாள். வீட்டில் நல்ல அதிர்வுகளை உண்டாக்கும்; தீய மனிதர்கள் வீட்டிற்குள் வர விடாமல் தடுக்கும்; செல்வ வளம் பெருகும். மனதில் அமைதி, மகிழ்ச்சி உண்டாக்கும்; குடும்ப உறவுகள் மேம்படும்.

    * விளக்கு ஏற்ற மிக சிறந்தது நெய், நல்லெண்ணெய், ஐந்து எண்ணய் (நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய்) கூட்டு.

    * கிழக்கு திசை நோக்கி ஏற்றினால் இன்பம் பொங்கும்; குடும்ப உறவுகள் மேம்படும். வடக்கு திசை நோக்கி ஏற்றினால் தாமத திருமணம் நீங்கும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் விரைவாக கடன் அடைபடும். தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்ற கூடாது என்று சொல்லப்படுகிறது.

    * ஐந்து முகம் கொண்ட விளக்கு ஏற்றினால் வாழ்க்கைக்கு தேவையான எல்லா வளங்களும் கிடைக்கும். நான்கு முகம் கொண்ட விளக்கு ஏற்றினால் செல்வம் பெருகும்; மூன்று முகம் கொண்ட விளக்கு ஏற்றினால் குழந்தைகளுக்கு நன்மை உண்டாகும்; இரண்டு முகம் கொண்ட விளக்கு ஏற்றினால் குடும்ப உறவுகள் மேம்படும்; ஒரு முகம் கொண்ட விளக்கு ஏற்றினால் விரும்பிய காரியம் வெற்றி அடையும்.

    • துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்.
    • பைரவ வழிபாட்டின் போது பயன்படுத்தும் ஒவ்வொரு பழத்திற்கும் வெவ்வேறு பலன்கள் உண்டு.

    பைரவ வழிபாட்டின் போது பயன்படுத்தும் ஒவ்வொரு பழத்திற்கும், காய்கறிக்கும் மகத்தான சக்தியும், வெவ்வேறு பலன்களும் உண்டு.

    1. தேங்காய் - குடும்ப சுபிட்சம், கணவன் மனைவி ஒற் றுமை உண்டாகும்.

    2.துரைஞ்சி நாரத்தை ராஜகனி - நரம்பு வியாதி திருமணம் தடை நீங்கும்.

    3. கொடை மிளகாய் - புற்று நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் தீரும்.

    4. கொய்யா பழம்/ கத்திரிக்காய் - நீரழிவு நோய், இருதய நோய், கிட்னி நோய்கள் குணமாகும்.

    5. பீட்ருட் - ரத்தம் சம்பந்தமான நோய்கள், எதிரிகள் நீங்கும். சகோதர ஒற்றுமை ஏற்படும்.

    6. பாகற்காய் - சனி பாதிப்பு நீங்கு, கர்ம தோஷம் நீங்கும், வம்சாவழி தோஷம் நீங்கும்.

    7. வில்வபழம்/ மாதுளம் - லட்சுமி கடாட்சம் உண்டாகும். வசீகரம் ஏற்படும்.

    8. ஆரஞ்சு பழம் - தொழில் விருத்தி ஏற்படும்.

    9. அன்னாசிப்பழம் - சத்ரு சம்ஹாரம் பலன் கிடைக்கும்.

    10. பப்பாளி பழம் - திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

    11. இளநீர்-ரத்தம் சம்பந்தமான நோய் விலகும்.

    12. வெள்ளரிக்காய்-சுகமான வாழ்க்கை அமையும்.

    13. மூங்கில் தண்டில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கணவர்- மனைவி ஒற்றுமை ஏற்படும்.

    • இந்திய வரைபடத்தின் நடுவில் படுத்து தனது கை, கால், தலையில் அகல்விளக்கில் தீபம் ஏற்றி யோகாசனம் செய்தார்.
    • கொரோனா மீண்டும் வராமல் தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை முகம்மது ஹபீபு வழியுறுத்தினார்.

    கடையநல்லூர்

    கடையநல்லூரில் உலக யோகாசன தினத்தை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், உலக அமைதிக்காகவும் கொரோனா மீண்டும் வராமல் தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தியும் இந்திய வரைபடத்தின் நடுவில் தீபம் மூலம் யோகாசனம் நடந்தது.

    உலகம் முழுவதும் இன்று உலக யோகாசன தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கடையநல்லூரில் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளரும், ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் முன்னாள் தலைவருமான முதியவர் முகம்மது ஹபீபு நேற்று இந்திய வரைபடத்தின் நடுவில் படுத்து தனது கை, கால், தலையில் அகல்விளக்கில் தீபம் ஏற்றி கொரோனா மீண்டும் வராமல் தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தியும், உலக நன்மைக்காக சிறப்பு யோகாசனங்களை செய்து காண்பித்தார்.

    • பிரம்மமுகூர்த்தத்தில் அதாவது சூர்யோதயத்துக்கு முன்னதாகவே விளக்கேற்ற வேண்டும்.
    • மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னதாகவே விளக்கேற்றி வழிபடவேண்டும்.

    பிரம்ம முகூர்த்தம் என்பது, அதிகாலை நேரமான 4.30 மணி முதல் 6 மணி வரையான காலகட்டமாகும். இந்த நேரத்தில் எழுந்து நீராடி, இறைவனை வழிபடுவது என்பது மிகுந்த பலனைக் கொடுக்கும் என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்து.

    பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் பூஜை மற்றும் ஹோமங்களுக்கு நல்ல நாள் பார்க்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில் அது இறைவனுக்கான நேரம் என்பதால் அந்த நேரத்திற்கு தீட்டு எதுவும் கிடையாது. பிரம்ம முகூர்த்த வேளையில் வீட்டில் தீபம் ஏற்றி தெய்வங்களை வழிபாடு செய்தால், வீட்டில் சர்வ மங்களமும் கிடைக்கப்பெறும்.

    தினமும் காலையில், பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, குளித்து திருநீறு இட்டு இறைவனை வேண்டி வாங்கி வந்தால் மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது பெரியோர்கள் கூறுவதுண்டு.

    பின்னர், வாசலில் அரிசி மாவுக்கோலமிடுவது சிறந்தது. அடுத்து பிரம்மமுகூர்த்தத்தில் அதாவது சூர்யோதயத்துக்கு முன்னதாகவே விளக்கேற்ற வேண்டும். மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னதாகவே விளக்கேற்றி வழிபடவேண்டும். காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில், வீட்டில் விளக்கேற்றி வைத்து, சிவ மந்திரம் சொல்லலாம். அப்படி சொல்லச் சொல்ல, உள்ளுக்குள்ளேயும் வீட்டினுள்ளேயும் நல்ல அதிர்வுகள் பரவும். அதனால், நேர்மறையான சிந்தனைகள் தோன்றும்.

    வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் தெய்வ சன்னிதியில் விளக்கேற்றி வழிபட்டால் கலக்கம் அகலும். காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
    திருவிளக்கு பூஜை நடைபெறும் பொழுது, பஞ்சமுக விளக்கேற்றி வைத்து, அந்த விளக்கிற்கே தீபம் காட்டச் சொல்லி வழிபாடு செய்வார்கள். ஜோதிக்கே ஜோதி வழிபாடு என்பதை நாம் உணர முடியும்.

    இருளை அகற்றி ஒளியைக் கொடுப்பது விளக்கு ஆகும். இருள்மயமான சூழ்நிலையை மாற்றி ஒளிமயமான வாழ்விற்கு உத்திரவாதம் தருவது, இந்த ஜோதி வழிபாடுதான். அதனால் தான் வள்ளலார் என்று அனைவராலும் அறியப்படும் ராமலிங்க சுவாமிகள், அணையா விளக்கு என்று வடலூரில் ஏற்றி வழிபட்டார்.

    ஆலயங்களில் கூட சிவனுக்குப் பின்னால் பிம்ம விளக்கு இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் தெய்வ சன்னிதியில் விளக்கேற்றி வழிபட்டால் கலக்கம் அகலும். காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
    ×